Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனியான முஸ்லிம் மாகாணமொன்று அவசியம் - பசீர் சேகுதாவூத்

Featured Replies

தனியான முஸ்லிம் மாகாணமொன்று அவசியம் - பசீர் சேகுதாவூத்

 
தனியான முஸ்லிம் மாகாணமொன்று அவசியம் - பசீர் சேகுதாவூத்



தனியான முஸ்லிம் மாகாணமொன்று தேவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் நடைபெற்ற அரசியல் சாசனத்திற்கான கருத்துக் கோரும் நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ் மக்கள் சுயாட்சி அதிகாரங்களை கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கை மீள இணைத்தல் மற்றும் சுயாட்சி அதிகாரங்கள் வழங்குதல் குறித்த கோரிக்கைகளை தமிழர்கள் இன்னமும் கைவிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


இதேபோன்று முஸ்லிம்களும் தாயக கொள்கைகளை கைவிட முடியாது எனவும் தனி மாகாணமொன்றின் மூலமே முஸ்லிம்களின் அபிலாஸைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


தனியான முஸ்லிம் அடையாளம் என்பது பாராளுமன்ற ஆசனமோ அல்லது சில அமைச்சுப்பதவிகளோ அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.


முஸ்லிம் மாகாணத்திற்கான கோரிக்கையை கைவிட்டுவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் ஸ்தாபகத் தலைவர் ஏ.எச்.எம். அஸ்ரப்பும் முஸ்லிம் மாகாண கோரிக்கையை அங்கீகரித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129261/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்

அஸ்ரப் தனி முஸ்லிம் மாகாணத்தைக் கோரவில்லை – அமான் அஸ்ரப்

 
அஸ்ரப் தனி முஸ்லிம் மாகாணத்தைக் கோரவில்லை – அமான் அஸ்ரப்




ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் தனி முஸ்லிம் மாகாணத்தைக் கோரவில்லை என மர்ஹூம் அஸ்ரப்பின் புதல்வர் அமான் அஸ்ரப் தெரிவித்துள்ளார்.


தமது தந்தை எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய இலங்கை என்ற கோட்பட்டை மீறவில்லை எனவும், பிளவடையாத இலங்கைக்குள் தீர்வுத் திட்டங்கள் எட்டப்பட வேண்டுமென விரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


தனிப்பட்ட நலன்களுக்காக வரலாற்று உண்மைகளை மாற்றியமைக்க வேண்டாம் என அமான், சேகுதாவூத்திடம் கடிதம் ஊடாக நேரடியாகவே கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ் மக்களுக்கு தனி நாடு வழங்கப்பட்டால் முஸ்லிம்களுக்கும்அவ்வாறான ஓர் அலகு வழங்கப்பட வேண்டுமென அஸ்ரப் ஆரம்ப காலங்களில் கோரிய போதிலும் பின்னர் அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129262/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு தமிழர்களுக்கு ஏதோ வரப்போவது மூக்கில் மணக்கத்தொடங்கியிருக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைவாழ் இஸ்லாமிய அரசியல்வாதிகள் எப்போதும் தமிழருக்கான தீர்வு என்று கதைவந்தால், புலிகள் காலமாயினும், அதன் பின்னான காரணமாயினும் சரி உடனே புறப்பட்டுவிடுவார்கள். இலங்கைத்தீவிலே  சிங்களம் பிரித்தாண்டு தனது திட்டத்தைச் சிறப்பாக நகர்த்த இவர்கள் அவர்களுக்கு உதவியவாறு இலக்கைத்தீவு முழுவதும் வாழ்கின்றார்கள். வடகிழக்கிலே ஒரு தீர்வு வந்துவிடாதென்பததற்கான யெயவர்த்னா அரசால் தூண்டிவிடப்பட்டகோசமே தென்கிழக்கலகு. 


ஒன்றாக வடம்பித்து வேற்றுமையில் ஒற்றுமைகாண்பதே இன்றுள்ள தேவை. அதேவேளை இஸ்லாமியச் சந்தர்பவாத அரசியல்வாதிகளுக்குப் பலியாகாமல் சரியான திசைநோக்கிச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்மொழிபேசும் தரப்பிற்கு வாய்ப்பாகும். எனவே முதலில் ஒரு அலகை அடைந்து எமது புரிந்துணர்வோடு ஒவ்வொருவரது தனித்துவங்களை அங்கீகரித்து வாழ்வதொன்றே எமக்கு நன்மை பயக்கும் என்பதைக் கருத்திலே கொள்ளவேண்டும். முதலில் ஒரு அலகை அடைவதற்கு எமது கடந்தகால செயற்பாடுகளை சுயவிமர்சனம் செய்தவாறு ஒன்றிணைவதோடு, எமக்காக ஒன்றிணைந்து குரல்கொடுக்கவும் முன்வரவேண்டியது அவசியமாகும். இல்லையேல், எங்கள் இருபகுதியின் வாய்க்குள்ளும் வாய்பனை வைத்துவிட்டுப் புதைத்துவிடுவார்கள் என்பதை நினைவிருத்திக்கொள்ளவது நன்மைபயக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முஸ்லீம்களுக்கு தனி மாகாணம் அமைக்கனும் என்றால்.. மொத்த இலங்கையையும் மாகாணம் ஆக்கி இவர்களிடம் கொடுக்க வேண்டியான். ஏனெனில் அவர்கள் எல்லா இடமும் வாழ்கிறார்கள். வடக்குக் கிழக்கிற்கு வெளியில் தான் மிக அதிகமாக செறிவாக வாழ்கிறார்கள்.

முஸ்லீம்களுக்கு தனி மாகாணம் அமையுமானால்.. அமைய வேண்டும் என்றால்.. மலையகத்தில் உள்ள தமிழ் மக்களுக்கும் தனியான மாகாணம்.. அரசியல் உரிமை.. நில உரிமை.. சமூக.. மத உரிமைகளுடன் வழங்கப்பட வேண்டும். tw_warning:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தரலாம், ஷரியா சட்டம் அமுல் படுத்தவேண்டும், சரியா? என்று சிங்களவர்கள் வம்படி கமெண்ட் போட்டுள்ளார்கள், ஆங்கில பத்திரிகையில்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

தனியான முஸ்லிம் மாகாணமொன்று அவசியம் - பசீர் சேகுதாவூத்

இப்ப இருக்கிற பிரச்சனைக்கே சிங்களம் துண்டைக்காணம் துணியைக்காணம் எண்டு ஓடித்திரியுது......வெக்கை வேகாரிலை திரியுது.....இதுக்கை இவர் ஒருத்தர்.....காத்தான்குடி ஜெயந்திபுரவுக்கு கிட்டத்தான் இருக்கு tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கிற மாகாணத்தையும் எடுத்துக் கொண்டு...கொஞ்ச காலத்தின் பின்னர் திரும்பவம் பழைய இடங்களுக்கு 'உரிமை' கோருவார்கள்!

தாங்கள் துரத்தப் பட்டோம் என்று சொல்லி...! ( உதாரணம் 'வட மாகாணம்)!

அடுத்தது இவர்களின் வளர்ச்சி வீதம் போகிற போக்கில்... ஒரு மாகாணம் விரைவில் தன்னிறைவு கண்டு விடும்!

  • கருத்துக்கள உறவுகள்

நாம் என்ன செய்தாலும், ஒன்றில் கவனமாக இருக்க வேண்டும்.

 

எமக்கு ஒரு தீர்வு கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால், அதில் முஸ்லீம்களுக்கு ஏதாவது அதிகாரம் இருக்க வேண்டும். தனி முஸ்லீம் மாவட்டமோ, கிராமமோ அல்லது கட்டிடமாகவோ கூட து இருக்கலாம். ஏன் சொல்கிறேன் என்றால், இன்றுவரை சிங்களவனிடமிருந்து விடுதலைபெற நாம் போறாடுவதுபோல, நாளை எங்களிடமிருந்து விடுதலைபெற முஸ்லீம்கள் போராட வெளிக்கிடக் கூடாது. அதனால் பிரிக்கிற அப்பத்தை பாத்துப் பிரியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

உப்படித்தான் அண்ணே காந்தியும் ஜின்னாவுக்கு பயந்து தொலைஞ்சு போ என்று சைவமும் தமிழும் தளைத்திருந்த சிந்துவெளி உள்ளடங்க பாரம்பரிய இந்திய உபகண்டப் பூமியை.. பாகிஸ்தான் ஆக்கி முஸ்லிம்களிடம் கையளித்தார்.  கடைசியில... அதுவே எதிரியுமானது.. ஹிந்தியாவை நம்மதியாக வாழவும் விடுகுதில்லை.

கடைசில்.. ஈழப் போராட்டத்தில் தமிழனை அழிக்கவும் கப்பல் கப்பலாக ஆயுதம் கொடுத்துதவியது பாகிஸ்தான். எந்த ஒரு இலங்கை வாழ் முஸ்லீமாவது தமிழர்கள் எங்கள் சகோதர்கள்.. அவர்களை அழிக்க ஆயுதம் கொடுக்க வேண்டாம் என்று கூறினார்களா... இல்லையே. 2009 இல் மட்டுமல்ல.. 1985/6/7 களில் பாகிஸ்தான் படைகள் சிங்களப் படைகளோடு நேரடியாக நின்று நடத்திய படைநடவடிக்கைகளில் கூட.. அதனை கண்டித்தார்களா...??! இல்லையே..!!!

முஸ்லீம்கள் உரிமை கேட்டுப் போராடும் நிலை வரவாய்ப்பில்லை. எங்கட அரசியல்வாதிகள் தான் கெட்டாலும் அழிந்தாலும் அழிக்கப்படாலும்.. முஸ்லீம்களும் சிங்களவர்களும் கெடக்கூடாது என்று எண்ணும் "பரந்த" சிந்தனை கொண்டவர்கள். நீங்க கவலைப்படாதீங்க. 

ஆனால் மலையக தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் வாயும் திறக்கமாட்டார்கள். 

மத்திய கிழக்கில் எந்த முஸ்லிம் நாடு மற்றைய மக்களின் உரிமையை மதிக்குது..??! சொந்த முஸ்லிம்களாக உள்ள சிரிய மக்களுக்கே அடைக்கலம் கொடுக்க முடியாத நாடுகள் தாம் இவை.tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்தபா முஸ்தபா டோன்ற் வொரி முஸ்தபா
காலம் நம் கையில் முஸ்தபா  

இலங்கை பூராக  குட்டி குட்டியா  உங்களுக்கான மாகாணங்கள் அமைக்கப்படும் .
என்ன மொத்தமா ஒரு  22 போதுமா இல்ல இன்னுங்கூட வேணுமா

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ragunathan said:

நாம் என்ன செய்தாலும், ஒன்றில் கவனமாக இருக்க வேண்டும்.

 

எமக்கு ஒரு தீர்வு கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால், அதில் முஸ்லீம்களுக்கு ஏதாவது அதிகாரம் இருக்க வேண்டும். தனி முஸ்லீம் மாவட்டமோ, கிராமமோ அல்லது கட்டிடமாகவோ கூட து இருக்கலாம். ஏன் சொல்கிறேன் என்றால், இன்றுவரை சிங்களவனிடமிருந்து விடுதலைபெற நாம் போறாடுவதுபோல, நாளை எங்களிடமிருந்து விடுதலைபெற முஸ்லீம்கள் போராட வெளிக்கிடக் கூடாது. அதனால் பிரிக்கிற அப்பத்தை பாத்துப் பிரியுங்கோ.

அஞ்சு லாம்படிச் சந்தி..காணுமா?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புங்கையூரன் said:

.அஞ்சு லாம்படிச் சந்தி..காணுமா?

 

இப்போதைக்கு அதுகாணும், பிறகு பாத்துச் செய்வம் !<_<

இணைந்த வட -கிழக்கில் முஸ்லிம்களுக்கு அலகு கொடுப்பதை TNA ஆதரிக்கும் ,அவ்வாறு முஸ்லிம்களின் அபிலாசைகளை தமிழர்கள் அங்கீகரிக்க மறுத்தால் தமிழர்களின் அடிப்படையான வட -கிழக்கு இணைப்பு சாத்தியப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைக்க கூட்டமைப்பு படாதபாடு பட சிங்கள கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார்கள் இவர்கள்.ஆகவே சிங்களவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு தனி அலகை கொடுத்து ஹெல உறுமையாவை பாதுகாப்புக்கு போடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைந்த வட கிழக்கில், முஸ்லிம்களுக்கு அலகு கொடுக்கப்படும்போது, அதே போர் ஓர் அலகு மலையத்திலும் கோரமுடியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மூஞ்சுறு தான் போக காண‌வில்லை அதற்குள்ள விளக்குமாற்றையும் தூக்கிகொண்டு .......போக ஆசைப்படுது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.