Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

» வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !

Featured Replies

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

***

கற்பு எனும் பம்மாத்து தூய்மைவாதத்திற்கு உங்களையே சான்றாக வைக்கின்றளவுக்கு இருக்கின்றது உங்களின் சிந்தனைக் குழப்பம். நீங்கள் ஏற்றுக்கொண்ட கற்பெனும் தூய்மைவாதம், காதலித்த ஒருவனைக் கட்டுதலையே சுட்டி நிற்கும் என்றால், அப்படி காதலித்தவனை கட்டாத அனைத்து பெண்களையும் நீங்கள் நம்பும் கற்பெனும் தூய்மை அற்றவர்கள் எனச் சொல்கின்றீர்களா? ஒரு பதிலில் ஓராயிரம் கோடி பெண்களை நீங்கள் நம்பும் தூய்மையை கொள்ளாதவர்கள் என்று தூற்றி, உங்களை உயர் இடத்தில் வைத்துப் பார்க்கும் மனநிலையைத்தான் உங்களின் பதிலில் பார்க்க முடிகின்றது

Edited by மோகன்

  • Replies 161
  • Views 35.8k
  • Created
  • Last Reply

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

***

உண்மையோ? சத்தியமா உண்மையோ...........?????

  • கருத்துக்கள உறவுகள்

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

***

உண்மையாக

சத்தியமாக

[b]முதன்முதலில் பார்த்தவரையே

முதன்முதலில் பிடித்தவரையேகட்டிக்கிட்டீரா?

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களா ஆண் என விவாதிக்க சகலைரையும் அழைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

***

அது சரி அவர் எப்படி இருக்கிறார் :(

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அவர் எப்படி இருக்கிறார்???

நல்ல கேள்வி

ஆனால் பதில்??????????

சுமங்களா ஆண் என விவாதிக்க சகலைரையும் அழைக்கிறேன்.

நூணா இதில் விவாதிக்க ஒன்றுமே இல்லையே அவர் வரவேற்பை பார்த்தாலே புரியவில்லையா ஆண் என்று... கேட்டால் இல்லை என்று சொல்லுவார்கள்..கேட்டு முக்கு உடை வாங்குவதை விட கேட்கமால் இருப்பதே நல்லம் :(

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அவர் எப்படி இருக்கிறார் :(

யாழில் லிப்ஸ்ரிக் போடும் போதே அவர் "புஸ்பமாகி" விட்டார். :(:o

Edited by nunavilan

  • தொடங்கியவர்

கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி

கு ச அண்ணை சொன்னமாதிரி பெண்கள் பாவப்பட்ட

சீவன்கள்தான்

நம்மவர்களைப் பொறுத்தவரை ஒரு பெண் ஒருவனை மட்டும்

மனத்தாலும் உடலாலும் தீண்டுவதைத்தான் கற்பென்று

நினைக்கிறார்கள் சொல்கிறார்கள் நெடுக்ஸ் சொல்வதுபோல்

என்னைக் கேட்டால் கற்பு என்பது.. உடல் உளம் சார்ந்த ஒரு பாலியல் ஒழுக்கம் என்று சொல்வேன். அப்படி ஒன்றில்லை என்பது தவறானது. கற்பை பாதுகாக்க முடியாது என்பதும் தவறானது. பாதுகாக்க முடியும் என்பதை நான் அனுபவத்தால் கண்டிருக்கிறேன்.
ஆனால் கருத்து எழுதிய அனைவரும் ஓன்றை மறந்துவிட்டார்கள்

நம்நாட்டுப்பிரச்சினையில் சீரழிந்த சீரழிக்கப்பட்ட நமது

சகோதரிகள் தாய்மார் சிறுமிகள் மற்றும் நாம்

போற்றி வணங்கும் நமது பெண் போராளிகள்

இவர்கள் என்ன கற்பிழந்தவர்களா?

RasaRaasan

View Member Profile

Add as Friend

Send Message

Find Member's Topics

Find Member's Posts Sep 11 2009, 03:07 PM Post #8

Advanced Member

Group: கருத்துக்கள உறவுகள்

Posts: 69

Joined: 23-August 09

Member No.: 7,077

கற்பு நெறி என்பது உடல் சார்ந்த தன்மை அல்ல அது உள்ளம் சார்ந்த தன்மை ஆகும். குறிப்பாக கற்பு நெறி பற்றி பேசுகின்றபோது அது பெண்ணுக்கான பாலியல் ஒழுக்கமாக மட்டுமே நோக்கப்படுகின்றது. பெண்ணுக்கு மட்டுமின்றி ஆணுக்கும் இது பொருந்தும் என்பதை அநேகர் ஏற்றுக்கொள்ளுவதில்லை. கற்பு என்ற சொல் பெண்ணுக்காகவே உருவாக்கப்பட்டது என்பது அவர்கள் எண்ணம். காமுகன் ஒருவனால் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்னை கற்பிழந்தவள் எனக் கொள்வது படுபாதகம். காதலிக்கும் போது தங்கள் உண்மைத் தன்மையை காண்பிக்கப் போய் வஞ்சிக்கப்பட்ட பெண்களும் இந்;த வரையறைக்குள் அடக்கப்படக் கூடாது என்பது எனது கருத்து. பெண்ணுக்கு மட்டும் கற்பு தேவை என்கிற ஒருதலைக் கற்பு நெறி உள்ளவரை சமுதாய மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஆண்களின் ஒழுக்கப் பிறழ்வினால் ஏற்பட்ட வடுக்களை பெண்கள் மட்டுமே சுமப்பது நீதி ஆகாது. அதற்காக பெண்கள் எல்லோரும் பத்தினிகள் என்றும் சொல்லவும் கூடாது.

ராசராசனின் கருத்தே என்கருத்தும்

அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி

சந்தோசமாயிருக்கிறேன்

காதலித்தவனையே கல்யாணம் கட்டி சந்தோசமாக இருந்தால் தான் கற்பு என்றிங்கள் அப்படி கட்டினவன் இருக்க உங்கட செய்கைகளால் மற்றவனை சலனமடைய வைக்கிறிங்களே அப்ப அதற்கு பெயர் என்னங்கோ? சும்மா சும்மா உதட்டை எல்லோருக்கும் காட்டுறிங்களே அது தான் கேட்டன்? நீங்கள் கற்பு என்றால் இது தான் என்றிங்க அது தான் அப்படி சொன்னன் மற்றப்படி உதட்டை நெளிக்கிறது உங்க விருப்பம் . :lol:

Edited by செவ்வந்தி

  • கருத்துக்கள உறவுகள்

சென்று வருகிறேன்.......

கற்பை தேடி!

காதலித்தவரையே கலியணம் செய்து சந்தோசமாயிருக்கிறேன்..என்று நான் எழுதியதன் காரணம்.. எங்கள் சமூதாயத்திலை காதலிப்பது என்பதே கற்பு போனமாதிரித்தான் ..அதைத்தவிர அவனை கலியாணம் செய்து ஒன்றாக முக்கியமாக பொருளாதார ரீதியாக நன்றாக இருந்தால்.. அவர்கள் வெற்றி பெற்றவர்கள்..கற்பானவர்கள்..இங

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு நான் வரவேற்பு பகுதியில்; முத்தப்படங்களை இட்டதற்கே என்னை சந்தேகப்படும் ஒரு சமூகத்தில் தான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதே வெட்கக்கேடானதொருவிடயமாகவே எனக்கு தெரிகிறது.

தங்கைச்சி முத்தம் எண்டது அசிங்கமில்லை.

அது எவரவருக்கு எங்கெங்கு முத்தமிடுவதில்த்தான் பிரச்சனையே?

முத்த அவாட்டரை முன்னணியாய் இணைத்த உங்களுக்கு அதன் தார்ப்பரியங்கள் நிச்சயமாக தெரிந்திருக்கும்.அல்லது தெரிந்திருக்க வேண்டும்?

காதலித்தவரையே கலியணம் செய்து சந்தோசமாயிருக்கிறேன்..என்று நான் எழுதியதன் காரணம்..

இல்லை.. நீங்கள் அப்படி சொல்லவில்லை...

"இந்த உலகில் கற்பில் சிறந்தவரை சொல்லுங்கள் பார்க்கலாம்?" என்ற கேள்விக்கு பதிலாக "அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி சந்தோசமாயிருக்கிறேன்" என்று சொல்லியிருந்தீர்கள். காதலித்தவனை கட்டாத பெண்கள் எல்லாரையும் விட போலி தூய்மைவாததினை துணக்கு அழைத்து உங்களை உசத்தியாக உருவகப் படுத்தி சொல்லியுள்ளீர்கள்

மற்றப்படி,

உங்களின் இரண்டாவது பதிலில் தெரிவித்துள்ள ஏனைய கருத்துகளுடன் உடன்படுகின்றேன். தெளிவான கருத்துகள்...அடிப்படை வாதத்தால் நிரம்பிய எம் சமூகத்தில் உங்களின் கருத்துகள் அவற்றில் இருந்து விடுபட்டு உள்ளன

  • கருத்துக்கள உறவுகள்
காதலித்தவரையே கலியணம் செய்து சந்தோசமாயிருக்கிறேன்..என்று நான் எழுதியதன் காரணம்.. எங்கள் சமூதாயத்திலை காதலிப்பது என்பதே கற்பு போனமாதிரித்தான் ..அதைத்தவிர அவனை கலியாணம் செய்து ஒன்றாக முக்கியமாக பொருளாதார ரீதியாக நன்றாக இருந்தால்.. அவர்கள் வெற்றி பெற்றவர்கள்..கற்பானவர்கள்..இங
  • கருத்துக்கள உறவுகள்

சுயஇன்பம் செய்திருக்கின்றனர்..இப்படிப்

பார்த்தால் இங்கும் கற்பு என்கிற கோட்பாடு உடல்ரீதியாகவும் அடிபட்டு போகின்றது.

கற்பு என்பது பாலியல், உடல், உள ஒழுக்கம் சார்ந்த ஒன்று..! பருவ வயதை அடையும் ஆணுக்கோ பெண்ணுக்கோ.. பாலியல் சம்பந்தப்பட்ட கனவுகள்.. கழிசல்கள்.. வீசல்கள். ஏற்படுவது..உயிரின் இயல்பு என்றாலும்.. இயற்கையானது. அதற்கான இன்னொருவரோடு அல்லது அடுத்தவரின் மனதோடு.. உடலோடு நிஜத்தில் உறவாடல்கள் அல்லது அதனால் ஏற்படக் கூடிய தூண்டல்களை உணர்வுகளை அவை நேரடியாக உணர்பவையாகவோ.. அல்லது பாதிப்புக்களை உருவாக்குவனவாகவோ இருப்பதில்லை.

கற்பு என்பது கன்னித் தன்மை... காப்பதில் மட்டும் தங்கி இருக்கவில்லை...! திருமணமானவர்களுக்கும் கற்பு என்ற பாலியல் உடல் உள ஒழுக்கம் இருக்கிறது. பாலியல் என்பது கட்டுப்பாடு இருக்க வேண்டிய ஒரு உணர்வு என்பதனாலே.. இயற்கை கூட கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. இதயம் நிமிடத்துக்கு 72 தடவை துடிக்க விடப்பட்டிருக்கிறது. ஆனால்.. பாலியலை இயற்கை நிமிடத்துக்கு 72 தடவை செய்யத் தூண்டுகிறதா.. இல்லையே.. ஏன்..???!

குறிப்பிட்ட ஒரு விடயத்தில் கட்டுப்பாடுகள் அற்றிருப்பதை தான் கற்பிழந்தது என்பதன் பதத்தால் கட்டுப்படுத்த நினைத்திருக்கிறார்கள். இதில் அடிப்படை வாதம் பேசுவது அபந்தமானது.

அடிப்படை வாதம் என்று நோக்கின் திருமணம் செய்து கொள்வது கூட ஒரு அடிப்படை வாதத்திற்கு கட்டுப்படுவது போன்றதே..!

காதலில் கூட கற்பு இருக்கிறது. அது அவரவர் உணர்வைப் பொறுத்து வேறுபடும். கற்பு என்பது ஒன்றோடு வாழ்ந்துவிடுவது.. கன்னித்தன்மை காப்பது என்பதில் மட்டும் அடங்கி இருக்கவில்லை. அது உங்களின் சொந்த பாலியல், உடல், உள ஒழுக்கம் சார்ந்தே பெரிதும் தங்கி இருக்கிறது.

உதாரணத்துக்கு.. ஒரு திருமணமான கணவன் அல்லது மனைவி.. அந்தக் கணவனின் அல்லது மனைவியின் உள விருப்புக்கு எதிராக உறவாடுவது கூட கற்புத் தவறிய செயல்தான். அதுவும் ஒரு பாலியல் வல்லுறவுத்தான்.

கற்பு எனது பெண்ணிற்கானது மட்டுமல்ல. ஆணிற்கானதும்.. கூட..! :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி..! இதுவரைக்கும் நீங்கள் குப்புறக் கவுண்டடிச்சுப் படுத்து கனவே கண்டதில்லையா? அதைச் சொல்லுங்கோ முதலில..! :lol:

ஐயோ கற்புக்கும் குப்புறக் கவுண்டு படுக்கிறதுக்கும் என்னங்க சம்பந்தம்?

நூணா இதில் விவாதிக்க ஒன்றுமே இல்லையே அவர் வரவேற்பை பார்த்தாலே புரியவில்லையா ஆண் என்று... கேட்டால் இல்லை என்று சொல்லுவார்கள்..கேட்டு முக்கு உடை வாங்குவதை விட கேட்கமால் இருப்பதே நல்லம் :lol:

ஆத்தி இது முந்தி கூட இருக்குப்பா இங்க... இதை எல்லாம கண்டு பிடிக்க வெளிக்கிட்டால நம்ம தலை தான வெடிக்கும். ( அனுபவம்) :lol:

ஐயோ கற்புக்கும் குப்புறக் கவுண்டு படுக்கிறதுக்கும் என்னங்க சம்பந்தம்?

அதுதானே.... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில விளக்கம் தாற அளவுக்கு எனக்கு ஒண்டும் தெரியா..தெரிஞ்சாலும் சொல்ல மாட்டன்...! :lol:

இருந்தாலும், மற்ற ஆக்கள் என்ன சொல்லினம் என்று வாய்ப்பனோட இருந்து வாய் பார்க்கலாம் என்று வந்தேன்!!

நீங்க கதையுங்கோ..... :(

இளையபிள்ளை அண்ணா இப்ப தான் புரியுது ஏன் உள்ளை வந்தன் என்று

வெளியிலை இருந்து வேடிக்கை பார்ப்பதுதான் நல்லது :D

இதற்கான அறுவை சிகிச்சை பற்றி ஏற்கனவே வந்து விட்டது. இதைபற்றி யாழில் எழுதி வெட்டு வாங்க விரும்பவில்லை. என்றாலும் அரபு பெண்கள் அடிக்கடி இத்தாலி பக்கம் ஏன் போகிறார்கள் என்ற செய்தியை மட்டும் சொல்கிறேன். இம்ஸா உல்லா. :lol:

ஓம் நுணா அண்ணா...

மோகன் அண்ணா தான் கற்பைக் கட்டிக் காப்பாத்துறார் :lol: (யாழின்)

கத்தியோடை நிக்கிறார் கவனம் :D

ஓஓ அவாவா நீங்கள்???

மருதங்கேணி..நான் அவாவாக இருந்தாலென்ன அதுவாக இருந்தாலென்ன என்னுடைய கணவர்தான் அதைப்பற்றிக்கவலைப்பட வேண்டும் அதைப்பற்றி நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்..நீங்கள் எதுவாக இருக்கிறீர்கள் என்பதும் என்னுடைய ஆராச்சியல்ல...ஆனாலும் ஒரு பெண் சமமாக தங்களுடன் கருத்துக்களை வைப்பதை எமது சமூகத்தில் 80 வீதமான ஆண்கள் விரும்புவதில்லை..அப்படி யாராவது எங்காவது கருத்துச்சொல்லிவிட்டால்..உட

னேயே இது போன்று அதுவாக இருக்கலாமா??இதுவாக இருக்கலாமா?? யாராக இருக்கும் என்று ஆராச்சி செய்வது மட்டுமல்ல.பதில் கருத்து வைக்கமுடியாத கோழைகளாய் அந்தப் பெண்ணின் வாயை அடைத்து அவளை அங்கிருந்து துரத்திவிடுவதே ஆண்களின் குணமாக இருக்கின்றது.. புலம்பெயர்ந்து வந்த தேசங்களிலும் இன்னும் பலர் மாறவில்லை..நான் எதுவாகஇரக்கிறேன் என்கிற ஆராச்சியை விடுத்து முடிந்தால் பதில் கருத்தை வையுங்கள்..

Edited by சுமங்களா

இல்லை.. நீங்கள் அப்படி சொல்லவில்லை...

"இந்த உலகில் கற்பில் சிறந்தவரை சொல்லுங்கள் பார்க்கலாம்?" என்ற கேள்விக்கு பதிலாக "அது நான்தான்.ஏனென்றால் நான் காதலிச்சவரையே கலியாணம் கட்டி சந்தோசமாயிருக்கிறேன்" என்று சொல்லியிருந்தீர்கள். காதலித்தவனை கட்டாத பெண்கள் எல்லாரையும் விட போலி தூய்மைவாததினை துணக்கு அழைத்து உங்களை உசத்தியாக உருவகப் படுத்தி சொல்லியுள்ளீர்கள்

மற்றப்படி,

உங்களின் இரண்டாவது பதிலில் தெரிவித்துள்ள ஏனைய கருத்துகளுடன் உடன்படுகின்றேன். தெளிவான கருத்துகள்...அடிப்படை வாதத்தால் நிரம்பிய எம் சமூகத்தில் உங்களின் கருத்துகள் அவற்றில் இருந்து விடுபட்டு உள்ளன

நிழலி ஏதோ ஒரு படத்தில் பாக்கியராஜா பல ஆண்களைப் பார்த்து உலகில் கற்பில் சிற்ந்த பெண்கள் யாரென்று கேட்டபார் உடைனை எல்லோரும்..கண்ணகி..அகலிகை.. அருந்ததி ..வாசுகி என்பார்கள் உடைனையே பாக்கியராஜா கேட்பார் உங்கடை மனைவிமார்கள் யாருமே கற்பில் சிற்நதவர்கள் இல்லையா என்பார்...அது நகைச்சுவை காட்சிதான் ஆனால் அர்த்தமுள்ள காட்சி..அதே போலத்தான் இங்கும் கற்பில் சிறந்தவர் என்று கேட்டதும் முதலில் நானே சிறந்தனான் என்று சொன்னேன்..மற்றபடி இல்லாத ஒரு விடயத்தைபற்றி கதைப்பதில் பயனில்லை..கற்பு என்பதும் ஒரு கற்பனைதான்..மற்றும்படி என்னை சக கருத்தாளராய் மதித்து நட்புடன் பதில் எழுதியதற்கு நன்றிகள்.

Edited by சுமங்களா

  • கருத்துக்கள உறவுகள்

சுமங்களா ,

அதற்காக முத்தப் படங்கள் இடுவதை நிறுத்த வேண்டாம் . :lol:

11077.gif

சுமங்களா ,

அதற்காக முத்தப் படங்கள் இடுவதை நிறுத்த வேண்டாம் . :rolleyes:

11077.gif

தமிழ் சிறி, நீங்கள் "ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு"க்கிறியள். :lol:

பத்தினி பத்தவைச்சா பச்சை வாழையும் எரியுமாம்... smiley-laughing024.gif

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, நீங்கள் "ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு"க்கிறியள். :rolleyes:

(இ)ச்சும்மா ...... கிடைக்கிறதை யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள் ராசராசன். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.