Jump to content

Recommended Posts

 
1528620_10151920979618002_1428696802_n.j
பூவரசம் இலைக்கு எங்களின் ஊரில் பலவிதமான பாவனை உண்டு.

1.பீப்பி செய்து ஊதலாம்.(இதனால் இரவில் ஊதி பாம்பு வரும் எண்டு அடி வாங்கிய நாட்கள் பல உண்டு).

எங்கட ஒழுகையால போகும் ராகினி மச்சாளை பாத்து பம்பலா பகிடி பண்ண பீப்பி ஊதி அவளிட்ட கிழிய கிழிய வாங்கின அனுபவமும் மறக்கமுடியாது.

2.வடை மற்றும் பணியாரம் அதில் வைத்துத்தான் தட்டுவார்கள்.

3.அதன் காம்பை ரப்பர் பாண்டில் வைத்து இழுத்து சுண்டி வில் போல் அடித்தால் சுள் எண்டு வலிக்கும்.இப்பிடி பள்ளிக்கூடத்தில அடிச்சு ,என்னோட படிச்ச பிள்ளை சாந்தினியில பட்டு ..அவள் அழுதுகொண்டுபோய் ராணி ரீச்சரிட்ட சொல்ல , அவா பிறின்சிப்பலிட்ட சொல்ல.. அந்த ஆள் பூவரசம் காம்பால வெளு வெளு எண்டு துடையில ரத்தம் வர அடிச்சது ஒரு கதை.அதை வீட்ட சொல்லாமல் ஒழிச்சது பெரிய கதை.

4.கள்ளு குடித்துவிட்டு பூவரசம் இலையை சப்பி துப்பினால் மணம் போகும். இதனால் ஊரில பல பெரும் குடிமக்கள் மனிசியின்ர "அரிச்சனையில்" இருந்து ஓரளவு தப்பி இருக்கினம்.

(கொய்யா இலை திறம் சாமான்.ஆனால் கொய்யா இலை தேடி அலையுறதுக்கிடையில வெறி முறிஞ்சிடும்.அதனால கையுக்கெட்டின தூரத்தில கிடைக்கிற பூவரசம் இலைதான் அருமையான MOUTH FRESHENER)

5.சோறு, கறி எல்லாவற்றையும் ஒண்டாய் பிரட்டி பினைந்து அதை கவளமாக உருட்டி பூவரசம் இலையில் வைத்து அம்மா தரும் அந்த உணவு ...அமிர்தம்.

6.அஞ்சாம்மனை கோயில்ல புக்கை வாங்க அவசரமா உதவும் பாத்திரம் இதுதான்.

கன இலைகளை ஈக்கிலால ஒண்டா வட்டமா கோப்பை போல குத்தி அதில கோயில்ல தரும் புக்கையோ இல்லை அன்னதான சோறோ வாங்கி திண்டால் அதில வாற ருசி சொல்லி வேலையில்லை.

7.பூவரசம் தடி....!!! இதனால் பாதிக்கப்படாத யாரும் எங்களின் ஊரில் இல்லை.

வீட்டில குழப்படி செய்தால் அம்மா உடனடியாய் வேலியடிக்கு போய் முறித்து அப்பாவிடம் கொடுக்கும் ஆயுதம் இது.குண்டியில் விழும் அடி சுள் என்று ஏறும்.

பள்ளிக்கூடத்தில் குழப்படி செய்தால் "ஐங்கரன் சேர்" போட்டு வெழுக்கும் ஆயுதமும் இதுதான்.

8.ஊரில "கள்ளக்காணி" பிடிக்க உடனடியா பயன்படுத்தும் உபகரணம் பூவரசம் கதியால்.

வேலிச்சண்டை,ஒழுங்கைச்சண்டை,காணிச்சண்டை,எல்லைச்சண்டை இப்படி பல பிரச்சினைக்கு காரணம் இந்த "பூவரசம் கதியால்" தான். கொஞ்சம் தண்ணி ஊத்தினா காணும் சும்மா கிசுகிசு எண்டு வளரும்.

9.அம்மா அடித்தால் கோபத்தில் புலம் பெயர்ந்து ஏறித்தங்கும் தங்குமிடம் "பூவரச மரம்" தான்.

10.கோடை வெயிலில் பள்ளிக்கூடம் விட்டு ஒழுங்கையால் சுடு மணலில் ஓடி வரும் போது "நிழல்" தந்து எங்களின் பிஞ்சுக்கால்கள் பொக்கிழிக்காமல் காத்ததும் இந்த பூவரச நிழல்தான்.

11.எங்கட ஊரில கன காதலர்களின் தபால்ப்பெட்டி இதுதான். வேலியோரத்து பூவரச மரத்தில தான் தங்களின் காதல் கடிதங்களையும் அன்பளிப்பு பொருள்களையும் சொருகிப்போட்டு போறவை.

12.ஆரேனும் வீட்ட போகும் போது அவையள் ஆரும் வீட்டில இல்லையெண்டா,

நாங்கள் வந்து போன விசயத்தை சொல்ல "பூவரசம் கொப்பொண்டை" முறிச்சு படலியடியில குத்திப்போட்டு போனா அவையளுக்கு தெரியும் ஆரோ வீட்ட வந்திட்டு போயிருக்கினம் எண்டு.

-தமிழ்ப்பொடியன்-

poovarasu9.JPG

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11)  தோட்டத்துக்கு தாழ்ப்பதற்கு... பூவரசம் இலை நல்ல, இயற்கை பசளை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாததும் இவை தமிழ்ப் பொடியா!

 

இடியப்ப உரல் செய்வதும் பூவரசில்தான்.

 

பூவரசம் பூக்களை வாயில் வைத்து ஊதிகன்னத்தில் அடிப்போம்.( மச்சாளுக்கு அடிக்கவில்லையா).

 

எந்ந்த வீட்டிலும் வேலியில் நாலு பூவரசு நிக்கும், ஒரு மரணம் நிகழ்ந்தால்  உடனே இரண்டு மரத்தைத் தறித்து நேரத்துக்கே மயானத்துக்கு அனுப்பி விடுவார்கள் .அங்கு அது தனக்கு  நீர் வார்த்த எஜமானனை  அம்புறாப் படுக்கையாய்  வரவேற்கும்...!  :rolleyes::D

 

 

 

Link to comment
Share on other sites

நல்ல பதிவு தமிழ்ப்பொடியன்.. ஊர் ஞாபகங்கள் வந்து போயின..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2005062700840201.jpg

இதற்க்கு பின்னால் பல மறக்க முடியாத சம்பவங்கள் உள்ளன ....
 
நினைவு படுத்தியதற்கு நன்றி தமிழ்ப்பொடியன்.
Link to comment
Share on other sites

பூவுக்கு அரசனை மண் வாசத்தோடு குழைத்து தந்த தமிழ் பெடிக்கு என்ன தந்தாலும் தகும் . வாழ்த்துக்கள் பெடியா .

Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=SVKygIzHlaA

 

:lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாழ்வோடு பின்னிப் பிணைந்த மரம், பூவரசு!

 

நானும் கனகாலத்துக்குப் பிறகு, ஊருக்குப் போறபோது முதல்ல செய்யிற வேலை, பூவரசம்  இலையில ' பீப்பீ' செய்து, ஒரு சினிமாப்பாட்டு வாசிக்கிறது தான்!

 

அந்தக் காலம் முதல் ஒரே ஒரு பாட்டுத்தான் பாட வரும்!  

 

' அடி என்னடி ராக்கம்மா.....' அந்த மாதிரி இருக்கும்!

 

பூவரசம் பூவின், இதழின் ஒரு பகுதியையும், நாக்கில் வைத்து, ஒரு விதமான இசை எழுப்பலாம்!

 

அனுபவமுள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்!

 

நினைவு மீட்டலுக்கு நன்றிகள், தமிழ்ப்பொடியன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பூவரசையும் ஈழத்து கிராமத்தவனையும் பிரித்து பார்க்கவே முடியாது. 
தாலாட்டு பாட பூவரசம் பூ....... நெஞ்சாங்கட்டைக்கு பூவரசம் அடிக்கட்டை.
 
வணக்கம் தமிழ்ப்பொடியன்! :)
Link to comment
Share on other sites

பூவரசின் கிளையின் அடியில் இருக்கும் முற்றிய இலை ஒன்றை நம்மில் ஒருவர் பறித்து முதலில் இலகுவாக கைவிரல்களால் சுருற்றி பின்னர் உள்ளங்கையில் வைத்து உருட்டி, குழல் சிறுத்து இலை வெடிக்க ஆரம்பிக்கமுதல் நிறுத்தி பின்வழத்தை பெருவிரல், ஆள்காட்டிவிரல்களுக்கு இடையில் வைத்து மெதுவாக நசுக்கி  ஊதும் வாய் பக்கத்தை தயார் செய்து கொள்வோம். இது மெல்லிய குழல் என்று அழைக்கப்படும். பின்னர் கிளையின் நடுப்பாகத்தில்  இருக்கும் அவ்வளவு குருத்தில்லாத  இலையை இன்னொருவர் பறித்து அதே மாதிரி செய்து கொள்வார். ஆனால் இதன் குழல் பாகம் முதலாவதை விட சற்று விட்டம் கூடியதாக இருக்கும். இதை கட்டைக் குழல் என்று அழைத்துக்கொள்வோம். இதன் முன்னர் இரண்டு பப்பா இலைத் தண்டுகளில் நீளத்திசைவாட்டில் ஏழு ஓட்டைகள் போட்டு குழாயின் ஒரு பக்கத்தை வேறு இலைகளை பிடிங்கி செருகி அடைத்துவிட்டு முன்னர் தாயாரித்து வைத்திருந்த பூவரசமிலை வாய் பாகங்களை பப்பா குழல்களின் திறந்த வாய்களுக்குள் செருகி இரண்டு வேறு வேறு கட்டை சுருதியில் இசை எழுப்பும் நாதஸ்வரங்கள் செய்து கொள்வோம்.  பழைய பானைகளை அல்லது, கைவிடப்பட்ட கள்ளுமுட்டிகளை எடுத்து கவனமாக வயிற்றுப்பக்கத்தை கற்களால் தட்டி உடைத்துவிட்டு, வாய் பாகத்தை மூடி காங்கேசந்துறை சீமெந்து பக்கேற்றுக்களின் மரத்தாள் கடதாசிகளால் கட்டி வைத்துகொள்வோம். (கொஞ்சம் வேலை தெரிந்தவன்கள் அதை ஒட்டி காயவைத்துக் கொள்வான்கள். அது நாதம் கூடவென்றாலும் நமக்கு கஸ்டமாதாக இருப்பது. ஒட்டும் போது மரத்தாள் பேப்பர் இளகாமல் ஒட்டுவது கடினம். எனவே நாங்கள் கட்டுவதுதான் வழமை. ஆனால் கச்சேரியை இடையில் நிறுத்தி அடிக்கடி பேப்பரை இழுத்துக்கட்ட வேண்டிவரும்). அடுப்பில் நெடுப்பை மூட்டி பானை வாயில் இருக்கும் மரத்தாளை சாடையாக சூடாக்கி கொள்வோம். இது மத்தளம் ஆகும். பின்னர் சினிமாப்பாட்டுக் கச்சேரிதான். "காளை வயசு"தான் ஊத இலகுவாக இருக்கும் பாட்டு. ஆனால் அப்போது பாட்டின் கவிந்யத்தை மட்டும் உணர்ந்திருக்கவில்லை.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் சொல்லாதது,  பூவரசம் பழுத்தலில் ஆச்சி சுறுட்டை வாகாகச் சுற்றி  மினக்கட்டு பெரும் முயற்சியுடன் பத்த வைத்து  பொச்சு,பொச்சு என்று புகை விட  அந்தப் புகை மார்கழிப் பனியை மென்மையாய் ஊடறுத்து  செல்லும்..! :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  ஐயா  பதிவுக்கு...

ஒரு கணம் கண் பனித்தது

மண்ணையும் அந்த மகரந்தத்தையும் மனம் தேடியது...

Link to comment
Share on other sites

இதுவும் சொல்லாதது,  பூவரசம் பழுத்தலில் ஆச்சி சுறுட்டை வாகாகச் சுற்றி  மினக்கட்டு பெரும் முயற்சியுடன் பத்த வைத்து  பொச்சு,பொச்சு என்று புகை விட  அந்தப் புகை மார்கழிப் பனியை மென்மையாய் ஊடறுத்து  செல்லும்..! :rolleyes::D

குரும்ப்பட்டியில் செய்யும் தையல் மெசினுக்கும் நாங்கள் பூவரசம் இலைதான் போட்டு தைப்போம். மற்றைய இலைகளைப் போடும் போது தையல் மெசின் சத்தம் வருவதில்லை. 

தைத்து முடிய இலையில் விழுந்த்திருக்கும் துளைகள் தையல் மெசினது துணிமீதான துளைகள் போலவே இருக்கும்.

Link to comment
Share on other sites

பூவரசின் வைரம் தண்ணீர் உறிஞ்சு உப்பிக்கும் தன்மை இல்லாதது. இதனால் தச்சுத்தொழிலாளிகள் காய்ந்த பூவரம் வைரத்தில் செய்யும் இடியப்ப உரலின் குழலும் உலக்கையும் வீட்டுபெண்கள் மணித்தியாலகணக்காக வைத்து நனைந்த மாவில் இடியப்பம் பிழியும் போது உப்பி இரண்டும் ஒன்றுடன் ஒன்று இறுக்காது. இலுப்பையும் தண்ணிர் தாங்கும் என்பார்கள். ஆனால் பூவரசம் வைரம் கருங்காலி மாதிரியே செதுக்கலுக்கும் உகந்த மரம். (ஆனல் அதிக அளவில் சிற்ப வேலைப்படுகளுக்கு பாவிக்கபடுவதில்லை). இதனால் உரலும், உலக்கையும் நவீன கால "பிஸ்டன், போர்" மாதிரி நுணுக்கமாக பொருந்தவும், இலகுவாக வழுக்கி செல்ல செம்மையாக அரம் போடவும் இடம் கொடுக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகளை மீட்கும் பகிர்வுகளுக்கு நன்றி :D

Link to comment
Share on other sites

 

 
1528620_10151920979618002_1428696802_n.j
பூவரசம் இலைக்கு எங்களின் ஊரில் பலவிதமான பாவனை உண்டு.

6.அஞ்சாம்மனை கோயில்ல புக்கை வாங்க அவசரமா உதவும் பாத்திரம் இதுதான்.

கன இலைகளை ஈக்கிலால ஒண்டா வட்டமா கோப்பை போல குத்தி அதில கோயில்ல தரும் புக்கையோ இல்லை அன்னதான சோறோ வாங்கி திண்டால் அதில வாற ருசி சொல்லி வேலையில்லை.

-தமிழ்ப்பொடியன்-

poovarasu9.JPG

 

பூவரசு பற்றி பல சுவாரசியமான தகவல்களை வழங்கி இருக்கின்றீர்கள் அதில் சிறு திருத்தம் அஞ்சாம்மனை அல்ல ஐந்தான்பனை என்பதுதான் சரியானது. இது ஒரு காரனப்பெயராம் அவ்விடத்தில் ஐந்து ஆண் பனைகள் உள்ளனவாம் அதனால்தான் ஐந்தான்பனை என அந்த இடத்திற்கு பெயர் வந்ததாம்.
 
எனக்கு தெரிந்த ஊர் என்பதனால் இங்கு இதனை எழுதினேன் தயவு செய்து தப்பாக நினைக்காதீர்கள் தமிழ்ப்பொடியன். :)     
Link to comment
Share on other sites

நன்றி அலையரசி

:-)

நான் எழுதியது சாதாரண பேச்சு வழக்குத்தமிழ்.

எங்கட ஊரில் நாங்கள் " அஞ்சாம்மனை பிள்ளையார்" கோவில் எண்டுதான் சொல்லுவம்.

ஆனால் நீங்கள் கூறிய விளக்கம் முற்றிலும் உண்மை.

நான் நினைக்கிறன் உங்கட அப்பாட்ட கேளுங்கோ .... அவருக்கு தெரியும் :-)

நான் மண் திண்டு வளர்ந்த ஊர் அது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வாழ்வோடு பின்னிப் பிணைந்த மரம், பூவரசு!

 

நானும் கனகாலத்துக்குப் பிறகு, ஊருக்குப் போறபோது முதல்ல செய்யிற வேலை, பூவரசம்  இலையில ' பீப்பீ' செய்து, ஒரு சினிமாப்பாட்டு வாசிக்கிறது தான்!

 

அந்தக் காலம் முதல் ஒரே ஒரு பாட்டுத்தான் பாட வரும்!  

 

' அடி என்னடி ராக்கம்மா.....' அந்த மாதிரி இருக்கும்!

 

பூவரசம் பூவின், இதழின் ஒரு பகுதியையும், நாக்கில் வைத்து, ஒரு விதமான இசை எழுப்பலாம்!

 

அனுபவமுள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்!

 

நினைவு மீட்டலுக்கு நன்றிகள்,

 

அந்தப் பாட்டு மட்டும்தான் எல்லாருக்கும் வரும் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா ! அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன் அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த ஆய்வுகப்பலில், பல்கலைக்கழக மாணவர்களே வருகைத் தருவதாகவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே அனுமதி கோரியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை எனவும், எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான அனுமதியை மறுத்துள்ள இலங்கை அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. மேலும், எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிலளித்துள்ளது. இதேவேளை, சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அரசாங்கம், எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இனி இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த கப்பலின் தேவைகளை, சர்வதேச கற்பரப்பிற்குள் சென்று பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனிடையே குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல், சென்னை துறைமுகத்துக்குள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380126
    • நாகப்பட்டினத்திலிருந்து – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல், மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது. அதன்படி, மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை சென்றடையும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த கப்பல் சேவையில், இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1380121
    • இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார்.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.   இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 
    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.