Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களது குர‌ல் கம்பீர‌மாக இருக்க வேண்டுமா?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91

இனிய சொல்லு எண்டால் என்ன ? ஒருத்தர் கதைக்கிற கதை , வஞ்கமில்லாததாயும் , உண்மையானதாகவும் , அன்பாய் , பண்பாய் இருந்தால் , அதுதான் இனியசொல்லு எண்டு வடிவாய் ஐயன் விளக்கம் தாறார்

இது தான் எனது கருத்து ரதி இதற்குப் பால்பேதம் இல்லை உங்கள் தம்பியின் சொல்லைக் கேளாதீர்கள் :):):) .

நன்றி கோமகன்

என்ன கோமகன் அண்ணா கஷ்டபட்டு உலை வைச்சு பொங்கிவார நேரம்.

பானையை உடைக்கிறமாதிரி பேசுறீங்கள்.

வாங்கோ வாங்கோ .......... வெட்க படாமல் வந்து சாப்பிடுங்கோ.........

எதற்காக மாப்பிளை பிடிப்பது...........

என்று எழுதினால்தானே எப்படி பேச வேண்டும் என்பதை பற்றி சிந்திக்கலாம்?

சென்சார்...நல்லா வாயில்ல வருது ^_^

எதற்கும் என்னோடு தொலைபேசியில் 0033611149470 ஒருதடைவை உரையாடுங்கள் உங்கள் குரலை கேட்டபின்னர்தான் உங்கள் குரல் கம்பீரமானதா இல்லையா என்பதை முடிவு செய்யலாம். :lol: :lol:

நீங்கள் எனது குர‌ல் கம்பீர‌மா/இல்லையா என முடிவு செய்து என்னத்தைக் காணப் போகிறீர்கள் :D :D :D

அமைதியாக பேசும் பெண்களும் ஆண்களை திட்டலாம் என தம்பியிடம்சொல்லவும்..கம்பீரமான குரலிலும் அன்பாக பேசலாம்...அமைதியான குரலில் அதட்டி உருட்டி,முகத்தில் அடித்தமாதிரி பேசலாம்.....மொத்ததில் குரலில் ஒன்றுமில்லை வார்த்தைகளில் தான் .....

நன்றி புத்தன்...நான் தம்பியிட‌ம் சொன்னேன் அவன் சொல்றான் நான் கதைக்கேக்குள்ள அதட்டுற மாதிரி இருக்குதாம்[உ+ம்] சாப்பிட்டீங்களா என கேட்டால் அதில் அன்பிற்கு பதில் அதட்டல் தெரியுதாம் அதனால் இந்த பெட்டை சரியான ராங்கிக்காரி என நினைத்து ஒருத்தரும் கட்ட வர‌ மாட்டாங்களாம்...தம்பி சொன்னதைத் தான் என் அன்ரியும் சொல்கிறார்.

  • Replies 59
  • Views 7.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்கும் என்னோடு தொலைபேசியில் 0033611149470 ஒருதடைவை உரையாடுங்கள் உங்கள் குரலை கேட்டபின்னர்தான் உங்கள் குரல் கம்பீரமானதா இல்லையா என்பதை முடிவு செய்யலாம். :lol: :lol:

என்ன இருந்தாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான்.. :lol::icon_mrgreen:

http://www.youtube.com/watch?v=_7catmLXMwU&feature=related

http://www.youtube.com/watch?v=EyPbDJtRG14

ரதிக்கா ..டோன்ட் வெறி தடித்த குரலுக்கு ..மேலை உசா உதூப் என்ற பாடகி தடித்த குரலை வைத்து கொண்டு மேலை கலக்கிறா பாருங்கோ ..அவ மாதிரி நீங்களும் பேமசாக வரலாம்..டேக் இட் ஈசி ..எதுக்கும் எனக்கும் ஒருக்கால் உங்கடை குரலை காட்டீனீங்கள் என்றால் ..உது பற்றி எனது கருத்தை சொல்ல ஈசியாக இருக்கும்

அட ரதியும் என்னைப் போலவா குரல்வளம் உடையவர்....ஒரு காலத்தில் கவலைப்பட்டிருக்கிறேன் இனிமையான குரல் இல்லையே என்று இப்போதெல்லாம் அந்தக்கவலை துளியும் கிடையாது. என்ன இனிமையான குரல்வளம் இருந்தால் பாட்டுப்படிக்கலாம் மற்றப்படி நத்திங்...

எந்த மடையன் சொன்னது இனிமையான குரல் இருந்தால்தான் பெண்களை திருமணம் செய்வோம் என்று?

*

அறிவுரை எங்களுக்கு மட்டுந் தானோ? கவனத்தில் எடுத்தால் நல்லது சகாறா அக்கா :):):) .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் வடமொழி எழுத்துக்களைப் பயன்படுத்தவில்லையே!!!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன்...நான் தம்பியிட‌ம் சொன்னேன் அவன் சொல்றான் நான் கதைக்கேக்குள்ள அதட்டுற மாதிரி இருக்குதாம்[உ+ம்] சாப்பிட்டீங்களா என கேட்டால் அதில் அன்பிற்கு பதில் அதட்டல் தெரியுதாம் அதனால் இந்த பெட்டை சரியான ராங்கிக்காரி என நினைத்து ஒருத்தரும் கட்ட வர‌ மாட்டாங்களாம்...தம்பி சொன்னதைத் தான் என் அன்ரியும் சொல்கிறார்.

ரதி

இப்படிப்பட்ட குரல்வளத்தைக் கொண்டவர்கள் நியாயங்களைப் பேசும்போது உடனே மற்றவர்கள் உத்தாப்பிக்கிறோம் என்பார்கள். கம்பீரமான குரல் பொதுவாக பெண்களுக்கு எதிரியாகத்தான் எமது சமூகத்தில் கொள்ளப்படுகிறது. ஏனெனில் எமது சமூகம் பெண்களை வெளியுலகில் ஆளுமை மிக்கவர்களாக உலவ விடுவதில்லை அல்லது விரும்புவதில்லை. (இப்ப எல்லாரும் சண்டிக்கட்டுக்கட்டிக் கொண்டு வருவார்கள் நாங்கள் எங்கே பெண்களை விடவில்லை அவர்கள்தான் போகமாட்டார்களாம் என்று சப்பைக் கதைகள் சொல்வார்கள்.) :icon_mrgreen:

இந்தக் குரல் வளம் எங்கு தனித்துவம் பெறுகிறது என்று பார்த்தால் சமூகசேவை, அரசியல் ஆகிய இடங்களில் இவற்றுக்கான மதிப்பே தனி. கம்பீரமான குரல் எப்போதும் தெளிவான பேச்சொலியைக் கொண்டதாக இருக்கும். வெறுமே ஒரு ஆணைக்கல்யாணம் செய்து பிள்ளைகளைப் பெற்று குடும்பத்தோடு உழலவிரும்பும் பெண்ணுக்கு கம்பீரமான குரல் இருந்தும் எந்தவகையிலும் பிரயோசனம் இல்லை அது அவர்களுக்கு சண்டைக்காரிகள், கர்வம் கொண்டவர்கள் என்ற தோற்றப்பாட்டைத்தான் உருவாக்கும் அதற்குக் காரணம் எங்கள் சமூகத்தில் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பல எழுதாத சட்டங்கள் உள்ளன. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சென்சார்...நல்லா வாயில்ல வருது ^_^

ஒருவிடயமாக பேசவந்தபின்பு பேசிகொண்டிருக்கும்போது சென்சார் கன்செர் என்றால் எப்படி?

வாயில் வருவதை துப்பினால்தானே என்ன வருகிறது அது சரியாய் பிழையா என்ற வாதத்திற்கு போகலாம்?

சில பெண்கள் பணத்திற்கும் வசதிக்கும் மாப்ளை பிடிப்பார்.

சிலர் டிகிரி இருந்தால்தான் என்று அடம்பிடிப்பார்.

சிலர் செக்ஸ் என்பதற்கு மட்டும் மணம்முடிப்பார்.

இப்படி தற்போதைய உலக பட்டியல் நீண்டுகொண்டே செல்வதை அன்றாடம் நீங்களும் கேள்விபடுவீர்கள் செய்தியில் வாசிப்பீர்கள்.

மாடுபிடிக்க போறவன்போல் மாட்டுதனமாக

இலகுவாக எப்படி மாப்பிளை பிடிப்பது என்று நீங்கள்தானே கேட்டீர்கள்??

மாடு பால்கறக்கவா ? உளவு செய்யவா? இனபெருக்கம் செய்யவா? என்று கேட்கவந்தால் வாயில வருகிறது என்றால்? புரியவில்லை.

கேள்விகளை தெளிவாக்கினாலே பதில்களையும் தெளிவாக்கமுடியும்.

ஆரம்ப கேள்வியும் தெளிவின்றி உள்ளது அதனால் இந்த திரியே திசைமாறி போகிறது.

உங்கள் குரல் கொஞ்சம் கடினமானதா?

உங்களுடைய வார்த்தைகள் கடினமானதா?

உங்களுடைய தம்பி உங்களுடைய பேச்சை மாற்றவேண்டும் என்று சொல்வதாக சொல்லி உள்ளீர்கள்........... அகவே உங்களுடைய குரலில் மாற்றம் செய்யமுடியாது என்பது உங்கள் தம்பிக்கும் அண்டிக்கும் நன்கு தெரியும். ஆக பேச்சில் எதோ குறையை அவர்கள் கண்டு அதை நிவர்த்தி செய்யும்படி கேட்கிறார்கள் என்பதே அதன் பொருள்.

நீங்கள் எதற்கு மாப்பிளை பிடிக்க போறீர்கள் என்றும் உங்களுடைய பிரச்சனை குரல் சார்ந்ததா (ஒலி) சொல்லாடல் சார்ந்ததா? என்றும் தெளிவாக எழுதினாலே . என்னிடம் இருந்து இல்லாவிட்டாலும் குமாரசாமி அண்ணா போன்ற பெரியவர்களிடம் இருந்தாவது உங்கள் வாழ்க்கைக்கு உதவ கூடிய ஒரு அறிவுரையை பெறமுடியும்.

இங்கு நான் வடமொழி எழுத்துக்களைப் பயன்படுத்தவில்லையே!!!

நான் சொல்வது திசை மொழி அரசியல் அல்ல . முடியுமான அளவு கருத்துக் களத்தில் தமிழில் எழுதினால் நல்லது :):):) .

  • கருத்துக்கள உறவுகள்

அட...! கோமகன் நீங்கள் உங்களை மாற்றிகொண்டு விட்டீர்களா? ஆச்சரியமாக இருக்கிறது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி

இப்படிப்பட்ட குரல்வளத்தைக் கொண்டவர்கள் நியாயங்களைப் பேசும்போது உடனே மற்றவர்கள் உத்தாப்பிக்கிறோம் என்பார்கள். கம்பீரமான குரல் பொதுவாக பெண்களுக்கு எதிரியாகத்தான் எமது சமூகத்தில் கொள்ளப்படுகிறது. ஏனெனில் எமது சமூகம் பெண்களை வெளியுலகில் ஆளுமை மிக்கவர்களாக உலவ விடுவதில்லை அல்லது விரும்புவதில்லை. (இப்ப எல்லாரும் சண்டிக்கட்டுக்கட்டிக் கொண்டு வருவார்கள் நாங்கள் எங்கே பெண்களை விடவில்லை அவர்கள்தான் போகமாட்டார்களாம் என்று சப்பைக் கதைகள் சொல்வார்கள்.) :icon_mrgreen:

இந்தக் குரல் வளம் எங்கு தனித்துவம் பெறுகிறது என்று பார்த்தால் சமூகசேவை, அரசியல் ஆகிய இடங்களில் இவற்றுக்கான மதிப்பே தனி. கம்பீரமான குரல் எப்போதும் தெளிவான பேச்சொலியைக் கொண்டதாக இருக்கும். வெறுமே ஒரு ஆணைக்கல்யாணம் செய்து பிள்ளைகளைப் பெற்று குடும்பத்தோடு உழலவிரும்பும் பெண்ணுக்கு கம்பீரமான குரல் இருந்தும் எந்தவகையிலும் பிரயோசனம் இல்லை அது அவர்களுக்கு சண்டைக்காரிகள், கர்வம் கொண்டவர்கள் என்ற தோற்றப்பாட்டைத்தான் உருவாக்கும் அதற்குக் காரணம் எங்கள் சமூகத்தில் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பல எழுதாத சட்டங்கள் உள்ளன. :rolleyes:

எனக்கு இப்படியான பெண்களைதான் பிடிக்கும்.

மேல் முன்னிரண்டு பல்லும் கொஞ்சம் பெரிதாக இவர்களிடம் இருப்பதை கவனித்து வருகிறேன்.

இவர்கள் தனித்துவமாக முடிவெடுத்து உச்சத்திற்கு செல்லகூடியவர்களாக இருக்கிறார்கள்.

மற்றவரில் தங்கியிருப்பது இவர்களுக்கு அறவே பிடிக்காது. ஒருவரை இவர்களுக்கு பிடித்துவிட்டால் உண்மையாகவே காதலித்து உண்மையாகவே இருப்பார்கள் மற்றவரும் அப்படியே இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறையவே இருக்கும்.

தூய்மையாக வாழவிரும்புவார்கள்.

என்னுடைய மநேஜ்ஜரும் இப்படி இருப்பதாலோ என்னவோ இப்படியானவர்கள் மேலே ஒரு ஈர்ப்பு வருகிறது.

அனேக கொம்பனிகளின் முக்கிய பதவிகளில் இருக்கும் பலரும் இப்படியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

சும்மா அனாவசியம் இன்றி எதையும் அலட்டமாட்டார்கள். பிடித்தவர்களுடன் கூடுதலாக பேசுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி

பிரச்சனை இது தான் எனது குரல் கம்பீரமாக இருக்குதாம்,மற்றவர்களோடு கதைக்கும் போது குறிப்பாக பெடியங்களோடு கதைக்கும் போது நான் அதட்டி,உருட்டி,முகத்தில் அடிச்ச மாதிரி சுருக்கமாக சொல்லப் போனால் யாழில் எழுதிற மாதிரி கதைக்கிறனாம்.....அண்ணாமாரே,தம்பிமாரே,அக்காமாரே,தங்கைமாரே எனக்காக எழுதாமல் உங்கள் உண்மையான கருத்தை தயவு செய்து எழுதி என்னைத் தெளிவு படுத்துங்கள்...நன்றி

என்று உதவி கேட்டதுநீங்கள் எனவே எதையும் சரியாக ஆராயாமல் நான் கருத்து கூறுவதில்லை எனவேதான் உங்கள் குரல் உண்மையாக எப்படி இருக்கும் என்று அறிந்து உதவி செய்யலாமென நினைத்தே தொலைபேசியடிக்க சொன்னேன். அதற்கு

நீங்கள் எனது குர‌ல் கம்பீர‌மா/இல்லையா என முடிவு செய்து என்னத்தைக் காணப் போகிறீர்கள் :D :D :D

திரும்ப இப்படி கேட்டால் எப்படி உதவி செய்வதாம்.. வருத்தம் எண்டு வைத்தியரிடம் போய்விட்டு வைத்தியர் நாடிபிடித்துப் பார்க்க கையை நீட்டு என்றால் என்னுடைய கையை பிடித்து என்ன செய்யப் போகின்றாய் என்பது மாதிரி இருக்கிறது உங்கள் கேள்வி. நேரடியாக தொலைபேசியில் பேச தயக்கமாக இருந்தால் ஒலிப்திவுகளும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் என்ன அது உங்கள் குரல்தானா என்று நிறுவுவதற்கு மேலும் ஆராச்சிகள் செய்யவேண்டிவரும்..உங்களிற்கென்று உதவுவதற்காக ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதீர்கள் ரதி..ஏமாற்றிவிடாதீர்கள். :lol: :lol:

மேல் முன்னிரண்டு பல்லும் கொஞ்சம் பெரிதாக இவர்களிடம் இருப்பதை கவனித்து வருகிறேன்.

இவர்கள் தனித்துவமாக முடிவெடுத்து உச்சத்திற்கு செல்லகூடியவர்களாக இருக்கிறார்கள்.

மற்றவரில் தங்கியிருப்பது இவர்களுக்கு அறவே பிடிக்காது. ஒருவரை இவர்களுக்கு பிடித்துவிட்டால் உண்மையாகவே காதலித்து உண்மையாகவே இருப்பார்கள் மற்றவரும் அப்படியே இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறையவே இருக்கும்.

தூய்மையாக வாழவிரும்புவார்கள்.

என்னுடைய மநேஜ்ஜரும் இப்படி இருப்பதாலோ என்னவோ இப்படியானவர்கள் மேலே ஒரு ஈர்ப்பு வருகிறது.

அனேக கொம்பனிகளின் முக்கிய பதவிகளில் இருக்கும் பலரும் இப்படியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

சும்மா அனாவசியம் இன்றி எதையும் அலட்டமாட்டார்கள். பிடித்தவர்களுடன் கூடுதலாக பேசுவார்கள்.

எனது மனேஜரும் இப்படித்தான். கம்பீரமான குரல். ஆளுமையானவர். அதற்காக அடக்கி ஆள்வதும் இல்லை. நேரடியாகப் பேசிப் பழகக் கூடிய பெண்மணி. சுத்துமாத்து இல்லை. அவர் இல்லாவிட்டாலும் அலுவலகம் ஒழுங்காக நடக்கும்.

மற்றும்படி உங்கள் அளவிற்கு முன் பல்லுகளை உன்னிப்பாக அவதானித்து ஆராய்ச்சிகள் செய்ததில்லை. :D

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்படியான பெண்களைதான் பிடிக்கும்.

மேல் முன்னிரண்டு பல்லும் கொஞ்சம் பெரிதாக இவர்களிடம் இருப்பதை கவனித்து வருகிறேன்.

இவர்கள் தனித்துவமாக முடிவெடுத்து உச்சத்திற்கு செல்லகூடியவர்களாக இருக்கிறார்கள்.

மற்றவரில் தங்கியிருப்பது இவர்களுக்கு அறவே பிடிக்காது. ஒருவரை இவர்களுக்கு பிடித்துவிட்டால் உண்மையாகவே காதலித்து உண்மையாகவே இருப்பார்கள் மற்றவரும் அப்படியே இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறையவே இருக்கும்.

தூய்மையாக வாழவிரும்புவார்கள்.

என்னுடைய மநேஜ்ஜரும் இப்படி இருப்பதாலோ என்னவோ இப்படியானவர்கள் மேலே ஒரு ஈர்ப்பு வருகிறது.

அனேக கொம்பனிகளின் முக்கிய பதவிகளில் இருக்கும் பலரும் இப்படியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

சும்மா அனாவசியம் இன்றி எதையும் அலட்டமாட்டார்கள். பிடித்தவர்களுடன் கூடுதலாக பேசுவார்கள்.

மருது என்ன தமிழ் மயங்குது?

மருது பல்லை மட்டுந்தான் கவனிச்சனீங்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி

இப்படிப்பட்ட குரல்வளத்தைக் கொண்டவர்கள் நியாயங்களைப் பேசும்போது உடனே மற்றவர்கள் உத்தாப்பிக்கிறோம் என்பார்கள். கம்பீரமான குரல் பொதுவாக பெண்களுக்கு எதிரியாகத்தான் எமது சமூகத்தில் கொள்ளப்படுகிறது. ஏனெனில் எமது சமூகம் பெண்களை வெளியுலகில் ஆளுமை மிக்கவர்களாக உலவ விடுவதில்லை அல்லது விரும்புவதில்லை. (இப்ப எல்லாரும் சண்டிக்கட்டுக்கட்டிக் கொண்டு வருவார்கள் நாங்கள் எங்கே பெண்களை விடவில்லை அவர்கள்தான் போகமாட்டார்களாம் என்று சப்பைக் கதைகள் சொல்வார்கள்.) :icon_mrgreen:

இந்தக் குரல் வளம் எங்கு தனித்துவம் பெறுகிறது என்று பார்த்தால் சமூகசேவை, அரசியல் ஆகிய இடங்களில் இவற்றுக்கான மதிப்பே தனி. கம்பீரமான குரல் எப்போதும் தெளிவான பேச்சொலியைக் கொண்டதாக இருக்கும். வெறுமே ஒரு ஆணைக்கல்யாணம் செய்து பிள்ளைகளைப் பெற்று குடும்பத்தோடு உழலவிரும்பும் பெண்ணுக்கு கம்பீரமான குரல் இருந்தும் எந்தவகையிலும் பிரயோசனம் இல்லை அது அவர்களுக்கு சண்டைக்காரிகள், கர்வம் கொண்டவர்கள் என்ற தோற்றப்பாட்டைத்தான் உருவாக்கும் அதற்குக் காரணம் எங்கள் சமூகத்தில் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பல எழுதாத சட்டங்கள் உள்ளன. :rolleyes:

சகாறா அக்கா நீங்கள் தான் கற்பூரம் மாதிரி கப்பென்று எனது பிரச்சனையை புரிந்து கொண்டீர்கள்...இது தான்,இதே தான் எனது பிரச்சனை...என்ட தம்பி கூட சொல்றான் இப்படி கதைக்கிற ஆட்கள் எல்லாம் கல்யாணம் கட்டி குடும்பம் நட‌த்த சரி வர‌ மாட்டார்களாம்...நான் என்ன நியாயம் கதைத்தாசாலும் அது நியாயமாக இருந்தாலும் தேவையில்லாமல் விதண்ட வாதம் கதைக்கிறேன் என அன்ரிமார் சொல்லினம்...என்ன உலகமிது?...ஒன்றுமே புரியவில்லை :unsure: ...நீங்கள் எழுதினதை வைத்துப் பார்க்கும் போது நீங்களும் என்னைப் போல தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன்... உங்கள் புரிந்துணர்வான கருத்திற்க நன்றி அக்கா.

கம்பீரம் என்பது சொல்லும் குரலின் கனதியில் இல்லை...சொல்லும் பொருளில் தான் இருக்கு. உலகையே மாற்றிப் போட்ட பல புரட்சியாளர்களின் குரல் மிக மென்மையானவை என்று அறிந்துள்ளேன். சேகுவாரா கூட மென்மையாக உரையாற்றும் ஒருவர் என்று கேட்டுள்ளேன்.

குரலை உயர்த்தி கதைப்பவர்கள் தம் கருத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று நினைக்கின்றேன். ஆணோ பெண்ணோ சொல்ல விரும்பும் விடயத்தை தெளிவாக சொன்னாலே போதும்.

சகாறா சொல்வது போல், தனித்துவமான கம்பீரமான குரல் அரசியலுக்கு தேவை என்றால் தமிழக அரசியல் மேடைப் பேச்சாளர்கள் பெரிய சமூகப் புரட்சியை மக்களிடம் உண்டு பண்ணி இருக்க வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

கம்பீரம் என்பது சொல்லும் குரலின் கனதியில் இல்லை...சொல்லும் பொருளில் தான் இருக்கு. உலகையே மாற்றிப் போட்ட பல புரட்சியாளர்களின் குரல் மிக மென்மையானவை என்று அறிந்துள்ளேன். சேகுவாரா கூட மென்மையாக உரையாற்றும் ஒருவர் என்று கேட்டுள்ளேன்.

குரலை உயர்த்தி கதைப்பவர்கள் தம் கருத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று நினைக்கின்றேன். ஆணோ பெண்ணோ சொல்ல விரும்பும் விடயத்தை தெளிவாக சொன்னாலே போதும்.

சகாறா சொல்வது போல், தனித்துவமான கம்பீரமான குரல் அரசியலுக்கு தேவை என்றால் தமிழக அரசியல் மேடைப் பேச்சாளர்கள் பெரிய சமூகப் புரட்சியை மக்களிடம் உண்டு பண்ணி இருக்க வேண்டும்...

நிழலி இங்கு ரதி எழுதிய விடயத்திற்குத்தான் எனது பதில் அமைந்தது..எனது பதில் எமது சமூகம் சார்ந்தே அமைந்துள்ளது என்பதை கவனத்தில் எடுங்கள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்பீரம் என்பது சொல்லும் குரலின் கனதியில் இல்லை...சொல்லும் பொருளில் தான் இருக்கு. உலகையே மாற்றிப் போட்ட பல புரட்சியாளர்களின் குரல் மிக மென்மையானவை என்று அறிந்துள்ளேன். சேகுவாரா கூட மென்மையாக உரையாற்றும் ஒருவர் என்று கேட்டுள்ளேன்.

குரலை உயர்த்தி கதைப்பவர்கள் தம் கருத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று நினைக்கின்றேன். ஆணோ பெண்ணோ சொல்ல விரும்பும் விடயத்தை தெளிவாக சொன்னாலே போதும்.

சகாறா சொல்வது போல், தனித்துவமான கம்பீரமான குரல் அரசியலுக்கு தேவை என்றால் தமிழக அரசியல் மேடைப் பேச்சாளர்கள் பெரிய சமூகப் புரட்சியை மக்களிடம் உண்டு பண்ணி இருக்க வேண்டும்...

கம்பீரமான குரல் என்பது கத்திக் கதைப்பதில்லை நிழலி...குரல் மென்மையாகத்,அமைதியாகத் தான் இருக்கும் ஆனால் அந்தக் குரலில் ஒரு கண்டிப்பு,அதட்டும் குணம் தெரியும்...குரலைக் கேட்டாலே எல்லோரும் அடங்கிடுவார்கள் :lol:

ரதி

தம்பி உங்கள் நன்மைக்காக அவருக்குத் தெரிந்த அளவில் புத்திமதி சொல்லியிருப்பார்.

பலதையும் பத்தையும் துணிவாக எழுதும் நீங்கள், சொந்த வாழ்வமைப்பதில் தயக்கம் ஏன்?

எல்லாத்திற்கும் மற்றவர்களின் அபிப்பிராயத்தை எதிர்பார்த்தால்.......

(எனது எண்ணங்களுக்கு சுயதணிக்கை செய்து கொண்டு தவிர்த்துக் கொள்கிறேன். :lol: )

மாறனும் (மாற்றனும்) என்றால் எத்தனை பேருக்காக உங்களை மாற்றி கொண்டே இருக்க போறீங்க இப்போது

உங்க தம்பி, பக்கத்து வீட்டு அன்டி வருங்காலத்தில் உங்க கணவன் மாமியார் அதையும் தாண்டி பிள்ளைகள் இப்பிடி எத்தனை பேருக்காக..?.

எது உங்களுக்கு இயல்பா இருக்கோ அப்பிடியே இருங்க....... நீங்க மாறனும் எண்டு நினைச்சாலும் மாற முடியா.... மாறியதாக நடிக்க தான் முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையாக கிடைத்தக் குரலுக்கு, கவலைப்படலாமா?

குரல் இல்லாதவர்களைப் பார்த்து... இதுவாவது கிடைத்ததே.. என்று சந்தோசப் படுங்கள் ரதி.

  • கருத்துக்கள உறவுகள்

எனது புரிந்துனர்வின்படி ..............ரதியின் கம்பீரத்தை அல்ல கனிவுள்ள வார்த்தைப்பிரயோகத்தை தான் ரதியின் தம்பி ...........ரதியிடம் எதிர்பார்க்கிறான் போலும்.....

இன்த அக்காஎழுதறதுகுபதில்போட கொன்சம்யோசனையா வருது பாருன்கோ :rolleyes:இன்சை இப்பிடி அன்கை அப்பிடிஎழுதினாஎன்னபா எல்லாரும் யோகரே?

Posted 04 February 2012 - 12:37 PM

எல்லோரும் பயத்தில தங்கள் காதல் கதையை எழுதேல்ல ஆனால் நான் அப்படி இல்லை எனக்கு பயம் இல்லை அதனால் தைரியமாய் என்ட காதல் கதையை சொல்றேன் கேளுங்கோ;

அப்ப நான் ஊரில படித்துக் கொண்டு இருந்தனான்...அன்டைக்கு நல்ல வெயில் ரீயுச‌னுக்கு நேர‌மாயிற்று என அரக்கப் பரக்க சைக்கிளில் ஓடினேன்...ஒரு றவுண்டபோட்டில்[தமிழ்ச் சொல் தெரியவில்லை] திரும்பும் போது ஒரு கிளி வந்து என்னோட மோதிச்சுது...வடிவெண்டால் வடிவு,அப்படியொரு வடிவு என்ட கண்ணுக்கு அவள் வெள்ளை சீருடையில் தேவதையாகத் தான் தெரிந்தாள்...பிறகென்ன அண்டைய மோதல் காதலாக மாறி எல்லா இட‌மும் [ரீயூச‌னை கட் பண்ணிப் போட்டும்] சுத்தித் திரிந்தோம்...சொல்லப் போனால் நாங்கள் சுத்தாத இட‌மே அந்த ஊரில் இல்லை எனலாம்...ஏ/எல் பரீட்சை எடுக்க வேண்டிய நேரத்தில படிக்காமல் இவளோடு சேர்ந்து ஊரை சுத்திக் கொண்டு,எந் நேர‌மும் இவள் நினைப்பாகவே இருந்ததால் நான் பரீட்சையில் பெயிலாகி விட்டேன் ஆனால் அவளோ என்னோடு சுத்திக் திரிந்தாலும் படிப்பிலும் கண்ணும் கருத்தாக இருந்ததால் பாசாகி யூனியும் கிடைத்தது...அவளோ என்னை விட்டு யூனிக்கு போய் அடுத்த வருட‌மே நான் தனக்கு சரி வர‌ மாட்டேன் எனத் தீர்மானித்து என்னைக் கழட்டி விட்டுட்டாள்...குடிகார‌னாய்,தெருப் பொறுக்கியாய் இருந்த என்னை அம்மா ஒரு மாதிரி கஸ்ட‌ப்பட்டு காணி வித்து வெளிநாடு அனுப்ப இங்கே வந்து கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மாக அவளை மறக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருந்தேன் ஆனால் சுண்ட‌லின் பதிவைப் பார்த்தவும் என் உள்ளக் கிட‌ங்கை கொட்ட வேண்டும் போல இருந்திச்சுது அதான் கொட்டிட்டேன்...இப்பத் தான் மனசு கொஞ்ச‌ம் நிம்மதியாய் இருக்கு நன்றி சுண்ட‌ல்

நான் மேலே எழுதினது எல்லாம் கற்பனை என்டால் யாராவது நம்பவா போறீங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் குரலில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகள் உடல் மொழியின் (body language) ஒரு பகுதி என நினைக்கிறேன். அதனால், சொல்லும் கருத்தை விடவும் சில சமயங்களில் இந்த உடல் மொழிக்கு கேட்பவர் முக்கியத்துவம் கொடுப்பதால் உங்கள் கருத்து எடுபடாமல் போவதும் வரவேற்கப் படுவதும் நடைபெறக் கூடும். இதைத் தான் உங்கள் சகோதரர் சொல்லியிருக்கிறார்-இதில் பால் வேறு பாடு எதுவும் கிடையாது. யாழில் மனவியல் படித்த யாராவது நான் குறிப்பிடும் இந்த விடயத்தை விளங்கப் படுத்தினால் நல்லது:

டாக்டர் எரிக் பேர்ன் என்ற மனோவியல் மருத்துவர் transactional analysis முறை மூலம் மனிதர்களிடையேயான உறவாடல்களை ஆரய்ந்திருக்கிறார். இந்த ஆய்வுகளை மையப் படுத்தி பின்னர் சில சுவாரசியமான கருதுகோள்கள் முன் வைக்கப் பட்டன. எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு வளர்ந்த மனிதன் (adult), பெற்றோர் (parent), மற்றும் குழந்தை (child) என்பன ஒளிந்திருக்கின்றார்கள். இருவர் உரையாடும் போது இந்த மூன்று பேரில் யாருடன் உரையாடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த உரையாடலின் வெற்றி தோல்வி அமையும். உதாரணத்திற்கு: ரதி தம்பியைப் பார்த்து "உனக்கு ஒன்றும் தெரியாது, நான் சொல்வதே சரி, இப்படிச் செய்!" என்று கூறும் போது ரதிக்குள் இருக்கும் "பெற்றோர்" தம்பிக்குள் இருக்கும் "குழந்தையுடன்" அதிகார தோரணையில் உறவாடுதல் நிகழ்கிறது. பெற்றோர் குழந்தை இடையேயான உறவு பல சமயங்களில் அதிகாரம் சார்ந்ததாக இருப்பதால், ரதிக்கும் தம்பிக்கும் இடையே ஒரு உராய்வு நிலை ஏற்படுகிறது. ஆரோக்கியமான உரையாடல் என்பது ரதியின் உள்ளே இருக்கும் வளர்ந்த மனிதன் தம்பியின் உள்ளே இருக்கும் வளர்ந்த மனிதனுடன் சம தகுதியில் இருந்த படி உரையாடுவதாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான்,அகூதா,கு.சா அண்ணா,இ.கலைஞன்.சகாறா அக்கா,நூணாவிலான்,ஆராவமுதன்,தப்பிலி,சஜீவன்,உடையார்,ஜீவா,மதராசி,நிழலி,அபராஜிதன்,தமிழ்சிறி,குண்டன்,சாஸ்திரி,மருதங்கேணி,மற்றும் விரிவான விளக்கம் தந்த ஜஸ்ரினுக்கும் நன்றி

கட்டைக் குரல் பிரச்சனையானது அல்ல. எப்படிக் கதைக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

சில கட்டைக் குரல் பெண்களின் குரல்தான் Husky ஆக இருக்கும்.

எனக்கு கட்டைக் குரல் இல்லை :)

என்று உதவி கேட்டதுநீங்கள் எனவே எதையும் சரியாக ஆராயாமல் நான் கருத்து கூறுவதில்லை எனவேதான் உங்கள் குரல் உண்மையாக எப்படி இருக்கும் என்று அறிந்து உதவி செய்யலாமென நினைத்தே தொலைபேசியடிக்க சொன்னேன். அதற்கு

திரும்ப இப்படி கேட்டால் எப்படி உதவி செய்வதாம்.. வருத்தம் எண்டு வைத்தியரிடம் போய்விட்டு வைத்தியர் நாடிபிடித்துப் பார்க்க கையை நீட்டு என்றால் என்னுடைய கையை பிடித்து என்ன செய்யப் போகின்றாய் என்பது மாதிரி இருக்கிறது உங்கள் கேள்வி. நேரடியாக தொலைபேசியில் பேச தயக்கமாக இருந்தால் ஒலிப்திவுகளும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் என்ன அது உங்கள் குரல்தானா என்று நிறுவுவதற்கு மேலும் ஆராச்சிகள் செய்யவேண்டிவரும்..உங்களிற்கென்று உதவுவதற்காக ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதீர்கள் ரதி..ஏமாற்றிவிடாதீர்கள். :lol: :lol:

நான் தனிமடலில் கடைசியாக கேட்டதிற்கு இன்னும் நீங்கள் பதில் போடவில்லை...அதற்கு முதல் பதில் போடுங்கள் :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்படியான பெண்களைதான் பிடிக்கும்.

மேல் முன்னிரண்டு பல்லும் கொஞ்சம் பெரிதாக இவர்களிடம் இருப்பதை கவனித்து வருகிறேன்.

இவர்கள் தனித்துவமாக முடிவெடுத்து உச்சத்திற்கு செல்லகூடியவர்களாக இருக்கிறார்கள்.

மற்றவரில் தங்கியிருப்பது இவர்களுக்கு அறவே பிடிக்காது. ஒருவரை இவர்களுக்கு பிடித்துவிட்டால் உண்மையாகவே காதலித்து உண்மையாகவே இருப்பார்கள் மற்றவரும் அப்படியே இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறையவே இருக்கும்.

தூய்மையாக வாழவிரும்புவார்கள்.

என்னுடைய மநேஜ்ஜரும் இப்படி இருப்பதாலோ என்னவோ இப்படியானவர்கள் மேலே ஒரு ஈர்ப்பு வருகிறது.

அனேக கொம்பனிகளின் முக்கிய பதவிகளில் இருக்கும் பலரும் இப்படியிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

சும்மா அனாவசியம் இன்றி எதையும் அலட்டமாட்டார்கள். பிடித்தவர்களுடன் கூடுதலாக பேசுவார்கள்.

எனக்கு இது பிடித்திருக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.