Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

6 வருட சிறையின் பின் விடுதலையான முன்னாள் போராளி விடுதலையாகி இரு நாட்களில் விபத்தில் பலி

Featured Replies

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு வருடங்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு கொடிய சித்திரவதைகளை அனுபவித்த முன்னாள் விடுதலைப்புலிப் போராளி ஒருவர் விடுதலையான இரண்டாம் நாளே விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. கிளிநொச்சியின் பூநகரியில் நேற்று முன்தினம் (10) நடந்த விபத்தில் வேலரசன் என்றழைக்கப்படும் பீலிக்ஸ் என்ற போராளியே உயிரிழந்துள்ளார். பூநகரி வலைப்பாட்டை சேர்ந்த இவர் பூநகரியில் நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். யுத்தத்தின் முடிவில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட இவர், பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு கொடூரமான சித்திரவதைகளிற்கு முகம் கொடுத்து வந்தார். இறுதியாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து கடந்த 8ம் திகதி விடுதலையானார். இரண்டுநாட்கள் மட்டுமே உறவினர்களுடன் இருந்த நிலையில் விபத்தில் பலியான துயரம் நடந்துள்ளது.

http://www.newjaffna.com/moreartical.php?newsid=38278&cat=nnews&sel=current&subcat=14

ஆழ்ந்த அஞ்சலிகள்

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

விபத்தா கொலையா??

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சியில்.. கொலைகளை விபத்தாகத்தானே செய்ய முடியும் இசை.

 

வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! 

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

400 பேரை  கனடா அழைத்து சென்ற கப்பல் மாலுமியும் (சத்தி அண்ணா) , கனடா அரசால் நாடு கடத்தப்பட்ட நிலையில் யாழ் குடாநாட்டில் வைத்து 'விபத்து' எனும் பெயரில் ஸ்ரீ லங்கா அரச புலனாய்வு பிரிவால் கொல்லப்பட்டது ஊர் அறிந்த விடயம். இன்றும் இது சம்பந்தமான வழக்கு நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் !!. இருந்தும் இரண்டுநாட்கள் மட்டுமே உறவினர்களுடன் இருந்த நிலையில் விபத்துப் பலியெடுத்ததா..? இல்லை விடுதலையளித்ததா...? என்ற ஐயமும் ஏற்படுகிறது. சமூகநிலமை அப்படியுள்ளது.  :( 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். அமைச்சரையே மரத்தோடு காரை மோத வைத்து கொன்ற ஆட்களோடு டீல் பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
விடுதலையான பின் எதுவுமே கூற மாட்டேன் என்ற வாக்குறுதியை மீறிவிட்டாரா???
அல்லது நடைப்பிணமாக விடுதலை செய்யப்பட்டாரா????
 
ஆழ்ந்த இரங்கல்கள்.
இந்த வேதனைகளை தமிழ் சமுகம் உணருமா ? இவர்கள் யாருக்காக போராட போனார்கள் ...
சில தமிழர்களினால் புனிதமான விடயங்கள் எல்லாம் மாற்றியமைக்க முயற்சிக்க படுகின்றது ...
 
சம்பந்தன் சுமந்திரன் இவர்கள் விடுதலை போராட்ட நோக்கத்தினையும் மாற்றி அந்த விடுதலையாளர்களை எல்லாம் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த முயல்கிறார்கள் ... விரைவில் இவர்கள் தமிழ் மக்களால் துரத்தி அடிக்கப்படுவர்கள் ... 
 
அரசியல்வாதி சிங்களவனுடன் கூட்டு வைக்கலாம் ஆனால் மக்கள் உண்மையை எப்பவும் மறக்கமாட்டார்கள் .
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆறு வருட, கடுமையான... சிறை வாசத்தின் பின்,
விடுதலையாகி இரண்டு நாள் கூட ஆகாத நிலையில் மரணம். (கொலை ?)
நினைக்கவே... கவலையாக உள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.