Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடைவை புடவை எது சரி.

Featured Replies

யாழ்ப்பாணத்தில் உள்ள மலேயன் கஃபேயில் வடை+டி குடிக்க இன்று குந்தியபோது முன்னால் இருந்த கடையின் பெயர்ப் பலகை தென்பட்டது.

f0n7g2.jpg

புடைவை புடவை எது சரி.

கொஞ்சம் தேடியதில் மண்டை காய்ந்து குழப்பம் அதிகமானதே தவிர வேறெதுவுமில்லை பரம்பொருளே.

அவ்வையார் தனது வெண்பாவில் இப்படி கூறுகின்றார்.

கரியாய்ப் பரியாகிக் காரெருமை தானாய்
எருதாய் முழப்புடவை யாகித் – திரிதிரியாய்த்
தேரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்துகால் ஓய்ந்ததே
கோரைக்கால் ஆழ்வான் கொடை.

சேக்கிழார் பன்னிரண்டாம் திருமுறையில் இப்படி கூறுகின்றார்.

பொய்தருமால் உள்ளத்துப் 
   புன்சமணர் இடங்கழிந்து
மெய்தருவான் நெறியடைவார் 
   வெண்புடைவை மெய்சூழ்ந்து
கைதருவார் தமையூன்றிக் 
   காணாமே இரவின்கண்
செய்தவமா தவர்வாழுந் 
   திருவதிகை சென்றடைவார்

யாராவது சொல்லுங்களேன் எது சரியென்று? 

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

புடவை 

அப்ப சேக்கிழார் தமிழில் குற்றமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

அப்ப சேக்கிழார் தமிழில் குற்றமா?

சேக்கிளார் வேறு ஏதாவது அர்த்தத்தில் எழுதியிருப்பாரோ?

  • தொடங்கியவர்
1 minute ago, ஈழப்பிரியன் said:

சேக்கிளார் வேறு ஏதாவது அர்த்தத்தில் எழுதியிருப்பாரோ?

நானும் புடவைதான் சரியென்று இன்றுவரை நினைத்திருந்தேன் - ஆனால் இன்று மிஸ்டர் சேக்கிழார் குழப்பிவிட்டார். 

பொழிப்புரை:

பொய்யைத் தரும் மயக்கமுடைய உள்ளத்தராகிய இழிந்த சமணர்கடளித்தினின்றும் நீங்கி, மெய்யுணர்வை வழங்கி அதனால் வீடுபேற்றைத் தருபவனாகிய சிவபெருமானின் நன்னெறியை அடைபவராய், அதற்கேற்றவாறு வெண்மையான ஆடையை உடலில் உடுத்திக் கொண்டு, கைகொடுத்துத் தம்மைத் தாங்கி வருவார்மீது ஊன்றியவாறு, சமணர் காணாத வண்ணம், தவம் செய்யும் மாதவர் வாழ்கின்ற திருவதிகையை இரவில் சென்று அடைவாராய்,

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1221&padhi=72&startLimit=61&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் வாத்தியாரை அழைத்து கேட்டால் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

யாழ்ப்பாணத்தில் உள்ள மலேயன் கஃபேயில் வடை+டி குடிக்க இன்று குந்தியபோது முன்னால் இருந்த கடையின் பெயர்ப் பலகை தென்பட்டது.

புடைவை புடவை எது சரி.

-----

அது, எப்படியும்... இருந்திட்டு போகட்டும்.....:D:
மலாயன் கபேயில... "ரீ"  என்ன விலை,  வடை... என்ன விலை விக்கிது ஜீவன் சிவா. :grin:

  • தொடங்கியவர்
8 hours ago, தமிழ் சிறி said:

அது, எப்படியும்... இருந்திட்டு போகட்டும்.....:D:
மலாயன் கபேயில... "ரீ"  என்ன விலை,  வடை... என்ன விலை விக்கிது ஜீவன் சிவா. :grin:

வடை 35 ரூபா 
டீ 35 ரூபா

ஆனால் இங்கு இப்போது நல்ல வடைக்கு நீலாம்பரி கஃபேதான் பேமஸ். இது கே கே எஸ் வீதியில் யாழ் இந்து கல்லூரிக்கும் தட்டாதெரு சந்திக்கும் இடையில் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

வடை 35 ரூபா 
டீ 35 ரூபா

ஆனால் இங்கு இப்போது நல்ல வடைக்கு நீலாம்பரி கஃபேதான் பேமஸ். இது கே கே எஸ் வீதியில் யாழ் இந்து கல்லூரிக்கும் தட்டாதெரு சந்திக்கும் இடையில் உள்ளது. 

விலையை.... பார்க்க, தலையை சுத்துது.
எப்படி... அங்கு உழைத்து வாழும் மக்கள்,  இந்த விலையில் வாங்கி உண்கிறார்கள் என்று, ஆச்சரியமாக உள்ளது.

  • தொடங்கியவர்
41 minutes ago, தமிழ் சிறி said:

விலையை.... பார்க்க, தலையை சுத்துது.
எப்படி... அங்கு உழைத்து வாழும் மக்கள்,  இந்த விலையில் வாங்கி உண்கிறார்கள் என்று, ஆச்சரியமாக உள்ளது.

இங்கு இப்போது கூலி வேலை செய்பவர்களுக்கு நாட்கூலி ரூபாய் 1000 + சாப்பாடு ++ அல்லது ரூபாய் 1250

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

விலையை.... பார்க்க, தலையை சுத்துது.
எப்படி... அங்கு உழைத்து வாழும் மக்கள்,  இந்த விலையில் வாங்கி உண்கிறார்கள் என்று, ஆச்சரியமாக உள்ளது.

வெளிநாட்டிலிருந்து பார்த்தால் அப்படித்தான் தோன்றும்..!

சில வருடங்களுக்கு முன் நான் சென்னை சென்றபோது, மளிகைக் கடையில் வீட்டிற்கான பொருட்களை வாங்கச் சென்றேன்..

அனைத்தும் வாங்கிவிட்டு விலைப்பட்டியலை சரிபார்த்தபோது முட்டையின் விலை இரண்டு ரூபாய்க்கு மேல் எழுதியிருந்தது.. எனக்கு தெரிந்தவரையில் முட்டை விலை ரூ.1.40 மட்டுமே.. விலைவாசி ஏற்றத்தால் முட்டையின் விலை உயர்ந்தாலும், நான் இன்னும் பழைய நினைவிலேயே "என்ன அண்ணாச்சி.. முட்டை விலை, இவ்வளவா..?" என சந்தேகத்துடன் கேட்டேன்..

கடைக்காரர் விநோதமாக, 'என்ன இவர்.. இத்தனை நாள் உள்ளே இருந்திருப்பாரோ..?' என மனதில் நினைத்தவாறு, "சார், நீங்கள் புதுசா கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க வந்தால் இப்படிதான்..!" என சிரித்தார்..

அதன் பின் கடைகளில் விலையை கேட்பதில்லை..!

அதே போல் கடைகளில் விலையை விசாரிக்கும்போது நாணயத்தின் பெயரையும் 'ரூபாயி'க்கு பதிலாக தவறுதலாக, 'திர்ஹாம்' என பலமுறை உச்சரித்துள்ளேன்..

புடைவை என்பதே சரியான தமிழ்ச் சொல்லாக இருக்குமென நினைக்கிறேன்..!

'புடவை' என்பது பேச்சு வழக்கான சொல்லாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிடவை என்பது தான் சரியான தமிழ்ச்சொல் என்று நினைக்கிறேன்!

உடு பிடவை என்று தான் எனக்குத் தெரிந்த பண்டிதர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார்!

எப்படியோ புடவை என்பது பிழை என்று தெரிகின்றது! ஆனால் விளங்கப்படுத்தத் தெரியவில்லை!

தமிழில் 'புடயன்' என்று பேச்சு வழக்கில கதைத்தாலும் எழுதும் போது 'புடையன்' என்று தான் எழுதுவார்கள்!

வன்னியர் சொல்லுவது போல.. புடைவை என்பதும் சரியாக இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

புடைவை --- இலக்கணச் சுத்தம்....!  புடவை  பேச்சு வழக்கு ...!  முன் கொசுவம் வைச்சும் உடுத்தலாம் , பின் கொசுவம்  வச்சும் உடுத்தலாம் .அது தமிழின் சிறப்பு ....!

ஜீவன் டீ யுடன் வடை தின்றார். ( முறுக்கு ,வடையை திண்ணுறது என்றும் சொல்லலாம்.).

பாட்டி வடையுடன் பறக்கும் காகத்தைப் பார்த்து "வட போச்சே " என்று கத்தினாள்....!

அதிகம் ஏன் ...., தேவிகாவைப் பார்த்து "நடையா இது நடையா " என்று ஜொள்ளு விட்ட சிவாஜி , நம்ம சரோஜாவைப்  பார்த்து  ஆகா மெல்ல நட , மெல்ல நட என்று தாங்கிப் பிடிக்கிறார். அப்படியும் கன்னடம் தண்ணி காட்டுது ....! tw_blush:

Edited by suvy
சிறு திருத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்

புடைவை ,புடவை இரண்டும் சரியானவைதான் ஆயினும் சேலை என்பதுதான் சரியான தமிழ்சொல் என்கிறார் அண்ணாமலைப்பல்கலைக்கழகப் பேராசிரியர் அறிவரசன் ஐயா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீலை.... :mellow: :202_dark_sunglasses:

  • தொடங்கியவர்
6 hours ago, குமாரசாமி said:

சீலை.... :mellow: :202_dark_sunglasses:

போற போக்கப் பாத்தால் "சாறி"தான் பண்டைய காலத்து சுத்த தமிழ் என்று அடுத்து இங்கு யாராவது பதிவாங்கள் போலத்தான் கிடக்குது.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 21.9.2016 at 8:37 AM, ஜீவன் சிவா said:

போற போக்கப் பாத்தால் "சாறி"தான் பண்டைய காலத்து சுத்த தமிழ் என்று அடுத்து இங்கு யாராவது பதிவாங்கள் போலத்தான் கிடக்குது.:grin:

புடை என்றால்  சுற்றி  என்று அர்த்தம்.(உதாரணம்: பரிவாரங்கள் புடை சூழ்ந்துவர  மன்னன் ரதத்தில் பவனி வந்தான்)
அதாவது மேனி முழுவதும் சுற்றிக்  கட்டுவதால்  வந்தது தான் புடைவை
புடைவை மருகி புடவை ஆகி இப்போது பொடவை என்றும் புடவ என்றும் சில இடங்களில் மருகிவிட்டது.tw_blush:

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2016 at 6:13 PM, வாத்தியார் said:

புடை என்றால்  சுற்றி  என்று அர்த்தம்.(உதாரணம்: பரிவாரங்கள் புடை சூழ்ந்துவர  மன்னன் ரதத்தில் பவனி வந்தான்)
அதாவது மேனி முழுவதும் சுற்றிக்  கட்டுவதால்  வந்தது தான் புடைவை
புடைவை மருகி புடவை ஆகி இப்போது பொடவை என்றும் புடவ என்றும் சில இடங்களில் மருகிவிட்டது.tw_blush:

15209624c5ca443e8bc9adde92c54ec0.jpg

 

வாத்தியார் சொன்னது ஏற்புடையதாக உள்ளது. அதுபோல புடைத்திருந்தது என்பது பெருத்திருந்தது எனப் பொருள்படும்.. அதனாலும் இருக்கலாம் இல்லையா?! icon_rolleyes.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு தமிழில் பூந்து விளையாடுகிறார்கள்  "சாரி / சாறி " கொஞ்சம் தள்ளி நிற்பம் 

  • தொடங்கியவர்
On 23/09/2016 at 3:43 AM, வாத்தியார் said:

அதாவது மேனி முழுவதும் சுற்றிக்  கட்டுவதால்  வந்தது தான் புடைவை

 

41 minutes ago, இசைக்கலைஞன் said:

15209624c5ca443e8bc9adde92c54ec0.jpg

 

 

அட பாவி 
வாத்தி எழுதினதை பாத்த பின்னுமா இந்த படத்தை இணைத்தீர்கள். :grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, இசைக்கலைஞன் said:

15209624c5ca443e8bc9adde92c54ec0.jpg

 

வாத்தியார் சொன்னது ஏற்புடையதாக உள்ளது. அதுபோல புடைத்திருந்தது என்பது பெருத்திருந்தது எனப் பொருள்படும்.. அதனாலும் இருக்கலாம் இல்லையா?! icon_rolleyes.gif

ஆ..... வாத்தியார் சொன்னது,  உண்மை தான் இசை.
இந்த  "நைலக்ஸ்" புடவை   கட்டின எத்தினை பேரை... கண்டும் காணாமல், கடைக்கண்ணால் பார்க்கும் போது....
அவர்கள், அந்த சீலைத் தலைப்பால்.... தங்கள் மார்பகத்தை மறைக்கும்... 
அழகும், வேகமும்... என்னை இன்றும் பிரமிக்க வைக்கும்.
இதுகளை.. இன்னும் உன்னிப்பாக  பார்க்க வேணும் போல்  உள்ளமை...  எனது "வீக்னஸ்". பாயிண்டு. :grin:  10.gif

Edited by தமிழ் சிறி

On 19/09/2016 at 9:41 AM, ஜீவன் சிவா said:

 

f0n7g2.jpg

 புடைவையகத்தை ஆங்கிலத்தில் Textiles என்றா கூறுவார்கள்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கரும்பு said:

 புடைவையகத்தை ஆங்கிலத்தில் Textiles என்றா கூறுவார்கள்? :rolleyes:

பாவம்.... அந்த முருகன்  கடைக்காரன். கரும்பு...
எல்லா... இடங்களிலும், எழுதியதை வைத்து... அவனும் பிழைக்க வந்த மனிதன்.
அவனுக்கு ஆங்கிலம் நன்கு  தெரிந்திருந்தால், அவன்... புடவை வியாபாரத்துக்கு இறங்கி இருக்க மாட்டான். 

புடவைக்கும், Textiles´க்கும்  என்ன சம்பந்தம் என்று...

ஆக்ஸ்பேர்ட்  டிக்ஸ்சனறி சொல்லுது.. என்பதை அறிய, எனக்கும் ஆவல். :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
28 minutes ago, கரும்பு said:

புடைவையகத்தை ஆங்கிலத்தில் Textiles என்றா கூறுவார்கள்? :rolleyes:

Textiles என்ற சொல் பிழையா அல்லது புடவையகம் என்பதற்கான மொழிபெயர்ப்பு பிழையா?

உங்கள் கேள்வி புரியவில்லை.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.