Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய தவறு என பாலசிங்கம் ஒத்துக் கொண்டார்.. சோல்ஹீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Read more at: http://tamil.oneindia.com/news/international/killing-rajiv-gandhi-was-ltte-s-biggest-mistake-248701.html

லண்டன்: விடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப் பெரிய தவறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததுதான் என்று ஆண்டன் பாலசிங்கம் தன்னிடம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதாக நார்வே முன்னாள் சிறப்புத் தூதர் எரீக் சோல்ஹீம் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர் சோல்ஹீம். அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து மார்க் சால்டர் என்பவர், 549 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். "To End A Civil War" என்ற பெயரில் அந்த நூல் வெளியாகியுள்ளது. அந்த நூலில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தனக்கு இருந்த தொடர்புகள், பாலசிங்கம், பிரபாகரன் உள்ளிட்டோர் குறித்து விவரித்துள்ளார் சோல்ஹீம். பாலசிங்கம் குறித்து அவர் விரிவாகவே எழுதியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/international/killing-rajiv-gandhi-was-ltte-s-biggest-mistake-248701.html

 

  • Replies 103
  • Views 8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் விட்ட தவறுகளில் மிகப்பெரிய தவறு, 2009 இல் எமது தாயகவிடுதலைக்கான போராட்டத்தை ஒட்டுமொத்தமாக காவுகொடுக்கக் காரணமான தவறு, தமிழர்களை ஏதிலிகளாக, மற்றையவன் தருவதை அண்ணாந்து பார்த்துப் பிச்சை ஏந்தும் இடத்திற்கு விட்டுச் சென்ற தவறு. 

ஆனால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை, திருந்தப் போவதுமில்லை.

ஒரு கணப்பொழுதினில் ஏற்பட்ட கண்மூடித்தனமான கோபத்தினால் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தினதும் இருப்பையே கேள்விக்குறியாக்கியஓரு முடிவு.

என்னையும் துரோகிகள் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள், நான் மாறிவிட்டேன் என்கிறார்கள். பரவாயில்லை, ஆனால் தவறுகள் சுட்டிக் காட்டப்படவேண்டும். ஏனென்றால் எவருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை இப்போது.

விமர்சிக்கக் கூடாதென்றால், அப்படி விமர்சனம் எழாதவாறு நடந்திருக்க வேண்டும். அப்படி நடந்ததா??>?

தூரநோக்குச் சிந்தனை, அரசியல் விவேகம், அரசியல் ராஜதந்திரம்....இப்படிப் பல கேட்டாயிற்று, ஆனால் அவை எல்லாம் எம்மை எங்கே கொண்டுவந்து நிறுத்தியுள்ளன என்பது கண்கூடு.

வெறுமனே ஐ.. நா வில் பேசப்படுவதற்கு மட்டுமே எமது ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டமும், 150,000 பொதுமக்க்ளும் , 40,000 போராளிகளும் காவு கொடுக்கப்பட்டார்கள் என்று வீர வசனம் பேசுவதைச் சகிக்க முடியவில்லை.

ஒரு விடுதலைப் போராட்டம் எப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்கு நாம் ஒரு உதாரணம். அதைத்தவிர எமது போராட்டத்தினால் நாம் கண்டது எதுவென்றால், சத்தியமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. மன்னித்துவிடுங்கள்.

 

எங்கே வாருங்கள் எல்லோரும், வரிசயில் வந்து பட்டம் தாருங்கள்...எல்லாம் துரோகிப் பட்டம்தான், வேறு என்னத்தை வைத்திருக்கப் போகிறீர்கள் ?

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

புலிகள் விட்ட தவறுகளில் மிகப்பெரிய தவறு, 2009 இல் எமது தாயகவிடுதலைக்கான போராட்டத்தை ஒட்டுமொத்தமாக காவுகொடுக்கக் காரணமான தவறு, தமிழர்களை ஏதிலிகளாக, மற்றையவன் தருவதை அண்ணாந்து பார்த்துப் பிச்சை ஏந்தும் இடத்திற்கு விட்டுச் சென்ற தவறு. 

ஆனால் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை, திருந்தப் போவதுமில்லை.

ஒரு கணப்பொழுதினில் ஏற்பட்ட கண்மூடித்தனமான கோபத்தினால் ஒரு ஒட்டுமொத்த சமூகத்தினதும் இருப்பையே கேள்விக்குறியாக்கியஓரு முடிவு.

என்னையும் துரோகிகள் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள், நான் மாறிவிட்டேன் என்கிறார்கள். பரவாயில்லை, ஆனால் தவறுகள் சுட்டிக் காட்டப்படவேண்டும். ஏனென்றால் எவருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை இப்போது.

விமர்சிக்கக் கூடாதென்றால், அப்படி விமர்சனம் எழாதவாறு நடந்திருக்க வேண்டும். அப்படி நடந்ததா??>?

தூரநோக்குச் சிந்தனை, அரசியல் விவேகம், அரசியல் ராஜதந்திரம்....இப்படிப் பல கேட்டாயிற்று, ஆனால் அவை எல்லாம் எம்மை எங்கே கொண்டுவந்து நிறுத்தியுள்ளன என்பது கண்கூடு.

வெறுமனே ஐ.. நா வில் பேசப்படுவதற்கு மட்டுமே எமது ஒரே நம்பிக்கையான விடுதலைப் போராட்டமும், 150,000 பொதுமக்க்ளும் , 40,000 போராளிகளும் காவு கொடுக்கப்பட்டார்கள் என்று வீர வசனம் பேசுவதைச் சகிக்க முடியவில்லை.

ஒரு விடுதலைப் போராட்டம் எப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்கு நாம் ஒரு உதாரணம். அதைத்தவிர எமது போராட்டத்தினால் நாம் கண்டது எதுவென்றால், சத்தியமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. மன்னித்துவிடுங்கள்.

 

எங்கே வாருங்கள் எல்லோரும், வரிசயில் வந்து பட்டம் தாருங்கள்...எல்லாம் துரோகிப் பட்டம்தான், வேறு என்னத்தை வைத்திருக்கப் போகிறீர்கள் ?

 

ரகு தமிழர்கள் எல்லோரும் புலிகளுடன் போராடப் போகவும் இல்லை, புலிகளை போராட விடவும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

 

எங்கே வாருங்கள் எல்லோரும், வரிசயில் வந்து பட்டம் தாருங்கள்...எல்லாம் துரோகிப் பட்டம்தான், வேறு என்னத்தை வைத்திருக்கப் போகிறீர்கள் ?

 

ஓ, ரகு! வெல்கம் ரு த க்ளப்! பழகி விடும் கொஞ்ச நாளில்! திட்டிப் பார்ப்பார்கள், கொஞ்சிப் பார்ப்பார்கள், இறுதியில் உங்கள் தனிப்பட்ட தகவல் எதையாவது கண்டு பிடித்து அதை வைத்து உங்களைத் திட்டி சலிப்படைய வைப்பார்கள். இந்தக் கடைசி நிலையைத் தாண்டி விட்டால் பிறகு நீங்கள் ஓ.கே! ஆனால், தனிப் பட்ட தாக்குதல் உங்களைக் கவலைப் படுத்துவதாக நீங்கள் காட்டிக் கொண்டால், அதைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ரகு பார்த்துக் கொண்டே இருங்கள், உங்கள் மனைவி, ஒன்றுவிட்ட சித்தப்பா, ஒன்று விட்ட சித்தப்பாவின் மூன்றாம் தாரத்தின் பக்கத்து வீட்டுக் காரர், இப்படி யாராவது ஒருத்தரை சிங்களவர் என்று இனம் கண்டு, சும்மா போட்டு வாங்கப் போகிறார்கள் உங்களை.

இப்போ லைக் போட்டிருப்பவர்களும் கூட ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஓ, ரகு! வெல்கம் ரு த க்ளப்! பழகி விடும் கொஞ்ச நாளில்! திட்டிப் பார்ப்பார்கள், கொஞ்சிப் பார்ப்பார்கள், இறுதியில் உங்கள் தனிப்பட்ட தகவல் எதையாவது கண்டு பிடித்து அதை வைத்து உங்களைத் திட்டி சலிப்படைய வைப்பார்கள். இந்தக் கடைசி நிலையைத் தாண்டி விட்டால் பிறகு நீங்கள் ஓ.கே! ஆனால், தனிப் பட்ட தாக்குதல் உங்களைக் கவலைப் படுத்துவதாக நீங்கள் காட்டிக் கொண்டால், அதைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள்!

 

இவர்கள் என்னைக் கேவலப்படுத்துவார்கள், தூற்றுவார்கள் என்பது எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால், தமக்குத் தெரிந்த ஒன்றை மறைத்து விதண்டாவாதம் புரிவார்கள் என்பதுதான் கவலை. நான் என்ன அவர்களுக்கு மாமனா மச்சானா? ஊரெல்லாம் துரோகிகளாம், நானும் அவர்களுள் ஒன்றாகிப் போகிறேன், இப்போ என்ன ஆயிற்று ?

இந்தியாவுக்கும் எமக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சினை என்ன ? அப்படி ஏதும் இருக்கிறதா ?

இறுதி யுத்தத்தில் இந்தியாதான் எல்லாம், அதுவும் விதவை சோனியாதான் முன்னின்று எல்லாவற்றையும் நடத்தி முடித்தாள் என்று இன்றுவரை அடித்துச் சத்தியம் செய்யும் நாம், அவள் எதற்காக அப்படி நடந்துகொண்டாள் என்பதைப் பார்க்க விரும்புவதில்லை. ஏனென்றால் அதற்கான காரணம் எதுவென்பது எமக்கு நன்றாகப் புரியும், ஆனால் அது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டு பேசப்படும்.

உலகளவில், ஐக்கிய நாடுகள் சபையில் பேசப்படுமளவிற்கு எமது பிரச்சினை கொண்டுவரப்பட்டதே 2009 இல் முள்ளிவாய்க்காளில் போர் இப்படித்தான் முடியவேண்டும் என்று தலைவர் தீர்க்கதரிசனமாகப் போட்ட கணக்கின்படிதான் என்று இன்றும் சொல்லும் பலரைக் காண்கிறேன். ஐயோ, இவர்களை என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை. எமது 36 வருட விடுதலைப் போராட்டமும், நிகழ்த்திய தியாகங்களும், நான் முன்னே போகிறேன், முடிந்தவரை போரிட்டு எனது தாயகத்தை மீட்டு எடுங்கள் என்று ஆகுதியாகிய மாவீரர்களின் கனவுகளும், போராளிகளுடன் கூடவே விடுதலை வேள்வியில் சங்கமமாகிய அப்பாவிகளும், சிறுகச் சிறுக ஆக்கிரமிக்கப்பட்ட எனது தாயகமும் ..இப்படி எல்லாlமே வெறும் ஐ. நாவில் எமது பிரச்சினைப் பேசப்படுவதற்குத் தானென்றால், சத்தியமாக சொல்கிறேன், அப்படியொரு போராட்டம் இருந்திருக்கத் தேவையில்லை.

"அடேய், ஞான  சூனியங்களா, 2009 முள்ளிவாய்க்காலுக்கு முன்னமே இலங்கையில் நடப்பது என்னவென்று உலகிற்கும் ஐ. நா விற்கும் நன்கு தெரியுமென்பதை" யாராவது இவர்களுக்குச் சொல்லுங்கள். 

தலைவரின் தீர்க்கதரிசனம்தான் எமது இந்த அழிவென்று சொல்வதன்மூலம் அவரை மேலும் மேலும் கொச்சைப்படுத்துகிறார்கள் என்று சொல்லுங்கள். 

நாம் கடந்துவந்த பாதைகளில் விட்ட தவறுகள் எதுவென்று சிந்திக்கும்படி சொல்லுங்கள். 

 

3 hours ago, goshan_che said:

ரகு பார்த்துக் கொண்டே இருங்கள், உங்கள் மனைவி, ஒன்றுவிட்ட சித்தப்பா, ஒன்று விட்ட சித்தப்பாவின் மூன்றாம் தாரத்தின் பக்கத்து வீட்டுக் காரர், இப்படி யாராவது ஒருத்தரை சிங்களவர் என்று இனம் கண்டு, சும்மா போட்டு வாங்கப் போகிறார்கள் உங்களை.

இப்போ லைக் போட்டிருப்பவர்களும் கூட ?

 

என்னைப்பற்றி மறைப்பதற்கு எதுவுமேயில்லை கோஷான். ஏனென்றால் நானே என்னைப்பற்றி இங்கே எழுதிவிட்டேன். என்னையே மேற்கோள் காட்டி எழுதலாம் என்று நானே அவர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறேன். என்னைத் தூற்றுவதால் அவர்களின் இன்றைய பொழுது திருப்தியாக அமையுமென்றால், சந்தோசமே.

அதுசரி, ஏன் சிங்களவன் மட்டும்தான் எமக்கு ஆப்பு வைத்தானா?? 

Edited by ragunathan
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை முதலில் சிங்களவன், பின் மலையாளி, பின் நாயக்கன், பின் ஹிந்தியன், பின் நோர்வேகாரன், பின் பிராமணன் பின் திராவிட ஏஜெண்ட்.

இப்படி படிப்படியாகத்தான் உங்கள் பட்டம் பதவி உயர்வுகள் நடக்கும்.

அவசரப் படாதேயும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் துரோகிகள் பட்டியலில் மூத்த உறுப்பினர்கள். ஆகவே, நாம் எதற்கும் அஞ்ச மாட்டோம்.

உண்மையில் பாலசிங்கம் அவர்கள் இராஜதந்திரமாக எடுத்த முயற்சியினை விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கெடுத்துவிட்டார் என்பது அனைவரும் மறந்து இருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

அதாவது, பாலசிங்கம் அவர்கள் ராஜீவ் காந்தி படுகொலைக்கு வருத்தம் தெரிவித்து இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியினை உடனடியாக வன்னியில் இருந்து சு.ப.தமிழ்ச்செல்வன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் என்று வாய்க்கு வாய் கூறி வந்த சு.ப.தமிழ்ச்செல்வன், முதன் முறையாக பாலசிங்கம் அவர்கள் வருத்தம் தெரிவித்து வெளியிட்டு இருந்த பேட்டியினை மறுத்து- அது தனிப்பட்ட பாலசிங்கம் அவர்களின் கருத்து என அனைத்து ஊடகங்களிலும் மழுப்பி மழுப்பி பதில் அளித்தார்.

அன்றில் இருந்து பாலசிங்கம் அவர்கள் விடுதலைப் புலிகளுடனான தொடர்புகளை தானாக துண்டித்து ஒதுங்கிக் கொண்டார். அதேபோன்று விடுதலைப் புலிகளும் பிற்காலத்தில் அவருடன் தொடர்புகளைப் பேண முயற்சிக்கவில்லை. 

இதில் விதி விலக்காக பா.நடேசன், புதுவை இரத்தினதுரை போன்றோர் தொடர்புகளை அவருடன் பேணி வந்த போதும் அது அவர்கள் தமது தனிப்பட்ட விவகாரங்களுக்காகவே பேணி வந்தனர்.

கொடிய புற்றுநோயால் கடுமையாகப் போராடிக் கொண்டு இருந்த பாலசிங்கம் அவர்களை, 'உதயன்', 'சுடரொளி' நாளேடுகளின் ஆசிரியராக அப்போது இருந்த வித்தியாதரன் பார்வையிட்டு விட்டு வந்து- வன்னி சென்ற இடத்தில் விடுதலைப் புலிகள் தரப்புக்கு அவரின் நிலை கூறியதன் பின்னர், பல தளபதிகள் தொலைபேசி எடுத்த போதும் அவர் உரையாட விரும்பவில்லை. 

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் பாலசிங்கம் அவர்களால் மார்த்தாண்டன் என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எடுத்து உரையாடிய போது எதுவித சுரத்தும் இன்றியே உரையாடி இருக்கின்றார். 

இதில் வேதனையான விடயம் என்னவென்றால், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து- அவர்களின் இராணுவ மற்றும் அரசியல் சாந்த அனைத்து விடயங்களுக்கும் தத்துவார்த்த ரீதியான விளக்கங்களைக் கொடுத்து வந்த இவருக்கு எதிராக விடுதலைப் புலிகள், தமது மத்திய குழுவினைக் கூட்டி நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், அதனை பாலசிங்கம் அவர்களுக்கு தெரிவிக்க துணிவில்லாமல் இருந்த நிலையில்- பா.நடேசன் அவர்களே அவருக்கு தெரிவித்து இருக்கின்றார். 

இவ்வாறு தெரிவித்த போது, பாலசிங்கம் அவர்கள், "சரியடப்பா, எனக்கு இவ்வளவு நாளும் இயக்கத்துக்கு சேவை செய்ய இடம் தந்ததற்கு எனது நன்றியை மார்த்தாண்டனுக்கு தெரிவித்து விடு" என்று கூறிவிட்டு தொலைபேசியை வைத்து இருக்கின்றார்.

'உதயன்', 'சுடரொளி' நாளேடுகளின் ஆசிரியராக இருந்த வித்தியாதரன், பாலசிங்கம் அவர்கள் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவரைச் சந்தித்த போது, "பல தடவை பிரபாகரனை உயிரோடு காப்பாற்றி இருக்கின்றேன். இனி அவரை காப்பாற்ற, தான் உயிரோடு இருக்க மாட்டேன்" என்று கவலையோடு தெரிவித்து இருக்கின்றார்.

அதேபோன்று பின்னர் விடுதலைப் புலிகளின் வெளிவிகாரங்களுக்கான பொறுப்பாளராக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனும், "அண்ணாச்சி இருந்திருந்தால் தம்பியை எப்படியாவது காப்பாற்றி இருப்பார்" என்று பல ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில் தெரிவித்து இருக்கின்றார்.

உண்மையில் பாலசிங்கம் அவர்கள் மிகவும் ஒரு சிறந்த இராஜதந்திரி. விடுதலைப் புலிகளுக்கு சோதனை ஏற்பட்ட காலங்களில் எல்லாம் அவர்தான் விடுதலைப் புலிகளை அனைத்துலக அரங்கில் கம்பீரமாக நிலை நிறுத்தியவர். இவற்றை எல்லாம் நாம் மறந்து விடக்கூடாது.

பலருக்கும் பாலசிங்கம் அவர்கள் தொடர்பிலும் விமர்சனங்கள் இருந்தாலும், சிங்கள தரப்பின் அனைத்து அரச தலைவர்களும் இவரின் அரசியல் சாணக்கியத்துக்கு முன்னே மண்டியிட்டுத்தான் இருந்தனர். 

இங்கே பதிவிட்ட சில விடயங்கள் முன்னரும் நான் இந்தக் களத்தில் தெரிவித்து இருக்கலாம். ஆனாலும், இந்த இடத்தில் தேவை இருப்பதனால் மீண்டும் பதிவிட்டு உள்ளேன்.

Edited by nirmalan

இந்த திரியில் நான் கருத்து எழுதினால்  ரகுவின் பதிவே திசை மாறிவிடும் 

எனவே எழுதாமல் விடுகின்றேன் .

1 hour ago, goshan_che said:

இல்லை முதலில் சிங்களவன், பின் மலையாளி, பின் நாயக்கன், பின் ஹிந்தியன், பின் நோர்வேகாரன், பின் பிராமணன் பின் திராவிட ஏஜெண்ட்.

இப்படி படிப்படியாகத்தான் உங்கள் பட்டம் பதவி உயர்வுகள் நடக்கும்.

அவசரப் படாதேயும்.

ஒவ்வொரு கட்டத்திலும் பட்டம் கொடுப்பவர்களுக்கு பச்சை வந்து கொட்டும். என்ர ராசம்மா!  :grin:

3 hours ago, goshan_che said:

இப்போ லைக் போட்டிருப்பவர்களும் கூட ?

அப்பாடா, கோசான் இதை எழுதிய பிறகுதான் நான் லைக் போட்டேன் - தொப்பி எனக்கில்லை.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

சொல்கைம் இதனை அன்ரனோ.. புலிகளோ உள்ள போது எழுதிக் கிழிச்சிருந்தால் தெரிஞ்சிருக்கும்.

இல்லாமல் செய்துவிட்டு.. இல்லாமல் செய்ய துணை நின்றுவிட்டு.. இப்போது.. இல்லாததை சொன்னாலும் நம்ப ஒரு கூட்டம் தயாராக உள்ள நிலையில்...

சொல்கைம் சொல்வது எழுதுவது அனைத்தும் நியாயம்...?!

சொல்கைம் தோற்றுப் போன.. ஒரு சமாதானத் தூதுவர்... தேவையை வென்ற ஒரு மேற்குலக ஒற்றர். 

ராஜீவ் காந்தி புலிகளால்... தண்டிக்கப்பட்டாரோ இல்லையோ..  தர்மத்தின் முன்னாள் ராஜீவ் காந்தி ஒரு அப்பட்டமான போர்க்குற்றவாளி. அவரை தண்டித்திருக்க வேண்டியது சர்வதேசம். சர்வதேசம்.. இவற்றை வெளிப்படையாகச் செய்ய முடியாத கையறு நிலைதான் ராஜீவ் காந்தியின் மரணம்.. புலிகளின் உருவாக்கம்.. எல்லாம் இந்த உலகில் நடந்துள்ளது.

மகிந்தவையே மன்னிக்கக் கூடிய சர்வதேசம்.. ராஜீவை தண்டிச்சிருக்குமா... பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தந்திருக்குமா...??! வினாக்களே விடைகள். 1948 இல் சர்வதேசம் தவறிழைச்சிருக்காட்டி.. எதுவுமே நடந்திருக்காது. ஏன்.. அதுக்கு முன்னம்.. காலணித்துவங்கள் வந்து ஆக்கிரமிச்சிருக்காட்டி.. ராஜீவ் மரணம் என்ற ஒன்றுக்கே இடமிருந்திருக்காது. இப்படியும் பார்க்கலாம்............................................. தவறுகளை வரிசைப்படுத்திக் கிட்டுப் போகலாம். நன்மை..?????!

சொல்கைம் எனி.. ஆத்தில விழுந்து குளிச்சால்.. என்ன.. சாக்கடையில் விழுந்து எழும்பினால் என்ன.. எல்லாம் செய்தி தான். திறனாய்வுக்கு எம்மிடம் மூளை இல்லை. ஏனெனில் அது சிக்கிக் கொண்டிருப்பது இன்னும் புலி மீது அடிக்கப்படும் சேறுகளைச் சுற்றி. எவர் புலி மீது நல்லா சேறடிக்கிறரோ அவர் திறம். ஏன் எதுக்கு என்ற கேள்விக்கு இடமில்லை.  tw_warning:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ragunathan said:

ஒரு விடுதலைப் போராட்டம் எப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்கு நாம் ஒரு உதாரணம். அதைத்தவிர எமது போராட்டத்தினால் நாம் கண்டது எதுவென்றால், சத்தியமாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. மன்னித்துவிடுங்கள்.

ஆம்..  எவ்வளவு தான் தியாகம் பண்ணினாலும்.. விடுதலைப் போராட்டம் ஒன்று.. தமிழர்கள் மத்தியில்.. எவராலும் நடத்தப்பட்டு வெல்லப்பட முடியாது. இந்த ஒரு பாடத்தை தான்.. புலிகளின் போராட்டப் பின்னடைவு பாடமாகச் சொல்லி தந்திருக்குது.

நாங்க ராஜீவ் காந்தியை கொன்றதைப் பற்றிப் பேசவமே தவிர.. ராஜீவ் காந்தி கொன்றவர்களைப் பற்றி பேச யாரையும் நிர்பந்திப்பதில்லை.

எப்படி ஒரு போராட்டம் வெல்லுமுங்கோ... அதற்கான நியாயம் உலகில் எடுபடுங்கோ..??!

எமது தேவை.. அவலத்தில் அவல் இடிப்பது.. அதாவது அகதிஅந்தஸ்து பெறுவது.. பெற்றதும் அதை வைச்சு பந்தா காட்டுவது.. மட்டுமே. இப்படின்னு நிற்கிற மக்கள் கூட்டத்திடம்.. எந்தப் போராட்டமும் வெல்லாது. கடவுளே வந்து நின்று போராடினாலும் வெல்லாது. 

பலஸ்தீனியர்களோடு அரபுலகம் உள்ளது. இஸ்ரேலோடு அமெரிக்க மேற்குலகம் உள்ளது..

ஏன் தமிழர்களோடு பிரிட்டனே இல்லை. ஏன் தமிழர்களை உலகம் தமிழர்களுன்னே விழிக்கப் பஞ்சிப்படுகுது.... இதுகும் புலிகளால் தானோங்கோ..??!

எம்மிடம்.. நாம் பற்றிய திறனாய்வு இல்லை. இதில புலியை குறைபிடிச்சுக்கிட்டு. இப்ப அந்த ஆலமரத்தை சுற்றி தொங்கிறதில காலம் கழிச்சு.. இன்னொரு இன அழிப்பைச் செய்தவர்களையும் காப்பாற்றிக்கிட்டிருக்கும்.. தமிழரின் எதிரிக்கே விசுவாசமாக மாறி நிற்கக் கூடிய பலவீனம்.. தான்.. இந்த நிலையாமை தான்.. அவர்களை தோற்கடிக்குது எல்லா தளத்திலும்.  இந்தப் பலவீனத்தைக்.. கண்டுதான் உலகம் தமிழர்களை விட்டு விலகி ஓடிக்கிட்டு இருக்குது

உலகில் எந்த ஒரு இனத்துக்கு விடுதலை அவசியமில்லை சாத்தியமில்லை.. என்று சொல்ல முடியுமோ அதற்கு உதாரணம்.. உதாரணமாக வாழ்பவர்களாக உள்ளவர்கள்.. தமிழர்கள். குறிப்பாக.. சொறீலங்கா தமிழர்கள். இதுதான் அவர்களை அழிக்கிறது தோல்வி காணச் செய்கிறது.. இன்னொரு வகையில்.. தப்பிப் பிழைத்து அடிமைகளாக சுகிக்கச் செய்து வாழச்செய்கிறது. இதுதான் தமிழர்கள் இன்று இந்த உலகில். tw_warning:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

 

இவர்கள் என்னைக் கேவலப்படுத்துவார்கள், தூற்றுவார்கள் என்பது எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால், தமக்குத் தெரிந்த ஒன்றை மறைத்து விதண்டாவாதம் புரிவார்கள் என்பதுதான் கவலை. நான் என்ன அவர்களுக்கு மாமனா மச்சானா? ஊரெல்லாம் துரோகிகளாம், நானும் அவர்களுள் ஒன்றாகிப் போகிறேன், இப்போ என்ன ஆயிற்று ?

இந்தியாவுக்கும் எமக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சினை என்ன ? அப்படி ஏதும் இருக்கிறதா ?

இறுதி யுத்தத்தில் இந்தியாதான் எல்லாம், அதுவும் விதவை சோனியாதான் முன்னின்று எல்லாவற்றையும் நடத்தி முடித்தாள் என்று இன்றுவரை அடித்துச் சத்தியம் செய்யும் நாம், அவள் எதற்காக அப்படி நடந்துகொண்டாள் என்பதைப் பார்க்க விரும்புவதில்லை. ஏனென்றால் அதற்கான காரணம் எதுவென்பது எமக்கு நன்றாகப் புரியும், ஆனால் அது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டு பேசப்படும்.

உலகளவில், ஐக்கிய நாடுகள் சபையில் பேசப்படுமளவிற்கு எமது பிரச்சினை கொண்டுவரப்பட்டதே 2009 இல் முள்ளிவாய்க்காளில் போர் இப்படித்தான் முடியவேண்டும் என்று தலைவர் தீர்க்கதரிசனமாகப் போட்ட கணக்கின்படிதான் என்று இன்றும் சொல்லும் பலரைக் காண்கிறேன். ஐயோ, இவர்களை என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை. எமது 36 வருட விடுதலைப் போராட்டமும், நிகழ்த்திய தியாகங்களும், நான் முன்னே போகிறேன், முடிந்தவரை போரிட்டு எனது தாயகத்தை மீட்டு எடுங்கள் என்று ஆகுதியாகிய மாவீரர்களின் கனவுகளும், போராளிகளுடன் கூடவே விடுதலை வேள்வியில் சங்கமமாகிய அப்பாவிகளும், சிறுகச் சிறுக ஆக்கிரமிக்கப்பட்ட எனது தாயகமும் ..இப்படி எல்லாlமே வெறும் ஐ. நாவில் எமது பிரச்சினைப் பேசப்படுவதற்குத் தானென்றால், சத்தியமாக சொல்கிறேன், அப்படியொரு போராட்டம் இருந்திருக்கத் தேவையில்லை.

"அடேய், ஞான  சூனியங்களா, 2009 முள்ளிவாய்க்காலுக்கு முன்னமே இலங்கையில் நடப்பது என்னவென்று உலகிற்கும் ஐ. நா விற்கும் நன்கு தெரியுமென்பதை" யாராவது இவர்களுக்குச் சொல்லுங்கள். 

தலைவரின் தீர்க்கதரிசனம்தான் எமது இந்த அழிவென்று சொல்வதன்மூலம் அவரை மேலும் மேலும் கொச்சைப்படுத்துகிறார்கள் என்று சொல்லுங்கள். 

நாம் கடந்துவந்த பாதைகளில் விட்ட தவறுகள் எதுவென்று சிந்திக்கும்படி சொல்லுங்கள். 

 

 

என்னைப்பற்றி மறைப்பதற்கு எதுவுமேயில்லை கோஷான். ஏனென்றால் நானே என்னைப்பற்றி இங்கே எழுதிவிட்டேன். என்னையே மேற்கோள் காட்டி எழுதலாம் என்று நானே அவர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறேன். என்னைத் தூற்றுவதால் அவர்களின் இன்றைய பொழுது திருப்தியாக அமையுமென்றால், சந்தோசமே.

அதுசரி, ஏன் சிங்களவன் மட்டும்தான் எமக்கு ஆப்பு வைத்தானா?? 

ரகுநாதன் அண்ணை 
மிகவும் மனவருத்தத்திற்க்குரிய விடயம்....உங்கள் மீது எனக்கு பெரு மதிப்புண்டு எல்லாவற்றையும் நடுநிலைமையில் அவதானித்து எழுதுபவர்  ......மற்றைய உறவுகளான ஜஸ்டின் அண்ணை , அர்யுன் அண்ணைமார்களுக்கும் 
உங்களை எப்போதும் நான்  துரோகி பட்டியலில் சேர்த்ததும்இல்லை ...அப்படி அழைக்கப்போவதும்இல்லை ......

புலிகள் தவறு செய்தார்கள் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை .........புலிகள் மட்டும் தான் தவறு செய்தார்கள் என்பதில் மட்டும்  உடன்பாடும் இல்லை.ராஜீவ் காந்தியை கொன்றது எமது போராட்டத்தின் அழிவு ...உண்மையாகவே மறுக்க முடியாதது.....புலிகளும் சில விட்டுக்கொடுப்புகளை கட்டாயம் செய்திருக்கவேண்டும்.....

ஆனால் இவற்றையெல்லாம் வைத்துகொண்டு புலிகள் இருந்திருக்காவிடில் தீர்வினை சிங்களவனிடம் தங்கத்தட்டில் வாங்கியிருப்போம் என்று பேசுவதை தான் ஏற்றுகொள்ள முடியாது....சிங்களவன் அவனாக விரும்பி எதையும் தரான்....அதற்க்கான வேர்  1956 இலே போடப்பட்டுவிட்டது 
 புலிகளை தவிர்த்து விடுதலைக்காக போராடியவர்கள் எல்லாமே சிங்களவனிடம் வீழ்ந்து கொண்டிருந்தனர்...வீழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் 

 இனிமேல் புலிகளின் தவறுகளை சுட்டி என்ன பயன் .....யாரிற்கு தண்டனை வழங்குவது ......தவறினை சீர்தூக்கி பார்ப்பது என்று இங்கு  கொடுக்கப்படும்  மருந்திற்கு அர்த்தம் என்ன .....இப்படியொரு ஆயுத போராட்டம் இனிமேல் சாத்தியமில்லை ....ஆயுத போராட்டத்தின் தவறுகளை ஆயுத போராட்டமே மவுனித்தபின் அலசுவதில் எமக்கு  என்ன இலாபம் ....எமது பின்னடைவிற்கு நாமே எமக்குள்ளே காரணம் தேடுகிறோம்....இப்படி காரணிகள் வலுப்பெற்றபின் காலப்போக்கில்  சிங்களவன் செய்யும் எதுவும் இந்த காரணிகளின் முன் பெரிதாக எமக்கு தெரியாது ....இதுவே இந்த மருந்தின் மூலமான சிங்களத்தின் வெற்றி.....உண்மையாகவே தமிழன் சிங்களவனிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அக்னி அண்ணா ஒரு ரவுட்..

ராஜீவ்காந்தி.. 2008ம் ஆண்டா கொல்லப்பட்டவர்..??!

ராஜீவ் காந்தி 1991 இல் ஒரு வெடிப்புச் சம்பவத்தில் இறந்தார் என்றால்.. விடுதலைப் புலிகள் தோற்கடிப்பு.. 2009ம் ஆண்டு நிகழ்ந்தது. விடுதலைப்புலிகள்.. அந்த  இடைப்பட்ட.. 18 ஆண்டு கால போராட்ட நெடுகில் பல பின்னடைவுகளையும்.. முன்னேற்றங்களையும் சந்தித்த போது.. அது ஏன் போராட்டமா தெரியல்லை பலருக்கு இப்ப...?!

இன்று.. போதிமரத்தை நாடும்.. எம் புத்தபகவான்கள்.. என்ன பண்ணிக்கிழிச்சுக்கிட்டு இருந்தார்கள்.. இந்த இடைப்பட்ட கால வெளியில். ராஜீவுக்கு பூமாலை போட்டுக்கிட்டு இருந்தார்களா..?!

யார் இந்த ராஜீவ் காந்தி.. அவரை ஏன் புலிகள் கொல்லனும்... புலிகள் என்ன மாவியாவா...??!

இதே வசைபாடலைத் தவிர.. வேறு என்ன.... இவர்கள் இந்தப் போராட்டம் நெடுகிலும் முன்னெடுத்த அரசியல்...?!

இன்று முன்னெடுக்கப்பட வேண்டிய அரசியல் அல்லது கருத்துருவாக்கம் என்ன..

ஏன் சொல்கைம்..  எழுவர் விடுதலை குறித்து தமிழகத்தில் பேசப்படும் நிலையில்...

இவற்றைக் கிளறிக் கொண்டிருக்கிறார்......??! அவரின் நூலில்  ஏன் இப்ப இதுக்கு.. முன்னுரிமை வருகுது..?! 

தனது தோல்வியடைந்த சமாதானத்தூதுவர் வேசம் பற்றி ஏன் அவர் பேசுவதில்லை.. அது பெரும் மனித அழிவுக்கு போனதைப் பற்றி ஏன் சொல்கைம் ஒரு வார்த்தை கூட உச்சரிப்பதில்லை..?!

அன்ரன் அண்ணா 2001 இல் மக்கள் முன்னாடியே சொல்லிட்டார்.. ராஜீவ் மரணம் ஒரு துன்பியல் சம்பவம். மீண்டும் மீண்டும் அதையேன் பேசிக்கிட்டு இருக்கனும்..??! எத்தனையோ உலகத் தலைவர்கள் எத்தனையோ சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டிருக்க.. ராஜீவ் காந்தி மரணம்.. ஏன் சொல்கைமுக்கு அவசியமா இருக்குது அதுவும்.. 25 ஆண்டுகளுக்கு அப்புறமும்..??!

நாங்க சிந்திக்கமாட்டம்..! ஆனால் பழியை தூக்கி புலி மேல போடுவம். 

இவை தற்செயல்கள் அல்ல. சொல்கைமின் திட்டமிட்ட செயற்பாடுகள். அதற்கு நாமே நியாயமும் கற்பிக்க நிற்கிறப்ப..

எப்படி எம் நியாயம்.. எடுபடும். உலகில் எம் போராட்டம் வெல்லும்..?!

இப்ப தெரியுதா.. எம் தோல்விக்கு யார் காரணமுன்னு. நாங்களே தான். எமக்கு எதிரி வெளியில் இருந்து வரத்தேவையில்லை. எமக்குள்ளையே தாராளமாக உள்ளான். இதுவும் தமிழர்கள் இந்த உலகில் சீரழிவு வாழ்வு வாழ ஒரு முக்கிய காரணம். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

12801411_1535535196742708_38751189306402

முகநூலில் தமிழக முகநூல் அன்பர் ஒருவரால் பகிரப்பட்ட தகவல். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ரகுநாதன் அண்ணை 
மிகவும் மனவருத்தத்திற்க்குரிய விடயம்....உங்கள் மீது எனக்கு பெரு மதிப்புண்டு எல்லாவற்றையும் நடுநிலைமையில் அவதானித்து எழுதுபவர்  ......மற்றைய உறவுகளான ஜஸ்டின் அண்ணை , அர்யுன் அண்ணைமார்களுக்கும் 
உங்களை எப்போதும் நான்  துரோகி பட்டியலில் சேர்த்ததும்இல்லை ...அப்படி அழைக்கப்போவதும்இல்லை ......

புலிகள் தவறு செய்தார்கள் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை .........புலிகள் மட்டும் தான் தவறு செய்தார்கள் என்பதில் மட்டும்  உடன்பாடும் இல்லை.ராஜீவ் காந்தியை கொன்றது எமது போராட்டத்தின் அழிவு ...உண்மையாகவே மறுக்க முடியாதது.....புலிகளும் சில விட்டுக்கொடுப்புகளை கட்டாயம் செய்திருக்கவேண்டும்.....

ஆனால் இவற்றையெல்லாம் வைத்துகொண்டு புலிகள் இருந்திருக்காவிடில் தீர்வினை சிங்களவனிடம் தங்கத்தட்டில் வாங்கியிருப்போம் என்று பேசுவதை தான் ஏற்றுகொள்ள முடியாது....சிங்களவன் அவனாக விரும்பி எதையும் தரான்....அதற்க்கான வேர்  1956 இலே போடப்பட்டுவிட்டது 
 புலிகளை தவிர்த்து விடுதலைக்காக போராடியவர்கள் எல்லாமே சிங்களவனிடம் வீழ்ந்து கொண்டிருந்தனர்...வீழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் 

 இனிமேல் புலிகளின் தவறுகளை சுட்டி என்ன பயன் .....யாரிற்கு தண்டனை வழங்குவது ......தவறினை சீர்தூக்கி பார்ப்பது என்று இங்கு  கொடுக்கப்படும்  மருந்திற்கு அர்த்தம் என்ன .....இப்படியொரு ஆயுத போராட்டம் இனிமேல் சாத்தியமில்லை ....ஆயுத போராட்டத்தின் தவறுகளை ஆயுத போராட்டமே மவுனித்தபின் அலசுவதில் எமக்கு  என்ன இலாபம் ....எமது பின்னடைவிற்கு நாமே எமக்குள்ளே காரணம் தேடுகிறோம்....இப்படி காரணிகள் வலுப்பெற்றபின் காலப்போக்கில்  சிங்களவன் செய்யும் எதுவும் இந்த காரணிகளின் முன் பெரிதாக எமக்கு தெரியாது ....இதுவே இந்த மருந்தின் மூலமான சிங்களத்தின் வெற்றி.....உண்மையாகவே தமிழன் சிங்களவனிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய 

 

 

 

 

உங்கள் கருத்திற்கு நன்றி அக்னி,

 

புலிகளை மட்டுமே தவறென்று நான் சொல்லவில்லை. புலிகள் சிந்திக்காமல் எடுத்த மகா முட்டாள்த்தனமான முடிவான ரஜீவைக் கொல்வதென்பது (நெடுக்காலபோவானின் கருத்தில், ஒரு வெடிப்பு ) எமது போராட்டத்தை 2009 அழிக்கக் காரணமாயிற்று என்றுதான் நினைக்கிறேன்.

தமிழினத்தை புலிகளைப்போல் எவரும் உயர்த்தவுமில்லை, தாழ்த்தவுமில்லை.

ரஜீவ் என்ன புனிதரா?? இல்லையே இந்திய ஆக்கிரமிப்புப் படைய எமது தாயகத்துக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படவும், பல பெண்கள் கற்பழிக்கப்படவும் காரணமாக இருந்தவர். 1991 இல் அவர் மீண்டும் பதவிக்கு வந்தால், மீண்டும் படையை அனுப்புவார் என்று பயப்பட்ட நாம் அவரைக் கொன்றோம் என்றால், 2009 இல் படையை நேரில் அனுப்பாமலேயே அவரது விதவை மனைவி அங்கிருந்து எம்மைக் கருவறுத்தாள். 

இலங்கைக்கு ராணுவ தளபாட உதவி, செய்மதி உதவி, கடற்படையின் காவல், புலிகளின் கப்பல்கள் மீதான தாக்குதல், சர்வதேச அழுத்தங்களிலிருந்து இலங்கையைப் பாதுகாத்து முற்றான ஒரு அழித்தொழிப்பு யுத்தத்தை தங்குதடையின்றி நடத்த உதவியமை...இப்படிப் பல. இவற்றுக்கு காரணம் என்ன ? ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். அதுதான் தனது கணவரைப் புலிகள் கொன்றது. 

ரஜீவ் கொல்லப்பட்டது மே 1991 இல், முள்ளிவாய்க்கால் நடந்தது 2009 இல். இடைப்பட்ட 18 வருட காலத்தில் எவர் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பது ஒருபுறமிருக்கட்டும், காங்கிரஸ் கட்சியின் தலமைப் பதவி சோனியாவினதும், அவரது குடும்பத்தினதும் கைக்கு வந்தது - மகிந்த இலங்கையில் ஆட்சிப் பீடமேறிய அதே காலத்தில்த்தான். இரு வேறு காரணங்களுக்காக புலிகளை முற்றாக அழிக்கக் காத்திருந்த மகிந்தவும் சோனியாவும் கூட்டாகச் சேர்ந்து அழித்து முடித்தார்கள். 

 

மீண்டும் மீண்டும் இதுபற்றிக் கதைத்து பலரைக் காயப்படுத்த வேண்டாம். இத்துடன் முடிக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ரகு அண்ண..தமிழகம் போய் நல்ல கமேசியல்..சினிமா கதை எழுதினீங்கன்னா... எங்கேயோ போயிடுவீங்க.tw_blush:

ராஜீவ் காந்திக்குப் பின்... நரசிமராவ்.. மன்மோகன் சிங் - சோனியா முதலாம் கட்ட ஆட்சி.. இதெல்லாம்.. இருந்ததுங்கோ அந்த 18 ஆண்டுகளில். புலிகளை முடிக்கனுன்னா.. 1991 இலேயே இந்திய கமோன்டோ படைகளை அனுப்பி ராஜீவ் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிச்சிருக்கலாம். அன்று புலிகள் பெரும் படைப்பலத்தோடும் இருக்கவில்லை. 

சோவியத் வீழ்ச்சி... செப் 11,2001 இற்குப் பின்னான சூழல்.. சிறீலங்காவோடு பிராந்திய ஒத்துழைப்பை நெருக்கத்தை அதிகரிக்க.. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைக்கனும் என்ற ஹிந்தியாவின் பெருவிருப்பு.. சொந்த ஹிந்தியாவின் பிராந்தியச் சிதைவை தடுக்க.. காண்பிக்க வேண்டிய இராணுவ பல இருப்பு அல்லது திமிர்... பிராந்திய ஆதிக்கம் சீனா கைக்கு மாறுவதை விரும்பாத அமெரிக்க மேற்குலக - ஹிந்திய பொது அக்கறை.. சீனாவின் பொருண்மிய எழுச்சியும் இந்து - பசுபிக் இராணுவ கடற்படை விரிவாக்கமும்... ஆசியாவை நோக்கி நகரும்.. உலகப் பொருண்மிய பலம்.. என்று எவ்வளவோ.. காரண காரியங்கள்.. 2009 வீழ்ச்சிக்குப் பின்னாடி இருக்க...

சொல்கைம் என்ற மேற்குலக விசுவாச தேவைகளின் ஒற்றரின் ஒத்தைக் கதையை வைச்சு.. பின்னுறீங்க பாருங்க.. ஸ்ராரி.. அங்க தான் அண்ணே நீங்க நிற்கிறீங்க. 

இந்த சினிமாத்தனமும் தான் நாம் கொள்கை அளவில் எம் போராடத்தைப் பலப்படுத்தாமல் விட்டதற்குக் காரணம். tw_warning:

 

விட்டால்.. ராஜீவை புனிதராக்கி.. சோனியாவை அம்மனாக்கி வழிபடச் சொன்னாலும் சொல்வீர்கள். tw_tounge:

ஒருவேளை ஜெயசிக்குறுவில் சந்திரிக்காவும் - ரத்வத்தையும் வென்று.. புலிகள் அன்றே வீழ்த்தப்பட்டிருந்தாலும்.. இதே கதையை 1998 இலேயே எழுதி இருப்பீங்க இல்ல.. அண்ணன். அந்தப் பெரும் சமரை வென்று.. புலிகள் லேட் பண்ணிட்டார்கள்:rolleyes:

ஒருவேளை புலிகளை அழிக்க வந்த இந்திய இராணுவம் 1987 இலேயே புலிகளை அழிச்சிருந்தால்.. அப்ப என்ன கதை அண்ண எழுதி இருப்பியள்..ராஜீவை புகழ்ந்து கொண்டிருப்பீர்கள். உங்கள் தலைவர்கள் (அமிர்தலிங்கம்.. சம்பந்தன்..வகையறாக்கள்) அவருக்கு பொன்னாடை போர்த்திக் கொண்டிருந்திருப்பார்கள் போல. ஆனால் தமிழனினம்.. அப்பவும் இப்ப போலவே அடிமையாகக் கிடந்திருக்கும்.  tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

ரகு அண்ண..தமிழகம் போய் நல்ல கமேசியல்..சினிமா கதை எழுதினீங்கன்னா... எங்கேயோ போயிடுவீங்க.tw_blush:

ராஜீவ் காந்திக்குப் பின்... நரசிமராவ்.. மன்மோகன் சிங் - சோனியா முதலாம் கட்ட ஆட்சி.. இதெல்லாம்.. இருந்ததுங்கோ அந்த 18 ஆண்டுகளில். புலிகளை முடிக்கனுன்னா.. 1991 இலேயே இந்திய கமோன்டோ படைகளை அனுப்பி ராஜீவ் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிச்சிருக்கலாம். அன்று புலிகள் பெரும் படைப்பலத்தோடும் இருக்கவில்லை. 

சோவியத் வீழ்ச்சி... செப் 11,2001 இற்குப் பின்னான சூழல்.. சிறீலங்காவோடு பிராந்திய ஒத்துழைப்பை நெருக்கத்தை அதிகரிக்க.. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைக்கனும் என்ற ஹிந்தியாவின் பெருவிருப்பு.. சொந்த ஹிந்தியாவின் பிராந்தியச் சிதைவை தடுக்க.. காண்பிக்க வேண்டிய இராணுவ பல இருப்பு அல்லது திமிர்... பிராந்திய ஆதிக்கம் சீனா கைக்கு மாறுவதை விரும்பாத அமெரிக்க மேற்குலக - ஹிந்திய பொது அக்கறை.. சீனாவின் பொருண்மிய எழுச்சியும் இந்து - பசுபிக் இராணுவ கடற்படை விரிவாக்கமும்... ஆசியாவை நோக்கி நகரும்.. உலகப் பொருண்மிய பலம்.. என்று எவ்வளவோ.. காரண காரியங்கள்.. 2009 வீழ்ச்சிக்குப் பின்னாடி இருக்க...

சொல்கைம் என்ற மேற்குலக விசுவாச தேவைகளின் ஒற்றரின் ஒத்தைக் கதையை வைச்சு.. பின்னுறீங்க பாருங்க.. ஸ்ராரி.. அங்க தான் அண்ணே நீங்க நிற்கிறீங்க. 

இந்த சினிமாத்தனமும் தான் நாம் கொள்கை அளவில் எம் போராடத்தைப் பலப்படுத்தாமல் விட்டதற்குக் காரணம். tw_warning:

 

விட்டால்.. ராஜீவை புனிதராக்கி.. சோனியாவை அம்மனாக்கி வழிபடச் சொன்னாலும் சொல்வீர்கள். tw_tounge:

ஒருவேளை ஜெயசிக்குறுவில் சந்திரிக்காவும் - ரத்வத்தையும் வென்று.. புலிகள் அன்றே வீழ்த்தப்பட்டிருந்தாலும்.. இதே கதையை 1998 இலேயே எழுதி இருப்பீங்க இல்ல.. அண்ணன். அந்தப் பெரும் சமரை வென்று.. புலிகள் லேட் பண்ணிட்டார்கள்:rolleyes:

ஒருவேளை புலிகளை அழிக்க வந்த இந்திய இராணுவம் 1987 இலேயே புலிகளை அழிச்சிருந்தால்.. அப்ப என்ன கதை அண்ண எழுதி இருப்பியள்..ராஜீவை புகழ்ந்து கொண்டிருப்பீர்கள். உங்கள் தலைவர்கள் (அமிர்தலிங்கம்.. சம்பந்தன்..வகையறாக்கள்) அவருக்கு பொன்னாடை போர்த்திக் கொண்டிருந்திருப்பார்கள் போல. ஆனால் தமிழனினம்.. அப்பவும் இப்ப போலவே அடிமையாகக் கிடந்திருக்கும்.  tw_blush:

 

கடைசியாக என்னையும் கொண்டுப்போய்த் தள்ளிவிட்டீர்கள் . இது நான் எதிர்பார்த்ததுதான். நான் ரஜீவைப் புனிதராக்கி, சோனியாவை அம்மனாக்கி, சம்பந்தரையும் அமிர்தலிங்கத்தையும் எனக்குத் தலைவர்களாக்கியதன்மூலம் நீங்கள் தமிழ்த் தேசியத்தை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு விட்டீர்கள் போலிருக்கிறது. சரி, எனக்குத் தாங்கள் கொடுக்க வைத்திருக்கும் பட்டம் என்னவோ, அதையும் கேட்டுவிட்டுப் போகிறேன். 

 புலிகளின் தவறுகளை  விமர்சிப்பவனை எல்லாம் துரோகிகளாகவும், எதிரிகளாகவும் பார்க்கும் உங்களிடமிருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும் ?

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு விடுதலை போராட்டமும் அகிம்சையாகட்டும்  ஆயுதமாகட்டும்  தெற்காசிய பிராந்தியத்தில் வெற்றியடைய போவதில்லை.........பிரித்தானிய போட்ட எல்லைகள் இன்னும் பல வருடங்கள் மேற்குலகாலும் அமேரிக்காவாலும் பாதுகாக்கபடும்.....
விதவை சோனியா சொல்லி புலிகளை அழித்தார்கள் என்ற கருத்து ஏற்புடையதல்ல.... 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ragunathan said:

புலிகளின் தவறுகளை  விமர்சிப்பவனை எல்லாம் துரோகிகளாகவும், எதிரிகளாகவும் பார்க்கும் உங்களிடமிருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்க முடியும் ?

எப்பவும் ஒன்றை மட்டும் ஒரு பக்கமாகவே விமர்ச்சிப்பவருக்குப் பெயர்.. நடுநிலைவாதியல்ல. புத்திசுவாதினமற்ற நிலை. நீங்கள் 2009 க்குப் பின் புலிகளின் எந்தச் சரியை இனங்காட்டி.. எந்தத் தவறை விமர்ச்சித்திருக்கிறீர்கள். முழுக்க உங்களின் சொந்தப் புத்தியில் படும்.. அநியாயக்கருத்துக்களை தான் விதைக்கிறீர்கள். இவை விமர்சனமா...?!

ஏன் புலிகள் மட்டும் தான் எமது போராட்ட வீழ்ச்சிக்கு காரணமா.. வேறு எதுவுமே இல்லையா.. அவற்றை நீங்கள் விமர்ச்சிக்காமல்.. இனங்காணாமல் தவிர்ப்பது ஏன்..?!

இப்படியான தலைப்புக்களாவது உங்கள் கண்ணில் படுகுதா..??/!

சும்மா போங்கண்ணே.. பகிடி விடாமல். நாங்கள் உங்களை எல்லாம் துரோகி.. மண்ணாங்கட்டின்னு சொன்னா.. எங்களுக்கு தான் அசிங்கம். நீங்களே ஒரு கருத்தை எழுதிட்டு நீங்களே உங்களை துரோகின்னு சொல்லுறாங்கன்னு.. தமிழ் தேசியத்தை வைச்சு.. உங்களுக்கு ஒரு போர்வை போத்திக்கிறதுக்கு ஏன் இவ்வளவு முண்டி அடிக்கிறியள். உங்களுக்கு ஒரு அடையாளம் தேவைப்படுகுது. அதுக்கு குத்திமுறியறியளே தவிர.. புலிகளை பற்றி விமர்ச்சிங்க உங்களுக்கு புலிகள் பற்றி என்ன ஆய்வறிவு இருக்கு. அல்லது அனுபவ அறிவிருக்கு.. முதல்ல அதைச் சொல்லுங்க.

உங்களின் விமர்சனம்.. அப்படித்தானே அண்ணே இருக்கு.. ராஜீவு புனிதர். புலிகள் தப்பு. சோனியா வல்லவர்.. அம்மன். புலிகளையே முடிச்சிட்டார். இப்படி சொல்லுற உங்களிட்ட.. வேறு என்ன வடிவில் அண்ணே பதில் வைக்கிறது. அப்படி சொன்னா.. அது துரோகமுன்னாண்ணே உங்க அகராதியில் விளக்கம் கொடுத்து வைச்சிருக்கீங்க.

நீங்கள் எழுதினா அது விமர்சனம். உங்கள் எழுத்தில உள்ள கோமாளித்தனத்தை எழுதினா.. அது.. துரோகமாண்ணே. என்னவோ போங்க. 

என்ன முன்னம் புலிகள் வெல்லும் போது விசில் அடிச்ச நீங்களே... இப்ப.. பிளேட்டை மாத்திப் போட்டு.. முதுகு சொறிவதுதான் கேவலமாக உள்ளது. உங்களை நீங்களே தான் காட்டிக்கொடுத்துக்கிட்டு இருக்கீங்க. அவ்வளவும் தான். tw_tounge:tw_blush:

Edited by nedukkalapoovan

ராஜீவின் கொலைக்கு சோனியாவின் பழி வாங்கலே புலிகளின் அழிவுக்கு காரணம் என்பது சினிமாத்தனமான சிந்தனை. வரலாறுகள் தனிநபர்களால் எழுதுப்படுவதில்லை. வரலாறுதான் தனி நபர்களை உருவாக்குகிறது. இலங்கை தொடர்பான இந்தியாவின் அரசியல் நகர்வுகள் வெறும் ரஜீவ்  காந்தியாலோ சோனியா காந்தியாலோ தீர்மானிக்கப் படுவதில்லை என்பதை புரிந்து கொள்ள அதிக அறிவு தேவை இல்லை. அந்த வேளையில் கருணாநிதி பிரதமராக இருந்தால் கூட இந்தியாவின் நிலைப்பாட்டில்  பெரிய வித்தியாசம் இருந்திருக்காது. பாலசிங்கத்தை விட இந்தியாவை பிரபாகரன் சரியாகவே புரிந்துள்ளார் என நான் நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, putthan said:

எந்த ஒரு விடுதலை போராட்டமும் அகிம்சையாகட்டும்  ஆயுதமாகட்டும்  தெற்காசிய பிராந்தியத்தில் வெற்றியடைய போவதில்லை.........பிரித்தானிய போட்ட எல்லைகள் இன்னும் பல வருடங்கள் மேற்குலகாலும் அமேரிக்காவாலும் பாதுகாக்கபடும்.....
விதவை சோனியா சொல்லி புலிகளை அழித்தார்கள் என்ற கருத்து ஏற்புடையதல்ல.... 

நாளையே இன்னொரு திரி திறந்தால் ....
சர்வதேச அரசியல் பேச வருவார்கள்.

அரைத்த மாவை வைத்து திரும்ப திரும்ப அரைப்பதில் 
அரை கிறுக்கு மட்டுமே இருக்கும் 
என்பாதால் இதில் எழுத ஒன்றும் இல்லை.

2009இற்கு காரணம் ராஜீவ்காந்தி கொலை.

1987இல் வந்து அழித்தத்ட்கு காரணம் இந்திராகாந்தி கொலையா ?
உண்மையாய் சொல்லபோனால் அதுதான் காரணம் 
அவர் கொல்ல பாடாது போயிருந்தால் அரை லூசு பிரதமராகி இருந்திருக்க முடியாது.
ஜே ஆர் கூப்பிட்டு அடியும் போட்டு அனுப்பினார் 
வரைவு திட்டம் அதற்கு முன்பே போடபட்டு இருந்தது. 

அரசியல் என்பது எதோ வாய்ப்பன் சுடுவது என்றுதான் சிலர் நினைக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.
விட்டுகொடுப்பு விளங்காயை புலிகள் என்ன விசுமடுவிலா செய்வது ???
வலிந்து மாறி மாறி போர் திணிக்க பட்டுகொண்டிருந்தது. 

புலிகளை வைத்து புடுங்கும் ஜாம்பவான்கள் 
கடந்த 7 வருடமாக கூட்டணி என்ன புடுங்கியது என்று 
அப்படியே அசந்து வாய் அடைத்து நிற்கிறார்கள் என்று புரியவில்லை ?

இப்போதும் ஒருவேளை புலிகள் இருந்திருந்தால் மகிந்த மறுபடியும் வெல்ல 
ஒரே வழி யுத்தம்தான்.
இதில் விட்டுகொடுப்பு அரசியல் புடலங்காயை எங்கு செய்திருக்கலாம் என்றுதான் புரியவில்லை. 

ராஜீவ் காந்தி தேர்தலில் வென்று இருந்தால் ....?
முள்ளிவாய்கால் 1992இலேயே வந்திருக்கும். 

indian_ocean_sea_lanes.gif

17026d8.jpg

Route.jpg

2002 ஜி8 கூட்ட தொடரில் எடுக்கபட்ட சில முடிவுகள் .....

அதே நேரம் பிரபா- ரணில் 
ஒப்பந்தம் நடக்கும் சூழல் இலங்கையில் உருவாகிக்கொண்டு இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது படத்தில் ....
ரசியாவின் ஆயுத விற்பனையை பார்க்கவும்.

இப்போதும் எண்ணெய் தேடுகிறோம் 
அது இது என்று அங்கு நங்கூரம் போட்டு நிற்க வேண்டிய தேவை 

எண்ணையால் வருகிறதா ?
ரசிய வெண்ணையால் வருகிறாதா ?
என்று புரியும் என்று நம்புகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை தான் புலிகளின் அழிவுக்கு காரணம் இல்லை  என்று எடுத்துக்கொண்டாலும்   ....இக்கொலை உருவாக்கிய அதிர்வுகள் அதிகம் 
இது ஈழத்தமிழரை முற்றாக தமிழகத்திலிருந்து  பிரித்தது ...தார்மீக ஆதரவினை கூட போராட்டத்திற்கு தந்தவர்கள் கூட இதற்க்கு பிறகு புலிகளுக்கு  ஆதரவு தர தயங்கினர் ....குறிப்பாக தமிழர் தவிர்த்த மற்றைய இந்திய  இனங்களிடம் இது போய் சேர்ந்த வடிவம் வேறு (IPKF நடவடிக்கை பற்றி எதுவும் தெரியாதவர்கள் கூட ராஜீவ் கொலை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள் -நேரடி அனுபவம் )
அதனை இந்திய ஊடகங்கள் சரியாக கையாண்டன ....பிரதமராக இருந்த இந்திரா கொல்லப்பட்டதையும் ராஜீவ் கொல்லப்பட்டதையும் அவர்களுக்கு ஏற்ற முறையில் கையாண்டனர் . கொல்லப்படும்போது இந்திரா பிரதமர் ராஜீவோ முன்னால் பிரதமர் ...தற்போது கூட ராஜிவை இந்திய பிரதமர் ராஜீவ் என்றே அழைக்கிறார்கள் அரசியல் ரீதியாக இதனை துருப்புச்சீட்டாக இந்தியா பயன்படுத்துகிறது  அதனாலேயே பற்றரி வாங்கி கொடுத்தவரும் ஜெயிலில் காய்கிறார் ....முற்று முழுதாக நாங்கள் அடித்து நொறுக்கப்பட நாம் பல காரணங்களை கூறினாலும் ...இந்தியா ஒரு சாட்டு கூறியாவது தப்பித்துவிட இது ஒன்று மட்டுமே போதும்  ......கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம் ....இரு நாட்டு பிரதமர்களை போட்டு தள்ளிய ஒரே தீவிரவாத இயக்கம் என்ற பெயராவது கிடைக்காமல் போயிருக்கும் 

Edited by அக்னியஷ்த்ரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.