Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோழி குடும்பத்தோடு வாழ்ந்த காலம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

)

மிக மிக வேகமாக தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும், சுய முன்னேற்றத்திலும் வளர்ந்து வருகிறோம் நாம். இந்த ஓட்டத்தில் நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டே வருகிறோம். இப்படி விரைவான வாழ்க்கையில் நாம் விட்டுவிட்டு வந்ததில் ஒன்று கோழி வளர்ப்பது என்னும் ஒரு அருமையான வாழ்க்கை!

hen02.jpg

இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் வேலைக்கு செல்லும் முக்கால்வாசிப்பேரில், கால்வாசிப்பேராவது தமிழகத்தின் சிற்றூர்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் வந்திருப்பார்கள். இவர்களின் எண்ணிக்கையே லட்சக்கணக்கில் இருக்கும். இவர்களில் ஒரு ஆயிரம் பேராவது கோழி வளர்த்த அனுபவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் கேட்டுப்பாருங்கள், நாம் விட்டுவந்த வாழ்க்கையை அப்படியே முன் கொண்டுவந்து நிறுத்துவார்கள்.

நாய் ('டாக்'னுதான் சொல்லணுமாமே!) வளர்ப்பதுபோல கோழியை வளர்க்க முடியாது. ஏனென்றால், கோழியை முதலில் 'வளர்க்க' முடியாது. அது உங்களிடம் இருக்கும், உங்கள் வீட்டு செடி, கொடிகளைப் போல அவையும் சத்தமில்லாமல் வளரும். கோழி வளர்த்தால், நாய், பூனை, பாம்பு, கீரிப்பிள்ளை என ஒரு பலவித விலங்குகளும் வேட்டைக்கு எட்டிபார்ப்பார்கள். இவர்களிடம் இருந்து நம் கோழிக்குடும்பத்தைக் காப்பாற்றுவதே பெரிய வேலையாக இருக்கும். அந்த அனுபவங்களை நினைத்துப்பார்த்தால், இயற்கையுடன் ஒன்றி இருந்ததைப் போல இருக்கிறது.

hen03.jpg

கோழிகளின் மொழியைப் புரிந்துகொள்வது மகா சிரமம். அவற்றின் அன்பைப் பெறுவது பேரதிர்ஷ்டம். உங்களிடம் நேரடியாக பேச இயலாத ஒரு ஜீவனின் அன்பைப் பெற்றுவிட்டாலே  நீங்கள் கடவுள்தான்.

அதுசரி, கோழி எப்படி அன்பை செலுத்தும்?! முதலில் கோழி-சேவல் ஒரு குடும்பம் என ஒரு சூழலுக்குள் நுழைவோம். காலை முதலில் குடும்பத்தலைவர் சேவலார்தான் கூவி நம்மை எழுப்புவார் என நினைத்தால் அது தவறு. பெரும்பாலும் மேடம் கோழி முதலில் எழுந்து சத்தமில்லாமல், வீட்டைச் சுற்றி மண்ணைக் கொத்திக்கொண்டு திரிவார். ஆனால், சேவல் லேட்டாக எழுந்தாலும், லேட்டஸ்டாக  ஒரு 'கூவலை'ப் போட்டுவிட்டு, நல்ல பெயரை வாங்கிச் சென்று விடுவார். காலை ஏழு மணிபோல, நம் கோழிக் குடும்பத்தைப் பார்க்கவேண்டுமே! சேவல் 'கெத்தாக' முன்னே செல்ல, மனைவியார் கோழி பின்னே மண்ணைக் கொத்திக் கொண்டே செல்வார் (சில சமயம் துணைவியாரும் உண்டு!)

hen01.jpgவழக்கமாக தீனி போடும் இடத்துக்கு பொறுமையாக வருவார்கள். கோழிகள் தீனியை ஆர்வத்துடன்  கொத்தி கொத்தி சாப்பிடும். நம் கையில் இருப்பதைக்கூட, உரிமையாக கொத்தி திங்கும். ஆனால், தலைவர் சேவல் இருக்கிறாரே! யப்பா! 'உன்னை நம்பி எல்லாம் நான் இல்லை' என்பதுபோல தள்ளி நிற்பார். நாம் தீனியை போட்டுவிட்டு அந்தப் பக்கம் சென்றதும், நைஸாக சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார். அவ்வளவுதான், இனி மாலை வரை சேவல் எங்கிருக்கிறது என்று கண்டேபிடிக்க முடியாது. கோழிகள் நம் வீட்டைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கும்.

கூண்டோ, கூடையோ செட்டில் ஆக மாலை நேரத்தில் சரியாக ஆஜராகிவிடுவார்கள். கொஞ்சம் தீனியைப் போட்டுவிட்டு, மூடிவிட்டால் பெரும்பாலும் பிரச்னை செய்யாமல் உள்ளே போய் அமர்ந்து கொள்வார்கள். கொஞ்ச நாள் கழித்து பார்த்தால், கூடைக்குள் ஒரு முட்டை இருக்கும். கோழி கொஞ்சம் சோம்பலாக திரியும். பிறகு, ஒரு மண் சட்டி தயார் செய்து வைத்துவிட்டால், கோழி தானாகவே அதில் முட்டைபோட ஆரம்பித்துவிடும். லேசான பிரவுன் கலரில் இருக்கும் நம் வீட்டு கோழி போட்ட முட்டையை மட்டும் ஏனோ தொடக்கூட மனசு வராது. கோழி அடைகாக்கும்போது, அது கோபமாக இருக்கிறதா? சாதாரணமான மனநிலையில் இருக்கிறதா? என்று கண்டுபிடிப்பதும் சிரமம். கோழி அடைகாக்கும்போது அதன் முன்னால் ஆள்காட்டி விரலை நீட்டிப் பாருங்களேன். 'ஹிப்னாடிஸம்' செய்வதுபோல நம் கைவிரலை ஆட்டுவதற்கேற்ப, அதன் தலை மட்டும் ஆடும். தீடீரென்று மின்னல் வேகத்தில் ஒரு கொத்து கொத்தும் பாருங்கள். விரலில் ரத்தமே வந்துவிடும். ஆனால், கோபத்தில் கொத்துகிறதா? மற்ற நேரங்களில் கொத்துவதைப்போல விளையாடுகிறதா என்று கண்டேபிடிக்க முடியாது.

hen04.jpg

முதல் குஞ்சு பொரித்தவுடன், வீடே குதூகலமாகிவிடும். இனிதான் உங்களிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொண்டு கோழிகள் பழக ஆரம்பிக்கும். பெரும்பாலும் வீட்டுக்குள் கோழிகள் வராது என்றாலும், குஞ்சுகள் பிறந்தவுடன், சர்வசாதாரணமாக வீட்டுக்குள் சுற்றி வருவார்கள். எங்கள் வீட்டு கோழி குடும்பம், விடியற்காலை எழுந்து, 'கீ..கீ.கீச்' சத்தங்களுடன் வீட்டுக்குள் வருவார்கள். நான்  தரையில் படுத்திருந்தால், உரிமையுடன் கோழிக்குஞ்சுகள்  என் மேலே ஏறி  எழுப்பும். கட்டிலில் இருந்தால், கீழே வந்து கத்தித்தீர்ப்பார்கள். நாய்போல பேர் வைத்து கோழிக்குஞ்சுகளைப் பழக்க முடியாது என்றாலும், அவர்களுடன் நெருங்கிப் பழகிவிடலாம். சில குறிப்பிட்ட குஞ்சுகள் மட்டும் 'ஹைப்பர் ஆக்டிவ்வாக' இருக்கும். ஏதேனும் ஆபத்தை 'அம்மா' கோழி உணர்ந்தால், குஞ்சுகளை தன் சிறகுகளுக்குள் மறைத்துக்கொள்ளும். அப்போது இந்த  'ஹைப்பர் ஆக்டிவ்' பிள்ளைகள் மட்டும் சிறகுகளில் இருந்து எட்டிப்பார்பார்கள். (இந்த தருணத்தை யாராவது புகைப்படம் எடுப்பார்கள் என ஆவலாக இருக்கிறேன்! பேரழகான காட்சி இது!)

என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும், கழுகு, கீரிப்பிள்ளை, பூனைகள் போன்றவற்றில் இருந்து நம் கோழிக்குஞ்சுகளைப் பாதுகாப்பது சிரமம்தான். ஒன்றிரண்டு குஞ்சுகள் அவற்றிற்கு இரையாகியே தீரும். இது இயற்கைதான். ஆனால், நமக்கும், அம்மா கோழிக்கும் பேரிழப்பாக இருக்கும். மாலை நேரம் நெருங்கியதும், விளையாட்டு மூடுக்கு வந்துவிடுவார்கள் நம் கோழிக்குஞ்சுகள். சகஜமாக மேலே ஏறும், தலையில் ஏறும், உடையை கொத்தி கிழிக்கும். கால் நக இடுக்குகளில் எதையோ தேடும்... என்ன அருமையான வாழ்க்கைங்க அது!

hen05.jpg

கூண்டிற்குள் அடைக்கும் நேரம் வந்ததும், பெரும்பாலான குஞ்சுகள் தாய் சொல்லைக் கேட்டு அமைதியாக உள்ளே சென்று அமர்ந்துகொள்ளும். ஹைப்பர் ஆக்டிவ் பிள்ளைகளை மட்டும், நாம் கெஞ்சிக்கூத்தாடி செட்டில் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஒன்று கவனித்திருக்கிறீர்களா? ஆபத்து சமயத்தைத்தவிர, சேவல்கள்  தன்னுடைய குஞ்சுகளின் வளர்ப்பில் அக்கறை காட்டாததுபோலவே சுற்றும். என்ன உளவியல் இது?

என் சிறுவயதில் நிறைய முறை கோழி வளர்த்திருக்கிறேன். அந்த வயதில் கோழிகளை விளையாட்டு பொம்மைபோலத்தான் கையாண்டிருக்கிறேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது அவற்றினுடன் ஏதோ ஒருவித உறவு இருந்ததை உணர முடிகிறது. எனக்கும், அவர்களுக்கும் ஏதோ ஒருவித பேரன்பினாலான நெருக்கமும், தொடர்பும் இருந்திருக்கிறது. இப்போது நான் நினைத்தால் எனக்கு அந்த பழைய உலகம் கிடைக்குமா? வருங்காலத்தில் நம் சந்ததியினருக்கு இந்த பாக்கியம் கிடைக்குமா? உங்களுக்கு கிடைக்குமா?

இன்று அந்த வீடு இருக்கிறது! கோழிக்கூண்டு இருக்கிறது! கோழிகள் இல்லை!

ர. ராஜா ராமமூர்த்தி

vikatan.com/

  • கருத்துக்கள உறவுகள்

a-hen-with-chicks-gathered.jpg

 

அருமைப் பதிவு பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்து போகையில் கவனிக்கத் தவறிய கச்சிதமான தருணங்கள்..., நன்றி பெருமாள்...! :D

வாசிக்கும் போதே மனதில் பழைய நினைவுகள் வந்து ஏக்கம் தருகின்றன.

 

பத்து பன்னிரண்டு முட்டைகள் வைத்து அடை காக்க வைப்பதும் (அவற்றில் சில  அழகான கோழிகள் இருக்கும் பக்கத்து வீடுகளிகள் இருந்து வடிவான கோழிக் குஞ்சு கிடைப்பதற்காக கடன் வாங்கிய முட்டைகள்), 17, 18 ஆம் நாட்களில் எந்த முட்டைக்குள் குஞ்சுகள் இருக்கு, எவையெவை கூழ் முட்டைகள் என்று பார்க்க  அடை வைத்தமுட்டைகளை இலேசான குளிர் தண்ணியில் போட்டு உள்ளே இருக்கும் குஞ்சுகளின் அசைவுகளைப் பார்ப்பதும், குஞ்சுகள் பொரித்த பின் அவை தாய்கோழியுடன் வீடு, வளவு எல்லாம் சுற்றித் திரிவதைப் பார்ப்பதும்... சின்ன பிராயத்து நினைவுகளை மீட்டிப் பார்க்கின்றது இப் பதிவு.

 

இணைப்புக்கு நன்றி பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

எதுவும் இல்லாது போகிறபோதுதான் அதன் அருமை புரியும். கோழிகளை மீள நினைவு தந்த பெருமாளுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

குரூப் போட்டோ நல்லாயிருக்கு! :lol:

 

hen05.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு மீட்டலுக்கு நன்றி பெருமாள். கன கோழிகள் நிற்க்கும்போது எது எங்கு முட்டை போடுகின்றது என்று தேடி எடுப்பதே சிரமம். அதற்குள் சில கோழிகள் வைக்கல் பட்டறை அல்லது எங்காவது முட்டைபோட்டுவிட்டு அடைகாத்து குஞ்சுகளுடன் வந்து தரும் அதிர்ச்சி வேறு.

 

 

கோழிகளா இருந்தாலும் சக்காளத்திகள் தலைகளை வேறு பக்கமாகதான் திருப்பியிருப்பார்களா? :D

 

 

hen04.jpg

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நினைவு மீட்டல், பதிவு பெருமாள். :)

  • கருத்துக்கள உறவுகள்

a-hen-with-chicks-gathered.jpg

தாயின் பாதுகாப்பு அரணில் எட்டிப் பார்க்கும் சேய்கள் - படம் நல்லா இருக்கு!

 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் கோழிக்குஞ்சு முட்டைக்கோதை உடைத்து வெளிவருவதை ஆர்வத்துடன் அவதானிப்பதும்..
கோழிக்குஞ்சுகளைப் பிராந்திடமிருந்து காப்பாற்றக் காவல் இருப்பதும்..
அந்தக் கோழிக் குஞ்சுகளுக்கு வண்ணம் தீட்டி மேய விடுவதும்.....

ஏன்,  கோழிகளின் எச்சங்களை முற்றத்திலிருந்து  அகற்றுவதற்கு அப்பாவிடம் சதக்கணக்கில் பேரம் பேசுவதும்... :D  மீண்டும் வருமா ?
இணைப்பிற்கு நன்றி பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுவயதில் கோழிக்குஞ்சு முட்டைக்கோதை உடைத்து வெளிவருவதை ஆர்வத்துடன் அவதானிப்பதும்..

கோழிக்குஞ்சுகளைப் பிராந்திடமிருந்து காப்பாற்றக் காவல் இருப்பதும்..

அந்தக் கோழிக் குஞ்சுகளுக்கு வண்ணம் தீட்டி மேய விடுவதும்.....

ஏன்,  கோழிகளின் எச்சங்களை முற்றத்திலிருந்து  அகற்றுவதற்கு அப்பாவிடம் சதக்கணக்கில் பேரம் பேசுவதும்... :D  மீண்டும் வருமா ?

இணைப்பிற்கு நன்றி பெருமாள்

 

நாங்கள் இரண்டுபேரும் ஒரே ஊராயிருக்குமெண்டு நினைக்கிறன்  :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.