Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ் ஆரியகுளத்தடியில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர்.

இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை.

டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

- சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.

Edited by goshan_che
நயினா தீவு என்ற பிழையான தகவல் மாற்றம்

  • Replies 68
  • Views 3.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    “நீ… கறுப்பு” என்று, கேற்ரிலை பார்த்து சட்டி சொல்லிச்சாம்.   😂 🤣

  • விசுகு
    விசுகு

    இந்த அலையின் முகம் இது தான். புரிந்தவர்கள் விழமாட்டார். விழுந்தவர்கள் எழமாட்டார். இந்த பக்கம் வரமாட்டார்கள்.🙃

  • உந்த கலாச்சாரம் ..தமிழக டீ. வி களால் வந்தது.. பங்கு பெறுபவர்களின் நடிப்பு ..அதிவேகமாக பரவியது எனலாம் ...கனடாவில் மிக மோசம் ..காரணம் நடன ஆசிரியைகள் என்பேன்...இதுபரவாயில்லை ..விமான நிலையத்தில் இறங்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதிவுக்கு ஒருத்தரும் பதில் போடவில்லை?

கொலிடே போகவேணும் ஏன் வம்பு எண்டு நினைக்கினமோ🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

 

குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர்.

இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை.

டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

- சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.

 

இது பொடியள் நேசரிக்கு போறமாதிரி...அவைக்கு தாங்கள் என்ன செய்கிறது என்றே தெரியாது...காலி விழுவென்றால் காலில் விழுவதுதுதான்..அவைக்கு தெரியும்..அது சரி அவ்விடத்திலை பள்ளிவாசல் இருக்கே..அங்கு மவுலவியின் காலில் விழவில்லையா...அய்யா நான் கொலிடேக்கு ஊருக்கு போய்  வந்துவிட்டென்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

 

குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர்.

இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை.

டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

- சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.

இந்த அலையின் முகம் இது தான். புரிந்தவர்கள் விழமாட்டார். விழுந்தவர்கள் எழமாட்டார். இந்த பக்கம் வரமாட்டார்கள்.🙃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா துணைக்கு இரெண்டு பேரை இழுத்து விட்டாச்சு🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

 

குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர்.

ஆடாத ஆட்டம் ஆடின சுமந்திரனே...இப்ப ஆலாய் பறக்குதாம்...இவை எங்கை..

ஒரு கொசுறுச் செய்தி...

சனாதிபதி தேர்தலில் வென்ற  காலம்..நயினாத்தீவு அம்மனிடம் போயிருந்தேன்...காலையில்போய் மதியப் பூசைக்கா லைனில் நின்ற பொழுது ... கிட்டத்தட்ட 200 இளவட்ட சிங்களவர் கறுப்பு வெள்ளை ஆடையுடன் ...மேலங்கி கழட்டி இடுப்பில் (இது பெண்களுக்கு பொருந்தாது...) உள்வீதியில் லைனில் நின்று..அய்யரின் அவைக்கான விசேடபூசையில் கலந்துகொண்டு ..அம்மனுக்கு  சாறீ ....பூ முதலானவற்றை தட்டில் ஏந்தி உள்வீதி  அய்யரின் பின்னால் சுற்றி பூசை செய்துவிட்டு போனவை...என்னுடைய கேள்வி என்னவென்றால் ...இவை வேட்புமனு செய்யமுன் ...அய்யரிடமும் அம்மனிடமும் ஆசி பெறவந்த சிங்களவரெனின்...நம்ம வெற்றி பெற்ற எம்பிமாரும்...நாகவிகாரைக்கு நேர்த்தி போட்டிருப்பினமோ🙃

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, alvayan said:

இது பொடியள் நேசரிக்கு போறமாதிரி...அவைக்கு தாங்கள் என்ன செய்கிறது என்றே தெரியாது...காலி விழுவென்றால் காலில் விழுவதுதுதான்..அவைக்கு தெரியும்..

இது உண்மைதான்… எமது பள்ளிகூடத்தில் ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும் போது சிங்கள மாணவர்கள் வெத்திலையோடு போய் ஒவ்வொரு டீச்சர் காலிலும் வீழ்ந்து வணங்குவார்கள்.

ஒரு முறை மாத்தறைப்பக்கம் வாகனத்தில் ஒரு அமைச்சு செயலாலர் அடங்கிய குழுவுடன் பிரயாணித்தேன் (நான் ஊர் சுற்றி பார்க்க போனேன் -சிறிய வயது, குரூப்பில டூப்பு) - அவரின் ஊரைத்தாண்டி போகும் போது - திடீரென வண்டியை ஓரம் கட்ட சொல்லி விட்டு மனிசன் பாய்ந்து சைக்கிளில் போன தன் பள்ளி ஆசியர் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.

இது அவர்கள் கலாச்சாரம்.

ஆனால் நாம் இப்படி செய்வோம் என அவர்கள் எதிர்பார்க்க கூடாது. அந்த எதிர் பார்ப்பு, இனவாதம்.

4 minutes ago, alvayan said:

ஆடாத ஆட்டம் ஆடின சுமந்திரனே...இப்ப ஆலாய் பறக்குதாம்...இவை எங்கை..

ஒரு கொசுறுச் செய்தி...

சானாதிபதி தெர்தலில் வென்ற  காலம்..நயினாத்ஹிவு அம்மனிடம் போயிருந்தேன்...காலையில்போய் மதியப் பூசைக்கா லைனில் நின்ற பொழுது ... கிட்டத்தட்ட 200 இளவட்ட சிங்களவர் கறுப்பு வெள்ளை ஆடையுடன் ...மேலங்கி கழட்டி இடுப்பில் (ஈது பெண்களுக்கு பொருந்தாது...) உள்வீதியில் லைனில் நின்று..அய்யரின் அவைக்கான விசேடபூசையில் கலந்துகொண்டு ..அம்மனுக்கு  சாறீ ....பூ முதலானவற்றை தட்டில் ஏந்தி உள்வீதி  ஆய்யர்ன் பின்னால் சுற்றி பூசை செய்துவிட்டு போனவை...என்னுடைய கேள்வி என்னவென்றால் ...இவை வேபுமனு செய்யமுன் ...அய்யர்டமும் அம்மனிடமும் ஆசி பெறவந்த சிங்களவரெனின்...நம்ம வெற்றி பெற்ற எம்பிமாரும்...நாகவிகாரைக்கு நேர்த்தி போட்டிருப்பினமோ🙃

நான் ஒவ்வொரு முறை நயினாதீவு போனாலும் போய் கெளதமுக்கும் ஒரு சல்யூட் போட்டே வருவேன். 

கொழும்பு மயூரபதி அம்மனில் அப்பவே பல சிங்களவர் வந்து எலுமிச்சை விளக்கு எல்லாம் ஏத்துவார்கள்.

ஆனால் காலில் ஏன் விழுவான்? காலில் விழுவோம் எண்டு வேண்டுதலோ🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

இது உண்மைதான்… எமது பள்ளிகூடத்தில் ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும் போது சிங்கள மாணவர்கள் வெத்திலையோடு போய் ஒவ்வொரு டீச்சர் காலிலும் வீழ்ந்து வணங்குவார்கள்.

ஒரு முறை மாத்தறைப்பக்கம் வாகனத்தில் ஒரு அமைச்சு செயலாலர் அடங்கிய குழுவுடன் பிரயாணித்தேன் (நான் ஊர் சுற்றி பார்க்க போனேன் -சிறிய வயது, குரூப்பில டூப்பு) - அவரின் ஊரைத்தாண்டி போகும் போது - திடீரென வண்டியை ஓரம் கட்ட சொல்லி விட்டு மனிசன் பாய்ந்து சைக்கிளில் போன தன் பள்ளி ஆசியர் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.

இது அவர்கள் கலாச்சாரம்.

ஆனால் நாம் இப்படி செய்வோம் என அவர்கள் எதிர்பார்க்க கூடாது. அந்த எதிர் பார்ப்பு, இனவாதம்.

நான் ஒவ்வொரு முறை நயினாதீவு போனாலும் போய் கெளதமுக்கும் ஒரு சல்யூட் போட்டே வருவேன். 

கொழும்பு மயூரபதி அம்மனில் அப்பவே பல சிங்களவர் வந்து எலுமிச்சை விளக்கு எல்லாம் ஏத்துவார்கள்.

ஆனால் காலில் ஏன் விழுவான்? காலில் விழுவோம் எண்டு வேண்டுதலோ🤣.

மயூரா பிலேசில் நான் இருந்தபோது...பிரேமதாசா இம்பீச்மெனில் வென்றவுடன் வந்து..நடுஇரவு.. நெடும்சாண்கிடைய்யாய் கிடந்ததை கண்ணால் கண்டவனக்கும் நான்..சிங்களவர் உரு வந்து தேங்காய் உடைப்பதை கண்ணால் காண ஆயிரம் கண்வேண்டுமே..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர்.

என்பிபி என்பதால் மேலிட உத்தரவோ தெரியவில்லை,

ஆனால் நாகவிகாரை பீடாதிபதியும் நாட்டின் பிறபகுதி பிக்குகளூம் ஒன்றல்ல.

எந்தகாலத்திலும் அவர் இனவாதம் கக்கியதில்லை, தெற்கின் அரசியல்வாதிகளுக்கும் இனவெறியர்களுக்கும் அவர் முட்டுகொடுத்ததில்லை, எப்போதும் தமிழருக்கு சார்பாகவே அவர் பேசியிருக்கிறார் என்பது நானறிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை.

டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

 உண்மை .  இன்னும் நிறைய காணலாம் இவர்கள் பூம் பூம் மாடுகள் என்று சரியாக சொல்லிவிட்டீர்கள்-

முன்பு தமிழர் ஒருவர் தனிபட்ட முறையில் ஒரு புத்த பிக்குவை கும்பிட்டால்  அனுரகுமார திசநாயக்கவின் தமிழர் படை எப்படி எல்லாம்பொங்கி எழும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, valavan said:

என்பிபி என்பதால் மேலிட உத்தரவோ தெரியவில்லை,

ஆனால் நாகவிகாரை பீடாதிபதியும் நாட்டின் பிறபகுதி பிக்குகளூம் ஒன்றல்ல.

எந்தகாலத்திலும் அவர் இனவாதம் கக்கியதில்லை, தெற்கின் அரசியல்வாதிகளுக்கும் இனவெறியர்களுக்கும் அவர் முட்டுகொடுத்ததில்லை, எப்போதும் தமிழருக்கு சார்பாகவே அவர் பேசியிருக்கிறார் என்பது நானறிந்தது.

நானறிய அவர் இனமுறுகல் பற்றியும் பேசுவதில்லை ஆனால் தமிழருக்கு சார்பாக பேசியதாக தெரியவில்லை.

ஆனால் புலிகளின் மேடை ஏறி பேசிய பிக்குகளும் உளர்.

அவர்கள் காலிலும் நாம் விழவேண்டியதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, alvayan said:

மயூரா பிலேசில் நான் இருந்தபோது...பிரேமதாசா இம்பீச்மெனில் வென்றவுடன் வந்து..நடுஇரவு.. நெடும்சாண்கிடைய்யாய் கிடந்ததை கண்ணால் கண்டவனக்கும் நான்..சிங்களவர் உரு வந்து தேங்காய் உடைப்பதை கண்ணால் காண ஆயிரம் கண்வேண்டுமே..

ப்பா…பல வரலாற்று நிகழ்வுகளின் சாட்சிதான் நீங்க 👍

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

அவர்கள் காலிலும் நாம் விழவேண்டியதில்லை.

நாகவிகாரை பீடாதிபதி நாட்டின் பிற பிக்குகள் போன்றவரல்ல என்றே குறிப்பிட்டேன், மற்றும்படி அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள் என்று அர்த்தமல்ல.

மற்றும்படி இங்கு இருந்துகொண்டு தமிழ்நாட்டில் தமிழகத்தவர்களே தமது நடிகர்கள் அரசியல் தலைவர்களின் காலில் விழுவதை ஏற்காத ஈழதமிழினம் நமதுநாட்டில் அதை எப்படி ஏற்கும்?

நானெல்லாம் காலுக்கு பக்கத்தில மணிபேர்ஸ் எதாச்சும் விழுந்திருந்தா மட்டும்தான் யார் காலிலயும் விழுவன்

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

 

குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து யாழின் மூன்று என் பி பி என்பிகளும் ஆசி பெற்றனர்.

இதுவரை இவர்கள் யாரும் ஐயர், பாதிரிகள் காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாக தகவல் எதுவும் வரவில்லை.

டக்கிளஸ், கேபி, கருணா, பிள்ளையான், கதிர்காமர் என வரலாற்றில் இலங்கை அரச கட்சிகளோடு இணைந்து அமைச்சு பதவிகள் பெற்ற எவரும் இதுவரை நடத்தி இராத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

- சமூகவலை தகவல்களின் உதவியுடன் - யாழ்களத்துக்காக - கோஷான் சே.

 

எனக்கு குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து படம் தெரியவில்லை, வேறுயாருக்காவது இதே பிரச்சனை உள்ளதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, zuma said:

 

எனக்கு குமுதிப்படகு படுகொலை நடந்த இடமாகிய நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதியின் காலில் வீழ்ந்து படம் தெரியவில்லை, வேறுயாருக்காவது இதே பிரச்சனை உள்ளதா?

 வெறும் லிங்காக தருகிறேன் பாருங்கள்.

https://x.com/godfreypy1/status/1858133106081124572

 

 

@நியானி

யாழில் அப்டேட்டுக்கு பின் பல embedded videos சில நேரம் போனபின் தெரிகிறது இல்லை. 

17 minutes ago, valavan said:

நாகவிகாரை பீடாதிபதி நாட்டின் பிற பிக்குகள் போன்றவரல்ல என்றே குறிப்பிட்டேன், மற்றும்படி அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள் என்று அர்த்தமல்ல.

மற்றும்படி இங்கு இருந்துகொண்டு தமிழ்நாட்டில் தமிழகத்தவர்களே தமது நடிகர்கள் அரசியல் தலைவர்களின் காலில் விழுவதை ஏற்காத ஈழதமிழினம் நமதுநாட்டில் அதை எப்படி ஏற்கும்?

நானெல்லாம் காலுக்கு பக்கத்தில மணிபேர்ஸ் எதாச்சும் விழுந்திருந்தா மட்டும்தான் யார் காலிலயும் விழுவன்

 

அதே.

@valavan வழமை போல் ஆதாரம் இருக்கா பாணி கேள்வி அல்ல, உண்மையிலேயே இந்த பீடாபதி எம் சார்பாக பேசுபவரா?

இதுவரை நான் சில தனிபிக்குகள் பேசி மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன், விகராதிபதிகள் எமது நியாயத்தை பேசி கேட்டதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

 வெறும் லிங்காக தருகிறேன் பாருங்கள்.

https://x.com/godfreypy1/status/1858133106081124572

 

 

@நியானி

யாழில் அப்டேட்டுக்கு பின் பல embedded videos சில நேரம் போனபின் தெரிகிறது இல்லை. 

 

 

இவர்  நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதி அல்ல, ஆரிய குளத்தடி நாக விகாரையின் தலைமை பிக்கு ஆகும். எல்லா மத தலங்களுக்கும் சென்று குருமாரின் ஆசிகள் பெற்றுள்ளார்கள்..

 

May be an image of 13 people, wedding and templeMay be an image of 3 people and beardMay be an image of 8 people, beard and people smilingMay be an image of 8 people and text

Edited by zuma

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, zuma said:

 

 

இது நயினாதீவில் அமைந்துள்ள நாகவிகாரையின் பீடாதிபதி அல்ல, ஆரிய குளத்தடி நாக விகாரையின் தலைமை பிக்கு ஆகும். எல்லா மத தலங்களுக்கும் சென்று குருமாரின் ஆசிகள் பெற்றுள்ளார்கள்..

 

May be an image of 13 people, wedding and templeMay be an image of 3 people and beardMay be an image of 8 people, beard and people smilingMay be an image of 8 people and text

ஓ அப்டியா…தரவு பிழைக்கு  மன்னிப்பும், திருத்தியமைக்கு நன்றியும்.

நாகவிகாரை என்றதும் நையினா தீவு என நினைத்து விட்டேன். எங்கள் காலத்தில் ஆரிய குளத்தடியில் விகாரை இருந்ததாம் என்று மட்டுமெதான் தெரியும்.

அது சரி…..

ஐயர், பாதர், மெளவி கள் காலில் விழுந்து பிரண்ட சிலமன் ஏதும்?

ஆரியகுள பிக்கு காலில் விழுவது தப்பில்லை நயினாதீவு எண்டால் தப்பு என சொல்லமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

பிகு

இப்போ செய்தியை சரியாக எடிட் செய்துள்ளேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத வழக்கம் ஒன்று உள்ளது. நல்லூருக்கு மேலாடை இல்லாமல் போவது போல்....
புத்த பிக்குகளிடம் போனால் வணங்கி ஆசீர்வாதம் வாங்குவது அந்த மத வழக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வரு மதத்துக்கும் வித்தியாசமான வணக்க முறைகள் உண்டு. கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார்கள் ஆரத்தழுவுவார்கள். சிங்களவர்கள் கண்டத்துக்கில்லாம் காலில் விழுவார்கள், சிங்கள நண்பர்கள் வீட்டுக்கு போனால் அவர்களுடைய வளர்ந்த பிள்ளைகள் எமது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, zuma said:

ஒவ்வரு மதத்துக்கும் வித்தியாசமான வணக்க முறைகள் உண்டு. கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார்கள் ஆரத்தழுவுவார்கள். சிங்களவர்கள் கண்டத்துக்கில்லாம் காலில் விழுவார்கள், சிங்கள நண்பர்கள் வீட்டுக்கு போனால் அவர்களுடைய வளர்ந்த பிள்ளைகள் எமது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள்.

 

இந்த மூன்று எம்பிகளில் யார் சிங்கள பெளத்தர்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

மத வழக்கம் ஒன்று உள்ளது. நல்லூருக்கு மேலாடை இல்லாமல் போவது போல்....
புத்த பிக்குகளிடம் போனால் வணங்கி ஆசீர்வாதம் வாங்குவது அந்த மத வழக்கம்.

ஓம்…அது பெளத்தர்கள் போனால்…

ஏனைய மதத்தவர், இனத்தவர் அப்படி செய்யத்தேவையில்லை…இனவாதமற்ற சிங்களவர் அப்படி எதிர்பார்ப்பதும் இல்லை.

1978 க்கு பின் நேற்று அமைந்த அமைச்சரவைதான் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை. இத்தனை காலத்தில் எந்த முஸ்லிமாவது இப்படி செய்ததுண்டா?

இவ்வளவு ஏன் - நான் மேலே பட்டியல் இட்ட பல தமிழ் அமைச்சர்கள் பிக்குகலிடம் மரியாதை நிமித்த சந்திப்புக்களை நிகழ்தியுள்ளனரே? இப்படி நடந்ததுண்டா?

இவர்கள் அமைச்சர்கள் கூட இல்லை. வெறும் பின்வரிசை எம்பிகள்.

நாக விகாரையில் போய் எமது பண்பாட்டின் படி கைகூப்பி அல்லவா வணக்கம் வைக்க வேண்டும்?

@குமாரசாமி @zuma

நீங்கள் எப்போதாவது ஒரு விடயத்தில் ஒரு பிக்குவை சந்திக்க நேர்ந்தால் காலில் விழுவீர்களா? விழுந்துள்ளீர்களா?

எத்தனையோ துறைகளில் அலுவலகத்துக்கு பிக்குகள் வரும் போது தமிழர், முஸ்லிம்கள் மட்டும் காலில் விழாது இருப்பார்கள்.

நாளைக்கே இவர்களுக்கு எம்பிகள் இப்படி செய்தது ஒரு மறைமுக அளுத்தத்தை தராதா?

அடுத்து என்ன…

தமிழ் பாடசாலை மாணவர்களை விகாரைகளுக்கு கல்வி சுற்றுலா கூட்டிப்போய் இதையே????

உண்மையில் இதன் பின்னால் உள்ள சூக்கும அரசியல் உங்களுக்கு புரியவில்லையா?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கொள்ளுபாடுகளை ஒரு புறம் வைத்து கொள்ளுங்க வரும் மாவீரர் நாளை எப்படி அணுகுகிறார் அனுரா என்று பார்ப்போம் இன்னும் ஏழு  நாள்த்தானே அதுக்குள் ஏன் இவ்வளவு அவசரம் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

ஒவ்வரு மதத்துக்கும் வித்தியாசமான வணக்க முறைகள் உண்டு. கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார்கள் ஆரத்தழுவுவார்கள். 

நன்றாக ஆரத்தழுவுவார்கள் அதுவும் பெண்கள் என்றால் ஸ்பெசல் ஆரத்தழுவுதல் கிடைக்கும்!👀

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இவ்வளவு ஏன் - நான் மேலே பட்டியல் இட்ட பல தமிழ் அமைச்சர்கள் பிக்குகலிடம் மரியாதை நிமித்த சந்திப்புக்களை நிகழ்தியுள்ளனரே? இப்படி நடந்ததுண்டா?

இவர்கள் அமைச்சர்கள் கூட இல்லை. வெறும் பின்வரிசை எம்பிகள்.

நாக விகாரையில் போய் எமது பண்பாட்டின் படி கைகூப்பி அல்லவா வணக்கம் வைக்க வேண்டும்?

விகாரை கட்டுவதற்கு எதிர்பபு அரசியல் முடிவடைந்து இப்போது விகாரை கட்டுவது புத்த வழிபாடு ஊக்குவிப்பு காலம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விளங்க நினைப்பவன் said:

விகாரை கட்டுவதற்கு எதிர்பபு அரசியல் முடிவடைந்து இப்போது விகாரை கட்டுவது புத்த வழிபாடு ஊக்குவிப்பு காலம்

கருத்தை படித்தேன், நினைத்தேன் சிரித்தேன்.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.