Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

15 வருடங்களின் முன் நான் எழுதி பிரசுரமான ஒரு கவிதை

Featured Replies

வேற ஒன்றை தேடும் போது இன்று நான் 1996 இல் 22 வயதில் எழுதிய ஒரு கவிதையை Google ஆண்டவர் கொண்டு வந்து காட்டினார்.

poemg.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் கவிதை, நிழலி!

உங்களின் ஏக்கமும், ஆதங்கமும் மிகவும் உறுதியாக, அந்த வயதிலும் ( :D) நன்றாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது!>>>

22 வயதிலேயே ஆற்றல் உள்ளவராக இருந்துள்ளீர்கள் நிழலி. தொடர்ந்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் நிழலி.

அந்தக்கவிதையை இப்போது காணும்போது ஏற்படும் மகிழ்வை உணர்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

கூகிளாண்டவரிடம் கவிதை பத்திரமாக இருந்ததால்...

கவிதையின் வரிகளும், அப்படியே... இருந்திருக்கின்றது.

இல்லாவிட்டால்... அதனை 15 வருடங்களின் பின், ஞாபகமீட்டி எழுதும் போது வரிகளும், அர்த்தமும் மாறி இருக்கலாம்.

நிழலியின், மகிழ்ச்சியில்... நாமும் பங்கு கொள்கின்றோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

கூகிளாண்டவரிடம் கவிதை பத்திரமாக இருந்ததால்...

கவிதையின் வரிகளும், அப்படியே... இருந்திருக்கின்றது.

:)

சரியாச் சொன்னீங்க.. அப்ப எழுதினதுகளை இப்ப வாசிக்கிறப்போ.. நானா.. எழுதினேன்னு.. வியப்பாக இருக்கும். :icon_idea:

தொலைந்த எழுத்துக்கள் மீள்கின்ற சந்தோசம் ஒரு தனி வகை. அது நிழலி அண்ணருக்கும் கிடைச்சிருப்பது மகிழ்ச்சி. :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை

உங்கள் படைப்புக்கு நீண்ட ஆயுள் நிழலி

  • தொடங்கியவர்

பாராட்டிய அனைவருக்கும் நன்றி. நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைத் தொகுப்பின் பெயர் மறந்து போய் கூகுள் ஆண்டவரிடம் முறையிட்டு தேடிக்கொண்டு இருக்கும் போது, அவரது கவிதையுடன் எனது கவிதையும் பிரசுரமான சிற்றிலக்கிய அரசியல் சஞ்சிகையான 'மூன்றாம் மனிதன்' இன் பக்கம் ஒன்றை ஆண்டவர் கொண்டு வந்து காட்டினார். நெடுக்கும் தமிழ்சிறியும் குறிப்பிட்டு சொல்லி இருப்பது போன்று தொலைந்து போன எழுத்தை மீண்டும் காணுவது ஒரு அலாதியான விசயம்.

இந்தக் கவிதையை வாசிக்கும் போது இது எல்லாம் ஒரு கவிதையா என்று மனம் கேள்வி கேட்பதையும் சொல்லத்தான் வேண்டும்

எல்லாம் இருக்க, என் மனிசிக்கு இந்தக் கவிதையை காட்டும் போது அவா சொன்னது...."ம்ம்ம்... நீங்கள் போர்வைக்குள் புகுந்து 22 வயதில் என்ன செய்திருப்பீர்கள் என்று எனக்குத் தான் தெரியும்"

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருக்க, என் மனிசிக்கு இந்தக் கவிதையை காட்டும் போது அவா சொன்னது...."ம்ம்ம்... நீங்கள் போர்வைக்குள் புகுந்து 22 வயதில் என்ன செய்திருப்பீர்கள் என்று எனக்குத் தான் தெரியும்"

:o

  • கருத்துக்கள உறவுகள்

:o

இதுக்கெல்லாம்.... அதிர்ச்சி அடையாதீர்கள் சுபேஸ்.

சாத்திரியார், நிழலி போன்றோரின்.. ஒளிவு, மறைவு இல்லாத எழுத்து வலிமை, எம்மைக் கவர்ந்ததற்க்கும் அதுதான்.... காரணம். :rolleyes::)

பழைய பெட்டியை தூசு தட்டி நினைவுகளை அகழ்ந்து வரும் அனுபவம் சுகமானது.

நிழலியின் எழுத்துக்களில் (படைப்புகளில்) மரணத்தைக் குறித்த உணர்வு ஓங்கியிருக்கும். முன்னைய ஆக்கங்களிலும் அதே தாக்கம்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை திரும்பக் கிடைத்ததற்கு கூகிள் ஆண்டவருக்கு நன்றி. இன்னும் சில மீளவும் வாய்ப்புண்டுதானே!

  • கருத்துக்கள உறவுகள்

பழைய உங்கள் கவிதையை இரை மீட்டியதற்கு நன்றி. நிழலி, ஏன் இப்போ கவிதை எழுதுவதில்லை?

தங்களின் கவிதை அருமை நிழலி அண்ணா! பழசு என்றாலும் பசுமையாக இருக்குது! :) 7

ஆனால்... இந்தக் கவிதையை எழுதும் போது ..... தங்களுக்கு, கவிதையின் வடிவமைப்பு, கவிதையென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் ஏதாவது மனதளவில் இருந்தனவா? தங்களின் மனநிலை அந்தக் கவிதையினை எழுதும்போது எப்படி இருந்தது?

தற்பொழுது... (கவிதை என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றவாறு நவீனக் கவிதைகள் முளைக்கும் தற்காலத்தில்) ஒரு கவிதையினை எழுதும்போது எப்படியான மனநிலை தங்களிடம் இருக்கின்றது???

இந்த 15 வருடங்கள் என்பது, கவிதை மற்றும் தங்களின் எழுத்துக்களில்.... எவ்விதமான மாற்றங்களைக் ( முற்றிலும் அரசியல் மாற்றங்கள் தவிர்த்து ) கொண்டுவந்திருக்கின்றது என ..... சுருக்கமாக ஒரு சிறு குறிப்பினை எழுதினால் நன்றாய் இருக்கும். முடிந்தால் தயவுசெய்து எழுதுங்கள். எங்களுக்கும் அனுபவங்களைப் படித்ததாய் இருக்கும்.

நன்றி நிழலி அண்ணா! :)

  • கருத்துக்கள உறவுகள்

பழைய உங்கள் கவிதையை இரை மீட்டியதற்கு நன்றி. நிழலி, ஏன் இப்போ கவிதை எழுதுவதில்லை?

முந்தி அவருக்கு நிறைய நேரமிருந்தது கவிதை எழுதினார் இப்ப அவருக்கு மனிசியோடும்,பிள்ளைகளோடுமே நேரம் போகிறது பிறகு எப்படி கவிதை எழுத நேரமிருக்கும் :lol: ...நிழலி உங்கள் கவிதையை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லை தொடர்ந்து புதிதாய் கவிதை எழுதுங்கள்

  • தொடங்கியவர்

தங்களின் கவிதை அருமை நிழலி அண்ணா! பழசு என்றாலும் பசுமையாக இருக்குது! :) 7

ஆனால்... இந்தக் கவிதையை எழுதும் போது ..... தங்களுக்கு, கவிதையின் வடிவமைப்பு, கவிதையென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைகள் ஏதாவது மனதளவில் இருந்தனவா? தங்களின் மனநிலை அந்தக் கவிதையினை எழுதும்போது எப்படி இருந்தது?

தற்பொழுது... (கவிதை என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றவாறு நவீனக் கவிதைகள் முளைக்கும் தற்காலத்தில்) ஒரு கவிதையினை எழுதும்போது எப்படியான மனநிலை தங்களிடம் இருக்கின்றது???

இந்த 15 வருடங்கள் என்பது, கவிதை மற்றும் தங்களின் எழுத்துக்களில்.... எவ்விதமான மாற்றங்களைக் ( முற்றிலும் அரசியல் மாற்றங்கள் தவிர்த்து ) கொண்டுவந்திருக்கின்றது என ..... சுருக்கமாக ஒரு சிறு குறிப்பினை எழுதினால் நன்றாய் இருக்கும். முடிந்தால் தயவுசெய்து எழுதுங்கள். எங்களுக்கும் அனுபவங்களைப் படித்ததாய் இருக்கும்.

நன்றி நிழலி அண்ணா! :)

இப்படியான ஆழமான கேள்விகளை ஒரு நல்ல கவிஞரிடம் கேட்பதே சரியாக இருக்கும். சேரனிடமோ அல்லது ஜெயபாலனிடமோ அல்லது தீபச்செல்வனிடமோ கேட்கவேண்டிய கேள்விகளை என்னிடம் போய்க் கேட்கின்றீர்களே

அன்றும் இன்றும் எனக்கு கவிதையின் வடிவமைப்பு பற்றிய எந்த வித பிரக்ஞையும் இருந்ததில்லை. அதன் உள்ளடக்கம் கூட முற்றிலும் என் உணர்வு சார்ந்து மட்டுமே இருக்கும். அந்த நிமிடத்தில் எழும் 'கவிதையை எழுது' என்ற வெடிப்பு மட்டுமே கவிதையை எழுத தூண்டுகின்றது.

இந்தக் கவிதையை மீண்டும் கண்ட பின் தான் இப்படி ஒரு கவிதை எழுதி இருக்கின்றேன் என்று தெரியவந்தது. அதனால் அன்று எழுதும் போது என்ன மனநிலையில் இருந்தேன் என்று நினைவில் இல்லை

15 வருடங்களில் எனக்குத் தெரிகின்ற மாற்றம், இந்த இடைவெளியில் அதிகம் வாசித்துள்ளேன் என்பதே. அதன் பாதிப்பு இப்ப எழுதும் கவிதைகளில் வருகின்றது என நினைக்கின்றேன்.

...நிழலி உங்கள் கவிதையை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லை தொடர்ந்து புதிதாய் கவிதை எழுதுங்கள்

இது கொஞ்சம் ஓவர் ரதி.... கவிதைகளை ரசிக்கும் எவருக்கும் எவரது கவிதைகளையும் ரசிக்கும் தகுதி இருக்கின்றது.

  • தொடங்கியவர்

பழைய உங்கள் கவிதையை இரை மீட்டியதற்கு நன்றி. நிழலி, ஏன் இப்போ கவிதை எழுதுவதில்லை?

முள்ளிவாய்க்காலின் பின்பு நான் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை வெறும் 4 தான். இந்த 4 கவிதைகளும் தான் நாட்டு அரசியல் பற்றிய உணர்வு கொஞ்சமும் கலக்காமல் எழுதிய கவிதைகள் (நாட்டு அரசியல் என்று குறிப்பிட்டு எழுதியமைக்கு காரணம் எந்த ஒரு கவிதையிலும், படைப்பிலும் ஏதாவது ஒரு அரசியல் இருக்கும் பெண்ணியம், பாலியல் சுதந்திரம், கடவுள் ஆதரவு மறுப்பு என..).. போராட்ட அரசியல் சார்ந்த விடயங்களே கவிதைகளாக எழுதக் கூடியதாக இருந்தது அல்லது கவிதை எழுதும் வெடிப்பு உணர்வை தந்தது. இப்ப இருக்கும் வெறுமையும் தமிழ் தேசியத்துக்குள் இருக்கும் துரோக அரசியலும் கவிதைக்கு பதிலாக படு தூசனம் நிறைந்த வார்த்தைகளைத் தான் தருகின்றது

இப்படியான ஆழமான கேள்விகளை ஒரு நல்ல கவிஞரிடம் கேட்பதே சரியாக இருக்கும். சேரனிடமோ அல்லது ஜெயபாலனிடமோ அல்லது தீபச்செல்வனிடமோ கேட்கவேண்டிய கேள்விகளை என்னிடம் போய்க் கேட்கின்றீர்களே

அன்றும் இன்றும் எனக்கு கவிதையின் வடிவமைப்பு பற்றிய எந்த வித பிரக்ஞையும் இருந்ததில்லை. அதன் உள்ளடக்கம் கூட முற்றிலும் என் உணர்வு சார்ந்து மட்டுமே இருக்கும். அந்த நிமிடத்தில் எழும் 'கவிதையை எழுது' என்ற வெடிப்பு மட்டுமே கவிதையை எழுத தூண்டுகின்றது.

இந்தக் கவிதையை மீண்டும் கண்ட பின் தான் இப்படி ஒரு கவிதை எழுதி இருக்கின்றேன் என்று தெரியவந்தது. அதனால் அன்று எழுதும் போது என்ன மனநிலையில் இருந்தேன் என்று நினைவில் இல்லை

15 வருடங்களில் எனக்குத் தெரிகின்ற மாற்றம், இந்த இடைவெளியில் அதிகம் வாசித்துள்ளேன் என்பதே. அதன் பாதிப்பு இப்ப எழுதும் கவிதைகளில் வருகின்றது என நினைக்கின்றேன்.

வாசிப்பு என்பது எழுத்துக்களை மேம்படுத்தும் என்பது உண்மைதான் அண்ணா! ஒவ்வொரு எழுத்தாளருக்கும் உள்ளே பல அனுபவ முதிர்ச்சிகள் இருக்கும். தங்களது அடுத்த பசுமைக் கவிதையையும் படித்தேன். மிக அருமையான கவிதைக் கோர்ப்பு. காலங்கடந்தும் நிலைத்துநிற்கும் கவிதை.

மனநிலை, சூழ்நிலை மாற்றங்கள் எம் எழுத்துக்களையும் மாற்றுகின்றன.

இப்பொழுதும் தங்கள் புதுக் கவிதைகளை எதிர்பார்க்கின்றோம்!

நன்றி நிழலி அண்ணா! :)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நீங்கள் 96 இல் இக்கவிதையை எழுதி இருக்கிறீர்கள்..

நான் அப்போதுதான் கவிதையே எழுத ஆரம்பித்தேன்...

இந்தக்கவிதையைப் பார்க்கும்போது இப்போது உங்கள் வளர்ச்சி எங்கேயோ போயிருக்கவேண்டும் ஆனால் போகவில்லை என்ன காரணம்? சோம்பேறித்தனம் கூடிவிட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலின் பின்பு நான் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை வெறும் 4 தான். இந்த 4 கவிதைகளும் தான் நாட்டு அரசியல் பற்றிய உணர்வு கொஞ்சமும் கலக்காமல் எழுதிய கவிதைகள் (நாட்டு அரசியல் என்று குறிப்பிட்டு எழுதியமைக்கு காரணம் எந்த ஒரு கவிதையிலும், படைப்பிலும் ஏதாவது ஒரு அரசியல் இருக்கும் பெண்ணியம், பாலியல் சுதந்திரம், கடவுள் ஆதரவு மறுப்பு என..).. போராட்ட அரசியல் சார்ந்த விடயங்களே கவிதைகளாக எழுதக் கூடியதாக இருந்தது அல்லது கவிதை எழுதும் வெடிப்பு உணர்வை தந்தது. இப்ப இருக்கும் வெறுமையும் தமிழ் தேசியத்துக்குள் இருக்கும் துரோக அரசியலும் கவிதைக்கு பதிலாக படு தூசனம் நிறைந்த வார்த்தைகளைத் தான் தருகின்றது

ஆத்திரம் நியாயமானதே.ஆயினும் காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப கவிதைகளை எழுத வேண்டுகிறேன்.சகாறா சொன்னதையும் கவனத்தில் எடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.