Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நானும் வீழ்ந்தேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் திருமணம் கூடக் காதல் திருமணம் தான். கணவர் காதலராய் இருந்தபோது
வெளிநாடு சென்றுவிட்டார். அப்போது நான் கொண்ட தவிப்பை இன்று நினைத்துப்
பார்த்தேன். இக்கவிதை வந்தது. காதலர் தினம் எனக்குப் பழசாக இருக்கலாம்.
கவிதை புதிது. :D

 

 

 
கற்பனையில் எண்ணியவை
உன்னிடம் கண்டதனால் 
காதல் கொண்டேனடா
காலமெல்லாம் காத்திருந்து
உன்னைக் கண்டேனடா

கண்ணிமை மூடினும்
என்முன்னே நின்று
காதல் செய்கிறாய்
காதினிக்க  வந்து
காதல் மொழி பேசுகிறாய் 

கயவனே உன்னைக்
காணாதிருந்திருந்தால்
காலமெல்லாம் நான்
கற்பனையில் வாழ்ந்திருப்பேன்

கண்டதனால்
நிதம் என் உயிர் துடிக்க
நினைவு நிதம் வதைக்க
நேர காலம் தெரியாது
நெகிழ்ந்து போய் கிடக்கிறேன்.

நெருப்பாய் இருந்தவள்
நெக்குருகி நிற்கிறேன்
நெஞ்சம் முழுதும்
உன்னை நிரப்பி
நினைவில் உன்னை முகர்ந்து
நித்தம் உனக்காய்
காத்திருக்கிறேன்
 
முகம் பார்க்க முடியாமல்
சத்தமிலா முத்தமின்றி
சர்வமும் இழந்து
சரணடயக் காத்திருக்கிறேன் 
உணர்வாயா ?????????

 

அக்கா தூள் , சொல்லிவேலையில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பாய் இருந்தவள்
நெக்குருகி நிற்கிறேன்
நெஞ்சம் முழுதும்
உன்னை நிரப்பி
நினைவில் உன்னை முகர்ந்து
நித்தம் உனக்காய்
காத்திருக்கிறேன்..........................

 

 

.......சபாஷ்..............உண்மைக் காதல் நிலைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க அந்தாள் மீது விழுந்தீங்க.. சரி. அந்தாள் உங்க மீது காதல் கொண்டு.. விழுந்து என்னாகிக் கிடக்கிறாரோ...??! பாவம்.. அந்த ஜீவனுக்கு யாழில எழுதவும் வாய்ப்பிருக்கோ என்னவோ..??! :lol:

 

நல்லா இருக்கு உணர்வுபூர்வமான வரிகள்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம் பார்க்க முடியாமல்
சத்தமிலா முத்தமின்றி
சர்வமும் இழந்து
சரணடயக் காத்திருக்கிறேன்
உணர்வாயா ?????????

 

இதைத்தான் முக்தி அடைதல் எண்டு சமய பாடப்புத்தகத்திலை எழுதியிருக்கினம் . உங்கள் உணர்சி கவிதைக்கு பாராட்டுறன் மொசப்பத்தேமியா சுமேரியர் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலா அக்கா,ஆசாமி ஆகியோருக்கு.

 

 

 

அந்தாளும் எழுத வந்தால் யார் வீட்டில் சமைப்பது நெடுக்ஸ் :lol: :lol:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
உண்மையை சொல்லுங்கோ சுமோ நீங்கள் லவ் பண்ணேக்குள்ள எழுதின கவிதையைத் தானே இப்ப கொண்டு வந்து போடுறீங்கள் :)
  • கருத்துக்கள உறவுகள்

அந்தாளும் எழுத வந்தால் யார் வீட்டில் சமைப்பது நெடுக்ஸ் :lol: :lol:

 

வாரத்தில 31/2 நாள் நீங்க சமைக்க அவர் யாழில எழுதட்டும்.. மிச்சம் 31/2 அவர் சமைக்க நீங்க எழுதிறது தானே சமத்துவம்...! :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மைத்திரேயி, நன்றி ரதி.  கவிதை அப்ப எழுதியிருந்தா அசத்தலா எல்லோ இருந்திருக்கும் ரதி. :lol:

கண்ணாளன் மீதான காதலை உணர்வுபூர்வமான வரிகளாய் வரித்திருக்கும் கவி அருமை.

வாழ்த்துக்கள் அக்கா. :)

கண்டதனால்

நிதம் என் உயிர் துடிக்க

நினைவு நிதம் வதைக்க


நேர காலம் தெரியாது

நெகிழ்ந்து போய் கிடக்கிறேன்.

 

அப்பிடி என்னப்பா காணாததை கண்டியள் சுமே  :o  :lol:  :icon_idea:  ???  கவிதைக்கு மனங்கனிந்த பாராட்டுக்கள்  :)  .

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதும்  அனுபவித்து எழுதுவதே நிலைக்கும்

கலக்கும்

மணக்கும்.

அருமையான வரிகள்

தொடருங்கள்.

 

ஒரு கேள்வி

காதலிக்கும்போது இருந்த இவை

தற்பொழுதும் மாறாது உள்ளதா???

பலரும் இல்லை  என்றே  சொல்கிறார்கள்.

நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள் என்ற பெரும் நம்பிக்கையில் கேட்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முகம் பார்க்க முடியாமல்

சத்தமிலா முத்தமின்றி

சர்வமும் இழந்து

சரணடயக் காத்திருக்கிறேன் 

உணர்வாயா ?????????

உணர்கிறேன். 

கவிதையும் அழகு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதை, நன்றி கறுப்பி.

 

கண்டதனால்

நிதம் என் உயிர் துடிக்க

நினைவு நிதம் வதைக்க


நேர காலம் தெரியாது

நெகிழ்ந்து போய் கிடக்கிறேன்.

 

அப்பிடி என்னப்பா காணாததை கண்டியள் சுமே  :o  :lol:  :icon_idea:  ???  கவிதைக்கு மனங்கனிந்த பாராட்டுக்கள்  :)  .

 


நான் கண்டதை உங்களுக்கு எப்பிடிச் சொல்லுறது கோ. உப்பிடிக் கேக்கிறது சரியில்ல :D :D :lol:

 



எப்பொழுதும்  அனுபவித்து எழுதுவதே நிலைக்கும்

கலக்கும்

மணக்கும்.

அருமையான வரிகள்

தொடருங்கள்.

 

ஒரு கேள்வி

காதலிக்கும்போது இருந்த இவை

தற்பொழுதும் மாறாது உள்ளதா???

பலரும் இல்லை  என்றே  சொல்கிறார்கள்.

நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள் என்ற பெரும் நம்பிக்கையில் கேட்கின்றேன்.

 

அப்பிடியே இருக்கு என்றால் அது பொய். ஆனால் இன்னும் சலிக்காமல் இருக்கு
அண்ணா. ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு பொறுப்புகள் வரும்போது சிலது தானாகவே
குறைந்துவிடும். ஆனாலும் இருவரும் ஒருமித்து இருக்கும்போது கிடைக்கும் 
இதுதான் கடைசிவரை என்னும் நின்மதியால்வரும் உரிமை, அமைதி, அனுபவித்தல்கள்
இன்னும் அப்படியேதான் இருக்கு, இருக்கும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே இருக்கு என்றால் அது பொய். ஆனால் இன்னும் சலிக்காமல் இருக்கு
அண்ணா. ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு பொறுப்புகள் வரும்போது சிலது தானாகவே
குறைந்துவிடும். ஆனாலும் இருவரும் ஒருமித்து இருக்கும்போது கிடைக்கும் 
இதுதான் கடைசிவரை என்னும் நின்மதியால்வரும் உரிமை, அமைதி, அனுபவித்தல்கள்
இன்னும் அப்படியேதான் இருக்கு, இருக்கும்.

 

நன்றி  சகோதரி

இது காதலித்து திருமணம் செய்தவர்களது வாக்குமூலம்

அது தேவை  இன்று

அதனால்தான் கேட்டேன்.

வாழ்க்கை  என்பது என்ன என்பதை புரிந்து கொண்டால்

எல்லாம் என்றும் இன்ப மயமே.

வாழ்க பல்லாண்டு

வளமுடன்.
 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஆரோ பனியாலை  சறுக்கி விழுந்திட்டினம் எண்டு வந்தா 

இது வேறைமாதிரி இருக்கின்றது  :lol:


கவிதை நன்றாகத்தான் இருக்கின்றது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இதுக்கு ஒரு நக்கலா பதில் எழுதுவம் எண்டால் "இத்தால் சகலருக்கும்" என்ற திரி எட்டிப்பார்க்குது என்ன செய்ய??? :rolleyes:

 

இருந்தாலும் பெண் கவிஞர்களுடைய காதல் சம்பந்தமான எழுத்துக்கள் பிடிக்கும்,

அந்த வகையில் உங்கள் எழுத்துக்களும் காத்திரமானவையே. :)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நல்லாருக்கு, சுமோ!

 

காதலைப் பற்றிக் கருத்துக் கூற இயலாது! ஏனெனில் எனக்கு அதைப்பற்றித் தெரியாது!

 

நாங்கள், நல்ல பிள்ளைகளாக்கும்! :o

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வீழ்ந்தீங்களா??? விழுந்த இடத்திலை  விண் கல் விழுந்த  மாதிரி பெரிய பள்ளம்  ஒன்று வந்திருக்குமே?? :lol: :lol:   கோவிக்க கூடாது பகிடி இது <_<

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை சுமோ அக்கா...

 

 

நீங்கள் வீழ்ந்தீங்களா??? விழுந்த இடத்திலை  விண் கல் விழுந்த  மாதிரி பெரிய பள்ளம்  ஒன்று வந்திருக்குமே?? :lol: :lol:   கோவிக்க கூடாது பகிடி இது <_<

 

தலைப்பை பாத்திட்டு நானும்...சுமோ அக்கா ஊர்க்கிணத்தில எங்கையாவது தண்ணி அள்ளும்போது தடக்கி விழுந்ததுக்கு கவிதை எழுதி இருக்கிறாவாக்கும் எண்டு நினைச்சன்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஆரோ பனியாலை  சறுக்கி விழுந்திட்டினம் எண்டு வந்தா 

இது வேறைமாதிரி இருக்கின்றது  :lol:

கவிதை நன்றாகத்தான் இருக்கின்றது. 

 

பனியால சறுக்கி விழுந்தால் அந்த வெக்கம் கெட்ட கதையை இங்க வந்து எழுதுவனோ?? :lol:

 

நான் இதுக்கு ஒரு நக்கலா பதில் எழுதுவம் எண்டால் "இத்தால் சகலருக்கும்" என்ற திரி எட்டிப்பார்க்குது என்ன செய்ய??? :rolleyes:

 

இருந்தாலும் பெண் கவிஞர்களுடைய காதல் சம்பந்தமான எழுத்துக்கள் பிடிக்கும்,

அந்த வகையில் உங்கள் எழுத்துக்களும் காத்திரமானவையே. :)

 

இன்னும் நிறைய எழுதலாம் கிழவிக்கென்ன காதல் என்பீர்கள் என்னும் பயத்தில் அளவோடு நிறுத்திக் கொண்டேன் ஜீவா.

 

கவிதை நல்லாருக்கு, சுமோ!

 

காதலைப் பற்றிக் கருத்துக் கூற இயலாது! ஏனெனில் எனக்கு அதைப்பற்றித் தெரியாது!

 

நாங்கள், நல்ல பிள்ளைகளாக்கும்! :o

 

அப்ப காதலின்றியா மனைவியுடன் காலம் தள்ளுகிறீர்கள் புங்கை. :(

நீங்கள் வீழ்ந்தீங்களா??? விழுந்த இடத்திலை  விண் கல் விழுந்த  மாதிரி பெரிய பள்ளம்  ஒன்று வந்திருக்குமே?? :lol: :lol:   கோவிக்க கூடாது பகிடி இது <_<

 

விழுந்த இடத்திலேயே பள்ளம் என்றால்,உரசினால் எரிந்து விடுவீர்கள் கவனம். :D :D

கவிதை அருமை சுமோ அக்கா...

 

 

 

தலைப்பை பாத்திட்டு நானும்...சுமோ அக்கா ஊர்க்கிணத்தில எங்கையாவது தண்ணி அள்ளும்போது தடக்கி விழுந்ததுக்கு கவிதை எழுதி இருக்கிறாவாக்கும் எண்டு நினைச்சன்.. :D

 

கூட்டிக் களிச்சுப் பாத்தா எல்லாருக்கும் நான் விளவேணும் என்ற ஆசை இருக்குப் போல கிடக்கே. :lol:

அஹா அஹா அதுதான பாத்தன் .................. 

ம்ம்ம்ம்ம்ம் நல்லாத்தான் விழுந்திருக்கிறிங்க.... ம்ம்ம்ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களின் காதல் வாழ்வு தொடரவும் கவிதைக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நேற்கொழு தாசன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.