Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தாக்குதல் நடாத்திய காத்தான்குடி பள்ளிவாயலுக்கு பிரான்ஸ் தூதுவர் விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி பள்ளிவாயலில் இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தார்.

அங்கு விஜயம் செய்த பிரான்ஸ் தூதுவர் பள்ளிவாயலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டதுடன் பள்ளிவாயலில் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளை பார்வையிட்டு அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தற்போது குறித்த பள்ளிவாயலில் இருக்கும் தாக்குதல் நடாத்தப்ட்ட தடயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் மாத்திரம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=5021

 

 

  • Replies 86
  • Views 4.4k
  • Created
  • Last Reply

நல்ல தலைப்பு.

தமிழர்களின் சொத்துக்களை அபகரித்த முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு .....

என்று போட்டிருக்காலாம்.

பொறுக்கித் தனமான ஊடகவியலாளர்களால் இப்படியான தலைப்புக்களை மட்டுமே போட முடியும்.

 



வீரகேசரி தமிழின விரோதிகளின் கைகளில் சென்றுவிட்டதோ?

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் சொத்துக்களை அபகரித்த முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு .....

என்று போட்டிருக்காலாம்.

பொறுக்கித் தனமான ஊடகவியலாளர்களால் இப்படியான தலைப்புக்களை மட்டுமே போட முடியும்.

 

வீரகேசரி தமிழின விரோதிகளின் கைகளில் சென்றுவிட்டதோ?

 

வீரகேசரி நிருபர்களில்.... அதிகமானோர் முஸ்லிம்களாக இருப்பதால், இப்படியான தலைப்புக்களில் செய்தி வரத்தான் செய்யும்.

 

தமிழர்களின் சொத்துக்களை அபகரித்த முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு .....

என்று போட்டிருக்காலாம்.

பொறுக்கித் தனமான ஊடகவியலாளர்களால் இப்படியான தலைப்புக்களை மட்டுமே போட முடியும்.

 

வீரகேசரி தமிழின விரோதிகளின் கைகளில் சென்றுவிட்டதோ?

 

உங்களுக்கு சுகம் தரக்கூடிய ஒரு தலைப்பை எதிர்பார்ப்பது சுய இன்பம். அனுபவித்துப் பழகிவிட்டீர்கள்.

//தமிழர்களின் சொத்துக்களை அபகரித்த முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு// என்று தொழுகையில் ஈடுபட்டவர்களை கொன்றது சரி என்ற தொனிப்பட உங்களுக்கு செய்தி தேவைப்படுகின்றது.

நீங்கள் எதிர்பார்ப்பதை இந்த உலகம் எந்தக்காலத்திலும் ஏற்காது. இவ்வாறான செயல்களே போராட்டத்தை பயங்கரவாதமாக்கி வேரோடு அழிக்கப்பட்டும் விட்டது. உங்கள் குரல்களை எந்த காரணத்தைக்கொண்டும் எந்த நெருக்கடி நிலையிலும் கேட்கமாட்டோம் என்று இவ் உலகம் முடிவு செய்து ரொம்பநாள் ஆகிவிட்டது. அதை அனுபவரீதியில் கண்டும் விட்டோம். உங்களுக்குள்ள ஒரே ஒரு தெரிவு உங்களுக்குள் புறு புறுத்து புரணிபாடி மத சாதீய பிரதேச துவேசங்களை வளர்த்து எஞ்சியிருப்பவர்களை சாகடிப்பதுதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு விளங்கியது ஒன்றுதான், புலிகளால் தாக்கிய பள்ளி வாசலின் பகுதி அப்படியே இருக்கிறது ஆனால், சிங்களவர்களால் எரிக்கபட்ட நூலகம் அதே இடத்தில் அப்படியே  எரிந்த/ எரித்த அடையாளமே இல்லாமல் வெள்ளை பூசபட்டு உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்
தலைப்பை பின்வருமாறு வைத்திருக்கலாம்;
 
"தமிழின துரோகி முரளிதரன் தாக்குதல் நடத்திய காத்தான்குடி பள்ளிவாயலுக்கு பிரான்ஸ் தூதுவர் விஜயம்"
 
இப்படி எழுதி இருந்தால் யாழில் எல்லோருக்கும் பிடித்திருக்கும்

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைக் காட்டிச் சிங்களம் எல்லா நாட்டிடம் இருந்தும் கறந்து விட்டது.

இப்போது அதே பாணியில் இஸ்லாமியர்கள் வெளிக்கிட்டிருக்கின்றார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தாக்குதலை நடத்தியது புலிகள்தான் என்பதில் சந்தேகமில்லையென்றாலும் கூட, பிச்சைக்காரன் புண்ணைக்காட்டி பிச்சை எடுப்பதுபோல சிங்கள அரசும் முஸ்லீம்களும் இதை ஒரு அடையாளமாகவே பாவிக்கிறார்கள். ஆனால் முள்ளிவாய்க்கால் பிணக்குவியலின் சுவடு கூடத் தெரியாமல் அழித்துவிட்டுச் சிங்கலமும் அதன் அடிவருடி முஸ்லீம்களும் எதுவுமே நடக்கவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள்.

 

சண்டமாருதன், புலிகளைக் குற்றம் சாட்டுவதில் உள்ள ஆர்வத்தைத் தமிழர்களுக்கு நடந்த அநியாயத்தை வெளிக்கொணர்வதிலும் காட்டலாமே??? அது அவ்வளவு கஷ்ட்டமா உங்களுக்கு ?



 

தலைப்பை பின்வருமாறு வைத்திருக்கலாம்;
 
"தமிழின துரோகி முரளிதரன் தாக்குதல் நடத்திய காத்தான்குடி பள்ளிவாயலுக்கு பிரான்ஸ் தூதுவர் விஜயம்"
 
இப்படி எழுதி இருந்தால் யாழில் எல்லோருக்கும் பிடித்திருக்கும்

 

ரதி, உங்கள் பிரச்சினைதான் என்ன?? உங்களுக்கு புலிகள் மேல் ஆத்திரமா அல்லது இங்கு புலிகளை ஆதரித்து எழுதுபவர்கள் மேல் ஆத்திரமா?? எதுக்கெடுத்தாலும் விதண்டாவாதமாக எழுதுகிறீர்கள். 

 

அவர்களை விடுங்கள், உங்களுக்கு எப்படித் தலைப்பு வந்திருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். "தமிழ்ப் பிரிவினைவாதப் பயங்கரவாதிகள் நடத்திய பாரிய மனிதப் படுகொலைக்களம்" என்று வந்திருந்தால் திருப்திப்பட்டிருப்பீர்களோ??? எல்லோரும் சொல்லிவிட்டார்கள், உங்கள் பங்கிற்கு நீங்களும் சொல்வதுதானே?? யார் கேட்கப்போகிறார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

 

தலைப்பை பின்வருமாறு வைத்திருக்கலாம்;
 
"தமிழின துரோகி முரளிதரன் தாக்குதல் நடத்திய காத்தான்குடி பள்ளிவாயலுக்கு பிரான்ஸ் தூதுவர் விஜயம்"
 
இப்படி எழுதி இருந்தால் யாழில் எல்லோருக்கும் பிடித்திருக்கும்

 

 

புலிகளில் இருந்து

தலைவரின் அந்த கடைசிக்கட்டளையை  ஏற்காதவரை அவர் கருணா அம்மான்.

அதுவரை செய்தவை தமிழ் மக்கள் சார்ந்து...........

 

கட்டளையை அவமதித்த நாளிலிருந்து

அவர் முரளிதரன்

அதன் பின் செய்தவை முரளியின் சுய நலம் சார்ந்து............

புலிகளில் இருந்து

தலைவரின் அந்த கடைசிக்கட்டளையை  ஏற்காதவரை அவர் கருணா அம்மான்.

அதுவரை செய்தவை தமிழ் மக்கள் சார்ந்து...........

 

கட்டளையை அவமதித்த நாளிலிருந்து

அவர் முரளிதரன்

அதன் பின் செய்தவை முரளியின் சுய நலம் சார்ந்து............

 

கொல்லப்போறேன்...வா என்றால் வருவதற்கு கருணா ஒன்றும் வெள்ளாடு இல்லை :)

அவன் ஒரு கறுப்பாடு :)

சந்தர்ப்பத்துக்கு ஏற்றால்போல தலைப்பிடும் பத்திரிகைகளில் வீரகேசரிக்கு நிகர் வீரகேசரிதான். :icon_mrgreen:

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பள்ளிவாசலுக்குள் புகுந்து தாக்குதல் செய்தார்கள்.. இந்தியா பொற்கோயிலுக்குள் பகுந்து தாக்குதல் செய்தது.. காரணங்கள் எதுவாகினும் ஒன்றில் இந்த இருவரும் செய்தது பிழை .. அல்லது இருவரும் செய்தது சரி.. இரு தரப்புமே மத வழிபாட்டு இடங்கள் மீதுதான் தாக்குதல் செய்துள்ளார்கள்..! :rolleyes:

புலிகளில் இருந்து

தலைவரின் அந்த கடைசிக்கட்டளையை  ஏற்காதவரை அவர் கருணா அம்மான்.

அதுவரை செய்தவை தமிழ் மக்கள் சார்ந்து...........

 

கட்டளையை அவமதித்த நாளிலிருந்து

அவர் முரளிதரன்

அதன் பின் செய்தவை முரளியின் சுய நலம் சார்ந்து............

கருணா கொஞ்சம் விளக்கமான ஆள் .தலைவர் கூப்பிடுவார் ,துரோகி என்று கொல்லுவார்.நீங்களும் பத்தோடு பதினொன்றாக துரோகியாக்கி குதியாட்டம் போடுவீர்கள் .

இப்ப கருணா மந்திரி தலைவரின் உடலையே அடையாளம் காண கெலியில் வருகின்றான் .

"விளப்பமான சில ஆட்களும் புலிகளில் இருந்திருக்கின்றார்கள் " என்பதற்கு கருணா ஒரு உதாரணம் .

  • கருத்துக்கள உறவுகள்

கருணா கொஞ்சம் விளக்கமான ஆள் .தலைவர் கூப்பிடுவார் ,துரோகி என்று கொல்லுவார்.நீங்களும் பத்தோடு பதினொன்றாக துரோகியாக்கி குதியாட்டம் போடுவீர்கள் .

இப்ப கருணா மந்திரி தலைவரின் உடலையே அடையாளம் காண கெலியில் வருகின்றான் .

"விளப்பமான சில ஆட்களும் புலிகளில் இருந்திருக்கின்றார்கள் " என்பதற்கு கருணா ஒரு உதாரணம் .

 

 

 

நீங்கள் புலிகளில் இருக்காமல் கருணா செய்தது சரி என எதனை வைத்து சொல்கிறீர்கள்?
உங்களின் பேச்சை பார்த்தால் கருணா தப்பியதால் அவர் செய்தது சரி என்கிறீர்கள்.
அவர் செய்தது எது சரி என சொல்லுங்கள் ?

அடேல் தனது புத்தகத்தில் கருணா பற்றி எழுதியதை வாசியுங்கள் .

நோர்வேயில் கருணா- பாலசிங்கம் எடுத்த முடிவுகள் என்ன? அதற்கு பிரபாகரனின் பதில் என்ன ?

வன்னிக்கு உங்களை  துரோகியாக்கி கொல்ல கூப்பிடுகின்றார்கள் என்று தெரிந்தால்  நீங்கள் என்ன செய்வீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

அடேல் தனது புத்தகத்தில் கருணா பற்றி எழுதியதை வாசியுங்கள் .

நோர்வேயில் கருணா- பாலசிங்கம் எடுத்த முடிவுகள் என்ன? அதற்கு பிரபாகரனின் பதில் என்ன ?

வன்னிக்கு உங்களை  துரோகியாக்கி கொல்ல கூப்பிடுகின்றார்கள் என்று தெரிந்தால்  நீங்கள் என்ன செய்வீர்கள் ?

 

 

 

எப்படி துரோகி ஆக்குவது? துரோக தன் செய்ததால் தான் விளக்கத்துக்கு வரும் படி கேட்டார்கள். இவரில் பிழை இருந்ததால் தான் பிரதேசவாதத்தை கையில் எடுத்தார்.பதுமனும் இப்படி வன்னிக்கு அழைக்கப்பட்டார். அவர் கொல்லப்பட்டாரா??

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி அரசு ஆதரவாளர்களின் கைக்கு மாறி ரொம்ப நாளாச்சு....

  • கருத்துக்கள உறவுகள்

கருணா கொஞ்சம் விளக்கமான ஆள் .தலைவர் கூப்பிடுவார் ,துரோகி என்று கொல்லுவார்.நீங்களும் பத்தோடு பதினொன்றாக துரோகியாக்கி குதியாட்டம் போடுவீர்கள் .

இப்ப கருணா மந்திரி தலைவரின் உடலையே அடையாளம் காண கெலியில் வருகின்றான் .

"விளப்பமான சில ஆட்களும் புலிகளில் இருந்திருக்கின்றார்கள் " என்பதற்கு கருணா ஒரு உதாரணம் .

 

"விளப்பமான சில ஆட்களும் புலிகளில் இருந்திருக்கின்றார்கள் " என்பதற்கு கருணா ஒரு உதாரணம் .

 

சரி

உங்கள் வழியிலேயே சொல்லுங்கள்

எந்த வகையில் இவர் விளக்கமான ஆள்???

எந்த வகையில் அவர் வெற்றி  பெற்றுள்ளார்???

 

கிழக்கை பிரிக்க நினைத்து துவேசம் வளர்த்தவகையில்...........?

சிங்கள ராணுவத்துடன்  சேர்ந்து சண்டை பிடித்த வகையில்???

முள்ளிவாய்க்காலுக்கு உதவிய வகையில்???

இப்போ  சிறீலங்கா அரசுடன் கைக்கூலியாக நிற்கின்றவகையில்???

 

இந்தத் தாக்குதலை நடத்தியது புலிகள்தான் என்பதில் சந்தேகமில்லையென்றாலும் கூட, பிச்சைக்காரன் புண்ணைக்காட்டி பிச்சை எடுப்பதுபோல சிங்கள அரசும் முஸ்லீம்களும் இதை ஒரு அடையாளமாகவே பாவிக்கிறார்கள். ஆனால் முள்ளிவாய்க்கால் பிணக்குவியலின் சுவடு கூடத் தெரியாமல் அழித்துவிட்டுச் சிங்கலமும் அதன் அடிவருடி முஸ்லீம்களும் எதுவுமே நடக்கவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள்.

 

சண்டமாருதன், புலிகளைக் குற்றம் சாட்டுவதில் உள்ள ஆர்வத்தைத் தமிழர்களுக்கு நடந்த அநியாயத்தை வெளிக்கொணர்வதிலும் காட்டலாமே??? அது அவ்வளவு கஷ்ட்டமா உங்களுக்கு ?

 

தமிழர்களுக்கு நடந்த அநியாயத்தை பேசுவதுதான் போராட்டத்தை கொண்டுநடத்துவதற்கான ஆதராம் என்றும் ந க அரசு வட்டுக்கோட்டை வாக்கெடுப்புகள் ஆசனங்கள் அமர்வுகள் முரசறைவுகளுக்குப் பதிலாக மனித உரிமை மீள் குடியேற்றம் புனர்வாழ்வு என்று செல்வதே சரி என்பதே பல வருடங்களாக இங்கு நான் முன்வைக்கும் கருத்து. சிங்களவர்களும் இஸ்லாமியர்களும் யதார்த்த உலகத்தில் இருக்கின்றார்கள் நீங்கள் யதார்த்தத்துக்குப் புறம்பான கற்பனை உலகத்தில் இருக்கின்றீர்கள்.

இயக்க மோதல்கள் உள் முரண்பாடுகள் இஸ்லாமியர்கள் வெளியேற்றம் படுகொலை அரசியல் தலைவர்கள் படுகொலை அரசியல் இலக்குகள் மீதான தற்கொலைத்தாக்குதல்கள் என போராட்டத்தை உலக முற்றத்தில் பயங்கரவாதமாக்கிய சிங்கள இஸ்லாமியர்கள் இன்றுவரை அதை செவ்வனே நிலைநிறுத்துகின்றார்கள். அவர்களின் புத்திசாலித்தனத்துக்கு முன்னால் தமிழர்களின் அரசியல் சார்ந்த அசைவுகள் கோமாளித்தனமானது.

தமிழர்கள் மீதான எந்த அநியாயத்தையும் தமிழர்கள் அரசியல் பிடிமானமாக கருத விரும்பவில்லை மாறாக அதை மையமாக வைத்து அடயாளம்தேட முற்படுகின்றார்கள். தமிழ்த்தேசீயம் தமிழர்களுக்குள்ளாக நடக்கும் வியாபாரம் அடயாள அந்தஸ்த்து தேடலாகவே இருக்கின்றது.

சிங்களவர் இஸ்லாமியர்கள் இந்த உலகத்திற்கு தமிழர்போராட்டத்தை பயங்கரவாதமாக்குகின்றார்கள். தமிழர்கள் தமிழர்களுக்குள்ளாக சிங்களவனும் அநியாயம் செய்தான் இஸ்லாமியரும் அநியாயயம் செய்தார்கள் என்று சொல்லிக்கொள்கின்றார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம்? எமது பலவீனமே எம்மால் உணரமுடியாத நிலையில் வெளி உலகத்தோடு மல்லுக்கட்டும் அரசியல் என்பது குறித்து கற்பனை கூட செய்ய முடியாது.

அடேல் தனது புத்தகத்தில் கருணா பற்றி எழுதியதை வாசியுங்கள் .

நோர்வேயில் கருணா- பாலசிங்கம் எடுத்த முடிவுகள் என்ன? அதற்கு பிரபாகரனின் பதில் என்ன ?

வன்னிக்கு உங்களை  துரோகியாக்கி கொல்ல கூப்பிடுகின்றார்கள் என்று தெரிந்தால்  நீங்கள் என்ன செய்வீர்கள் ?

 

வன்னிக்கு கருணாவை துரோகியாக்கி கொல்ல அழைத்தார்கள் என்று அடேலின் புத்தத்தில் இருக்கும் ஆங்கில வசனங்களை தந்தால் நல்லது. ஏன் எனில் கருணா விளப்பமான ஆள் இல்லை. நீங்கள்தான் ஆங்கிலத்தில் படிக்கும்போது விளப்பமில்லாதா ஆளாக இருக்கிறீர்கள் என்பதை பலதடவை காட்டி வைத்திருக்கிறீர்கள்.(வேண்டுமென்றே ஆட்டு பட்டிக்குள் மாட்டை புகுத்தி எழுதுவது வழமை)

 

கருணா வெளிநாடுகளில் "கரட்டை கண்ட கழுதை" என்பது எல்லோருக்கும் விளப்பமாக இருக்கும் போது அதை விளங்காதவர்கள் இருப்பதற்கு என்ன செய்ய முடியும். கரட்டை கண்ட கழுதை அதை காட்டியவன் பின்னால் எல்லோரையும் இழுத்துக்கொண்டு போகும். இதானால் கருணாமீது விசாரணை காத்திருக்கும் என்பதை கருணாவுக்கு தெரியும். குற்றம் உள்ள நெஞ்சு குறு குறுத்தது. அதனால் விசாரணைக்கு போகாமல் விட்டான். அதாவது கருணா தன்னைத்தான் துரோகியாக குற்றம் சாட்டினான். எதிரிகளின் சதியால்  தன் மீது இருந்த குற்றச்சட்டை மறுக்க துணிச்சல் இல்லாத கோழையாக மாற்றப்பட்டான்.

 

அதற்கு முன் வன்னியில் இருந்து வந்த எத்தனை அழைப்புக்களை அடேல் கருணாவை துரோகியாக்கி கொலை செய்ய விட்ட அழைப்புக்களாக எழுதியிருக்கிறார். அவற்றில் எத்தனையை மறுத்து கருணா போகாமல் விட்டான். (கருத்துக்களை வேண்டுமென்றே குழப்பி வைத்து எழுத்து யாரும் அதை நம்ப மாட்டார்கள்.) கருணா சொல்வதை செய்ய தலைவர் வன்னியில் இருக்கவில்லை. கருணா நேராக வன்னி சென்று தனது முடிவுகளை விளங்கப்படுத்த வேண்டும்". துரோகியாக தன்னை அடையாளம் கண்டு கொண்ட கருணா அதை செய்ய விரும்பவில்லை. 

 

கருணா தலைவரின் உடலை அடையாளம் காட்டவில்லை என்பதுதான் வெளிவந்த பேச்சு. அதை மாற்றி இலங்கை ஊடகங்கள் திரித்திருந்தன என்ற குற்றச்சாட்டைகருணாவோ, ஊடகங்களோ ஒருவரும் மறுக்கவில்லை.  இலங்கை கருணாவை நாடு கடத்திய போது கருணா பிருத்தானியாவில் அகதியாக ஏற்கப்பட்டு திரும்ப இலங்கைக்கு நாடுகடத்தப்படாமல் இருந்திருந்தால் அந்த விளப்பமான ஆள், அடையாளம் காட்ட கெலியில் பறந்திருக்கார் என்பது சிலருக்கு மறதியால் விளப்பம் இல்லாமல் போகிறது.

 

இதனால் அந்த கருத்தில் காட்டப்படுவது போல "கருணா கெலியில் பறந்த கீரோ "அல்ல. விமானத்தில் திரும்பி அனுப்பிவைக்கபட்ட குற்றவாளி.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக்கு உங்களை  துரோகியாக்கி கொல்ல கூப்பிடுகின்றார்கள் என்று தெரிந்தால்  நீங்கள் என்ன செய்வீர்கள் ?

 

கருணாவை துரோகியாக்க வன்னிக்கு அழைக்கவில்லை. அல்லது போட்டுத் தள்ளவும் அழைக்கப்படவில்லை. கருணாவின் துரோகத்தின் பக்கங்களை கருணாவால் பழிவாங்கப்பட்ட போராளிகள் தளபதிகள் மட்டுமே கூறக்கூடியவர்கள். ஆனால் ஒரு இராணுக்கட்டமைப்பை எந்தத் தளபதியோ போராளியோ குலைக்க வேண்டுமென்று நினைக்கவில்லை. எல்லோரின் இலக்கும் தாயகம் நோக்கியதாகவே இருந்தது. கருணா கிழக்கில் தனக்குள் ஒரு இராச்சியத்தை நடத்தவே விரும்பியிருந்தார். தனது துரோகத்தனத்துக்கு துணை வராத பலரை போட்டுத்தள்ளியதும் துரோகிகளாக்கி சாகடித்ததும் பல சம்பவங்கள்.

ஒரு அநியாயச் சிறைக்குள் அந்த நேரம் பல போராளிகள் இருந்தார்கள். கருணாவின் துரோகத்தை தலைமைக்குத் தெரியப்படுத்துவதற்கு சிலர் முயன்றும் அது கைகூடாது போனது. காரணம் கருணாவின் பிடியை விட்டு வெளியேறி உண்மையைச் சொல்லப் போகிறவரை கருணா இராணுவத்தின் ஆளென்றோ அல்லது காட்டிக் கொடுத்தார் என்று கதையை மாற்றி அவர்களை ஏதாவதொரு வழியில் அழித்துவிடுவார். அந்தளவுக்கு கருணா ஒரு நரி.

வாடா வாடா என்றும், மச்சான் என்றும், அம்மான் என்றும், தோழா என்றெல்லாம் சிரித்துக் கொண்டு கண்ணுக்கு முன்னேயே நஞ்சு வைக்கக்கூடிய வஞ்சகன். எனினும்  இந்த வஞ்சகனையும் திருத்தி புலிகளின் ஒட்டுமொத்த இராணுவத்திற்கு தளபதியாக்கவே தலைவர் பிரபாகரன் விரும்பினார். தன்னருகில் கருணா வந்துவிட்டால் கருணா தவறுகள் செய்யாமல் இராணுவப்பணியில் கவனமாக இருப்பாரென நம்பினார் தலைவர்.

 

கருணாவிற்குள் குடியிருந்தது தசாப்த வஞ்சம் அதனை தீர்க்கவே தான் குறித்த முக்கியமானவர்களான பொட்டு அம்மான் , தமிழேந்தி ஐயா போன்றோரை வெளியேற்றுமாறு கோரினார். கருணா முதல் தலைவருக்கு எழுதிய கடிதத்தை ஒருக்கா எங்கேனும் எடுத்து வாசியுங்கோ. திட்டமிட்டு தனத வஞ்சகத்தை அரங்கேற்றியிருப்பது புரியும்.

இறுதியாக :- கருணா வன்னிக்கு அழைத்த போது போயிருந்தால் கருணாவே புலிகளின் இராணுவத்திற்குமான பொறுப்போடும் தகைமையோடும் இருந்திருப்பார். ஆனால் ஆசை யாரைத் தான் விட்டது. கருணாவும் பேராசையால் ஒட்டு மொத்த இனத்துக்னே உலைவைத்து இன்று குடியும் , கூத்துமாக ஒருநாளைக்கு மாரடைப்போ அல்லது ஏதாவதொரு நோயோதான் கருணாவைக் கொன்று போகும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தாக்குதலை நடத்தியது புலிகள்தான் என்பதில் சந்தேகமில்லையென்றாலும் கூட, பிச்சைக்காரன் புண்ணைக்காட்டி பிச்சை எடுப்பதுபோல சிங்கள அரசும் முஸ்லீம்களும் இதை ஒரு அடையாளமாகவே பாவிக்கிறார்கள். ஆனால் முள்ளிவாய்க்கால் பிணக்குவியலின் சுவடு கூடத் தெரியாமல் அழித்துவிட்டுச் சிங்கலமும் அதன் அடிவருடி முஸ்லீம்களும் எதுவுமே நடக்கவில்லை என்று சத்தியம் செய்கிறார்கள்.

 

சண்டமாருதன், புலிகளைக் குற்றம் சாட்டுவதில் உள்ள ஆர்வத்தைத் தமிழர்களுக்கு நடந்த அநியாயத்தை வெளிக்கொணர்வதிலும் காட்டலாமே??? அது அவ்வளவு கஷ்ட்டமா உங்களுக்கு ?

ரதி, உங்கள் பிரச்சினைதான் என்ன?? உங்களுக்கு புலிகள் மேல் ஆத்திரமா அல்லது இங்கு புலிகளை ஆதரித்து எழுதுபவர்கள் மேல் ஆத்திரமா?? எதுக்கெடுத்தாலும் விதண்டாவாதமாக எழுதுகிறீர்கள். 

 

அவர்களை விடுங்கள், உங்களுக்கு எப்படித் தலைப்பு வந்திருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். "தமிழ்ப் பிரிவினைவாதப் பயங்கரவாதிகள் நடத்திய பாரிய மனிதப் படுகொலைக்களம்" என்று வந்திருந்தால் திருப்திப்பட்டிருப்பீர்களோ??? எல்லோரும் சொல்லிவிட்டார்கள், உங்கள் பங்கிற்கு நீங்களும் சொல்வதுதானே?? யார் கேட்கப்போகிறார்கள் ?

 

 

நான் எழுதுவது உங்களுக்கு விதண்டவாதமாய் இருந்தால் அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது.மேலே நான் சொன்ன மாதிரி தலையங்கம் போட்டு இருந்தால் இப்படி வந்து இந்த தலைப்பில் எழுதி இருப்பீங்களா/இருப்பார்களா பேசாமல் பாத்திட்டு தானே இருப்பீங்கள் அதைத் தான் எழுதினேன்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை துரோகியாக்க வன்னிக்கு அழைக்கவில்லை. அல்லது போட்டுத் தள்ளவும் அழைக்கப்படவில்லை. கருணாவின் துரோகத்தின் பக்கங்களை கருணாவால் பழிவாங்கப்பட்ட போராளிகள் தளபதிகள் மட்டுமே கூறக்கூடியவர்கள். ஆனால் ஒரு இராணுக்கட்டமைப்பை எந்தத் தளபதியோ போராளியோ குலைக்க வேண்டுமென்று நினைக்கவில்லை. எல்லோரின் இலக்கும் தாயகம் நோக்கியதாகவே இருந்தது. கருணா கிழக்கில் தனக்குள் ஒரு இராச்சியத்தை நடத்தவே விரும்பியிருந்தார். தனது துரோகத்தனத்துக்கு துணை வராத பலரை போட்டுத்தள்ளியதும் துரோகிகளாக்கி சாகடித்ததும் பல சம்பவங்கள்.

ஒரு அநியாயச் சிறைக்குள் அந்த நேரம் பல போராளிகள் இருந்தார்கள். கருணாவின் துரோகத்தை தலைமைக்குத் தெரியப்படுத்துவதற்கு சிலர் முயன்றும் அது கைகூடாது போனது. காரணம் கருணாவின் பிடியை விட்டு வெளியேறி உண்மையைச் சொல்லப் போகிறவரை கருணா இராணுவத்தின் ஆளென்றோ அல்லது காட்டிக் கொடுத்தார் என்று கதையை மாற்றி அவர்களை ஏதாவதொரு வழியில் அழித்துவிடுவார். அந்தளவுக்கு கருணா ஒரு நரி.

வாடா வாடா என்றும், மச்சான் என்றும், அம்மான் என்றும், தோழா என்றெல்லாம் சிரித்துக் கொண்டு கண்ணுக்கு முன்னேயே நஞ்சு வைக்கக்கூடிய வஞ்சகன். எனினும்  இந்த வஞ்சகனையும் திருத்தி புலிகளின் ஒட்டுமொத்த இராணுவத்திற்கு தளபதியாக்கவே தலைவர் பிரபாகரன் விரும்பினார். தன்னருகில் கருணா வந்துவிட்டால் கருணா தவறுகள் செய்யாமல் இராணுவப்பணியில் கவனமாக இருப்பாரென நம்பினார் தலைவர்.

 

கருணாவிற்குள் குடியிருந்தது தசாப்த வஞ்சம் அதனை தீர்க்கவே தான் குறித்த முக்கியமானவர்களான பொட்டு அம்மான் , தமிழேந்தி ஐயா போன்றோரை வெளியேற்றுமாறு கோரினார். கருணா முதல் தலைவருக்கு எழுதிய கடிதத்தை ஒருக்கா எங்கேனும் எடுத்து வாசியுங்கோ. திட்டமிட்டு தனத வஞ்சகத்தை அரங்கேற்றியிருப்பது புரியும்.

இறுதியாக :- கருணா வன்னிக்கு அழைத்த போது போயிருந்தால் கருணாவே புலிகளின் இராணுவத்திற்குமான பொறுப்போடும் தகைமையோடும் இருந்திருப்பார். ஆனால் ஆசை யாரைத் தான் விட்டது. கருணாவும் பேராசையால் ஒட்டு மொத்த இனத்துக்னே உலைவைத்து இன்று குடியும் , கூத்துமாக ஒருநாளைக்கு மாரடைப்போ அல்லது ஏதாவதொரு நோயோதான் கருணாவைக் கொன்று போகும்.

 

சாந்தி அக்காவும் இப்ப உணர்ச்சி வசப்ப்பட்டு எழுத வெளிக்கிட்டார் :o  இன்னொரு திரியில் இப்பத் தானே 4 வருடம் போயிருக்கு என்று எழுதி இருந்தார்.அதையே தான் நானும் சொல்கிறேன் உண்மை ஒரு நாளும் உறங்காது அக்கா அது 4 வருடமானாலும்,40 வருடமானாலும் வெளியில் வந்தே தீரும்

கருணாவை துரோகியாக்க வன்னிக்கு அழைக்கவில்லை. அல்லது போட்டுத் தள்ளவும் அழைக்கப்படவில்லை. கருணாவின் துரோகத்தின் பக்கங்களை கருணாவால் பழிவாங்கப்பட்ட போராளிகள் தளபதிகள் மட்டுமே கூறக்கூடியவர்கள். ஆனால் ஒரு இராணுக்கட்டமைப்பை எந்தத் தளபதியோ போராளியோ குலைக்க வேண்டுமென்று நினைக்கவில்லை. எல்லோரின் இலக்கும் தாயகம் நோக்கியதாகவே இருந்தது. கருணா கிழக்கில் தனக்குள் ஒரு இராச்சியத்தை நடத்தவே விரும்பியிருந்தார். தனது துரோகத்தனத்துக்கு துணை வராத பலரை போட்டுத்தள்ளியதும் துரோகிகளாக்கி சாகடித்ததும் பல சம்பவங்கள்.

ஒரு அநியாயச் சிறைக்குள் அந்த நேரம் பல போராளிகள் இருந்தார்கள். கருணாவின் துரோகத்தை தலைமைக்குத் தெரியப்படுத்துவதற்கு சிலர் முயன்றும் அது கைகூடாது போனது. காரணம் கருணாவின் பிடியை விட்டு வெளியேறி உண்மையைச் சொல்லப் போகிறவரை கருணா இராணுவத்தின் ஆளென்றோ அல்லது காட்டிக் கொடுத்தார் என்று கதையை மாற்றி அவர்களை ஏதாவதொரு வழியில் அழித்துவிடுவார். அந்தளவுக்கு கருணா ஒரு நரி.

வாடா வாடா என்றும், மச்சான் என்றும், அம்மான் என்றும், தோழா என்றெல்லாம் சிரித்துக் கொண்டு கண்ணுக்கு முன்னேயே நஞ்சு வைக்கக்கூடிய வஞ்சகன். எனினும்  இந்த வஞ்சகனையும் திருத்தி புலிகளின் ஒட்டுமொத்த இராணுவத்திற்கு தளபதியாக்கவே தலைவர் பிரபாகரன் விரும்பினார். தன்னருகில் கருணா வந்துவிட்டால் கருணா தவறுகள் செய்யாமல் இராணுவப்பணியில் கவனமாக இருப்பாரென நம்பினார் தலைவர்.

 

கருணாவிற்குள் குடியிருந்தது தசாப்த வஞ்சம் அதனை தீர்க்கவே தான் குறித்த முக்கியமானவர்களான பொட்டு அம்மான் , தமிழேந்தி ஐயா போன்றோரை வெளியேற்றுமாறு கோரினார். கருணா முதல் தலைவருக்கு எழுதிய கடிதத்தை ஒருக்கா எங்கேனும் எடுத்து வாசியுங்கோ. திட்டமிட்டு தனத வஞ்சகத்தை அரங்கேற்றியிருப்பது புரியும்.

இறுதியாக :- கருணா வன்னிக்கு அழைத்த போது போயிருந்தால் கருணாவே புலிகளின் இராணுவத்திற்குமான பொறுப்போடும் தகைமையோடும் இருந்திருப்பார். ஆனால் ஆசை யாரைத் தான் விட்டது. கருணாவும் பேராசையால் ஒட்டு மொத்த இனத்துக்னே உலைவைத்து இன்று குடியும் , கூத்துமாக ஒருநாளைக்கு மாரடைப்போ அல்லது ஏதாவதொரு நோயோதான் கருணாவைக் கொன்று போகும்.

நீங்கள் சொல்லுவைதையெல்லாம் கேட்க முன்பு ஒரு கூட்டம் இருந்தது உண்மை .

சென் ஜோன்ஸ் அதிபர் கொலை ,ரஜனி கொலை ,முஸ்லீம்கள் வெளியேற்றம் ,மாத்தையா கொலை அமிர் கொலை .இப்படி எத்தனை கதை கேட்டனாங்கள் .

எங்களுக்கு எப்பவும் உண்மை என்னவென்று தெரிந்துதான் இருந்தது பலருக்கு விசுவாசம் கண்ணை மறைத்துவிட்டது .

இனி நாட்டில் போய் ஏதும் கதை கதைத்தால் சனம் காறித்தான் துப்பும் அக்கா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.