Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்திரிக்கு தடை?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயிறு நோக சிரிக்க வேண்டாம் கோமணம் கழண்டுவிடும்.

அதுக்காக நீங்கள் ரெஞ்சனாகாதேங்கோ...நாடிநரம்புகள் வெடிக்கப்போகுது....

  • Replies 91
  • Views 9.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கதைப்பகுதியில் நான் விரும்பிப்படைக்கும் படைப்புகளை அதிகம் தந்தவர் சாத்திரி. ஆரம்பகாலங்களில் 80களின் இறுதிப்பகுதியில் இந்தியா இராணுவகாலங்களில் இருந்த போராளிகளின் உண்மைக்கதைகள், அவரது நண்பன் இருள் அழகன் வாழ்ந்த மானிப்பாய் கிராமத்தில் நடந்த பல உண்மை அனுபவங்களை எமக்குப் பகிர்ந்தவர். சாந்தி ரமேசுடன் சேர்ந்து நேசக்கரத்தினை நடாத்தி முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்பு எதுவித உதவியும் கிடைக்காத எமது உறவுகளின் வாழ்க்கைக்கு வெளிச்சம் ஈட்டியவர். நிச்சயம் மீண்டும் சாத்திரி வரவேண்டும். தொடர்ந்து உங்களின் படைப்புக்களை தரவேண்டும். சாத்திரியின் படைப்புக்களை விரும்பி வாசிக்கும் தீவிர இரசிகன் - கந்தப்பு.

நடைபெற்ற சம்பவங்களைப் பார்க்கும்போது தனது தொடர்கதையின் ஓர் பகுதி (ஆபாசம் காரணமாக?) நிர்வாகத்தினால் நீக்கப்பட்ட காரணத்தினால் மனக்கசப்படைந்த சாத்திரி அவர்கள் தான் பதிந்த பல பதிவுகளை நீக்கியுள்ளார்.

ஆபாசமான கருத்துக்களை நாம் களமெங்கும் காண்கின்றோம். சாத்திரி அவர்கள் இதுவரை நாம் இங்கு பார்க்காதவரையில் எதையாவது புதினமாக‌ எழுதியிருப்பார் என நான் நினைக்கவில்லை. தற்போதும் பேசாப்பொருள் பகுதியில் பள்ளியறை அனுபவங்கள்பற்றி ஆபாசமான ஓர் பகுதி செல்கின்றது.

எதிர்காலத்தில் சாத்திரி அவர்கள் சிக்கலான அல்லது நம்மவர்கள் குழம்பக்கூடிய படைப்புகளை கதை கதையாம் பகுதியில் இணைக்காமல் பேசாப்பொருள் பகுதியில் இணைத்தால் அவை நிர்வாகத்தினால் நீக்கப்படாமல் நிலைப்பதற்கு உதவலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி 15 நாட்களுக்கு மித்திரன் செய்தி வராது, :lol: :icon_mrgreen:

எதுவாயினும் மட்டுறத்தினர்களின் முடிவே இறுதியானது. அதை ஏற்றே ஆகவேண்டும், இல்லையேல் ஒரு களத்தை நடத்த முடியாது.

நானும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். :)

upp1.gif

இதெல்லாம் உங்களுக்கு வரலாற்று பதிவுகளோ?????

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் கனக்க இருக்கு.இந்த தலை முறையில் அது சாத்தியம் மாதிரி தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

upp1.gif

இதெல்லாம் உங்களுக்கு வரலாற்று பதிவுகளோ?????

ஐயா கு.சா நரிக்கும் நாய்க்கு வித்தியாசம் தெரியாத ஆளா நீங்கள்..! பேசாப் பொருள் என்ற தலைப்பின் கீழ் இடப்பட்டுள்ள பதிவு அது. கதை கதையாம் பகுதியில்.. ஊர் ஆன்ரிகளை வைச்சு.. ரசிச்சது பற்றி எழுதப்பட்ட கதைகளை கொண்டவை அல்ல. இரண்டு திரை இசைப் பாடல்களை மையப்படுத்திய பதிவு. ஆபாசமான எழுத்துக்கள் முற்றாக தவிர்க்கப்படக் கேட்கப்பட்டுள்ள பதிவும் கூட..! உங்களைப் போன்றவர்கள் இப்படி எல்லாம் கிளம்புவீங்கன்னு தெரிந்தே போட்ட பதிவு தான்..! அடிப்படை களவிதிகளுக்கு உட்பட்ட பதிவும் கூட..!

மேலும் இப்பதிவு களவிதிகளுக்கு முரணானது என்று கள நிர்வாகம் தீர்மானித்தால் அதை நீக்க அவர்களுக்கு முழுச் சுதந்திரமும் அதிகாரமும் உள்ளது..! :):lol:

Edited by nedukkalapoovan

சாத்திரி கள விதிகளை மீறியிருந்தால் அவரை தடை விதிக்கும் முன்னர், எச்சரிக்கை கொடுக்கும் வழமை கையாளப்பட்டதா? நிர்வாகம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அவருடைய தனிப்பட்ட சர்ச்சையில் நாமெல்லாம் தலையிடுவது முறையா? அவரது சர்ச்சையைப் பற்றி நிர்வாகம் மற்றவர்களுக்கு விபரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் முறையல்ல.

தடை நீங்கிய பின் சாத்திரி தொடர்ந்தும் யாழில் எழுத வேண்டும் என்பதே என் ஆசை. என்னைப் போல் பலர் உங்கள் எழுத்துக்கு ரசிகர்கள்.

ஒருவர் தமது கருத்தை நீக்கவோ, அல்லது மாற்றம் செய்யவோ ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் ( ஒரு மணி நேரம் - உதாரணத்துக்கு) கொடுத்தால் போதுமானதாக இருக்கும். அதன் பின் நிர்வாகம் தான் கையாள முடியுமானதாக செய்யலாம். இதை நடைமுறைப் படுத்துவது கடினமாக இருக்கலாம். சில தளங்களில் இந்த உத்தி பயன்படுத்தப்படுவதை கண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

427048_288540084552688_100001900951103_716571_1619690668_n.jpg

இதாருது? புது தமிழ் பட ஹீரோ மாதிரி இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் தடைக்குரிய நியாயம் அனியாயம் என்பதுக்காப்பால் நானும் சாத்திரியின் அதி தீவர ரசிகன்.அவரின் மீள் வருகையை எதிர் பாக்கும் சக கள உறவுகளில் நானும் ஒருவன்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் தடைக்குரிய நியாயம் அனியாயம் என்பதுக்காப்பால் நானும் சாத்திரியின் அதி தீவர ரசிகன்.அவரின் மீள் வருகையை எதிர் பாக்கும் சக கள உறவுகளில் நானும் ஒருவன்.

அதே............. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் எழுத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் நாம் தான்

..எதிர்ப்பு தெரிவித்தவர்களும் நம்மில்சிலர் தான் ......அன்னம் போல் நீரை விலக்கி பாலை பருகனும்....வேண்டத்தகாதவை இருந்திருப்பின் நிர்வாகம் நீக்கி இருக்கனும். தனி மடலில் எச்சரித்து இருக்கணும் ....இருப்பினும் மீள்வரவை எதிர்பார்க்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்,அவர் மீண்டும் வந்து முன்பு போல் எழுத வேண்டும்!

சாத்திரி உங்கள் எழுத்துக்களுக்கு நானும் ஒரு ரசிகன். உங்கள் மீள்வருகையையும் உங்கள் புதுபடைப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

எப்படா இந்த பதினைந்து நாட்கள் முடியும் என்று காத்திருக்கிறேன்.

ஒரு திரியில் ஒருத்தனைப் பிடிக்காட்டி, அதை இன்னொரு திரிக்குக் கடத்தி கழுவறுக்கும் தமிழர்கள் நாங்கள். குழுவாகச் சேர்ந்து கொண்டு மற்றவனைத் தட்டுவது. 'பாவம் பிறபாகரன்' இல் கதையை முழுதாக வாசித்து விடயத்தை விளங்காமல் , தலைப்பை மாற்று, கச்சையை மாற்று என்று கூக்குரல்கள்.

முதுகு சொறிய கூட்டம் வேண்டும். 'ஆமாம்' போட ஆள் வேண்டும்.

சாத்திரியின் எழுத்துக்கு ரசிகன் என்றாலும், போராளிகளைப் பற்றி சாத்திரி எழுதிய 'காமம்' தொடர் எனக்கும் பிடிக்கவில்லை. அதனை சுட்டிக் காட்டி மீள் பரிசோதனைச் செய்ய சாத்திரியைக் கேட்டிருக்கலாம். அதனை விட்டு, சாத்திரியை தடை செய்யும் முயற்சிதான் நடந்தது.

நீங்களும் நாளை தடை செய்யப்படலாம்.

சாத்திரிக்கு நன்றாக எழுதும் திறமையுண்டு. இங்கைதான் எழுதி புகழடைய வேண்டுமில்லை என நினைக்கிறேன்.

சாத்திரி தடை பற்றி நான் பெரிதாக விவாதிக்கவரவில்லை,

யாழும் புலிகளைப் போல் அல்லது ஆனால் ஓரளவு ஜனநாயக மறுப்பு தளமே .எமது அரசியல் பார்வை என்பது புலிகள் தன்னோடு வராதவனை துரோகியாக்கிய கதைதான் .இதைதான் முப்பது வருடமாக உலகெங்கும் செய்கின்றார்கள் ,போராட்டத்தில் தங்களது நிலைப்பாடு ,சர்வதேசத்தில் தங்களை பற்றிய கணிப்பு இது பற்றி எதுவும் பேச மாட்டார்கள் அவர்களுக்கும் தெரியாது .

ஆ ஊ என்றமுதல் சந்திரிகா ,ரணில்,ராஜபக்சாவரை வரை திட்டி தீர்ப்பதும், மாற்று இயக்கங்களை துரோகியாக்கி வசை பாடுவதும் தமக்கு தாளமிடாத ஜெயலலிதா ,கருணாநிதி தொட்டு நையாண்டி பண்ணுவதும் இந்தியா தொட்டு ஈரான் வரை அழியவேண்டும் என பிரார்திப்பதாக்கவுமே எமது அரசியல் போகின்றது .

டக்கிலசும் ,கருணாவும் ,ராஜெசும் சோபாவும் யாழில் படாத பாடா ? ஏனெனில் உங்களுக்கானா அரசியல் என்று இன்றுவரை இல்லை மற்றவனை திட்டியே உங்கள் பலரது காலம் போகின்றது.

நீங்கள் ஒரு போதும் மாறப்போவதில்லை திட்டுவாங்குபவர்கள் தான் அடிக்கடி மாறுகின்றார்கள் .அடுத்தது உங்கள் பட்டியலில் அமெரிக்காவோ தெரியாது .

பன்முகதன்மையுடன் ஜனநாயக பண்பில் கருத்துக்கள் வைக்கும் அளவிற்கு மற்றவன் கருத்தை காது கொடுத்து கேட்கும் அளவிற்கு நாம் இன்னமும் பண்படவில்லை.

சாத்திரியின் பதிவுகளை மிக விரும்பி படிப்பவன் நான் ,அப்படி ஒன்றும் சாத்திரி தவறாக பதியவும் இல்லை .அதை ஏற்கும் பக்குவம் உங்களுக்கு வரவில்லை என்றுதான் நான் சொல்லுவேன் .

நேற்று சேரனுடன் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது .சாத்திரியின் பதிவுகளை வாசிக்க ஆவலாக இருக்கு என்று சொன்னார் .

இந்தத் திரி பூட்டப்படுகின்றது

கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

இங்கு சாத்திரியிற்கு வழங்கப்பட்ட தடை தொடர்பாக ஒரு சில விடயங்கள்...

1. . காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. என்ற திரியில் சாத்திரி தான் இணைத்திருந்த விடயங்கள் அனைத்தையும் எதுவித முன்னறித்தல் இன்றி கள விதிகளுக்கு முரணாக முற்றாக நீக்கியுள்ளார். கள விதிகளின் பிரகாரம் திருத்தங்கள் செய்யலாமே தவிர எழுதப்பட்ட விடயம் மாற்றப்படக்கூடாது என்ற விதி உள்ளது. சாத்திரியால் இணைக்கப்பட்ட விடயங்கள் நீக்கப்பட்டதால் அதன் கீழ் எழுதப்பட்ட பதில்கள் 120+ ம் அர்த்தமற்றுப்போனதால் அந்தப்பதில்களுடன் தலைப்பு முற்றாக எம்மால் நீக்கப்பட்டு உள்ளது.

2. (ஈழ)ம் காத்தவர்கள்

சாத்திரியால் முதல்விடயம் நீக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மேலே எழுதப்பட்ட அளவு கருத்துக்கள் இங்கும் எழுதப்பட்டுள்ளது.

வேறு எந்த எந்தத் திரிகளில் நீக்கப்பட்டுள்ளது என ஆராய்ந்து பார்க்கவில்லை. எனினும் மேலே சொல்லப்பட்ட திரிகளில் இருந்து விடயங்களை நீக்கியமை ஒரு பாரதூரமான விடயமாகவே பார்க்கின்றோம். அத்துடன் மேற்கொண்டு இச்செயற்பாடு நடைபெறக்கூடாது என்பதற்காக உடனடியாகவே 15 நாட்களுக்கு களத்தில் உள்நுழையவோ அல்லது எதுவித பதிவுகளையும் மேற்கொள்ள முடியாதபடி தடுத்துள்ளோம். இங்கு எச்சரிக்கை வழங்கி அதன்பின் நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு சூழ்நிலையையும் சாத்திரி ஏற்படுத்தியிருந்தார். அதாவது எச்சரிக்கை வழங்கப்பட்டால் அக் காலப்பகுதியில் ஏனைய விடயங்களும் அழிக்கப்பட்டு விடலாம் எனக் கருதியிருந்தபடியாலும் எச்சரிக்கை எதுவும் வழங்கப்படாது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆரம்ப காலங்களில் கருத்துக்கள் எழுதி ஒரு மணித்தியாலத்திற்குள் மட்டும் மாற்றங்கள் செய்யலாம் என்றிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் சிலமணிநேரம் கழித்து வந்தவர்களால் திருத்தங்கள் செய்ய முடியாமல் போனதும் எம்மிடம் திருத்தங்கள் செய்யும்படி வேண்டுகோள்கள் வைக்கப்பட்டதும் போன்ற காரணங்களினால் அம்முறைமை நீக்கப்பட்டிருந்தது. மீளவும் ஒரு குறிப்பிட்ட மணித்தியாலத்திற்குள் மட்டும் திருத்தங்கள் செய்யும் முறையை கொண்டுவரலாமா என்பது பற்றியும் யோசித்து வருகின்றேன். நிச்சயமாக இது பல அசௌகரியங்களைக கொண்டுவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.