Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமைக்கு ரணில் மன்னிப்பு கோரினார்

Featured Replies

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமைக்கு ரணில் மன்னிப்பு கோரினார்

ranil
யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.1981ம் ஆண்டில் யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக மன்னிப்பு கோருமாறு கூட்டு எதிர்க்கட்சியினரிடமும் அவர் கோரியுள்ளார். 1981ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதாகவும் இது பிழையானது எனவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.

உங்களது அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக நீங்களும் மன்னிப்பு கோர வேண்டுமென பிரதமர் கூட்டு எதிர்க்கட்சியினரைப் பார்த்து தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் இந்த பகிரங்க மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கும் மன்னிப்பு கோரிவிட்டு தமிழர்கள் வாய்க்கு பூட்டுபோட்டுவிடுங்கள், எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, நவீனன் said:

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமைக்கு ரணில் மன்னிப்பு கோரினார்

ranil
யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.1981ம் ஆண்டில் யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக மன்னிப்பு கோருமாறு கூட்டு எதிர்க்கட்சியினரிடமும் அவர் கோரியுள்ளார். 1981ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதாகவும் இது பிழையானது எனவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.

உங்களது அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக நீங்களும் மன்னிப்பு கோர வேண்டுமென பிரதமர் கூட்டு எதிர்க்கட்சியினரைப் பார்த்து தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் இந்த பகிரங்க மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

35 வருட காலத்துக்கு பின்னர் மன்னிப்பு.....tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

35 வருட காலத்துக்கு பின்னர் மன்னிப்பு.....tw_angry:

உந்த நரி

தமிழர்கள் மீதான அனுதாபத்தில் சொல்லவில்லை

தம்மைக்கழுவ 

இதையும் பயன்படுத்துகிறார் அவ்வளவு தான்.

தமிழரைத்தழுவ வேண்டமாயின் தீர்வை வைக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உந்த நரி

தமிழர்கள் மீதான அனுதாபத்தில் சொல்லவில்லை

தம்மைக்கழுவ 

இதையும் பயன்படுத்துகிறார் அவ்வளவு தான்.

தமிழரைத்தழுவ வேண்டமாயின் தீர்வை வைக்கட்டும்

நரி என்ன கோவணத்தோட போகுது என்று தானே  யோசிக்க வேணும் விசுகர்... :rolleyes:

Edited by Nathamuni

நீதி, நேர்மை, ஜனநாயகம் பேணப்படும் நாட்டில் 6 தசாப்தங்களுக்கு மேலாக தமிழினப் படுகொலைகளையும், தமிழர் சொத்துக்கள் அழிப்பையும், தமிழர் சொத்துக்கள் கொள்ளையடிப்பையும், பல பாலியல் பலாத்காரங்களையும் முன்னின்று செய்த கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஒரு பயங்கரவாதக் குழுவாக தடை செய்யப்பட்டிருக்கும்.

இந்த ஐக்கிய தேசிய கட்சி என்னும் பயங்கரவாதக் கும்பலின் நீண்டகால உறுப்பினராகவும் இன்றைய தலைவராகவும் இந்த ரணில் விக்ரமசிங்க இருந்து வருகிறார். இந்த பயங்கரவாதக் கும்பலின் ஒரு நீண்டகால உறுப்பினராக இருக்கும் இன்னொருவர் சுவாமிநாதன் என்ற அறளை பேர்ந்த மனிதர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச தரத்திலான நீதி, இழப்பீடுகள், நிவாரணங்கள், அரசியல் அடிப்படை உரிமைகளை வழங்காமல் ஒரு மன்னிப்பு கோரல் மூலம் இந்தப் பயங்கரவாதிகள் தப்பிவிட முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமைக்கு ரணில் மன்னிப்பு கோரினார்

ranil
யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.1981ம் ஆண்டில் யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்காக மன்னிப்பு கோருமாறு கூட்டு எதிர்க்கட்சியினரிடமும் அவர் கோரியுள்ளார். 1981ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதாகவும் இது பிழையானது எனவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.

உங்களது அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்காக நீங்களும் மன்னிப்பு கோர வேண்டுமென பிரதமர் கூட்டு எதிர்க்கட்சியினரைப் பார்த்து தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் இந்த பகிரங்க மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

உந்த ஐடியாக்கள் எல்லாம் பனங்கொட்டை தமிழனுக்குத்தான் வரும்.......அது சரி ரணிலோடை இப்ப  எந்த பனங்கொட்டை ஒட்டு????? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்த நீதி....!

கண்ணீரே வற்றி விட்ட பிறகு...,

மன்னிப்புக் கேட்பதில் என்ன பயன்?

கலி முற்றிப் போய் விட்டதன் அறிகுறியா இது?

குள்ள நரியே...!

போய்ப் புத்தனின் காலில் விழு!

போகிற வழிக்குப் புண்ணியமாவது கிடைக்கும்!

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உந்த ஐடியாக்கள் எல்லாம் பனங்கொட்டை தமிழனுக்குத்தான் வரும்.......அது சரி ரணிலோடை இப்ப  எந்த பனங்கொட்டை ஒட்டு????? :cool:

சுவாமியே சரணம் ஐயப்பா ....அவர் தான் ஒட்டு

  • தொடங்கியவர்
'யாழ். நூலகத்தை புலிகளே எரித்தனர்'
 
 

article_1481091037-Jaffna-Librarymm.jpgயாழ்ப்பாணம் நூலகத்தை தாங்களே எரித்ததாக தமிழ்மக்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கேட்டார். எனினும், அந்த நூலகத்தை புலிகளே எரித்தனர் என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான உதய கம்மன்பில, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/187618/-ய-ழ-ந-லகத-த-ப-ல-கள-எர-த-தனர-#sthash.EKTw6vLI.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருந்த நூல்கள் எல்லாம் தாமாகவே எரிந்தது இவருக்கு தெரியாதா??

  • தொடங்கியவர்
'புலியிடமா ரணில் மன்னிப்பு கேட்டார்'
 
08-12-2016 08:44 AM
Comments - 0       Views - 7

article_1481166940-udaya.jpgஅழகன் கனகராஜ்

"யாழ். நூலகத்தை புலிகளே எரித்தனர். புலிகள் எரித்ததன் பின்னரே, தெற்கு குண்டர்களை பயன்படுத்தி, நூலகத்துக்கு எரியூட்டப்பட்டது" என்று தெரிவித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில, "அப்படியானால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தச் சபையில், புலிகளிடமா மன்னிப்புக் கேட்டார்?" என்று கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், "யாழ். நூலகத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் குண்டர்களே எரித்ததாகவும் அதற்காக, தான் மன்னிப்புக் கோருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களிடம், இந்தச் சபையிலிருந்து அண்மையில் மன்னிப்புக் கேட்டார். எனினும், யாழ்ப்பாணத்தில் கடமையிலிருந்த முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி எழுதிய புத்தகமொன்றில், யாழ்.நூலகத்தை புலிகளே எரித்தனர். அதற்கு பின்னரே, தெற்கிலிருந்து சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் குண்டர்கள் எரியூட்டினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

"அப்படியானால், ரணில் விக்கிரமசிங்க இந்த சபையில் இருந்து கொண்டு புலிகளிடமா பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும்" என்றும் கோரிநின்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/187645/-ப-ல-ய-டம-ரண-ல-மன-ன-ப-ப-க-ட-ட-ர-#sthash.dMDGTBjv.dpuf

மன்னிப்பு வார்த்தையால் அல்ல செயலால் காட்டப்பட வேண்டும்

தமிழ் மொழியில் மன்னிப்பு என்பது மிகவும் உன்னதமான சொல். அதற்குக் காரணம் மன்னிப்பு என்பது சொல்பவரையும் கேட்பவரையும் இணைக்கும் வல்லமை கொண்டது.

அதேவேளை இச்சொல் சொல்பவராலும் கேட்ப வராலும் ஏற்கப்படும்போது பெறுமதி பெறுவதா இருக்கின்றது. 

ஆகையால்தான் மன்னிப்பு என்ற சொற்பதம் அடிக்கடி பயன்படுத்தப்படாமல் முக்கியமான சந்தர்ப் பங்களில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றது.

அந்த வகையில் மன்னிப்பை ஏற்றுக் கொள்வது எந்தளவு தூரம் பெருந்தன்மையானதோ அதற்கு ஈடாக மன்னிப்புக் கேட்பதும் பெருந்தன்மை என்று கருதும் வழக்காறு தமிழ்ப்பண்பாட்டில் உள்ளது. 

இருந்தும் மன்னிப்பு என்ற உயர்ந்த வார்த்தை வெளிவந்த கணப்பொழுதே அதனைப் பிரயோகித்தவர் இன்னொரு தவறை இழைக்கக்கூடாது என்பதும் கவனத்துக்குரியது. இவை மன்னிப்புப் பற்றிய சில குறிப்புகள் மட்டுமே.

ஆ! அப்படியா? மன்னிப்புக்கு இப்படியொரு உயர்வு உள்ளதா? நடைமுறையில் அதனைப் பார்க்கலாமா? என்றெல்லாம் கேட்டால் நமது பதில் மெளனமாகவே இருக்கும்.

அந்தளவுக்கு இப்போது மன்னிப்பு என்பது மலிந்த - நலிந்த - மதிப்பற்ற சொல்லாகிப்போயிற்று. 

இது ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வைத்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அன்றைய நூலக எரிப்புக்காக மன்னிப்புக் கேட்கும் பொறுப்பைக் கொண்டவரா? எனில் ஆம் என்பதே பதிலாகும். 

1981ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியே நடந்தது.

எனவே அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி யில் நடந்த மிகப்பெரியதொரு அழிவுச் செயலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக் கேட்கும் பொறுப்பாண்மைக்குரியவர் என்பது ஏற்புடையது.

ஆனால் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக் கேட்பது உள்ளார்ந்தமானதாக இருந்தால், இனி மேல் இந்த நாட்டில் இந்த ஆட்சியில் தமிழ் மக்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளும் இடம் பெறக்கூடாது. 

அவ்வாறு இடம்பெறுமாக இருந்தால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வைத்து கேட்ட மன்னிப்பு அர்த்தமற்றது என்பதுடன் தற்போதைய ஆட்சியினர் இப்போது இழைக்கின்ற தவறுகளுக்காக இன்னும் 35 வருடங்களின் பின்னர் இன்னொரு பிரதமர் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கும்.

ஆகையால் தமிழ் மக்களுக்கு எந்தவித இடுக் கண்ணும் ஏற்படாதவாறு நல்லாட்சியினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இருந்தும் தமிழர் பகுதிகளில் இரவோடு இரவாக புத்தர் சிலையை அமைக்கும் பணி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. சிங்களக் குடியேற்றத்தை தமிழர் பிரதேசங்களில் நிறுவுவதில் படைத் தரப்பு முனைப்புக் காட்டி நிற்கின்றது. 

இப்படியான அநியாயங்கள் நடப்பதை முற்றாக நிறுத்தி; தமிழ் மக்களின் உரிமைகளை உரியவாறு வழங்கி இன்றைய அரசு தன்னை நல்லாட்சியாக நிரூபிக்கும் போது, யாழ்ப்பாணப் பொதுநூலக எரிப்பு மட்டுமன்றி இன்னும் பல அழிவுச் செயல்களுக்கான மன்னிப்பாக இவை அமையும் என்பது நம் தாழ்மையான கருத்து.

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவது என்பது வெறும் வார்த்தைகளால் அமைதல் அன்றி செயலால் ஆக வேண்டும். அதுவே உண்மையான மன்னிப்பு கோரலாகும்.  

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12627&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நவீனன் said:
'புலியிடமா ரணில் மன்னிப்பு கேட்டார்'
 
08-12-2016 08:44 AM
Comments - 0       Views - 7

article_1481166940-udaya.jpgஅழகன் கனகராஜ்

"யாழ். நூலகத்தை புலிகளே எரித்தனர். புலிகள் எரித்ததன் பின்னரே, தெற்கு குண்டர்களை பயன்படுத்தி, நூலகத்துக்கு எரியூட்டப்பட்டது" என்று தெரிவித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில, "அப்படியானால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தச் சபையில், புலிகளிடமா மன்னிப்புக் கேட்டார்?" என்று கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாணத்தில் முசுலீம்களே முசுலீம்களை வெளியேற்றினர். இந்த விடயத்தையும் உதய கம்மன் பில வுக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்கப்பா. 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமைக்கு ரணில் மன்னிப்பு கோரினார்

 

 

 

செந்தில் : அண்ணே ஒரு விளம்பரம் ..??

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
On 8.12.2016 at 6:26 PM, Athavan CH said:

மன்னிப்பு வார்த்தையால் அல்ல செயலால் காட்டப்பட வேண்டும்

தமிழ் மொழியில் மன்னிப்பு என்பது மிகவும் உன்னதமான சொல். அதற்குக் காரணம் மன்னிப்பு என்பது சொல்பவரையும் கேட்பவரையும் இணைக்கும் வல்லமை கொண்டது.

அதேவேளை இச்சொல் சொல்பவராலும் கேட்ப வராலும் ஏற்கப்படும்போது பெறுமதி பெறுவதா இருக்கின்றது. 

ஆகையால்தான் மன்னிப்பு என்ற சொற்பதம் அடிக்கடி பயன்படுத்தப்படாமல் முக்கியமான சந்தர்ப் பங்களில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றது.

அந்த வகையில் மன்னிப்பை ஏற்றுக் கொள்வது எந்தளவு தூரம் பெருந்தன்மையானதோ அதற்கு ஈடாக மன்னிப்புக் கேட்பதும் பெருந்தன்மை என்று கருதும் வழக்காறு தமிழ்ப்பண்பாட்டில் உள்ளது. 

இருந்தும் மன்னிப்பு என்ற உயர்ந்த வார்த்தை வெளிவந்த கணப்பொழுதே அதனைப் பிரயோகித்தவர் இன்னொரு தவறை இழைக்கக்கூடாது என்பதும் கவனத்துக்குரியது. இவை மன்னிப்புப் பற்றிய சில குறிப்புகள் மட்டுமே.

ஆ! அப்படியா? மன்னிப்புக்கு இப்படியொரு உயர்வு உள்ளதா? நடைமுறையில் அதனைப் பார்க்கலாமா? என்றெல்லாம் கேட்டால் நமது பதில் மெளனமாகவே இருக்கும்.

அந்தளவுக்கு இப்போது மன்னிப்பு என்பது மலிந்த - நலிந்த - மதிப்பற்ற சொல்லாகிப்போயிற்று. 

இது ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வைத்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அன்றைய நூலக எரிப்புக்காக மன்னிப்புக் கேட்கும் பொறுப்பைக் கொண்டவரா? எனில் ஆம் என்பதே பதிலாகும். 

1981ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியே நடந்தது.

எனவே அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி யில் நடந்த மிகப்பெரியதொரு அழிவுச் செயலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக் கேட்கும் பொறுப்பாண்மைக்குரியவர் என்பது ஏற்புடையது.

ஆனால் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்புக் கேட்பது உள்ளார்ந்தமானதாக இருந்தால், இனி மேல் இந்த நாட்டில் இந்த ஆட்சியில் தமிழ் மக்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளும் இடம் பெறக்கூடாது. 

அவ்வாறு இடம்பெறுமாக இருந்தால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வைத்து கேட்ட மன்னிப்பு அர்த்தமற்றது என்பதுடன் தற்போதைய ஆட்சியினர் இப்போது இழைக்கின்ற தவறுகளுக்காக இன்னும் 35 வருடங்களின் பின்னர் இன்னொரு பிரதமர் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கும்.

ஆகையால் தமிழ் மக்களுக்கு எந்தவித இடுக் கண்ணும் ஏற்படாதவாறு நல்லாட்சியினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இருந்தும் தமிழர் பகுதிகளில் இரவோடு இரவாக புத்தர் சிலையை அமைக்கும் பணி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. சிங்களக் குடியேற்றத்தை தமிழர் பிரதேசங்களில் நிறுவுவதில் படைத் தரப்பு முனைப்புக் காட்டி நிற்கின்றது. 

இப்படியான அநியாயங்கள் நடப்பதை முற்றாக நிறுத்தி; தமிழ் மக்களின் உரிமைகளை உரியவாறு வழங்கி இன்றைய அரசு தன்னை நல்லாட்சியாக நிரூபிக்கும் போது, யாழ்ப்பாணப் பொதுநூலக எரிப்பு மட்டுமன்றி இன்னும் பல அழிவுச் செயல்களுக்கான மன்னிப்பாக இவை அமையும் என்பது நம் தாழ்மையான கருத்து.

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவது என்பது வெறும் வார்த்தைகளால் அமைதல் அன்றி செயலால் ஆக வேண்டும். அதுவே உண்மையான மன்னிப்பு கோரலாகும்.  

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12627&ctype=news

பொருத்தமான  இடத்தில்,  அருமையான... இணைப்பு... ஆதவன். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.