Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்

Oruvan

தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி தரும் துயரச் சம்பவம் கனடாவில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

மகனைக் கனேடியப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய குலத்துங்கம் மதிசூடி என்பவரே இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டவராவார்.

தமிழினப் பற்றாளரும் கனேடியத் தமிழ் வானொலி, பத்திரிகைத் துறையின் முன்னோடி பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி கடந்த 40 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.

அவ்வப்போது இலங்கைக்கு வந்து பலவிதமான சமூக சேவைகளை வடக்கு, கிழக்கில் வழங்கி வந்தவர். வருடமொருமுறை காரைதீவு வந்து செல்கின்றவர். அம்பாறை மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளைச் செய்தவர். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

அவரது மகன் இளங்கோ காதல் முறிவு காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர் என்று சொல்லப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை இரவு தாயை ஒரு அறையில் பூட்டிவிட்டு தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கின்றார் என்று அவரது சகோதரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

உடனடியாகக் கனடா பொலிஸார் அவரைக் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

கனேடிய ஊடகங்கள் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.
 

https://oruvan.com/sri-lanka/2024/11/22/brutal-incident-in-canada-son-stabs-father-to-death-with-knife

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் நேற்றே பலதும், பத்தும் பகுதியில் இணைத்திருந்தேன்..ஆங்கில ஊடகத்திலிருந்து வந்ததால் யாரும் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லையோ தெரியாது..

https://ripbook.com/mathysoody-kulathungam-6740e9e1d9923/notice/obituary-6740ea45cb91c

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஸ்கார்பரோவில் முதியவர் ஒருவரை  அவரது  மகன் கத்தியால் குத்தி மரணமான விடயத்தை ஊடகங்கள்வாயிலாக அறிந்தபோது அவர் யாராக இருக்கும் என்று எண்ணினேன். இன்றுதான் நண்பர் ஆனந்தன் அனுப்பிய 'காலை முரசு' பத்திரிகை மூலம் அவர் யார் என்பதை அறிந்தேன். உண்மையில் அதிர்ச்சியாகவிருந்தது. அவருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது.

எண்பதுகளில் கறுப்பு ஜுலையைத்தொடர்ந்து இலங்கைத்  தமிழர்கள் அகதிகளாகக் கனடா நோக்கிப் பெருந்தொகையாக வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பல்வேறு தமிழ் விடுதலை அமைப்புகளும் இயங்கின. அவற்றில் விடுதலைப் புலிகள் அமைப்புக்காகத் தீவிரமாக வேலை செய்தவர் மதி என்று அழைக்கப்படும் அரியாலையச் சேர்ந்த குலதுங்கம் மதிசூடி. எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவரை மாற்று  அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் நட்பாகப் பழகிய ஒருவராகவே நான் பார்க்கின்றேன். இவர் யாழ் இந்துக் கல்லூரி மாணவர் என்றும் கருதுகின்றேன்.

அவ்வப்போது  வழியில் கண்டால் அதே சிரிப்புடன் நலம் விசாரித்துச் செல்வார். கடைசியாக இவரை நண்பர் வேந்தனார் இளஞ்சேய் தனது தந்தையின் நூல்களைக் கனடாக்கந்தசாமி ஆலயத்தில் வெளியிட்டபோது அங்கு சந்தித்தேன். அப்பொழுதும் அதே புன்சிர்ப்புடன் நலம் விசாரித்துச் சென்றார். அங்கு அவர் பணியாற்றிக்கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கின்றேன். 

பல்வேறு அமைப்புகளுக்காகவும் பிரதிபலன்கள் எவற்றையும் எதிர்பாராது உழைத்தவர்கள் பலர். அவர்களில் ஒருவராகவே மதியையும் பார்க்கின்றேன். 

இவரைப்பற்றிய தனது முகநூல் நினைவுக்குறிப்பில் ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் குலசிங்கம் பரமேஸ்வரன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

"சகோதர இயக்க மோதல்கள் நடைபெற்ற போது அந்த இயக்கங்களின் நண்பர்களது வீடுகளுக்கு எங்களில் ஒரு சிலரை அழைத்துக் கொண்டு சென்று அவர்களுடன் ஆறுதலாக - அன்பாக உரையாடி தொடர்ந்தும் நட்புறவை வளர்த்த பண்பாளன்"  இது மதி அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துகின்றது. 

இவருக்கு ஏற்பட்ட இந்த நிலை துரதிருஷ்ட்டமானது. இவரது மகன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.  மன அழுத்தம் என்னும் கொடிய நோயினைப் புறக்கணிக்காது உரிய நேரத்தில் உரிய ஆலோசனைகளையும், மருத்துவ  உதவிகளையும் பெற வேண்டியதன் அவசியத்தையும் இந்நிகழ்வு வலியுறுத்துகின்றது. மன அழுத்தம் புகலிடத்தில் பலரது உயிர்களை எடுத்திருக்கின்றது. மக்கள் மத்தியில்; இது பற்றிய விழிப்புணர்வு முக்கியமானது. அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது அவசியமானது.

இவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

நவரட்னம் கிரிதரன் முகநூல் பதிவு

https://www.facebook.com/share/p/15TsaCi7Ez/?mibextid=WC7FNe

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த தமிழினப்பற்றாளர் மதியண்ணாவின் இழப்பு தமிழினத்தின் பேரிழப்பாகும்!

November 22, 2024

கனடாவில் நேற்று இரவு துரதிஷ்டவசமாக மரணித்த யாழ் அரியாலையைச் சேர்ந்த சிறந்த தமிழினப் பற்றாளர் குலத்துங்கம் மதிசூடி அண்ணாவின் இழப்பு தமிழ் இனத்திற்கு ஒரு பாரிய பேரிழப்பாகும்.

என்று பிரபல சமூக செயற்பாட்டாளரும், இலங்கை தமிழரசுக்கட்சி காரைதீவு தலைவரும் ,மீனாட்சி அம்மன் ஆலய தலைவரும் ,முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தனது அனுதாப அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அவரது திடீர் மறைவு குறித்து கவலையுடன் ஜெயசிறில் மேலும் தெரிவிக்கையில்.

பிறந்த மண்ணை வெகுவாக நேசித்த தமிழினப் பற்றாளர் திரு.மதி அண்ணா அவர்கள். கொரோனா காலகட்டத்திலும் வெள்ள அனர்த்த காலகட்டத்திலும் வடக்கில் மாத்திரமல்ல கிழக்கில் அம்பாறை மாவட்டத்திலும் பாரிய சேவைகளை செய்தவர்.
அது மாத்திரமல்ல ஒவ்வொரு வருடமும் வந்து நலிவுற்ற மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவி செய்து வந்தவர்.
எமது மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்திலும் சில ஆலோசனைகளை வழங்கி சிறப்பித்து பல ஆக்கபூர்வமான பல திட்டங்களிலும் பங்கெடுத்தவர் .

அவர் தமிழினத்தின் மிகுந்த பற்றாளராக விளங்கியவர். கனடாவில் கடந்த 40 வருடங்களாக தாயக மக்களின் உணர்வுகளை விளங்கிடச் செய்தவர்.

ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். இறுதியாக காரைதீவு பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலய கன்னி தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக கனடா இருந்து வந்தவர் . சேவையாளரான அவர் அக்கால கட்டத்தில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் திறந்து வைத்த சுவாமி விவேகானந்தர் நினைவு பூங்காவையும் ஆர்வத்துடன் பார்வையிட்டவர்.

அவரது இழப்பையிட்டு அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சார்பாக அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். என்றார்.

 

https://www.supeedsam.com/210163/

  • கருத்துக்கள உறவுகள்

மதி அண்ணவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்    🙏ஒம் சாந்தி 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் . ........!  

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்+

ஆழ்ந்த இரங்கல்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.
மகன் காதல் தோல்வியால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார் என நண்பர் ஒருவர் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்

மன அழுத்தம் காரணமாக கஷடபடட மகனைக்கவனித்து  உரியசிகிச்சை கொடுத்து அவதானமாக   இருந்திருக்க வேண்டும். வீண் பழியை சுமந்து  காவலில் வாழப்போகிறார்.  தந்தைக்கு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்.
தந்தையை கொல்லும் அளவிற்கு மன நோய் என்றுவிட்டு சும்மா கடந்து போக முடியாது. தகப்பனுக்கும் மகனுக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருந்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆழ்ந்த இரங்கல்கள்.
தந்தையை கொல்லும் அளவிற்கு மன நோய் என்றுவிட்டு சும்மா கடந்து போக முடியாது. தகப்பனுக்கும் மகனுக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருந்திருக்க வேண்டும்.

மகனுக்கு மனநோய் என கூறப்படுகின்றதே. மனநோய் என்றாலே பிரச்சனை தானே.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2024 at 18:14, குமாரசாமி said:

ஆழ்ந்த இரங்கல்கள்.
தந்தையை கொல்லும் அளவிற்கு மன நோய் என்றுவிட்டு சும்மா கடந்து போக முடியாது. தகப்பனுக்கும் மகனுக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருந்திருக்க வேண்டும்.

வீட்டில் தாயும் இருந்திருக்கிறார்.  அவாவை ஒரு அறையில் வைத்துப் பூட்டி விட்டுத்தான் செய்தவர் என்றால் ....

ஆனாலும் மனா அழுத்தம், மன நோயின் தாக்கம் நாங்கள் விபரிக்க முடியாத அளவுக்கு இருக்கும் என்றே கூறுகிறார்கள்.  ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை /உதவி பெற்று இருக்கலாம்.
இறந்தவரின் சகோதரி, அந்த மகனின் மனமாற்றத்துக்கு இலங்கைக்கு கூட்டிச்செல்ல முயற்சித்தார்கள் என்ற தொனிப்படவே செய்தி சேவை ஒன்றுக்கு கூறியிருந்தார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2024 at 01:35, நியாயம் said:

மகனுக்கு மனநோய் என கூறப்படுகின்றதே. மனநோய் என்றாலே பிரச்சனை தானே

மன நோய் பல வகைப்படும்
இவர் தன் நிலையை இழந்த ஒருவர் என்று நினைக்கின்றேன்
அந்த கணத்தில் தான் யார்... என்ன செய்கின்றேன்.... என்பதைக் கூட அறியாதவராகவும் இருக்கலாம்  

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

மன நோய் பல வகைப்படும்
இவர் தன் நிலையை இழந்த ஒருவர் என்று நினைக்கின்றேன்
அந்த கணத்தில் தான் யார்... என்ன செய்கின்றேன்.... என்பதைக் கூட அறியாதவராகவும் இருக்கலாம்  

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

 

பெற்றோருடன் பிள்ளைகள் முரண்டுபிடிப்பது பிரச்சனைப்படுவது சண்டைபிடிப்பது வழமையான ஒன்றுதானே. பெற்றோர் பிள்ளைகள் இடையில் கருத்து முரண்பாடு, பிரச்சனை இல்லாத குடும்பம் என்றால் அதிசயம்தான். ஆனால், இங்கே நிதானம் இழக்கப்பட்டு உயிரிழப்புவரை சென்றுள்ளது. நாம் ஊகங்கள் செய்யலாம். உண்மை ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏

  • கருத்துக்கள உறவுகள்

 மன நோய்வாய்ப்படடவர்கள் ,ஒழுங்காக மருந்து எடுக்காவிட்டால் நோயின் தாக்கம் அதிகரிக்கும்.(தினமும் மருந்தா என சலிப்பு நிலை வரும் சில சமயம் அதைக்   குப்பைக்குள் போட்டுவிடுவார்கள் ) மிகவும் உக்கிரமான நிலைக்கு வரும் .பெண்கள் எனில் அழுகையும் தூய்மை அற்ற்வர்களாயும் இருப்பர். ஆண் களில் எதோ ஒரு திருப்தியின்மையை நினைத்து வஞ்சம் தீர்க்க முற்படுவர். மூளை தாறுமாறாக யோசிக்கும்.வயது வந்தவர்களாய் இருப்பினும் ஒழுங்காக மருந்து எடுத்தாரா எனக் கவனிக்க வேண்டும். யோசிக்க விடாது வேறு திசையில் முயற்சிகளில் ஈடுபடுத்த வேண்டும் நித்திரை அவசியம். படுக்கையில்   இருந்தாலும்  மூளை உறங்காது  கிரமமாக குறித்த காலஎல்லையில் வைத்தியரிடம் போக வேண்டும். எனக்கு தெரிந்த ஒருவரிடமிருந்து அறிந்து கொண்டவை. இவை யாருக்கும் பயன்படக் கூடும் எனும் நல்லெண்ணத்தில் பகிர்கின்றேன்.    .    

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.