Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீதனம் கேட்டான் காதலன்! இளம் ஆசிரியை தற்கொலை!!

Featured Replies

சீதனம் கேட்டான் காதலன்! இளம் ஆசிரியை தற்கொலை!!

 
 
பன்னிரெண்டு வருட காதலன்  திருமணம் செய்ய சீதனம் கோரியதால் இளம் விஞ்ஞான பட்டதாரியான ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார்...
sutrsni.jpg

கனகபுரம் கிளிநொச்சியினை சொந்த இடமாகக்கொண்டவரான செல்வி. சர்மினி கதிர்காமு(வயது 28) என்பவரே  நேற்று தற்கொலை செய்த நிலையினில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் வவுனியா இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய ஆசிரியையென கூறப்படுகின்றது.

முன்னதாக இவரை கடந்த 12 வருடமாக காதலித்து வந்த இளைஞன் திருமணம் செய்வதற்கு ஜம்பது இலட்சம் சீதனம் கோரியதாக கூறப்படுகின்றது.அதையடுத்து மனமுடைந்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சம்பவத்தையடுத்து குறித்த இளைஞன் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.pathivu.com/news/25888/57//d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீதனம் கேட்பபவர்களை இல்லாதொழிக்கவேண்டும்.

முதுகெலும்பு இல்லாதவன். தற்கொலைதான் முடிவில்லை இதற்கு. வாழ்த்து காட்டியிருக்கனும்

"சீதனம் எவன் கேட்டான் செருப்பை எடுத்து அடி

 

கோவணம் கட்டிய குப்பனை மணம் முடி"

  • கருத்துக்கள உறவுகள்

12 வருடம் காதலித்து விட்டு, சீதனம் கேட்டதை ஏற்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

காதலன் ஒரு ஏமாற்றுப்பேர்வழிபோல் உள்ளார்.. இளம் ஆசிரியையின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

இதற்க்கு புலம் பெயர் டமில்சும் ஒரு காரணமா இருக்கலாம் .... தங்களது மகள் மாரை கொளுத்த சீதனங்களுடன் மணம்முடிக்க அங்கு இருக்கும் ஆண்களை அனுகுகின்றார்கலாம் .....காரணம் வெளிநாடுகளில் தங்கள் மகள்களின் முழு வண்டவாளமும் தெரிந்த புலம்பெயர் ஆண்கள் அவர்களை மணம்முடிக்க மறுப்பதாலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்க்கு புலம் பெயர் டமில்சும் ஒரு காரணமா இருக்கலாம் .... தங்களது மகள் மாரை கொளுத்த சீதனங்களுடன் மணம்முடிக்க அங்கு இருக்கும் ஆண்களை அனுகுகின்றார்கலாம் .....காரணம் வெளிநாடுகளில் தங்கள் மகள்களின் முழு வண்டவாளமும் தெரிந்த புலம்பெயர் ஆண்கள் அவர்களை மணம்முடிக்க மறுப்பதாலாம்

ம்ம்....!!

அவனவனுக்கு, அவனவன் கவலை! :D

  • கருத்துக்கள உறவுகள்

சீதனம் கேட்பபவர்களை இல்லாதொழிக்கவேண்டும்.

சீதனம் கேட்பபவர்களை இல்லாதொழித்துவிட்டால் அதிகமாக ஒழிவது பெண்களாகவே இருக்கும். அப்படி ஒழிந்து பெண்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால்! ஆண் ஒரு பெண்ணைப் பெறுவதற்கு சீதனம் கொடுக்க வேண்டிய நிலைக்குச் சமூகத்தில் மாற்றம் ஏற்படலாம்.

 

விஞ்ஞான பட்டதாரியான ஆசிரியை, அஞ்ஞானத்திலேயே வாழ்ந்துவிட்டார். இன்றைய விஞ்ஞான உலகம் அவருக்குப் பிடிபடவில்லை.- ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே அரபிய விடலைகளுக்கு திருமணம் முடிக்க பெண்களுக்கு ஆண்கள் கொழுத்த சீதனம் கொடுக்க தயாராக வேண்டும். அப்போதான் கல்யாணம் பற்றியே ஆண்கள் நினைக்க முடியும்..

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு கு.சாண்ணா சில அரசியல் செய்தித் தலைப்புக்களில் பிடிகொடுக்காமல் எழுதுமாப் போல எழுதனுன்னா..

 

நாங்க வெளிநாட்டில வசதியா இருந்து கொண்டு எதையும் சொல்லலாம். அவனுக்கு அங்க என்ன பிரச்சனையோ..!!! :icon_idea:

 

ஆனால் இங்கு கு.சாண்ணா வெட்டடா விழுத்தடான்னு எழுதி இருக்கிறார் அது வேற கதை..!

 

இதில் அந்த ஆணின் முட்டாள் தனத்தை விட பெண்ணின் முட்டாள் தனமே மோசமானதாக உள்ளது. அவன் சீதனம் கேட்டானாம்.. இவா அதற்குச் செத்தாவாம்..! :rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமுதாய அமைப்பில், பன்னிரண்டு வருடங்கள் ஒருவன் ஒரு பெண்ணைக் காதலித்திருப்பானெனில், அந்தப் பெண்ணின் பெற்றோர் முதல், அவளது உறவுகள், நண்பிகள் அனைவருக்கும், அவன், அந்தப் பெண்ணைத் தான் கட்டப்போகிறான் என்பது ஏறத்தாழ உறுதியானதாகவே இருக்கும்! மானசீகமாக, அவனைத் தனது கணவனாகவே வரித்திருப்பாள்!

 

இந்த நிலையில், அவன் ஐம்பது லட்சம் கேட்டால், ஒரு மானத்துடன் வாழ நினைக்கும் பெண்ணுக்கு வேறு என்ன வழி இருக்கின்றது? வேறு யாராவது வீரவான்கள், அவளைக்கட்டிக் கொண்டாலும், நாளைக்கு,குடும்பத்தில், பிரச்சனைகள் வரும் காலத்தில் இதைச் சொல்லிக்காட்டாமல், இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது? ஏன், அவளது பெற்றோரே, உன் தலையில் நீயே மண்ணை அள்ளிப்போட்டுகொண்டாய் என்று தானே சொல்லப்போகின்றார்கள்? அக்கா, உன்னால தானே, எங்களுக்குத் திருமணமாகாமல் இருக்கின்றது என்று கேட்டால் அவளது தங்கைகள், அவள் என்ன செய்வது?

 

எமது சீர்கேட்ட சமுதாய அமைப்பே இந்தப் பெண்ணின் மரணத்திற்கு முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் என்பது எனது கருத்தாகும்!

 

  • கருத்துக்கள உறவுகள்
இயக்கம் இருந்தபோது இந்த பிரச்சனை அடங்கி இருந்தது இப்போது மீண்டும் தலை தூக்கி உள்ளது 
 
சீதனக்கொடுமையை முற்றுமுழுதாக இல்லாது ஒழிக்கவேண்டும் 

இவர் 12 வருடமாக என்னத்தை காதலித்தார்

நான் நினைக்க வில்லை சீதணம் அவர் சாவுக்கு ஒரு காரணமாக இருந்து இருக்கும் எண்று...    காதலித்தவன் மீது வைத்து இருந்த நம்பிக்கை சிதறியதால் ஏற்பட்ட  ஏமாற்றம்... அவரை கைவிடுவதுக்கு காதலன் சொன்ன காரணமாக கூட அது இருக்கலாம்...  

 

சீதணத்துக்கு பெண்கள் கருவியாக்க படுகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க,  அந்த சீதணம் கொடுக்கப்பட்டதின் பின்னர் பாதிக்க படுவது அந்த பெண்ணை பெற்றவர் குடும்பமே...    சீதணம் பெற்ற ஆணோ காரணமான பெண்ணோ அதை அனுபவிப்பதையும் காணுகிறோம்... 

 

ஈழத்தமிழ் பெண்களை எடுத்தால் எனக்கு தெரிந்த அனேகர் எனக்கு சேரவேண்டியதை வாங்கிக்கொண்டுதான் கல்யாணம் கட்டுவேன் எனும் சொல்லை சொல்வதை கேட்க்க முடியும்...  என் மனைவியிலை இருந்து எனது சகோதரி மருமக்கள் இன்னும் பலரிடம் பெற்ற அனுபவம்...    

 

இது எவ்வளவு சரி பிழை எண்று சொல்ல தெரியவில்லை...  பெண்கள் தான் விளக்க வேணும்... 

 

 

 

எமது சீர்கேட்ட சமுதாய அமைப்பே இந்தப் பெண்ணின் மரணத்திற்கு முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.

 

மேலும் எமது சமூதாயம் முன்னேறமுடியாமல் இருப்பத்தற்கு காரணம் அதற்கு தன்னைத்தான் ஆள முடியாமையும் ஒன்று.

  • தொடங்கியவர்

3525_4583300336942_52989733_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு படித்தும் பல மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டிய

இந்தச் சகோதரியை நினைத்தால் ஆணாதிக்கம் இன்னும் நம்மிடையே

எந்தளவிற்குக் கொடிகட்டிப்பறக்கின்றது என்பது தெளிவாகின்றது

 

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சீதனம் கேட்பதில் முன்னணியில் நிற்பது மாமியார்கள்தான்.. :unsure: மாமனார் ஓரமாக நின்றபடி வெத்திலை மென்றுகொண்டிருப்பார்.. :D மாப்பிளைக்கு பொண்ணு கிடைச்சால் சரி.. :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.