Jump to content

ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)


Recommended Posts

பாகம் ஒன்று

சஷ்டியை நோக்க சரவணபவனார்.. சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்..

கந்த சஷ்டி கவசத்தை இருந்த சூரிய மின்கலத்தில் ஓடவிட்டபடி ராணி அம்மா, மகன் நேசனை தட்டி எழுப்பினாள். இன்று தான் அவன் அந்த வீட்டில் தூங்கும் கடைசி நாள் என்று கூட தெரியாமல்.

"தம்பி இண்டைக்கு பாரணை.. அவர்கள் வருவார்கள். நீ நேரத்துக்கு எழும்பி சாப்பிட்டுவிட்டு ஆயத்தமாக இரு". ராணி அம்மாவின் குரல் நேசனுக்கு விட்டு விட்டு தான் கேட்டது. இருந்தாலும் அவர்கள் வருவார்கள் என்பது அவனை முழிக்க வைத்துவிட்டது.

யார் அவர்கள்..??

காலத்தின் தேவை கருதியும் தாய் மண்ணை காக்க வேண்டிய கட்டாயத்தின் நிமித்தமும், நாட்டுக்காக வீட்டுக்கு ஒருவரை இணைத்து கொண்டிருந்த காலம் அது. சென்ற வாரம் அவர்கள் வந்திருந்த போது..

"தம்பிமார்..எனக்கு தெரியும் எண்ட பிள்ளை கட்டாயம் இந்த நாட்டுக்காக போராட வேண்டும் என்று. என்றாலும் இப்போ கந்த சஷ்டி. ஒருவாரம் கழிச்சு வாரீங்களா பாரணை முடிச்சு அனுப்பி வைக்கிறேன்" என்றாள் அந்த வீரதாய்.

அதற்கு மதிப்பளித்து தான் இன்று அவர்கள் வாறதாக இருக்கிறார்கள்.

இரவு முழுவதும் வீட்டில் ஒரே அழுகை. அவனது இரு தங்கைகளும், "அண்ணா உனக்காக நாங்கள் போகிறோம் நீதான் ஒரே ஆம்பிளை அம்மா அப்பாவை நீதான் பார்க்கணும்" என்றும் அண்ணாவோ, "இல்லை தங்கச்சிகளே சண்டை என்கிறது அவ்வளவு சுலபம் இல்லை, உங்களை அங்கே கஷ்டப்படவிட்டிட்டு நான் இங்கே சந்தோசமாக இருக்க முடியாது" என்று மாறி மாறி பாசமழைகளும் அழுகைகளும் தான் மிச்சம்.

ராணி அம்மாவுக்கோ இனி மகனுக்கு நல்ல சாப்பாடுகள் கிடைக்குமோ... ச்சே இந்த கந்த சஷ்டியாலே மகனுக்கு பிடிச்ச எந்த மச்ச கறிகளையும் சமைச்சு கொடுக்காமல் அனுபிறோமே என்ற கவலை.

காலையில் அவர்கள் வந்திருந்தார்கள். "தம்பிமாரே இருங்கள் அவன் வெளிகிடுறான்.. நீங்கள் சாப்பிடுறீங்களா ?" என்று அன்பாக கேட்டாள் அந்த அம்மா. கொடிய போருக்கு அழைத்து செல்ல வந்திருக்கும் அவர்களையும் அன்பாக உபசரிக்கும் அந்த தமிழ் தாயின் அன்பு யாருக்கு தான் வரும்.

அந்த அம்மாவின் அன்புக்காக அவர்கள் சாப்பிட்டார்கள். அவன் அம்மா அப்பா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டான் ..தங்கச்சிமாரை கட்டி அணைத்து அறிவுரைகள் கூறிக்கொண்டான். அவன் போக போவது தெரியாமல் வாலை ஆட்டி கொண்டிருந்த நாயை கூட ஒரு முறை கொஞ்சி கொண்டான்.

"தம்பி கவனமாக இருந்து கொள். ஒழுங்காக சாப்பிடு..உனக்காக தான் நாங்கள் இங்கே உயிரோட இருக்கிறம் என்றதை எப்பவும் மறக்காதே"..என்று தாயும் தந்தையும் மாறி மாறி கட்டி அணைத்து அழுதபடியே வழி அனுப்ப அவன் அவர்களோடு புறப்பட்டான் மீளாத பயணத்துக்காக.

வாசல் வரை நடக்கும் போது அவர்களிடம் அம்மா கேட்டாள்." தம்பீ..நான் கேட்க கூடாது தான் இருந்தாலும் பெத்த மனசு தம்பி ... தம்பி இவன் வீட்டிலேயே செல்லமாக வளர்ந்த பிள்ளை ..ஒரே ஆம்பிளை பிள்ளை ..இவன் வளர்ந்து தான் ஏலாத எங்களையும் தங்கச்சிமாரையும் பார்ப்பான் என்று பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை ..சண்டைக்கு அனுப்பாமல் பார்பீங்களா..??"

அந்த அம்மா தந்த சோறு இன்னும் வயிற்றுக்குள் தான் இருந்தது அவர்களுக்கு. இந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் அவர்கள் பட்ட தவிப்பை உணர்ந்த அம்மா.. "பரவாயில்லை தம்பி ..போயிட்டுவங்கோ" என்று அனுப்பி வைத்தாள்.

அவன் வளர்த்த நாயில் இருந்து அந்த வீட்டில் இருந்த அனைத்து ஜீவராசிகளுமே படலை மட்டும் வந்திருந்தன..திரும்பி வராத அவனை வழியனுப்ப..

(தொடரும்)

பாகம் இரண்டு இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் அபிராம்...ஒரு குடும்பமே மனம் உவந்து தங்கள் ஒரே மகனை போராட்டத்திற்கு அனுப்பவது என்டால் அது எப்பேற்பட்ட தியாகம்.

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கோ அபிராம்.... நீண்ட நாட்களின் பின்பு எழுதுகிறிர்கள் என்று நினைக்கிறேன்... நீங்களும் எங்கேயாவது கொலிடே போயீருந்திங்களோ? பெரிய தியாகம் அம்மாவே அனுப்பி வைப்பது என்பது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியை காண ஆவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கும் ஒரு பச்சைய குத்திட்டு போவம். :lol:

Link to comment
Share on other sites

மனதில் கனமான உணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டவாறு கதை அமைகின்றது...தொடருங்கள் அபிராம்.. எழுத்து நடையும் நன்றாக இருக்கின்றது

Link to comment
Share on other sites

பாகம் இரண்டு

வணக்கம்..

நான்தாங்க நேசன் பேசுறேன்..

என்ன அப்படி பார்க்கிறீங்கள்.. சென்ற பாக கதையின் நாயகன் தாங்க..

சரி இப்போ சொல்ல வந்த விடயத்துக்கு வாறன்.

என்னை கூட்டி கொண்டு போகும் இந்த இரண்டு அண்ணைமாரையும் எனக்கு ஒரு வாரத்துக்கு முதல் தான் தெரியும்.

எப்படியும் பொறியியல் கல்லூரிக்கு போய்விட வேண்டும் என்று உறுதியோட, வட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சிக்கு தனியார் வகுப்புக்காக வரும்போது கோவிந்தன் கடை சந்தியடியில் மறித்து .."தம்பி உங்களோட கொஞ்ச நேரம் பேசவேணும் நேரம் இருக்குமா" என்று கேட்ட போது தான் நான் அவர்களை முதன் முதலில் பார்த்தேன்.

என்ன.. என்னை விட நாலு அல்லது ஐந்து வயசுதான் கூட இருக்கும். சிரித்தபடி தான் கேட்டார்கள். எனக்கும் வகுப்புக்கு கொஞ்சம் நேரம் இருந்ததால் அவர்களுடன் பேச ஒத்துக்கொண்டேன்.

"தம்பி உங்களுக்கு தெரியாதது ஒண்டும் இல்லை. இராணுவம் மன்னார் பக்கத்தால உடைச்சு கொண்டு உள்ளே வந்து கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட எழுபது கிலோ மீட்டருக்கு மேல முன்னணி காவலரண்கள்..ஐம்பது மீட்டருக்கு ஒரு காவலரண், காவலரணுக்கு மூன்று பேர், மூன்று கடமை நேரம் என்று பார்த்தாலும் தம்பி..எத்தனை பேர் வேணும் என்று நீங்களே கணக்கு பண்ணி பாருங்க தம்பி." அந்த அண்ணா சொல்லி கொண்டே போனார்.

"அண்ணே நீங்கள் சொல்லுறது விளங்குது அண்ணே ..வீட்டிலேயே இரண்டு தங்கச்சி, ஏலாத அப்பா அம்மா, எல்லாரையும் நான் தான் அண்ணே பார்க்க வேணும். நான் படிச்சு பொறியிலாலராக வந்தால் தான் எதுவுமே செய்யமுடியும் அண்ணா. நான் வேணும் என்றால் படிச்சு முடிச்ச பிறகு ஏதாவது உதவி செய்யட்டுமா அண்ணா" என்று கேட்டேன்.

"தம்பி நீங்கள் படிச்சால் எங்கட நாட்டுக்கு தான் பெருமை தம்பி.. ஆனால் போற போக்கை பார்த்தால் நீங்கள் படிச்சு சோதனை எழுத முதலே உங்கட வீட்டு வாசலில் வந்து இராணுவம் நிப்பான் தம்பி. நானும் பொறியியாலனாக வரவேண்டும் என்று தான் படிச்சேன். இன்றைய நிலைமை அப்படி தம்பி... இல்லை என்றால் உங்களை படிக்க விட்டு நாங்களே சண்டை பிடிச்சிருப்போம்."

"தம்பி உங்களுக்கே தெரியும். ஜெயசுக்குறு காலத்திலும் சரி, யாழ்பாண சண்டையிலும் சரி, மாணவர்களை சுழற்சி முறையில் தான் களபணிக்கு கேட்டோமே தவிர முழுமையாக கேட்கவில்லை. இன்றைய நிலைமையை உணர்ந்து தான் உங்களிடம் கெஞ்சி கொண்டிருக்கிறோம்" என்று நியாயம் சொன்னார் அந்த அண்ணா.

அவர்கள் சொல்லுவது நியாமாகபட்டாலும் வீட்டு நிலைமையை யோசித்து, இவர்களை வெட்டிவிட வேண்டும் என்று மனசிலே நினைத்து, " அண்ணே வகுப்பு நேரமாச்சு..நான் போகவேணும். வீட்டை போய் யோசிச்சு பார்கிறேன். விரும்பினால் எங்கே வந்து சேரவேண்டும்" என்று நயமாக கேட்டு அவர்களின் முகாம் முகவரியை தெரிந்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

மாலையில் வீட்டுக்கு வந்ததில் இருந்து அவர்கள் சொன்னது தான் காதில் ஓடி கொண்டிருந்தது. நான் படிக்க வேண்டும் என்றதுக்காக யாரோ அண்ணாமார் அக்காமார் இரவிரவாக கண்விழித்து காவலரணில் கடமை இருப்பது எனக்கு என்னவோ செய்தது.

அவர்களுக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் தானே. அவர்களுக்கும் தம்பிமார் தங்கச்சிமார் இருந்திருபினம் தானே. அவர்களுக்கும் ஏலாத அம்மா அப்பா இருந்திருபினம் தானே. எங்களுக்காக எங்கட அடுத்த தலைமுறைக்காக அவர்கள் சிலுவை சுமக்க.. நாங்கள் அவர்களுக்கு என்ன நன்றி கடன்.. எப்போது செய்ய போகிறோம் இப்போ செய்யாமல்..ஆயிரம் கேள்விகள் ..அன்று என்னை தூங்கவே விடவில்லை. நான் தூங்கும் போது விடிந்திருந்தது வானம் மட்டும் இல்லை என் மனசும் தான்.

காலையில் ஒரு முடிவோட அம்மாவிடம் வகுப்பு என்று பொய் சொல்லிவிட்டு அவர்களின் முகாமுக்கு போனேன். நேற்று என்னுடன் பேசிய அண்ணா முகாமின் முற்றத்தை கூட்டி கொண்டிருந்தார்.

என்னை கண்டது அருகில் வந்து "என்ன தம்பி ..முகத்தில் ஒரு மாற்றம் தெரிகிறது" என்று மனசை அறிந்து பேசினார். "அண்ணா ..யோசிச்சு பார்த்தேன் உங்களுடன் சேருவது என்று முடிவு எடுத்துவிட்டேன். என்னால் என் அம்மாவிடம் நேரடியாக கேட்கவும் முடியாது. அவ தாங்கமாட்டா..சொல்லாமல் ஓடி வரவும் எனக்கு பிடிக்கவில்லை ..நீங்க தான் வந்து அம்மாவிடம் பேசவேண்டும்" என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு திரும்பி எதுவுமே நடக்காதது மாதிரி புத்தகத்தை எடுத்து வழமைக்கு மாறாக படிப்பது போல பாசாங்கு காட்ட தொடங்கினேன்.

நான் கஷ்டபட்டு படிக்கிறேன் என்று நினைத்து ,அம்மா விரததோடையும் தேநீர் ஊற்றிவந்து கொடுத்துவிட்டு ,தலையை தடவி நல்லா படியடா என்று சொல்லிவிட்டு போகும்போது எனக்கு உள்ளுக்குள்ளே அழுகை தான் வந்தது.

எனக்கென்ன.. என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்திருந்தால் உங்களுக்கும் வந்திருக்கும் தானே.??

அன்று மாலையே அவர்கள் வந்தார்கள்.

அதுக்கு அப்புறம் நடந்தது தான் உங்களுக்கே தெரியுமே.

நான் செய்தது நியாயம் தானே உறவுகளே..??

இப்போ அந்த அண்ணைமாருடன் உங்கள் விடிவுக்காக போகிறேன்.நாளை நிச்சயம் விடியும் என்ற நம்பிக்கையுடன் போகிறேன்.

எனக்கு தெரியும் நீங்கள் எனக்காக மனசுக்குள்ளே பிரார்த்திப்பீர்கள் என்று..ஒண்டுக்கும் யோசிக்காதீங்க நாங்கள் எங்கள் உயிரை கொடுத்தாவது உங்களுக்கு விடிவு பெற்று தருவோம்.

என்ன.. என்ர அம்மா மாதிரி அழுது கொண்டிருகிறீங்கள்.. அழாதீங்க..

நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக.

போய்வரட்டுமா என் உடன்பிறப்புகளே..!

பாகம் மூன்று இங்கே அழுத்துங்கள்

(விடியல் தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிராம் நீங்கள் கதை எழுதும் போது கீழே உண்மைக் கதை எனப் போடாமல் எழுதினீர்கள் என்டால் எல்லோருடைய ஆதரவும் அந்த மாதிரி இருக்கும்...உண்மைக் கதையிலும் பார்க்க கற்பனை கதைக்கு பெறுமதி அதிகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் இரண்டு

அவர்களுக்கும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் தானே. அவர்களுக்கு தம்பிமார் தங்கச்சிமார் இருந்திருபினம் தானே. அவர்களுக்கும் ஏலாத அம்மா அப்பா இருந்திருபினம் தானே. எங்களுக்காக எங்கட அடுத்த தலைமுறைக்காக அவர்கள் சிலுவை சுமக்க.. நாங்கள் அவர்களுக்கு என்ன நன்றி கடன்.. எப்போது செய்ய போகிறோம் இப்போ செய்யாமல்..ஆயிரம் கேள்விகள் ..

(விடியல் தொடரும்)

மனதைப் பிழியும் வசனங்கள்

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் அபிராம் :)

Link to comment
Share on other sites

பாகம் மூன்று

நேசனை அழைத்து சென்ற அந்த போராளிகள், அவனை தங்கள் பொறுப்பாளரிடம் ஒப்படைத்தனர்.

"அண்ணே, இந்த தம்பியின் அம்மாவே போராடத்தில் இணைய அனுப்பி வைத்தவ.." என்று சொல்ல "சரி நான் பார்த்துகொள்கிறேன் என்று சொன்னார்" பொறுப்பாளர் சேகர்.

சேகர் , இயக்கத்தின் தொலைதொடர்புக்கு பொறுப்பானவர். இயக்கத்தின் மீதும் தலைவர் மீதும் தீராத பற்றும் பாசமும் கொண்டவர். ஜெயசுக்குறு காலத்தில் அவருடன் பணியாற்றி வீரச்சாவடைந்த தளபதியின் பேரையே தனது ஒரே மகனுக்கு வைத்த ஒரு ஆழமான போராளி. இவை எல்லாவருக்கும் மேலாக ஒவ்வொருநாளும் காலையில் அவரது அறையில் இருக்கும் அனைத்து மாவீரர்களின் படங்களுக்கும் பூ வைக்காமல் எந்த காரியத்தையும் தொடங்குவதில்லை.வெள்ளிகிழமை தோறும் துயிலும் இல்லம் போய், மாவீரரை வணங்கி, விரதமிருந்து தான் கடமையாற்றும் ஒரு உன்னத போராளி.

என்றுமே சிரித்த முகமும், மிடுக்கான பார்வையும் அவரை ஒரு ஆளுமை மிக்க போராளியாக, தளபதியாக நேசனுக்கு காட்டியது.

"தம்பி உங்கட பெயர் என்ன ? " அன்பாக கேட்டார் தளபதி சேகர்.

"நேசன்.." அடக்கமாக பதில் சொன்னான்.

"உமக்கு இயக்கத்தில் என்ன செய்ய விருப்பம்.?"

"அண்ணே.. ஏதாவது தொழில்நுட்ப துறையில் சாதிக்கணும் என்று ஆசை "

"சரி நான் இப்பொது ஒரு முக்கிய சந்திப்புக்காக போறேன். அங்கே எனக்கு பொறுப்பானவரை சந்திப்பேன். அவருடன் பேசி முடிவெடுத்துவிட்டு உமக்கு சொல்லுறேன். அது மட்டும் உந்த இருக்கையில் இரும்" என்று சொல்லிவிட்டு உந்துருளியில் வெளியில் சென்றுவிட்டார் தளபதி சேகர்.

அவரது அறையில் அடுக்கி வைக்கப்படிருந்த புத்தகங்களில், பாலா அண்ணா எழுதிய "விடுதலை வேட்கையை" எடுத்து புரட்ட தொடங்கினான் நேசன். மனசிலே அம்மா, தங்கைகளின் எண்ணங்கள் வாட்ட தொடங்கின.

நேரம் போனது தெரியவில்லை. உந்துருளியின் சத்தம் கேட்டு நிமிர்ந்த போது, சிரித்தபடியே வந்தார் தளபதி சேகர்.

"தம்பி உம்மை எங்கட பிரிவிலையே இணைக்க சொல்லிவிட்டார். நீர் எங்களுடனே பணி செய்யமுடியும். உமக்கு தொலைதொடர்பு துறையில் பணியாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லைதானே" என்ற போது மகிழ்வுடன் தலையாட்டினான் நேசன்.

"தம்பி. இந்த பிரிவு மிகவும் ரகசியமானது. இங்கு நடக்கும் எந்த வேலை திட்டமும் வெளியிலே யாருக்கும் எக்காரணம் கொண்டும் தெரிய கூடாது. இந்த ரகசியங்கள் நாங்கள் சாகும்போது எங்களுடன் சாக வேண்டியவை புரிந்ததா..??. எங்கட இயக்கம் இண்டைக்கு இந்தளவுக்கு வளர்ந்திருக்கு என்றால் அதுக்கு இரகசிய காப்பு தான் முக்கியம் என்றதை எப்பவும் மனசிலே வைச்சிருக்க வேணும். சரியா "

"ஓம் அண்ணே".

"சரி தம்பி. உமக்கு ஒரு இயக்க பெயர் தமிழில் வைக்க வேண்டும். உமக்கு ஏதாவது பெயர் விருப்பமா ?"

"ராணி மைந்தன்" என்றான் நேசன்.

"ஏன் தம்பி இந்த பெயரில் ஆரும் உங்கட உறவினர்கள் வீரச்சாவா ?"

"இல்லை அண்ணா. எங்கள் அம்மாவின் பெயர் ராணி".

ராணி மைந்தனுக்கு அந்த வேலை மிகவும் பழகிபோனது. தன்னுடைய அறிவுத்திறமையை வைத்து மேலும் மேலும் அந்த தொடர்பாடல் துறையை விருத்தி செய்தான். தளபதி சேகருக்கும், ராணி மைந்தனை மிகவும் பிடித்து போனது. சில சந்தர்ப்பங்களில் அனைவராலும் கைவிடபட்ட உபகரணங்களை கூட ராணி மைந்தன் தன்னுடைய திறமையால் திருத்திஅமைத்தான்.

அந்த வன்னி நிலபரப்பில் மக்களுக்கு தொலைதொடர்பு சேவையை வழங்குவதில் ராணி மைந்தனின் பங்கு அளப்பரியதாக இருந்தது. ராணி மைந்தனின் தேவையை உணர்ந்து அவனது அடிப்படை பயிற்சி தள்ளி போய்கொண்டிருந்தது. ஏனையவர்கள் அடிப்படை பயிற்சியை முடித்து பெற்றோர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும், ராணி மைந்தனுக்கு அவனது வேலை ரகசியம் காரணமாக பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பை இழந்திருந்தான்.

ஒவ்வொரு நாளும் தனது நாட்குறிப்பில் அம்மா, அப்பா, தங்கைகளை பற்றி தான் என்ன நினைச்சேன் என்று எழுதிவருவான். சந்திக்கும் நாளில் கூட பேச நிறைய நேரம் கிடைக்காது என்பதால், இந்த நாட்குறிப்பை அவர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்று நிறையவே எழுதுவான்.

அன்று அவனுக்கு தெரியாது. இந்த நாட்குறிப்பை என்றைக்குமே அவர்கள் பார்க்க போவதில்லை என்று.

(தொடரும்)

பாகம் நான்கு இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

இப்போது தான் பார்த்தேன், எழுதுவதற்கு வார்த்தைகளே வருது இல்லை மனம் தான் கனத்திருக்கு... :unsure: தொடருங்கள்!

Link to comment
Share on other sites

மனதை தொட்டபடி எழுதிச் செல்லுகின்றீர்கள்.

போர் என்பது வெளியில் இருந்து பார்பவர்களுக்கு ஒரு சினிமாதான்.

பங்குபற்றுவனுக்கு தான் அதன் உண்மைநிலை தெரியும்.

Link to comment
Share on other sites

பாகம் நான்கு

"ஐயா! இந்த கத்தரிக்காய் என்ன விலை.?"

"கால் கிலோ நாற்பத்தைந்து ரூபாய் அம்மா.." என்று சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளருக்கு தக்காளிபழம் நிறுத்து கொண்டிருந்தார் அந்த மரக்கறி வர்த்தகர்.

"ஒரு கால் கிலோ போடுங்கையா.."

அவர் அதை நிறுத்துகொண்டே "வேற ஏதாவது.." என்று கேட்டபோது தான் ராணியம்மா அவர்களை பார்த்தார்.

"ஓம் அவர்களே தான்.." என்று மனசுக்குள்ளே சொல்லிகொண்டு "ஐயா இந்த மரக்கறி கூடையை கொஞ்சம் பார்த்துகொள்ளுங்கள் நான் இப்பவே வந்திடுவன் " என்று சொல்லிவிட்டு ஐயாவின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அவர்களை நோக்கி வேகமாக நடக்க தொடங்கினார்.

"தம்பி நீங்க தானே அண்டைக்கு வீட்டுக்கு வந்து நேசனை கூட்டி கொண்டு போனீர்கள்..." சிறு ஐயத்துடன் தான் ராணியம்மா கேட்டார்.

"ஓம் அம்மா.. அவர் எங்களுடன் தான் இருக்கிறார். உங்கட பெயரை தான் தனக்கும் வைச்சிருக்கிறார். ராணிமைந்தன் என்று"

ராணியம்மாவுக்கு கண்கள் கலங்கின. ஒருகையால் துடைத்துக்கொண்டே "தம்பி கேட்கிறேன் என்று குறை நினைக்காதீங்க..மற்ற பிள்ளைகள் எல்லாம் இயக்கத்துக்கு போய் ஒன்று இரண்டு மாதங்களிலேயே பெற்றோருக்கு காட்டினார்கள். நேசன் போய் ஐந்து மாதங்கள் ஒரு நாள் கூட அவனை காட்டலை. என் மகனுக்கு ஏதாவது காயம்.. கீயம்..." மனசிலே இருந்த வலிகள் வார்த்தைகளாக..

"அப்படி ஒன்றும் இல்லையம்மா. அவர் சண்டைக்கே போகவில்லை. ஒரு முக்கியமான வேலையாக இருப்பதால் அதை விட்டு வரமுடியாமல் உள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் உங்களை வந்து பார்ப்பார்".

"எப்போ தம்பி .?"

இந்த கேள்விக்கு அவர்களுக்கு என்ன. அந்த ஆண்டவனுக்கே பதில் தெரியாது.

"கூடிய சீக்கிரம் அம்மா. அந்த வேலை முடிஞ்சதும் வருவார்".

"சரி தம்பி. நீங்கள் அவனை கண்டால் அம்மா ரொம்பவும் விசாரித்ததாக சொல்லுங்க. கிழமைக்கு ஒருக்கா எண்ணெய் தேச்சு குளிக்க சொல்லுங்க. நல்லா சாப்பிட சொல்லுங்க. கவனமாக இருக்க சொல்லுங்க. தங்களை பற்றி கவலை படவேண்டாம் என்று சொல்லுங்க.. தங்கச்சிமார் நல்லா படிக்கினம் என்று சொல்லுங்க ... " என்று அடுக்கி கொண்டே போனார்.

"ஓம் அம்மா.. நிச்சயமாக சொல்லுறம்" என்று அவர்கள் புறப்படும் போது..

"தம்பிமார் ..எனக்கு ஒரு உதவி செய்வீங்களா.. நாளைக்கு மதியம் போல ஒருக்கா வீட்டுக்கு வருவீங்களா"

"அம்மா நாளைக்கு பெரும்பாலும் இஞ்சாலை பக்கம் தான் வேலை. நிச்சயமாக வருவோம்" என்று சொல்லிட்டு போய்விட்டார்கள்.

வீட்டுக்கு வந்த ராணியம்மவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. நேசனின் சிறுவயசு படத்தை கொஞ்சியபடியே சொன்னாள் "என் பிள்ளை என் பிள்ளை தான்" என்று கண்களில் நீர்வர ஆனந்தமாக சொன்னாள்.

தங்கைகள் சுபாவுக்கு மதிக்கும் என்னவென்றே புரியவில்லை.

"அம்மா.. என்னம்மா நடந்தது அண்ணாவை பார்த்தியா"

"இல்லையடி.. அண்ணாவை கூட்டி கொண்டு போனவர்களை பார்த்தேன். அவன் என் பெயரைத்தான் தனக்கு வைச்சிருக்கிறான். என் பிள்ளை என்னை மறக்கவே இல்லை."

"சரி மச மச என்று நிக்காமல் அண்ணாவுக்கு கடிதம் எழுதுங்கோ.. நாளைக்கு அவர்கள் வருவார்கள் அவர்களிடம் கொடுத்துவிடலாம்" என்று பிள்ளைகளை துரத்தினாள்.

தானும் கடிதம் எழுத தொடங்கினாள்.

அன்புள்ள தம்பி,

நாங்கள் நலம். தம்பி.. வட்டக்கச்சி முருகன் துணையால் நீயும் நலமாக இருப்பாய். தம்பி உன்னை கூட்டி சென்றவர்களை இன்று சந்தையில் பார்த்தேன். அவர்களிடம் கொடுக்க தான் இந்த கடிதம் எழுதுகிறேன்.

தம்பி..ஒவ்வொரு நாளும் உன் நினைப்பு தான். எந்த நாளும் நான் சாப்பிட ஒரு வாயை வைக்கும்போது... நீ சாப்பிடியா..உனக்கு நல்ல சாப்பாடு கிடைச்சுதா என்ற எண்ணமே என்னை சாப்பிட விடாது தம்பி. எங்க வீட்டு நாய் கூட நீ இல்லாமல் சாப்பிடுது இல்லை..நாங்க மட்டும் எப்படி தம்பி...??

நீ எத்தனை நாள் என்னிடம் கேட்டிருப்பாய் எனக்கு ஊட்டிவிடம்மா என்று. நானும் நீ வளர்ந்திட்டாய் என்று தட்டிகழிப்பேன் .. இப்போ தோணுதையா..உன்னை பக்கத்தில் வைச்சு ஊட்டிவிடணும் போல..எப்போ அப்பா இந்த அம்மாவை பார்க்க வருவாய்.

தம்பி..தங்கச்சிகள் எல்லாம் நல்ல படிக்குதுகள். தங்களுக்காக தான் அண்ணன் இயக்கத்துக்கு போனான் என்று உணர்ந்து படிக்குதுகள். அப்பா வயலுக்கு போய்ட்டார். வந்ததும் சொல்லுறன். அவரும் உனக்கு கடிதம் எழுதணும் என்று சொன்னவர்.

தம்பி..உனக்கு நிறைய எழுதணும் என்று யோசிச்சு வைச்சேன். இப்போ கண்ணீர் மட்டும் தான் வருகுது எழுத்து வருகுதில்ல. குறை நினைக்காதே இந்த அம்மா உன்னை எண்டைக்கும் நினைச்சு கொண்டுதான் இருப்பா.

கவனமாக இருந்து கொள். பதில் போடு. பொறுப்பாளரிடம் கேட்டு வீட்டுக்கு ஒருக்கா வந்திட்டு போ.

அன்புடன்,

அம்மா.

குறிப்பு : தம்பி இந்த கடிதத்துடன் உனக்கு பிடிச்ச பத்து கோழிக்கறி சாப்பாடு பொதிகள் கொடுத்துவிடுறேன்.. நீயும் சாப்பிட்டு மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்துவிடு.

"பாவம் அவர்கள் எல்லாம் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு எத்தனை நாளோ. அவங்கள் அம்மாவும் என்னை போல தானே கவலைபடுவாங்க. ஒரு அம்மாவின் வலி இன்னொரு அம்மாவுக்கு தானே தெரியும் " என்று மனசிலே சொல்லிக்கொண்டு ராணியம்மா நாளைக்கு சமைபதற்கான ஆயத்தங்களில் ஈடுபட தொடங்கினார்.

மறுநாள் காலையிலையே எழும்பி தன் மகனுக்காகவும், மகன்களுக்காவும் தன் பாசம் எல்லாம் கொட்டி சமைக்க தொடங்கினாள்.

மதியமளவில் எல்லாவற்றையும் பொதிகளாக கட்டி, குடும்பத்தின் கடிதங்களுடன் வாசலில் காத்திருந்தாள் ராணியம்மா... அவர்களுக்காக.

அந்த விழிகளில் இருந்த தேடலும் ஏக்கமும் வார்த்தைகளால் வடிக்க கூடியவை அல்ல.

ஒரு நிமிஷம்.....ஒரே ஒரு நிமிஷம்..நீங்கள் அந்த ராணியம்மாவாக இருந்து பாருங்கள்.

உங்களுக்கு புரிகிறதா அந்த ஏக்கம்..

ராணியம்மா காத்திருக்கிறாள்.........................!

அவர்கள் வரவில்லை..

வரவேயில்லை..

இனி வரபோவதும் இல்லை..

ஆம்..நேற்று மாலை ஒரு பணிக்காக மல்லாவி போய்வந்தபோது, ஆழ ஊடுருவும் படையினர் நடாத்திய கிளைமோர் தாக்குதலில் அவர்கள் வீரச்சாவு என்று, ராணியம்மாவுக்கு உங்களில் யாராவது சொல்லிவிடுவீங்களா..?

(காத்திருப்பு தொடரும்)

பாகம் ஐந்து இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

தங்கள் ஆக்கத்துக்கு நன்றிகள் அபிராம்..! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அபிராம்

தாய்மையின் உணர்வுகளையும் தாய்மண்ணின் பாசத்தையும் எம் வீரமறவர்களின் தியாகத்தையும் தரம் குறையாமல் எடுத்து வரும் நல்லதொரு ஆக்கம்.தொடர்ந்து எழுதுங்கள்.பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிமிஷம்.....ஒரே ஒரு நிமிஷம்..நீங்கள் அந்த ராணியம்மாவாக இருந்து பாருங்கள்.

இனிமேலும் இப்படியான ஒரு சோகம் எம்மவருக்கு வேண்டாம்......அபிராம் தொடரட்டும் உங்கள் எழுத்து பணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இதை வாசிக்கும் போது புத்தன் அண்ணா சொன்னது போல நாமெல்லாம் சுழியர் சுழிச்சிட்டம் என்று தான் தோன்றுது.

Link to comment
Share on other sites

பாகம் ஐந்து

நாயகன்...

ராணிமைந்தனுக்கு இயக்கத்தில் இருந்த ஆறுதலும் அரவணைப்பும் பொழுதுபோக்கும் அவன் தான்.

பெயர் மட்டும் தான் நாயகன். தோற்றத்திலும் செயற்பாட்டிலும் ஒரு நகைச்சுவை நடிகனுக்கு ஒப்பானவன்.இயக்கத்தில் இப்படி விசித்திரமாகவும் பெயர்கள் அமைவதுண்டு. குள்ளமான உயரத்தை கொண்டவனுக்கு நெடியவன், சண்டைக்கே போக பயப்டுபவனுக்கு போர்பிரியன், வார்த்தையிலே என்றைக்குமே அன்பை காட்டாதவனுக்கு அன்பரசன், முப்பது வயசுக்கு மேல் இருப்பவனுக்கு இளையவன், முகத்திலே சிரிப்பே இல்லாதவனுக்கு இனியவன், நீந்த தெரியாதவனுக்கு கடலரசன், வழுக்கையாக தலை இருப்பவனுக்கு முடியரசன்... இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

ராணிமைந்தனுக்கு தொழிநுட்ப உதவியாளனாக நாயகன் இணைக்கப்படத்தில் இருந்தே இருவருக்கும் இடையில் ஒரு இனம்புரியாத பிணைப்பு. நாயகனின் நகைச்சுவை பேச்சும், குறும்பு செயல்களும் , ராணிமைந்தனுக்கு வீட்டு நினைப்பை கொஞ்சம் தூரவைக்கும்.

நாயகனின் குறும்புகள், இந்த தலைப்பிலேயே ஒரு தனி தொடர்கதை எழுதலாம். அந்த அளவுக்கு அவனின் குழப்படி பட்டியலும் அதற்கான சேகர் அண்ணாவின் தண்டனை பட்டியலும் நீண்டு கொண்டே போகும்.

இருந்தாலும் உங்களுக்கும் சிலது தெரிந்தே ஆகவேண்டும்.

பொருளாதார தடைகள், போரின் தீவிரம் காரணமாக போராளிகளுக்கு வழங்கப்படும் வழங்கல்களின் அளவுகள் குறைந்து கொண்டே போயின. ஐந்து பேருக்கு ஒரு பற்பசை,பாதி சவர்க்காரம், பால்மா இல்லாத தேநீர், குளிர்களி (ஐஸ்கிரீம்), சொக்கிலேட் போன்றவை எல்லாம் கண்ணாலும் காணமுடியாது.

இருந்தாலும் முகாம்களுக்கு, தங்களுக்கு தேவையான சிறு பொருட்களை வாங்குவதற்காக, சிறு பயிர்செய்கையோ(கத்தரி, வெண்டி,தக்காளி..) அல்லது கோழி வளர்ப்போ மேற்கொள்ள கூடிய அதிகாரம் வழங்கபட்டிருந்தது.

சேகர் அண்ணா, கோழி வளர்ப்பு பணியை நாயகனிடம் கொடுத்திருந்தார். அவனும் அதை நன்றாக தான் செய்து வந்தான். அவனது புண்ணியத்திலே எல்லாருக்கும் நாளுக்கு ஒரு முட்டை, வாரந்தோறும் ஒருமுறை குளிர்களி, பிஸ்கட் என்று நல்லாத்தான் போய் கொண்டிருந்தது.

அதிகாலையிலே சரக்கட்டுடன், சைக்கிளில் இரண்டு பக்கமும் சேவல்களை கட்டி தொங்க போட்டு கொண்டு நாயகன் சந்தைக்கு போகும் பாணியை யாராலும் மிஞ்ச முடியாது. சந்தையிலிருந்து திரும்பும் போது கையிலே பொருட்களையும் வாயிலே புன்னைகையும் வைத்தே சொல்லமுடியும் அவனிடம் அம்பிட்ட ஏமாளிகள் எத்தனை பேர் என்று.

இப்படி போன அவனது வியாபாரத்திலும் இடிவிழுந்தது.

அவன் வளர்த்த கோழிகளுக்கு வந்தது தூங்கும் வியாதி. ஒரே நாளில் தூங்கி செத்தது ஆறு கோழி.

சேகர் அண்ணா பார்த்துவிட்டு செத்த கோழிகளை வெட்டி தாக்க சொல்லிட்டு போய்விட்டார்.நாயகன் கிடங்கு வெட்டியதை எல்லோரும்பார்த்தோம். எல்லாரும் அவரவர் வேலைக்கு போய்விட்டோம். மாலை நேரம் கை நிறைய குளிர்களியுடன் வந்தான் நாயகன். எல்லாரும் ஆளாளுக்கு அடிபட்டு வேண்டி சாப்பிட்டு ஏப்பம் விட்டிட்டு கேட்டோம்.

"எதுடா காசு"

"நான் செத்த கோழிகளை வித்திட்டேன் மச்சான்"

"எப்படியடா"

"எல்லாத்தையும் உரிச்சு சிறகுகளை மட்டும் தாட்டுவிட்டு. கோழிகளை கொண்டுபோய் பக்கத்து வீடுகளிலே வித்தேன்" என்றான் நாயகன்.

"சனம் வாங்கிச்சா ?" இது நாங்கள்.

"அது விக்கிறமாதிரி வித்தா சனம் வாங்கும்"

"என்ன சொல்லி வித்தணீ"

"எங்கட முகாமுக்கு தலைவர் வாறது என்று சொன்னவர். நாங்கள் கோழி எல்லாம் உரிச்சு சாப்பாடுக்கு ரெடிப்பண்ண, கடைசி நேரத்திலே தலைவர் வரமுடியாமல் போச்சு. இந்த கோழிகளை என்ன செய்கிறது என்று தெரியலை. அது தான் நம்பிக்கையான ஆட்களிடம் தான் இதை சொல்லி விக்க முடியும். அது தான் உங்களை தேடிவந்தேன்.ஒருத்தருக்கும் சொல்லிபோடாதீங்கள் என்று நாலு வீடுக்கும் ஒரே மாதிரி சொல்லி வித்தாச்சு" என்றான் நாயகன் கூலாக..

இது சேகர் அண்ணாவுக்கு தெரிந்து ஒரு வார சமையல் தண்டனையை வாங்கி கட்டி கொண்டான் நாயகன்.

அடுத்த சம்பவம் சேகர் அண்ணாவுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது.

முகாமில் ஒரு சந்திப்புக்காக இருபத்தைந்து கதிரைகள் தேவைப்பட்டன. எங்களிடம் இருந்ததோ ஆறு கதிரைகள் தான். கதிரை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு நாயகனிடம் விடபட்டது. ஒவ்வொரு வீட்டிலும் போய் இரண்டு இரண்டு கதிரையாக இருபது கதிரை சேர்க்கவேண்டும்.

நாயகனின் குறும்பு மூளை வேலை செய்தது. இருபது கதிரையுடன் நின்றான். சந்திப்பும் இனிதே முடிந்தது. எங்கள் எல்லாருக்கும் ஒரு சந்தேகம். என்ன இருபது கதிரையும் ஒரே மாதிரி இருக்கு என்று. நாயகன் ஏதோ சொல்லி சமாளித்துவிட்டான்.

ஆனால் உண்மையில் நாயகன் எங்கட முகாமுக்கு பக்கத்தில் இருந்த தேநீர் கடைக்கு சென்று, அதன் உரிமையாளரிடம்" எங்கட முகாமுக்கு தலைவர் வாறார், சந்திப்புக்கு இருபது கதிரை தேவை எல்லாரிடமும் கேட்கமுடியாது அண்ணே. இரகசிய பிரச்சனை. உங்களிலே வைச்சிருக்கிற நம்பிக்கை விசுவாசத்தில தான் வந்தனான்" என்று அவிச்சு, அந்தாள் கடையையும் பூட்டிவிட்டு கதிரைகளை கொடுத்திருந்தார்.

இது சேகர் அண்ணாவுக்கு தெரியவர, நாயகன் தலைவரை வைத்து பண்ணிய குறும்பால் கோபமடைந்து, நாயகனுக்கு தண்டனையாக மன்னார் எல்லைக்கு ஒரு மாதம் சண்டைக்கு போக சொல்லிவிட்டார்.

உண்மையிலையே சண்டைக்கு போறதெண்டால் நாயகனுக்கு உள்ளூர பயம் தான்.

ஆனால் அந்த மன்னார் எல்லையில் நடந்த சண்டை அவன் தலைவிதியையே மாற்றியது.

(தொடரும்)

பாகம் ஆறு இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் அபிராம்...வாசிக்க,வாசிக்க மனது கணக்கிறது

Link to comment
Share on other sites

பாகம் ஆறு

மன்னார் எல்லை களம் பெரிய பண்டிவிரிச்சான் வரை வந்திருந்தது.

உக்கிரமான சண்டைக்களம் அது. காடு சார்ந்த பிரதேசத்தில் முன்னேறிவரும் ராணுவத்தை புலிகளின் படையணி வழிமறித்து கடுமையாக சண்டை பிடித்து கொண்டிருந்தது.

தளபதி பானுவின் நெறிப்படுத்தலில் தீரமாக போராடின புலிகள் அணிகள்.

நாயகனுக்கு நேரடி சண்டையில் அனுபவம் குறைவு. பல்குழல் எறிகணைகள் என்றால் குலப்பன் நடுங்கும்.

பானு அண்ணாவிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு மாதிரி, எல்லை கோட்டுக்கு பின்னால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைக்கபடிருந்த குட்டிசிறி மோட்டார் மகளிர் அணியின் ,ஒரு ஐந்து இஞ்சி மோட்டாருக்கு, காவல் பணியில் சேர்ந்து கொண்டான்.

கடுமையாக சீறி பாய்ந்து கொண்டிருந்தன மோட்டார்கள். பெண்களும் சளைக்காமல் சொல்லும் குறிக்கு மோட்டார்களை ஏவி கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை ஆழ ஊடுருவும் இராணுவ அணி தாக்கலாம் என்று காவல் பணியில் நாயகனும் மூன்று தோழர்களும் இருந்தார்கள்.

திடீர் என்று ஒரு சலசலப்புடன், சன்னங்கள் சீறி வரத்தொடங்கின.

ஆமாம், ஒரு பத்து பேர் கொண்ட ராணுவ அணி அவர்களின் நிலையை தாக்க தொடங்கியது. நிலை தடுமாறிய அவர்கள் அப்படியே போட்டது போட்டபடி பின்வாங்கி ஓட தொடங்கினார்கள். நாயகனுக்கு தலை கால் புரியவில்லை.

மற்றவர்களுக்கு அந்த காடு பரிச்சயமானபடியால் பின்னணி நிலை நோக்கி ஓட தொடங்கினார்கள். யாருமே அற்ற நிலையில் நாயகன் மட்டும் மோட்டரை ஒட்டி இருந்த ஒரு மரத்துக்கு பின்னால், கடவுளை வேண்டியபடி ஒளிந்து கொண்டான்.

இராணுவம் மோட்டரை நெருங்கியபடி இருந்தது. நாயகனுக்கு மிக அருகிலையே சிங்கள குரல்கள் ஒலிக்க தொடங்கின. இனி மறைந்தும் சாவுதான் என்று எண்ணிய நாயகன், மரத்திலிருந்து வெளிப்பட்டு சரமாரியாக சுட தொடங்கினான்.

திடீரென தொடங்கிய இந்த எதிர்பாராத தாக்குதலில் ராணுவம் திகைத்தது. புலிகளின் வழமையான தந்திரோபாயமாக (உள்ளே வரவிட்டு தாக்கும்) கருதி பின்வாங்கி ஓடினர். மகிழ்ச்சியுடன் நாயகன் துரத்தி துரத்தி சுட்டான். அவர்களது அச்சுறுத்தல் நீங்கியபிறகு போக இடம் தெரியாமல், மோட்டாருக்கு அமைக்கபட்ட குழியினுள் வந்து உட்கார்ந்து கொண்டான்.

அதே நேரம், மோட்டரை விட்டு பின்வாங்கிய போராளிகளுக்கு, அவர்களின் குழு பொறுபாளரிடமிருந்து கடுமையான உத்தரவு பிறப்பிக்கபட்டது. ஆயுததுக்காக உயிரையே கொடுப்பது தான் புலிப்படை. எப்பாடு பட்டாலும் சரி, மோட்டரை இராணுவத்திடம் பிடிபடவிடக்கூடாது என்று கடுமையான கட்டளை.

அவர்கள் மோட்டர் இருந்த இடத்தை அடைந்த போது வெற்றி பெருமிதத்தில் நாயகன் தனியனாக நின்றான். அவனுக்கு உள்ளுக்குளே இருந்த பயம் அவனுக்கு மட்டும் தான் தெரியும்.(இப்போ உங்களுக்கும் தெரியும்)

அன்றைக்கு ஏறியது நாயகனுக்கு காத்து. அந்த சம்பவம் பானு அண்ணாவரை போய், தலைவர் வரை போய்விட்டது. "தனியாளாக மோட்டரை காத்தவனை நான் பார்க்கணும்" என்றார் தலைவர்.

பிறகு என்ன ஆளையே பிடிக்கமுடியவில்லை. சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை நாயகனுக்கு. முகாமுக்கு வந்து சேகர் அண்ணாவுக்கு தான் முதன் முதலில் சொன்னான்.

"சேகர் அண்ணா நான் அண்ணையை பார்க்க போறேன். வர சொல்லி இருக்கிறார்" என்றான் வாயெல்லாம் பல்லாக. எல்லாம் உங்களால வந்தது அண்ணா, நீங்க மட்டும் என்னை சண்டைக்கு அனுப்பி இருக்காவிட்டால் நான் அண்ணையை பார்த்திருக்க முடியுமோ தெரியாது என்று சேகர் அண்ணைக்கு ஐஸ் வைச்சான்.

இரண்டு ஒரு நாளில் அண்ணையை பார்த்து அவருடன் புகைப்படம் எடுத்துகொண்டு மீண்டும் முகாம் வந்தான். அண்ணையுடன் சாப்பிட்டது, படம் எடுத்தது என்று எல்லாருக்கும் இரவு இரவாக வகுப்பெடுத்தான். உற்ற நண்பன் ராணிமைந்தனும் அவன் மகிழ்ச்சியில் பங்கெடுத்தான்.

"மச்சான் அண்ணையிடம் என்னடா கேட்டணீ" என்றான் ராணிமைந்தன் ஆவலுடன்.

"அது ஒண்டும் இல்லை மச்சான். அண்ணே எங்களுக்கு தமிழீழம் கிடைச்சால், நீங்க தானே ஜனாதிபதி, என்னை உங்கட கால்நடை அமைச்சராக போடுவீங்களோ என்று கேட்டேன் மச்சான்" என்றான் குறும்பாக நாயகன்.

"அதுக்கு அண்ணை சிரிச்சு போட்டு உனக்கு இப்பவும் கோழி வளர்கிற எண்ணம் தான் என்றார் நக்கலாக. அந்தாளுக்கு நான் கோழி வளர்த்ததில் இருந்து எல்லாம் தெரியும் மச்சான்" என்றான் பெருமையாக.

"வேற என்ன மச்சான் சொன்னவர்"

"உங்கட சண்டையை பற்றி சொன்னவங்கள். அது மாதிரி எண்டைக்கும் மண்ணிலையும், எங்கட மக்களை காக்கிற ஆயுதத்திளையும் பற்று வைச்சிருக்கணும் என்றும் சொன்னார்"

"அது மட்டும் இல்லை மச்சான். எனக்கு அண்ணையை சந்திச்ச பிறகு மனசிலே ஒரு தைரியமும், மக்களை காக்கணும் என்ற உத்வேகமும் வந்திருக்கு மச்சான். அவனை ஒருக்காலும் உள்ளே வர விடக்கூடாது" என்று சொன்னவன் தான் நாயகன்.

அண்ணையின் சந்திப்பு முடிந்து ஐந்தாம் நாள்.

பண்டிவிரிச்சானில் முன்னேறிவந்த ராணுவத்துடன் தீரமாக சண்டையிட்டு கப்டன் நாயகனாக..ராணிமைந்தனின் அறையில் படமாக..

நீங்காத அந்த உயிர் நண்பனின் நினைவுகள்....

உண்மையிலேயே பெயருக்கு ஏற்ற நாயகனாக, ராணிமைந்தனின் மனசில் மட்டுமல்ல.. உங்கள் மனசிலும் என்றும் வாழ்வான்.

(தொடரும்)

பாகம் ஏழு இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பானு அண்ணா எனக்கு மிகவும் பிடித்த தளபதி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பாகம் ஏழு

சூரியகாட்டின் எல்லையோரம் அது.

வற்றாபளை சந்தியில் இருந்து முன்னேறிவந்த ராணுவத்தை தடுத்து நிறுத்த புலிகளால் அமைக்கபடிருந்த காவலரண்கள் அவை.

நந்திகடலோரம் மாலை மயங்கும் அந்தி அழகை கூட ரசிக்க மனமில்லாமல் காவலிருந்தார்கள் அவர்கள்.

முன்னால் நீண்ட புலிகளின் விமானபடை ஓடுபாதை. அதற்கு அப்பால் இருந்த காட்டுக்குள் அரக்கர்கள் கூட்டமா படையெடுத்து வந்து நிலையெடுத்து இருக்கிறது.

நான்கு நாட்களாக அந்த அரக்கர் படை எடுத்த முயற்சிகள் எல்லாம் இவர்களின் தீரமான சண்டைகளால் முறியடிக்கபட்ட கோபத்தில் , கடுமையாக திட்டம் தீட்டி கொண்டிருந்தது எதிரிப்படை.

புதுக்குடியிருப்பின் முக்கியத்துவம் கருதி, எதிரிக்கு விட்டு கொடுக்காமல் களமாட, முக்கிய பணிகளில் இருந்த போராளிகள் கூட குறுகிய பயிற்சியுடன் களமிறக்கபடிருந்தார்கள்.

இவர்களுக்கு வலதுபுறம் நிதிதுறையும், இடதுபுறம் கடற்புலிகளும் களமாடி கொண்டிருந்தார்கள். ஐம்பது மீற்றருக்கு ஒரு அரண் இருந்தாலும் இரண்டுக்கு ஒரு அரணில் தான் போராளிகள் இருந்தார்கள், மற்றவை எல்லாம் டம்மியாகத்தான் (போலியான) இருந்தன. அவ்வளவு ஆட்பற்றாக்குறை.

பளை, கிளிநொச்சி முதல் அம்பகாமம், விசுவமடு,உடையார்கட்டின் மேற்குபுறம், தேவிபுரம், ஒட்டிசுட்டான், சூரியகாடு, வட்டக்கண்டல் என நீண்டு இருந்த அவ்வளவு எல்லை கூட்டிலும் ஆட்களை நிறுத்த புலிகளும் என்ன தான் செய்வார்கள்.

அந்த முறியடிப்புக்காக அழைக்கப்பட்ட வீரர்களில் ஒருவனாக ராணிமைந்தன் நிலை நிறுத்தபடிருந்தான். பேனை பிடித்த கை முதன் முதலாக தானியக்க ஆயுதத்துடன்.

பதினைந்து நாட்கள் தான் பயிற்சி கொடுத்திருப்பார்கள்.

இன்னுமே சரியான குறி வைப்பதில் சிரமம், ஆயுத துப்பரவாக்களில் சிரமம், இப்படியான கள அனுபவம் கொஞ்சம் கூட இல்லாமல் ராணிமைந்தன் கொஞ்சம் சிரமபட்டுதான் போனான்.

ஒரு அரணில் இரண்டு பெண் போராளிகளுக்கு ஒரு ஆண் போராளி என்ற ரீதியில் இவர்களது பிரிவில் விடபட்டிருந்தார்கள்.

அங்கு சந்தித்தவள் தான் கலையரசி. அரணுக்கு காவலுக்கு வந்த முதல் நாளே ராணிமைந்தனுக்கு அவளின் தங்கையை ஞாபகபடுத்தும் உருவமாக திகழ்ந்தவள் கலையரசி. அவளுக்கும் இவன் ஒரு உடன்பிறவா சகோதரனாகவே தோன்றினான். அவர்களிடையே அப்படி ஒரு பாசபிணைப்பு.

வரும் வழங்கல்களை, மீள் உருவாக்கம் செய்து ருசியாக்குவதில் கலையரசிக்கு நிகர் யாரும் இல்லை. பழைய இடியப்பம், பழைய சோறு, கருவாடு, முறுக்கு துண்டுகள் என இவளின் மீள் உருவாக்க உணவுகளின் ருசிக்கு ராணிமைந்தனும் ஒரு அடிமை.

வீட்டை பற்றி நினைக்க எதிரி அவகாசம் கொடுக்காவிட்டாலும், அவனுக்கு வரும் வீட்டு நினைப்பை ஆற்றுப்படுத்தவல்ல ஆளுமை கலையரசிக்கு இருந்தது.

அன்றும் அப்படி தான்.

முதல் நாள் இரவு சாப்பிட்ட மீள் உருவாக்க வழங்கலின் கோளாறு காரணமாக, ராணிமைந்தனுக்கு வயிறு அவ்வளவு சரி இல்லை. அடிக்கடி வயிற்றாலை போக தொடங்கியது, எதிரி எதற்குமே அவகாசம் கொடுக்காமல், அவனிடம் இருக்கும் அவ்வளவு ஆயுதங்களையும் பயன்படுத்தி கொண்டிருந்தான்.

இவர்களின் அரணை தகர்க்க மட்டுமே, இரண்டு ஆர்.பி.ஜி, இரண்டு பி.கே, ஒரு சின்னைப்பர், மற்றும் ஏ.கே யுடன் நான்கு பேர் கொண்ட எதிரி அணி, இடைவிடாது தாக்கி கொண்டிருந்தது. பறந்து வரும் சன்னங்கள், அருகில் பெண்களின் நிலை, இவற்றுக்கு நடுவில், வயிற்று கோளாறு ராணிமைந்தனை படாத பாடுபடுத்தியது.

ஏன்ரா இயக்கத்துக்கு வந்தோம் என்று இருந்தது அவனுக்கு, மக்களாவது மண்ணாகட்டியாவது. வீட்டு நினைப்பு வேற. கிளிநொச்சியை இராணுவம் பிடிச்சு வட்டக்கச்சி வரை வந்திடானாம் என்ற செய்தி வேற இடியாக இருந்தது. இனி சண்டை பிடிச்சு என்னத்தை செய்யுறது என்ற நினைப்பு வேற.

ஓடிவிடலாம் முடிவெடுத்தான் ராணிமைந்தன்.

அலைபேசியில், பின்னணி நிலையில் இருந்த கொம்பனி தலைவருக்கு தொடர்பெடுத்தான்.

"கிலோ மக், கிலோ மக், அல்பா சேரா"

"சொல்லுங்க அல்பா சேரா"

" எனக்கு வயிற்று சிக்கல் , உடம்பிலே ஆயுதம் தூக்கி சண்டை பிடிக்க கூட வலு இல்லை, என்னை பின்னுக்கு எடுக்க முடியுமா"

"விளங்குது அல்பா சேரா, இண்டைக்கு கஷ்டம், ஆளை மாத்தி விடனும் இரவு மட்டும் தாக்கு பிடியுங்கள், நாளைக்கு மாத்திறம்"

"நன்றி கிலோ மக் "

"நன்றி அவுட்"

இரவுக்கு எப்படிதான் தாக்கு பிடிக்கபோறேனோ என்று தலை வெடிக்க யோசித்தான் ராணிமைந்தன்.

கலையரசி தான் ஆறுதலாக இருந்தாள்.

" ராணி அண்ணா, ஒன்றுக்கும் யோசிக்காதேங்கோ, நாளைக்கு எப்படியும் உங்களை மாத்தி பின்னுக்கு விடுவினம்" .

"கலை சொல்லுறேன் என்று குறை நினைக்காதே. இந்த முறை பின்னுக்கு போனால் மெடிக்சிலே விட்டால், நான் நூறு மீற்றர்.( ஓடப்போறேன் என்றதுக்கு போராளிகள் மத்தியில் இருந்த பரி பாசை அது ). எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு"

"ஒரு மனுஷனுக்கு ஏலாமல் வரும்போது தான் பாசங்களின் நினைப்பு கூட வரும். எனகேண்டால் இந்த சண்டையில நாங்கள் வெல்லுவம் என்ற நம்பிக்கை இல்லை. அம்மாக்கள் எங்கே இடம்பெயர்ந்து இருகினமோ தெரியலை. அவையோட போய் இருக்க போறேன்."

"இவ்வளவு உன்னோட பழகிட்டு உனக்கு சொல்லாமல் போக கூடாது என்று தான் உனக்கு சொல்லுறேன். யாருக்கும் சொல்லி போடாதே"

"நிச்சயமா அண்ணா சொல்ல மாட்டேன். அம்மாவை கண்டால் நானும் கேட்டேன் என்று சொல்லு. உனக்கு இங்கயும் ஒரு தங்கச்சி இருக்கிறா என்று சொல்லு".

அன்று இரவு முழுவதும், புலிகள் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் சுட்டுகொண்டிருந்த இராணுவ சன்னங்களின் வெடியோசை, நாளை அம்மாவை காண போகிறேன் என்ற சந்தோசத்துக்கு கேட்டதாகவே தோன்றியது ராணிமைந்தனுக்கு.

எப்படா விடியும் என்றிருந்தது ராணிமைந்தனுக்கு.

உடுப்புகள், நாளேடுகள் அடுக்கிவைத்து விட்டு காத்திருந்தவனை எழுப்பியது எதிரியின் சன்னங்கள் தான். இண்டைக்கு அம்மாவை பார்க்க போறேன் என்று அவனுக்கும் தெரிஞ்சிட்டு போல.

காலை பாதினொரு மணிக்கு தான் மாற்று ஆளணி வந்து சேர்ந்தது.

ராணிமைந்தன் மாற்றபட்டு பின்களத்துக்கு வரவழைக்கபட்டான். கலையரசியை பிரிந்தது என்னவோ போலிருந்தது ராணிக்கு. இனி எப்போ பார்க்க போறேனோ..? என்ற கவலை மனசை வாட்டினாலும் அம்மாவை பார்க்க போறேன் என்ற சந்தோசம் எல்லாவற்றையும் வென்றது.

பின்களத்தில் இருந்து மருத்துவ ஓய்விற்காக மூன்று நாட்கள் மெடிக்ஸ் அனுப்பபட்டான் ராணிமைந்தன்.

எப்படியாவது அங்கிருந்து ஓடி அம்மாவிடம் போய்விட வேண்டும். இதை தவிர அவனிடம் வேற எந்த எண்ணமுமே இல்லை.

மூன்றாம் நாளே ஓட வேண்டும். திட்டமிட்டான் ராணிமைந்தன்.

அடுத்தநாள் அவன் திட்டத்தில் இடி விழப்போவது தெரியாமல் அன்று இரவு நிம்மதியாக படுத்துறங்கினான். வெடிச்சத்தம் கேட்காத அந்த இரவு. மறுநாள் ராணிமைந்தன் கனவில் இடிவிழபோகும் அந்த இரவு. மெல்ல கரைந்து கொண்டிருந்தது.

(தொடரும்)

பாகம் எட்டு இங்கே அழுத்துங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் adminApril 26, 2024 யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.     https://globaltamilnews.net/2024/202016/
    • வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியாக விற்ற யாழ்.வாசி விளக்கமறியலில் adminApril 26, 2024   வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார். அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை  நபர் ஒருவருக்கு விற்பனை செய்ததுடன் , மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக கொடுத்து , அதனை மீள அறுதியாக பெற்றுள்ளார். இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து , காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை , மன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.   https://globaltamilnews.net/2024/202012/  
    • காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும். இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது. ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.     http://www.samakalam.com/காணி-தருவதாக-யாராவது-பணம/  
    • ”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்” பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம். ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும்இ விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் பாராளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம். காத்தான்குடியில் பள்ளியொன்றினுள் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக தமிழ்வின் என்ற நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது. அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004இ 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது. 2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004இ 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார். பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004இல் ‘இமானிய நெஞ்சங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்;. இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார். மேலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர். கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார். இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன். 2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர். இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன்இ தப்பிராஜா வசந்தராஜா கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் ‘கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த’ பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை. 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த பாராளுமன்றத்தினுள்ளும் உள்ளனர். இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13ஆம் திகதி கண்கள் வாய் கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார். அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார். சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார். இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர். டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது. அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர். இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம். டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார். லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது. அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது. 2008இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர். அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார். அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்துவிட்டனர். 2019இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம். அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்துவிட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன். அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாபதியிடம் கோருவதுஇ இந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். 2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம். அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும். அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள். -(     http://www.samakalam.com/பிள்ளையானை-கைது-செய்து-வ/
    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.