Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தனை வழிபட பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு பிற்போக்குவாதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தனை வழிபட பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு பிற்போக்குவாதம்.

நல்லூர் கந்தன் ஆலைய வருடாந்த உற்சவம் விரைவில் வர இருக்கிறது. இவ்விழா தொடர்பான சில முக்கிய முடிவுகள் யாழ் மேயர் யோ.பற்குணராசா தலையில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில் தென் பகுதியிலிருந்து வரும் பக்தர்களுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்வது குறித்தும் இன்னும் பல விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டது. அதில் முக்கியமான விஷயமாக தமிழ் பெண்களின் மரபான உடையென்று ஆண்களால் தீர்மானிக்கப்பட்ட சேலை, தாவணி,நீளப்பாவாடை சட்டை மட்டுமே அணிந்து நல்லூர் கந்தன் உற்சவத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று இதை மீறி ஜீன்ஸ், சுடிதார், அரைக்கால் சட்டை அணிந்து வந்து தமிழ் பெண்களின் பாரம்பரீயத்தையே இழிவு செய்பவர்களை அனுமதிக்க முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை நாடெங்கிலும் உள்ள நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போரால் பாதிக்கபப்ட்டு ஒரு இனமே தூண்டாடப்பட்டு கிடக்கிற நிலையிலும் இந்த பிற்போக்கு வாதிகளின் இரக்கமாற்ற கோட்பாடுகள் தமிழ் பெண்களை இழிவாக நடத்தவே துணை போகும் என்பது உறுதி.

http://inioru.com/?p=15168

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பிற்போக்குவாதம் என்று எதனை கருதுகின்றனரோ தெரியவில்லை.

பாடசாலைக்குச் சொல்லும் மாணவ மாணவிகளுக்கு உடைக்கப்பட்டுப்பாடு உண்டு.

மேற்குநாடுகளில் வேலைத்தளங்களில் பள்ளிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனித்தனியான உடைக்கப்பாடு உண்டு. அண்மையில் பிரித்தானியாவின் முக்கிய பல்பொருள் அங்காடியான ரெஸ்கோ.. தனது பெண் ஆண் வாடிக்கையாளர்களுக்கு என்று சில உடைக்கப்பட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருந்தது. சிலர் அதை எதிர்த்திருந்தாலும் ரெஸ்கோ அதனை மீளப் பெற மறுத்துவிட்டது.

ஆலயங்கள் தமது பாரம்பரியத்தோடு உடைக்கப்பட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது... மற்றைய இனத்தவர்களும் அதைப் பின்பற்ற வழி வகுக்கும்.

நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது தேசம் இன்று இன்னொரு இனத்தவரின் முழுமையான ஆளுமையின் கீழ் உள்ள நிலையில் எமது பாரம்பரியங்கள் விழுமியங்கள் சிதைந்து விடாமல் பாதுகாக்கப்படும் வகையில் செயற்படவும் வேண்டி இருக்கிறது.

நல்லூர் கந்தசுவாமி கோவிலைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதும் ஆடை விசயத்தில் கராராகவே இருந்திருக்கின்றனர். சிறுவர்களைக் கூட மேலாடை அணிந்து வர அனுமதிப்பதில்லை. மேலாடை அணிந்து கோவிலுள் செல்ல முற்பட்டதற்காக நான் சிறுவனாக இருந்த போது என்னை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அவர்களோடு தர்க்கப்பட்டு நுழைவாயிலில் மேலாடையை கழற்றிவிட்டு உள்ளே போய் மீண்டும் அணிந்து செல்வேன். மேலாடை இன்றி ஆட்கள் முன் போவது கூச்சமானது என்று சொல்லியும் கேட்கவில்லை.

இப்படி நல்லூர் நிர்வாகத்தோடு சில செயல்முறைகளில் எனக்கும் முரண்பாடு இருப்பினும்.. ஒரு பொதுவிதி என்று அமைகின்ற போது அதற்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும் என்று உணர்கிறேன். அதற்காக மக்களை துன்புறுத்தக் கூடாது. மற்றும்படி ஒரு ஆலயம் விதிக்கும் உடைக்கப்பட்டுபாடு தனிமனித உரிமைகளை பறிக்காத போது அதனை பிற்போக்குவாதம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை..!

இங்கு சில ஆடைகளை ஆலயம் தவிர்க்கச் சொல்லும் அதேவேளை பாரம்பரியம் வழி... பலப் பல ஆடைத் தேர்வுகளுக்கும் வழிவிடுகிறது. அந்த வகையில் இது சிறந்ததே. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழும் நல்லூர் ஆலய நிர்வாகம் இவ்வாறான ஆடை கட்டுப்பாடுகளை வைத்திருந்தது. விடுதலைப் புலிகளும் அதனை அங்கீகரித்திருந்தனர். ஆனால் இப்போ அது மாநகர அதிகாரத்துக்குள் எடுக்கப்பட்டிருப்பது தான் ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை வேற்றினத்தவர்களுக்கும் இந்த செய்தி போய் சேர வேண்டும் என்பதற்காக இருக்கலாம்.

ஆனால் இவ்விதிகளுக்கு ஆக்கிரமிப்பு இராணுவமும் அதுசார்பு ஆயுதக் கும்பல்களும் கட்டுப்பட வேண்டும்... என்பதை விதி அமுலாக்கள் காரர்கள் உறுதி செய்ய வேண்டும்.

Edited by nedukkalapoovan

இதில் பிற்போக்குவாதம் எங்கே? போகிற போக்கில் நீச்சல் உடையையும் அனுமதிக்கக் கேட்பீர்கள் போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீச்சல் உடையில் கோவிலுக்குப் போகமுடியாதுதான். தலைப்பை மட்டும் படித்துவிட்டு கருத்து எழுதக்கூடாது.

இதை மீறி ஜீன்ஸ், சுடிதார், அரைக்கால் சட்டை அணிந்து வந்து தமிழ் பெண்களின் பாரம்பரீயத்தையே இழிவு செய்பவர்களை அனுமதிக்க முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது பெண்கள் ஜீன்ஸ், சுடிதார் அணிவது சாதாரண நிகழ்வு. இதையெல்லாம் தடுப்பவர்கள், ஆண்கள் ஜீன்ஸ் அணியாமல் வேட்டியுடன் வாருங்கள் என்றும் தீர்மானம் போட்டிருக்கலாம்.

பக்தர்கள் முகம் சுழிக்காமல் உடுப்புக்கள் அணிவதில் தப்பில்லை. அது சரி எத்தனை ஆண்களுக்கு எட்டு முழ வேட்டி கட்டத் தெரியும்?

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

நீச்சல் உடையில் கோவிலுக்குப் போகமுடியாதுதான். தலைப்பை மட்டும் படித்துவிட்டு கருத்து எழுதக்கூடாது.

தற்போது பெண்கள் ஜீன்ஸ், சுடிதார் அணிவது சாதாரண நிகழ்வு. இதையெல்லாம் தடுப்பவர்கள், ஆண்கள் ஜீன்ஸ் அணியாமல் வேட்டியுடன் வாருங்கள் என்றும் தீர்மானம் போட்டிருக்கலாம்.

பக்தர்கள் முகம் சுழிக்காமல் உடுப்புக்கள் அணிவதில் தப்பில்லை. அது சரி எத்தனை ஆண்களுக்கு எட்டு முழ வேட்டி கட்டத் தெரியும்?

வளர்ந்த ஆண்கள் வேட்டி கட்டி மற்றும் மேற்சட்டை இன்றித்தான் கோவிலுக்குள் சென்றாகனும்..! இது எப்போதுமே அங்கு வலியுறுத்தப்படும் விடயமாச்சே..! நீங்க என்ன புதிசா சொல்லுறீங்க..!

ஜீன்ஸ்.. சுடிதார்.. பஞ்சாபி அணிந்து கொண்டு ஆலயச் சுற்றாடலில் மேயலாம். ஆனால் உள்ளே செல்ல முடியாது. அதுபோல் தான் ஆண்களுக்கும்.

நான் குறித்த ஆலயத்தில் சாரணனாக.. எனது பாடசாலை சார்ந்து பணிபுரிந்த காலத்தில் இருந்தே இப்படித்தான் வலியுறுத்திச் சொன்னார்கள். மருத்துவ காரணங்கள் தவிர வேறெந்த காரணங்களோடும் வேட்டி இன்றி அனுமதிக்கக் கூடாது என்று. ஆனால் சிலர் அதை பொருட்படுத்துவதில்லை. சண்டைக்கு வருவார்கள்.

சிறுவர்கள் மட்டும் வேட்டி இன்றி வேறு ஆடைகள் அணிந்து ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுபவர். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழ்ப் பெண்களொ ஆண்களோ காலம் காலமாக ஆலயக் கலாச்சாரத்தை கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.

அந்தந்த ஆலய விதிமுறைகளுக்கு அமையவே நடந்து வருகின்றார்கள்.

ஆனால் தற்சமயம் சுற்றுலா என்ற பெயரில் வேற்று மத்ததவர்களும் வேற்று நாட்டவர்களும் தான் ஆலய விதிமுறைகளை அறிந்து கொள்ளாமல் நாகரீகமற்ற முறையில் ஆலயச் சூழலில் நடந்து கொள்கின்றனர்.

இந்த விதிமுறைகளினால் அவர்களும் இந்துக்களின் ஆலயப் பிரதேசத்தின் புனிதத்தை மதித்து நடப்பார்கள் என்று நல்லூர்க் கந்தனை வேண்டிக்கொள்வோம்.

எவர் செய்தாலும் அதனால் மக்களுக்கு நன்மையென்றால் ஏற்றுக்கொள்ளுவது மனிதப் பண்பு

வாத்தியார்

***********

இதில் பிற்போக்குவாதம் என்று எதனை கருதுகின்றனரோ தெரியவில்லை.

பாடசாலைக்குச் சொல்லும் மாணவ மாணவிகளுக்கு உடைக்கப்பட்டுப்பாடு உண்டு.

மேற்குநாடுகளில் வேலைத்தளங்களில் பள்ளிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனித்தனியான உடைக்கப்பாடு உண்டு. அண்மையில் பிரித்தானியாவின் முக்கிய பல்பொருள் அங்காடியான ரெஸ்கோ.. தனது பெண் ஆண் வாடிக்கையாளர்களுக்கு என்று சில உடைக்கப்பட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருந்தது. சிலர் அதை எதிர்த்திருந்தாலும் ரெஸ்கோ அதனை மீளப் பெற மறுத்துவிட்டது.

ஆலயங்கள் தமது பாரம்பரியத்தோடு உடைக்கப்பட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது... மற்றைய இனத்தவர்களும் அதைப் பின்பற்ற வழி வகுக்கும்.

....

நெடுக்ஸ்ஸின் கருத்துடன் உடன் படுகிறேன்...

http://www.telegraph.co.uk/news/newstopics/howaboutthat/7092885/Tesco-dress-code-bans-customers-in-pyjamas.html

http://www.thisislondon.co.uk/standard/article-23849901-harrods-refused-to-let-sweaty-runners-buy-bottle-of-water.do.

பிற்போக்கானவர்கள் பேசும் "பிற்போக்கு வாதம்."

இதில் பிற்போக்குவாதம் என்று எதனை கருதுகின்றனரோ தெரியவில்லை.

பாடசாலைக்குச் சொல்லும் மாணவ மாணவிகளுக்கு உடைக்கப்பட்டுப்பாடு உண்டு.

மேற்குநாடுகளில் வேலைத்தளங்களில் பள்ளிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான தனித்தனியான உடைக்கப்பாடு உண்டு. அண்மையில் பிரித்தானியாவின் முக்கிய பல்பொருள் அங்காடியான ரெஸ்கோ.. தனது பெண் ஆண் வாடிக்கையாளர்களுக்கு என்று சில உடைக்கப்பட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருந்தது. சிலர் அதை எதிர்த்திருந்தாலும் ரெஸ்கோ அதனை மீளப் பெற மறுத்துவிட்டது.

ஆலயங்கள் தமது பாரம்பரியத்தோடு உடைக்கப்பட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது... மற்றைய இனத்தவர்களும் அதைப் பின்பற்ற வழி வகுக்கும்.

நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது தேசம் இன்று இன்னொரு இனத்தவரின் முழுமையான ஆளுமையின் கீழ் உள்ள நிலையில் எமது பாரம்பரியங்கள் விழுமியங்கள் சிதைந்து விடாமல் பாதுகாக்கப்படும் வகையில் செயற்படவும் வேண்டி இருக்கிறது.

நல்லூர் கந்தசுவாமி கோவிலைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதும் ஆடை விசயத்தில் கராராகவே இருந்திருக்கின்றனர். சிறுவர்களைக் கூட மேலாடை அணிந்து வர அனுமதிப்பதில்லை. மேலாடை அணிந்து கோவிலுள் செல்ல முற்பட்டதற்காக நான் சிறுவனாக இருந்த போது என்னை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அவர்களோடு தர்க்கப்பட்டு நுழைவாயிலில் மேலாடையை கழற்றிவிட்டு உள்ளே போய் மீண்டும் அணிந்து செல்வேன். மேலாடை இன்றி ஆட்கள் முன் போவது கூச்சமானது என்று சொல்லியும் கேட்கவில்லை.

இப்படி நல்லூர் நிர்வாகத்தோடு சில செயல்முறைகளில் எனக்கும் முரண்பாடு இருப்பினும்.. ஒரு பொதுவிதி என்று அமைகின்ற போது அதற்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும் என்று உணர்கிறேன். அதற்காக மக்களை துன்புறுத்தக் கூடாது. மற்றும்படி ஒரு ஆலயம் விதிக்கும் உடைக்கப்பட்டுபாடு தனிமனித உரிமைகளை பறிக்காத போது அதனை பிற்போக்குவாதம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை..!

இங்கு சில ஆடைகளை ஆலயம் தவிர்க்கச் சொல்லும் அதேவேளை பாரம்பரியம் வழி... பலப் பல ஆடைத் தேர்வுகளுக்கும் வழிவிடுகிறது. அந்த வகையில் இது சிறந்ததே. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழும் நல்லூர் ஆலய நிர்வாகம் இவ்வாறான ஆடை கட்டுப்பாடுகளை வைத்திருந்தது. விடுதலைப் புலிகளும் அதனை அங்கீகரித்திருந்தனர். ஆனால் இப்போ அது மாநகர அதிகாரத்துக்குள் எடுக்கப்பட்டிருப்பது தான் ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை வேற்றினத்தவர்களுக்கும் இந்த செய்தி போய் சேர வேண்டும் என்பதற்காக இருக்கலாம்.

ஆனால் இவ்விதிகளுக்கு ஆக்கிரமிப்பு இராணுவமும் அதுசார்பு ஆயுதக் கும்பல்களும் கட்டுப்பட வேண்டும்... என்பதை விதி அமுலாக்கள் காரர்கள் உறுதி செய்ய வேண்டும்.

நெடுக்க்ஸ் கவனம் ஈ.வே.ராமசாமி கும்பல் உங்களை போட்டுத் தாக்கப் போகிறார்கள், என்றாலும் உம்முடைய கருத்து என்ரபடியால் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பச்சை குத்து :lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிற்போக்கானவர்கள் பேசும் "பிற்போக்கு வாதம்."

ஜீன்ஸ்சுடன் போனால் முற்போக்கானவர்கள் என்றாகி விடுமா

அந்தந்த இனத்தின் கலாச்சார உடைகள் என்று இருக்கும் போது......

கோவிலுக்கும் ஜீன்ஸ்சுடன் தான் போவேன் என்று அடம் பிடிக்கக் கூடாது.

இவர்கள் கூட மேல் சட்டையை களட்டி விட்டுத்தான், கந்தனை தரிசிக்க முடியும்.

Nallur%2BKovil%2BHindu%2Btemple%2Bin%2Bthe%2Bnorthern%2Btown%2Bof%2BJaffna%2Bin%2Bthis%2BJanuary%2B10,%2B2010.jpgjafna01.jpgSFTC12A.jpg684571754Mahinda-in-Nallur.jpg48.jpg

ஜீன்ஸ்சுடன் போனால் முற்போக்கானவர்கள் என்றாகி விடுமா

அந்தந்த இனத்தின் கலாச்சார உடைகள் என்று இருக்கும் போது......

கோவிலுக்கும் ஜீன்ஸ்சுடன் தான் போவேன் என்று அடம் பிடிக்கக் கூடாது.

இவர்கள் கூட மேல் சட்டையை களட்டி விட்டுத்தான், கந்தனை தரிசிக்க முடியும்.

Nallur%2BKovil%2BHindu%2Btemple%2Bin%2Bthe%2Bnorthern%2Btown%2Bof%2BJaffna%2Bin%2Bthis%2BJanuary%2B10,%2B2010.jpgjafna01.jpgSFTC12A.jpg684571754Mahinda-in-Nallur.jpg48.jpg

இந்த படத்தை பார்க்கும் போது முருகா இருவரும் உண்ணை தரிசித்தனர் ஆனால் ஒருவருக்கு சிம்மாசனமும், மற்றவருக்கு சிறைவாசமும் கொடுத்து விட்டாயே, உந்திருவிளையாடலுக்கு அளவே இல்லையா என கேக்கத் தோன்றுது :lol::lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தை பார்க்கும் போது முருகா இருவரும் உண்ணை தரிசித்தனர் ஆனால் ஒருவருக்கு சிம்மாசனமும், மற்றவருக்கு சிறைவாசமும் கொடுத்து விட்டாயே, உந்திருவிளையாடலுக்கு அளவே இல்லையா என கேக்கத் தோன்றுது :lol::lol::lol::lol::lol:^_^

இதிலை பெரிய மர்மம் ஒண்டும் இல்லை.

ஒருத்தர் குளிச்சிட்டு கோயிலுக்கு போயிருப்பார், மற்றவர் குளிக்காமல் போயிருப்பார்...... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பே மினுசுகே கலச்சாரம் இருக்குதுதானே அதை பின்பற்றுவதில் என்ன தப்பு ... :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. தமிழ்சிறி படங்களை இணைத்தமைக்கு. ரவுசருடன் உள்ளே விட்டிருக்கின்றார்கள்தானே..

கோயில் சுற்றாடலில் புனிதத்தைக் காக்கமுடியவில்லை என்பதுதான் உண்மை. இந்த வருடத் திருவிழாவின்போது எடுக்கப்படும் படங்கள் வரும்போது எப்படி முற்போக்கு/பிற்போக்கு இருக்கின்றது என்று பார்க்கலாம்!

:lol: சில வேலை இப்படியும் இருக்கும்....முருகன் கோவணாடிதானே.......ஒருத்தர் கோவணம் போடாமல் போய் இருப்பார் அதால முருகனுக்கு கோபம் வந்திருக்கும்....... :lol::lol:

மிக்க நல்ல விடயம், எங்கே யாழ் பண்பாடு, கலாசாரம் இல்லாமல் போகபோகின்றதோ என கவலைப்பட்டேன், நல்ல ஒரு முடிவை எடுத்துள்ளார்கள், நன்றி

இதிலை பெரிய மர்மம் ஒண்டும் இல்லை.

ஒருத்தர் குளிச்சிட்டு கோயிலுக்கு போயிருப்பார், மற்றவர் குளிக்காமல் போயிருப்பார்...... :lol::lol:

ஒரு வேளை உண்டியலில் கூடக் குறைவாக போட்டிருபீனமோ ராஜபக்ஷாவுக்கு என்ன திறைசேரி காசு தானே அள்ளி கொடுத்திருப்பான், ஆனால் சரத் பாவம் சாதாரண அரச ஊழியன் தானே, அரச சம்பளத்தில் குடுமத்தை ஓட்ட்வே முடியாது இதுக்குள்ள முருகனுக்கு என்னத்த கொடுக்கிறது :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உதால பாதிக்கப்படப்போவது எங்கட புலம்பெயர் டூரிஸ்டுகள்தான் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதால பாதிக்கப்படப்போவது எங்கட புலம்பெயர் டூரிஸ்டுகள்தான் :lol:

புலம்பெயர் டூரிஸ்டுகள் பெற்றாவின் இருக்கின்ற சாறிக்கடைகளுக்கு போகாமல் யாழ்ப்பாணம் போகமாட்டினம். ஆனால் எமது சிங்கள சகோதர/சகோதரிகள் ஆடைக்கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ள கஷ்டப்படுவினம். :lol:

தெய்வக்குற்றம் ஆகிடுமோ என்கிற பயத்தில உந்த விடயம் சம்மந்தமாய் கருத்து கூற இயலாமல் உள்ளது.

யாழ் மாநகரசபையின் இந்த முடிவை பாராட்டலாம்.

சங்கிலிகளை திருடிக் கொண்டு ஓடும் சிங்களவனை சிங்கள போலிஸ் காப்பாற்ற கஷ்டப்படப் போகினம்.

இந்த பிற்போக்குவாத கருத்தினை ஆதரிக்கும் புலம்பெயர் கலாச்சார காவலாளிகள் எத்தனை பேர் தம் மனைவி, மகள், தாய், சகோதரி ஆகியோர் புலம் பெயர் நாடுகளில் உள்ள கோவிலுக்கு போகும் போது சேலை தவிர்ந்த வேறு ஆடைகளை அணிவதை எதிர்த்தவர்கள் ? உங்கள் உறவுகள் சேலை கட்டியா போகின்றனர் இங்கு? சுடிதார், சல்வார் கமீஸ், ஜீன்ஸ் போட்டு ஒருவரும் போவதில்லையா?

இந்தச் சட்டம், தீர்மானம் இயற்ற யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள்? புலிகளின் கட்டுப்பாடு இருக்கும் போது நல்லூரில் இத்தகைய சட்டங்கள் இருக்கவில்லையே? புலி சரிந்தால், எலிகளுக்கு கூட மீசை முளைக்கின்றது இப்போது

Edited by நிழலி

இந்த பிற்போக்குவாத கருத்தினை ஆதரிக்கும் புலம்பெயர் கலாச்சார காவலாளிகள் எத்தனை பேர் தம் மனைவி, மகள், தாய், சகோதரி ஆகியோர் புலம் பெயர் நாடுகளில் உள்ள கோவிலுக்கு போகும் போது சேலை தவிர்ந்த வேறு ஆடைகளை அணிவதை எதிர்த்தவர்கள் ? உங்கள் உறவுகள் சேலை கட்டியா போகின்றனர் இங்கு? சுடிதார், சல்வார் கமீஸ், ஜீன்ஸ் போட்டு ஒருவரும் போவதில்லையா?

இந்தச் சட்டம், தீர்மானம் இயற்ற யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள்? புலிகளின் கட்டுப்பாடு இருக்கும் போது நல்லூரில் இத்தகைய சட்டங்கள் இருக்கவில்லையே? புலி சரிந்தால், எலிகளுக்கு கூட மீசை முளைக்கின்றது இப்போது

புலிகளின் கட்டுப்பாடு இருந்த போது கலாச்சாராம் பேணும் இளைஞர் குழுக்களை அமைத்திருந்தார்கள். மக்களே பாரம்பரியங்களை மதித்து நடந்தார்கள். அதனால் இத்தகைய சட்டங்கள் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால் தற்போதுதான் புலிகள் இல்லாத நிலையில் எமது கலாச்சாரா பாரம்பரியங்கள் மிதிக்கப்படுவதால் இந்த சட்டங்கள் தேவைப்படுகின்றன. வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கேரள பாணியில் கோவில் நடைமுறைகள்...? :lol:

ஆண்கள் வேட்டியும் சட்டையும் அணிந்து கோவிலுக்குள் அனுமதிப்பதே நாகரீகம்...பார்க்க சகிக்கவில்லை. தமிழ் நாட்டின் சிதம்பரம் கோவில் நடைமுறையையொத்ததாக இருக்கிறது.

புலிகளின் கட்டுப்பாடு இருந்த போது கலாச்சாராம் பேணும் இளைஞர் குழுக்களை அமைத்திருந்தார்கள். மக்களே பாரம்பரியங்களை மதித்து நடந்தார்கள். அதனால் இத்தகைய சட்டங்கள் தேவைப்பட்டிருக்கவில்லை. ஆனால் தற்போதுதான் புலிகள் இல்லாத நிலையில் எமது கலாச்சாரா பாரம்பரியங்கள் மிதிக்கப்படுவதால் இந்த சட்டங்கள் தேவைப்படுகின்றன. வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

நீங்கள் என் முதலாவது கேள்விக்கான பதில்களைச் சொல்லாமல் உங்கள் வசதிக்காக இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்கின்றீர்கள்

சரி, யாழில் இந்தக் கலாச்சாரம் பேணும் குழு தன் முக்கிய கவனத்தில் எடுத்துக் கொண்டது, கசிப்பு வியாபாரத்தில் ஈடுபடுபவர்களையும், தெருவுக்கு தெரு சினிமா நடிகர்களின் பெயர்களைத் தாங்கி (தல, விஜய் குழுக்கள்) சண்டித்தனம் செய்தவர்களையும் தான். அந்த நாட்களில் (கனடா வரும் முன்)யாழ்பாணத்துக்கு பல தடவை போனவன் என்பதால் அவர்கள் பற்றி அறியக் கூடியதாக இருந்ததுடன், என் தம்பி முறையானவனும் அதில் இருந்திருந்தான்.

ஆனால், இதே குழுவின் பெயரால்தான் ஒரு திருடரை அவரின் தாய், சகோதரியின் கண் முன் அவர்கள் கதறக் கதற அடித்தே கொலை செய்த படுபாதக படுகொலை நிகழ்வும் நடந்தது. இந்தத் திரியின் குறிக்கோள் கலாச்சாரத்தினை பேணும் அமைப்பு பற்றிய விவாதத்திகுரியது இல்லை என்பதால் அவர்கள் பற்றிய என் விமர்சங்களை இத்துடன் மட்டுப் படுத்துகின்றேன்

தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதால் மட்டுமே யாழ்ப்பாணம் மட்டும் அன்றைய தமிழ் கலாச்சாரத்தி இறுக்கிப் பிடிக்க வேண்டுமா? புலம்பெயர் நாடுகளில் வாழும் எமக்கு மட்டும் அது விதி விலக்கா? இதைக் கேட்பதால் புலம்பெயர் மக்களும் அதே கலாச்சாரத்தினை பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. கலாச்சாரம் என்பதே தான் வாழும் சூழ்நிலைக்கும், பொருளாதார சமூக மாற்றங்களுக்கும் உள்ளாகி மாறி வரும் ஒன்று. எம்மால் இன்று புலம்பெயர் நாடுகளில் பல தேவைகளின், வசதிகளின் காரணமாக எப்படி மாற்றத்துக்குள்ளாக வேண்டி வருகின்றதோ அதே போன்று தான் யாழ் மக்களுக்கும் நிகழ்கின்றது. சுடிதாரும், ஜீன்ஸும் தமிழன் கலாச்சாரம் இல்லை என்பதற்காய் ஒரு கோவிலுக்குள் உள் நுழைய அனுமதி மறுப்பது என்பது அடிப்படை உரிமை மீறல். கோவில் என்பது ஒரு நிறுவனம் அல்ல. நிறுவனம் ஒன்று தான் சார்ந்த கடமைகளை / வர்த்தகத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு தான் சரி என்று நினைத்த ஒரு dress code இனை அமுல்படுத்துவது என்பது வேறு..அதனையே மக்களின் வாழ்வாதார நம்பிக்கை சார்ந்த ஒரு கோவில் அமுல் படுத்த நினைப்பது என்பது வேறு. ஒரு வர்த்தக நிறுவனம் பிஜாமா வேண்டாம் என்றால், அதனை ஏற்காத மக்கள் நிராகரிப்பதற்கும், ஜீன்ஸ் போட்டாம் விட மாட்டார்களாம் என்று நல்லூர் கந்தனின் கோவிலை தவிர்ப்பதற்கும் சமூக, உளவியல், சமய, நம்பிக்கை சார்ந்த வேறுபாடுகள் மிக அதிகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.