Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளுக்கு உதவ புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்கு சிறிலங்கா அழைப்பு

Featured Replies

சிறிலங்கா அரச படையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 10 ஆயிரம் பேரின் புனர்வாழ்வுக்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகம் உதவிகளைச் செய்ய வேண்டும் என சிறிலங்கா அரசு கேட்டுள்ளது.

இந்த இளைஞர்களுக்கு புனர்வாழ்வு வழங்க முடியும் என்பதில் சிறிலங்கா புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்னாயக்க நம்பிக்கை வைத்துள்ளார்.

தமது ஆணையகம் உள்ளூர் வர்த்தகர்களுடனும் அனைத்துலக அமைப்பைச் சேர்ந்தவர்களுடனும் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உதவ அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

தற்சமயம் வெளிப்படையாகப் புலிகளை நாம் அழித்து விட்டோம். ஆனால், இந்த இளைஞர்கள் நீண்ட காலமாக புலிகளின் உயர் தலைவர்களால் அரச படையினருக்கு எதிராகப் போராடுவதற்காக மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். இவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கவேண்டும். இது மிகச் பெரிய சவால் என்றார் தயா ரட்னாயக்க.

முகாம்களில் இருந்து விடுதலைப் புலிகளை வடிகட்டி எடுக்கும் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் முன்னாள் போராளிகளின் எண்ணிக்கை 15 ஆயிரம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சரணடைந்த விடுதலைப் புலிப் போராளிகள் 1,000 பேர் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களில் அரைவாசிப் பேர் விடுவிக்கப்பட மீதியுள்ளவர்களில் 110 பேர் அம்பேபுசவிலும் 150 பேர் வெலிகந்தவிலும் 200 பேர் தெல்லிப்பளையிலும் தொடர்ந்தும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் முன்னாள் போராளிகள் தொடர்பில் அவர்களது தனிப்பட்ட விபரங்கள், கல்வியறிவு என்பவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், அவர்கள் எவ்வளவு காலம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்கள் என்பதைப் பொறுத்து அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் கால அளவு தீர்மானிக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் தயா ரட்னாயக்க கூறினார்.

புதினம்

நல்ல கயிற்றை அரசு வீசுகிறது. வணங்காமண் பொருட்களே இன்னும் போய்ச் சேர்ந்த பாடில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கயிற்றை அரசு வீசுகிறது. வணங்காமண் பொருட்களே இன்னும் போய்ச் சேர்ந்த பாடில்லை.

உண்மை!

புலம்பெயர்ந்த மக்களை மூளைச்சலவை செய்ய நல்லதொரு விசயம் கிடைச்சிருக்குது. அப்பாவியளைப் பிடிச்சு 15000 மாக்கி நாளொன்றுக்கு குறைஞ்சது 50,000 டொலராவது தேறுமென்று கணக்குப் போட்டிருக்குது சிறிலங்கா. முன்போ புலிகளை அழிக்கவென்று உலகிடம் கையேந்தியது. இப்போது புணர்வாழ்வென்று புலத்துத் தமிழரிடம் கைவைக்க முயல்கிறது. கை, கால்இழந்த சிங்களப் படைகளது புணர்வாழ்வுக்காக நிதிதேவைப்படுகிறது. உங்கள இராணுமுகாம் புதிய படையினர் சேர்ப்பு என செலவிடும் நிதியில் இவற்றைச் செய்யலாமே.

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயத்தில் அரசாங்கம் பொய்சொல்லுகின்றது என்றே எனக்குப்படுகிறது, விடுதலைப்புலிகள் அமைப்புக்கென்று விதிமுறைகள் இருக்கின்றன. அதன்படி எந்த ஒரு போராளியும் சரணடையக்கூடாது சரணடைந்திருக்கக்கூடாது, இறுதிவரை போராடியிருக்கவேண்டும் அல்லது ஏதோ ஒரு வழியில் தங்களை மாய்த்திருக்கவேண்டும். விதிமுறைகளை மீறி நடந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது போராளிகளுக்கு நன்கே தெரியும் எனவே அவர்கள் அரசாங்கம் சொல்லுவதுபோல அப்படி வந்திருக்கமாட்டார்கள். மீறி வந்து சரணடைந்திருப்பார்களேயானால் அவர்களுக்கும் பாரபட்சமின்றிய பட்டங்கள் வசைகள் எல்லாமே வழங்கப்படவேண்டும்.

இதை நான் சொல்லவில்லை இங்கு முன்பு எழுதப்பட்ட கருத்துக்கள் சொல்கின்றன. எனது கருத்துப்படி சரியோ பிழையோ அவர்கள் தங்களால் முடிந்தமட்டில் போராடி வந்திருக்கிறார்கள், அவர்கள் அறிவூட்டப்பட்டு, மாற்றப்பட்டு, பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, மீளவும் வெகுஜன வாழ்க்கைக்கு திரும்பவேண்டும்.

யாராவது மீண்டும் ஒரு ஆயுதப்பொராட்டமூலம்தான் தீர்வு என்று இங்கு எழுதுவீர்களேயானால் அவர்களுக்கு எனது அறிவுரை, நீங்கள் இங்கிருந்து தட்டச்சில் ஆயுதப்போராடம் நடாத்தத்தேவையில்லை, நேராக அங்கே சென்று உங்கள் போராட்டத்தை தொடரலாம். வசவுகளுக்காகக் காத்திருக்கும் மதிவதனன்ஜி :(

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் சொல்கிற கைது செய்ய்பபட்ட, சரண் அடைந்த போராளிகளில் சிலர் உயிரோடு இல்லை. சிலரை சித்திரவாதைகள் செய்து மகிந்த அரசு கொன்று விட்டார்கள் என்ற செய்தியும் வந்திருக்கிறதே.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்களின் நிலை மிகவும் மோசமானது,சிங்கள அரசு சர்வதேச விதிகளை மீறி படுகொலை செய்வது உலக தொலைகாட்சிகளின் மூலம் வெளிக்கொணரப்பட்ட பின்னர் சிங்கள அரசு மக்களையும்,போராளிகளையும் ஐ நாவினதும், சர்வதேதச தொண்டு நிறுவனங்களின் நேரடிக்கண்காணிப்பிற்கு அனுமதிப்பதே மனித உரிமை மீறல் சம்பவம் குறைவதற்கு வழி வகுக்கும்,அதற்கான சூழலை ஏற்படுத்த உலகத்தமிழினமும் சர்வதேச நாடுகளின் உதவியுடன் வலியுறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பி வந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களை பணி செய்ய விடாமல் வெளியேற்றி விட்டு , நல்ல நாடகம் போடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு புணர்வாழ்வு கொடுத்து வெளியில்விட முடியவில்லை என்ற கவலையில். சரத்பொன்செகாவும் மகிந்தவும் கோத்தபாயவும் இரவில் அதிக அளவில் மது அருந்துவதாகவும் பெரிதும் நிம்மதியின்றி காணப்படுவதாகவும். அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் உண்மையை கசியவிட்டிருக்கின்றன.

இதை நான் சொல்லவில்லை இங்கு முன்பு எழுதப்பட்ட கருத்துக்கள் சொல்கின்றன. எனது கருத்துப்படி சரியோ பிழையோ அவர்கள் தங்களால் முடிந்தமட்டில் போராடி வந்திருக்கிறார்கள், அவர்கள் அறிவூட்டப்பட்டு, மாற்றப்பட்டு, பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, மீளவும் வெகுஜன வாழ்க்கைக்கு திரும்பவேண்டும்.

அப்போ இவ்வளவு நாளும் அறிவில்லாமல்தான் போராடினவையா? இனிமேல்தான் அறிவூட்டப்போறீங்களா? இது அந்த மதிவதனன்தானா அல்லது வேறையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணியாத தலைமையை இல்லாதொழிக்க உலகமே சிங்களத்திற்கு உதவியதென்னமே உண்மைதான்.ஆனால் இப்ப புலத்தமிழரால் முன்னெடுக்கப்படும் அரசியல்முன்னெடுப்புகளை அனேகமான நாடுகள் ஏதோ ஒருவழியில் ஊக்கப்படுத்திவருகின்றன. இதைத்தடுக்கமுடியாத சிங்களம் இப்படியொரு வஞ்சகவேலையில் இறங்கியுள்ளது. ஆனால் இந்த வலையில் விழவும் எம்மில் சிலர் முண்டியடிப்பார்கள். இதற்கான முன்னேற்பாடுகளில் பல பழசுகளை சிங்களம் விலைக்கு வாங்கியுள்ளது. தமிழனிற்கு தமிழன்தான் முதல்கேடு. முற்றிலும்கேடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ இவ்வளவு நாளும் அறிவில்லாமல்தான் போராடினவையா? இனிமேல்தான் அறிவூட்டப்போறீங்களா? இது அந்த மதிவதனன்தானா அல்லது வேறையா?

ஆயுதப்போராட்டம்தான் முடிவு என்று மூளைச்சலவை செய்யப்பட்டு கழுத்தில் குப்பியோடு அனுப்பப்பட்டவர்கள் தப்பி வந்திருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து தட்டச்சில் போர்முரசம் கொட்டி ஆயுதப்போராட்டம் நடாத்தியவர்கள் தப்பி வந்தவர்களும் தங்களைப்போல சாதாரண குடிமக்கள்தான் என்ற நினைப்பின்றி, அவர்களது நல்வாழ்வுக்கு உதவுவதற்கு முயற்சியாவது செய்வதைவிடுத்து, மீண்டும் மீண்டும் சிங்களவனுக்கு மேல்மாடி காலி, அவன் நரியன், இவன் நல்லன் என்று பழைய பல்லவி பாடுவதும், தப்பிவந்தவர்களை மீண்டும் போருக்கு அனுப்புவதற்கான மூஸ்தீபுகளில் இறங்குவதும் ஏற்புடையதன்று.

ஆயுதப்போராட்டத்தை முன்னிநிலைப்படுத்தும் தட்டச்சுத்தந்திரதாரிகளே, நீங்கள் இங்கு நாற்காலிலில் சுகமாக இருந்துகொண்டு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பதைவிட நீங்களே அங்குசென்று ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பது நல்லது. தப்பிவந்த அவர்களும் உங்களைபோன்று சாதாரண மனிதர்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்களைபோல நீங்கள் வாழ்வதைப்போல அவர்களும் வாழவேண்டும் என்ற நினைப்பு உங்களுக்கு முதலில் வரவேண்டும். அவர்களுக்கும் ஒரு வாழ்வுண்டு என்பதை மறக்காதீர்கள். உங்களில் மாற்றம் தேவை, இது உங்களுக்கான அறிவூட்டல்.

பூஜ்ஜியத்துக்குள்ளோ ஒரு

ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு

புரியாமலே இருப்பான் ஒருவன்

அவனை புரிந்துகொண்டால்

அவன்தான்.......

யார் அவன் முருகா?

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா உங்களோட கூட்டுச் சேரலாம் என்றிருக்கிறன்.. எவ்வளவு தருவியள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாத்தா உங்களோட கூட்டுச் சேரலாம் என்றிருக்கிறன்.. எவ்வளவு தருவியள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

புத்திசாலியி..ல்..லை

  • கருத்துக்கள உறவுகள்

பூஜ்ஜியத்துக்குள்ளோ ஒரு

ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு

புரியாமலே இருப்பான் ஒருவன்

அவன்தான்....... நீங்கள் தானப்பு.

ஆயுதப்போராட்டம்தான் முடிவு என்று மூளைச்சலவை செய்யப்பட்டு கழுத்தில் குப்பியோடு அனுப்பப்பட்டவர்கள் தப்பி வந்திருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து தட்டச்சில் போர்முரசம் கொட்டி ஆயுதப்போராட்டம் நடாத்தியவர்கள் தப்பி வந்தவர்களும் தங்களைப்போல சாதாரண குடிமக்கள்தான் என்ற நினைப்பின்றி, அவர்களது நல்வாழ்வுக்கு உதவுவதற்கு முயற்சியாவது செய்வதைவிடுத்து, மீண்டும் மீண்டும் சிங்களவனுக்கு மேல்மாடி காலி, அவன் நரியன், இவன் நல்லன் என்று பழைய பல்லவி பாடுவதும், தப்பிவந்தவர்களை மீண்டும் போருக்கு அனுப்புவதற்கான மூஸ்தீபுகளில் இறங்குவதும் ஏற்புடையதன்று.

ஆயுதப்போராட்டத்தை முன்னிநிலைப்படுத்தும் தட்டச்சுத்தந்திரதாரிகளே, நீங்கள் இங்கு நாற்காலிலில் சுகமாக இருந்துகொண்டு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பதைவிட நீங்களே அங்குசென்று ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பது நல்லது. தப்பிவந்த அவர்களும் உங்களைபோன்று சாதாரண மனிதர்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உங்களைபோல நீங்கள் வாழ்வதைப்போல அவர்களும் வாழவேண்டும் என்ற நினைப்பு உங்களுக்கு முதலில் வரவேண்டும். அவர்களுக்கும் ஒரு வாழ்வுண்டு என்பதை மறக்காதீர்கள். உங்களில் மாற்றம் தேவை, இது உங்களுக்கான அறிவூட்டல்.

பூஜ்ஜியத்துக்குள்ளோ ஒரு

ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு

புரியாமலே இருப்பான் ஒருவன்

அவனை புரிந்துகொண்டால்

அவன்தான்.......

யார் அவன் முருகா?

எங்கயிருந்தோ புதுசு புதுசா கிளம்பி வாராங்கையா.....இவ்வளவு நாளும் ஒரு கோஷ்டி தலைவரில முழு பழியும் போட்டுட்டு தங்கட அதிமேதாவித்தனத்த காட்டிக்கொண்டிருந்தாங்கள்..இ

ப்ப புதுசா இவர் மூளைச்சலவை கதையோட வர்ரார்...உங்களுக்கு தானே தேனி இலையான் என்டு ஏகப்பட்ட இணையதளம் கிடக்கு அங்க போய் உங்கட ஆக்களோட சேர்ந்து வாந்தியெடுக்கலாமே??...ஏன் விணா இங்க வந்து நேரத்த வீணாக்கிறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் வெளியே விட்டு மீள் குடியேற்றம் செய்ய அனுமதித்தால் அவர்கள் உறவுகளே அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள்.சிறிலங்கா அரசுக்கு ஏன் கொடுக்க வேண்டும்.குண்டுகள் போடக் கொட்டிக் குடுத்த நாடுகளிடம் கேட்டுப் பார்க்கலாம் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் வெளியே விட்டு மீள் குடியேற்றம் செய்ய அனுமதித்தால் அவர்கள் உறவுகளே அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள்

இதுதான் உண்மை

தேவை

மற்றதெல்லாம்....அரசியல்

அதுக்கு நாங்க வரலையப்பா மகிந்தா....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தூயவா

பல நாளைக்குப்பின்....

தாங்களெல்லாம் ஒதுங்கிவிட்டீர்கள் எனப்பயந்தேன்

முகங்கள் தெரியாவிடினும்

எமது நோக்கங்கள் நன்றன்றோ

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை!

புலம்பெயர்ந்த மக்களை மூளைச்சலவை செய்ய நல்லதொரு விசயம் கிடைச்சிருக்குது. அப்பாவியளைப் பிடிச்சு 15000 மாக்கி நாளொன்றுக்கு குறைஞ்சது 50,000 டொலராவது தேறுமென்று கணக்குப் போட்டிருக்குது சிறிலங்கா. முன்போ புலிகளை அழிக்கவென்று உலகிடம் கையேந்தியது. இப்போது புணர்வாழ்வென்று புலத்துத் தமிழரிடம் கைவைக்க முயல்கிறது. கை, கால்இழந்த சிங்களப் படைகளது புணர்வாழ்வுக்காக நிதிதேவைப்படுகிறது. உங்கள இராணுமுகாம் புதிய படையினர் சேர்ப்பு என செலவிடும் நிதியில் இவற்றைச் செய்யலாமே.

இது தான் எனது கருத்தும்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கயிருந்தோ புதுசு புதுசா கிளம்பி வாராங்கையா.....இவ்வளவு நாளும் ஒரு கோஷ்டி தலைவரில முழு பழியும் போட்டுட்டு தங்கட அதிமேதாவித்தனத்த காட்டிக்கொண்டிருந்தாங்கள்..இ

ப்ப புதுசா இவர் மூளைச்சலவை கதையோட வர்ரார்...உங்களுக்கு தானே தேனி இலையான் என்டு ஏகப்பட்ட இணையதளம் கிடக்கு அங்க போய் உங்கட ஆக்களோட சேர்ந்து வாந்தியெடுக்கலாமே??...ஏன் விணா இங்க வந்து நேரத்த வீணாக்கிறீங்கள்?

நெப்ஸ்.. அநியாயமா பழி போடாதேங்கோ.. இவர் முன்னமிருந்தே இப்பிடித்தான்..! :wub:

சமன்பாடு இதுதான்..!

துரோகி + வெடி = மாற்றுக்கருத்து மாணிக்கம் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா வீட்டுக்கு வெளியில் கட்ட வேண்டியதை உள்ளுக்குள்ளே விட்டது. :icon_mrgreen:

உலகத்திலேயே ஒற்றுமையில்லாத, துரோகிகள் மிகுந்த, தான் தான் அதி புத்திசாலி, என்ற எண்ணம் கொண்ட ஒரே இன மக்கள் தமிழின மக்களே...

இவர்களை எல்லாம் கட்டி மேய்த்து எப்படித்தான் போராடினாரோ .... தலைவரை நினைத்தால் தலை சுற்றுகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலேயே ஒற்றுமையில்லாத, துரோகிகள் மிகுந்த, தான் தான் அதி புத்திசாலி, என்ற எண்ணம் கொண்ட ஒரே இன மக்கள் தமிழின மக்களே...

இவர்களை எல்லாம் கட்டி மேய்த்து எப்படித்தான் போராடினாரோ .... தலைவரை நினைத்தால் தலை சுற்றுகிறது!

உண்மைதான்

அதிலும் ஈழத்தமிழன் இன்னும் ஒருபடி மேல்...

பாவம் மனிதன்

ஒழிந்துபோய்விட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து

கருத்து எழுதும் நண்பர்களே

நாம் எல்லோரும் ஒன்றாய் வாழவே விரும்புகின்றோம்

உங்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளிக்கின்றோம்

எமது பாதை பிழையானது என்பதனையும் ஏற்கத்தயாராக இருக்கின்றோம்

ஆனால்

எமது சொல் ஒன்றை மட்டும் நீங்கள் நிறைவேற்றவேண்டும்

அது தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுடைய ஒரு தீர்வை தாங்கள் வாங்கித்தரவேண்டும்

அவ்வளவுதான்......

முடிந்தால் மட்டும் எழுதுகோல் எடுப்பீர்களாக....

இல்லையென்றால்

எதிரியே தீர்மானிக்கின்றான்

நாம் எதை வைத்திருக்கவேண்டுமென்பதை.

நன்றி

போராட்டம் மக்களுக்கானது, போராளிகளால் முன்னெடுக்கப்பட்டது, நரிகளால் முறியடிக்கப்பட்டது. நரிகளிடம் மாட்டுப்பட்டுள்ள போராளிகள் மக்களிடம் இருந்து தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் நடந்தது பலருக்கு ஏமாற்றமாக இருக்கிறது. சிலருக்கு சந்தோசமாக இருக்கிறது. சந்தோசப்படுபவர்களில் மதிவதனனும் ஒருவர் என்று தெரிகின்றது.

அவர் தனது சந்தோசத்தை யாழிலும் கொண்டாடவிரும்புகின்றார் போல இருக்கின்றது. ஒருத்தரும் அவரோட சேருகிறீனம் இல்லை. அந்தப்பிள்ளையோடையும் யாராச்சும் சேர்ந்து விளையாடுங்கையா. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.