Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் சிங்கள மொழியை கற்க வேண்டும்!

Featured Replies

தமிழர் சிங்கள மொழியை கற்க வேண்டும்!

தமிழர் சிங்கள மொழியை கற்க வேண்டும்!

 

அரசியலை மறந்து சிங்கள மொழி ஆற்றல் விருத்தியை மேற்படுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் அணைவரும் ஒன்றிணைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள மாணவர்கள் கட்டாயமாக தமிழ் மொழியினை கற்க முன்வந்துள்ளனர். விரைவில் தமிழ் பேசும் சிங்கள அலுவலகர்கள் வட, கிழக்கு மாகாணங்களுக்கு வர இருக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.

அதனால் முன்னெச்சரிக்கையாக வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் அலுவலகர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும், அதனால் சிங்கள அறிவு இல்லையெனில் புறக்கணிக்கப்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்வி தெய்வமான கலைமகள் திருவுருவச்சிலை திறப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

வடக்கு முதல்வர் மேலும் கூறியதாவது,

இலங்கை வாழ் மக்களிடையே ஐயம், சந்தேகம், மனகிரேசம், அவநம்பிக்கைம் ஆத்திரம் போன்றவை ஒரு தவறான புரிதல் ஆகும். இரு மொழி பேசுகின்ற மக்களுடையே நல்லிணக்க புரிந்துணர்வு ஏற்படுமானால் ஒருவர் மொழியினை மற்றவர்கள் கற்க வேண்டும் நோர்வே, பிரான்ஸ் ஆகிய நாட்டவர்கள் எம் இலங்கை நாட்டு மொழியினை கற்கின்றார்கள். ஆனால் தமிழ் மக்கள் சிங்கள மொழியினை புறக்கணிக்கின்றார்கள்.

நான் சிங்கள மொழியினை கற்றது 1955ம் ஆண்டில், அதில் இருந்து 1956ம் ஆண்டு சட்டம் சிங்களம் மொழியிலே வந்தால் நான் ஆத்திரத்திலே சிங்கள மொழியினை படிப்பதை நிறுத்தி விட்டேன்.

நான் அன்று சிங்கள மொழியினை நிறுத்தாமல் கற்றிருந்தால் சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் நான் சுடச்சுட கருத்துக்களை தெரிவித்திருக்கலாம், என்றார்.
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சரியான அறிவுரை.

அண்மையில் யாழ் புகையிரத நிலையத்தில் அனுபவ பூர்வமாக கண்டறிந்தேன். சிங்கள இளைஞர்கள் தமிழில் பேசி, ரிக்கற் விற்பதனை.

அரச வேலை வேண்டுமாயின் படி தமிழ் என்ற நிலை அவர்களுக்கு. இது போல அரச வேலை வேண்டுமாயின் படி சிங்களம் என்று இருந்த போது நாம் போராட்டம் என்று தொடங்கினோம்.

இன்று அவர்கள் தமிழ் படித்து வருகிறர்கள். நாம் சிங்களம் படித்தால் தான் நம் பகுதியிலே வேலை.

வேலை வேண்டுமோ இல்லையோ, சிங்களவனின் அடாவடிகளை அறிந்துகொள்ள சிங்களம் தெரிந்திருப்பது நல்லது.
சிங்களம் தெரியும் என்பதற்காக அவர்களோடு சிங்களத்தில் கதைக்கத் தேவை இல்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொழி கற்பதில் தவறேதுமில்லை.  ஆனால் இனப்பிரச்சனைக்கு இது தீர்வாகாது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு தமிழ் தெரிந்தாலும் .... அவன் சிங்களவன்தான்.

எங்கடையளுக்கு 3 வசனம் சொல்லி கொடுத்தாலே போதும்.
தமிழ் தெரியாது என்று சொல்லுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை இருக்கிற எங்களுக்கு சிங்களம் மட்டும் இல்லை தமிழும் தேவையில்லை. ஆனால் அங்குள்ளவர்களுக்கு:rolleyes:

7 hours ago, Nathamuni said:

மிகவும் சரியான அறிவுரை.

அண்மையில் யாழ் புகையிரத நிலையத்தில் அனுபவ பூர்வமாக கண்டறிந்தேன். சிங்கள இளைஞர்கள் தமிழில் பேசி, ரிக்கற் விற்பதனை.

அரச வேலை வேண்டுமாயின் படி தமிழ் என்ற நிலை அவர்களுக்கு. இது போல அரச வேலை வேண்டுமாயின் படி சிங்களம் என்று இருந்த போது நாம் போராட்டம் என்று தொடங்கினோம்.

இன்று அவர்கள் தமிழ் படித்து வருகிறர்கள். நாம் சிங்களம் படித்தால் தான் நம் பகுதியிலே வேலை.

மாட்டம் நாதம்ஸ்

நாங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், நோர்ஷ்க், டன்ஷ்க், ச்வன்ஷ்க், டட்ச், டொட்ச் எது வேணாலும் படிப்போம் - சிங்களம் மட்டும் படிக்க மாட்டம். அப்படியும் ஆராவது படிக்க ஆசைப் பட்டால் துரோகி ஆக்கிட மாட்டம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் படிக்கிறது நல்லது மட்டுமல்ல , காலத்தின் கட்டாயமும் கூட...!புறக்கணிப்பதால் வாழ்வாதாரமும் பின்தங்கிப் போகும்...! இப்ப தமிழர் கிராமங்களில்கூட சிங்களவர் செறிந்து வாழத் தொடங்கி விட்டார்கள். ஆகவே நாம் அதைப் புறக்கணித்துப் பயணித்தால் அந்த வெற்றிடங்கள் அவர்களால் நிரப்பப் பட்டுக் கொண்டிருக்கும்...!!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம், மட்டுமல்ல, இந்தியும் கற்பது நல்லது. வியாபாரம் செய்பவர்கள் கற்பது முக்கியம்.

8 hours ago, Nathamuni said:

சிங்களம், மட்டுமல்ல, இந்தியும் கற்பது நல்லது. வியாபாரம் செய்பவர்கள் கற்பது முக்கியம்.

ஹிந்தி நாகரிகம் தெரியாத, ஏமாற்றுப் பேர்வழிகளின், அசுரர்களின் மொழி!

இலங்கை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள தமிழருக்கும் தேவையாற்ற மொழி ஹிந்தி.

வியாபாரம் செய்வதற்கு ஆங்கிலத்துடன், பிரெஞ்சு, ஜேர்மன், யப்பானிஸ், தெலுங்கு, கன்னடம், பெங்காளி, குஜராத்தி, பஞ்சாபி போன்றவற்றில் ஒன்றைக் கற்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் எந்த மொழியை கற்றாலும் நன்மைதான் !
ஒரு மொழி என்பது இன்னொரு அறிவு!


ஆனால் எடுபட்டு போபவன் தமிழன் அதுதான் பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

உப்படித்தான் ஒருக்கா ஆர்மிக்காரான் பிடிச்சு முழங்காலில் வைக்க பக்கத்தில இருந்தவர் சிங்களத்தில விளக்கம் கொடுக்க " கொட்டிட்ட சிங்கள கொந்தட்ட புளுவாங்" என்று சொல்லி ஒரு செல்ல தட்டு தட்டினவன்.......

நான் அன்று சிங்கள மொழியினை நிறுத்தாமல் கற்றிருந்தால் சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் நான் சுடச்சுட கருத்துக்களை தெரிவித்திருக்கலாம், என்றார்.

ஏன் ஐயா நீங்கள் இப்ப இங்கிலிசில சொல்லுற கருத்துக்கள் அவையளுக்கு விளங்குதில்லையோ ? அல்லது நடிக்கினமோ?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

சிங்களம், மட்டுமல்ல, இந்தியும் கற்பது நல்லது. வியாபாரம் செய்பவர்கள் கற்பது முக்கியம்.

பல மொழிகள்  தெரிந்திருப்பது மிக நல்லது இதில் சிங்களம் தெரிந்திருப்பது இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு மிக நல்லது ??

நாதமுனி ஹிந்தி மாலும் ஹாஹா ??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

உப்படித்தான் ஒருக்கா ஆர்மிக்காரான் பிடிச்சு முழங்காலில் வைக்க பக்கத்தில இருந்தவர் சிங்களத்தில விளக்கம் கொடுக்க " கொட்டிட்ட சிங்கள கொந்தட்ட புளுவாங்" என்று சொல்லி ஒரு செல்ல தட்டு தட்டினவன்.......

 

ஏன் ஐயா நீங்கள் இப்ப இங்கிலிசில சொல்லுற கருத்துக்கள் அவையளுக்கு விளங்குதில்லையோ ? அல்லது நடிக்கினமோ?

அப்படியில்லை புத்தன் 
சிங்களவனுக்கு அவனுடைய மொழியாலேயே சாத்தும் போது ...நமக்கு சும்மா கும் என்று இருக்கும்...
முந்தி நான் கொழும்பில வேலை செய்யும்போது  அரசியல் பேச வருபவர்களிடம் அவர்களது மொழியிலேயே பேசி நன்றாக வெட்கபடுத்தியிருக்கிரேன் 
என்னை "கொட்டி படாவ்" (புலிக்குட்டி) என்று தான் பெயர் வைத்து கூப்பிட்டார்கள் ...
அப்படி அவர்களது மொழியிலேயே செமையாக கொடுக்கும் போது  அவர்கள் தங்களது தமிழ் அறிவையும் எமது சிங்கள அறிவையும் பார்த்து வெட்கி தலை குனிந்த சந்தர்ப்பங்களும் உண்டு ...இதுவும் ஒரு வகை வெற்றி தானே 

அதிலும் அவர்கள் ஆக கஷ்ட்டப்பட்டது ....ஒரு ரகசியமும் கதைக்க முடியாது ..ஆனால் நாங்களோ தமிழில் கதைத்து விட்டு பின் பக்கத்தை தட்டி விட்டு சென்று கொண்டேயிருப்போம் ...அவைகள் எழும்பி கக்கூசிட்குள் ஓடிப்போய் தான் ரகசியம் கதைப்பினம் 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அப்படியில்லை புத்தன் 
சிங்களவனுக்கு அவனுடைய மொழியாலேயே சாத்தும் போது ...நமக்கு சும்மா கும் என்று இருக்கும்...
முந்தி நான் கொழும்பில வேலை செய்யும்போது  அரசியல் பேச வருபவர்களிடம் அவர்களது மொழியிலேயே பேசி நன்றாக வெட்கபடுத்தியிருக்கிரேன் 
என்னை "கொட்டி படாவ்" (புலிக்குட்டி) என்று தான் பெயர் வைத்து கூப்பிட்டார்கள் ...
அப்படி அவர்களது மொழியிலேயே செமையாக கொடுக்கும் போது  அவர்கள் தங்களது தமிழ் அறிவையும் எமது சிங்கள அறிவையும் பார்த்து வெட்கி தலை குனிந்த சந்தர்ப்பங்களும் உண்டு ...இதுவும் ஒரு வகை வெற்றி தானே 

அதிலும் அவர்கள் ஆக கஷ்ட்டப்பட்டது ....ஒரு ரகசியமும் கதைக்க முடியாது ..ஆனால் நாங்களோ தமிழில் கதைத்து விட்டு பின் பக்கத்தை தட்டி விட்டு சென்று கொண்டேயிருப்போம் ...அவைகள் எழும்பி கக்கூசிட்குள் ஓடிப்போய் தான் ரகசியம் கதைப்பினம் 

 

இதுதான் உண்மை. 

முன்பு போராட்ட காலத்தில் புலியே பார்த்திராத என்னை, அடோ உம்ப கொடியா நே தா. (அடே நீ புலித்தானே) ஒவ் (ஆம்) உம்பகே ரடே உம்படம அனுரத புரடே எயாடெங் யன்ன பே.. (உன்னுடைய நாட்டிலேயே உனக்கு அனுராதபுரத்திற்கு அப்பால் செல்ல முடியாது) என கூறி நக்காலாக ஊ அடித்து கத்தி சிரிப்பதுண்டு

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மொழியைக் கற்க வேண்டும் எனச் சொல்லும் விக்கி ஐயா...... தான் சிங்களம் கற்றதை எதற்காக நிறுத்தினார் என்றும் கூறியிருக்கின்றார்.

இந்துக் கோவில்த் திருவிழாக்களில் கடலை விற்கும் பெண் சிங்களம் கற்பதனால் அங்கு வரும் சிங்கள சுற்றுலாப்பயணிகளிடம் நிறையக் கடலை விற்கலாம்......

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

பல மொழிகள்  தெரிந்திருப்பது மிக நல்லது இதில் சிங்களம் தெரிந்திருப்பது இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு மிக நல்லது ??

நாதமுனி ஹிந்தி மாலும் ஹாஹா ??

ங்களுக்கு இப்ப தெலுங்கள்ளே முக்கியம். கொப்பிழக்கப் படாது, முனிவர். :grin:

நீங்கள் கதிர்காமத்தால வரட்டுமன் என்றல்லோ, வெயிற்றிங்.. உங்களுக்கெண்டு அந்த மாதிரி பேய் வெயிற்றிங்..

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ங்களுக்கு இப்ப தெலுங்கள்ளே முக்கியம். கொப்பிழக்கப் படாது, முனிவர். :grin:

நீங்கள் கதிர்காமத்தால வரட்டுமன் என்றல்லோ, வெயிற்றிங்.. உங்களுக்கெண்டு அந்த மாதிரி பேய் வெயிற்றிங்..

ஆகா இவன் வேற பேய்க்கு பேன் பார்க்கிறதிலே  குறியாய் இருக்கான் ?

55 minutes ago, முனிவர் ஜீ said:

ஆகா இவன் வேற பேய்க்கு பேன் பார்க்கிறதிலே  குறியாய் இருக்கான் ?

இது உங்கடை கூட்டுத் தொழிலோ? 

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மொழியையும்  படிப்பது நல்லது

அது வேலைக்காக உறவுக்காக உரையாடலுக்காக இருக்கலாம்

ஆனால் இரு இனங்களுக்கிடையே சந்தேகங்களும் பிரிவும்இருக்கும்  இலங்கையில்

இந்த மொழியை படிக்கணும் என்று கட்டாயப்படுத்துவது

அல்லது அதற்காக சலுகைகளை தருவது தான் பிரச்சினை.

அதற்கு முதல் இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை வைத்தால்

இந்த கேள்வியே இல்லாமல் போகும்

இனப்பிரச்சினைக்கான தீர்வை தாமதப்படுத்தும் ஒவ்வொரு கணமும் 

இந்த மொழிப்பிரச்சினையும் கூடவே வளர்வது தவிர்க்கமுடியாதது..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, போல் said:

இது உங்கடை கூட்டுத் தொழிலோ? 

எது பேருக்கு பேனா பார்ப்பதா

1 hour ago, முனிவர் ஜீ said:

எது பேருக்கு பேனா பார்ப்பதா

ம்ம்ம் :)

நடக்கட்டும்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.