Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீன் போடுகிறார்களோ அல்லது செயலாற்றுவார்களோ தெரியவில்லை, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்படுகிறவர்களே எட்டிப்பார்க்காத மக்கள் இடர்பாடுகளின்போது ஒரு அமைச்சர் யாழ்ப்பாணத்தில் வீடுவீடாக சென்று குறை விசாரிப்பது வரவேற்கதக்கது.

சீன் போடாமல் செயலாற்றினார்களென்றால் அடுத்த தேர்தலிலும் யாழ்பகுதி தமிழ்கட்சிகள் பொழைப்பு  சறுக்கிக்கிட்டு போவும்.

 

  • Replies 65
  • Views 6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    மீராவோ, அல்வாயனோ.... மாண்புமிகு  அமைச்சர்  சந்திரசேகரனை  மலையகத் தமிழர் என ரீதியில் பிரித்து எழுதியிருப்பார்கள் என்று நினைக்கவில்லை.  அவரை ஒரு சிங்களக் கட்சியின் அமைச்சராக பிரதிபலித்தே அந்தக் கருத

  • இதுதான் உண்மை...மிகவும் நன்றி சிறியர்...கோசான்ஜி...இவ்வளவு காலமாக  யாழ் களத்தில் எழுதுகின்றன்...பிரதேசாவாதமோ ,சாதி ,மதவாதம் பற்றி எழுதியதாக எனக்கு நினைவில்லை...கோபப்படுவேன்... எழுதுவேன் .. மேலுள்ளவைகள

  • பார் சிறிதரன் இந்த வீடியோவை பார்த்து விட்டு ஓட்டை சிரட்டையில் குதித்து தற்கொலை செய்யலாம். தமிழரசு கட்சியின் ஒரே யாழ்ப்பாண எம்பி, தமிழரசு கட்சியின் தலைவர் எங்கே ஆள்? பார் லைசன்ஸ் கேசை அமுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

1) யாழ்ப்பாணத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்.

2) நீர்வழித்தடங்களை சீர்படுத்த வேண்டும்.

3) சட்ட விரோத ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். 

4) தாழ்நிலங்களில் கட்டட அமைப்புக்களை கண்காணிப்பிற்கு உள்ளாக்க வேண்டும். 

5) சீரான கழிவகற்றல் முறையை பேண வேண்டும் 

6) மக்கள் வீதியோரத்தில் குப்பை கொட்டும் பழக்கத்தை மாற்றி கொஞ்சம் நாகரீகம் அடைய வேண்டும். 

இதுபோன்ற அடிப்படை வேலைகளைச் செய்யாதவரை  இந்தப் பிரச்சனை தொடரும். 

அடுத்த கார்த்திகை மாதத்தில் மீண்டும் ஒருமுறை அமைச்சர் அங்கே வருவார். ஊடகங்களுக்குத் தீனி போடுவார். 

😏

  • கருத்துக்கள உறவுகள்

அமை ச்சரும்...எம்பியும்...சரியான இடத்தில்...சரியான நேரத்தில் அடிகொடுக்கினம் ....எங்கை தமிழ் எம்பிமார் குடைபிடிக்க ஆள் தேடிப்போட்டினமோ.. .நல்ல யுக்தி டூடிப்ப்ர்களை வளைத்துப் போட்டபடியால் இலவச விளம்பரம் ..இந்த்மழையோடை..உள்ள ஆதரவும் கரைந்துவிடும்...தமிழ் கட்சிகளுக்கு...

இது ஒரு கார்த்திகை மாத அழிப்புத்தான்..

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை. தொடர்ச்சியாக செயற்பட்டு இவ்வாறான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சும்மா சம்பிரதாயத்துக்காக பார்வையுடன் நின்றுவிடக் கூடாது.  

இதன் செய்யும் அமைச்சருக்கு பாராட்டுக்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

1) யாழ்ப்பாணத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்.

2) நீர்வழித்தடங்களை சீர்படுத்த வேண்டும்.

3) சட்ட விரோத ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். 

4) தாழ்நிலங்களில் கட்டட அமைப்புக்களை கண்காணிப்பிற்கு உள்ளாக்க வேண்டும். 

5) சீரான கழிவகற்றல் முறையை பேண வேண்டும் 

6) மக்கள் வீதியோரத்தில் குப்பை கொட்டும் பழக்கத்தை மாற்றி கொஞ்சம் நாகரீகம் அடைய வேண்டும். 

உங்கட சுமத்திரன் சேர் க்கு இப்படி பாடம் எடுக்க உங்களால் முடியுமா ?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

உங்கட சுமத்திரன் சேர் க்கு இப்படி பாடம் எடுக்க உங்களால் முடியுமா ?

 

 

அவர் முற்றும் அறிந்த அப்புகாத்து படிச்ச காய்,அவருக்கு போய் நாங்கள் பாடம் எடுப்பதா ? சிறிலங்கன் பாடதிட்டத்தை உருவாக்கியவரே அவர் தானே...அவருக்கு  போய் பாடம் எடு என நீங்கள் கேட்பது தேச துரோகம்..

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, putthan said:

அவர் முற்றும் அறிந்த அப்புகாத்து படிச்ச காய்,அவருக்கு போய் நாங்கள் பாடம் எடுப்பதா ? சிறிலங்கன் பாடதிட்டத்தை உருவாக்கியவரே அவர் தானே...அவருக்கு  போய் பாடம் எடு என நீங்கள் கேட்பது தேச துரோகம்..

அந்த அறிவாளிதான் ஒரு தங்கத்திடம் தோத்தான் குஞ்சு  ஆனது இதுக்கு பிறகும் தனக்கு மானம் ரோசம் இருக்கெண்டு என்னெண்டுதான் தமிழ் மக்கள் முன்னிலையில் நடமாடுதோ ?

  • கருத்துக்கள உறவுகள்

பார் சிறிதரன் இந்த வீடியோவை பார்த்து விட்டு ஓட்டை சிரட்டையில் குதித்து தற்கொலை செய்யலாம்.

தமிழரசு கட்சியின் ஒரே யாழ்ப்பாண எம்பி, தமிழரசு கட்சியின் தலைவர் எங்கே ஆள்?

பார் லைசன்ஸ் கேசை அமுக்குவதில் பிசியோ?

பார் சிறியை போல ஒண்டுக்கும் உதவா உதாவாக்கரை தலைவரை தமிழினம் இதுவரை கண்டதே இல்லை.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, valavan said:

சீன் போடுகிறார்களோ அல்லது செயலாற்றுவார்களோ தெரியவில்லை, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்படுகிறவர்களே எட்டிப்பார்க்காத மக்கள் இடர்பாடுகளின்போது ஒரு அமைச்சர் யாழ்ப்பாணத்தில் வீடுவீடாக சென்று குறை விசாரிப்பது வரவேற்கதக்கது.

இவர்கள் சீன் போடுகின்றார்களோ இல்லையோ தேர்தல் முடிந்த பின் மக்களைபோய் சந்திக்கின்றார்கள்.இது எமது புராதன தமிழ் அரசியல்வாதிகளுக்கு சரியான செருப்படி.சம்சும்,மாவை போன்றோர்  செய்யாத செயல்களை இவர்கள் செய்ய முற்படுகின்றார்கள் போல் தெரிகின்றது.  வேற்று அமைச்சராக இருந்தாலும் சமூக நல அமைச்சராக மக்களிடம் குறைகளை கேட்கின்றார். இவர்களின் அரசியல் பின்னோக்கம் என்னவென்று தெரியாது.சில வேளைகளில் இலங்கை தமிழர்களின் பிரச்சனை இதுதான் என முடித்துவிடவும் கூடும்.
சாதாரணமாக எமது அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன் பொதுமக்களை சந்திப்பார்கள். இவர்கள் தேர்தலுக்கு பின் பொதுமக்களை சந்திக்கின்றார்கள்.

எனது கேள்வி என்னவென்றால்.....?? மலையக தமிழர்களுக்கு வானம் தொட்ட வாழ்வாதார பிரச்சனைகள் இருக்கும் போது சந்திரசேகரன் யாழ்நிலத்தில் சாதாரண வெள்ள நிகழ்வை பார்வையிட சென்றது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

அந்த அறிவாளிதான் ஒரு தங்கத்திடம் தோத்தான் குஞ்சு  ஆனது இதுக்கு பிறகும் தனக்கு மானம் ரோசம் இருக்கெண்டு என்னெண்டுதான் தமிழ் மக்கள் முன்னிலையில் நடமாடுதோ ?

தன்ட தலையில் ஒர் ஒளிவட்டம் தெரிகின்றது என் ஐன்னும் நம்புகிறார்...
எப்ப போராளிகளை அவதிக்க தொடங்கினாரோ அப்பவே அவர் செல்லா காசாக மாறிவிட்டார் ...தான் அடுத்த  தேசிய தலைவர் என நினைக்க தொடங்கியதன் விளைவு  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

உங்கட சுமத்திரன் சேர் க்கு இப்படி பாடம் எடுக்க உங்களால் முடியுமா ?

 

 

பெருசு, இங்கே நான்  யாருக்குப் பாடம் எடுத்தேன்? 

சுமந்திரன் குலப்பன் காய்ச்சல் இன்னும் போகவில்லை போலத் தென்படுகிறது. 

🤣

4 hours ago, putthan said:

அவர் முற்றும் அறிந்த அப்புகாத்து படிச்ச காய்,அவருக்கு போய் நாங்கள் பாடம் எடுப்பதா ? சிறிலங்கன் பாடதிட்டத்தை உருவாக்கியவரே அவர் தானே...அவருக்கு  போய் பாடம் எடு என நீங்கள் கேட்பது தேச துரோகம்..

டமில்  தேசியர்களின் தனிநாடு காண் பயணம்  தற்போது சுமந்திரன் எதிர்ப்பு பயணமாகச் சுருங்கிவிட்டது. 

🤣

3 hours ago, பெருமாள் said:

அந்த அறிவாளிதான் ஒரு தங்கத்திடம் தோத்தான் குஞ்சு  ஆனது இதுக்கு பிறகும் தனக்கு மானம் ரோசம் இருக்கெண்டு என்னெண்டுதான் தமிழ் மக்கள் முன்னிலையில் நடமாடுதோ ?

தங்கத்தை  நாடாளுமன்றம் கொண்டு சேர்த்தது எங்கள் புலம்பெயர்ஸ் போலித் தமிழ்த் தேசிக்காய் வியாபாரிகள்தானே,.. நாடாளுமன்றம் படப்போகும் பாட்டைப் பார்த்து புலம்பெயர்ஸ் கட்டியிருக்கும்  வேட்டியைத் அவிழ்த்து  முகத்தை மூடும் நாட்கள் வெகு விரைவில் வரும்,....🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, goshan_che said:

பார் சிறிதரன் இந்த வீடியோவை பார்த்து விட்டு ஓட்டை சிரட்டையில் குதித்து தற்கொலை செய்யலாம்.

அதென்ன பார் சிறிதரன்? 😎
வெளிப்படையாய் "சாரயக்கடை சிறி" எண்டு சொல்லுறது தானே 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

தங்கத்தை  நாடாளுமன்றம் கொண்டு சேர்த்தது எங்கள் புலம்பெயர்ஸ் போலித் தமிழ்த் தேசிக்காய் வியாபாரிகள்தானே,.. நாடாளுமன்றம் படப்போகும் பாட்டைப் பார்த்து புலம்பெயர்ஸ் கட்டியிருக்கும்  வேட்டியைத் அவிழ்த்து  முகத்தை மூடும் நாட்கள் வெகு விரைவில் வரும்,....🤣

ஏற்கனவே உங்க ஆள் சுமத்திரன் செய்த வேலைகளால் கோமணத்தை கூட முகத்தை மூட முடியாமல் கூனி குறுகி நின்றோம் வேட்டிதானே .😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, Kapithan said:

தங்கத்தை  நாடாளுமன்றம் கொண்டு சேர்த்தது எங்கள் புலம்பெயர்ஸ் போலித் தமிழ்த் தேசிக்காய் வியாபாரிகள்தானே,.. நாடாளுமன்றம் படப்போகும் பாட்டைப் பார்த்து புலம்பெயர்ஸ் கட்டியிருக்கும்  வேட்டியைத் அவிழ்த்து  முகத்தை மூடும் நாட்கள் வெகு விரைவில் வரும்,....🤣

தங்கம்ஸ் பாராளுமன்றம் போற அளவுக்கு சனத்தை வெறுப்பேத்தினது ஆர் ஆக்கள்? :cool:

கொஞ்ச நஞ்சமே எழுபது வருசம். 🙃
சும்மா பாராளுமன்றம் போய் திண்டுட்டு குடிச்சுப்போட்டு கிடந்திருக்கிறானுகள்...😡

அதில மாவை குஞ்சுக்கு இப்பவும் ஒரு சீட் வேணுமாம்....அடிங்....😂

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

 

எனது கேள்வி என்னவென்றால்.....?? மலையக தமிழர்களுக்கு வானம் தொட்ட வாழ்வாதார பிரச்சனைகள் இருக்கும் போது சந்திரசேகரன் யாழ்நிலத்தில் சாதாரண வெள்ள நிகழ்வை பார்வையிட சென்றது ஏன்?

இது ஒரு நியாயமான கேள்வி....தொண்டமான் முதல்...அனைவரும் யாழ் தலைமைகளிடம் மண்டியிட்ட காலம் மலையேறிவிட்டது...இனி நீங்கள் இனி என்னுடைய காலடியில் என்று..தமிழ்  அமைச்சர் என்கின்ற் சந்திரசேகரன் சொல்லாமல்  சொல்கின்றாரோ

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அதில மாவை குஞ்சுக்கு இப்பவும் ஒரு சீட் வேணுமாம்....அடிங்....

குசா, மாவை நடுவில் புகுந்த காரணம் சும். 

தேர்தலில் தோற்றவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை என்றவருக்கு எப்படி வாய்ப்பு வழங்கலாம்? என்பதே மாவையின் வாதம். அப்படி வாய்ப்பு வழங்குவதாயின் தனக்கு வழங்க வேண்டும் என்று வாதாடியமையாலேயே சும் வெளியே சத்தியலிங்கம் உள்ளே.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, alvayan said:

இது ஒரு நியாயமான கேள்வி....தொண்டமான் முதல்...அனைவரும் யாழ் தலைமைகளிடம் மண்டியிட்ட காலம் மலையேறிவிட்டது...இனி நீங்கள் இனி என்னுடைய காலடியில் என்று..தமிழ்  அமைச்சர் என்கின்ற் சந்திரசேகரன் சொல்லாமல்  சொல்கின்றாரோ

கிட்டத்தட்ட நிலைமை அதுதான்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற நிலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஏற்கனவே உங்க ஆள் சுமத்திரன் செய்த வேலைகளால் கோமணத்தை கூட முகத்தை மூட முடியாமல் கூனி குறுகி நின்றோம் வேட்டிதானே .😁

மற்ர ஆட்கள் எல்லாம் திறமைசாலிகள் என்கிறீர்களா? 

போங்கப்பூ போங்க,.

😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை பிரச்சனைக்குள் தலையிடுவதற்க்கு மன்னிக்கவும்.உந்த தங்கம் என்ற பெயர் எப்படி வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு பின் எந்த அரசியல்வாதிகளும் பொதுவாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதில்லை. குறிப்பாக தமிழ் கட்சி பா.உக்கள். அமைச்சரும் , பா.உறுப்பினரும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளார்கள். மக்களின் தேவையை பூர்த்தி செய்தார்கள் எனில் அவர்களின் மனதில் இடம் பிடித்து விடுவீர்கள்.
மக்களும் சுயநலவாதிகளாக குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டாமல் எல்லோரின் சுகாதார நிலையை எண்ணி செயற்பட வேண்டும். எல்லாவற்றையும்  அரசு செய்யுமென்று இருக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

இது ஒரு நியாயமான கேள்வி....தொண்டமான் முதல்...அனைவரும் யாழ் தலைமைகளிடம் மண்டியிட்ட காலம் மலையேறிவிட்டது...இனி நீங்கள் இனி என்னுடைய காலடியில் என்று..தமிழ்  அமைச்சர் என்கின்ற் சந்திரசேகரன் சொல்லாமல்  சொல்கின்றாரோ

 

3 hours ago, MEERA said:

கிட்டத்தட்ட நிலைமை அதுதான்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற நிலைதான்.

பச்சை யாழ்ப்பாண மையவாதம்.

உதுவே சிங்கள அமைச்சர் அல்லது

வெள்ளைத்தோல் வெள்ளைக்காரர் வந்து குறை கேட்டிருந்தால்

அப்டியே புல்லரித்து இருக்கும்.

மலையக தமிழர் அமைச்சராகி வந்து கேட்டவுடன் 

மனசுக்குள் அப்பிக் கிடக்கும் அழுக்கை வெட்கமின்றி

இங்கு கொட்டுதுகள்

வெளிநாட்டு க்கு வந்து வெள்ளைக் காரநிடம் அகதி கோரிக்கை வைத்து பிழைத்த கூட்டம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வைரவன் said:

 

பச்சை யாழ்ப்பாண மையவாதம்.

உதுவே சிங்கள அமைச்சர் அல்லது

வெள்ளைத்தோல் வெள்ளைக்காரர் வந்து குறை கேட்டிருந்தால்

அப்டியே புல்லரித்து இருக்கும்.

மலையக தமிழர் அமைச்சராகி வந்து கேட்டவுடன் 

மனசுக்குள் அப்பிக் கிடக்கும் அழுக்கை வெட்கமின்றி

இங்கு கொட்டுதுகள்

வெளிநாட்டு க்கு வந்து வெள்ளைக் காரநிடம் அகதி கோரிக்கை வைத்து பிழைத்த கூட்டம்.

உண்மைதான் உங்கள் கருத்தில் நியாயமுள்ளது. யாழ்ப்பாணம் இந்த மாரிகாலத்தில் பேரழிவை சந்திக்கபோகிறது என்று செய்திகள் வருகின்றன,

ஆரம்பத்திலேயே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யார் எடுத்தாலும் தவறில்லை,  வந்து பார்ப்பது யாரென்பது பிரச்சனையில்லை பாதிக்கப்படபோவது எம் மக்கள் என்பதே பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும்.

ஒருவேளை அரசு தரப்பிலிருந்து யாரும் வராமல் விட்டிருந்தால் பார் சிங்களவனுக்கு வாக்களிச்சுது எங்க சனம் அவன் தேர்தல் முடிஞ்சதும் தங்கட ஏரியாவை மட்டும் கவனிக்கிறான் என்றும் பேச்சு வந்திருக்கும்,

ஒருவர் அமைச்சராகிவிட்டால் ஒரு அரசின் அங்கமாகவே பார்க்கப்படுவார், அவர் ஒருபகுதி மக்களுக்கானவராக ஒருபோதும் பார்க்கப்பட கூடாது.

மலையகத்தில் அம்பிகா எனும் ஒரு தமிழ் பெண்ணை சிங்களவர்களும் சேர்ந்து பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெற வைத்தார்கள், சரோஜா சாவித்திரி போல்ராஜ் என்பவரும் மலையக மக்களின் பிரதிநிதியாக அமைச்சராகியுள்ளார்.

அவர்கள் மலையக மக்களீன் பிரச்சனைகளை பார்த்துக்கொள்வார்,  இந்த அமைச்சரைவிட வேறு எந்த தமிழ் அமைச்சர் வந்திருக்கவேண்டும் ?

வடகிழக்கில் உள்ள எவருக்கும் அநுர அரசில் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லையே அதனால் இவர் அல்லது சரோஜினிதான் வரணூம் அவரும் மலையகம்தான்.

25 minutes ago, வைரவன் said:

வெளிநாட்டு க்கு வந்து வெள்ளைக் காரநிடம் அகதி கோரிக்கை வைத்து பிழைத்த கூட்டம்

நானும் அகதி கோரிக்கை வைத்து பிழைக்கும் கூட்டம்தான், ஆனால் அமைச்சர்மீது வைக்கப்படும் இதுபோன்ற கருத்துக்களை ரசிக்கவில்லை, 

சொந்தநாட்டிலேயே சொந்த அரசினால் அகதியாக்கப்பட்ட இனம் அடுத்தநாட்டில் அகதி கோரிக்கை வைத்து பிழைப்பது அப்படி ஒன்றும் அசிங்கமில்லை.

அன்று சிங்களவன்  எம்மை சேர்ந்த்தும்  வாழாமல் பிரிந்து போகவும் விடாமல் பூட்டிய அறையினுள் போட்டு வெட்டிக்கொன்றால்  எட்டிய தூரம் மட்டும் எவனும் ஓடுவான், வசதியுள்ளவன் வெள்ளைக்காரன் நாட்டுக்கு வந்துவிட்டான் அதனால் உயிரை காப்பாற்றி வாழும்  அகதி கோரிக்கை பொழைப்பு மிக பெரிய கேவலமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வைரவன் said:

 

பச்சை யாழ்ப்பாண மையவாதம்.

உதுவே சிங்கள அமைச்சர் அல்லது

வெள்ளைத்தோல் வெள்ளைக்காரர் வந்து குறை கேட்டிருந்தால்

அப்டியே புல்லரித்து இருக்கும்.

மலையக தமிழர் அமைச்சராகி வந்து கேட்டவுடன் 

மனசுக்குள் அப்பிக் கிடக்கும் அழுக்கை வெட்கமின்றி

இங்கு கொட்டுதுகள்

வெளிநாட்டு க்கு வந்து வெள்ளைக் காரநிடம் அகதி கோரிக்கை வைத்து பிழைத்த கூட்டம்.

 


@வைரவன் நன்றி உடனடி பதிலுக்கு. எப்பொழுதாவது இருந்து வருவீர்கள். உங்கள் பதில்கள் வெடி மாறி இருக்கும்.
 

5 hours ago, MEERA said:

கிட்டத்தட்ட நிலைமை அதுதான்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற நிலைதான்.

 

5 hours ago, alvayan said:

இது ஒரு நியாயமான கேள்வி....தொண்டமான் முதல்...அனைவரும் யாழ் தலைமைகளிடம் மண்டியிட்ட காலம் மலையேறிவிட்டது...இனி நீங்கள் இனி என்னுடைய காலடியில் என்று..தமிழ்  அமைச்சர் என்கின்ற் சந்திரசேகரன் சொல்லாமல்  சொல்கின்றாரோ

ஒரு இந்திய வம்சாவளி தமிழனான நான் அல்வாயனினாலும் மீராவினாலும் மேலே எழுதப்பட்ட இரண்டு கருத்துக்களை வாசித்தபோது மனம் வேதனைப்பட்டது. வீடியோவை பார்க்க‌வில்லை. கடந்த இரண்டு வாரமாக கடும்மழை, வீடுகளில் எல்லாம் நீர் நிரம்பிபுள்ளது. மக்கள் எவ்வ்ளவோ கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். யாரோ ஒரு மனிதர் வ‌ந்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகள், கூறுகின்றார், தேற்றுகின்றார். மக்களும் அவர்மீது அன்புகொள்வார்கள். இதுதானே மனித இயல்பு. யாரா இருந்தால் என்ன. ஒரு வார்த்தை பாராட்டலாமே?

அப்பட்டமான ஒரு யாழ்பாண இனவாதத்தை கக்கியுள்ளீர்கள்.  ஊர் இரண்டுபட்டால்?... யார் ஐயா இரண்டு படுத்தியது? ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் 20, 30 இயக்கங்களாக பிரிந்து தங்களுக்குள் அடிபட்டு, தங்கள் சொந்த இனத்தையே அழித்து, சகோதர்களையே கொன்று, இன்று நதியாற்று நடுத்தெருவில் இருக்கும் இந்த மக்களுக்கு இப்பொழுதுதேவை அன்பும் அரவணப்பும்.  எந்த ஒரு விடயத்தில் ஐயா நீங்கள் ஒற்றுமை பட்டுள்ளீர்கள்? ஒரு சாதரணா பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்யும் 10 யாழ்ப்பணத்தவர்களுக்கு இடையில் ஒரு விடயத்தில் ஒற்றுமையுண்டா? கடந்த தேர்தலில்தான் பார்த்தோமே சொந்த மக்களாலே 30, 40 வருடமாக இருந்த இந்த அரசியல்வாதிகள் தூக்கி ஏறியப்பட்டார்களே? 
ஒரு இந்திய வமசாவளி தமிழர் யாழ்பாணத்திற்கு அமைச்சர நியமிக்கப்பட்டு இப்படி மக்களை ஆறுதல்படுத்துவது குற்றமா?



 

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, colomban said:

 

 

அப்பட்டமான ஒரு யாழ்பாண இனவாதத்தை கக்கியுள்ளீர்கள்.  ஊர் இரண்டுபட்டால்?... யார் ஐயா இரண்டு படுத்தியது? ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் 20, 30 இயக்கங்களாக பிரிந்து தங்களுக்குள் அடிபட்டு, தங்கள் சொந்த இனத்தையே அழித்து, சகோதர்களையே கொன்று, இன்று நதியாற்று நடுத்தெருவில் இருக்கும் இந்த மக்களுக்கு இப்பொழுதுதேவை அன்பும் அரவணப்பும்.  எந்த ஒரு விடயத்தில் ஐயா நீங்கள் ஒற்றுமை பட்டுள்ளீர்கள்? ஒரு சாதரணா பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்யும் 10 யாழ்ப்பணத்தவர்களுக்கு இடையில் ஒரு விடயத்தில் ஒற்றுமையுண்டா? கடந்த தேர்தலில்தான் பார்த்தோமே சொந்த மக்களாலே 30, 40 வருடமாக இருந்த இந்த அரசியல்வாதிகள் தூக்கி ஏறியப்பட்டார்களே? 
ஒரு இந்திய வமசாவளி தமிழர் யாழ்பாணத்திற்கு அமைச்சர நியமிக்கப்பட்டு இப்படி மக்களை ஆறுதல்படுத்துவது குற்றமா?



 

இது நல்லதொரு பகிடி...இதன் பின்பக்கத்தை உங்கள்ள்வர் பத்திரிகையில் (உங்கடை)பார்த்துவிட்டு எழுதினால்..நான் ஏற்றுக்கொள்வேன்..என்னுடைய கருத்து...தொண்டைமானைப்பொல் ஒரு மத்திய மந்திரி அவர்...வடக்கு கிழக்குதமிழ் மக்களைப் பிரதிநித்துவப் படுத்தும் மந்திரி என்பதைநாடே ஏற்றுக்கொண்டதாக நான் அறியவில்லை..உங்கள்சார்பானவர்கள்தான் நமக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக  2 தமிழ் மந்திரிகள்..என்று  மார்பிலடித்து ஒப்பாரி வைத்தார்கள்...  நாமல்ல...அதைவிட இயக்கப்பிளவுக்கு ஒப்பாரி வைக்கும் நீங்கள்..ஏவ்வளவு தமிழ் சனத்தை கொன்றீர்கள்  என்பதை மறந்துவிட்டீகள்... இப்பவும் எங்கடை ஒற்றுமை பற்றி க்தைக்கும் நீங்கள் .. உங்கடைபக்க பீத்தலை மறந்துவிட்டீகள்... கிழக்கில் மலையகத்தமிழனை ஆளுனராக நியமித்தபோதூ நீங்கள்  போடாத காட்டுக்கூச்சலா நான் போட்டுவிட்டேன்... உங்கள் நோக்கமே தமிழனை இருப்பழித்து ..துரத்தவேண்டுமென்றநோக்கமே உங்கள்   பத்திரிகைகளின் வாயை அடக்கலாமே...ஏன் இப்பகூட அனுர இடம்தந்தால்..மடம் பிடிக்கவும் தயாராகத்தானே இருக்கின்றிர்கள்...நானொன்றும் அமைச்சர்மீது வசைபாடவிலை ..பிரித்தும் பார்க்கவில்லை அவர்பிறந்தமண்ணில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு..அதைவிட்டுவிட்டு ..இங்கு வந்தது  உள்நோக்கம் என்றுதான் குறிப்பிட்டடேன்..முதலி உங்கள் இன ஊத்தையை கழுவவும் ..அப்புறம் ..பெற்றோல் செற் வேலக்கு இங்குவந்து அவையின்ரை பிரச்சினையை தீற்கலாம்... வந்தபின் தொடர்பு கொள்ளவும் நண்பர்களின் பெற்றோல் செட்டில் வேலை எடுத்துதருகின்றேன்

3 hours ago, வைரவன் said:

 

பச்சை யாழ்ப்பாண மையவாதம்.

உதுவே சிங்கள அமைச்சர் அல்லது

வெள்ளைத்தோல் வெள்ளைக்காரர் வந்து குறை கேட்டிருந்தால்

அப்டியே புல்லரித்து இருக்கும்.

மலையக தமிழர் அமைச்சராகி வந்து கேட்டவுடன் 

மனசுக்குள் அப்பிக் கிடக்கும் அழுக்கை வெட்கமின்றி

இங்கு கொட்டுதுகள்

வெளிநாட்டு க்கு வந்து வெள்ளைக் காரநிடம் அகதி கோரிக்கை வைத்து பிழைத்த கூட்டம்.

வைரவருக்கு உரு பிடித்திருக்கு..மலையத்தில்தான் நல்ல மாந்திரீகர்கள்  .. இருக்கினம்..உந்த பேயாட்டமெல்லாம் நமக்கு பழக்கம்...

என்னுடைய கருத்து இதுதான் நம்மிவாக்காளித்த யாழ் / வன்னிதமிழனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்பதே...அதன்பின் எந்த அமைச்சர் வந்தாலும் அது உள்நோக்கம் கொண்டதே...அதன்பின் அகதி /பெற்றோல்நிலையம் பற்றி கதப்பவரும் உள்நோக்கம் உடையவரே..துவும் ஒருவரே..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, alvayan said:

இது நல்லதொரு பகிடி...இதன் பின்பக்கத்தை உங்கள்ள்வர் பத்திரிகையில் (உங்கடை)பார்த்துவிட்டு எழுதினால்..நான் ஏற்றுக்கொள்வேன்..என்னுடைய கருத்து...தொண்டைமானைப்பொல் ஒரு மத்திய மந்திரி அவர்...வடக்கு கிழக்குதமிழ் மக்களைப் பிரதிநித்துவப் படுத்தும் மந்திரி என்பதைநாடே ஏற்றுக்கொண்டதாக நான் அறியவில்லை..உங்கள்சார்பானவர்கள்தான் நமக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக  2 தமிழ் மந்திரிகள்..என்று  மார்பிலடித்து ஒப்பாரி வைத்தார்கள்...  நாமல்ல...அதைவிட இயக்கப்பிளவுக்கு ஒப்பாரி வைக்கும் நீங்கள்..ஏவ்வளவு தமிழ் சனத்தை கொன்றீர்கள்  என்பதை மறந்துவிட்டீகள்... இப்பவும் எங்கடை ஒற்றுமை பற்றி க்தைக்கும் நீங்கள் .. உங்கடைபக்க பீத்தலை மறந்துவிட்டீகள்... கிழக்கில் மலையகத்தமிழனை ஆளுனராக நியமித்தபோதூ நீங்கள்  போடாத காட்டுக்கூச்சலா நான் போட்டுவிட்டேன்... உங்கள் நோக்கமே தமிழனை இருப்பழித்து ..துரத்தவேண்டுமென்றநோக்கமே உங்கள்   பத்திரிகைகளின் வாயை அடக்கலாமே...ஏன் இப்பகூட அனுர இடம்தந்தால்..மடம் பிடிக்கவும் தயாராகத்தானே இருக்கின்றிர்கள்...நானொன்றும் அமைச்சர்மீது வசைபாடவிலை ..பிரித்தும் பார்க்கவில்லை அவர்பிறந்தமண்ணில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு..அதைவிட்டுவிட்டு ..இங்கு வந்தது  உள்நோக்கம் என்றுதான் குறிப்பிட்டடேன்..முதலி உங்கள் இன ஊத்தையை கழுவவும் ..அப்புறம் ..பெற்றோல் செற் வேலக்கு இங்குவந்து அவையின்ரை பிரச்சினையை தீற்கலாம்... வந்தபின் தொடர்பு கொள்ளவும் நண்பர்களின் பெற்றோல் செட்டில் வேலை எடுத்துதருகின்றே

எவ்வளவு வன்மம்

எவ்வளவு வெறுப்பு

எவ்வளவு பொறாமை

உவ்வளவும் யார் மீது?

சக தமிழன் மீது

காரணம்? அவன் மலையக தமிழன் என்பதால்.

இப்படியே வெள்ளை காரனுக்கு குண்டி கழுவிக் கொண்டு வெறுப்பை கொட்டி சாகுங்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் 

உங்களை போன்ற அற்பர்களை கை கழுவி நாளாச்சு

 

Guest
This topic is now closed to further replies.



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.