Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டம் நிராகரிப்பு! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைக்கும் திட்டம் நிராகரிப்பு! 
[Thursday 2015-12-31 07:00]
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் எதுவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. அவ்வாறானதொரு பாலத்தை அமைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் எதுவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. அவ்வாறானதொரு பாலத்தை அமைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

   

பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார். நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டிருந்த உதய கம்பன்பில, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராமர் பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே அமைச்சர் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருந்தார்.

இராமர் பாலத்தை மீண்டும் அமைக்கப் போவதாக இந்திய அரசியல்வாதிகளே கூறியுள்ளனர். இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் எதுவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. தனது இந்திய விஜயத்தின் போது இது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடைபெறவில்லையென பிரதமர் ஏற்கனவே பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். அது மாத்திரமன்றி இரு நாட்டுக்கும் இடையில் பாலம் அமைக்கவேண்டிய தேவை இல்லையென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவின் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சேது சமுத்திரத்திட்டத்தை ஆரம்பித்தனர். அத்திட்டம் உயிர் பல்வகைமைக்கும், இயற்கைக்கும் பாதிப்பாக அமையும் என்பதால் அதனை கைவிட்டனர். அதேபோல இந்த இராமர் பாலத் திட்டமும் கைவிடப்பட்டுவிடும் என்றார்.

அரசியல் ரீதியாகத் தொங்கிக் கொள்வதற்கு எந்தவிடயமும் இல்லாதிருக்கும் எதிர்க்கட்சியினர் இந்திய விரோத பிரசாரங்களை முன்னெடுத்து மீண்டும் இனவாதத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=148203&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாலம் அமைக்கப்பட்டால் தேவையற்ற குப்பைகள்தான் அதிகம் வந்து சேரும். இந்தபாலம் ஒருபோதும் அமைக்கப்படவும் மாட்டாது. அமைக்கப்படவுங்கூடாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாலி, நீங்கள் எதை குப்பை என்று சொல்கிறீர்கள். தமிழகம் உங்களுக்கு குப்பை என்று தோன்றுகிறதோ. இந்த பாலம் அமைந்தால் எவ்வளவு நன்மை இலங்கை  தமிழர்களுக்கு என்று கணக்கிட முடியாது. வேண்டாம் என்று வரும் ஸ்ரீதேவியை மூதிதேவி என்று சொன்னார்களாம் சில அதிமேதாவிகள். அது போல் உள்ளது உங்கள் கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, kanna123 said:

வாலி, நீங்கள் எதை குப்பை என்று சொல்கிறீர்கள். தமிழகம் உங்களுக்கு குப்பை என்று தோன்றுகிறதோ. இந்த பாலம் அமைந்தால் எவ்வளவு நன்மை இலங்கை  தமிழர்களுக்கு என்று கணக்கிட முடியாது. வேண்டாம் என்று வரும் ஸ்ரீதேவியை மூதிதேவி என்று சொன்னார்களாம் சில அதிமேதாவிகள். அது போல் உள்ளது உங்கள் கருத்து. 

பாலம் அமைக்கப்பட்டால் தமிழகம் ஓடோடி வந்து உதவிசெய்திடுமாக்கும்! வடபகுதியில் எமது மீனவர்களின் வளங்களை சூறையாடும் (இது ஓர் உதாரணம் மட்டுமே) தமிழகத்தினால் நன்மைகிடைக்கும் என்பது மிகச் சிறந்த வேடிக்கை. மீண்டும் சொல்கின்றேன் இப்பாலம் அமைக்கப்பட்டால் ஏற்படும் நன்மைகளைவிட இறக்குமதிசெய்யப்படும் குப்பைகளே அதிகமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்

பாலம் அமைப்பது டில்லியின் பிடியில் இலங்கைத் தீவை வைத்திருக்கவே அன்றி, வேறெதற்குமில்லை. இந்த வரிசையில் கடலடியில் மின் தடம் பதிக்கும் முயற்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பாலம் அமைக்கப்படுவது நல்லது... எம் தாயகத்துக்கு நல்லதோ இல்லையோ சிங்களவருக்கு............. இப்பவே அவை எதிர்ப்புப் போலை

Edited by மீனா

மீண்டும் அந்த பாலம் வெறும் கதையாகி போனதே? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, வாலி said:

பாலம் அமைக்கப்பட்டால் தமிழகம் ஓடோடி வந்து உதவிசெய்திடுமாக்கும்! வடபகுதியில் எமது மீனவர்களின் வளங்களை சூறையாடும் (இது ஓர் உதாரணம் மட்டுமே) தமிழகத்தினால் நன்மைகிடைக்கும் என்பது மிகச் சிறந்த வேடிக்கை. மீண்டும் சொல்கின்றேன் இப்பாலம் அமைக்கப்பட்டால் ஏற்படும் நன்மைகளைவிட இறக்குமதிசெய்யப்படும் குப்பைகளே அதிகமாகும். 

வாலி நீங்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகம் ஒரு தனி நாடு அல்ல. சோழ அரசை போல் , பாண்டிய அரசை போல் ஓடோடி வந்து ஈழத்து உறவுகளை காப்பாற்ற. நாங்களே இந்திய குடியரசின் கீழ் உள்ள பிரஜைகள். எங்களால் முடிந்ததை செய்தோம். அவ்வளவே. இந்த பாலம் அமைந்தால் என்ன பலன்கள்  கிடைக்கும் என்று பார்போம்.

1. தமிழகம் மற்றும் மற்ற பிற மாநிலங்களில் இருந்து இலங்கைக்கு இலகுவாக சுற்றுலா செல்லலாம்  மற்றும் ஈழத்து தமிழர்கள் இலகுவாக தமிழகம் மற்றும் இந்தியாவிற்கு சுற்றுலா செல்லலாம்.
2. தென் தமிழகத்தின் வாணிப பொருட்கள் வட  இலங்கையிலும் , வட இலங்கையின் வாணிப பொருட்கள் தமிழகத்திலும் இலகுவாக வர்த்தகம் செய்யலாம் 
3. இதனால் தமிழகத்தின் பொருளாதாரம் முன்னேறுமா இல்லையோ,வட இலங்கையின் பொருளாதாரம் கண்டிப்பாக முன்னேறும். 
4. எதற்கும் கொழும்புவை நாடி செல்ல அவசியமில்லை. ஈழ தமிழர்களின் தேவைகள் தமிழகத்தின் மூலமாகவே கிடைக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, kanna123 said:

வாலி நீங்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகம் ஒரு தனி நாடு அல்ல. சோழ அரசை போல் , பாண்டிய அரசை போல் ஓடோடி வந்து ஈழத்து உறவுகளை காப்பாற்ற. நாங்களே இந்திய குடியரசின் கீழ் உள்ள பிரஜைகள். எங்களால் முடிந்ததை செய்தோம். அவ்வளவே. இந்த பாலம் அமைந்தால் என்ன பலன்கள்  கிடைக்கும் என்று பார்போம்.

1. தமிழகம் மற்றும் மற்ற பிற மாநிலங்களில் இருந்து இலங்கைக்கு இலகுவாக சுற்றுலா செல்லலாம்  மற்றும் ஈழத்து தமிழர்கள் இலகுவாக தமிழகம் மற்றும் இந்தியாவிற்கு சுற்றுலா செல்லலாம்.
2. தென் தமிழகத்தின் வாணிப பொருட்கள் வட  இலங்கையிலும் , வட இலங்கையின் வாணிப பொருட்கள் தமிழகத்திலும் இலகுவாக வர்த்தகம் செய்யலாம் 
3. இதனால் தமிழகத்தின் பொருளாதாரம் முன்னேறுமா இல்லையோ,வட இலங்கையின் பொருளாதாரம் கண்டிப்பாக முன்னேறும். 
4. எதற்கும் கொழும்புவை நாடி செல்ல அவசியமில்லை. ஈழ தமிழர்களின் தேவைகள் தமிழகத்தின் மூலமாகவே கிடைக்க நிறைய வாய்ப்புகள் உண்டு. 

கண்ணா,  நீங்கள் எழுதிய பதில் நிதானமான உண்மையை ஏற்றுக்கொண்ட பதில் என்பதால் மிக்க மகிழ்வுறுகின்றேன்.

நீங்கள் பல காரணங்களை அடுக்கினாலும், இந்தப் பாலம் அமைக்கப்படவேண்டும் என்ற நோக்கம் மேலே இசை ஸார் குறிப்பிட்டபடி இந்து பெருங்கடல் பிராந்தியத்தில் தனது பிடிக்குள் இலங்கையை வைத்திருக்கவேண்டுமென்பதே தவிர வேறொன்றில்லை. இந்தப் பாலம் அமைப்பதைவிட காங்கேசன்துறை துறைமுகத்தினை விஸ்தரித்து சர்வதேச தரம் வாய்ந்ததுறைமுகம் ஆக்குவதன் மூலம் மிக அதிக பொருளாதார நன்மைகளும் வேலைவாய்ப்பும் உள்ளூர் மக்களுக்குக் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடி இலங்கையும்,ஈழமும் தப்பிச்சுது

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

அப்பாடி இலங்கையும்,ஈழமும் தப்பிச்சுது

ஆனால் சிங்கள தீவினிற்கு வேறு பலவழிகளில் பாலம் அமைக்கப்பட்டுவிட்டது,:cool:

1 hour ago, putthan said:

ஆனால் சிங்கள தீவினிற்கு வேறு பலவழிகளில் பாலம் அமைக்கப்பட்டுவிட்டது,:cool:

விஜய்க்கு பெண் குடுத்து, ரம்பாவை பெண் எடுத்ததைத்தானே சொல்லுறீங்கள் புத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஜீவன் சிவா said:

விஜய்க்கு பெண் குடுத்து, ரம்பாவை பெண் எடுத்ததைத்தானே சொல்லுறீங்கள் புத்தன்.

அப்படியும் எடுக்க‌லாம், யாழில் இந்திய துணைதூதரகம்,ராமர் ஆஞ்யநேயர் கோவில்கள் இப்படியும் எடுக்க‌லாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபோதும் இது நடக்ககூடதூ 

  • கருத்துக்கள உறவுகள்

நுகர்வு சந்தை முதலாம்தர நாடுகளை தவிர்த்து மற்றைய அனைவருக்கும்
பாதிப்பை மட்டுமே கொடுக்க கூடியது என்றாலும்
இன்றைய உலகில் தவிர்க்க முடியாத அளவில்
மருதன்கேணி எனும் கிராமத்தை பான்டீன் சம்பூ ஆயில் அன் ஒலேப் முக க்ரீம்
சைனா நூடில்ஸ் என்று எவளவோ அடுக்கி போகலாம்.

 

நுகர்வு சந்தையை இனி எதிர்க்க முடியாது ....
எமக்கு சாதகம் அக்க முடியும்

 

இந்தியா ஆ என்றாலே எதையோ அள்ளபோகிறது என்றுதான் பொருள்
அதை தடுக்க முடியாது.
ஆனால் எமக்கு சாதகமாக அதை ஆக்கவேண்டும்.

 

தற்போதைய ஒட்டுண்ணி தமிழ் தலைமை அழிந்த பின்பு ஒரு தொலைநோக்கு எண்ணம்கொண்ட சுதந்திர தலைமை இருந்தால் ........
ஈழத்தை கொண்டு சென்று டில்லியில் ஓட்டினாலும் ......... அதையும் சாதகம் ஆக்கி கொள்ளலாம்

தமிழக உறவுகளுக்கு சற்று கசப்பாக இருந்தாலும் தமிழர்கள் என்ற ரீதியில் எங்களுக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தாலும் வாழ்க்கை முறையில் இருவருக்கும் பெரிய இடைவெளி இருக்கு .

யார் திறம் என்பது அல்ல பிரச்சனை நடைமுறை வேறுபாடுதான் பிரச்சனை .

நேற்று சக்தி டி வியில் புத்தாண்டு நிகழ்சிகள் கேட்டுக்கொண்டு இருந்தேன் .நேயர்களும் தொலைபேசியில் நேரடியாக பங்குபற்றினார்கள் .மக்களின் இன்றைய அத்தியாவசிய தேவைகள் ,அரசியல் ,பொருளாதாரம் ,சுற்று சூழல் மாசுபடுதல் ,கல்வியின் முக்கியத்துவம் இப்படியே போய்க்கொண்டிருந்தது .நிகழ்சியை பார்க்க மிக சந்தோசமாகவும் பெருமையாகவும் இருந்தது.

இன்று காலை புத்தாண்டு நிகழ்சிகள் பார்க்க தமிழக சானல்கள் பத்திற்கு மேற்பட்டதை சனல் மாற்றி  மாற்றி  பார்க்கின்றேன் அனைத்தும் சினிமா சினிமா சினிமா .சினிமா வேண்டாம் என்று சொல்லவில்லை அது வாழ்வின் ஒரு சிறிய பொழுதுபோக்கு மட்டுமே சினிமாவே வாழ்க்கையில்லை .

பாலம் போட்டால் பிரச்சனைகள் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் தான் அதிகம் .

இந்திய ஆதிக்கம் இலங்கையில் தவிர்க்கமுடியாத ஒருவிடயம் .உலக அரசியலே அதுதான் .கியூபாவை கேட்டால் சொல்லுவார்கள் தாங்கள் அமெரிக்காவிற்கு பக்கத்தில் இருப்பதால் அதன் தாக்கம் பற்றி .

இபோது தமிழன் ஒரு பொருளை 100/= விற்பான் 

நாளை முஸ்லிம் அதே பொருளை 80/= விற்பான் ,அப்பொழுது தமிழன் தந்து வாழ்வாதாரம் இழந்து முஸ்லிமிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவான். அப்பொழுது முஸ்லிம் தமிழனின் நிலம் ,மதம் கலாச்சாரம் மூ ன் றை யும் பெற்றுவிட்டு தமிழ் மக்களுக்கு கஞ்சி  உத்துவான்.

அனால் இந்தியாவுடன் பாலம் அமைத்து வர்த்தகம் செய்தால் 

அதே பொருளை சென்னை சில்க்கும் ,     RMKVகாரனும் 50/= விற்பான் அப்பொழுது தமிழன் முஸ்லிமிடம் கையேந்த வேண்டிய நிலை வராது. 

அதே போல் அந்த அரபிய முஸ்லிம்கலின் வியாபாரத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் இல்லை அந்த அல்லாவே வந்தாலும் காப்பற்ற  முடியாது.

இதிலிருந்து விளங்க வேண்டும் பாலம் அமைப்பது நல்லமா இல்லையா என்று .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலம் போடுவது நடக்காத விடயம்.

பூகோளரீதியாக பால விடயத்தை கவனித்தால்.... சிங்களத்துக்கு இது பாரதூரமே தவிர நன்மை எதுவுமேயில்லை.

பாரதியார்  சொல்லியதை  இப்போதுதான்  நடைமுறைப்படுத்தப்  போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 01/01/2016 at 11:34 PM, arjun said:

தமிழக உறவுகளுக்கு சற்று கசப்பாக இருந்தாலும் தமிழர்கள் என்ற ரீதியில் எங்களுக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தாலும் வாழ்க்கை முறையில் இருவருக்கும் பெரிய இடைவெளி இருக்கு .

யார் திறம் என்பது அல்ல பிரச்சனை நடைமுறை வேறுபாடுதான் பிரச்சனை .

நேற்று சக்தி டி வியில் புத்தாண்டு நிகழ்சிகள் கேட்டுக்கொண்டு இருந்தேன் .நேயர்களும் தொலைபேசியில் நேரடியாக பங்குபற்றினார்கள் .மக்களின் இன்றைய அத்தியாவசிய தேவைகள் ,அரசியல் ,பொருளாதாரம் ,சுற்று சூழல் மாசுபடுதல் ,கல்வியின் முக்கியத்துவம் இப்படியே போய்க்கொண்டிருந்தது .நிகழ்சியை பார்க்க மிக சந்தோசமாகவும் பெருமையாகவும் இருந்தது.

இன்று காலை புத்தாண்டு நிகழ்சிகள் பார்க்க தமிழக சானல்கள் பத்திற்கு மேற்பட்டதை சனல் மாற்றி  மாற்றி  பார்க்கின்றேன் அனைத்தும் சினிமா சினிமா சினிமா .சினிமா வேண்டாம் என்று சொல்லவில்லை அது வாழ்வின் ஒரு சிறிய பொழுதுபோக்கு மட்டுமே சினிமாவே வாழ்க்கையில்லை .

பாலம் போட்டால் பிரச்சனைகள் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் தான் அதிகம் .

இந்திய ஆதிக்கம் இலங்கையில் தவிர்க்கமுடியாத ஒருவிடயம் .உலக அரசியலே அதுதான் .கியூபாவை கேட்டால் சொல்லுவார்கள் தாங்கள் அமெரிக்காவிற்கு பக்கத்தில் இருப்பதால் அதன் தாக்கம் பற்றி .

அய்யா அர்ஜுனரே தமிழக மக்கள் சினிமா பார்த்தாலும், சினிமா துறையினருக்கு வாக்குகள் அளித்தாலும் முன்னேற்றம் அடைந்து கொண்டு தான் இருக்கிறார்கள். வாழ்க்கை ரீதியில் அப்படி என்ன வித்தியாசம் நீங்கள் கண்டீர் என்று புரியவில்லை. ஒரு சில காட்சி ஊடகங்களை பார்த்து விட்டு எங்களுக்கும் உங்களுக்கும் சிந்தனை ஓட்டம்  வேறு என்று சொல்வது ஏற்று கொள்ள முடியாதது. அப்படியே இருந்தாலும் பாலம் போடுவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம். 

நினைத்து பாருங்கள் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு மதுரைக்கு  அல்லது  இரவு 9 மணிக்கு சென்னைக்கு வரும் முடியம் என்றால் எவ்வளவு பெரிய பொருளாதார வளர்ச்சி பெற முடியும். இவை எல்லாம் வேண்டாம் என்றால் சரி விட்டு விடுங்கள்.  இந்த பால திட்டத்தை முதலில் சொன்னவர் ரணில் விக்ரமசிங்கே தானே. 

சில பேர் சொல்கிறார்கள் இந்த பாலத்தால் இந்தியாவின் இறுக்கம் இலங்கையின் மேல் கூடும் என்று. அப்படி என்றால் இப்பொழுது இறுக்கம் இல்லை என்று சொல்ல வருகிறார்களோ. பாலம் இருக்கிறதோ இல்லையோ இலங்கை எப்பொழுதும் ஒரு முழு சுதந்திர நாடாக இருக்கவே முடியாது. இந்தியாவின் ஒரு மறைமுக ஆதிக்கம் எப்பொழுதும் இருக்கும். 

Edited by kanna123

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.