Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவன் ஊமையானான் - ஒரு பக்க கதை

Featured Replies

டோ ப(B )ள்ளா ! கொய்தி தியன்னே. கியபங்.

(அட நாயே ..எங்கடா இருக்கு சொல்லுடா)

அந்த சீருடை அணிந்த மிருகம், அவனை எட்டி வயிற்றில் உதைத்தது.

எனக்கு தெரியாது.

அவன் இதை ஐம்பத்து மூன்றாம் தடவை சொல்லுகிறான்.

தலையை நீரினுள் அமிழ்த்தி,

முகத்தில் பெற்றோல் பை கட்டி,

மூக்கிலே மிளகாய் தூள் தூவி,

வாய்க்குள்ளே சுடுதண்ணி ஊத்தி,

உடம்பிலே மின் பாய்ச்சி,

தலைகீழாக கட்டி அடிச்சு,

குறட்டினாலே நகம் புடுங்கி,

கையிலே ஆணி அடிச்சு,

ஆணுறுப்பை உயிர் போக அழுத்தி,

கால்களை அமில வாளிக்குள் தோய்த்து,

அந்த மிருகத்துக்கு தெரிந்த சித்திரவதை எல்லாம் பண்ணி பார்த்தாச்சு.

இப்போ அவன் முதுகிலே மின்அழுத்தியை (Iron Box ) அழுத்தியபடி மீண்டும் கேட்டது.

எங்கடா இருக்கு அந்த ஆயுதங்கள்.

அவன் கத்திய படியே சொன்னான்.

எனக்கு தெரியாது. ஐம்பத்து நாலாவது தடவை.

மூத்த தளபதியின் மெய்க்காப்பாளன் அவன்.

விசேட தாக்குதல் ஒன்றிற்காக அந்த நகரத்துக்கு வந்திருந்தான்.

எதிர்பாராத சுற்றிவளைப்பு.

வழக்கமான தலையாட்டி.

அவன் கைதானான்.

தாக்குதலுக்கான ஆயுத தொகுதிக்காக தான் இந்த சித்திரவதை.

இன்னும் மயக்க மருந்து வதை தான் பாக்கி.

அந்த வதையை, களைச்சு போன மிருகம் நாளை காலைக்கு ஒத்திவைத்தது.

அவனுக்கு அந்த இரவு மட்டும் தான் இருக்கு.

ஏதாவது பண்ணியாக வேண்டும்.

என்னிடம் இருந்து இவர்கள் எதையுமே எடுக்க கூடாது.

என்ன பண்ணலாம்.

தற்கொலைக்கு கூட வழி இல்லை.

இரும்பு கம்பி கதவால் பூட்டிய அந்த நாலு சுவருக்குள் என்ன தான் பண்ணலாம்.

நடு இரவை தாண்டி யோசித்து கொண்டிருந்தான்.

மின்னலென உதித்தது அந்த உத்தி.

தாய்மண்ணையும் தானை தலைவனையும் ஒரு கணம் மனசிலே நிறுத்தி,

நாக்கினை வெளியிலே நீட்டி,

பல்லினால் இறுக கடித்த படி,

ஓங்கி தாடையை அந்த இரும்பு கதவின் சட்டத்தில் அடித்தான்.

ஓ..ஓ..

அவன் அலறல் சத்தம் அந்த மிருகங்களை எழுப்பியது.

இனி அந்த மிருகம் மட்டுமல்ல, கடவுளே வந்தாலும் அவனிடம் இருந்து ஒரு வார்த்தை பெற முடியாது.

ஆம். இந்த தாய் மண்ணுக்காக,

அவன் ஊமையானான்.

Edited by அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

அடோ ப(B )ள்ளா ! கொய்தி தியன்னே கியபங்.

(அட நாயே ..எங்கடா இருக்கு சொல்லுடா)

அந்த சீருடை அணிந்த மிருகம், அவனை எட்டி வயிற்றில் உதைத்தது.

எனக்கு தெரியாது.

அவன் இதை ஐம்பத்து மூன்றாம் தடவை சொல்லுகிறான்.

முகத்தில் பெற்றோல் பை கட்டி,

மூக்கிலே மிளகாய் தூள் தூவி,

வாய்க்குள்ளே சுடுதண்ணி ஊத்தி,

உடம்பிலே மின் பாய்ச்சி,

தலைகீழாக கட்டி அடிச்சு,

குறட்டினாலே நகம் புடுங்கி,

கையிலே ஆணி அடிச்சு,

அந்த மிருகத்துக்கு தெரிந்த சித்திரவதை எல்லாம் பண்ணி பார்த்தாச்சு.

இப்போ அவன் முதுகிலே மின்அழுத்தியை (Iron Box ) அழுத்தியபடி மீண்டும் கேட்டது.

எங்கடா இருக்கு அந்த ஆயுதங்கள்.

அவன் கத்திய படியே சொன்னான்.

எனக்கு தெரியாது. ஐம்பத்து நாலாவது தடவை.

மூத்த தளபதியின் மெய்க்காப்பாளன் அவன்.

விசேட தாக்குதல் ஒன்றிற்காக அந்த நகரத்துக்கு வந்திருந்தான்.

எதிர்பாராத சுற்றிவளைப்பு.

வழக்கமான தலையாட்டி.

அவன் கைதானான்.

தாக்குதலுக்கான ஆயுத தொகுதிக்காக தான் இந்த சித்திரவதை.

இன்னும் மயக்க மருந்து வதை தான் பாக்கி.

அந்த வதையை, களைச்சு போன மிருகம் நாளை காலைக்கு ஒத்திவைத்தது.

அவனுக்கு அந்த இரவு மட்டும் தான் இருக்கு.

ஏதாவது பண்ணியாக வேண்டும்.

என்னிடம் இருந்து இவர்கள் எதையுமே எடுக்க கூடாது.

என்ன பண்ணலாம்.

தற்கொலைக்கு கூட வழி இல்லை.

இரும்பு கதவால் பூட்டிய அந்த நாலு சுவருக்குள் என்ன தான் பண்ணலாம்.

நாடு இரவை தாண்டி யோசித்து கொண்டிருந்தான்.

மின்னலென உதித்தது அந்த உத்தி.

தாய்மண்ணையும் தானை தலைவனையும் ஒரு கணம் மனசிலே நிறுத்தி,

நாக்கினை வெளியிலே நீட்டி,

பல்லினால் இறுக கடித்த படி,

ஓங்கி தாடையை அந்த இரும்பு கதவின் சட்டத்தில் அடித்தான்.

ஓ..ஓ..

அவன் அலறல் சத்தம் அந்த மிருகங்களை எழுப்பியது.

இனி அந்த மிருகம் மட்டுமல்ல. கடவுளே வந்தாலும் அவனிடம் இருந்து ஒரு வார்த்தை பெற முடியாது.

ஆம். இந்த தாயக மண்ணுக்காக,

அவன் ஊமையானான்.

இப்படி ஒரு சித்ரவதையா ? :D நன்றி தோழரே ...தங்களின் இடுகைக்கு தோழர் அபிராமு..

  • கருத்துக்கள உறவுகள்

வாசிகக் கண்ணீர் வருகிறது. இந்தக்கொடுமைவேறு

எங்கு நடந்திருக்கும். ........?

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தைகள் பயனற்றுப் போயின..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்த சொல்ல :D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:D:D மெளனம்....
:lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே எழுத வார்த்தைகள் இல்லை.

  • தொடங்கியவர்

கருத்துகளை பதிந்து ஊக்கமளித்த அனைத்து உள்ளங்களுக்கும், என் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியெல்லாம் தியாகம் செய்தவர்கள் போராளிகள். ஆனால் இப்பொழுது புலம் பெயர்ந்த நாடுகளில் பலர் இவர்களின் தியாகங்களை மறந்து சிங்களவன் புகழ் பாடிக் கொண்டிருக்கினம் என்பது தான் சோகக்கதை.

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் மட்டுமே கேள்விப்படும் இது போன்ற தியாகங்கள் 18 மைல் தொலைவில் இருப்பர்வகளுக்கு ஏதும் இன்னமும் சரியாக எட்டவுமில்லை..அதற்கான புரிதலும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
:):lol:
  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் மட்டுமே கேள்விப்படும் இது போன்ற தியாகங்கள் 18 மைல் தொலைவில் இருப்பர்வகளுக்கு ஏதும் இன்னமும் சரியாக எட்டவுமில்லை ..அதற்கான புரிதலும் இல்லை.

இதோ பதில்.....

இப்படி ஒரு சித்ரவதையா ? :( நன்றி தோழரே ...தங்களின் இடுகைக்கு தோழர் அபிராமு..

:(:(:(
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே மனிதர்களை மிருகங்களாக மாற்றி ரொம்ப காலம் ஆச்சு சகோதரா 18மைல் தொலைவில். மீதி இருப்பவர்கள் தீ குளித்தும் பார்தாயிற்று ஒன்றும் நடக்கவில்லை எனெனில் மனிதர்கள் இங்கே சிறுபான்மையாகதான் இருக்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.