Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பால் தாக்கரே காலமானார்

Featured Replies

இந்தியாவின் கடும்போக்கு ஹிந்து அரசியல் தலைவர்களில் ஒருவரான சிவசேனை கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே இன்று சனிக்கிழமை பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 86.

[size=3][size=4]நுரையீரல் மற்றும் கணையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாக்கரே பாதிக்கப்பட்டிருந்தார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு, மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துவிட்டதாக அவரது மருத்துவர் ஜலில் பார்கர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]அவரது உடல்நிலை கடந்த சில நாட்களமாக மோசமடைந்து வந்த நிலையில், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக நேற்றிரவு வரை சிவசேனைத் தலைவர்கள் கூறிவந்தனர்.[/size][/size]

[size=3][size=4]தாக்கரே மறைவை ஒட்டி, மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/india/2012/11/121117_paltakkre.shtml

  • Replies 117
  • Views 9.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

பால் தக்கரே ஆரம்ப காலத்தில்... ஈழத்தில் பாதிக்கப்படுவது இந்து தமிழர்கள் என்னும்... முறையில் எமது ஈழப் போராட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர். பிற்காலத்தில், என்ன காரணமோ.... தெரியவில்லை, அமைதியாக இருந்துவிட்டார்.

அன்னாருக்கு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இவர் கருத்து வெளியிட்டிருந்தாலும் அதற்கு முந்திய காலப்பகுதியில் இருந்தே எனக்கு இவரைப் பிடிக்கும். மராட்டியர்களின் இன உணர்வை வளர்ப்பதில் அக்கறையாக இருந்ததார்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

Baltakre1.jpg

பால் தக்கரே இளமையில் இருக்கும் போது... எடுத்த படம்.

Shiv-Sena-chief-Bal-Thackeray.jpg

முதுமையில்....

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]இந்த அமைப்பை 'இந்து தீவிரவாத அமைப்பு' என அழைத்ததும் கூட அரசியல். [/size][/size]

[size=1]

[size=4]மறைவிற்கு அனுதாபங்கள் ![/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

Shiv Sena Chief Bal Thackeray no mo...

SHARE THIS STORY

0

பால் தாக்கரே மரணம் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியை ரொம்பவே பாதித்துள்ளது.

அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வந்த ரஜினி, இன்று பிற்பகல் தாக்கரே மரணம் அடைந்துவிட்டார் என்பது தெரிந்ததும் மிகுந்த வேதனையுடன் கண்ணீர் வடித்தாராம்.

முன்பு எந்திரன் படம் வெளியான சமயத்தில் மும்பை சென்ற ரஜினி, நேராக பால் தாக்கரே வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்து ஆசி பெற்றார்.

தனது தந்தைக்கு நிகரான பாசம் காட்டும் உயர்ந்த மனிதர் பால் தாக்கரே என்று ரஜினி அப்போது கூறியிருந்தார்.

ரஜினியைப் பற்றி எப்போதுமே மிக உயர்ந்த கருத்து கொண்டிருந்தார் பால் தாக்கரே. மும்பையில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரமும் சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பின்பற்ற வேண்டும். தான் வசிக்கும் மண்ணுக்கும் தன்னை நேசிக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பவர் ரஜினிகாந்த். அவர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று முன்பொரு சமயம் தாக்கரே ரஜினியைப் பாராட்டியிருந்தார்.

ரஜினியின் தமிழ்ப் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்தபோது, சிவசேனையின் ஆதரவு பூரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Thatstamil

0

மும்பை: மும்பையில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே, மகாராஷ்டிரா மாநில மக்களின் உரிமைகளுக்கான குரல் கொடுத்ததுடன் கடந்த அரை நூற்றாண்டு கால மகராஷ்டிரா அரசியலில் அசைக்க முடியாத தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தவர்.

மகாராஷ்டிராவின் பூனேவில் 1926-ம் ஆண்டு பிறந்த பால்தாக்கரே கார்ட்டூனிஸ்டாக மும்பையில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1966களில் மராட்டிய இனத்துக்கான சிவசேனா கட்சியைத் தொடங்கினார்.

மகாராஷ்டிர மாநிலம் மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தவர் அவர். மகராஷ்டிராவில் செல்வாக்கு மிக்க அரசியலைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு கட்சியாக சிவசேனாவை உருவாக்கியவர் பால்தாக்கரே. தமது கட்சிக்காக சாம்னா என்ற பத்திரிகையை உருவாக்கினார்.

1995-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து மகராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் பால்தாக்கரே எந்த ஒரு பொறுப்பையும் ஏற்கவில்லை.

பொதுவாக எந்த ஒரு ஊடகத்துக்கும் பேட்டி கொடுக்காத பால்தாக்கரே, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் மட்டுமே கருத்துகளை எழுதி வந்தார். அதுவே அவரது கட்சியினருக்கான கட்டளையாகவும் இருந்தது.

கார்ட்டூனிஸ்டாக வாழ்க்கையைத் தொடங்கி சாம்னாவின் ஆசிரியராக, காலம்னிஸ்டாக வாழ்க்கையை நிறைவு செய்தவர் பால்தக்கரே. பால்தாக்கரேவின் மகன் உத்தவ்தாக்கரேதான் அரசியல் வாரிசாக சிவசேனாவை நடத்தி வருகிறார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியை நடத்தவிடமாட்டேன் என்பதுதான் பால்தாக்கரேயின் இறுதிப் போராட்ட அறிவிப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Thatstamil

மும்பை: உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே இன்று காலமானார். அவருக்கு வயது 86.

மராட்டிய இனம், இந்திய நாடு, இந்து மதத்திற்கு ஆதரவான கொள்கைளை கொண்டது சிவசேனா கட்சி. இந்து மத ஆதரவு கொள்கைகளை கொண்ட, சிவசேனா கட்சி, 1966ல், துவக்கப்பட்டது.மும்பை நகரில், இந்துக்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் பாதுகாப்பான கட்சி என்ற பெயர் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் தலைவராக, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியல் நடத்தி வருபவர், பால் தாக்கரே, 86.சில மாதங்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த புதன் கிழமை மிகவும் மோசமான நிலையை அடைந்தார். மூச்சு விடுவதில் சிரமம், இருதய கோளாறால் அவதிப்பட்ட அவருக்கு, அவரின் இல்லமான, மும்பை, பாந்த்ராவில் உள்ள, "மாதோஸ்ரீ'யின், இரண்டாவது மாடியில் உள்ள, அவரின் தனியறையில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது.

மும்பை நகரின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான, லீலாவதி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், 24 மணி நேரமும், பால் தாக்கரே உடல் நிலையை கண்காணித்து, சிகிச்சை அளித்து வந்தனர்.."தாக்கரே கவலைக்கிடமாக உள்ளார்' என்ற தகவல் பரவியதும், அவர் மீது மிகுந்த அன்பு கொண்ட கட்சியினர், மாதோஸ்ரீ முன் கூடி, "ஜெய் பவானி... ஜெய் சிவாஜி...' என்று கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். அரசியல், சினிமா மற்றும் கலைத்துறை பிரமுகர்கள், மாதோஸ்ரீக்கு வந்த வண்ணம் இருந்தனர்.எனினும், அவர்கள் யாரும், தாக்கரேயை சந்திக்க முடியவில்லை. தனியறையில் இருந்த அவரை, சிவசேனா கட்சியின் செயல் தலைவர், உத்தவ் தாக்கரே, அவரின் மனைவி, ராஷ்மி மற்றும் லீலாவதி மருத்துவமனை டாக்டர்கள் மட்டுமே கவனித்து வந்தனர்.கடந்த புதன் கிழமை, தாக்கரே உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், வியாழக்கிழமை சற்று முன்னேற்றம் ஏற்பட்டதால், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த, உயிர் காக்கும், அவசர கருவிகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில் பால் தாக்கரே இன்று மாலை 3.33 மணியளவில் காலமானதாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அறிவித்தார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக கூறினார். பால் தாக்கரேவின் இறுதி தகனம்நாளை மாலை 3 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் பால் தாக்கரேவின் உடல் சிவாஜி பூங்காவில் அஞ்சலிக்கு வைக்கப்படும்.

கடந்த 1926ம் ஆண்டு பால் தாக்கரே பிறந்தார். 1926 ம் ஆண்டு அரசியல் வார இதழை துவக்கினார். கார்ட்டூன் வரைவதில் பால் தாக்கரே, பத்திரிகை ஒன்றில், கார்ட்டூனிஸ்டாக அறிமுகமாகி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தீவிர அரசியலில் ஈடுபட்டார். கடந்த 196ம் ஆண்டு சிவசேனா கட்சி ஆரம்பித்த பின்னர் கட்சிக்கு சாம்னா பத்திரிகையை துவக்கினார். இதில் பல்வேறு கட்டுரைகள் மற்றும் தலையங்கங்களை பால் தாக்கரே எழுதி வந்தார். கடந்த 1995ம் ஆண்டு பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி ஆட்சியை பிடித்தது. அப்போது தாக்கரே அமைச்சர் பொறுப்பு ஏதும் ஏற்கவில்லை. பம்பாய் என்ற, அந்நகரின் பெயரை, மும்பா தேவி நினைவாக, மும்பை என, மாற்றியதில், தாக்கரேயின் பங்கு அதிகம்.தாக்கரேவுக்கு பிந்து தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் உத்தவ் தாக்கரே அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டு, தற்போது அவர் சிவசேனா கட்சியின் செயல் தலைவராக உள்ளார்.

பால் தாக்கரே காலமானதை தொடர்ந்து, சிவசேனா தொண்டர்கள் அமைதி காக்கும்படி, உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார். பால் தாக்கரேவின் காலமானதை தொடர்ந்து மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை நகரின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பா.ஜ., இரங்கல்: பால் தாக்கரே காலமானதற்கு பாரதிய ஜனதா கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.,வின் ஷா நவாஸ் ஹூசைன் கூறுகையில், பால் தாக்கரே புலி போல் வாழ்ந்தவர், அவர் இந்திய அரசியலில் முக்கிய தலைவர். இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் அவர் ஒருவர். அவரது மரணத்திற்கு பா.ஜ., இரங்கலை தெரிவித்து கொள்கிறது என கூறினார். பால் தாக்கரே காலமான‌து மிகுந்த மனவேதனை அளிப்பதாக லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பால் தாக்கரே காலமானதை தொடர்ந்து, எதிர்கட்சிக்கு பிரதமர் அளிக்க இருந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

Dinamalar

உண்மையான இந்துவாக வாழ்ந்து காட்டியவர் இந்துகளுக்கு மிகப்பெரிய இழப்பு

ஆழ்ந்த அனுதாபங்கள்

Edited by SUNDHAL

மராட்டிய சிங்கம் இந்திய இந்து மத காவலர் பால்தாக்ரேவிட்கு கண்ணீர் அஞ்சலிகள்

பால்தக்கரே எம்மை கூலிப்படைகளாக கருதியவர். இவரது அரசியலும் முஸ்லிம் தீவிரவாதிகளின் அரசியலும் சோபித தேரோ போன்ற பவுத்த துறவிகளின் அரசியலும் ஒன்றுதான். கடந்த முறை (இந்த முறை அல்ல) இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை கண்டித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

பால்தக்கரே எம்மை கூலிப்படைகளாக கருதியவர். இவரது அரசியலும் முஸ்லிம் தீவிரவாதிகளின் அரசியலும் சோபித தேரோ போன்ற பவுத்த துறவிகளின் அரசியலும் ஒன்றுதான். கடந்த முறை (இந்த முறை அல்ல) இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை கண்டித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுமையில்... அறழை பேர்ந்திருக்கலாம்.

முதுமையில்... அறழை பேர்ந்திருக்கலாம்.

உண்மை சிறி அண்ணை நான் அவர் மீது பற்று வைத்துள்ளேன். மராட்டியம் மராட்டியருக்கே என்ற உண்மைய உரத்து கூறியவர் இந்திகளுக்கு சவாலாக இருந்தவர். இந்துகள் மீது பாசம் உள்ளவர் அதைப் பார்த்து என்றாலும் தமிழ் நாட்டு தமிழர் திருந்துவர் என்று நினைப்பவன் நான்.

ஆழ்ந்த இரங்கல்கள்...

இரங்கல்கள்.

பால்தக்கரே எம்மை கூலிப்படைகளாக கருதியவர். இவரது அரசியலும் முஸ்லிம் தீவிரவாதிகளின் அரசியலும் சோபித தேரோ போன்ற பவுத்த துறவிகளின் அரசியலும் ஒன்றுதான். கடந்த முறை (இந்த முறை அல்ல) இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை கண்டித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியான கருத்து, இதையே எழுதவேண்டும் என்றிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் வெள்ளத்தில் 10 மணி நேர இறுதி ஊர்வலம்... அரசு மரியாதையுடன் பால் தாக்கரே உடல் தகனம்!

18-bal-thackeray-funeral-4-300.jpg

[size=3]

[size=4]மும்பை: மும்பையில் நேற்று காலமான சிவசேனா தலைவர் பால் தாக்கரே உடல் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. முன்னதாக 10 மணி நேரத்துக்கும் மேலாக பால்தாக்கரேவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

உடல்நலக் குறைவால் காலமான பால்தாக்கரேவின் உடல் இன்று காலை அவரது இல்லத்திலிருந்து சிவாஜிபூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது இல்லத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவாஜிபூங்கா வரை சாலை முழுவதும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். சுமார் 20 லட்சம் பேர் பால்தாக்கரேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரண்டிருந்தனர். இதனால் மாலை 5 மணிக்குத்தான் சிவாஜிபூங்காவை அடைய முடிந்தது. வழியில் சிவசேனாவின் தலைமையகமான சேனா பவனில் சிறிது நேரம் பால்தாக்கரேவின் உடல் வைக்கப்பட்டது[/size][/size][size=3]

[size=4]மும்பை நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்து முற்றாக முடங்கியது. வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் இயங்கவில்லை. திரும்பிய இடங்களிலெல்லாம் பால்தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்தக் கூடிய வகையில் அவரது புகைப்படம் வைக்கப்பட்டிருக்கிறது.[/size][/size][size=3]

[size=4]திரை உலகப் பிரபலங்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் குவிந்தனர். மும்பை நகரில் இதுவரை அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.[/size][/size][size=3]

[size=4]சிவாஜி பூங்காவில் மாலை 6 மணி அளவில் முழுமையான அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உத்தவ் தாக்கரே தீ மூட்ட பால்தாக்கரேவின் உடல் தகனம் செய்யப்பட்டது.[/size][/size][size=3]

[size=4]பெல்காமில் பந்த்[/size][/size][size=3]

[size=4]இதனிடையே மகராஷ்டிரா மாநில எல்லையான கர்நாடகத்தின் பெல்காம் பகுதியில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் கடைகள் அடைக்கப்பட்டன, போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது,[/size][/size][size=3]

[size=4]கர்நாடக மாநிலத்தின் ஒருபகுதியாக பெல்காம் இருந்தாலும் பால்தாக்கரே போன்றவர்கள் மகராஷ்டிராவுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினர். இந்த சர்ச்சை இன்னும் முடிவடையாத நிலையில் பால்தாக்கரே மறைவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் முழு அடைப்பால் அங்கு பதற்றம் நிலவியது.[/size][/size][size=3]

http://tamil.oneindia.in/news/2012/11/18/india-sena-chief-bal-thackeray-begins-last-journey-164814.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி வணக்கம்

எமக்காக குரல் கொடுக்க இருக்கும் ஒரு உறவு என்ற நம்பிக்கையை எம்மனதில் தானே வளர்த்துவிட்டு

இறுதி நேரத்தில் எம்மை தானாகவே கைவிட்டவர்.

இவர் மீது தனிப்பட மரியாதை கிடையாது விடினும் இவரை விரும்பும் ஒரு தொகுதி மக்களுக்காக இறுதி அஞ்சலிகள்.

பால் தாக்கரே அரசியல் தொடங்கியதே "மும்பையில் இருந்து தமிழரை விரட்டியடிப்போம்" என்ற இயக்கத்தில் தான் .பின் மும்பையில் தமிழனின் பலம் விளங்கி வாயை மூடிவிட்டார் .

பல வருடங்களின் பின் புலிகளும் இந்துக்கள் என்று கேள்விப்பட்டுத்தான் ஆதரவை கொடுத்திருந்தார்.

அவ்வளவு விளக்கம் யாழில் இருக்கும் பலர் போல .

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பால்தக்கரே எம்மை கூலிப்படைகளாக கருதியவர். இவரது அரசியலும் முஸ்லிம் தீவிரவாதிகளின் அரசியலும் சோபித தேரோ போன்ற பவுத்த துறவிகளின் அரசியலும் ஒன்றுதான். கடந்த முறை (இந்த முறை அல்ல) இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததை கண்டித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் பற்றி அவர் ஓரிரு கருத்துக்கள் தான். அதற்குள்ளேயே நீங்கள் ஆயிரம் அர்த்தம் கண்டுபிடிக்கும் திறமைசாலியாக இருப்பதையிட்டு பெருமிதடைகின்றேன். அவருக்கு முஸ்லீம்களைப் பிடிக்காது என்ற கொள்கையோடு, அதை நடைமுறைப்படுத்துதாக யார் நடந்து கொண்டாலும் அதை ஆதரிக்கவே செய்ததாக நான் நம்புகின்றேன்.ஒரு 3ம் மனிதன் அவ்வளவு தான் ஆதரவு கொடுக்க முடியும் என நினைக்கின்றேன். இதற்காகத் தன் படையைக் கொண்டு வந்து போரிட முடிந்தால், அது பெரிய உபகாரமே தவிர, அப்படிச் செய்ய வேண்டும் என எதிர்பார்த்து நாங்கள் நிற்பது முட்டாள்தனம். ஏனென்றால் எங்களுக்கு எப்படி எங்கள் இனம் பெரிதோ, அவருக்கு மராட்டியர்களும், அவர்களின் இனம் தான் பெரிது. அவரில் பிடித்தது, தன் கொள்கையில் இறுதிவரை பயணித்தார் . தங்களை வீரசிவாஜி வம்சம் என்று பெருமிதம் கொள்வதால் தான் இப்படி சிவசேனை வளர்ந்தது. அந்த வளர்ச்சியால் தான் என்னவோ, ராஜராஜ சோழனை முன்னிலைப்படுத்த இந்திய அரசு தடை போடுகின்றது. அவரின் புகழை மறைக்கின்றது. ஒரு காலத்தில் ஜோர்ஜ் பெனர்ண்டஸ் ஈழத்துக்கு ஆதரவாக தன் வீட்டில் மாநாடு போட்டார். இயக்கத்தை ஆதரித்தார். ஆனால் அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதில் இந்தியா இடையூறு செய்ததது. அவர் தன் இனம் மீது கொண்ட கொள்கை, பற்றுறுதி, மற்றும் அவர் கொண்டிருந்த மதநம்பிக்கையில் எனக்குச் சிவசேனை மீதும், அவர் மீதும் பற்று உண்டு. வன்முறை செய்தார், அது செய்தார் என்றார் என்றால் யாராவது சொன்னால், ” கல்லறியத்தக்கவர்கள் யார் என்று நானும் யேசு மாதிரிக் கேட்க வேண்டிவரும்....

பால் தாக்கரேவின் பாசிச அரசியலைக் கண்டிச்சு அவரது மரணத்தை இரங்கல்களை போடாதவன் என்ற ”வரலாற்றுப் பழி” என் மீது கவிந்துவிடக்கூடாது என்ற பயத்தில் “அவன் ஒரு சோதாப்பயல்” என்று பதிவு செய்து வைத்துவிடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சோதாபையல் அப்பிடினா என்ன?

ஒரு காலத்தில் ஜோர்ஜ் பெனர்ண்டஸ் ஈழத்துக்கு ஆதரவாக தன் வீட்டில் மாநாடு போட்டார். இயக்கத்தை ஆதரித்தார். ஆனால் அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதில் இந்தியா இடையூறு செய்ததது.

பிஜேபி அரசில் நமது பிரச்னையை `அடக்கியே வாசித்தார்கள்.

புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதைத் தடுத்தது, சந்திரிகா / ரத்வத்தை ஆகியோர் சத்திய சாயிபாபா மூலம் ஆளும் இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்த விடயம்... என் இனமில்லாத, எம் இரத்த உறவு இல்லாத ஒருவனால், ஆதரவு தான் தெரிவிக்க முடியுமே தவிர, எங்களுக்காகப் போராட வேண்டிய தேவை அவனுக்கில்லை... அப்படி அவன் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.