Jump to content

அலவாங்கு


Recommended Posts

என்ன நினைத்தானோ தெரியவில்லை கையில் எடுத்த பிரஸ்சை திரும்பவும் எடுத்த இடத்தில் வைத்துவிட்டு  சரத்தை தூக்கிச்  சண்டிக்கட்டு கட்டினான் சுரேந்தர். சுவரில் பொருத்தப்பட்ட கண்ணாடியை நிமிர்ந்து  பார்த்தவன், கம்பியில் கொழுவி இருந்த துவாயை எடுத்து  கழுத்தால் சுற்றி முதுகை மறைத்துப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு முன்புறம் வந்து  வேப்பம் மரத்தில் சாய்த்துக் கிடந்த கொக்கத் தடியை எடுத்து ஒரு வேப்பம் கோப்பை வெட்டி விழுத்தினான். மொக்கு நீக்கு இல்லாத நேரான குச்சியை முறித்து இலைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு  நுனியை வாயில் வைத்து சப்பித் தும்பாக்கிகொண்டு வீட்டின் முகப்பு கேற்றை  நோக்கி நடந்தான்.

 

கேற்றின் மேல் கொழுவியை தூக்கி கேற்றை திறந்தபோது  மெல்லிய காற்று கழுத்தில் போட்டிருந்த துவாயை தாண்டி உடலில் மோதியது. இரணைக்கேற்றின் சரிவுப்  பத்திரிப்பில் ஏறியவன்  காலில்  பத்திரிப்பு குத்த அப்படியே கேற்றினைப் பிடித்தபடி நின்றான். "கொஞ்சநேரம் நோகும்.அப்படியே நிண்டால் அது பழகிவிடும்"..  பாரிசில் தமிழ்க் கடையில் வேலை செய்யும் போது குதிக்கால் நோகுது என ஒரு இடத்தில் இருந்தபோது முதலாளி வந்து அவனிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. தனக்குள் சிரித்துக் கொண்ட சுரேந்தர் நிலம்  சுத்தமாக இருக்கவே அதில் அப்படியே இருந்து கேற்றில் சாய்ந்து கொண்டான்.

 

நேரகாலம்  இல்லாமல் எத்தனை பேர் வந்துபோன இடம்.  இந்த வாசலுக்கு வராத ஊர்ப் பொடியள் யாருமே இல்லை. இப்ப இருக்கிற பொடியளையும் தெரியாது. அப்ப இவங்கள் எல்லாம் சின்னப் பொடியளாக இருந்திருப்பாங்கள். முந்தி திரிஞ்சவங்கள் எல்லாம் கலியாணம் கட்டி வேலை வேலை என்று ஓடுப்பட்டு திரிவாங்கள். பெருமூச்சோடு வீட்டை நோக்கினான் சுரேந்தர்.

 

வீடும் முழுதுமாக மாறிப் போய் இருந்தது.  புது வர்ணம் பூசிக் கிடந்தது. தூண்கள் இரண்டிலும் புதிதாக  ஒரு மஞ்சள் பூக்களைக் கொண்ட கொடி சுற்றிப் படர்ந்து வளர்ந்திருந்தது. அண்மைக்காலங்களில் யாருமே அந்த தூனில் சாய்ந்து இருந்ததற்கான எந்த ஓர் அடையாளங்களும் இல்லை. முன்பெல்லாம் அந்த தூணில்தானே சாய்ந்துகொண்டு முழங்கால் மடித்திருந்து பேன் பார்ப்பார்கள் அக்காவும் கேமாவும். பேன் பார்த்து, அரட்டையெல்லாம் முடிந்து கேமா போனதும், அவள் இருந்த இடத்தில் போய் இருப்பதில்  அளவிடமுடியாத சந்தோசம். அவள் தூணில் சாய்ந்திருந்த இடத்தில் படிந்திருக்கும் எண்ணை வாசம்  ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும்.   அதற்காகவே அவள் போனதும் ஏதாவது ஒரு புத்தகத்துடன் அவள் இருந்த நிலையிலேயே அந்த தூணோடு ஒட்டி இருந்து விடுவதையும் நினைத்தவன், என்ன வாழ்க்கையடா என்று தனக்குத்தானே சொல்லியபடி தூணையே வெறித்துப் பார்த்தான். அவனுக்குள் கேமா வளரத்தொடங்கினாள்.

 

மூன்றில் இருந்து மூன்றரை மணிக்குள் கேமா வந்துவிடுவாள். அதற்கு முதலே அப்பாவின் சாய்மனைக் கதிரையில் சாண்டில்யனின் புத்தகத்துடன் இருந்துவிட, "இன்னுமாடா உதய் வாசிச்சு முடிக்கலை" கேட்டுக்கொண்டே உள்ளே வருவாள் கேமா. "இதென்ன ரமணிச்சந்திரன்ர கல்யாணம் சண்டை பிறகு காதல் எண்டு போற கதையே, உடனே வாசிச்சு முடிக்க, இதெல்லாம் அனுபவிச்சு வாசிக்கணும் உங்களுக்கு எங்க விளங்கும்"என்பான் கிளர்ச்சியுடன்.  "ஒ ஒ உதில நல்லா அனுபவிச்சு வாசிக்க நிறையப் பக்கம் பக்கமா இருக்கும் நல்லா வாசி. நல்லா வருவாய்" என்ற குறும்பான பதில்களுடன்  அநேக தினங்களில்  வீட்டினுள் நுழைவாள். அக்காவையும் அழைத்துக்கொண்டு வந்து, வாசல் தூணடியில் முழங்கால் மடித்து இருந்து கூந்தலைக்  குலைத்து விட்டு தலையை இருமுறைகள் மெல்ல ஆட்டிக் கொண்டே, ஊர்க்கதையெல்லாம் கதைக்கத் தொடங்குவார்கள். சிலநேரம் கேமா, அக்காவின் இரு புறங்களாலும் கால்களை நீட்டிக் கொண்டு இருப்பாள். அவளது ஸ்கேட் முழங்காலுடன் வந்து நிற்கும். காலில் நிறைந்திருக்கும் முடிகளையும், கால் விரல்களையும் கடைக் கண்களால் பார்த்துக் கொள்வான். அவர்களோ  ஒருவரை ஒருவர் மெல்ல நுள்ளியும்  காதுக்குள் கதைத்துக்கொண்டும் இருப்பார்கள். எப்பவாவது முற்றத்து மல்லிகையில் இருந்து உதிர்ந்து விழும் சில மலர்கள் கேமாவின் அகன்ற முதுகில் பரவிக்கிடக்கும்  நீண்ட கூந்தலில் தொங்கிவிடும். அந்த அழகினை நெஞ்சு படபடக்க பார்த்துக் கொள்வதும் கால்வனப்பும் நினைவில் வர உடல் சிலிர்த்தது சுரேந்தருக்கு.

 

"என்னடா பல்லுத் தீட்டப் போனனி உதில இருக்கிறாய்  தேத்தண்ணி போட்டுட்டன்,  ஏன்ரா உந்த  கதிரையில இரன்" அக்காவின் குரல் கேட்டு திகைத்து நிமிர்ந்தாலும், ஒருமையான அழைப்பில்  எதோ ஒரு சொல்லமுடியாத உணர்வு படிந்து கிடந்தது. எவ்வளவு காலம் இப்படியொரு அழைப்பைக் கேட்டு,"இல்லை அக்கா இப்படி இருக்கிறது சுகமாக இருக்கு. நீங்கள் அதில இருங்கோ எங்க பிள்ளை பள்ளிக்கூடம்  போட்டாளோ?

"ம்ம் அவள் வந்து அறையை எட்டிப் பார்த்தவள் நீ நித்திரை பின்ன அவள் போட்டாள் சரி உனக்கு என்ன சாப்பாடு மத்தியானம்"

"எனக்கு ஒன்றும் வேண்டாம் அக்கா, வயிறு இட்டுமுட்டாக்  கிடக்கிறமாதிரி இருக்கு"

"அத்தானின் சிலமனைக் காணயில்லை எங்க?

"அந்தாள் உதில ஆடு அடிக்கிறாங்களாம் பங்கு வேண்டிவாறன் என்று போட்டார். இண்டைக்கு ஆள் போத்திலோட தான் வருவார்" ம்ம்ம் சரி நீ குளிச்சிட்டு வைரவரிட்ட போட்டு வா. ஐயருக்கும் ஏதும் குடுடா பாவங்கள் எங்களை நம்பித்தானே  இருக்கினம்."

 

அக்காவைப் பார்த்தான் சுரேந்தர். ஓரிரு முடிகள் நரைத்துக் கொஞ்சம் முகம் தளர்ந்து கண்கள் உள்ளே போய், அம்மாவின் சாயல் நினைவுக்கு வர, இருபதாம் திகதி இவளுந்த நாற்பதாவது  பிறந்தநாள். வடிவாக கொண்டாட வேண்டும் என எண்ணிக்கொண்டான்.

 

"என்னடா என்ர முகத்தைப் பாக்கிறாய்".

இல்லை அக்காள் நீயும் அம்மா மாதிரி கதைக்கிறாய் கோயிலுக்குப் போ ஐயருக்கு குடு என்று... அதுதான் எவ்வளவு காலம் மாறினாலும் உங்கட இயல்புகள் மாறது போல" சிரித்தபடியே கிணற்றடியை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

 

மாறிப் போயிருந்த சூழலை ஒவ்வொன்றாக அனுபவித்துப் பார்த்துக் கொண்டு கிணற்றடிக்கு வந்தவனுக்கு உடுப்புத் தோய்க்கும் கல் கண்ணில் பட்டது. சுரேந்தர் தன்னை அறியாமல்  நெற்றியைத் தடவிப் பார்த்தான். தளம்பு இன்னும் அப்படியே இருந்தது.  சிரித்துக் கொண்டான். குளித்து முடித்து வீட்டுக்குள் வந்தவனுக்குள் மீண்டும் கேமா  பெரு வடிவுகொண்டு எழுந்து நின்றாள்.

 

கேமா  இப்ப எப்படி இருப்பாள். பார்த்தால் கதைப்பாளோ இல்லையோ என எண்ணியபடி, தீகனின்  தொலைபேசி இலக்கத்தை எடுத்து அழைத்தான். டேய் அத்து நான் சுரேந்தர். இங்கை வீட்ட வந்திட்டன். பின்நேரம் ஒருக்கா வாறியா..தீகனின் பதிலைத்தொடர்ந்து ஓகே ஓகே நான் வெளிக்கிட்டு நிப்பன் வா.

 

சுரேந்தர். பத்து வருடங்கள் பாரிசில் இருந்து அங்கிருந்து லண்டனுக்குப் போய் ஐந்து வருடங்கள் ஆகிறது. பதினைந்து வருடங்களாக  தனிமையும் ஒவ்வொரு இடமாக  சுரேந்தர் கூடவே பயணித்தது. பாரிசில் போய் இறங்கியவன், நெற்றியில் கிணற்று உடுப்புத் தோய்க்கும் கல் இடித்து வந்த காயத்தை காட்டி செல்லடியில் பட்ட காயம் என்றும் அம்மா அப்பா எல்லோரும் செத்துவிட்டனர் என்றும் கேஸ் எழுதிப்போட்டு வந்த சிறிது காலத்திலேயே விசாவையும் எடுத்துக் கொண்டான். வழமைபோல  தமிழர்களின் தற்பெருமையும் மோகமும் ஒட்டிக்கொள்ள லண்டனுக்கு குடிபெயர்ந்தான். எப்பவாவது ஊர் நினைவுக்கு வந்தால் போன் எடுப்பான். எப்பவும் காசு கேட்டால் எப்பவாவது அனுப்புவான்.

 

பாரதி வாசிகசாலையில்  நடந்த இயக்க பிரச்சாரக் கூட்டத்தில் ஒருலட்சம் பேர் வாங்கோ பலாலி ராணுவத்தை  கல்லெறிந்தே கலைக்கலாம் என்று  மேகவண்ணன் முழங்க இவனும் உணர்ச்சிவசப்பட்டு  கையை உயர்த்த, பக்கத்தில இருந்த வேலுப்பிள்ளையார் காதைப் பொத்தி அடிச்சு வீட்ட கொண்டு வந்து அறையிக்கை தள்ளி மனைவி பொன்னம்மாளிடம் ஒரு காட்டுக் கத்தல் கத்திமுடிச்சார். அடுத்தநாள் கொழும்பு. அன்றில் இருந்து மூன்றாம் மாதம் பாரிஸ். ஒருவருக்கும் தெரியாது காதும் காதும் வைச்ச மாதிரி அலுவல் முடிச்சார் வேலுப்பிள்ளை. பெரியம்மா வீட்டுக்கு போகிறேன் என்று போனவன் பாரிசிலிருந்து கடிதம் போட்டான்  நண்பர்களுக்கு.

 

மச்சான் என்னால முன்னுக்கு இருக்கமுடியாது. நான் கரியரில ஏறுகிறேன் நீ ஓடு. என்றபடியே சுரேந்தர் ஓடி ஏறினான். இப்ப எங்கயடா போக, வாசிகசாலையடிக்குப் போவம் என்ன. வில்லனை வரச்சொன்னான். அதில போய் பிறகு யோசிப்பம் எங்க போறதென்று, என்றபடி சுரேந்தரின் பதிலுக்காக காத்திருக்காமல் சைக்கிளை வாசிகசாலை நோக்கி ஓட்டினான் தீகன். சைக்கிள் ரயர்  "சர்" என ஒலி எழுப்பிக்கொண்டு இருந்தது. எந்த ஒரு குலுக்கமும் இல்லாமல் சைக்கிள் ஓடியதிலிருந்தே ரோட்டின் அமைப்பினைப்பினைப் புரிந்துகொண்டவன் கல்லுகள் நிறைந்தும், குன்றும் குழியுமாக கிடந்த ரோட்டில் அங்காங்கே தேங்கிக் கிடந்த வெள்ளத்தை விலகி விலகி சைக்கிள் ஒட்டிய நினைவுகள் வர ரோட்டைப் பார்த்தான்.

 

வாசிகசாலையடி  முழுவதுமாக மாறிக்கிடந்தது. கட்டடம் மட்டும் அப்படியே இருந்தது. வாசிகசாலைக்கு முன்பக்கம் நின்ற நெருப்பு வாகைமரத்தைப்  பார்த்தான். பெருமூச்சோடு அதன் கீழ் இருந்த காலங்களை நினைவுகளில் கடந்தான். திரும்பியவன் வாசிகசாலைக்கு அடுத்தபக்கம் இருந்த கேமாவின் வீட்டைப் பார்க்க நடந்தான். "என்னடா இது" என அதிர்ச்சியுடன் திரும்பினான் தீகனிடம். "ஏன் உனக்கு தெரியாதே உதக் கட்டி இப்ப ஒருவருடத்துக்கு கூட வரும்" சர்வசாதரணமாக சொன்னான் தீகன். ஏன்ரா விட்டனிங்கள் சுரேந்தரின் குரலில் கோபம் தெறிக்க கேட்டான், நாங்கள் எங்க விட்டது அவங்கள் கொண்டுவந்து ஒருநாளில் கட்டிமுடிச்சுட்டு போட்டாங்கள். சந்தியில நிக்குது உந்த மரத்தை தறிப்பம் எண்டு முந்தி வெளிக்கிட நீதான நிழல் மசிர் மட்டை  என்று  மறிச்சனி... . கேலியாகக் கேட்டான் தீகன்.

 

சுரேந்தர் கேமாவின் வீட்டை மறந்தவனாக அந்த சிலையைப்  பார்த்துக்கொண்டு நின்றான். சுற்றிவர அரை அடி சுவர்களும் ஒரு கையில் சிங்கக்கொடியும் மறுகையில்   துப்பாக்கியையும் பிடித்தபடி முழுவதும் பச்சை நிறத்தில் நான்கு வெள்ளைத்தூண்களுக்கு மத்தியில், மேலே கூரை போடப்பட நிலையில் தாமரைப் பீடமொன்றில் அமைக்கப்பட அந்த சிலை அவனையே பார்ப்பதுபோல இருக்க தலையைக் குனிந்துகொண்டான். எதோ நினைத்தவனாக சிலையின் அருகில் சென்றவன், சிலையின் பீடத்தில் முழு இலங்கையின் படத்தை வரைந்து அதற்குள் சிங்களம் தமிழ் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் எழுதியிருந்ததை வாசிக்கத்தொடங்கினான். "பயங்கரவாதிகளிடம் இருந்து எழில் மிகு இலங்கைத் திருநாட்டை பாதுகாக்கும் போரில் மரணமடைந்த இராணுவ வீரர்கள் நினைவாக வடக்கு புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் கௌரவ, திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களால் 18 /05 /2013 அன்று திறந்து வைக்கப்பட்டது"

 

தளர்ந்த நடையோடு திரும்பி வந்து நெருப்பு வாகை மரத்துக்கு கீழ் அமர்ந்துகொண்டான் சுரேந்தர். முதல் முதல் இந்த இடத்துக்கு எதோ ஒரு கூட்டம் என்று பெரியப்பா ஆறுவயதில் அவனையும் அழைத்து வந்திருந்தார். சுரேந்தருக்கோ ஒன்றும் புரியவில்லை. பேசியவர்கள் எல்லோரும் ஆவேசமாக பேசினார்கள்.கூடியிருந்த மக்கள் எல்லோரும் கை தட்டி ஆரவாரித்தார்கள். அன்றிலிருந்து பக்கத்து வீட்டு முருகன் மாமா அவர்களுடன் சென்று விட்டார். பிறகு நீண்ட காலத்தின் பின் பெரியப்பாவுடன் கதைக்கும் போதுதான் தெரிந்தது, அந்த கூட்டத்தில கூட்டணி தலைவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள் என்றும், அதில் பேசும் போதுதான் முருகவேல் அப்பா ஈழக் கோரிக்கையை கூட்டணியினரிடம் முன் வைத்தார் என்றும் கூறியிருந்தது நினைவுக்கு வந்தது.

 

பிறகும் பல கூட்டங்கள் பல நிகழ்வுகள் நடந்ததும், ஒருமுறை மேகவண்ணன் பேசும் போது கையை உயர்த்த தகப்பன் அடித்து இழுத்துக்கொண்டு போனதும் அதுவே கடைசி முறையாகிப் போனதையும் நினைத்தவன், உந்த வாசிகசாலையை ஒழுங்கா நடத்தவென்று எவ்வளவு பாடுபட்டும் கடைசியில இப்படியாகி விட்டதே இயலாமையோடு சொன்னபடியே தீகன் உதில தண்ணி வேண்டிவாடா என்றான்.

 

தீகன்  போத்தல் தண்ணி வேண்டிக்கொண்டு வர நிமிர்ந்து பார்த்தவன், எண்டா மனேச்சர் பழக்கமில்லையா போத்தில் தண்ணி வேண்டிவாறாய். 

"இல்லடா நீ சும்மா தண்ணி குடிப்பியோ தெரியாது அதுதான் என்றவனை நிமிர்ந்து பார்த்தான் சுரேந்தர். "நீயொரு... என்றபடி  சங்கக் கடையைப் பார்த்தான். மனேச்சர் அவனை எட்டிப்பார்ப்பது தெரிந்தது.

 

டேய் என்னடா இது. உதில கட்டியிருக்கிறாங்கள். உனக்குத் தெரியும் தானையடா முந்தி உந்த வாசிகசாலையை எப்படிஎல்லாம் நடத்தினனாங்கள் என்று, எப்படி சம்மதிச்சியள்.  இப்ப இருக்கிற நிர்வாகக்காரங்கள் ஒன்றும் சொல்லவில்லையா..எனக் கேட்டான் சுரேந்தர். நீவேற கட்டியதே நிர்வாகக்காரங்க சொல்லித்தான். இப்ப ஆர் தலைவர் தெரியுமே மணியம் தான். மணியம் வால் பிடிக்க உதயெல்லாம் செய்கிறான். அவன் கள்ளனடா. முந்தி இயக்கம் இருக்ககேக்கை எல்லா அலுவலுக்கும் மணியம் அங்கதான் போவான். அவங்களும் இவனை எதோ பெரிதாக நினைத்துக்கொண்டு  வருவாங்கள் போவாங்கள். அந்த செல்வாக்கில் மணியம் அப்ப இணக்கமன்று தலைவர் அந்த தலைவர் இந்ததலைவர் என்று திரிஞ்சான். அப்பவும் அவன் வாழ்ந்தான் இப்பவும் அவன் தான் வாழுறான். உத விடு. எப்படி சம்மதிச்சனியளோ  ஏதும் கதைத்திருந்தால் உங்கை வாசிகசாலைக்குள் என்ர படமும் மாட்டப்பட்டு கிடக்கும் இப்ப...நீ வந்தனி உன் அலுவலைப் பார்.அங்கை இங்கை என்று ஏதும் பழைய நினைவில திரிஞ்சியோ திருப்ப லண்டனுக்கு போகமாட்டாய். சொல்லிப்போட்டன். பிறகு நாங்களும் இங்கை இருக்கமுடியாது. எப்பவாவது சந்தர்ப்பம் வரும் தான என்று பார்த்துக்கொண்டு இருக்கிறம். இவங்களுக்கு நல்ல சாவே வராதடா.

 

மௌனமாக சிலகணங்கள் கரைய, சுரேந்தர் கேட்டான்  வில்லன் எங்கையடா. ... ,வருவான் இப்பதான் போன் பண்ணினனான்.  கேமாவைக் கண்டனியே.. எனத் திருப்பக் கேட்டான் தீகன். இல்லையடா  எப்படி அவளைப் பற்றி உன்னிட்ட கேக்கிறது என்று யோசித்துக் கொண்டு இருந்தனான். என்னடா செய்கிறாள் அவள்.  எந் திருப்ப கேட்டான் சுரேந்தர். இருக்கிறாள் உங்கை பாலர் பாடசாலையில் படிப்பிக்கிறாள். தாயோட தான் இருக்கிறாள். என்றவனிடம்   ஏன் இன்னும் அவள் கல்யாணம் கட்டவில்லையாடா .. எனக் கேட்டான். 

 

இல்லைடா அவள் கடைசியா வன்னியில இருந்தவள் தான. ஆமியிட்ட போகேக்கை ஒரு பிள்ளையை கொண்டு போயிருக்கிறாள். ஆமியும் அவளின் பிள்ளை என பதிந்து பின் அவளை புனர்வாழ்வுக்கு அனுப்பி இருக்கிறாங்கள். அங்கை இவளைப் பார்க்கப் போகேக்கை தாயிடம் பிள்ளையை கொடுத்து இருக்கிறாள் கேமா. அப்பேக்கையும் தாயிடம் தன் பாதுகாப்பு கருதி தன்ர பிள்ளை என்றுதான் சொல்லி இருக்கிறாள் . தாய்மனுசியும்  பிள்ளையை கொண்டுவந்து வளக்கத்தொடங்கிடுத்து. ஊர் சனமெல்லாம் அவளிந்த பிள்ளை என்றுதான் சொல்லிக்கொண்டு திரியுதுகள்.

 

அவள் தடுப்பால வந்த பிறகுதான் எங்களுக்கு சொன்னாள், தான் சரணடைய வரேக்கை தாயும் தகப்பனும் செல்பட்டு செத்துக் கிடக்க பிள்ளை அழுதுகொண்டு இருந்ததாம். தான் தூக்கிக்கொண்டு வந்தன் என்றும்.  எங்கட சனங்கள் சும்மாவே கதையை கட்டுறதுகள். இப்ப அவள் பிள்ளையோடு இருக்க விடும சனம். வாற கல்யாணங்களை எல்லாம் குழப்பி போடுங்கள் மீறி வந்தாலும் அவள் பிள்ளையை தன்னோடு வளர்ப்பேன் என்று சொல்ல வாறவங்களும் வேண்டாம் என்றுவிட்டு போறாங்கள். அதைவிட புனர்வாழ்வு முடிச்சு வந்த பெட்டை என்று கொஞ்சப்பேர் உடனேயே மாட்டன் என்கிறான்கள். சரியான கஷ்டம் வேற... ம்ம் ம்ம்  வாடா வில்லன் வாறன்.  கோயிலடிக்குப் போவோம்.

 

நிமிர்ந்து நின்ற சிலையைப் மீண்டும் திரும்ப பார்த்துவிட்டு சைக்கிளில் ஏறியவனை, தொளில் கையை வைத்தபடி சைக்கிளை நெருக்கமாக ஒட்டிக் கொண்டுவந்தான் வில்லன். கேமாவிடம் காதலை சொல்ல அலைந்த போது கூடவே திரிந்தவன் வில்லன். இன்றும் கேமா அப்படியே இருக்கிறாள். வில்லனும் நிக்கிறான். ஆனால் காலம் எவ்வளவு இடைவெளிகளை உருவாக்கிவிட்டது. நினைத்துக்கொண்டவன், வில்லனைப் பார்த்து பழைய அலுவலைக் குடுக்கணும் வில்லா என்றான்.

 

இரவு சாப்பாட்டு மேசையில் கேமாவைப் பற்றிய கதையை ஆரம்பித்தான் சுரேந்தர். தமக்கையின் கண்களில் ஒரு பொறி கிளம்பி அடங்கியது. அத்தான் மட்டும் மென்மையாக பார்த்தார். பாவம் அந்தப்பிள்ளை என்றுவிட்டு பேசாமல் சாப்பிடத்தொடங்கினார். இவள் இன்னும் கேமாவில கோபமாகவே இருக்கிறாள். எதோ கேமா என்னை விரும்பியது மாதிரி லூசி. நான் தானே அவளை கலைச்சுக்கொண்டு திரிஞ்சனான். இயக்கத்துக்குப் போக வெளிக்கிட்டதுக்கு அவள் தான் காரணம் என்று இவள் போய் சண்டையை பிடித்தவளாம். பாவம் கேமா. என்னதான் நடந்தாலும் நடக்கட்டும். அப்படியே செய்வதுதான் சரி. என நினைத்தபடி சாப்பாட்டை முடித்துவிட்டு படுக்கைக்கு சென்றான் சுரேந்தர்.

 

வெயிலுக்குள் திரிந்த  அலுப்பிலும், கேமாவின் நினைவுகள் தந்த இறுக்கத்திலும்   உறங்கியவனுக்கு  நீண்ட கனவு. லண்டன் வீட்டில் கேமா பிள்ளையை கூட்டிக்கொண்டு பாடசாலைக்கு போகிறாள். பிள்ளை கையை காட்டி பாய் அப்பா  என சொல்லியபடி நடக்க கேமா திரும்பி அவனைப்  பார்த்து சிரிக்கிறாள். திகைத்து எழும்பியவன் நேரத்தைப் பார்த்தான். ஒருமணி. சிலநொடிகள் அப்படியே படுத்திருந்தவன் சுற்றிவரப் பார்த்துவிட்டு எழுந்தான். சுவர் மணிக்கூட்டின் ஒலி மட்டும்  டிக் டிக் டிக் என  கேட்டுக்கொண்டு இருந்தது. எழும்பியவன் நேரே வெங்காயக் கொட்டிலுக்குள் சென்று அலவாங்கை எடுத்தான். திரும்பி வீட்டுக்குள் வந்து சேட்டைப் போடும் போது நிமிர்ந்து பார்த்தான். சுவரில் படமாக மாட்டப்பட்டுக் கிடந்த தந்தையின் கண்களில் இருந்து  வழிந்த புன்னகை அவனைப்பார்த்து மன்னிப்புக் கேட்பது போலவே இருந்தது.  புன்னகைத்தபடி அலவாங்குடன் நடந்தான் வாசிகசாலையை நோக்கி.

 

Link to comment
Share on other sites

இராணுவ வீரர்கள் நினைவாக வடக்கு புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் கௌரவ, திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களால் 18/05/2013 அன்று திறந்து வைக்கப்பட்டது"

 

 

 

அருமை சகோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு சென்று வந்ததுபோன்ற  உணர்வு .நினைவில் .அழியாத  கோலங்கள் .  பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்கொழு... உங்கள் கவிதையோட்டத்தை.. உங்கள் கதையோட்டம் விஞ்சுகின்றது போலத் தெரிகின்றது!

 

உங்கள் கதை கூட, நினைவுகளின் நரம்புகளைத் தட்டிப் பார்க்கின்றது! தொடர்ந்தும் எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

ஈழத் தமிழரின் இரு வேறு உலகங்களை கதை தொட்டு செல்கிறது,..

 

 நன்றிகள் அண்ணா தொடர்ந்தும் பல ஆக்கங்கள் தந்து உங்கள் கவிதை போல் கதைகளும் பேசப்பட வேண்டும் :)

 

 

Link to comment
Share on other sites

இராணுவ வீரர்கள் நினைவாக வடக்கு புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் கௌரவ, திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களால் 18/05/2013 அன்று திறந்து வைக்கப்பட்டது"

 

 

 

அருமை சகோ 

மிக அன்பு அண்ணை 

ஊருக்கு சென்று வந்ததுபோன்ற  உணர்வு .நினைவில் .அழியாத  கோலங்கள் .  பாராட்டுக்கள்

மிக்க  அன்பு அக்கா 

 

வரிகள் உற்சாகமூட்டுகின்றன தொடர்ந்தும் இயங்குவேன் 

நேற்கொழு... உங்கள் கவிதையோட்டத்தை.. உங்கள் கதையோட்டம் விஞ்சுகின்றது போலத் தெரிகின்றது!

 

உங்கள் கதை கூட, நினைவுகளின் நரம்புகளைத் தட்டிப் பார்க்கின்றது! தொடர்ந்தும் எழுதுங்கள்!

 

மிக்க அன்பு புங்கை அண்ணா, 

 

எனக்கு என்னவோ கவிதை கொஞ்சம் இலகு போலவே தோன்றுகிறது. சிறுகதையில் இன்னும் நிறைய முயற்சி செயவேண்டும். 

 

வாழ்த்துக்கு மிக்க அன்பு அண்ணா 

ஈழத் தமிழரின் இரு வேறு உலகங்களை கதை தொட்டு செல்கிறது,..

 

 நன்றிகள் அண்ணா தொடர்ந்தும் பல ஆக்கங்கள் தந்து உங்கள் கவிதை போல் கதைகளும் பேசப்பட வேண்டும் :)

 

மிக்க அன்பு விஷ்வா 

 

இரண்டுதளங்களை தொட்டிருந்தாலும் கதையில் சில தவறுகளை இப்போ காண்கிறேன். 

 

உன் அன்பு நீடிக்கும்வரை என் ஆக்கங்களும் பேசப்படும். நண்பன்டா  :D

Link to comment
Share on other sites

அருமை  தொடருங்கள் தாசன்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுபூர்வமான எழுத்துக்கள்
பகிர்விற்கு நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் உருண்டு

தாயகத்தில் தவளவிட்டு

எம் எல்லோர் கனவுடனும் பயணிக்கும் உங்கள் எழுத்துக்களுக்கு மீண்டும் ஒரு படிக்கல்..

 

தொடருங்கள் தம்பி

இந்த நாடு

உங்கள் போன்றோரை நம்பியிருக்கு..

வாழ்க  வளமுடன்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தொடர்ந்து நிறையக் கதைகள் எழுத வேணும் நெற்கொழு....!  மிகவும் நன்றாக இருக்கின்றது...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.பாராட்டுக்கள் நெற்கொழுதாசன்!!

Link to comment
Share on other sites

எழுத்துநடை நானும் நாட்டில் வெறும் காலில் நடந்த உணர்வு .தொடர்ந்து எழுதுங்கள் .

 

கேமாவின் பாத்திரம் யாழில் வாசித்த ஒரு கதையை அப்படியே நினவுஊட்டியது (சாந்தி ரமேஸ் இணைத்த கதை என நம்புகின்றேன் )

இப்படியான சம்பவங்கள் பல நடந்ததால் உங்களுக்கும் அப்படி ஒரு கரு  வந்திருக்கலாம் .

Link to comment
Share on other sites

அருமை  தொடருங்கள் தாசன்  :D

நன்றி  அஞ்சன்  :)

உணர்வுபூர்வமான எழுத்துக்கள்

பகிர்விற்கு நன்றிகள் 

மிக்க அன்பு வாத்தியார் 

 

ஊரில உங்களைப் போன்றவர்களின் சொல்லுகளைக் கேட்டிருந்தால் நல்ல வந்திருப்பம் அப்ப விட்டுட்டம் இப்பவாவது கேட்போம் 

புலத்தில் உருண்டு

தாயகத்தில் தவளவிட்டு

எம் எல்லோர் கனவுடனும் பயணிக்கும் உங்கள் எழுத்துக்களுக்கு மீண்டும் ஒரு படிக்கல்..

 

தொடருங்கள் தம்பி

இந்த நாடு

உங்கள் போன்றோரை நம்பியிருக்கு..

வாழ்க  வளமுடன்....

 

மிக்க அன்பு விசுகு ஐயா, 

 

உங்களின் அன்பும் வாழ்த்தும் என் இருத்தலை இன்னும் இன்னும் பூரணப்படுத்தும்.

 

வழி தெரிகிறது ஐயா பயணிக்கிறோம் எவர் பற்றிய கவலையும் இல்லாமல்.... 

 

மிக்க அன்பு 

நீங்கள் தொடர்ந்து நிறையக் கதைகள் எழுத வேணும் நெற்கொழு....!  மிகவும் நன்றாக இருக்கின்றது...!  :)

 

மிக்க நன்றி.

 

நிச்சயமாக எழுதுவேன் சுவி ஐயா, அது எனக்கு ஒரு நின்மதியையும் தருகிறது அதற்காகவாது எழுதுவேன்.

நீங்கள் தொடர்ந்து நிறையக் கதைகள் எழுத வேணும் நெற்கொழு....!  மிகவும் நன்றாக இருக்கின்றது...!  :)

 

மிக்க நன்றி.

 

நிச்சயமாக எழுதுவேன் சுவி ஐயா, அது எனக்கு ஒரு நின்மதியையும் தருகிறது அதற்காகவாவது எழுதுவேன்.

உணர்வுபூர்வமாக நன்றாக உள்ளது..........பாராட்டுக்கள் நெற்கொழுதாசன்!!

மிக்க அன்பு அக்கா. 

 

அடுத்த கதையையும் இணைக்கிறேன் வாசிச்சு சொல்லுங்க 

.பாராட்டுக்கள் நெற்கொழுதாசன்!!

மிக்க அன்பு  சுவைப்பிரியன் 

Link to comment
Share on other sites

எழுத்துநடை நானும் நாட்டில் வெறும் காலில் நடந்த உணர்வு .தொடர்ந்து எழுதுங்கள் .

 

கேமாவின் பாத்திரம் யாழில் வாசித்த ஒரு கதையை அப்படியே நினவுஊட்டியது (சாந்தி ரமேஸ் இணைத்த கதை என நம்புகின்றேன் )

இப்படியான சம்பவங்கள் பல நடந்ததால் உங்களுக்கும் அப்படி ஒரு கரு  வந்திருக்கலாம் .

 

எழுத்துநடை நானும் நாட்டில் வெறும் காலில் நடந்த உணர்வு .தொடர்ந்து எழுதுங்கள் .//////

 

மிக்க அன்பு அண்ணை அடுத்த  முறை நல்ல சப்பாத்து ஒன்றை போட முயற்சி செய்கிறேன். இப்பதானே நடை பழக ஆரம்பம்.

 

சாந்தி அக்காவின் கதையை வாசிக்கவில்லை இன்னும். இனித்தான் வாசிக்கப்போகிறேன். 

 

அண்ணை நீங்கள் முதலில் போட்டிருந்த கருத்தையே விட்டிருக்கலாம். திருத்தி இருக்கத்தேவையில்லை வேறு பலரும் உங்களின் கருத்தையே எனக்கும் சொன்னார்கள். 

 

மிக்க அன்பு அண்ணை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாகவுள்ளது வாழ்த்துகள்...தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்....

Link to comment
Share on other sites

"என்னடா என்ர முகத்தைப் பாக்கிறாய்".

இல்லை அக்காள் நீயும் அம்மா மாதிரி கதைக்கிறாய் கோயிலுக்குப் போ ஐயருக்கு குடு என்று... அதுதான் எவ்வளவு காலம் மாறினாலும் உங்கட இயல்புகள் மாறது போல" சிரித்தபடியே கிணற்றடியை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

 

 

 

 

 

மிகவும் நன்றாக இருக்கின்றது நெற்கொழுதாசன் அண்ணா தொடருங்கள்.....

 

Link to comment
Share on other sites

மிகவும் நன்றாகவுள்ளது வாழ்த்துகள்...தொடரட்டும் உங்கள் படைப்புக்கள்....

 

மிக்க அன்பு புத்தன் 

 

"என்னடா என்ர முகத்தைப் பாக்கிறாய்".

இல்லை அக்காள் நீயும் அம்மா மாதிரி கதைக்கிறாய் கோயிலுக்குப் போ ஐயருக்கு குடு என்று... அதுதான் எவ்வளவு காலம் மாறினாலும் உங்கட இயல்புகள் மாறது போல" சிரித்தபடியே கிணற்றடியை நோக்கி நடக்கத்தொடங்கினான்.

 

 

 

 

 

மிகவும் நன்றாக இருக்கின்றது நெற்கொழுதாசன் அண்ணா தொடருங்கள்.....

 

மிக்க அன்பு புலிக்குரல். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.