Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள முஸ்லீம் மோதலில் எமது நிலைப்பாடு.

Featured Replies

கருத்து சொல்ல முதல், இந்த பழமொழியை நினைவு கூறவேண்டும்.. மூஞ்சூரு போக வளை காணாதம், கெட்டகேட்டுக்கு விளக்குமாத்தையும் இழுத்துக்கொண்டு போச்சாம்.

எனது கருத்து, எமது நலன்களை கண்காணித்துக்கொண்டு பொத்திக்கொண்டு வேடிக்கை பார்ப்பதே நல்லது. இல்லை, வழக்கம்போல பொல்லை குடுத்து அடிவாங்குவது எண்டு முடிவெடுத்துவிட்டால், அங்கு யாழ்ப்பணத்தில், 1500க்கு அதிகமான முஸ்லீம் குடும்பங்கள் இன்று வந்திரங்கியிருக்கிரார்களாம். அவர்களுக்கு தொழ மசூதி கட்டிக்கொடுங்க்கள்.

உங்கள் கருத்து? சும்மா சமாதானாமே வா வா என புலம்பாமல் உங்கள் நெஞ்சில் படுவதை எழுதுங்கள்.

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

பனங்ஸ்,

http://www.yarl.com/forum3/index.php?showtopic=141645

இங்க வாங்கோ சூடுபறக்குது இசுலாமிய சகோதரபாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதற்கண் நாங்கள் இலங்கைச் சோனகருக்கோ அல்லது இசுலாம் மதத்துக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் இலங்கைச் சோனகர் தமிழருக்கு எதிராகப் பல கயமை நடவடிக்கைகளுக்குச் சிங்களத்துக்கு ஒத்துபோயும் அவற்றைத் தாமே முன்னின்று நிகழ்த்தியும் வந்திருக்கின்றனர். இது சிங்களவருக்கும் இலங்கைச் சோனகருக்குமிடையிலான பிரச்சினை. அதுவும் சின்னப் பிரச்சினை. இதனைத் தமிழர்களே ஊதிப் பெருப்பித்ததாக ஒருவேளை நாளை வரலாறு தவறாகப் பதியப்படக்கூடாது. அண்ணன் தம்பி பிரச்சினையில் மூன்றாம் ஆள் தலையிட்டால் நாளை வெட்கப்படவேண்டிவரும். நாங்கள் சிங்களவருக்கு ஆதரவாக நிலையெடுக்கத்தேவையில்லை, ஆனால் இலங்கைச் சோனகருக்கு எங்களால் ஆதரவுதர முடியாத துன்பியல் நிலையில் இருக்கின்றோம்.

சோனகரை நீங்கள் தமிழருடன் சேர்த்தால் அல்லது சோனகரே வந்து தமிழருடன் சேர்ந்தால் நான் தமிழரிடம் இருந்து பிரிந்து விடுவேன். இன்னும் சொல்லப்போனால் போடுபல செனவுடன் இணையவும் தயங்க மாட்டேன். மீண்டுமொருமுறை எனது சந்ததிக்கு முதுகில் குத்து விழ நான் காரணமாக இருக்கமாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்துக்கு, இரை பிடித்துக் கொடுத்து, கிடைக்கும் மிச்சத்தை தானும் அடிக்கிற நரியின் கதையும், இரை முடிந்தபின் சிங்கத்தின் அடங்காப் பசிக்கு இரையாகும் அந்த நரி கதை தான் நினைவுக்கு வந்து தொலைகின்றது. 

இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து எம்மவர்கள் கப்பில கிடாய் வெட்டி சந்தில சிந்து பாடக்கற்றுகொள்ள வேண்டும்.  :D  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

எனது நிலைப்பாடு சிங்களவருடன் பொல் சம்பல் கிறிபத் சாப்பிடுதல்.....

  • கருத்துக்கள உறவுகள்

அது கட்டா சம்பல் புத்தன், அத்தோடு இங்குரு (இஞ்சி) தாப்பு ப்ளேன் டீ

  • கருத்துக்கள உறவுகள்

அது கட்டா சம்பல் புத்தன், அத்தோடு இங்குரு (இஞ்சி) தாப்பு ப்ளேன் டீ

 

தகவலுக்கு போமஸ்துதி .....நோ புரியாணி & வட்டிலப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள முஸ்லீம் மோதலில் எமது நிலைப்பாடு.

 

எம்மை  வலுவூட்ட  இதை  பாவிக்கணும் என்பதே எனது நிலைப்பாடு

எதிரிக்கு எதிரி  நண்பன்............

ஆனால் கவனமாக இருக்கணும்

ஒட்டகத்துக்கு

தலை  வைக்க  இடம் கொடுத்த கதையாக தமிழர் கதை ஆகிவிடக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு ராவண பலயவயும் இணைத்துக்கொள்ள வேண்டும்

1915 இல் இராமநாதன் ஏன் சிங்களவர்களுக்கு சார்பாக ? அதனுடைய எதிர்வினை தானோ ?
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலகில் மத சண்டியர்களுடன் கூட்டு சேர்ந்தால்தான் [{அதாவது இணக்க அரசியல்}தப்பிபிழைக்கலாம்....அதுதான் அமைச்சர் டக்கிளஸ் இன்னும் இந்த இன வன்முறையை கண்டித்து அறிக்கை விடவில்லை போல இருக்கு] அது கிடக்கட்டும் ,சிலை வழிபாடு செய்யும் சண்டியர்களுடன் கூட்டு சேர்ந்தால் தப்பிழைக்கலாம் ...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம்.முன்பு தமிழனக்கு சிங்களவன் அடிக்கும் போது தமிழன் சொத்துக்களை எல்லாம் மு தான் அறாவிலைக்கு வாங்கினவன்.இப'ப என்ன மாதிரி நிலமை  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம்.முன்பு தமிழனக்கு சிங்களவன் அடிக்கும் போது தமிழன் சொத்துக்களை எல்லாம் மு தான் அறாவிலைக்கு வாங்கினவன்.இப'ப என்ன மாதிரி நிலமை  :rolleyes:

 

தமிழர்கள் நிஜாயமான விலைக்கு வாங்குவார்கள்>>>>:D

Edited by putthan

ஒரு சிறுபான்மை இனத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறைக்கு எதிராக நாம் குரல் கொடுத்தே ஆகவேண்டும் .

இதில் வந்து அரசியல் பேசுவது ,இலாப நட்ட கணக்கு பார்ப்பது மிகவும்  பிற்போக்குத்தனமானது .

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்கள் அறிக்கையோடு நிப்பாட்சலாம். நாங்கள் அனுதாபப் படுவதோடு சரி.வேணுமெண்டா பேஸ்புக் ஸ்டேடஸ் போடலாம்.

1512773_848123051884302_7190060318296055

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?v=716639738395441

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கனடா தமிழ் எழுத்தாளர்கள் கொஞ்ச பேர் இருக்கினம் தமிழர்களுக்கு ஏதும் பிரச்சனை எண்டா ஆர்பாட்டம் பண்ண மாட்டினம் ஆனா இப்போ முஸ்லிம் மக்களுக்கு பிரச்னைக்கு ஆர்பாட்டம் பண்ண போயினமாம்..... அத நாங்க தப்பு எண்டு சொல்லல்ல பட் உங்களுக்கு உங்க சொந்த இனத்து மக்கள் மேல் இல்லாத அக்கறை எதுக்கு முஸ்லிம் மக்கள் மேல் வந்தது? தமிழர்களுக்காக களம் இறங்கினால் உங்கள் இமேஜ் கெட்டு போய்டும் ஆனா முஸ்லிம் மக்களுக்காக களம் இறங்கினால் நல்ல விளம்பரம் கிடைக்கும்.....

நம்மவர்கள் மேல அம்புட்டு பாசம் இந்த எழுத்தாளர்களுக்கு.....

முதற்கண் நாங்கள் இலங்கைச் சோனகருக்கோ அல்லது இசுலாம் மதத்துக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் இலங்கைச் சோனகர் தமிழருக்கு எதிராகப் பல கயமை நடவடிக்கைகளுக்குச் சிங்களத்துக்கு ஒத்துபோயும் அவற்றைத் தாமே முன்னின்று நிகழ்த்தியும் வந்திருக்கின்றனர். இது சிங்களவருக்கும் இலங்கைச் சோனகருக்குமிடையிலான பிரச்சினை. அதுவும் சின்னப் பிரச்சினை. இதனைத் தமிழர்களே ஊதிப் பெருப்பித்ததாக ஒருவேளை நாளை வரலாறு தவறாகப் பதியப்படக்கூடாது. அண்ணன் தம்பி பிரச்சினையில் மூன்றாம் ஆள் தலையிட்டால் நாளை வெட்கப்படவேண்டிவரும். நாங்கள் சிங்களவருக்கு ஆதரவாக நிலையெடுக்கத்தேவையில்லை, ஆனால் இலங்கைச் சோனகருக்கு எங்களால் ஆதரவுதர முடியாத துன்பியல் நிலையில் இருக்கின்றோம்.

 

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியச் சகோதரர்கட்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல்கொடுக்கவேண்டியது எமது கடமையே அதில் எள்ளளவிலும் சந்தேகம் இல்லை. ஆனால் அதுவே ஹக்கீம் வகையறாக்களது பேரம்பேசும் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்கு இடமளிக்கக்கூடாது.

 

தவிர இங்கு கருத்துத் தெரிவித்த அர்சுண் அவர்கள் இதில் இலாப நட்டக்கணக்குகள் பார்க்கக்கூடாது என ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் எமது இனத்தின் விடுதலைக்காய் தமது இன்னுயிர்களைத் களப்பலியாக்கி விடுதலைப்போரில் ஈடுபட்ட ஒரு சாரரை விமர்சனம் செய்யும்   அர்ச்சுண் அவர்களுக்கு இதற்கான தார்மீக உரிமை இருக்கின்றதா என முதலில் யோசிக்க வேண்டும். அதற்குப் பச்சைப்புள்ளி வேற....

இஸ்லாமியச் சகோதரர்கட்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல்கொடுக்கவேண்டியது எமது கடமையே அதில் எள்ளளவிலும் சந்தேகம் இல்லை. ஆனால் அதுவே ஹக்கீம் வகையறாக்களது பேரம்பேசும் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்கு இடமளிக்கக்கூடாது.

 

தவிர இங்கு கருத்துத் தெரிவித்த அர்சுண் அவர்கள் இதில் இலாப நட்டக்கணக்குகள் பார்க்கக்கூடாது என ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் எமது இனத்தின் விடுதலைக்காய் தமது இன்னுயிர்களைத் களப்பலியாக்கி விடுதலைப்போரில் ஈடுபட்ட ஒரு சாரரை விமர்சனம் செய்யும்   அர்ச்சுண் அவர்களுக்கு இதற்கான தார்மீக உரிமை இருக்கின்றதா என முதலில் யோசிக்க வேண்டும். அதற்குப் பச்சைப்புள்ளி வேற....

எனக்கு வயிறு நோகுது ................ :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

நுணா நீங்கள் போட்ட விடியோ என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு குரல் கொடுத்தா புலம்பெயர்ந்த புண்ணாகுகள் என முத்திரை குத்துவினம் .........புலம்பெயர்ந்த தேசியவியாபாரிகள் சும்மா இருந்தாலே தாயக மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என கூறிய முற்போக்குவாதிகள் இற்பொழுது முஸ்லீம் சிறுபான்மையினருக்கு குரல் கொடுக்க சொல்லினம்....நல்ல கொள்கை......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.