Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதிகள் .

Featured Replies

ஏதேதோ நினைவுகள் வந்து மனதை தொடர்ந்தும் குழப்ப நித்திரை கொள்ளமுடியாமல் படுக்கையை விட்டு எழும்பி படிகளில் இறங்கி வீட்டின் சிற்றிங் ரூமிற்கு வருகின்றேன் .அக்காவின் மகன் எனக்கு முதலே எழும்பிவந்து தொலைகாட்சியில் சத்தத்தை குறைத்து  வைத்து Sesame Street  பார்த்துக்கொண்டு இருந்தவன் என்னை கண்டதும் சத்தம் போடவேண்டாம் என்று வாயில் விரலை வைத்து சிக்னல் போடுகின்றான் .அப்படியே அவனை தூக்கி மடியில் வைத்தபடி நானும் Elmo ,Cookie  Monster களின் விளையாட்டுகளை ரசித்தபடி  அவனுடன் சேர்ந்து Sesame Street  பார்க்க தொடங்குகின்றேன் .
 
 
இந்தியாவால் லண்டன் வந்து சேர்ந்து இருமாதங்கள் ஆகின்றது .அக்கா வீடுதான் வாசம் .அத்தானும் அக்காவும் வாரநாட்களில் வேலை என்று அலைவதால் வாரவிடுமுறையில் பிந்தித்தான் எழும்புவார்கள் .எனக்கு  இந்தியா போக முதல் பகுதி நேரவேலை செய்த ஹோட்டலில் வேலை கிடைத்துவிட்டது .கிழமையில்  ஆறு இரவுகள்  மாலை ஏழுமணி  தொடங்கி காலை ஏழுவரை வேலை .வேலை முடிய வீடு வந்து மருமகனை Daycare  கொண்டுபோய் விட்டுவிட்டுத்தான் நித்திரைக்கு செல்வேன் . இந்த இரு மாதங்களும் நான் அவரை  Daycare  கூட்டி செல்வதால்  என்னுடன் நன்றாக ஒட்டிவிட்டார் .
 
 
மாமா கொப்பி குடிக்க போகின்றார் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன் , Corn Flakes  கொஞ்சம் பாலில் விட்டு தரச்சொல்லிவிட்டு தொலைகாட்சியில் திரும்ப மூழ்கிவிட்டார் .அவருக்கும் போட்டு கொடுத்துவிட்டு நானும் கோப்பியுடன் வந்து சோபாவில் அமர்கின்றேன் .
 
தொலைகாட்சியின்  திரையின் அடிப்பகுதியில் ,
 
 "கிழக்கு லண்டனில் நேற்றிரவு நடந்து கைக்குண்டுவீச்சில்  மூவர் பலி . கிழக்கு லண்டனில் பெருமளவில் குடியேறிவரும் ஆசிய  இனத்தவருக்கு எதிராக தொடரும் நிறவெறி தாக்குதலாக இதுவும் இருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றார்கள் " 
 
என்று எழுத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றது .
 
 
எனது உடம்பு சற்று குளிர்ந்து நடுங்கதொடங்கியது , உள்மனம் எதோ நடக்க கூடாதது நடந்துவிட்டது என்று சொல்லுது .நேரம் காலை எட்டுத்தான் ஆகின்றது ,ஞாயிறு காலை இந்த நேரம் நண்பர்களுக்கு தொலைபேசி அடிப்பதும் சரியில்லை .மருமகனிடம் ஒரு நிமிடம் என்றுவிட்டு சானலை மாற்றுகின்றேன் ,எரிகின்ற வீட்டை காட்டுகின்றார்கள் .எம்மவர் பலர் தான் அந்த வீட்டை சுற்றவர நிற்கின்றார்கள் .
 
அத்தான் படிகளில் இறங்கி வரும் சத்தம் கேட்கின்றது .
 
 
வேலை எப்படி போகுது ,ஆறுநாள் பன்னிரண்டு மணிநேர வேலை  கஷ்டமாகத்தான் இருக்கும் ,கொஞ்ச நாளுக்கு பல்லைகடித்துக்கொண்டு வேலை செய்து சிறிதுபணம் சேமித்துவிட்டு எதையாவது படி , எவ்வளவு காலத்திற்கு அரசியல் சினிமா விளையாட்டு என்று திரியபோகின்றாய் .உன்னோடு வந்தவங்கள் கலியாணமும் கட்டி அவனவன் வீடும் வாங்கிவிட்டான் . எனது நண்பனின் தங்கச்சி ஒரு ஆள் இருக்கு , அவன்தான் கேட்டவன், பிள்ளை  Barclays Bank இல்  வேலை செய்யுது, British Citizen  .உனக்கு விசா பிரச்சனையும் தீர்ந்துவிடும்.அத்தான் அடுக்கிக்கொண்டே போகின்றார்   .
 
 
எனக்கு மண்டை முழுக்க பிரச்சனை , இந்தியாவில் அந்த வயது போன மனுசி ரெயின் ஏற்றும் போது கையை பிடித்து தந்த பெடி இன்னமும் ஊர் போய்சேரவில்லை , கிழக்கு மாகாண பெடிகள் நாலு பேர் பங்களாதேசில் வந்து நின்று கொண்டு காசு கேட்கின்றார்கள் , அத்தானிடம் வாங்கிய கடன் இன்னமும் கொடுக்கவில்லை , பிணையில் லண்டனுக்குள் விட்டவர்கள் அடுத்த விசாரணையில் என்ன சொல்ல போகின்றார்களோ ? இவற்றுடன் சேர்ந்து  இப்ப புதிதாக இந்த குண்டுவெடிப்பு.
 
 
குண்டுவெடிப்பு 
 
நான் இந்தியாவால் வந்து இறங்கிய முதல் சனிக்கிழமையே எனது முந்நாள் நண்பர் கூடத்தில் பார்ட்டிக்கு ஏற்பாடுசெய்துவிட்டார்கள் .இரண்டு மூன்று புதியமுகங்களை தவிர அனைத்தும் பழைய நண்பர்கள் ,கிரிக்கெட் மாட்ச் முடித்து சிலர் யுனிபோர்மில் , பியர் ,விஸ்கி ,வோட்கா  ஆறாக ஓட  நான் முன்னர் வாழ்ந்த லண்டன் வார இறுதி விடுமுறைகள்  கண்ணில் வருகின்றது  .நான் இன்னமும் மாநாடு குழம்பிய நாளில்  இருந்து முற்றிலும் வெளிவரவில்லை . அங்கு தோழர்கள் படும்பாட்டையும் இங்கு நண்பர்களின் செயல்களையும் பார்க்க கோபமாக இருக்கு . புலம்பெயர்ந்தவர்களுக்கு அரசியல் என்பது பத்தோடு பதினோன்றான ஒரு விடயம் தான் , நண்பர்களில்  கோபப்பட்டு எந்த பிரயோசனம் இல்லை .
 
 
இன்ஜீனியர் நண்பர் ஆட்டு இறைச்சி கறிக்கு கடையில் வாங்கும் மிளகாய் தூள் ருசியில்லை என்று  தூள் தயாரிக்கும் பணியில் ஈடுபட,  மிளகாய் வறுக்கும் வாசம் மூக்கை துளைகின்றது .போராட்டம் எப்படி போகும் என்று விசாரித்தவர்களை  விட நான் உயிரோடு தப்பி வந்தது பெரிய விடயம் என்று ஆறுதல் சொன்னவர்களே அதிகம் .
 
 
நேரம் பத்து மணி தாண்ட யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தால் இருவர் உள்ளே வருகின்றார்கள் .இருவரையும் எனக்கு நன்கு தெரியும் ஆனால் நெருங்கிய நண்பர்கள் இல்லை .அவர்களும் பார்ட்டியில் சங்கமிக்கின்றார்கள் .வந்தவர்களில் ஒருவர் தாங்கள் இங்கு வரமுதல் ஒரு பப்பிற்கு பியர் குடிக்க சென்றதாகவும் அங்கு ஒரு தமிழ் செட் இருந்து தேவையில்லாமல் கொளுவிக்கொண்டு இருந்ததாகவும் சொன்னார் .அவர் சொன்னதை பெரிதாக யாரும் காதில் எடுத்ததாக தெரியவில்லை .அந்த பப்பிற்குள் உந்த ஊத்தை கோஸ்டி இருக்கு என்று தெரிந்துதான் நாங்கள் எவரும் அந்த பப்பிற்கு போவதில்லை என்று வேறொரு நண்பர் சொன்னார் . 
 
 
சிறிது நேரம் செல்ல அதே நண்பர் அதே கதையை மீண்டும் தொடங்கி இவங்களை இப்படியே விட்டு வைக்ககூடாது ,ஒரு  சோலியும் சுரட்டும் இல்லாத ஆட்களே ஸ்டேசனில் இறங்கி வீடு  செல்லும் போது அலுப்பு கொடுக்கின்ற கோஸ்டி அது. பெண்களையும் கூட விட்டு வைப்பதில்லை என்றார்.
 
 
தண்ணி உள்ளே இறங்க இறங்க அவரும் திரும்ப திரும்ப அதை சொல்ல இரண்டு கார்களில் பத்து நண்பர்கள் இன்றைக்கு எப்படியும் அவர்களை ஒரு கை பார்க்கவேண்டும் என்று புறப்படுகின்றார்கள் .எவரது சொற்களையும் கேட்கும் நிலையில் அவர்கள் அப்போது இல்லை .மீதம் இருப்பவர்களுடன் பார்ட்டி தொடர்கினது .
 
 
ஒரு மணித்தியாலம் ஆகின்றது போனவர்களை காணவில்லை .
 
 
(எம்மவர் பயங்கரங்கள் தொடரும் )
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் தொடரும் எண்டால் நாங்கள் என்ன செய்யிறது ????

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...

என்னிடமும் ஒரு மறுபக்கமுண்டு

அதை எங்கும் எழுதியதில்லை

எழுதுவதில்லை

சும்மாவே பயங்கரவாதிகளாக்கப்பட்டவர் நாம்....

பொல்லைக்கொடுத்து ஏன் அடி வாங்குவான்

அதிலும் தனிப்பட எனக்கு விழுந்தால் தாங்கலாம்

ஒரு இனத்தையே சேர்த்துவிடுவார்கள்....... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்களின் பயங்கரம் தொடரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா.நீங்கள் செய்தவற்றையும்[உங்கள் பயங்கரவாதத்தையும்] எழுதுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் அண்ணா. வாசிக்க காத்திருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோஷ்டி மோதல்களை.... வாசிக்க, ஆவலாக உள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் வாசிக்கின்றோம்...! :)

  • தொடங்கியவர்
தாக்குதல் வெற்றி என்று திரும்பிவந்தவர்களின் உடல்மொழியில் தெரிந்தது .தலைகள் தப்பிவிட்டதாகவும் இருந்தாலும் நாலு வாலுகளை வெளியில் இழுத்துக்கொண்டுவந்து  இரண்டு கொடுத்துவிட்டு வந்ததாக பெருமைபட்டார்கள் . அதில் ஒருவர் காலில் விழுந்து அண்ணை உங்களை எனக்கு தெரியும் ஒன்றும் செய்து போடவேண்டாம் என்று  மன்னிப்பு  கேட்கும் போது,  என்ன பிரச்சனை என்று ஓடிவந்த மலையாளிக்கு கன்னத்தில் கொடுத்தது காதிற்குள் ரெயில் ஓடியிருக்கும் என்று சொல்லி சிரித்தார்கள் .தலைகளை தேடி கார்களில் ஒரு சுற்று சுற்றி ஒரு தலையின் வீட்டு லைட் எல்லாம் அணைத்து பூட்டியிருக்க வெளியில் நின்ற காரின் கண்ணாடியை உடைத்து விட்டு வந்துவிட்டார்கள் .
 
 
எந்த ஒரு குரூப்பிற்கும் ஒரு லீடர் இருப்பார் , இந்த குருப்பின் லீடர் என்று சொன்னால் எனது உயிர் நண்பன்தான் .சிறு வயதில் இருந்து பழக்கம் . படித்தது  ஒரே பாடசாலை , ஊரில் ஒரே கிரிக்கெட் ,உதைபந்து  டீம் . ஆளைப்பார்த்தால் விஜயகாந்த் மாதிரியிருப்பார்,  அதனால் தானோ என்னவோ அவர் கடந்தகாலமும் விஜயகாந்த் படம் மாதிரி ஒரே அடிபிடிதான் .ஆள் மிகவும் மென்மையான சுபாவம் ஆனால் நண்பர்களுக்காக நியாயம்  கேட்டு போவார் பின்னர்  அது அடிபிடியில் முடிந்துவிடும் .நேற்றும் இவர்தான் தலைமை தாங்கி போனார் .
 
 
நேற்று  சபேசன்  Dortmund இல்  மண்டபம் திறந்தார்  என்று எழுதியதும் விஜயகாந்தின் நினைவுதான் எனக்கு முதலில் வந்தது . 79-84 வரை Dormund இல்  இவர் ரொம்ப பிரபலம் என்று கேள்வி . பின்னர் இலங்கை போய் லண்டன் வந்துவிட்டார். இவர் நாட்டில் போய் நின்ற சில மாதங்களும் எமது இயக்தவர்கள் சிலரை சந்திருக்கின்றார்.  அவர் வந்து சொன்ன  இயக்க கதைகளில் தான்  நானும் கொஞ்சம் இழுபட்டு லண்டனில் இருந்த  எமது அமைப்பு பொறுப்பாளரை போய் சந்தித்து பின்னர் முழுமையாக அதில் இணைந்தோம் .
 
 
இன்ஜினியரின்  ருசியான ஆட்டு இறைச்சிகறியுடன்  இரவு சாப்பாட்டை முடித்து பலரும் தமது வீடுகளுக்கு திரும்பிவிட்டார்கள் .ஒரு சிலர் மாத்திரம் Southeast  இருந்து வந்திருந்தார்கள்  மற்றவர்கள் எல்லோரும் மிக அருகில் இருப்பவர்கள் தான் . பார்ட்டி நடந்த வீட்டில் நாலு பேர்கள்  இருந்தார்கள் . அன்றிரவு நானும் அங்கேயே தூங்கிவிட்டேன் .
 
 
அடுத்த நாள் காலை பதினோருமணியிருக்கும் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு  போய் கதவை திறந்தேன் .கதவை தள்ளிபடியே ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்துவிட்டது . பலர் கைகளில் கத்தி, பொல்லு.  ஒருவர் ரிவோல்வரை கொண்டுவந்து எனது கழுத்தில் வைத்திருக்க  முழு வீடும் தேடுதல் வேட்டை நடந்தது  .என்னையும் இன்னொருவரையும் தவிர வீட்டில் எவருமில்லை . அவரையும்  கீழே இழுத்துக்கொண்டுவந்தார்கள். எனக்கே மற்ற மூவரும் அதிகாலை வேலைக்கு போனது தெரியாது .என்னை ஒரு கதிரையில் இருத்திவிட்டார்கள்.  வந்த எவருக்கும் என்னை தெரியவில்லை  ,ஒரு நாளும் சந்தித்ததும் .  முழு மூச்சாக கோபத்தில் ஓடித்திரிந்த ஒருவர் என்னிடம் வந்து ,
 
உன்னை நான் ஒருநாளும் இங்கு காணவில்லையே என்றார் ,
 
போன வாரம் தான் இந்தியாவில் இருந்து வந்ததாக சொன்னேன் .
 
அசையாமல் உந்த கதிரையிலேயே இரு,  என்றுவிட்டு ரிவோல்வர் வைத்திருந்தவரை அதை எடுக்க சொன்னார் .ரிவோல்வர் வைத்திருந்தவர் ஒரு மலையாளி .சில மலையாளிகளும் அவர்களுடன் வந்திருந்தார்கள் .என்னுடன் நின்ற மற்றவரையும் பெரிதாக அவர்கள் அடையாளம் காணவில்லை .அவர் ஒரு லோயர் .திடிரென ஒருவன்  இவரும்  நேற்று சாரத்தோடு வந்தவர் நான் கண்டனான் என்றான் ,  அவருக்கு நாலு அறை விழுந்தது அவர் குனிந்துகொண்டே நின்றார் .
 
 
அவர்களும் பெரிய தலைகளின் வருகையை எதிர்பார்த்து அங்கேயே இருக்கின்றார்கள் .யாரும் வந்தால் பின்னிஎடுத்துவிடுவார்கள் .என்ன செய்வது என்று தெரியவில்லை . பின் பக்க கதவால் ஓடிஇந்த வீட்டு  வளவை தாண்டினால் அடுத்து விஜயகாந் வீடு ஆனால் அந்த துணிவு எனக்கு வரவில்லை .  மணி இரண்டு ஆகின்றது இன்னொரு நண்பர் வந்து கதவை திறக்கும் சத்தம் கேட்க நெஞ்சு பட பட என அடிக்குது ,  விசில் அடித்துக்கொண்டு உள்ளே வந்தவருக்கு சராமாரியாக அடி விழுகின்றது .தலை மயிரை பிடித்து சுவருடன் அடித்ததில் மண்டை உடைந்து இரத்தம் வழிகின்றது .  அவரையும் இப்ப இருத்தியாச்சு .  கடவுளே இனி யார் வரப்போகின்றார்களோ ?  
 
மூன்று மணியாகுது எவரும் வரவில்லை .  அவர்களுக்கும் பார்த்து பார்த்து வெறுத்துவிட்டது போல புறப்படுகின்றார்கள் , போகும் போது சுவருடன் இருந்த Heater ஐ இழுத்துவிட அது உடைந்து தண்ணி சீறுகின்றது ,ஒருவர் அயன் போக்சை தூக்கி சுவருடன் அடித்து  தூளாக்கி விட்டு போகின்றார்  .
 
 
போனில் எல்லோருக்கும் செய்தி பறக்கின்றது .  மண்டை உடைந்தவருக்கு கட்டு போடுகின்றோம் . அரை மணித்தியாலத்தில்  ஒரு கூட்டம் கூடிவிட்டது . ஆறுமணிக்கு  லண்டனின் அனைத்து பகுதியிலும் இருந்து  பெரும்படையே வந்துவிட்டது . அண்ணரும் நண்பர்களுடன் வந்திருந்தார் .  எல்லா திசையிலும் கார்கள் பறக்கின்றது அவர்களில் எவருமே எம்மவர் கண்ணில் படவில்லை . நாளை வேலை நாள் எனவே அடுத்த கிழமை பார்ப்போம் என்று ஒன்பது மணியளவில் படை கலைந்துவிட்டது .
 
 
அன்றிரவும் அங்கேயே தூங்குகின்றேன் .அந்த வீட்டில் இருந்த இருந்த நால்வரில் ஒருவர் மட்டும் எனக்கு புதியவர் .முதன் நாளிரவு பார்ட்டியின் போதே அவரை பார்த்து  யோசித்தேன்  எங்கள் செட்டில் இப்படி ஒருவர்  எப்படி வந்தார் .   அவர் நடை உடை பாவனை அத்தனையும் எமது நண்பர்களை போலல்லாது  மாறுபட்டுஇருந்தது . சினிமா நடிகர்கள் போல் வெள்ளை நிறத்தில் பிரில் வைத்த நைலான் சேர்ட் , மினுங்கல் பாண்ட்ஸ் , எப்போதும் ஒரே சினிமா கதை,  எங்கட பல பகிடிகள் அவருக்கு விளங்கின மாதிரியும் இல்லை அவர்  வேறொரு உலகில் இருந்தார் . அவர் மாஸ்டர் பெட்ரூமில் அதிக வாடகை கொடுத்துக்கொண்டு தனிய இருக்கின்றார் என்று சொன்னார்கள் .இடைக்கிடை யாரையும் தள்ளிக்கொண்டும் வருவாராம். வீட்டுக்கார நண்பனுக்கு வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஆனவர் ,ஒரு ஒற்றுமை  அவரும் எமது ஊர் தான் .
 
 
தலையில் கட்டு போட்ட நண்பன் இது தேவையா என்று சிரித்துக்கொண்டு இருந்தார் . இன்ஜினியரும் சற்று வெறி ஏற இதுதான்  படிக்காத கோஸ்டிகளுடன் சேரகூடாது என்று தொடங்கிவிட்டார் . நேற்று அவர் அடிபிடிக்கு போன கோஷ்டியுடன் போகவில்லை போனவர்களை திட்டிக்கொண்டு இருந்தவர் .
 
அப்போது மினுங்கல் பான்ஸ்காரர்  " சும்மா நிண்டவன் போனவன் எல்லாம் இங்கு வந்து விலாசம் காட்டிவிட்டு போகவேண்டாம் . வீடு  தேடியா  வாறாங்கள்   , அவங்களுக்கு நான் தனிய ஒரு அலுவல் பார்க்கின்றன் . " என்றார் .
 
 
அப்போது எங்களுக்கு அந்த வசனத்தின் பாரதூரம் விளங்கவில்லை .
 
 
(குண்டெறி தொடரும் )
  • தொடங்கியவர்

நாளை மிகுதி தொடர இருக்கின்றேன் .

 

இந்த பதிவில் எவர் பெயரும் நான் குறிப்பிட  விரும்பவில்லை காரணம் வேண்டாத பிரச்சனைகள் வரலாம் .

 

ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்று  பலர் மனதில் சொல்லாமல் இருப்பதை சொன்ன திருப்தி தான் இப்பதிவு .

 

கழுத்தில் ரிவோல்வர் என்று கதைக்கு ருசி சேர்கின்றார் என்று யாரும் நினைக்கவேண்டாம் இது இரண்டாம் தடவை எனக்கு நடந்து .

 

முதலாவது நடந்தது 1981 December 26 பிரான்சில் Place De Clichy என்னுமிடத்தில் கிறிஸ்மஸ் பார்டி .  லண்டன் ஜெர்மன் பிரான்ஸ் நண்பர்கள் ஒன்றாக இருந்து தண்ணியடிக்க சர்வதேச மொழி ஆங்கிலமா பிரெஞ்சா என்ற விவாதத்தில் தர்க்கம் வந்தது .பிரான்ஸ் நண்பரின் நண்பராக அங்கு வந்திருந்த   ஒருவர் (இப்ப படலைக்கு படலை லண்டன் மாமா ,அப்ப அவர் பிரான்சில் தான் இருந்தார்   ) விஜயகாந்தில் கை வைக்க விஜயகாந்  கதிரையால்  லண்டன் மாமாவின் மண்டையை பதம் பார்த்துவிட்டார் .அடுத்தநாள் விஜயகாந்த் வேறு நண்பர்களிடம் போய்விட்டார் .அடுத்தநாள் இரவு   ஜெர்மனில் இருந்து வந்த விஜயகாந்தை தேடி கத்தி பொல்லுடன் பெரியதொரு  பட்டாளம்  வந்தது . அந்த கோஸ்டியின்  தலை வந்து எனக்கு நாலு சாத்து சாத்தி விஜயகாந்த் எங்கே என்று கேட்டு ரிவோல்வரை கழுத்தில் வைத்தது . அடியை வாங்கினேன் ஆனால் வாயை திறக்கவில்லை .அடித்தவர்கள் அடுத்த நாள் வந்து மன்னிப்பு கேட்டதும் நடந்தது .யாருக்கும் வேண்டுமென்றால் தலயின் பெயரை எழுதுகின்றேன் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்
படிக்காத கோஸ்டிகளுடன் சேரகூடாது என்று தொடங்கிவிட்டார் .
எங்கயோ வாசித்த ஞாபகம்.....தொடருங்கள் அர்ஜுன்...
  • தொடங்கியவர்
இரண்டு வாரங்கள் ஓடிவிட அடிபிடியின் சூடும் ஓரளவு தணிந்துவிட்டது. படிப்பு வேலை என்று அனைவரும் மீண்டும் சண்டையை மறந்து ஓடத்தொடங்கிவிட்டார்கள் .கைகலப்பு என்ற நிலை மாறி கார் உடைத்தது வீடு புகுந்தது என்று பலர் மனதில் எல்லை மீறிவிட்ட ஒரு கலக்கநிலை .எதிர் கோஷ்டியும் அதே நிலைக்கு வந்திருக்கவேண்டும் நடந்தை மறந்து சண்டை இனிவேண்டாம் என்று தூது வேறு அனுப்பியிருந்தார்கள் .
 
 
இன்னொரு சனிக்கிழமை இரவு அதே நண்பர் வீடு , மினுங்கல் பான்ட்ஸ் அவர் ரூமிற்குள் ஏதோ செய்துகொண்டிருக்க, அவரிடம் வந்த அவரது  நண்பர் ஒருவர் சிற்றிங் ரூமில்  இருக்கின்றார் . இவரை எனக்கு முன்னரே தெரியும் .எழுதுபகளில் இலண்டனில் ஆரம்பித்த ஒரு இயக்கத்தின் முக்கியமானவர் .இந்தியாவிற்கு பயிற்சிக்கு சென்று பிறகு போன விடயங்கள் சரிவராமல் திரும்பி வந்த நாலு பேரில் இவரும் ஒருவர் .அந்த நேரம் பாலசிங்கம் தான் இவர்களுக்கு அரசியல்  வகுப்பு எடுத்தவர் .இப்போ முக்கிய ஐந்து இயக்கங்களை விட வேறொரு இயக்கத்தின் பிரதிநிதியாக இருந்தார் .
 
 
என்னுடன் எமது அரசியல் கதைக்க தொடங்கிவிட்டார் .ஆள் மிக விபரமான ஒரு அகாயசூரன் என்று எனக்கு தெரியும் ,லண்டனிலும் பலரால் நினைத்தும் பார்க்க முடியாத சில விளையாட்டுகள் சிங்கள அரசிற்கு எதிராக செய்தது  பற்றி அறிந்திருந்தேன் .அரசியல் கதைத்து முடிய நடந்து முடிந்த சண்டை பற்றி பேச்சு வந்தது .அதற்கு சின்னதாக ஒரு திட்டம் இருப்பதாக சொன்னார் . ஆனால் என்னிடம் அதை சொல்லவில்லை .பின்னர் அறிந்தேன் ரம்போ வில்லும் அம்பும் வாங்கி அதை தனக்கு காட்டியதாகவும்   ஒரு தலைக்கு அதை எய்ய எல்லாம் அடங்கிவிடும் என்றாராம் . ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை .நானும் வேலை எடுத்ததில் பிசியாகி கிழக்கு லண்டன் செல்வதும் குறைந்துவிட்டது.
 
 
இன்று காலை குண்டெறி செய்தி தொலைகாட்சியில் வந்த போது பழைய சண்டையும், மினுங்கல் பாண்ட்ஸ் சொன்னதும், ரம்போ கத்தியும்  நினைவு வந்ததுதான்  எனது பயத்திற்கு காரணம் .பின்னர் நண்பர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அப்படி எதுவும் இல்லை என்றுவிட்டார்கள். சற்று நிம்மதியாக இருந்தாலும் எல்லோரது மனதிலும் சிறு உறுத்தல் இருந்தே வந்தது ,அதைவிட அநியாயமாக மூன்று தமிழ் மாணவர்களின் உயிர் வேறு போய்விட்டிருந்தது .
 
 
ஒரு ஞாயிறு மாலை நாலு மணி இருக்கும் அதே நண்பர் வீடு. ஏழு எட்டு பேர்கள் வீட்டில் இருந்து கதைத்துக்கொண்டு இருக்கின்றோம். கதவு தட்டபடுகின்றது திறந்தால் இரண்டு ஸ்கொட்லண்ட்  யார்ட் போலீஸ்காரர்கள் .எவரையும் அசையகூடாது என்று விட்டு ஒவ்வொருவராக பெயரை கேட்டுக்கொண்டு வருகின்றார்கள்.எனது முறை வர நான் பெயரை சொன்னதும் என்னை வெளியில் போகசொல்லிவிட்டார்கள் .என்ன நடக்கின்றது என்று தெரியாமலே ஏழு மணி வேலைக்கு அப்போதே போய்விட்டேன் . 
 
 
இரவு வேலையில் இருந்து விஜயகாந்திற்கு தொலைபேசி அடித்தால் அன்று அடிபிடிக்கு சென்ற அனைவரின் பெயர்களும் அவர்களின் சந்தேக  பட்டியலில் இருக்கு ,வெளியில் எங்கும் போககூடாது ,விசாரணை வந்தால் ஒத்துழைக்கவேண்டும் ,வீடு முழுக்க சல்லடை போட்டு தேடிவிட்டு பலரும் தொலைபேசி பாவிப்பதால் எல்லோரிடமும் சேர்த்துவைத்திருந்த நாநூறு பவுண்ஸ்சையும் கொண்டுபோய்விட்டார்களாம். இதே போல வேறு சில நண்பர்கள் வீடுகளுக்கும் சென்று அதேபோல்  சொல்லியிருக்கின்றார்கள் .மீண்டும் பயப்பிராந்தி எல்லோரிடமும் குடிபுகுந்துவிட்டது . படிப்பு ,வேலை பிரச்சனை போக லண்டனில் விசா என்பது  மிக முக்கியம் .
 
 
அடுத்த இரண்டு வாரங்களில் ஒவ்வொருவராக ஸ்டேசனுக்கு கொண்டுபோய்,  நடந்தது  நிறவெறி தாக்குதல் அல்ல உங்களில் தான் யாரோ செய்திருக்கின்றார்கள். உங்களுக்கு  தெரிந்த உண்மைகளை  சொல்லாவிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்து விட்டுவிட்டார்களாம் . விசாரணை செய்த விதம்- பொலிஸ் ஒரு கையால் அந்த முக்கியமான இடத்தில்  பிடித்து நசிக்கொண்டு மற்ற கையால் கழுத்தை பிடித்து சுவருடன் அமத்தி வைத்திருந்தார்களாம் .ஒவ்வொரு முறையும் தாங்கள் தெரியாது என்னும் போது கீழே உள்ள பிடி இறுகி  உயிர் போய்வந்ததாக சொல்லி  ரொம்ப  கேவலம் கெட்ட பொலிஸ் என்று திட்டினார்கள் .
 
 
இரண்டு வாரங்களின் பின் ,   ஐந்துதமிழர்கள்  கைது என்று செய்தியில் வந்தது .மினுங்கல் பான்ட்ஸ்,ரம்போ கத்தி உட்பட மூன்று புதுமுகங்கள் .இவர்கள் ரம்போ கத்தியுடன் பகுதிநேர வேலை செய்யும் மாணவர்கள் . இது நண்பன் ஒருவர் சொன்ன செய்தி -பெற்றோல் குண்டிற்கு செய்த திரி ரஷ்யாவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்திருந்தார்கள் அது முற்றிலும் எரியவில்லை .அந்த பத்திரிகை லண்டனுக்கு வரும் விலாசத்தை வைத்து அந்த விலாசத்தில் தேடுதல் நடாத்த சில தடயங்கள் அகப்பட்டுவிட்டது .அந்த மூன்று புதுமுகங்களும் இருக்கும் விலாசம் அது .அதில் ஒருவர் ஊரில் நான் வைத்திருந்த வாண்டு கிரிக்கெட் டீமில் ஒருவர் .
 
 
கைதானவர்கள் தமக்கு எதுவும் தெரியாது என்று ஒரேயடியாக சாதிக்கத்தொடங்கிவிட்டார்கள் . பொலிஸ் தனது ஆசை காட்டும் வேலையில் இறங்கி ,  யாராவது உண்மையை சொல்லி அரசுதரப்பு சாட்சியாக  மாறினால் அவர் குற்றத்தில் இருந்து விடுதலை ,நிரந்தர வடிவுடமை ,அதைவிட பணம் வேறு தருவோம் .
 
 
போலீசின் ஆசைவலையில் விழுந்தது  நண்பர்களுக்கு துரோகம் செய்த அந்த கருங்காலி யார் -தொடரும் .

தொடருங்கள் அர்யுன், சில சம்பவங்கள் தெரிந்த கதையாகதான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
நான்  வாசித்த வகையில், இருவர் மிகச் சிறப்பாக ஒரு விடயத்தினை சொல்வார்கள்.
 
ஒருவர் நம்ம அர்ஜுன் அடுத்தவர் நம்ம இசையர்,
 
பிரச்சனை என்னவென்றால், யாருக்கும் நேரம் இல்லை.
 
முடிந்தவரை எழுதுங்கள். உற்சாகம் தர உறவுகள் தயார்..  :icon_idea:
  • தொடங்கியவர்
மாதங்கள் ஓடுகின்றது .மூன்று அப்பாவி  உயிர்கள் பலி,ஐவர்  சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு  சிறையில் ஆனால்  லண்டன் வாழ்கையின் அழுத்தம் நடந்தவை கனவாக மறந்து மற்றவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கின்றது . இந்தியாவில் இருந்து  படகில் வீடு சேர்ந்து தோழரின் கடிதம் வந்திருந்தது. மீண்டும் முன்னர் கேட்டதை மறக்காமல் அக்காவை பெண் கேட்டும்  எழுதியிருந்தார் . வீடு மாறி  நண்பர் ஒருவருடன் குடி புகுந்துவிட்டேன் .வாரத்திற்கு எழுபத்திரண்டு மணி வேலை கடன் எல்லாம் கொடுத்து கையில் கொஞ்சம் சேர்ந்தும் விட்டது .
 
 
விஜயகாந்தும் சின்னக்கவுண்டர் பார்த்தாரோ தெரியாது அயலில் இருக்கும் ஒரு சுகன்யா போன்ற ஒரு பெண்ணில் கண் விழுந்துவிட்டது .இவ்வளவு அடிபிடி பின்னணியை வைத்துக்கொண்டு  எப்படி பெண் கேட்பது என்று முழுசுக்கிகொண்டு திரிகின்றார் .முன்னர் போலவே சனிக்கிழமை இரவு பார்ட்டி மட்டும் தொடர்ந்துகொண்டே இருந்தது .
 
 
ஒரு ஞாயிறு பகல் மினுங்கல் பான்ஸிடம் இருந்து தொலைபேசி அழைப்பு தான் பொலிஸ் பாதுகாப்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டேலில்  இருப்பதாகவும்  அரசு தரப்பு சாட்சியாக மாறிநடந்த அனைத்தையும் சொல்லிவிட்டதாக சொன்னார் .அவர்களின் பாதுகாப்பில் இருப்பதால் விசாரணை சம்பந்தமாக எதுவும் கதைக்கமுடியாது என்றுவிட்டார் .பின்னர் அடிக்கடி விஜயகாந்துடன் தொலைபேசியில் கதைக்க தொடங்கிவிட்டார் .லண்டனில் தான் வாழ்கையில் பார்க்கமுடியாத மிக ஆடம்பர நிகழ்வுகள்,சுற்றுலாக்கள் ,விளையாட்டு நிகழ்வுகள்  விம்பிள்டன் உட்பட அவர்களுடன் பார்ப்பதாக சொல்லியிருக்கின்றார் . இதே காலகட்டத்தில் நான் கனடா வந்துவிட்டேன் .
 
 
விசாரணையின் முடிவில் ராம்போ கத்தி ,எனது வாண்டு டீம் பிளேயர் இருவருக்கும் ஆயுள்தண்டனை .வாண்டு டீம் பிளேயரை  வெளியில் விட்டால் தனது உயிருக்கு ஆபத்து என்று மினுங்கல் பாண்ட்ஸ் கோர்டில் சொன்னதாக அறிந்தேன் .இருவருக்கு சிலவருடங்கள் சிறை தண்டனை ,ஒருவர் மட்டும் விடுதலை .மினுங்கல் பான்ட்ஸ் தனது விடுதலைக்கு பின்னரும் எவரையும் சந்திக்கவில்லை .பொலிஸ் சொன்ன மாதிரி விடுதலை ,நிரந்தரவதிவு பணம் இவற்றுடன்  இந்தியாவிற்கு போய்விட்டதாக கேள்விப்பட்டேன் .
 
 
இந்தியா சென்றவர்  சூரியா ,பிரித்தா(விஜயகுமார் மஞ்சுளாவின் மகள் ) வைத்து ஒரு படம் எடுத்தார் .பின்னரும் இரண்டு படங்கள் எடுத்தார் என்று நினைக்கிறேன் .
 
 
பல வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வழக்கு மீண்டும் விசாரணக்கு எடுக்கபட்டு இருவரும் விடுதலையானார்கள் .கிறிஸ்டியன் மிசன் ஒன்று பெரிதும் உதவியதாக அறிந்தேன் .
மினுங்கல் கல்யாணம் செய்து சந்தோசமாக இருப்பதாக கேள்வி .போன மாதம் தனது தாயாரின் மரணவிட்டிற்கு வந்திருந்தார் ஆனால் நான் போய் சந்திக்கவில்லை அதை விரும்பவும் இல்லை . 
  • தொடங்கியவர்

அன்று இரவு நடந்ததை (நான் கேள்விப்பட்டதை ) எழுதவில்லை .ஏன் வீண் வம்பு .

அன்று இரவு நடந்ததை (நான் கேள்விப்பட்டதை ) எழுதவில்லை .ஏன் வீண் வம்பு .

 

கேள்விப்பட்டவிடயம் என்று விட்டு ஒரு கதை மாதிரி எழுதலாமே...

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா...யாரந்த மிணுங்கல்:D

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

இந்த படத்தின் திரைக்கதை வசனம் டைரக்சன் மினுங்கல் தான் .தயாரிப்பு ஆர் பி சௌத்திரி.அவற்றை அறிவிற்கு ஏற்ற படம் .

 

குண்டு எறி- -படத்திற்கு கதை திரைக்கதை வசனம் டைரக்சன் தயாரிப்பு அனைத்தும் இவர்தான் .

 

மற்றவர்கள் நடிகர்கள் மட்டுமே .அனைத்தும் தெரிந்தும் நடிக்க போனது மூன்று அப்பாவி உயிர்களை காவுகொண்ட மிகப்பெரிய பாதக செயல் .

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா தேடிப் பிடித்து விட்டேன். ஆள் அப்படி ஒன்றும் பேமசான ஆள் இல்லை.ஆனால் அவரது பெயரில் கிந்தியில் பேமசான டைரக்டர் ஒருவர் இருக்கிறார்:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தின் திரைக்கதை வசனம் டைரக்சன் மினுங்கல் தான் .தயாரிப்பு ஆர் பி சௌத்திரி.அவற்றை அறிவிற்கு ஏற்ற படம் .

 

குண்டு எறி- -படத்திற்கு கதை திரைக்கதை வசனம் டைரக்சன் தயாரிப்பு அனைத்தும் இவர்தான் .

 

மற்றவர்கள் நடிகர்கள் மட்டுமே .அனைத்தும் தெரிந்தும் நடிக்க போனது மூன்று அப்பாவி உயிர்களை காவுகொண்ட மிகப்பெரிய பாதக செயல் .

 

ஜோதி பாலன்?

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,அர்ஜீன் அண்ணா எதற்காக 20 தாவது பதிவில் ஒரு வீடியோவை இணைத்தவர்:D...விஜயகுமாரின் மகள் ப்ரீத்தாவை வைத்துப் படம் எடுத்ததாக கதையில் எழுதி இருக்கிறார்.படம் சந்திப்போமா...டைரக்டர்‍ இந்திரக்குமார்:):)

  • கருத்துக்கள உறவுகள்
உங்க எல்லா கோஸ்டியலும், நாடு பிடிக்கிறம் எண்டு வெளிக்கிட்டு, காத்தன்குடியிலிருந்து, தின்னவேலி வரை பாங்குகளையும், சனங்களையும் கொள்ளை அடிச்சு, படங்கள் எடுத்துக் காட்டினதும், கோவில் கட்டிக் கும்பிட வைத்ததும் தான் மிச்சம்.
 
என்னெத்தை சொல்லுறது?   :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.