Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசிடம் கையேந்துகிறார் சங்கிலி மன்னனின் வாரிசு – ஆளுனர், அமைச்சர் பதவி கேட்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னனாக சங்கிலியனின் வாரிசான ராஜா றெமிஜியஸ் கனகராஜா தற்போது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். 
அவர் தம்மை வடக்கு மாகாண ஆளுனநராக நியமித்தால், அரசியல் பிரச்சினைகளுக்குச் சுமுகமான தீர்வு காண முடியும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். 
தம்மீதான தடையை நீக்கி, அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்தால், தாம் நாடு திரும்பி வடக்கிலுள்ள மக்களுக்குச் சேவையாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நெதர்லாந்தில் தங்கிலுள்ள ராஜா றெமிஜியஸ் கனகராஜா இன்னமும் அரச நடைமுறைகளையே பின்பற்றுகிறார். 

இவர் கடந்த மாதம் நெதர்லாந்து சென்றிருந்த சிறிலங்காவின் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்துப் பேசியுள்ளார். 
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், 
நெதர்லாந்தில் உள்ள சிறிலங்கா துதரகத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்தித்து, சிறிலங்காவின் அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பாக, குறிப்பாக வடக்கின் நிலைமைகள் குறித்துப் பேசினேன். 

வடக்கிற்கு ஒரு இராணுவ ஆளுனர் தேவையில்லை என்றும் சிவில் ஆளுனரே தேவை என்றும், நான் அந்தப் பணியை ஆற்றத் தயாராக இருப்பதாகவும் அவரிடம் கூறினேன். 
போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாகி விட்ட நிலையிலும் முன்னாள் இராணுவ அதிகாரியே, வடக்கில் ஆட்சி நடத்துகிறார். 

வரும் ஜூனில் மற்றொரு பாதுகாப்பு அதிகாரியே மீண்டும் ஆளுனராக நியமிக்கப்படவுள்ளார். 
இது தொடரக் கூடாது இந்தநிலை மாற்றப்பட வேண்டும். 
சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்தால், ஒரு அமைச்சராகவோ அல்லது வடக்கு மாகாணசபைக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு தூதுவராகவோ கூடப் பணியாற்றவும் தயாராக இருக்கிறேன் என்று அவரிடம் தெரிவித்துள்ளேன். என்று குறிப்பிட்டுள்ளார்

 

http://www.puthinappalakai.com/

முடியல ...................

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பற்றிய விபரங்களை இந்த இணயத்தளத்தில் சென்று அறியவும். http://www.jaffnaroyalfamily.org

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
எதுவும் இல்லை என்றாலும் .............
தொடர் நாடகம் போட்டுகொன்டுவர மக்களே உணமைகளை மறந்துவிடுவார்கள்.
 
பாதிரிமார் சாமிமார் பெண்களை அபகரிப்பது இப்படிதான்.
 
சங்கில்யனின் அம்மா வழியாக நான் சங்கிலியனின் பூட்டன் என்பதையும் கல உறவுகளுக்கு அறிய தருகிறேன்.
 
சித்தி வழியாக பண்டரனன்னியன் சித்தப்பா.

எதுவும் இல்லை என்றாலும் .............

தொடர் நாடகம் போட்டுகொன்டுவர மக்களே உணமைகளை மறந்துவிடுவார்கள்.

பாதிரிமார் சாமிமார் பெண்களை அபகரிப்பது இப்படிதான்.

சங்கில்யனின் அம்மா வழியாக நான் சங்கிலியனின் பூட்டன் என்பதையும் கல உறவுகளுக்கு அறிய தருகிறேன்.

சித்தி வழியாக பண்டரனன்னியன் சித்தப்பா.

செம்பகப்பெருமாள் எண்ட மச்சான்

Raja of Jaffna New Year Message 2014

  • கருத்துக்கள உறவுகள்

செம்பகப்பெருமாள் எண்ட மச்சான்

இவளவுநாளும் யாரோ போல் உரையாடியிருக்கிறோம் ..........
 
வணக்கம் சித்தப்பு !

இவளவுநாளும் யாரோ போல் உரையாடியிருக்கிறோம் ..........

வணக்கம் சித்தப்பு !

தெரியாமல் நான் யார் எண்டு சொல்லிப்போட்டன் , சொத்தை பிரிக்க சொல்லி சண்டைக்கு வரக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

too late!

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இவர் கேட்ட உடன அசோகச்சக்கரவர்த்தியின் பூட்டன்.. துட்டகைமுனுவின் பேரன்.. மகிந்த உடன செய்திடுவார். இதுங்க எல்லாம் இவ்வளவு காலமும் என்ன பிச்சையா எடுத்துக்கிட்டு இருந்ததுங்க.  :D:lol:

சங்கில்யனின் அம்மா வழியாக நான் சங்கிலியனின் பூட்டன் என்பதையும் கல உறவுகளுக்கு அறிய தருகிறேன்.

Me. 2

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்தோன்றி மண்தோன்றா காலத்து குடிமகன் நான் ....சங்கிலியன் எனக்குப்பிறகு........பண்ணியில் பண்ணிப்பாருமன்  :D

  • கருத்துக்கள உறவுகள்

காலங் காத்தாலை..... இந்தச் செய்தியை வாசித்து,
பாவியள், என்ரை இரத்த அழுத்தத்தை ஏத்திப் போட்டாங்கள். :rolleyes:  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன தவறு?   :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளைக்கு முன்னர் இவர் வாள் எல்லம் தொங்கவிட்டு எடுத்த படம் இணையத்திலை போட்டிருந்தவர். அதை எல்லாம் இப்ப எடுத்திட்டர் போலை இருக்கு. நெதர்லன்டில் அகதி அந்தஸ்துடன் இருந்துகொண்டு இப்பவும் முடியுரிமை இழந்த அரசர்களுக்கான அரச மானியம் பெற்று அரசன் போலவே சுகபோக வாழ்வு வாழ்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளைக்கு முன்னர் இவர் வாள் எல்லம் தொங்கவிட்டு எடுத்த படம் இணையத்திலை போட்டிருந்தவர். அதை எல்லாம் இப்ப எடுத்திட்டர் போலை இருக்கு. நெதர்லன்டில் அகதி அந்தஸ்துடன் இருந்துகொண்டு இப்பவும் முடியுரிமை இழந்த அரசர்களுக்கான அரச மானியம் பெற்று அரசன் போலவே சுகபோக வாழ்வு வாழ்கின்றார்.

 

இவர் பல ஆண்டுகளாக தன்னை முடிக்குரிய அரசர் என்று தெரிவித்து இந்த உடை எல்லாம் போட்டு படம் எடுத்து இணையத்தில் போட்டு வருவதால் இதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போது விளங்குகிறது.

 நெதர்லாந்து அரசு யாழ்ப்பாணத்தை கைப்பற்றி ஆண்ட அரசு. அந்த அடிப்படையிலா இவருக்கு மானியம் வழங்குகிறது?

 

இவரை போலவே பலரும் தம்மை சங்கிலியன் வாரிசுகள் என்று நிறுவும் சாத்தியம் உள்ளது. அவர்களும் இந்த மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்த யாழ்ப்பாண அரசர் ராஜா ரெமிஜியஸ் கனகராஜாவை இலங்கை அரசு ஏற்று அங்கீகரித்து உள்ளது.

நெதர்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு இவர் வரவழைக்கப்பட்டு இரா போசண விருந்துபசாரம் வழங்கப்பட்டு உள்ளார்.

கடந்த மாத நடுப் பகுதியில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் மீன்பிடி அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித செனவிரட்ண, அமைச்சரின் பாரியார் வைத்திய கலாநிதி சுஜாதா செனவிரட்ண, தூதுவர் கீர்த்தி அத்தாவுட ஆகியோர் கலந்து கொண்டனர்.

dinnerreception4.jpg

http://thainaadu.com/read.php?nid=1401163053#.U4TZnfNOXDf

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் டக்கிளசையும் தான் கூட வைச்சிருக்கிறான். இந்த வெங்காயத்தை கூட வைச்சிருப்பதில் அவனுக்கு என்ன பிரச்சனை. ஒன்றுமில்லையே. டக்கிளசுக்கு எலும்புன்னா.. இதுக்கு.. மாட்டுக்குழம்பு போதும்..! :D :D :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளைக்கு முன்னர் இவர் வாள் எல்லம் தொங்கவிட்டு எடுத்த படம் இணையத்திலை போட்டிருந்தவர். அதை எல்லாம் இப்ப எடுத்திட்டர் போலை இருக்கு. நெதர்லன்டில் அகதி அந்தஸ்துடன் இருந்துகொண்டு இப்பவும் முடியுரிமை இழந்த அரசர்களுக்கான அரச மானியம் பெற்று அரசன் போலவே சுகபோக வாழ்வு வாழ்கின்றார்.

ஒரு சாண் வயித்துக்காக எத்தனை வேஷமும் போடலாம்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஆள் செய்தியை வாசிக்கேக்க ஒருவரும் முன்னுக்கு இருந்தமாதிரியில்லையே.  இப்பிடி ஒரு அறைக்குள்ளயிருந்து வீடியோ எடுத்து நானும் யுரியூப்பில போடுவன்.

ஏழு தலைமுறையைப் பார்த்தா எருமையும் சொந்தமாகுமெண்டது போல  உவர் சங்கிலியனுக்குச் சொந்தமாகியிருக்கிறார் போல இருக்கு.  

தமிழ் மக்களின்ர தேசியவுணர்வை திசை திருப்புறதுக்கு இவரைப் பாவிச்சு யாரோ திருகுதாளம் பண்ணினம் போல கிடக்ககுது.  

சிங்களவன் டக்கிளசையும் தான் கூட வைச்சிருக்கிறான். இந்த வெங்காயத்தை கூட வைச்சிருப்பதில் அவனுக்கு என்ன பிரச்சனை. ஒன்றுமில்லையே. டக்கிளசுக்கு எலும்புன்னா.. இதுக்கு.. மாட்டுக்குழம்பு போதும்..! :D :D :lol:

 

இந்த காமடி பீஸ் 10 வருடமாக இந்த கூத்தை நடத்துது

சிங்கள அரசு யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னனின் வாரிசு மூலமாக மீண்டும் தமிழர்களை ஆழுமானால் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழ் இராச்சிய சந்ததி மூலம் ஆட்சியொன்றை மீண்டும் தமிழர் பகுதியில் நிறுவுவதன் மூலம் சிங்களம் மீண்டும் உலகிற்கு தமது நல்லிணக்க சமிக்ஞையை உலகிற்கும் காட்ட முற்படலாம்.

 

தமிழ் தேசியவாதிகள் இணையத் தளத்தில் இவ்வாறான காமெடி பீஸை விமர்சிப்பதோடு தமது கடமைகளை நிறுத்திக் கொள்வார்களா அல்லது இராசந்தந்திர ரீதியாக இவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வார்களா ? 

  • கருத்துக்கள உறவுகள்

Raja of Jaffna New Year Message 2014

 

 

இவர் தமிழ் வாசிப்பதைப் பார்த்தால் சிங்களவன் வாசிக்குமால்ப்போல் உள்ளது. இவர் உண்மையாகவே தமிழரா அல்லது தமிழர் என்கிற போர்வைக்குள் மறைந்திருக்கும் சிங்களவனா என்பது உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

 

இவரைக் காமெடிப் பீஸ் என்று ஒதுக்கிவிடாமல், இவரது உண்மையான சுயரூபம் அறியப்படுதல் அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.