Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நாள் இன்று.

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நாள் இன்று.


தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார். தமிழீழத்தின் இதய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.

இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

1990 ஆம் ஆண்டில் கொக்காவில் – மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் “கடற்காற்று” எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.

வுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட “வன்னிவிக்கிரம” நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.

1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான “ஆகாய- கடல்வெளி”ச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.

மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட “மின்னல்” நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார். இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட “யாழ்தேவி” நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.

1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட “முன்னேறிப்பாய்தல்” முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.

யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த “சூரியக்கதிர்” நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.

வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட “ஓயாத அலைகள் – 02″ நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.

தொடர்ந்து “ஓயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.

2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட “தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.

போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார். பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.

நன்றி முகனூல் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும்,

சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ்   அவர்களுக்கு  வீரவணக்கம்

 

உங்களது காலத்தில் வாழ்ந்த பெருமையை  உங்கள் வீரத்தாலும் தியாகத்தாலும் தந்தீர்கள் ஐயா

 

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 பிரிகேடியர் பால்ராஜ்   அவர்களுக்கு  வீரவணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாப்படக் கீரோக்களை கொண்டாடுபவர்கள் மத்தியில் ஆமிக்கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு ஒளிச்சு ஒளிச்சு புலிகளின்குரல் கேட்ட சின்னப்பசங்கள் எங்களின் நிஜக்கதாநாயகன்.... வீரவணக்கங்கள் அண்ணா... :(

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

தளபதிக்கு வீர வணக்கம்.

தளபதிக்கு வீர வணக்கம்.:(

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையில் யாரோ ஒருவர் வன்னியில் பெரிய தளபதி போய்விட்டார்.. அறிவிப்பு விரைவில் வரும் என்று செய்தி போட்டார்.. மனவேதனை தந்த நாட்கள் அவை..

வீரவணக்கம்..

தளபதிக்கு வீரவணக்கம்

 

பகிர்விற்கு நன்றி

 

ஆனால் பால்ராஜ் அண்ணையின் வீரச்சாவுத்திகதி  20.மே.2008 ஆகும்

 

குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

 

6367_1.jpg

Edited by வாணன்

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

வாணண் அண்ணா இந்த செய்தி பார்த்ததும் முதலில் அதைதான் நினைத்தேன்.. ஏற்கனவே இங்கும் முகநூலிலும் இணையம்களிலும் வீர்வணக்க செய்திகள் ஜந்தாம் மாதமே பதிவிடப்பட்டிருந்தாலும் மாவீரர்களை நினைவுகூருவதற்கு நேரமும் காலமும் ஏது..? அவர்கள் எப்பொழுதும் எம் நினைவுகளில் இருப்பவர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்


வன்மம் மறந்து போனால் இந்த ஒரு பாட்டு போதும் எம்மை வழிநடத்த - yoga

தளபதிக்கு வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

21ம் நூற்றாண்டின் தன்நிகரில்லா போர் வீரன் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வீரவணங்கங்கள்.

தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வீரவணக்கங்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள். பிரிகேடியர் பால்ராஜின் போரியல் வரலாறு புத்தகமாக்கப்பட வேண்டும்.

இக்கட்டான காலங்களில் எல்லாம் சிறப்பான திட்டமிடல் மூலம் தோல்வி பெறவேண்டிய இடங்களை எல்லாம் வெற்றிகளாக்கிய தளபதி... எமது சமகாலத்தில் இப்படியான தளபதியை பெற்றதுக்காக தமிழர்கள் பெருமைப்படலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கங்கள்!

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.