Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிக்க.... சில, சிறு கதைகள். (இணையத்தில்... படித்தது.)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
parachute.gif
 
ஒரு விமானத்தில் 5 பேர் பயணம் சென்றார்கள்.

அம்பானி, மோடி, தோனி, ராகுல் காந்தி, ஒரு சிறுவன்,

விமானம் வெடிக்கும் நிலையில் இருந்தது.
4 பாரசூட் தான் இருந்தது....


அம்பானி: இந்தியா பொருளாதாரத்தை நான்
உயர்த்தணும்.அவர் குதிச்சிட்டார்....

2.தோனி: கிரிக்கெ ட்டுக்கு நான் தேவை ,அவர்
குதிச்சிட்டார்.

3.ராகுல்: அடுத்த பிரதமர் நான்தான் அப்படினு அவரும்
குதிச்சிட்டார்....

மோடி...அந்த சிறுவனிடம் சொன்னாரு
தம்பி நான் வாழ்ந்துட்டேன்..
நீ இன்னும்,  வாழவே இல்லை.

 
மீதம் இருக்கிற ஒரு பாரசூட்
எடுத்துகிட்டு நீ குதிச்சிடுனு சொன்னாரு.


அந்த சிறுவன் சொன்னான்,ராகுல்
எடுத்துட்டு குதிச்சது என் ஸ்கூல் பேக்.

இப்ப நம்மட்ட, 2  பாரசூட்இருக்கு வாங்க குதிக்கலாம்....
 

 

Edited by தமிழ் சிறி

மோடி அவ்வளவு நல்லவரா???? சொல்லவேயில்லை :lol:

பகிர்வுக்கு நன்றி சிறி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

மீதம் இருக்கிற ஒரு பாரசூட்
எடுத்துகிட்டு நீ குதிச்சிடுனு சொன்னாரு.


அந்த சிறுவன் சொன்னான்,ராகுல்
எடுத்துட்டு குதிச்சது என் ஸ்கூல் பேக்.

இப்ப நம்மட்ட, 2  பாரசூட்இருக்கு வாங்க குதிக்கலாம்....

 

இந்தியாவுக்கு நல்ல  காலம் பிறந்தது என்ற நினைத்தேன்

என்ன

முதலையிடமிருந்து  தப்பி

சிங்கத்திடம் அகப்பட்டுவிட்டது :lol: 

(முதலை  ராகுல்

சிங்கம் மோடி)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
ஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள் .ஒரு அழகிய பெண்ணும் லிப்ஃடில் வந்தாள்.

கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க, திடீரென அழகி அவனை அறைந்தாள்.

கணவன் அதிர்ச்சியடைந்து "ஏன் இப்ப அறைஞ்சே..?"என்று கேட்க


"எதுக்கு என் இடுப்பை கிள்ளினே..?"என்றாள்.

கணவனுக்கோ ஒன்றும் புரியல . மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்று அவமானம் . அதோட பயங்கர குழப்பம் வேற . லிப்ஃட் நின்னு எல்லோரும் வெளியேற,

மனைவி குசுகுசுன்னு சொன்னாள், "அதையே யோசிச்சுட்டு இருக்காதீங்க. உங்க ஜொள்ளைப் பார்த்து எரிச்சல்ல நான் தான் அவளைக் கிள்ளினேன்..

மேலே உள்ள கதையின் சாயலில் இன்னும் ஒன்று...

 

ரயிலில் ஒரு பாட்டி, ஒரு இளம்பெண், ஒரு இந்தியன் மற்றும் ஒரு பாகிஸ்தானி பயணம் செய்துகொண்டிருந்தார்கள்....

அப்போது ரயில் ஒரு சுரங்கம் வழியாக பயணித்தபோது...ஒரே கும்மிருட்டு....

அப்போது "இச்" சென்று ஒரு முத்தம் கொடுக்கும் சத்தமும்.....உடனே "பளார்" என்று ஒரு அறைவிழும் சத்தமும் கேட்டது...

ரயிலும் சுரங்கத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தது...எல்லாரும் என்னநடந்தது என்று முழித்து கொண்டு ஆளை மாற்றி ஆள் பார்த்துகொண்டு இருந்தார்கள்...

 

பாட்டி: "யாரோ ராஸ்கல் இருட்டு என்று அந்த பெண்ணை முத்தமிட அவளும் அறைந்திருக்கிறாள்" என்று நினைக்க

 

இளம் பெண்: "காஞ்ச மாடுகள்...என்னை என்று நினைத்து அந்த கிழவிக்கு முத்தமிட அவரும் ஆறைந்திருக்கிறார்" என்று நினைக்க

 

பாகிஸ்தானி : "இந்த இந்தியன் அவளுக்கு கொஞ்ச அவள் எனக்கு அறைஞ்சு போட்டாள்" என்று மனதிற்குள் மறுகிகொண்டு இருக்க ....

 

இந்தியன்: "நானே எனது கையை கொஞ்சி போட்டு பாக்கியின் முகத்தில் அறைந்தது...எவ்வளவு சந்தோசம்" என்று மனதிற்குள் சந்தோசபட்டு கொண்டே

பயணத்தை தொடர்ந்தார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள கதையின் சாயலில் இன்னும் ஒன்று...

 

ரயிலில் ஒரு பாட்டி, ஒரு இளம்பெண், ஒரு இந்தியன் மற்றும் ஒரு பாகிஸ்தானி பயணம் செய்துகொண்டிருந்தார்கள்....

அப்போது ரயில் ஒரு சுரங்கம் வழியாக பயணித்தபோது...ஒரே கும்மிருட்டு....

அப்போது "இச்" சென்று ஒரு முத்தம் கொடுக்கும் சத்தமும்.....உடனே "பளார்" என்று ஒரு அறைவிழும் சத்தமும் கேட்டது...

ரயிலும் சுரங்கத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தது...எல்லாரும் என்னநடந்தது என்று முழித்து கொண்டு ஆளை மாற்றி ஆள் பார்த்துகொண்டு இருந்தார்கள்...

 

பாட்டி: "யாரோ ராஸ்கல் இருட்டு என்று அந்த பெண்ணை முத்தமிட அவளும் அறைந்திருக்கிறாள்" என்று நினைக்க

 

இளம் பெண்: "காஞ்ச மாடுகள்...என்னை என்று நினைத்து அந்த கிழவிக்கு முத்தமிட அவரும் ஆறைந்திருக்கிறார்" என்று நினைக்க

 

பாகிஸ்தானி : "இந்த இந்தியன் அவளுக்கு கொஞ்ச அவள் எனக்கு அறைஞ்சு போட்டாள்" என்று மனதிற்குள் மறுகிகொண்டு இருக்க ....

 

இந்தியன்: "நானே எனது கையை கொஞ்சி போட்டு பாக்கியின் முகத்தில் அறைந்தது...எவ்வளவு சந்தோசம்" என்று மனதிற்குள் சந்தோசபட்டு கொண்டே

பயணத்தை தொடர்ந்தார்கள்...

இந்தியனா.... கொக்கா..?  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-------

பாகிஸ்தானி : "இந்த இந்தியன் அவளுக்கு கொஞ்ச அவள் எனக்கு அறைஞ்சு போட்டாள்" என்று மனதிற்குள் மறுகிகொண்டு இருக்க ....

 

இந்தியன்: "நானே எனது கையை கொஞ்சி போட்டு பாக்கியின் முகத்தில் அறைந்தது...எவ்வளவு சந்தோசம்" என்று மனதிற்குள் சந்தோசபட்டு கொண்டே பயணத்தை தொடர்ந்தார்கள்...

 

நீங்கள் பாவித்த சொற்கள்... மேலும், சிரிப்பை ஏற்படுத்தி விட்டது.... நாந்தான். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

cooking-woman-retro.jpg



 

புதிதாக திருமணம் ஆனவர்,

தன் மனைவிக்கு காது கேட்கிறதா.....

 

என சோதிப்பதற்காக வெளியிலிருந்து.. மனைவியிடம்,

 

இன்று என்னை குழம்பு என்று கேட்டார்.

பதில் வரவில்லை.

 

வீட்டிற்குள் வந்து, என்ன.... குழம்பு என்றார்.

மனைவிடமிருந்து பதிலில்லை.

 

சமையலறைக்கு சென்று... என்ன குழம்பு என்றார்.

மூன்றாவது... முறையும் பதிலில்லை.

 

அருகில் வந்தார்... அதற்கு மனைவி,  

நீங்கள் 3 முறை கேட்டதற்கு....

இன்று கருவாட்டுக் குழம்பு என்று சொன்னானே....

கேட்க வில்லையா என்றாள்.

 

cooking-woman-retro.jpg



 

புதிதாக திருமணம் ஆனவர்,

தன் மனைவிக்கு காது கேட்கிறதா.....

 

என சோதிப்பதற்காக வெளியிலிருந்து.. மனைவியிடம்,

 

இன்று என்னை குழம்பு என்று கேட்டார்.

பதில் வரவில்லை.

 

வீட்டிற்குள் வந்து, என்ன.... குழம்பு என்றார்.

மனைவிடமிருந்து பதிலில்லை.

 

சமையலறைக்கு சென்று... என்ன குழம்பு என்றார்.

மூன்றாவது... முறையும் பதிலில்லை.

 

அருகில் வந்தார்... அதற்கு மனைவி,  

நீங்கள் 3 முறை கேட்டதற்கு....

இன்று கருவாட்டுக் குழம்பு என்று சொன்னானே....

கேட்க வில்லையா என்றாள்.

 

இதுக்கு மேலே இருப்பதை வாசித்து எனக்கு சிரிப்பு வரவில்லை, இதை வாசிச்சபோதுதான் சிரிப்பு வந்தது. பகிர்விற்கு நன்றிகள் சிறி.
  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் மனிசிக்கு முன்னால் அழகிட்ட அறைவாங்கியது கொஞ்சம் சங்கடம்தான், இல்லற வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். எந்தக் கண்ணம்  என்டு சொன்னீங்கள் என்டால் , அழகி எந்தக் கைப் பழக்கமுடையவள் என்டு தெரியும்...! :)

மற்றவர்களும் இப்படி கதைகளை பகிர்ந்தால்....நலம்...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

river.jpg
 
ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார்.
 
பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.
 
மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். “”நாம அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்” பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.
 
அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார்.....
“”அப்பா…அப்பா… ” என்றான் பையன்.
“”என்னடா?” கோபத்துடன் கேட்டார்.
“இந்தக் காட்டாறு எங்கே போகுது?” “
”நம்ம வீட்டுக்குத்தான்”
 
பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை. மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு “”வா, போகலாம். நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?” என்று கேட்டார்.
 
பையன் சொன்னான்: “”நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன்.  இந்நேரம்  அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்..!’ ன்னும் பொறுமையா பதில் சொன்னான் செல்ல மகன்

 

  • கருத்துக்கள உறவுகள்
இவரல்லவோ கணவர்   
 
(சிறிய மனக்கசப்பில் கணவனும் மனைவியும் ) 
 
கணவன் : மனைவியை பார்த்து , சாப்பாட்டிற்கு ஆம்பிலைட் எதற்கு , முட்டையை அவித்து வைக்க வேண்டியதுதானே என்றார் ! 
 
மனைவி: இரண்டாம் நாள் சாப்பாட்டுக்கு முட்டையை அவித்துவைத்திருந்தார் ! 
 
கணவன் : சாப்பிடும்போது முட்டையை எதுக்கு அவித்து வைத்திருக்கிறாய் , ஆம்பிலட் செய்திருக்க வேண்டியதுதானே என்று கடிந்து கொண்டார்! 
 
மனைவி : மூன்றாம் நாள் ஒரு முட்டையை அவித்தும் , ஒரு முட்டையை ஆம்பிலைட் செய்தும் , இன்று கணவனிடம் தப்பித்து விடலாம் என்று மகிழ்ந்தார் ! 
 
கணவன்: கணவன் சாப்பிடும்போது , ஏன் இப்படி செய்து வைத்தாய் , 
ஆம்பிலைட் செய்யவேண்டிய முட்டையை அவித்தும் , அவிக்க வேண்ட்டிய முட்டையை ஆம்பிலைட் செய்தும் இருக்கிறாயே என்று கடிந்து கொண்டார் ! 
 
மனைவி : !!!!! ????

 

இவரல்லவோ கணவர்   
 
(சிறிய மனக்கசப்பில் கணவனும் மனைவியும் ) 
 
கணவன் : மனைவியை பார்த்து , சாப்பாட்டிற்கு ஆம்பிலைட் எதற்கு , முட்டையை அவித்து வைக்க வேண்டியதுதானே என்றார் ! 
 
மனைவி: இரண்டாம் நாள் சாப்பாட்டுக்கு முட்டையை அவித்துவைத்திருந்தார் ! 
 
கணவன் : சாப்பிடும்போது முட்டையை எதுக்கு அவித்து வைத்திருக்கிறாய் , ஆம்பிலட் செய்திருக்க வேண்டியதுதானே என்று கடிந்து கொண்டார்! 
 
மனைவி : மூன்றாம் நாள் ஒரு முட்டையை அவித்தும் , ஒரு முட்டையை ஆம்பிலைட் செய்தும் , இன்று கணவனிடம் தப்பித்து விடலாம் என்று மகிழ்ந்தார் ! 
 
கணவன்: கணவன் சாப்பிடும்போது , ஏன் இப்படி செய்து வைத்தாய் , 
ஆம்பிலைட் செய்யவேண்டிய முட்டையை அவித்தும் , அவிக்க வேண்ட்டிய முட்டையை ஆம்பிலைட் செய்தும் இருக்கிறாயே என்று கடிந்து கொண்டார் ! 
 
மனைவி : !!!!! ????

 

 

ம்கும்... இப்படி வீட்டில் செய்தால் முட்டைக் கோது கூடக் சாப்பிடக் கிடைக்காது..........

இரண்டு பேருக்கும் காது கேளாது.. ஒருவர் வாளியை எடுத்துக்கொண்டு போக மற்றவர் எங்கே அண்ணே குளிக்கவோ போறீர் என்று கேட்டார். மற்றவர் சீ, சீ நான் குளிக்கப்போறன் என்றர். அதற்கு மற்றவர் அது தானே நான் நினைச்சன் நீர் குளிக்கப்போகிறீர் என்று.....

பையித்தகார ஆஸ்பத்திரிக்கு சிறிமோவோ சென்றபோது பையித்தியங்கள் எல்லாம் தங்கள் பாட்டில் இருந்து கொண்டு சிறிமாவை கவனிக்கவில்லை. உடனே நான் தான் இந்த நாட்டு பிரதமர் என ஒரு பைத்தியத்திடம் அறிமுகம் செய்ய உடனே நாங்களும் இங்குவரும் போது பிரதமர் என்று சொல்லிக்கொண்டு வந்தனாங்கள் போகப்போக எல்லாம் சரிவரும் உள்ளுக்கு போ என்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று...

டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றாள்.

என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன் என்றாள்.

டாக்டர், அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும் ? என்றார்.

அவள், நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன் என்றாள்.

டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார். உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை என்றார்.

தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார் என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.

டாக்டர், இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றார்.

உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல் என்றார்.

அந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், வேண்டாம் டாக்டர், வேண்டாம் ! நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம் என்றாள்.

ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன ? பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன ? இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி என்றார்.

அந்தப்பெண் இரண்டு குழந்தையும் வேண்டும் என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்..

 

படித்ததில்  பிடித்தது...! :)

  • கருத்துக்கள உறவுகள்

வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: Honey, I logged in.
மனைவி: ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: no darling, the disk is full.
மனைவி: உங்கள் சம்பள உயர்வு கிடைத்ததா?
கணவன்: Access not allowed.
மனைவி: வரும்போது பட்டுப் புடைவை வாங்கிவரச் சொன்னேன். வாங்கி� �ீங்களா?
கணவன்: Bad command or file name
மனைவி: நானே வாங்கிக்கிறேன் பணத்தைக் கொடுங்க….
கணவன்: erroneous syntext
மனைவி: உங்க கிரெடிட் கார்ட்டையாவது தாருங்க….நான் வான்கிக்கிறேன்.
கணவன்: access denied
மனைவி: நேற்று உன்னை ஒருத்தியுடன் கண்டாதாக அடுத்தவீட்டுப் பெண் சொன்னாள். யாரது?
கணவன்: wrong password
மனைவி: உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டேன்
கணவன்: data mismatch
மனைவி: உன் தொழில் புத்தி உன்னை விட்டுப் போகாது
கணவன்: by default
மனைவி: மவனே, என்னை யாரென்று எண்ணிக் கொண்டாய்
கணவன்: virus detedted
மனைவி: நான் சொல்வது ஏதாவது உன் மண்டையில் ஏறுகிறதா?
கணவன்: too many parameters
மனைவி: உன்னை விட்டுத் தொலைந்தால் தான் எனக்கு நிம்மதி
கணவன்: press contl, alt & del
மனைவி: நான் அப்பா வீட்டுக்குப் போகிறன்.
கணவன்: illegal operation, system shuts down
மனைவி: நான் தொலஞ்சு போறன்.
கணவன்: reboot
மனைவி: நான் இல்லாட்டித்தான் உனக்கு என் அருமை புரிய� �ம்
கணவன்: change user

வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: Honey, I logged in.

மனைவி: ஏதாவது சாப்பிடுறீங்களா?

கணவன்: no darling, the disk is full.

மனைவி: உங்கள் சம்பள உயர்வு கிடைத்ததா?

கணவன்: Access not allowed.

மனைவி: வரும்போது பட்டுப் புடைவை வாங்கிவரச் சொன்னேன். வாங்கி� �ீங்களா?

கணவன்: Bad command or file name

மனைவி: நானே வாங்கிக்கிறேன் பணத்தைக் கொடுங்க….

கணவன்: erroneous syntext

மனைவி: உங்க கிரெடிட் கார்ட்டையாவது தாருங்க….நான் வான்கிக்கிறேன்.

கணவன்: access denied

மனைவி: நேற்று உன்னை ஒருத்தியுடன் கண்டாதாக அடுத்தவீட்டுப் பெண் சொன்னாள். யாரது?

கணவன்: wrong password

மனைவி: உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டேன்

கணவன்: data mismatch

மனைவி: உன் தொழில் புத்தி உன்னை விட்டுப் போகாது

கணவன்: by default

மனைவி: மவனே, என்னை யாரென்று எண்ணிக் கொண்டாய்

கணவன்: virus detedted

மனைவி: நான் சொல்வது ஏதாவது உன் மண்டையில் ஏறுகிறதா?

கணவன்: too many parameters

மனைவி: உன்னை விட்டுத் தொலைந்தால் தான் எனக்கு நிம்மதி

கணவன்: press contl, alt & del

மனைவி: நான் அப்பா வீட்டுக்குப் போகிறன்.

கணவன்: illegal operation, system shuts down

மனைவி: நான் தொலஞ்சு போறன்.

கணவன்: reboot

மனைவி: நான் இல்லாட்டித்தான் உனக்கு என் அருமை புரிய� �ம்

கணவன்: change user

 

ஹி ஹி...நன்னா இருக்கு போங்கள்..

 

  • கருத்துக்கள உறவுகள்
வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

 
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போதுசவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டிகுறுக்குப் பலகைகள் போட்டுஅதன் மேல பல சித்தாள்கள் நின்னுகைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகுஅந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சுகீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டுவேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமாஅந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு எல்லாம், தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

குறும்படப்போட்டிக்கு வந்த ஒரு 2 நிமிட  குறும்படத்தின்  கதை

 

ஒரு 10  வயசுப்பிள்ளை

வகுப்பிலிருந்து விலையுயர்ந்த தொலைபேசியை  திருடிக்கொண்டு வந்து

வீட்டில் ஒழித்துவைப்பான்

அதனை  மோப்பம்  பிடித்து  கண்டு பிடித்த  தாய்

அவனது காதில் முறுக்கி  அடித்து

தகப்பனிடமும்

எங்க  இருந்து இந்தப்பழக்கம் வந்தது உனக்கு என பேச்சு  வாங்கிக்கொடுப்பார்

 

பிள்ளை சற்று தள்ளிப்போக

மனைவி  கணவனைக்கேட்பார்

மலசல  கூடத்துக்கு  பாவிக்கிற பேப்பர் இல்லையென்று நேற்று சொன்னனான்

நீங்கள் ஏன்  கொண்டுவரவில்லை என

கணவன் சொல்வார்

இன்றைக்கு வேலையில் மனேஐர்   நின்றவனப்பா

நாளைக்கு நிற்கமாட்டான்

நாளைக்கு கொண்டு வாறன்....... :lol:  :D  :D

Edited by விசுகு

நல்ல குடும்பம் ஹஹஹஹ்ஹா  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க வைத்திய அதிகாரி: ஒரு மனிதன் பேசினால் குறைந்தளவு 10 Db(டெசிபல்) சத்தமாவது கேட்க்கும் 
                                                மன்மோகன் சிங் இதைவிட குறைந்தளவில் பேசும் சக்தியை கொண்டிருக்கிறார் அதனை 
                                                 அவர் அமெரிக்காவுடனும் பகிரவேண்டும் 

 

அமெரிக்க Sound Engineer: 40 அடி ஆழத்தில் கேட்க்கும் சத்தத்தை கூட Track பண்ணும் வசதி எங்களிடம் உண்டு 
                                               ஆனால் மன்மோகன் சிங் பேசும் ஒலியை மட்டும் எங்களால் பதிவு செய்ய முடியவில்லை 

                                               இந்தியா இந்த தொழிநுட்பத்தை எமக்கு கற்று தர வரவேண்டும் 

 

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்:சத்தம் வராமல் பேசும் தொழிநுட்பம் இந்தியாவிடம் உள்ளது 
                                                அதனை நட்புநாடு என்னும் அடிப்படையில் எம்முடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் 

 

    உண்மையிலே மன்மோகன் சிங் பேசவே இல்லை என்பது அவருக்கு மட்டுமே தெரியும் 

Edited by Atonk

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க வைத்திய அதிகாரி: ஒரு மனிதன் பேசினால் குறைந்தளவு 10 Db(டெசிபல்) சத்தமாவது கேட்க்கும் 

                                                மன்மோகன் சிங் இதைவிட குறைந்தளவில் பேசும் சக்தியை கொண்டிருக்கிறார் அதனை 

                                                 அவர் அமெரிக்காவுடனும் பகிரவேண்டும் 

 

அமெரிக்க Sound Engineer: 40 அடி ஆழத்தில் கேட்க்கும் சத்தத்தை கூட Track பண்ணும் வசதி எங்களிடம் உண்டு 

                                               ஆனால் மன்மோகன் சிங் பேசும் ஒலியை மட்டும் எங்களால் பதிவு செய்ய முடியவில்லை 

                                               இந்தியா இந்த தொழிநுட்பத்தை எமக்கு கற்று தர வரவேண்டும் 

 

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்:சத்தம் வராமல் பேசும் தொழிநுட்பம் இந்தியாவிடம் உள்ளது 

                                                அதனை நட்புநாடு என்னும் அடிப்படையில் எம்முடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் 

 

    உண்மையிலே மன்மோகன் சிங் பேசவே இல்லை என்பது அவருக்கு மட்டுமே தெரியும் 

MANMOHAN-SINGH.jpg

நான் காதைப் பொத்தினதை இவங்கள் கவனிக்கலயே.. :(:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.