Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சொல்லடை ( சொலவடை )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லடை என்பது... ஊர்ப்பேச்சு வழக்கு.

ஒவ்வொரு கிராமம், நகரம், மாநிலம் எல்லாவற்றுக்கும் கேள்விப்படாத... சுவராசியம் மிக்க வசனங்கள்.

இதனை.. மறைந்த முன்னாள் நடிகை காந்திமதியின் படங்களில் அதிகமாக அவதானிக்கலாம்.

  • Replies 231
  • Views 42.9k
  • Created
  • Last Reply

"கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறிச் சண்டை போடலாம்."

இது சரியா கோமகன்?

  • கருத்துக்கள உறவுகள்

~

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருக்கு இனி வெள்ளை வான் தான் :lol: :lol:

பயங்கர தத்துவம் நிறைஞ்ச வசனம். :D

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கேட்கின்றேன் என்று தப்பா நினைக்காதீர்கள்

இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எல்லாமே பழமொழிகளாகவே இருக்கின்றன.

இரண்டுக்கும் விளக்கம் தேவை :(

விசுகர், எனக்குத் தெரிந்த அளவில்,

'விளையும் பயிரை,முளையில் தெரியும்' என்பது பழமொழி!

பாடப்புத்தகங்களில் இருக்கும்! படித்தவர்களிடையே அதிகம் புழக்கத்திலிருக்கும்!

இதே கருத்தையே, சாதாரண மக்கள், கதைக்கும் போது,

முயல் பிடிக்கிற நாயை, மூஞ்சயில பாக்கத் தெரியும்' எனக் கதைப்பார்கள்!

இதைப் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தருவதில்லை! பேச்சு வழக்கில் வருவதால், இது சொல்லடையாகின்றது!

சுப்பிரமணியனில். சொல்லித்தந்திருந்தால், நான் பொறுப்பல்ல!!! :D

  • தொடங்கியவர்

சொல்லடை என்பது... ஊர்ப்பேச்சு வழக்கு.

ஒவ்வொரு கிராமம், நகரம், மாநிலம் எல்லாவற்றுக்கும் கேள்விப்படாத... சுவராசியம் மிக்க வசனங்கள்.

இதனை.. மறைந்த முன்னாள் நடிகை காந்திமதியின் படங்களில் அதிகமாக அவதானிக்கலாம்.

உண்மை தமிழ் சிறி . இலகுவாக விளக்கியதிற்கு மிக்க நன்றிகள் :) .

"கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறிச் சண்டை போடலாம்."

இது சரியா கோமகன்?

மிகவும் சரி . தம்பி உடையான் படைக்கஞ்சான் என்ற பழமொழிக்கு ஒப்பானது . மேலும் , ஒன்றுடன் நில்லாது மேலும் தொடர வாழ்த்துக்கள் கல்கி :) .

பயங்கர தத்துவம் நிறைஞ்ச வசனம்.

அதே ................. :lol: .

யங்கி போடாத, சீலைக்காரி... கட்டினாளாம் பாவாடை.

இதுக்கு அர்த்தம் சொன்னால் நாங்களும் அறியலாம் தானே தமிழ் சிறி :lol: .

விசுகர், எனக்குத் தெரிந்த அளவில்,

'விளையும் பயிரை,முளையில் தெரியும்' என்பது பழமொழி!

பாடப்புத்தகங்களில் இருக்கும்! படித்தவர்களிடையே அதிகம் புழக்கத்திலிருக்கும்!

இதே கருத்தையே, சாதாரண மக்கள், கதைக்கும் போது,

முயல் பிடிக்கிற நாயை, மூஞ்சயில பாக்கத் தெரியும்' எனக் கதைப்பார்கள்!

இதைப் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தருவதில்லை! பேச்சு வழக்கில் வருவதால், இது சொல்லடையாகின்றது!

சுப்பிரமணியனில். சொல்லித்தந்திருந்தால், நான் பொறுப்பல்ல!!!

எண்டாலும் என்ரை கூட்டாளியை இப்புடி கடுப்பேத்திறது எனக்குத் துண்டாய்ப் பிடிக்கேல :lol: .

  • தொடங்கியவர்

இந்த சொல்லடைகள் தப்பான நோக்கில் எழுதப்படவில்லை .

மினைக்கெட்ட அம்பட்டன் பூனையைப் பிடிச்சு சிரைச்சானாம் .

ஆனான ஆடெல்லாம் தவிடு புண்ணாக்குக்கு அழ , சொத்தியாடு ஒண்டு *********** க்கு அழுதீச்சுதாம் .

அண்டமா முனிவரெல்லாம் அடங்கினாரம் ஓமக்குண்டத்தில . ( முன்னைய காலத்தில் வேதவிற்பனர்களது அறிவு , திறமை யாவும் மக்களுக்கு நன்மை பயக்காது , அரசர்களது நன்மை கருதி யாகசாலையில் சிலவழிந்ததைக் குறிக்கின்றது ) .

  • கருத்துக்கள உறவுகள்

இளனி குடிச்சவனை விட்டிட்டு கோம்பை சூப்பினவன் குற்றவாளியாம்.

தாயும் பிள்ளையுமெண்டாலும் வாயும் வயிறும் வேறை

பேச்சு பல்லாக்கு தம்பி கால்நடை

இளகின இரும்பை கண்டால் கொல்லன் குண்டியை தூக்கி தூக்கி அடிப்பானாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், எனக்குத் தெரிந்த அளவில்,

'விளையும் பயிரை,முளையில் தெரியும்' என்பது பழமொழி!

பாடப்புத்தகங்களில் இருக்கும்! படித்தவர்களிடையே அதிகம் புழக்கத்திலிருக்கும்!

இதே கருத்தையே, சாதாரண மக்கள், கதைக்கும் போது,

முயல் பிடிக்கிற நாயை, மூஞ்சயில பாக்கத் தெரியும்' எனக் கதைப்பார்கள்!

இதைப் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தருவதில்லை! பேச்சு வழக்கில் வருவதால், இது சொல்லடையாகின்றது!

சுப்பிரமணியனில். சொல்லித்தந்திருந்தால், நான் பொறுப்பல்ல!!! :D

தமிழின் பால் கொண்ட அன்பால் திரிவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கரிசனையிலும் ஓரு தொகுப்பை அல்லது வடிவத்தை எழுதும்போது அல்லது வாசிக்கும்போது அது பற்றிய தெளிவும் அதை மற்ற சந்ததிக்கு கடத்தும்போது கலப்பில்லாமலும் இருக்கணும் என்கின்ற ஆதங்கத்திலுமே

மீண்டும் மீண்டும் இங்கு கேள்வி எழுப்பினேன்.

இங்கு பதியப்பட்ட பல கருத்துக்களும் எல்லோரும் குழம்பிப்போயுள்ளதையே குறித்து நிற்கின்றன.

பள்ளியில் (மகாவித்தியாலயம்) படித்ததைவிட கூட வருடங்கள் வெளியில் வாழ்ந்துவிட்டோம். எனவே எது எது என பிரித்துப்பார்க்கும் சக்தி குறைவடைந்துள்ள நிலையிலேயே இந்தக்கேள்வி எழுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

செலவடைக்குள் கிரமங்களில் பாவிக்கப்படும் சந்தர்பத்திற்கேற்ப உவமான வசனநடை மட்டுமல்லாது விடுகதைகளும் செலவடைக்குள் அடங்கும். உதாரணம் முட்டு வீட்டுக்குள் தட்டுப்பலகை. விடை நாக்கு ஆனால் இந்த விடுகதை கேள்வி செலவடைக்குள் அடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேழ்விப்பட்ட சில கல்லடி வேலனின் சிலேடைகள்.இதில் துப்ப்படாது என்று எழுதிஇருந்துதாம்.அவர் அதில் நன்றாக துப்பிவிட்டு கேட்டாராம்.இதில் துப்பினால் படுகுது தானே என்று. :lol:

ஒரு சாப்பாட்டுக்கடையில் கேட்டாராம் சாப்பிட குழம்புமோ என்று.அதற்க்கு கடைக்காரன் ஓம் என்று சொல்ல சாப்பபிடும் போது குழம்பும் என்றால் தான் சாப்பிட வில்லை என்று.

இளனி குடிச்சவனை விட்டிட்டு கோம்பை சூப்பினவன் குற்றவாளியாம்.

நொங்கு திண்டவன் ஓடிப் போய்ட்டானாம்... அதை நோண்டித் திண்டவன் மாட்டிக்கிட்டானாம்...!

( சாமி... அப்பு... ராசா.... !!! நான் நொங்கு திண்டவனுமில்ல... அதை நோண்டித் திண்டவனுமில்ல...! அந்தப் பனங்காட்டுப் பக்கமாப் போனவன்! என்னப்போயி............ :( :o :lol: :lol: :lol:)

Edited by கவிதை

  • தொடங்கியவர்

நொங்கு திண்டவன் ஓடிப் போய்ட்டானாம்... அதை நோண்டித் திண்டவன் மாட்டிக்கிட்டானாம்...!

( சாமி... அப்பு... ராசா.... !!! நான் நொங்கு திண்டவனுமில்ல... அதை நோண்டித் திண்டவனுமில்ல...! அந்தப் பனங்காட்டுப் பக்கமாப் போனவன்! என்னப்போயி............ :lol:)

ஏன் ராசா................... :o இளனி குடிச்சது ஆரோ கோம்பை சூப்பினது ஆரோ :lol::D:icon_idea: .

  • தொடங்கியவர்

இளனி குடிச்சவனை விட்டிட்டு கோம்பை சூப்பினவன் குற்றவாளியாம்.

:lol::D:icon_idea: .

தாயும் பிள்ளையுமெண்டாலும் வாயும் வயிறும் வேறை

பேச்சு பல்லாக்கு தம்பி கால்நடை

இளகின இரும்பை கண்டால் கொல்லன் குண்டியை தூக்கி தூக்கி அடிப்பானாம். :lol::D:icon_idea: .

மிக்க நன்றிகள் சாத்திரி :) .

  • தொடங்கியவர்

செலவடைக்குள் கிரமங்களில் பாவிக்கப்படும் சந்தர்பத்திற்கேற்ப உவமான வசனநடை மட்டுமல்லாது விடுகதைகளும் செலவடைக்குள் அடங்கும். உதாரணம் முட்டு வீட்டுக்குள் தட்டுப்பலகை. விடை நாக்கு ஆனால் இந்த விடுகதை கேள்வி செலவடைக்குள் அடங்கும்.

அருமை . புதுமையான பார்வை . பதிவை நேராக்கிய சாத்திரிக்கு மிக்க நன்றிகள் :):) .

நான் கேழ்விப்பட்ட சில கல்லடி வேலனின் சிலேடைகள்.இதில் துப்ப்படாது என்று எழுதிஇருந்துதாம்.அவர் அதில் நன்றாக துப்பிவிட்டு கேட்டாராம்.இதில் துப்பினால் படுகுது தானே என்று. :lol:

ஒரு சாப்பாட்டுக்கடையில் கேட்டாராம் சாப்பிட குழம்புமோ என்று.அதற்க்கு கடைக்காரன் ஓம் என்று சொல்ல சாப்பபிடும் போது குழம்பும் என்றால் தான் சாப்பிட வில்லை என்று.

அருமை சஜீவன் . கல்லடி வேலரைப்பற்ரி நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன் :D:D:icon_idea: .

  • தொடங்கியவர்

தப்பான நோக்கில் எழுதப்படவில்லை .

வந்த புதிசில வண்ணான் வேட்டியை கரைகட்டி வெளுப்பானாம் .

இவை எனது புலத்து அனுபவங்களால் வந்த சொல்லடைகள் :

கபே குடிக்கிறவனுக்கு ஒரு யூறோ . கபே போட்டவனுக்கு முதலாளி குடுத்தது ஐம்பது யூறோவாம் .

இறைச்சி வாட்டினவன் வெக்கையில வேக , அதை ருசி பாத்தவன் பேர் செப் ஆம் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்னுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆபரேசன் வெற்றி

ஆள் அவுட்

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடிச்சாத் தாங்க மாட்டாய் நாலு மாசம் தூங்க மாட்டாய்..

இது சொலவடையோ சினிமாவடையோ தெரியேல்ல...நம்ம விசய் அண்ணண் ஒரு படத்தில சொன்னாங்ணா... :icon_mrgreen:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாச்சொத்து மண்ணாகும். உடாப்புடவை வண்டூதும்.

உறுட்டும் பிரட்டும் சிரட்டையும் கையும்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதைத்தின்றவன்

வண்டியன் ஆவான்

  • தொடங்கியவர்

கண்டதைத்தின்றவன்

வண்டியன் ஆவான்

ஆ ..........................வந்திட்டுது தொடருங்கோ :D:D:icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்தார் சொத்தி.சுவரால் விழுந்தார் வெற்றி. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆபரேசன் வெற்றி

ஆள் அவுட்

வருத்தம் சுகம் ஆனால் ஆள் தப்பாது? :lol:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

கோழி திண்ட கள்ளரும் கூட நிண்டு தேடிறாராம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.