Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது மாரிகாலம் எந்தனூரில்.......................

Featured Replies

கரியமேகங்கள் திரண்டு கலையும்_அந்த 

நிழல் படிந்து மறையும்,

வெயில் பட்டு தேகம் சிலிக்கும், 

மெல்லிய கூதல் காற்றில் பரவும். 

மாலை சரிகையில் _அந்தரத்தில்  

மழைப்பூச்சிகள் உலாவும்

பின்னான இரவுகள்  இருண்டு கிடக்கும். 

இது மாரிகாலம் எந்தனூரில்.

 

நீர் மோதும் வரப்புகளில், 

கொக்குகளும் நாரைகளும் நடைபோடும் 

இரை தேடி, 

சிலநேரம்  இடம் மாறும். 

வத்தாக்கிணறு  மேவிக்கிடக்கும் வெள்ளம் 

மிதப்பவற்றில் எல்லாம் 

எரியெறும்புகள் ஏறித்தவிக்கும்.

 

காற்றில் சலசலக்கும் நெற்கதிர்கள் 

நெஞ்சம் தொடும், *நெற்கொழுவில்

 விதைக்காத சில நிலத்தில் 

அல்லியும் நீர்முள்ளியும் முளைதள்ளி கிடக்கும். 

இது மாரிகாலம் எந்தனூரில்.

 

பச்சைபிடித்து,

அடர்ந்து நிற்கும் ஆலமரம்_அருகில் 

அடங்கி இருக்கும் வைரவருக்கு 

திருவம்பா பூஜை நடக்கும்.

தலைமுறையாய் தொடரும்  

சங்கூதலும்  சில களவுகளும்.

நடக்கும் இம்முறையும். 

 

ஆறுமணிக்கே இருட்டும்

நேரம்கடந்தும்,

பசும்புல் படர்ந்திருக்கும் மைதானத்தில், 

வழக்காடிய கதைகளுடன் 

எப்படியும் இருப்பர் ஒரு சிலராவது.

இது மாரிகாலம் எந்தனூரில்.

 

*மதவடியும் வேலகாடும் 

தேவதை கடக்கும் சந்திகள்.

யாருக்காக யார் என்றே தெரியாது 

ஆளை ஆள் சாட்ட அவளுக்கு ஒன்றும் புரியாது.

கண்டும் கானாமலும் கடந்து போன  

அவளுக்குள்ளும் _அந்த 

மாரிகாலம் இன்னும் இருக்கும்.

 

இங்கேயும், 

இது மாரிகாலம் தானாம்.

மரங்களிலும்  வீதிகளிலும் 

அடுக்கு மாடிகளிலும் பனி படர்ந்து குளிர்கிறது._பின் 

மழை கழுவி போகிறது.  

"இது மாரிகாலம் தான்".

எல்லோரும் சொல்கிறார்கள். 

என்னால் அப்படி  சொல்லமுடியவில்லை.!!!!!!!!!

 

 

 

*நெற்கொழு /எனது ஊர்(மருதநிலம்) 

*மதவடி ,வேலகாடு /எனது ஊரின் சந்திகள் 

 

 

எனக்குப்பிடித்த காலம் மாரி, ஜாலியா மழைக்குள் நனையலாம். வெள்ளத்தில் காலால் சத்தம் வருகின்ற மாதிரி வெடி அடிக்கலாம், ...எத்தனை விளையாட்டுக்கள். நன்றி பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

 

காற்றில் சலசலக்கும் நெற்கதிர்கள் 

நெஞ்சம் தொடும், *நெற்கொழுவில்

விதைக்காத சில நிலத்தில் 

அல்லியும் நீர்முள்ளியும் முளைதள்ளி கிடக்கும். 

இது மாரிகாலம் எந்தனூரில்.

 

 

தம்பளப் பூச்சிகள் நெருப்புத் துளிகளாய்,

ஊர்க்கோலம் போகும்!

புற்றீசல்களைத் தேடிச் சின்னக் குருவிகள்,

கண்ணாமூச்சி விளையாடும்!

முளையரும்பும் சின்னக் குரும்பெட்டிகளை,

எலிகள் கடித்துத் துப்பும்!

மாரி கண்ட மிளக்காயக்கன்றுகள்,

மனதுக்குள் மெதுவாய்ச் சிரிக்கும்!.

 

இது எனது ஊரின் மாரிகாலம், நேற்கொழுதாசன்! :D

 

உங்கள் கவிதை, இனிய நினைவுகளை, ஏக்கத்துடன் தடவிச் செல்கின்றது! நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நேற்கொழுதாசன் பழைய நினைவுகளை கிளப்பிவீட்டீர்கள், நன்றி பகிர்வுக்கு. 

எங்கே ஐயா இவ்வளவு நாளும் இருந்தீர்கள்? மிகவும் பொறுமையாக ஒவ்வொரு வார்த்தைகளையும் அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள். மாரி காலம் மழையால் மனம் நிரம்பும் காலம்.

 

அழகான கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

மயிலிறகாய் மனதை வருடிச்செல்லும் உங்கள் மாரிகாலக் கவிதைக்கு பாரட்டுக்கள் நேற்கொழுதாசன் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி உங்களால் இப்படி எழுத முடிகிறது நேற்கெழுதாசன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். :unsure: அருமையான ஆக்கத்திற்கு நன்றிகள் நெற்கொழுதாசன்.

  • கருத்துக்கள உறவுகள்

மனதால் மறவாத உணர்வுகள். பாராட்டுக்கள்

கரியமேகங்கள் திரண்டு கலையும்_அந்த 

நிழல் படிந்து மறையும்,

வெயில் பட்டு தேகம் சிலிக்கும், 

மெல்லிய கூதல் காற்றில் பரவும். 

மாலை சரிகையில் _அந்தரத்தில்  

மழைப்பூச்சிகள் உலாவும்

பின்னான இரவுகள்  இருண்டு கிடக்கும். 

இது மாரிகாலம் எந்தனூரில்.

 

நேராக என்மனதைக் கொழுவி , வந்த மாரியில் செம்பாட்டு புழுதி மண் வாசத்தை மணக்கச் செய்த உங்களுக்கு எனது இயங்கனிந்த வாழ்த்துக்கள் :) :) .

Edited by கோமகன்

மதவடியும் வேலகாடும் தேவதை கடக்கும் சந்திகள். யாருக்காக யார் என்றே தெரியாது ஆளை ஆள் சாட்ட அவளுக்கு ஒன்றும் புரியாது. கண்டும் கானாமலும் கடந்து போன அவளுக்குள்ளும் _அந்த மாரிகாலம் இன்னும் இருக்கும் உண்மையில் நீண்ட காலத்திற்கு பிறகு தமிழீழ கவிஞ்சர்கள் வரிசையில் ஒருவனாய் காண்பதில் எண்ணற்ற மகிழ்ச்சி .அதற்காக ஏனைய மற்ற கவிஞ்சர்களை நான் தரமற்றவர்கள் என்று கூறவில்லை .....................வாழ்க கலை தமிழீழம் என்னும் உன்னதமான நாடு பிறக்கும்போது இவர்கள் வானுயர்வர் ..................நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

 

தேவதை கடக்கும் சந்திகள்.

யாருக்காக யார் என்றே தெரியாது 

ஆளை ஆள் சாட்ட அவளுக்கு ஒன்றும் புரியாது.

கண்டும் கானாமலும் கடந்து போன  

அவளுக்குள்ளும் _அந்த 

மாரிகாலம் இன்னும் இருக்கும்

 

 

எத்தனை தேவதைகள் கடந்து போனதைப் பார்த்தோம். இப்போதும் அவர்கள் தேவதைகளாகவே தெரிகின்றனர்.

 

நன்றி கவிதைக்கும், தேவதைகளை நினைவூட்டியதற்கும்.

  • தொடங்கியவர்

           ஒவ்வொருவராக நன்றி சொல்லணும் என்றுதான் ஆசையாய் இருக்கு.இருந்தும், உங்களது அருமையான நேரத்தை வினாடிக்க நான் விரும்பவில்லை.எனக்குள்ளும் சில திறமைகள் ஒளிந்திருப்பதை உங்களின் கருத்துக்களை பார்த்தபின் தான் தெரிகிறது. மிகவும் சந்தோசமாக உள்ளது.மிகுந்த உற்சாகத்தினை தரும் உங்களின் கருத்திடல்கள் எனது இருத்தலை இன்னும் அழகாக்கும். 

                                 இந்த மழைக்காலம் உங்களின் மனதையும் நனைத்து சென்றிருப்பதையிட்டு மகிழ்வடைகிறேன், தொடர்ந்தும் விமர்சியுங்கள் அது என் பிழைகளை திருத்தி என்னையும் ஒரு பதிவராக யாழில் உலாவர உறுதுணை புரியும்.ஒரு பதிவருக்கு கிடைக்கும்  மிகப்பெரிய ஆசிர்வாதம் உங்களின் கருத்திடல்களால் எனக்கு கிடைத்திருக்கிறது.அதுவே இனி என்னை தொடர்ந்தும் இயங்கவைக்கும் சக்திகளையும் கொடுத்துள்ளது. அரவணைத்து செல்லும் அனைவருக்கும் என் அன்புகலந்த நன்றிகள் நன்றிகள்.

Edited by நேற்கொழு தாசன்

அருமையான கவிதைக்கு என் மனமார்ந்த நன்றிகள் நேற்கொழுதாசன்.
ஊர் நினைவில் நனைய வைத்தது தங்களின் மழைக்கால கவிதை. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கரியமேகங்கள் திரண்டு கலையும்_அந்த 

நிழல் படிந்து மறையும்,

வெயில் பட்டு தேகம் சிலிக்கும், 

மெல்லிய கூதல் காற்றில் பரவும். 

மாலை சரிகையில் _அந்தரத்தில்  

மழைப்பூச்சிகள் உலாவும்

பின்னான இரவுகள்  இருண்டு கிடக்கும். 

இது மாரிகாலம் எந்தனூரில்.

 

நீர் மோதும் வரப்புகளில், 

கொக்குகளும் நாரைகளும் நடைபோடும் 

இரை தேடி, 

சிலநேரம்  இடம் மாறும். 

வத்தாக்கிணறு  மேவிக்கிடக்கும் வெள்ளம் 

மிதப்பவற்றில் எல்லாம் 

எரியெறும்புகள் ஏறித்தவிக்கும்.

 

காற்றில் சலசலக்கும் நெற்கதிர்கள் 

நெஞ்சம் தொடும், *நெற்கொழுவில்

 விதைக்காத சில நிலத்தில் 

அல்லியும் நீர்முள்ளியும் முளைதள்ளி கிடக்கும். 

இது மாரிகாலம் எந்தனூரில்.

 

பச்சைபிடித்து,

அடர்ந்து நிற்கும் ஆலமரம்_அருகில் 

அடங்கி இருக்கும் வைரவருக்கு 

திருவம்பா பூஜை நடக்கும்.

தலைமுறையாய் தொடரும்  

சங்கூதலும்  சில களவுகளும்.

நடக்கும் இம்முறையும். 

 

ஆறுமணிக்கே இருட்டும்

நேரம்கடந்தும்,

பசும்புல் படர்ந்திருக்கும் மைதானத்தில், 

வழக்காடிய கதைகளுடன் 

எப்படியும் இருப்பர் ஒரு சிலராவது.

இது மாரிகாலம் எந்தனூரில்.

 

*மதவடியும் வேலகாடும் 

தேவதை கடக்கும் சந்திகள்.

யாருக்காக யார் என்றே தெரியாது 

ஆளை ஆள் சாட்ட அவளுக்கு ஒன்றும் புரியாது.

கண்டும் கானாமலும் கடந்து போன  

அவளுக்குள்ளும் _அந்த 

மாரிகாலம் இன்னும் இருக்கும்>>>>>>>>>>>>

 

 

 

மாரிகாலத்தை என்ன மாதிரி ரசித்திருக்கின்றீர்கள். திருவெம்பாவைக் களியும்,புட்டும் எனக்கும் எனக்கும் நினைவுக்கு வருது. அது ஒரு காலம் 'அழகிய காலம்' என்று நினைவுக்கோலங்களில் மாரியோடு நனைகின்றேன்.

 

 

.

 

>>இங்கேயும், 

இது மாரிகாலம் தானாம்.

மரங்களிலும்  வீதிகளிலும் 

அடுக்கு மாடிகளிலும் பனி படர்ந்து குளிர்கிறது._பின் 

மழை கழுவி போகிறது.  

"இது மாரிகாலம் தான்".

எல்லோரும் சொல்கிறார்கள். 

என்னால் அப்படி  சொல்லமுடியவில்லை.!!!!!!!!!<<<

 

இங்கு பனிக்காலம். அடர்பனியும், எலும்பையும் உறையவைக்கும் குளிரும்!.....எந்தனூர் ஞாபகச்சூடல்லவா இன்னும் உயிர்ப்புடன் என்னை இங்கு வைத்திருக்கின்றது.

 

 

 

*

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை, பலமுறை படித்துவிட்டேன். உள்ளமதிலே ஒரேநேரத்தில் பல உணர்வுகளைக் கிளறிச் செல்கின்றது.

 

நன்றி நேற்கொழு தாசன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.