Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தமிழரசு கட்சியின் காரியாலயம் மீது குண்டுத் தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் தமிழரசு கட்சியின் காரியாலயம் மீது குண்டுத் தாக்குதல்!
[ சனிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2015, 08:43.54 PM GMT ]
bomb_yarl.jpg
யாழ் மார்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் காரியாலயம் மீது இன்று இரவு 11.20 மணிக்கு இனந்தெரியாதோரால் கைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது .

வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயற்பாடுகளை கட்சி தொண்டர்கள் மேற்கொண்டு இருந்த போது அதனை குழப்பும் நோக்கில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

 

இத்தாக்குதலானது மாவை சேனாதி ராஜா, ஸ்ரீகாந்தா ஆகியோர் கட்சி தொண்டர்களோடு தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டபோது  இடம்பெற்றது

மேலும்  சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவின் காரியாலயம்  மீதும் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலினால் எவருக்கும் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

mavai_1.jpg

mavai_2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாப வாக்குகள் பெற,

அவர்களே..... நடாத்திய  குண்டுத் தாக்குதலாக இருக்கலாம்,

புலிகள் வந்திட்டினமோ தெரியாது .சொல்ல ஏலாது .

  • கருத்துக்கள உறவுகள்

இனி என்ன பொன்னம்பலத்தார் உசுப்பேத்துவார். பொடியள் போராடப் போவீனம். மறுபடியும் முள்ளிவய்க்கால்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கூட்டமைப்பு கில்லாடிகள், சிங்கள கட்சிகள் இப்படியான வேலைகளை செய்து மாட்டிக்கொள்ள மாட்டார்கள்

இனி என்ன பொன்னம்பலத்தார் உசுப்பேத்துவார். பொடியள் போராடப் போவீனம். மறுபடியும் முள்ளிவய்க்கால்தான்.

கொடி பிடிக்க ஒட்டவா போகவேண்டியும்  வரலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக,

சந்திரநேருவும், பரராஜசிங்கமும், ரவிராஜும் கூட தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டார்கள்.

பதற்றத்தில் புலவாழிகளுக்கு யார் எதிரி என்பதே மறந்து போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

இது அனுதாப ஓட்டு பெறுவதற்காக. 

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு  முதல் நாள் குண்டடிப்பதால் என்ன விளைவு என்று முட்டாளுக்கே தெரியும். 

ஒரு சீற்றுக்காக என்னென்ன திருகுதாளங்கள் எல்லாம் செய்யுறாங்கள் கூட்டமைப்பும் அதன் வாலுகளும். 

  • கருத்துக்கள உறவுகள்

இது கூட்டமைப்புக்கு வேண்டிய மகிந்த ஆதரவு சிங்களப் படை அல்லது ஈபிடிபி கும்பலால் நடத்தப்பட்டிருக்கும். உயிரிழப்புகள்.. காயங்கள் ஏற்படாத வகையில்.. மக்களிடம் அனுதாபம் தேடும் அதே நேரத்தில் மக்களை எச்சரிப்பதற்காகவும் கூட நடத்தப்பட்டிருக்கலாம். :innocent:

டக்கிளஸ் சுமந்திரனின் உற்ற நண்பராகக் காட்சி அளித்தமை அண்மைய ஊடக சந்திப்புக்களில் அப்பட்டமாகத் தெரிந்த ஒன்று. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிநேர முயற்சிகளில் ஒன்றா...!

 


அடடா முள்ளிவாய்காலில் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டுபோது இந்த ஊடகங்கள் ஏன் ஊமையாக இருந்து!

 

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கும் காயம் ஏற்படாமல், மாவை... இராச் சாப்பாடு  சாப்பிட, உள்ளே போன  நேரம் பார்த்து...
வெளி வாசல்  கதவில் மட்டும்... ஓட்டை விழக் கூடியதாக, கூத்தமைப்பினர்  திட்டமிட்டு... இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளார்கள்.  :grin:

மா.சே -நாங்கள் எத்தனையோ  குண்டுகளை பார்த்து இருக்கிறம்.

எனது சந்தேகம் -ஆமா கரிப்பட்ட முறிப்பு ஊடறுப்பு,இயக்கச்சி தளம் மீதான தாக்குதல்,குடாரப்பு  தரை இறக்கம் எல்லாவற்றையும்  முன்னாள நிண்டு நடத்தினான சேனாபதி  தானே  இந்த சேனாதிராஜா 

மா.சே - இந்த குண்டு ஆட்களை கொல்லக்கூடியது 

எனது சந்தேகம் -குண்டு பட்டால் மனிதன் மரணமாவான் என்று கூறிய முதல் விஞ்ஞானி இவர் தான் மக்களே , ஒரு வேலை அப்துல் கலாமுக்கு இவர் தான் அணு குண்டு பற்றி பாடம் எடுத்திருப்பார் போல் உள்ளது.

மா.சே - 2 பேர  மர்மமாக வந்து குண்டு வீசினார்கள் 

எனது சந்தேகம் -குண்டு போட  வர்றவன் என்ன முகவரி அடையாள அட்டை  எண்  எல்லாம் கொடுத்து விட்டா போவான் 

மா.சே - குண்டு வீசுவதன் மூலம் எங்களது ஆதரவாளர்கள் வாக்களிக்காமல் தடுக்க முயற்சி.

எனது சந்தேகம் -ஆகா  இவர் தோறால் காரணம் ரெடி 

மா.சே-குண்டின்  தன்மை பற்றி பொலீஸ்  அதிகாரி கூறினார்.

எனது சந்தேகம் -இவர் அதை அறிந்து என்ன செய்யப்ப்போறார், அதை ஆராய்ச்சி பண்ணி நோபல் பரிசு வாங்க போகிறா 

மா.சே-இதே மாதிரியான குண்டு ஸ்ரீகாந்தா வீட்டிலும் எறியப்பட்டுள்ளது.

எனது சந்தேகம் -அது எப்படி ஒரே குண்டை திருப்பி திருப்பி எறிய முடியும் இது என்ன recycle குண்டா?  ஒருவேளை குண்டையும் தமது கட்சி கொள்கை போல்  நினைச்சிட்டார் போல் உள்ளது, 35 வருடமாக திருப்பி திருப்பி பாவிக்க. 
அதை விட  குண்டில் இலக்கம் எல்லாமா பொறிக்கப்பட்டு இருக்கும்.

 

ஏதோ  ஹிரோஷிமா நாகசாக்கி பிறகு இங்கை அணு குண்டு போட்டா மாதிரியலோ  பில்ட் அப்பூ 

 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் நிலை இப்படியாகிவிட்டதே :shocked:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது?

அரச சார்பு புலனாய்வுக் குழுக்கள் தேர்தலை குழப்ப அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையோ அல்லது அவர்களது ஆதரவாளர்களையோ அச்சுறுத்துவதற்காக இவ்வாறான கைக்குண்டுகளை வீசியிருப்பார்கள் என்றல்லவா முன்னர் எழுதுவீர்கள்.

ஆனால், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் தமக்குத்தாமே செய்ததாக எழுதுகின்றீர்கள்.

என்னே ஒரு குழப்பம் என்னே ஒரு மயக்கம்.

பொது எதிரி போய் நமக்குள்ளேயே எதிரிகளை உருவாக்கி தற்போது பொது எதிரியான சிங்களப் பேரினவாதத்தை நாம் எப்படி மறந்தோம்?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பேரினவாதமா ? சுமந்திரன் இதயத்தால் ஒன்றுபட்டிருக்கும் போது குண்டெறிவார்களா? அதுவும் சேதாரமில்லாமல். இங்கு உங்களைப் போன்ற சிலர் தான் மயக்கத்தில் உள்ளனர்.

இதன் சூத்திரதாரி கஜே கஜே கோஷ்டியை தேர்தலின் பின்னர் சிறையில் அடைக்கவேண்டும்.

என்ன இது?

அரச சார்பு புலனாய்வுக் குழுக்கள் தேர்தலை குழப்ப அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையோ அல்லது அவர்களது ஆதரவாளர்களையோ அச்சுறுத்துவதற்காக இவ்வாறான கைக்குண்டுகளை வீசியிருப்பார்கள் என்றல்லவா முன்னர் எழுதுவீர்கள்.

ஆனால், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் தமக்குத்தாமே செய்ததாக எழுதுகின்றீர்கள்.

என்னே ஒரு குழப்பம் என்னே ஒரு மயக்கம்.

பொது எதிரி போய் நமக்குள்ளேயே எதிரிகளை உருவாக்கி தற்போது பொது எதிரியான சிங்களப் பேரினவாதத்தை நாம் எப்படி மறந்தோம்?

பொது எதிரியும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. நாட்டில பிரச்சனை வந்தா இல்லாட்டி மகிந்த மாதிரி யாராவது இனவாதி வந்தா அங்கிருக்கிற சனத்தை கஷ்டப்படுத்துவான். அதை வைச்சு நாங்க இன்னும் இரண்டு சொந்தத்தை இங்க கூப்பிடலாம் விசிலடிக்கலாம் மாவீரர் நாள் கொத்து ரொட்டி போடலாம். இவை நடக்க விடாமல் செய்யும் எவரும் எமக்கு எதிரிகளே. 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது?

அரச சார்பு புலனாய்வுக் குழுக்கள் தேர்தலை குழப்ப அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையோ அல்லது அவர்களது ஆதரவாளர்களையோ அச்சுறுத்துவதற்காக இவ்வாறான கைக்குண்டுகளை வீசியிருப்பார்கள் என்றல்லவா முன்னர் எழுதுவீர்கள்.

ஆனால், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் தமக்குத்தாமே செய்ததாக எழுதுகின்றீர்கள்.

என்னே ஒரு குழப்பம் என்னே ஒரு மயக்கம்.

பொது எதிரி போய் நமக்குள்ளேயே எதிரிகளை உருவாக்கி தற்போது பொது எதிரியான சிங்களப் பேரினவாதத்தை நாம் எப்படி மறந்தோம்?

இது குழந்தைப் பிள்ளையின் விளையாட்டுக்கள் போலுள்ளது.
நிச்சயமாக இது உள் வேலையாகத்தான் இருக்கும்.
மேலே எழுஞாயிறு எழுதியதில் பல உண்மைகள் உள்ளன.
அடுத்த தேர்தலில் வேட்பாளாரகும் நோக்கில் இப்போதே பலர் வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

 

மாவை சேனாதிராஜா மிக அமைதியாக பதட்டமில்லாமல் பேசுகிறார். சந்தடிசாக்கில் புலம் பெயர்ந்தவர்களையம் ஆதரவளிக்கும் டி கேட்கிறார்.பல்கலைக்கழக மாணவர் அறிக்கை >குண்டுப்புரளி என்று மாற் மாறி அறிக்கை விடுகிறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.