Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் மகளும், நானும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருண்டு போய்க் கிடந்த,

அமாவாசை இரவொன்றில்,

வெளிச்சத்தின் தேவை கருதி,

வந்துதித்த நிலவு நீ!

 

வானத்தின் சந்திரன் கூட,

விடுமுறையில் செல்வதுண்டு,

இரவும் பகலும்,

உறங்காத விழிகள் உன்னுடையவை!

 

நான் பிறந்த தேசத்தின்,

அழகைப் போலவே,

நீயும் வித்தியாசமானவள்!

அதனால் தானோ என்னவோ,

உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது!

 

வானுயர்ந்த மலைகளோ,

வளம் கொழிக்கும் நதிகளோ,

வெண்பனி பொழியும்,

தண்மை காவிய மேகங்களோ,

அங்கிருக்கவில்லை!

 

வாடைக்காற்றும்,

வியாபாரக் காற்றுக்களும்,

காவி வருகின்ற மேகங்கள்,

கருக்கட்டினால் மட்டும்,

மழை பெறுகின்ற தேசம்!

 

இருந்தாலும்,

வானுயர்ந்த பனைகளும்,

வளம் கொழிக்கும் வயல்களும்,

அந்தத் தூவானத்திலும்,

பிறப்பெடுத்து வாழ்ந்தன!

 

வானம் வஞ்சித்து விடுகின்ற,

வேளைகளில்,

கடலன்னை அமுதசுரபியாகி,

அள்ளித் தருவாள்!

அவள் கட்டியிருக்கும்,

நீலப் பட்டாடையில் கூட,

அறுவடை செய்யலாம்!

 

மலையொன்று நகர்ந்து வந்து,

என் மடி மீது அமர்ந்தாலும்,

அதையும் நகர்த்திவிட்டு,

அப்பால் செல்லும் வலிமையை,

என் காய்ந்து போன தேசம்,

எனக்குப் பரிசளித்தது!

 

யாழ் மகளே,

நீயும் அப்படித்தான்!

 

இன்றோ நாளையோ,

என்று எத்தனை தடவை,

மரணத்தின் வீடு வரை,

சென்று திரும்பியிருக்கிறாய்?

 

எமது இனத்தைப் போலவே,

எரியும் நெருப்பிலிருந்து,

எழுந்து வருகின்ற,

‘பீனிக்ஸ்' பறவையாய்,

ஏமாற்றங்களை எரித்து,

மீண்டும், மீண்டும்,

பிறப்பெடுப்பாய்!

 
 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமை கவிதை புங்கையூரன். என் மனநிலையில் எதுவுமே எழுதுவதில்லை என்று இருந்த நான் மனம் கேளாது இன்று காலையில் எழுந்து அவசரத்தில் எழுதிப் போட்டுள்ளேன். உங்கள் கவிதை மனதுக்கு இதம் தருகிறது. நீங்களும் என்னைப் போலவே பெண்ணாய் உருவகித்தது மிக்க மகிழ்ச்சி :D:lol:

யாழ் மகளே,

நீயும் அப்படித்தான்!

 

இன்றோ நாளையோ,

என்று எத்தனை தடவை,

மரணத்தின் வீடு வரை,

சென்று திரும்பியிருக்கிறாய்? /// அவ்வப்பொழுது உங்கள் சுடுதணல் மனம் உள்ளவர்களைப் பாதிக்கத் தான் செய்யும் .வாழ்த்து பாவுக்குப் பாராட்டுக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ...

 

மலையொன்று நகர்ந்து வந்து,
என் மடி மீது அமர்ந்தாலும்,
அதையும் நகர்த்திவிட்டு,
அப்பால் செல்லும் வலிமையை,
என் காய்ந்து போன தேசம்,
எனக்குப் பரிசளித்தது!

யாழ் மகளே,
நீயும் அப்படித்தான்!

 

அந்தச் சிறுக்கிக்கு இது போதாதா? என்ன மாயம் செய்தவள் இவள் எல்லோரையும் மயக்கி தன் அணைப்புக்குள் இதமாக வைத்துள்ளாள். இவளின் இதமான அணைப்புக்குள் இருந்து நாங்கள் இடும் குழப்படிகள் எத்தனை எல்லாம் தாங்கிக் கொள்கிறாளே.. ஆனால் பருவம் பதினாறு நம்பத்தான் முடிகிறதா? ரோமியோ இவளுக்கு வாழ்த்து சொல்ல வந்தீர்களா அல்லது இவள் மீதுள்ள தீராக்காதலை வெளிப்படுத்த முனைந்தீர்களா..... அற்புதமாக இருக்கிறது கையில் ஏதாவது மலர் மாலை இருந்திருந்தால் இப்போதே உங்களுக்கு சூட்டியிருப்பேன்  உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அற்புதக்கவிஞனுக்கு...பாராட்டுக்கள் ரோமியோ.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் யாழை பெண்ணாக வர்ணித்து கவிதை எழுதுகிறார்களே...
யாராவது யாழை. ஆணாக வர்ணிங்கப்பா.... :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் யாழை பெண்ணாக வர்ணித்து கவிதை எழுதுகிறார்களே...

யாராவது யாழை. ஆணாக வர்ணிங்கப்பா.... :)

 

எழுதிட்டாப் போச்சு...ஆனா பசங்க கெட்டுப் போய்விடுவார்களே அதுதான் யோசனையாக் கிடக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

எழுதிட்டாப் போச்சு...ஆனா பசங்க கெட்டுப் போய்விடுவார்களே அதுதான் யோசனையாக் கிடக்கு.. :D

 

இனிக் கெடுவதற்க்கு... ஒன்றும் இல்லை :lol: 

நீங்க, எழுதுங்க வல்வை. :D

வானத்தின் சந்திரன் கூட,

விடுமுறையில் செல்வதுண்டு,

இரவும் பகலும்,

உறங்காத விழிகள் உன்னுடையவை!

 

உவமைகளை பருகுகிறேன்...!!

 

உறங்கா விழிகளாயினும் உள்ளத்தை கிறங்கடிக்கும் மதர்க்கண் மங்கையிவள்!!

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமான கவிதை , சொன்னவையும் நிஜங்கள்...! :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மகளே,

நீயும் அப்படித்தான்!

 

இன்றோ நாளையோ,

என்று எத்தனை தடவை,

மரணத்தின் வீடு வரை,

சென்று திரும்பியிருக்கிறாய்?

 

எமது இனத்தைப் போலவே,

எரியும் நெருப்பிலிருந்து,

எழுந்து வருகின்ற,

‘பீனிக்ஸ்' பறவையாய்,

ஏமாற்றங்களை எரித்து,

மீண்டும், மீண்டும்,

பிறப்பெடுப்பாய்!

 
 
கவிதைக்கு நன்றியண்ணா
  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமை கவிதை புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமை கவிதை புங்கையூரன். என் மனநிலையில் எதுவுமே எழுதுவதில்லை என்று இருந்த நான் மனம் கேளாது இன்று காலையில் எழுந்து அவசரத்தில் எழுதிப் போட்டுள்ளேன். உங்கள் கவிதை மனதுக்கு இதம் தருகிறது. நீங்களும் என்னைப் போலவே பெண்ணாய் உருவகித்தது மிக்க மகிழ்ச்சி :D:lol:

வணக்கம், சுமேரியர்....யாழ் பெண்ணா அல்லது ஆணா என்று அடுத்த பிறந்த நாளுக்கு முன்னர் கண்டு பிடித்து விடலாம்! :icon_idea:

தங்கள் கருத்துக்கு நன்றிகள்!

யாழ் மகளே,

நீயும் அப்படித்தான்!

 

இன்றோ நாளையோ,

என்று எத்தனை தடவை,

மரணத்தின் வீடு வரை,

சென்று திரும்பியிருக்கிறாய்? /// அவ்வப்பொழுது உங்கள் சுடுதணல் மனம் உள்ளவர்களைப் பாதிக்கத் தான் செய்யும் .வாழ்த்து பாவுக்குப் பாராட்டுக்கள் .

நன்றிகள், கோமகன்!

 

புத்துணர்வுடன் களமிறங்கியிருக்கின்றீர்கள்!

 

பகிர்வுகளுக்காகப் பசியோடு காத்திருக்கிறேன்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ...

 

மலையொன்று நகர்ந்து வந்து,

என் மடி மீது அமர்ந்தாலும்,

அதையும் நகர்த்திவிட்டு,

அப்பால் செல்லும் வலிமையை,

என் காய்ந்து போன தேசம்,

எனக்குப் பரிசளித்தது!

யாழ் மகளே,

நீயும் அப்படித்தான்!

 

அந்தச் சிறுக்கிக்கு இது போதாதா? என்ன மாயம் செய்தவள் இவள் எல்லோரையும் மயக்கி தன் அணைப்புக்குள் இதமாக வைத்துள்ளாள். இவளின் இதமான அணைப்புக்குள் இருந்து நாங்கள் இடும் குழப்படிகள் எத்தனை எல்லாம் தாங்கிக் கொள்கிறாளே.. ஆனால் பருவம் பதினாறு நம்பத்தான் முடிகிறதா? ரோமியோ இவளுக்கு வாழ்த்து சொல்ல வந்தீர்களா அல்லது இவள் மீதுள்ள தீராக்காதலை வெளிப்படுத்த முனைந்தீர்களா..... அற்புதமாக இருக்கிறது கையில் ஏதாவது மலர் மாலை இருந்திருந்தால் இப்போதே உங்களுக்கு சூட்டியிருப்பேன்  உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அற்புதக்கவிஞனுக்கு...பாராட்டுக்கள் ரோமியோ.

வணக்கம், வல்வை!

 

பருவத்தில் எழில் அத்தனையும், ஒரே புள்ளியில் 'குவிகின்ற வயது' பதினாறு! :D

 

பாவை இவள் 'யாழுக்கும்' வயது பதினாறு!

 

நீங்கள் இப்படியொரு 'தீராக் காதலை', இழுத்து வருவீர்கள் என்பதற்காகவே, யாழ் மகள் என்று அவளை விழித்துள்ளேன்! :icon_idea:

 

நன்றிகள்.....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 கவிதை சுப்பர் புங்கை அண்ணை :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை புங்கை

அருமை அண்ணே அந்த கேப்பில தீவனை உள்ளகொண்டுவந்து போனிங்க பாருங்க அங்க நிக்கிறிங்க .. :D :D

 

வாழ்த்துக்கள் அண்ணே .!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு மேல் புதிதாய் என்ன சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் என் எண்ணக்கருக்களை பதிந்துவிட்டார்கள், அருமை. வாழ்த்துக்கள் புங்கை அண்ணா. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உவமைகளை பருகுகிறேன்...!!

 

உறங்கா விழிகளாயினும் உள்ளத்தை கிறங்கடிக்கும் மதர்க்கண் மங்கையிவள்!!

உண்மை தான், ஆதி!

 

நான் பார்க்கும் போது

நிலம் பார்க்கிறாள்,

நான் ஊர் பார்க்கும் போது,

எனைப் பார்க்கிறாள்!

 

பொல்லாதவள்!  :D

நிஜமான கவிதை , சொன்னவையும் நிஜங்கள்...! :)

 

வாய்மையே ஜெயிக்கும்!  :D

 

நன்றிகள் சுவியர்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ் மகளே,

நீயும் அப்படித்தான்!

 

இன்றோ நாளையோ,

என்று எத்தனை தடவை,

மரணத்தின் வீடு வரை,

சென்று திரும்பியிருக்கிறாய்?

 

எமது இனத்தைப் போலவே,

எரியும் நெருப்பிலிருந்து,

எழுந்து வருகின்ற,

‘பீனிக்ஸ்' பறவையாய்,

ஏமாற்றங்களை எரித்து,

மீண்டும், மீண்டும்,

பிறப்பெடுப்பாய்!

 
 
கவிதைக்கு நன்றியண்ணா

 

 

ஒரு குழந்தை பிறந்து,

உடம்பு பிரட்டி,

உருண்டு தவழ்ந்து,

எழுந்து தான்,

முதல் காலடியை.

எடுத்து வைக்கிறது!

 

யாழ் என்னும் குழந்தை,

மான் குட்டியைப் போல..!

 

உருண்டு பிரள்வதற்கு,

அவகாசமிருக்கவில்லை!

பிறந்த மறு கணமே,

நடக்கத் தொடங்கியவள்! :D

 

 

நன்றிகள், விசுகர்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமை கவிதை புங்கையூரன்

நன்றிகள், அஹஸ்தியன்! :D  

 கவிதை சுப்பர் புங்கை அண்ணை :D

நன்றிகள், பரியாரியார்!

:lol:

நல்ல கவிதை புங்கை

நன்றிகள் புத்தன்!

 

வசிட்டரிடம் வாழ்த்துப் பெறுகிற மாதிரிச் சந்தோசம்! :D

அருமை அண்ணே அந்த கேப்பில தீவனை உள்ளகொண்டுவந்து போனிங்க பாருங்க அங்க நிக்கிறிங்க .. :D :D

 

வாழ்த்துக்கள் அண்ணே .!

 

நன்றிகள், அஞ்சரன்!

 

உங்களைப் படைத்தவன், உங்கள் மூளையுடன், 'கன நேரம்' மினக்கெட்டிருக்கிறான்! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
புங்கையர்! உங்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் சொல்ல எனக்கு அருகதையில்லை...
யாழுடனான உங்களின் சுயசரிதைக்கவிதை பிரமாதம். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.