Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலின் வலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலின் வலி
உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!

 

ஒவ்வொரு இரவுகளிலும்

உன் நினைவுகளைப் பத்திரம்பண்ணி
இதயக் கருவறையில் பதுக்கி வைத்திருந்தேன்
அந்த இரவுகளில் - நீயோ
கருவறையைக் கல்லறையாக்கும்
பாடம் படித்துக்கொண்டிருந்தாய்!

 

காதலின் வலி
உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!

 

ஒற்றைச் சந்திரனாய்
என்னினைவுகள் உன்னையே
சுற்றிச் சுழன்றுகொண்டிருக்க - நீயோ
நட்சத்திரங்களை நெஞ்சில் வைத்து
உனக்காக மட்டும் எடைபோட்டுக்கொண்டிருந்தாய்!

 

காதலின் வலி
உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!

 

ஒவ்வொரு முறையும்

காதலால் - உன்னுடன்
உயிர்மொழி  தொடுத்துப் பேசிக்கொண்டிருந்தேன் - நீயோ
வெறும் உதடுகளால் மட்டுமே
பேசிக்கொண்டிருந்தாய்!

 

காதலின் வலி
உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!

 

ஒரேயொரு தடவை
 உண்மையாய் உயிருக்குள் இருந்து
"காதல்" என்று சொல்லிப்பார்
 ஒருவேளை அந்தவலி உனக்கும் புரியக்கூடும்!

Edited by யாழ்வாலி

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத் தான் முழுவதும் புரிந்தது :(

  • கருத்துக்கள உறவுகள்

//ஒவ்வொரு இரவுகளிலும்

உன் நினைவுகளைப் பத்திரம்பண்ணி
இதயக் கருவறையில் பதுக்கி வைத்திருந்தேன்
அந்த இரவுகளில் - நீயோ
கருவறையைக் கல்லறையாக்கும்
பாடம் படித்துக்கொண்டிருந்தாய்!
//

 

மனிசி ஏதோ பரீட்சைக்குப் படிக்கிறா போலை.. :rolleyes: நல்லா வரட்டுமே சார்.. ஏன் தடுக்கிறீங்க? :D

காதலின் வலி

உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!

 

ஒவ்வொரு இரவுகளிலும்

உன் நினைவுகளைப் பத்திரம்பண்ணி

இதயக் கருவறையில் பதுக்கி வைத்திருந்தேன்

அந்த இரவுகளில் - நீயோ

கருவறையைக் கல்லறையாக்கும்

பாடம் படித்துக்கொண்டிருந்தாய்!

 

காதலின் வலி

உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!

 

ஒற்றைச் சந்திரனாய்

என்னினைவுகள் உன்னையே

சுற்றிச் சுழன்றுகொண்டிருக்க - நீயோ

நட்சத்திரங்களை நெஞ்சில் வைத்து

உனக்காக மட்டும் எடைபோட்டுக்கொண்டிருந்தாய்!

 

காதலின் வலி

உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!

 

ஒவ்வொரு முறையும்

காதலால் - உன்னுடன்

உயிர்மொழி  தொடுத்துப் பேசிக்கொண்டிருந்தேன் - நீயோ

வெறும் உதடுகளால் மட்டுமே

பேசிக்கொண்டிருந்தாய்!

 

காதலின் வலி

உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!

 

ஒரேயொரு தடவை

 உண்மையாய் உயிருக்குள் இருந்து

"காதல்" என்று சொல்லிப்பார்

 ஒருவேளை அந்தவலி உனக்கும் புரியக்கூடும்!

 

வலிகள் என்பவை பால் பார்க்கதவை . அனால் அண்மைக்காலமாக ஒருதரப்பு வலிகளே கவிதைப் பூங்காட்டில் முன்நிலைப் படுத்தப் படுகின்றன .இது அவ்வளவு ஆரோக்கியமாக எனக்குத் தெரியவில்லை . ஏன் பெண்களுக்கு இந்தக் காதலின் பிரிவுவலிகள் இல்லையோ ?? எதோ பெண்கள் எல்லோருமே ஈவு இரக்கமற்றவர்கள் என்பது போல் சித்தரிக்கப்படுவது ஏற்றுக் கொள்ளமுடியாதது .

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அனுபவிக்க வேணும் எண்டு விதி இருந்தால் என்ன செய்வது??? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பத் தான் முழுவதும் புரிந்தது :(

 

என்ன செய்யிறது ரதி ஒரு நாலு வருசத்துக்கு முதல் உங்களுக்கு முழுவதும் புரிந்து இருந்தால் இப்ப நான் லண்டனில இருந்திருப்பன். அடுத்த பிறப்பிலையாவது சந்திப்பம் :(

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது ரதி ஒரு நாலு வருசத்துக்கு முதல் உங்களுக்கு முழுவதும் புரிந்து இருந்தால் இப்ப நான் லண்டனில இருந்திருப்பன். அடுத்த பிறப்பிலையாவது சந்திப்பம் :(

 

ஒத்தை கான்ட்ராக்டுக்கு எத்தனை பேரய்யா டென்டர் குடுப்பீங்க?! :(:D

கிளிய வளர்த்து .............கொடுக்க மாட்டினம் இசை :D

  • கருத்துக்கள உறவுகள்

கிளிய வளர்த்து .............கொடுக்க மாட்டினம் இசை :D

கிளியா .....கிழியா :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது ஒரு உணர்வு!

உங்கள் கவிதை அந்த உணர்வை, உன்னதமாக வெளிப்படுத்தி நிற்கின்றது, வாலி!

 

சீதைக்கு ராமனிடம் வந்தது காதல்!

அதனால் தான் ராமன் காடேக, அவளும் காடேகினாள்!

 

விளைவு --------> இராமாயணம்!!!

 

எனவே பல்லைக் கடித்துக்கொண்டு இருங்கள்! :icon_idea:

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

//ஒவ்வொரு இரவுகளிலும்

உன் நினைவுகளைப் பத்திரம்பண்ணி

இதயக் கருவறையில் பதுக்கி வைத்திருந்தேன்

அந்த இரவுகளில் - நீயோ

கருவறையைக் கல்லறையாக்கும்

பாடம் படித்துக்கொண்டிருந்தாய்!//

 

மனிசி ஏதோ பரீட்சைக்குப் படிக்கிறா போலை.. :rolleyes: நல்லா வரட்டுமே சார்.. ஏன் தடுக்கிறீங்க? :D

 

சார் இது மனிசிக்காக எழுதப்பட்டதொன்றல்ல. வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு என்னை நகர்த்திச் சென்று (ஏ)மாற்றத்தை தந்துவிட்டுச் சென்றவளை நினைக்கும் போதெல்லாம் இப்படியான எண்ணங்கள் வரும். :)

 

 

ஒத்தை கான்ட்ராக்டுக்கு எத்தனை பேரய்யா டென்டர் குடுப்பீங்க?! :(:D

 

என்ன சார் இப்ப வரவர கண்பார்வையும் குறைஞ்சு போயிடிச்சிபோல இருக்கி. நீங்க "ஒத்தை"ண்ணு நீங்க எழுதினத நானு "சொத்தை"ண்ணு மொதல்ல படிச்சிப்புட்டன் :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது ரதி ஒரு நாலு வருசத்துக்கு முதல் உங்களுக்கு முழுவதும் புரிந்து இருந்தால் இப்ப நான் லண்டனில இருந்திருப்பன். அடுத்த பிறப்பிலையாவது சந்திப்பம் :(

லண்டனுக்கு வந்திருந்தால் இப்ப அடுத்த பிறவியில் இருந்திருப்பீர்கள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணுக்கு வலிகள் புரியாதா?  வலிகளை வெளியில் காட்டிக்கொள்ள விரும்புவதில்லை பெண்கள் என்பதுதான் உண்மை!. '

 

ஒளித்து வைத்து இருக்கும் காதலை வெளிசம் போட்டுக் காட்ட முடியாது பெண்களால்! ' பெண்ணை உணர்ந்த ஆணால் தான் அதை அறிய முடியும்:)

 

காதல் என்று சொல்லிப்பார்த்துத்தான் 'வலியை உணரணுமா?!!...'காதலிக்கு எந்த வலியையும் கொடுக்காத 'காதலனே!! "காதல் (காதலன்)  :)
 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்யிறது ரதி ஒரு நாலு வருசத்துக்கு முதல் உங்களுக்கு முழுவதும் புரிந்து இருந்தால் இப்ப நான் லண்டனில இருந்திருப்பன். அடுத்த பிறப்பிலையாவது சந்திப்பம் :(

 

 

எனக்கே தெரியாமல் எனக்கு புரிய வைக்கின்ற முயற்சிகள் எப்ப நடந்தது :o ...நீங்கள் வேறு ஒருத்தரை நான் என்று நினைத்து எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்.நீங்கள் மட்டும் இல்லை யாழில் கொஞ்சப் பேர் இப்படித் தான் நினைத்துக் கொண்டு இருக்கினம்.நல்ல காலம் உங்களைப் போல ஆட்களோடு நான் திண்ணையில் கூட கதைக்கிறேல்ல.யார் ஆட்கள் என்று கூட உங்களுக்கு தெரியேல்ல <_<  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே தெரியாமல் எனக்கு புரிய வைக்கின்ற முயற்சிகள் எப்ப நடந்தது :o ...நீங்கள் வேறு ஒருத்தரை நான் என்று நினைத்து எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்.நீங்கள் மட்டும் இல்லை யாழில் கொஞ்சப் பேர் இப்படித் தான் நினைத்துக் கொண்டு இருக்கினம்.நல்ல காலம் உங்களைப் போல ஆட்களோடு நான் திண்ணையில் கூட கதைக்கிறேல்ல.யார் ஆட்கள் என்று கூட உங்களுக்கு தெரியேல்ல <_<  :(

 

ரதி நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டீர்கள் என நினைக்கிறேன். நான் யாழ் களத்தில் எவருக்கும் புரியவைக்க எப்பவும் முயற்சிசெய்ததும் இல்லை அந்த தேவையும் எனக்கிருக்கவில்லை. நீங்களும் பகிடிக்கு எழுதுகிறீர்கள் என நினைத்துத்தான் எழுதினேன். அதுவும் நீங்கள் ஓர் ஆணாக இருப்பீர்கள் என்ற ஓர் ஊகத்தின் (தவறாக இருக்கலாம்) அடிப்படையில். தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றேன், :( 

  • கருத்துக்கள உறவுகள்

காதலின்  வலிகளைக் குறித்தாலும்
கவிதையின்  வரிகள் நன்றாக உள்ளன

  • கருத்துக்கள உறவுகள்

ரதி நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டீர்கள் என நினைக்கிறேன். நான் யாழ் களத்தில் எவருக்கும் புரியவைக்க எப்பவும் முயற்சிசெய்ததும் இல்லை அந்த தேவையும் எனக்கிருக்கவில்லை. நீங்களும் பகிடிக்கு எழுதுகிறீர்கள் என நினைத்துத்தான் எழுதினேன். அதுவும் நீங்கள் ஓர் ஆணாக இருப்பீர்கள் என்ற ஓர் ஊகத்தின் (தவறாக இருக்கலாம்) அடிப்படையில். தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றேன், :( 

 

 

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரேயொரு தடவை

 உண்மையாய் உயிருக்குள் இருந்து

"காதல்" என்று சொல்லிப்பார்

 ஒருவேளை அந்தவலி உனக்கும் புரியக்கூடும்!

 

யாழ்வாலியின் காதல் வலியை புரியாத அந்த வில்லி யாரது ? nகொண்டு வாருங்கள் யாழ்களம் நாங்கள் காதைப்பொத்தி ரெண்டு குடுத்துவிடுறம். பிறகு தெரியும் யாழ்வாலியின் வலி. :lol:

பி:கு - காதல் வலி நன்றாயிருக்கு வாழ்த்துக்கள் கவி வாலி.

 

சார் இது மனிசிக்காக எழுதப்பட்டதொன்றல்ல. வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு என்னை நகர்த்திச் சென்று (ஏ)மாற்றத்தை தந்துவிட்டுச் சென்றவளை நினைக்கும் போதெல்லாம் இப்படியான எண்ணங்கள் வரும். :)

 

மாற்றம் தந்தவள் உங்களை ஒரு மார்க்கமான கவிஞனாக்கிவிட்டிருக்கிறாள். அதற்காக அவளை வாழ்த்துங்கள் யாழ்வாலி. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலிகள் என்பவை பால் பார்க்கதவை . அனால் அண்மைக்காலமாக ஒருதரப்பு வலிகளே கவிதைப் பூங்காட்டில் முன்நிலைப் படுத்தப் படுகின்றன .இது அவ்வளவு ஆரோக்கியமாக எனக்குத் தெரியவில்லை . ஏன் பெண்களுக்கு இந்தக் காதலின் பிரிவுவலிகள் இல்லையோ ?? எதோ பெண்கள் எல்லோருமே ஈவு இரக்கமற்றவர்கள் என்பது போல் சித்தரிக்கப்படுவது ஏற்றுக் கொள்ளமுடியாதது .

 

கோமகன் சார் இந்தக் கவிதையில் நான் எங்கும் பால்நிலை சார்ந்து எழுதவில்லை. காதலின் வலி என்பது ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி பொதுவானது. அதைவிட பெண்மையை எங்கும் நான் என்றுமே ஈவிரக்கமற்றவர்களாக நினைத்ததில்லை. எனக்கு வலி தந்துவிட்டுப்போனவள் நல்லபடியாக வாழவேண்டும் என்று இன்றும் முழுமனதோடு விரும்புகின்றேன். ஓர் ஆணால் ஏமாற்றப்பட்ட பெண்ணின் வலியாகக்கூட இக்கவிதையை எடுத்துக்கொள்ளலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைக்கு என்ன காதல்

காதல் காசுக்கு மட்டுமே

கல்லறைகளை கேட்டுப்பார்  அதன் வலி

காதல் என்ற கானலில் வாழ்கையை

தொலைத்து விட்டு கல்லறையில் தூங்கும் நெஞ்சங்களை

 

காதல் பீடிக்காத ,பிடிக்காத ஒரு............... :rolleyes: :rolleyes:
 

காதலின் வலி

உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!

 

ஒரேயொரு தடவை

 உண்மையாய் உயிருக்குள் இருந்து

"காதல்" என்று சொல்லிப்பார்

 ஒருவேளை அந்தவலி உனக்கும் புரியக்கூடும்!

 

காதலின் வலி... எனக்கும் தெரியும்.... :)

இந்த வரிகள் போதும்............  அந்த வலியை உணர்வதற்கு!

 

யா..லி...... ! வலியை விட்டிட்டு  'வாலி'யாய்  ஜாலியாய் இருங்கோ ;)

  • கருத்துக்கள உறவுகள்

சேரன் 

கவிதைக்கு நன்றி

 

கிடைக்காத பொருள் எப்பொழுதுமே பெறுமதியாகவே  இருக்கிறது

இதில் வேதனை என்னவென்றால்

கிடைத்த  பொருளைவிட அதற்கு மதிப்பு அதிகம் என்பது தான்

இந்த மனமும்

மனிதர்களும்

எவ்வளவு சுயநலமானவர்கள்  என்பதற்கு இதைவிட ஆதாரமுண்டா...? :(

இதற்கு நீங்களோ

நானோ விதிவிலக்கல்ல..... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அனுபவிக்க வேணும் எண்டு விதி இருந்தால் என்ன செய்வது??? 

 

இந்த அனுபவம் வாழ்க்கையின் பல அடுத்த படிமுறைகளைத் தனித்து நின்று சந்திக்கும் ஆளுமையை எனக்குத் தந்திருக்கிறது.

 

 

பெண்ணுக்கு வலிகள் புரியாதா?  வலிகளை வெளியில் காட்டிக்கொள்ள விரும்புவதில்லை பெண்கள் என்பதுதான் உண்மை!. '

 

ஒளித்து வைத்து இருக்கும் காதலை வெளிசம் போட்டுக் காட்ட முடியாது பெண்களால்! ' பெண்ணை உணர்ந்த ஆணால் தான் அதை அறிய முடியும் :)

 

காதல் என்று சொல்லிப்பார்த்துத்தான் 'வலியை உணரணுமா?!!...'காதலிக்கு எந்த வலியையும் கொடுக்காத 'காதலனே!! "காதல் (காதலன்)  :)

 

 

அவள் அந்த வலியை உணர்ந்தாளோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் இன்றுவரை அவளுக்கு எந்த வலியையும் நானாகக் கொடுக்கவேண்டும் என நினைத்ததில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாலியின் காதல் வலியை புரியாத அந்த வில்லி யாரது ? nகொண்டு வாருங்கள் யாழ்களம் நாங்கள் காதைப்பொத்தி ரெண்டு குடுத்துவிடுறம். பிறகு தெரியும் யாழ்வாலியின் வலி. :lol:

 

அய்யோ பாவம் அக்கா விட்டுவிடுங்கள் பிழைச்சுப் போகட்டும் :D

 

 

பி:கு - காதல் வலி நன்றாயிருக்கு வாழ்த்துக்கள் கவி வாலி.

என்னக்கா பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் (கவி) சொல்லுகிறீர்கள்? :D குரங்கு (கவி) வாலி எண்டு மட்டும் சொல்லேல்லைத் தானே? :D

மாற்றம் தந்தவள் உங்களை ஒரு மார்க்கமான கவிஞனாக்கிவிட்டிருக்கிறாள். அதற்காக அவளை வாழ்த்துங்கள் யாழ்வாலி. :lol:

 

நான் கவிஞன் எல்லாம் கிடையாதுக்கா. சிலவேளைகளில் மனம் சோர்வாக இருக்கும் தருணங்களில் மனதில் இருக்கும் சில காயங்கள் எட்டிப் பார்க்கும். அதன் வெளிப்பாடுதான் இது. மற்றும்படி அவள் நன்றாக வாழவேண்டும் என்பதே என் விருப்பம். :)

 

ஏழைக்கு என்ன காதல்

காதல் காசுக்கு மட்டுமே

கல்லறைகளை கேட்டுப்பார்  அதன் வலி

காதல் என்ற கானலில் வாழ்கையை

தொலைத்து விட்டு கல்லறையில் தூங்கும் நெஞ்சங்களை

 

காதல் பீடிக்காத ,பிடிக்காத ஒரு............... :rolleyes: :rolleyes:

 

 

நல்ல காலம் இந்த ரேஞ்சுக்கு நான் போகேல்லை! :) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலின் வலி... எனக்கும் தெரியும்.... :)

இந்த வரிகள் போதும்............  அந்த வலியை உணர்வதற்கு!

 

யா..லி...... ! வலியை விட்டிட்டு  'வாலி'யாய்  ஜாலியாய் இருங்கோ ;)

 

நன்றி கவிதை உங்கள் அனுபவபூர்வமான பதிலுக்கு!

இப்ப மனைவியுடன் ஜாலில்லோ ஜிம்பாதான் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.