Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னமும் வலிக்கின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

EM-231004.jpg

இன்னமும் வலிக்கின்றது

இந்தவருடம் எனது தாயார் ஊரிலிருந்து என்னிடம் வந்திருந்தார்.இதுதான் அவர் ஜரோப்பா வருவது முதற்தடைவை. பத்து ஆண்டுகளிற்குமுன்னர் இந்தியாவில் சந்தித்த பின்னர் மீண்டும் இப்பொழுதுதான் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தசந்தோசம்.

அதைவிட எனது மனைவி மகளையும் அவர் நேரில் சந்தித்த சந்தோசம்அவரிற்கு. தற்சமயம் நத்தார் பண்டிகை காலமாகையால் எனது நகரமெங்கும் அமைத்திருந்து மின்விளக்கு தோரணங்களை அம்மாவிற்கு காட்டலாமென நினைத்து அவரை காரில் ஏற்றிக்கொண்டு ""அம்மா அங்கை பாருங்கோ ஒரே நீலக்கலரிலை பல்ப்பு பூட்டியிருக்கிறாங்கள் வடிவாயிருக்கெல்லோ ?? இஞ்சாலை இந்த றோட்டை பாருங்கோ என்று காட்டியவாறே நகரத்தை சுற்றிவந்திருந்துகொண்டிரு

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி உங்களின் இன்னமும் வலிக்கின்றது கதை எம்மையும் தான் வலிக்க வைக்கின்றது.

ம்......................இப்படி எத்தனை நிகழ்வுகள் பலரின் வாழ்வினில் ?????????????

  • கருத்துக்கள உறவுகள்

ம்..வழமையான சாத்திரி கதை என்று வந்து பார்த்தால் உங்கள் வாழ்க்கைக் கதை. நெஞ்சைப் பிழிகிறது..அந்த நேரத்திலும் செய்ய வேண்டிய காரியத்தில் குறியாயிருந்த உங்களைப் போன்ற பல்லாயிரம் வீரர்களால் தான் என்னைப் போன்றவர்கள் இன்னும் உயிர் வாழ்கிறோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி உங்களின் இன்னமும் வலிக்கின்றது கதை எம்மையும் தான் வலிக்க வைக்கின்றது.

ம்......................இப்படி எத்தனை நிகழ்வுகள் பலரின் வாழ்வினில் ?????????????

நன்றிகள் கறுப்பி எனது அக்கா எனக்கு இன்னொரு தாய் போல அவரை நினைக்கும் பொழுது ராஜீவ் என்ன இந்திய தேசத்தையே அழித்தாலும் ஆத்திரம் தீராது என்றுதான் மனது நினைக்கும் ஆனாலும் தமிழகத்து உறவுகளிற்காக இன்னமும் இந்தியாவை வெறுப்புடன் விரும்புகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்..வழமையான சாத்திரி கதை என்று வந்து பார்த்தால் உங்கள் வாழ்க்கைக் கதை. நெஞ்சைப் பிழிகிறது..அந்த நேரத்திலும் செய்ய வேண்டிய காரியத்தில் குறியாயிருந்த உங்களைப் போன்ற பல்லாயிரம் வீரர்களால் தான் என்னைப் போன்றவர்கள் இன்னும் உயிர் வாழ்கிறோம்

ஜஸ்ரின் அன்று என்னுடனிருந்த பிறேம் மற்றும் ராஜன் மிக அற்புதமான நண்பர்கள். இந்திய இராணுவத்துடனான எனது அனுபவங்களை பல காலமாகவே எழுத வேண்டும் என்று என்னுடைய ஆவல். நிச்சயமாக அதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் கறுப்பி எனது அக்கா எனக்கு இன்னொரு தாய் போல அவரை நினைக்கும் பொழுது ராஜீவ் என்ன இந்திய தேசத்தையே அழித்தாலும் ஆத்திரம் தீராது என்றுதான் மனது நினைக்கும் ஆனாலும் தமிழகத்து உறவுகளிற்காக இன்னமும் இந்தியாவை வெறுப்புடன் விரும்புகிறேன்

சாத்திரியார்! வலி எமக்கு என்றுமே தீராது போலிருக்கின்றது.

"தமிழகத்து உறவுகளிற்காக இன்னமும் இந்தியாவை வெறுப்புடன் விரும்புகிறேன்"

இருந்தாலும் இது ஆயிரத்தில் ஒருவசனம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி உங்களின் இன்னமும் வலிக்கின்றது கதை எம்மையும் தான் வலிக்க வைக்கின்றது.

ம்......................இப்படி எத்தனை நிகழ்வுகள் பலரின் வாழ்வினில் ?????????????

கறுப்பியக்கா? ஏன் உங்கடை கண் படத்தை மாத்தினனீங்கள்? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பியக்கா? ஏன் உங்கடை கண் படத்தை மாத்தினனீங்கள்? :lol:

கண்பட்டிடும் எண்டு நினைச்சாவோ தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்..! மனதைக் கனக்கச் செய்தது உங்க்கள் கதை..! எனக்குத் தெரிந்த இன்னொரு சம்பவத்தில் கோண்டாவில்லைச் சேர்ந்த இரு பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர் இதேபோல..! அவர்களும் வெள்ளைக் கொடியுடன் சென்றவர்கள்தான்..! :lol: பல நாட்களுக்குப் பின்பே அவர்களது ஆபரணங்களைக் கொண்டு அடையாளம் காணப்பட்டனர்..! ஒரு பெண்ணின் குடும்பத்தார் தற்போது கனடாவில் உள்ளனர்..!!

சகோதரியை இழந்த உங்களுக்கும் ஏனையோருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் இப்பதிவை தமிழ்மணத்தில் இப்பொழுது தான் வாசித்தேன். எனக்கே வாசிக்கும் போது கவலையாக இருக்கிறதே. இந்தியா மீது கோபம் வருகிறது. ஆனால் எம்.ஜி.ஆர், சீமான், வை.கோ, திருமாவளவன், நெடுமாறன், அறிவுமதி, சுபவீரபாண்டியன், விடுதலை இராஜேந்திரன் போன்றோர் வாழ்ந்த நாடு என்பதினால் நானும் இந்தியாவை வெறுப்புடன் விரும்புகிறேன்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

ம்..வழமையான சாத்திரி கதை என்று வந்து பார்த்தால் உங்கள் வாழ்க்கைக் கதை. நெஞ்சைப் பிழிகிறது..அந்த நேரத்திலும் செய்ய வேண்டிய காரியத்தில் குறியாயிருந்த உங்களைப் போன்ற பல்லாயிரம் வீரர்களால் தான் என்னைப் போன்றவர்கள் இன்னும் உயிர் வாழ்கிறோம்

உங்களுக்கு நடந்த கதை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான வலிகள் எப்போதும்ஆறப் போவதில்லை.காந்தி தேசம் ம்ம்ம்ம் :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார். கந்தப்பு. மற்றும் சஜீவன் உங்கள் கருத்திற்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தவற்றை கதையாக கொடுத்ததற்க்கு நன்றி சாத்து

இந்திய ராணுவத்தின் கோரதாண்டவங்கள் மறக்க முடியாது ஒரு போராளி இறந்தால் அவனுக்கு மரியாதை வழங்கவேண்டும் ஆனால் இந்திய ராணுவமோ என் கிராமத்தில் இறந்த போராளியை அரிதட்டு போல் அவன் உடலை துளையிட்டது துப்பாக்கி தோட்டாவால் இறந்த பிறகும்.............அதை நினைத்தால் இன்றும் வேதனைதான் அம்மா அப்பா சொன்னார்கள்

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பியக்கா? ஏன் உங்கடை கண் படத்தை மாத்தினனீங்கள்? :unsure:

,

இப்போ நான் ஒருவர் இல்லை. இருவர் .

அடிக்கடி கண்ணை மாத்த ஏலாதுதானே

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

,

இப்போ நான் ஒருவர் இல்லை. இருவர் .

எங்கேயோ உதைக்குதே :unsure::lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயோ உதைக்குதே :unsure::lol::wub:

கறுப்பி அக்கா அம்மா ஆக போறாவோ என்ன‌மோ?

சாத்தியார் மனதைக் கனக்கச் செய்தது இக் க‌தை இது உண்மையாக‌ நடந்தது என்று நம்ப‌ முடியாம‌ல் உள்ள‌து.

Edited by rathy

  • கருத்துக்கள உறவுகள்

,

இப்போ நான் ஒருவர் இல்லை. இருவர் .

அடிக்கடி கண்ணை மாத்த ஏலாதுதானே

ஆகா அதுவா சங்கதி :lol: பருப்பும் சோறும் சீசீ பசுமதி அரிசி சோறும் ஆட்டுக்கறியும் தராமால் விசையத்தை முடிச்சுப்போட்டீங்கள் போல :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்கா அம்மா ஆக போறாவோ என்ன‌மோ?

சாத்தியார் மனதைக் கனக்கச் செய்தது இக் க‌தை இது உண்மையாக‌ நடந்தது என்று நம்ப‌ முடியாம‌ல் உள்ள‌து.

ரதி நடந்த சம்பவத்தைத்தான் எழுதியுள்ளேன் இந்திய படை காலத்தில் ஊரில் இருந்தவர்களை கேட்டுபாருங்கள் இப்படி பல கதைகள் சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி,

உங்களுக்குள்ளும் இவ்வளவு வலி இருக்கும் என்று இதுவரை நினைத்திருக்கவில்லை. எல்லோரையும் கவரும் நகைச்சுவை இலக்கியத்தைப் படைக்கும் மனிதர்களின் பின்னால் எத்தனை பெரிய வேதனைகள் மறைந்து கிடக்கின்றன. உங்கள் உறவுகளுக்காக ஒரு கணம் மெளனித்துக் கொள்கிறேன்.

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி,

உங்களுக்குள்ளும் இவ்வளவு வலி இருக்கும் என்று இதுவரை நினைத்திருக்கவில்லை. எல்லோரையும் கவரும் நகைச்சுவை இலக்கியத்தைப் படைக்கும் மனிதர்களின் பின்னால் எத்தனை பெரிய வேதனைகள் மறைந்து கிடக்கின்றன. உங்கள் உறவுகளுக்காக ஒரு கணம் மெளனித்துக் கொள்கிறேன்.

நன்றிகள் சகாரா.இழப்புக்கள் எமக்கு பழகிப்போனவைதானே. அன்று அந்தச்சந்தர்ப்பத்தில் எனக்கும் எனது நண்பர்களிற்கும் இருந்த மன நிலையை எழுத்துக்களால் விபரிக்க முடியாது

சாத்து....

இவ்வளவு வலியுடனும் வாழ்வது நெஞ்சத்து உரத்தினாலேயன்றி ..வேறொன்றும் அல்ல.. எல்லோராலும் முடியாத விடயமும் கூட ... நான் அதிகம் யாழில் அலைபவன் அல்ல ஆனாலும் இன்று ... உங்கள் கதையை வாசித்து நெஞ்சு கனத்துப் போனேன்....

ஆறுதல் சொல்வதற்கு வார்த்தைகள் ..என்னிடம் இல்லை... ஆனாலும் உங்கள் இதயத்துடன் நெருங்க என்னிடம் கண்ணீருண்டு.....

-அன்புடன் எல்லாள மஹாராஜா

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி எழுத வார்த்தை இல்லை.... காந்தி தேசம்,ராஜீவ் தேசம், சோனியா தேசம் என்று புலத்தில் வாழும் சில எங்களுடைய வாரிசுகள் புலம்புதுகள்

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்து....

இவ்வளவு வலியுடனும் வாழ்வது நெஞ்சத்து உரத்தினாலேயன்றி ..வேறொன்றும் அல்ல.. எல்லோராலும் முடியாத விடயமும் கூட ... நான் அதிகம் யாழில் அலைபவன் அல்ல ஆனாலும் இன்று ... உங்கள் கதையை வாசித்து நெஞ்சு கனத்துப் போனேன்....

ஆறுதல் சொல்வதற்கு வார்த்தைகள் ..என்னிடம் இல்லை... ஆனாலும் உங்கள் இதயத்துடன் நெருங்க என்னிடம் கண்ணீருண்டு.....

-அன்புடன் எல்லாள மஹாராஜா

நன்றிகள் எல்லாளன்

சாத்திரி எழுத வார்த்தை இல்லை.... காந்தி தேசம்,ராஜீவ் தேசம், சோனியா தேசம் என்று புலத்தில் வாழும் சில எங்களுடைய வாரிசுகள் புலம்புதுகள்

ஒரு நாள் உண்மையாகவே புலம்பவார்கள் நன்றிகள் புத்தன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அக்காவைப்போல எங்கள் ஊரிலும் பல அக்காமாருக்க இத்தகைய கொடுமை நிகழ்ந்தது. கேட்க நாதியின்றி அந்நேரம் மெளனமாயிருந்தோம். இந்தியாமீதான வெறுப்பு இதயத்தில் என்றுமே மாறாது. ஆனாலும் மறப்போம் மன்னிப்போம். எங்களுக்காக இந்தியாவில் உள்ள நல்லுள்ளங்களுக்காக எல்லாவற்றையும் தாங்குவோம்.

பாராட்டுக்கள் என்று சொல்லி உங்கள் துயரத்தை பங்கிட விரும்பவில்லை. திடப்படுத்திக் கொள்வோம்.

இந்திய இராணுவம் பற்றி நிறையவே ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது காயங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.