Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TNAயின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, துரைரெட்ணசிங்கம் தெரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNAயின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, துரைரெட்ணசிங்கம் தெரிவு:-

23 ஆகஸ்ட் 2015


நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றிய ஏனைய கட்சிகள் தமது தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்படாதிருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பான பரிந்துரைகள், கோரிக்கைகள், விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும் தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட திரு. க. துரைரெட்ணசிங்கம் அவர்களும் தேசியப் பட்டியலுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெண் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இலங்கை நிர்வாக சேவையசை் சேர்ந்தவர்... உதவி திட்டமிடல் பணிப்பாளரான இவர். 1980களில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் புளொட் அமைப்பின் தொழற்சங்கப் பொறுப்பாளராக இருந்த வரதன் என்ற சிறீஸ்காந்தராஜாவின் மனைவியும் ஆவார்....

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123251/language/ta-IN/article.aspx

நல்ல செய்தி 

 

  • கருத்துக்கள உறவுகள்

ரெட்ணசிங்கத்தாரா???? ஹரிக்கு இப்ப சந்தோசமாக இருக்குமே.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம். ஒரு பெண் ஒரு கிழக்கிலங்கை வேட்பாளர் என்பது சரியான தெரிவே.

சுரேசுக்கு சங்குதான் போல. இனி ஆனந்தனும் ஐங்கரனும் கட்சியை அபேஸ் பண்ணிவிடுவீனம் ?

ரெட்ணசிங்கத்தாரா???? ஹரிக்கு இப்ப சந்தோசமாக இருக்குமே.

 
துரைரெட்னசிங்கத்திற்கு கொடுத்ததை விட அம்பாறைக்குஅல்லது கதிர்காமத்தம்பி குருநாதனுக்கு (ஓய்வு பெற்ற காணி ஆணையாளர் )கொடுத்திருக்க வேண்டும் ,இவர் ஆளுமையற்றவர் ,கடந்த காலத்தில் MP யாக இருந்து எதையும் செய்யாதவர் .
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு விளங்கியது சம்பந்தருக்கு விளங்கலையே

 

 
துரைரெட்னசிங்கத்திற்கு கொடுத்ததை விட அம்பாறைக்குஅல்லது கதிர்காமத்தம்பி குருநாதனுக்கு (ஓய்வு பெற்ற காணி ஆணையாளர் )கொடுத்திருக்க வேண்டும் ,இவர் ஆளுமையற்றவர் ,கடந்த காலத்தில் MP யாக இருந்து எதையும் செய்யாதவர் .

இது தான் அரசியல் ஹரி.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம். ஒரு பெண் ஒரு கிழக்கிலங்கை வேட்பாளர் என்பது சரியான தெரிவே.

சுரேசுக்கு சங்குதான் போல. இனி ஆனந்தனும் ஐங்கரனும் கட்சியை அபேஸ் பண்ணிவிடுவீனம் ?

தேர்தலில் தோற்றவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடம் கொடுக்கப்படக் கூடாது என்றவர்களும், தேசியப்பட்டியலில் பெயர் இல்லாமையால் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடம் இல்லை என்றவர்களும் இலங்கை அரசியலிலும் சரி சம் சும் இன் அரசியலிலும் சரி ப பாக்களே. பேசாமல் விரலைச் சூப்பிக் கொண்டிருங்கள். 

2010 தேர்தலில் ஒட்டுக்குழு டக்குவின் கும்பல் மூன்று ஆசனங்களை கைப்பற்றியது! .. ஆனால்

இத்தேர்தலில் சித்தார்த்தனின் கூட்டமைப்பு உள்வாங்கலினால், ஒட்டுக்குழு சீட்டுக்கள் பிரிக்கப்பட்டுள்ளது! டக்குக்கு ஒரு சீட் மட்டும் கிடைத்து! சித்தருக்கு இன்னொன்று1

இப்போது சாந்தியை, சம்பந்தர்/சுமந்திரன்கள் தெரிவு செய்து ஒட்டுக்கும்பலுக்கு மூன்று சீட்டுக்களை வழங்கி மீண்டும் கவுரவித்துள்ளனர்!

ஜனநாயகம்!

Edited by no fire zone

  • கருத்துக்கள உறவுகள்

மீரா சொல்வதில் நியாயமிருக்கிறது.

இது கேடு கெட்ட அரசியலே. ஆனாலும் இருப்பதில் இந்த தேர்வுகள் பாதகமில்லை என்றே படுகிறது. 

ஹரி - கிழக்கில் ஒரு காத்திரமான தலைவர் (சம்பந்தன், ரவிராஜ், சுமந்திரன் போல) உருவாகவேண்டிய தேவை இருக்கிறது. புலிகள் தங்கேஸ்வரி, யோகேஸ்வரன் போன்ற விசுக்கோத்துகளை தம் கைப்பாவைகளாய் அனுப்பி கிழக்கில் ஒரு தலைமைத்துவ வெற்றிடத்தை உருவாக்கி வைத்துளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல செய்தி 

 

இதே சாந்தி விடுதலைப்புலி ஆதரவாளரின் தூரத்து உறவாக இருந்தால் நல்ல செய்தியாக இனிக்குமா?

முயல் குட்டியள் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியிலை வருகினம்......:grin:

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு மக்கள் முன் நின்று சேவையாற்ற யதீந்திராவுக்கு வழங்கியிருக்கலாம் வயது போனவர்களால் திருமலையில் ஒன்றும் நடக்க போவது இல்லை. இங்கு உள்ள பிரச்சனைகளுக்கு துடிப்புள்ள இளவயதினரே தேவை!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம், இப் பதவிகளை....
முஸ்லீம்களுக்கோ, சிங்களவனுக்கோ கொடுக்கவில்லை.
சம்பந்தன்... திருந்தி விட்டாரா? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் தன்னைப் போல ஆக்களை தெரிவு செய்யும் அதே பழைய பல்லவியும்.... ஒரு ஒட்டுக்குழுவின் அழுத்தமும்..  இத்தெரிவில் தெரிகிறது. சிங்களவன்.. ஆளுக்கு குறைஞ்சது.. ஒரு பேராசிரியரை தெரிவு செய்திருக்கிறான். எங்கடையள்..... ஒட்டுக்குழுக்களை திருப்திப்படுத்துவதிலும்... தங்கட ஆக்களை திருப்திப்படுத்துவதிலும் தெரிவுகளை வைக்கிறார்கள். அபிவிருத்தியை அதிகம் எதிர்பார்த்து நிற்கும் அம்பாறை மாவட்டம்.. 80,000 விதவைகளைக் கொண்ட வடக்குக் கிழக்கிற்கு.. எத்தனை தமிழ் பெண் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உளர். அவர்களின் குறைகளை சொல்ல நிவர்த்தி செய்ய அதிக பெண்கள் பிரதிநிதித்துவம் தேவை.

இவர்கள் இருவரையும் பெண்களாகப் பெண்களின் குறைந்த பட்ச அபிவிருத்தி நோக்கி நியமிச்சிருக்கலாம்.  மீள ஏமாற்றப்பட்டிருக்கிறது அம்பாறை. சென்ற முறை சம்பந்தனின் மொக்குத் தெரிவு பியசேனவிடம் பெற்ற அனுபவத்தில் சம்பந்தன் பையன் வெருட்டுட்டார் போல. புளொட் ஒட்டுக்குழுவில் இருந்து.. சம்பந்தன் பையனுக்கு ஒரு மிரட்சி இருக்குது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

திருமலையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு மக்கள் முன் நின்று சேவையாற்ற யதீந்திராவுக்கு வழங்கியிருக்கலாம் வயது போனவர்களால் திருமலையில் ஒன்றும் நடக்க போவது இல்லை. இங்கு உள்ள பிரச்சனைகளுக்கு துடிப்புள்ள இளவயதினரே தேவை!

புளொட், ரெலோ ஆகிய இயக்கங்களின் தெரிவாக யதீந்திரா திருகோணமலையில் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால், இதனை சம்பந்தர் அவ்வளவாக இரசிக்கவில்லை. அதாவது, அவரே எதிர்பார்க்காத தெரிவாக யதீந்திராவே இருந்திருக்கின்றார். (என்னைப் பொறுத்த வரையில் யதீந்திரா போன்றவர்கள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும். அவர் அரசியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர். நல்ல ஆங்கில அறிவு உள்ளவர்.)

இதனால், திருகோணமலையில் தமிழரசுக் கட்சியினர் யதீந்திராவுக்கு ஆதரவாக வேலை செய்யாமல் அவரது தந்தையார் ஒரு சிங்களவர். ஆகையால் இவரை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தால் அம்பாறையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவான இன்னொரு பியசேனவாக உருவெடுப்பார் என்று கடுமையாக பிரச்சாரம் செய்திருக்கின்றனர். இதற்கு துரைரட்ணசிங்கமும் உடந்தை என்பதுதான் கவலைக்கு உரிய விடயம்.

நான் அறிந்த வரையில் சாந்தினி சிறீஸ்கந்தராசாவுக்கும் துரைரட்ணசிங்கத்துக்கும் வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனம் சுழற்சி முறையாகவே வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் சாந்தினி சிறீஸ்கந்தராசாவை வேட்பாளராக நிறுத்தியது தமிழரசுக் கட்சி. புளொட் அல்ல. புளொட் சார்பில் போட்டியிட்ட மாகாண சபை உறுப்பினராக இருக்கும் பவன் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உள்ளார்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் கூட்டமைப்பில் இருந்து கொண்டு தலைமைக்கு எப்பவும் குடைச்சல் கொடுத்தவர். அதனால் அவருக்கு பதவிகொடுக்க சும்சும் கும்பல் விரும்பாது.அவருக்கு இதோட சங்குதான். அத்தோடு தாங்கள் தூக்கி எறிஞ்ச அனந்தியை மீண்டும் உள்ளே கொண்டு வர முயற்சித்த விடயத்திலும் கடுப்பு இருக்கிறது.எது எப்படியோ மக்களால் நிராகரிப்பட்டவருக்கு பதவி கொடுப்பது பொருத்தமானதல்ல. கடந்த மாகாணசபைத்தேர்தலில் தோல்வியடைந்த சங்கரியார் தேசியப்பட்டியல் மூலம் பதவிக்கு வர முயற்சித்தும் கொடுக்கப்படாததல்தான் இம்முறை தனித்துக் கேட்டவர்.

 

 
துரைரெட்னசிங்கத்திற்கு கொடுத்ததை விட அம்பாறைக்குஅல்லது கதிர்காமத்தம்பி குருநாதனுக்கு (ஓய்வு பெற்ற காணி ஆணையாளர் )கொடுத்திருக்க வேண்டும் ,இவர் ஆளுமையற்றவர் ,கடந்த காலத்தில் MP யாக இருந்து எதையும் செய்யாதவர் .

மற்றவர்கள் எதைச்செய்து கிழித்தவர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் கே. துரைரட்ணசிங்கம் (திருகோணமலை), சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா(வன்னி) ஆகிய இருவருமே தேசிய பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கம் ஓய்வுபெற்ற அதிபராவார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா இலங்கை நிர்வாக சேவையில் திட்டமிடல் பணிப்பாளராக சேவையாற்றியுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர்கள் இருவரும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamil.srilankamirror.com/news/item/4094-2015-08-24-09-49-36

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியடைந்த இருவருக்கு TNA தேசியப் பட்டியல் உறுப்புரிமை வழங்கியது

http://www.tamil.srilankamirror.com/news/item/4094-2015-08-24-09-49-36

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர்கள் இருவரும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தோல்வியே வெற்றிக்கு முதல் படி.....என்று காந்தியும்,ராமரும் ,மகிந்தாவும் சொல்லியிரிக்கினமாம்...:)

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சம் சும் சன நாய் அகத்தில் சகஜமப்பா. கேட்டா.. பரராஜசிங்கமும் தானே எண்டுவினம். அந்தாள் மக்களுக்கு செய்ததில் 0.00001% கூட உதுகள் செய்தறியாதுக்கள். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.