Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனி கணிதப் பாடம் அவசியம் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதப்  பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

maths_2207203b.jpg

 

 

 

 

 

 

சாதாரண தரத்தில்கணிதப்  பாடத்தில் சித்தியடையாதவர்களும் இனி வரும் காலங்களில் உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2015/02/27/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புத்தி 1966ம் ஆண்டுக்கு முன் வந்திருக்க வேண்டும். அநியாயமாய் நாலு நோபல் வாங்கக் கூடிய ஒரு ஜீனியஸை  நோ  பல்  காலத்தில் கவலைப் பட வைத்து விட்டார்கள்...! 50 வருட பின் தங்கிய கல்வியால் கவுத்துப் போட்டார்கள்...!! :o  :) 

  • கருத்துக்கள உறவுகள்

லேட்டான மாற்றம். ஆனால் வரவேற்கத்தக்க மாற்றம். 

 

கலைப் பிரிவு.. மாணவர்களுக்கு எதுக்கு கணிதம்...???! இதை எப்பவோ சிந்திச்சிருக்கலாம். போட்டிப் பரீட்சையை கொண்ட சிறீலங்கா கல்வி கொள்கை வகுப்பாளர்களுக்கு அது கஸ்டமாப் போயிட்டுப் போல. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்.. பரிதாபத்துக்குரியவர்களாகி உள்ளனர்.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஏதோ கணக்குவிட்டு அரசியலுக்குள் நுளைந்துவிட்டது போல் தெரிகிறது. கணக்கைத் திறமையுடன் படித்துச் சித்தி பெற்றிருந்தால் கணித பாடத்தின் சிறப்பைப்பற்றியும் அவசியம் பற்றியும் நன்றாகவே அறிந்திருப்பார். smiley3429.gif smiley1835.gif

அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஏதோ கணக்குவிட்டு அரசியலுக்குள் நுளைந்துவிட்டது போல் தெரிகிறது. கணக்கைத் திறமையுடன் படித்துச் சித்தி பெற்றிருந்தால் கணித பாடத்தின் சிறப்பைப்பற்றியும் அவசியம் பற்றியும் நன்றாகவே அறிந்திருப்பார். smiley3429.gif smiley1835.gif

 

சிரிப்பு தங்க முடியவில்லை..... :lol:  :lol:

லேட்டான மாற்றம். ஆனால் வரவேற்கத்தக்க மாற்றம். 

 

கலைப் பிரிவு.. மாணவர்களுக்கு எதுக்கு கணிதம்...???! இதை எப்பவோ சிந்திச்சிருக்கலாம். போட்டிப் பரீட்சையை கொண்ட சிறீலங்கா கல்வி கொள்கை வகுப்பாளர்களுக்கு அது கஸ்டமாப் போயிட்டுப் போல. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்.. பரிதாபத்துக்குரியவர்களாகி உள்ளனர்.  :icon_idea:  :)

 

சில கலைப்பிரிவு ஆட்கள்  யூனியில் கணித பாடம் எடுக்க வேண்டும்.

 

உதாரணம் - பொருளியலை விசேடமாகக் கற்பவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு விடத்தெரியாம யூனிக்கு போய் என்ன பிரியோசனம்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புத்தி 1966ம் ஆண்டுக்கு முன் வந்திருக்க வேண்டும். அநியாயமாய் நாலு நோபல் வாங்கக் கூடிய ஒரு ஜீனியஸை  நோ  பல்  காலத்தில் கவலைப் பட வைத்து விட்டார்கள்...! 50 வருட பின் தங்கிய கல்வியால் கவுத்துப் போட்டார்கள்...!! :o  :)

 

50 வருசத்துக்கு முன்பு.... கல்குலேட்டர், கைத்தொலை பேசி, கணணி கண்டு பிடிக்கப் பட்டிருந்தால்....

இந்தச் சட்டம் முன்பே வந்திருக்கும், படு பாவியள் 16´ம் வாய்ப்பாடு மட்டும்...

நித்திரை முழிச்சு, பாடமாக்க வைச்சுட்டாங்கள்.smiley4168.gif:D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற பழமொழியை மாற்றவேண்டுமா?

சாதாரண தரத்தில் கணிதத்தில் சித்தியடையாமல் விட்டால் வெறும் எழுத்துப் படிப்பைத்தான் தொடரமுடியும். ஆனால் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய வேலை எதுவும் செய்யமுடியாது.

முதல் பிரச்சனை என்னவெனில் பல பின் தங்கிய ஊர்களிலும் பாடசாலைகளிலும் கணிதம் படிப்பிக்க கூடிய திறமையுள்ள ஆசிரியர்கள் இல்லை / அல்லது மிகக் குறைவு. எனக்குத் தெரிந்து 9/10 ஆம் வகுப்பில் உள்ள தேற்றங்கள் செய்யத் தெரிந்த ஆசிரியர்கள் கிராமங்களில் இல்லை என்றே கூறலாம். இதனால் பல திறமையுள்ள மாணவர்களும் கணிதத்தில் புள்ளிகள் பெற முடியாமல் உயர்தரமும் படிக்க முடியாமல் பின் தங்கி விடுன்கின்றனர். இவ் மாற்றம் இவர்களைப் போன்றவர்களுக்கு நன்மை அளிக்கும்.

 

 

சாதாரண தர கணிதம் கஸ்டமா என்ன .அது அடிப்படை கணிதம் தானே அது தெரியாம பல்கலைக்கழகம் போய் என்னத்தை செய்கிறது

இலகு படுததபட்ட எண்கணிதம் வேணும் .கலை பிரிவில் புள்ளி விபரவியலுக்கு கணிதம் வேணும் ,

50 வருசத்துக்கு முன்பு.... கல்குலேட்டர், கைத்தொலை பேசி, கணணி கண்டு பிடிக்கப் பட்டிருந்தால்....

இந்தச் சட்டம் முன்பே வந்திருக்கும், படு பாவியள் 16´ம் வாய்ப்பாடு மட்டும்...

நித்திரை முழிச்சு, பாடமாக்க வைச்சுட்டாங்கள்.smiley4168.gif:D

 

ஸ்ரீபதி மாஸ்ரர் என்று ஒரு ரியூசன் மாஸ்ரர்... லொக்ரேபிள் வாய்ப்பாடே பார்க்காமல் சொல்லுவார்!!  :o  :icon_idea:

போட்டி தேர்வு இல்லாது ஒழிக்கபட்டு . எல்லா மாணவருக்கும் இருக்கிற திறைமைகளை கண்டு பிடித்து அவர்களை அவங்களின் விருபங்களின் அடிபடையில் பூரண அறிவினை வளர்க்கும் கல்விமுறை அவசியம்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி சொல்வது உண்மை தான்...கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களில் படிப்பிக்கும் ஆசிரியர்கள் பலருக்கு கூட தேற்றங்கள் தெரியாது அல்லது எப்படி முறையாக படிப்பிப்பது என்று தெரியாது...கணிதம் சின்ன வயதில் இருந்து ஒழுங்காக சொல்லிக் கொடுக்கா விட்டால் தேறுவது கஸ்டம்...மாணவர்கள் மற்ற பாடத்தில் சிறந்து விளங்கினாலும் கணக்கு சரி வரா விட்டால் வாழ்க்கை,படிப்பு வீணாகி விடும்

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீபதி மாஸ்ரர் என்று ஒரு ரியூசன் மாஸ்ரர்... லொக்ரேபிள் வாய்ப்பாடே பார்க்காமல் சொல்லுவார்!!  :o  :icon_idea:

 

எனக்கும்... கணக்கும், வெகு தூரம்.

ஐஞ்சு ரூபாய் தாளையும்,  பத்து ரூபாய் தாளையும்... நிறத்திலையும்,

அதில உள்ள படத்தையும், நிறத்தையும்.... வைச்சு தான் கண்டு பிடிக்கிறனான்.

அது, கிடக்கட்டும் ... லொக் ரேபிள் எண்டா... என்ன  சோழியான். :D

எனக்கும்... கணக்கும், வெகு தூரம்.

ஐஞ்சு ரூபாய் தாளையும்,  பத்து ரூபாய் தாளையும்... நிறத்திலையும்,

அதில உள்ள படத்தையும், நிறத்தையும்.... வைச்சு தான் கண்டு பிடிக்கிறனான்.

அது, கிடக்கட்டும் ... லொக் ரேபிள் எண்டா... என்ன  சோழியான். :D

 

விளையாடாதீங்க... 

பரவாயில்லை... 

சொல்லுறேன்..

 

மடக்கை வாய்ப்பாடு...  

 

மடக்கை என்றால் என்ன எண்டு கையை மடக்கிப்போடாதீங்கோ.. தாங்கமாட்டன்!!  :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு எண் கணிதம் எப்பவும் பிரச்சினையாய் இருந்ததில்லை..., அந்தக் கணக்குப் புத்தகத்தில் கடைசி நாலு பக்கம் பூரா எல்லாக் கணக்குகளின் விடையும் இருக்கும். நாங்கள் எத்தனையாவது கணக்குக்கு என்ன விடை என்று பார்த்திட்டு செய்முறையில வருசம் மாதம் திகதி எல்லாம் போட்டு வெட்டிக் கொத்தி அவருக்கும் புரியாமல் எங்களுக்கும் புரியாமல் விடையை சரியாய் எழுதிப் போடுவம். பிளாக் போர்ட்டில செய்யச் சொல்லேக்கதான் அடி வாங்கிறது. :unsure::)

 

இந்த அல்ஜிப்பிறா , யோமற்றிதான் பெரிய பிரச்சினை. தேற்றத்திப் பாடமாக்குவமா.. திருக்குறளைப் பாடமாக்குவமா , முதலாம் உலகப் போரும், இரண்டாம் உலகப் போரும் செய்யவில்லை என்டு யார் அழுதார்கள், எம்மைப் போட்டுக் கொல்லுவதற்கா, அலக்ஸ்சான்டரும் , நெப்போலியனும் , ஹிட்லரும் திமிரிலஉலகத்தை கொள்ளையடிக்க படையெடுத்துப் போவாங்களாம், அவங்கட பயொ டெற்றாவை நாங்கள் ஞாபகம் வைத்திருக்க வேண்டுமாம்.., என்ன கொடுமை இது...!! ^_^:)

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

...அந்தக் கணக்குப் புத்தகத்தில் கடைசி நாலு பக்கம் பூரா எல்லாக் கணக்குகளின் விடையும் இருக்கும். நாங்கள் எத்தனையாவது கணக்குக்கு என்ன விடை என்று பார்த்திட்டு செய்முறையில வருசம் மாதம் திகதி எல்லாம் போட்டு வெட்டிக் கொத்தி அவருக்கும் புரியாமல் எங்களுக்கும் புரியாமல் விடையை சரியாய் எழுதிப் போடுவம். பிளாக் போர்ட்டில செய்யச் சொல்லேக்கதான் அடி வாங்கிறது. :unsure::)

 

சேம் பிளட்.. :lol:

ஒருமுறை இப்படி செய்து, வாத்தியாரிடம் பிரம்படி வாங்கி, அந்த தழும்பும் உள்ளது! :(:huh:

 

  • கருத்துக்கள உறவுகள்

கணக்குப் போட வராததால்.. மணமகனை கழற்றிவிட்டார் மணப்பெண். உத்திரப்பிரதேசத்தில் சம்பவம். இது சிறீலங்காவிலும் எனி அடிக்கடி நிகழலாம்.  :)  :lol:

 

குறித்த நிகழ்வில்.. மணமகனைப் பார்த்து மணமகள்..15 ம் 6ம் எத்தனை என்று கேட்டுள்ளார். மணமகன் 17 என்று சொல்லவே.. மணமகனின் கல்வி அறிவின்மையை உணர்ந்து கொண்ட மணமகள்.. அவரை நிராகரித்து விட்டாள். 

 

Indian bridegroom dumped over failed maths test.

 

_81616989_81616987.jpg
Most marriages in India are arranged by the families of the bride and groom

An Indian bride has walked out of her wedding after her bridegroom-to-be failed to solve a simple maths problem, according to police in Uttar Pradesh.

 

The bride asked the groom to add 15 and six. When he replied 17, she called off the marriage.

 

http://www.bbc.co.uk/news/world-asia-india-31865479

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
ஒ/ல் கணிதம் மிகவும் அவசியம். நிழலி / ரதி குறிப்பிட்டதுபோல் 
கற்பிக்கும் முறை தெரிந்த ஆசிரியர்கள் மிகவும் குறைவு.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.