Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

மன்னார் மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவன்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ரி.குருதயராஜ் அதிதிறமை சித்திகளை பெற்றுள்ளார்.

ரி.குருதயராஜ் 3 ஏ சித்தியை பெற்று வர்த்தக துறையில் மன்னார் மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் மாவட்ட மட்டத்தில் முதலாவது நிலையை பெற்று தான் கல்வி கற்ற மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கும், மன்னார் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது எதிர்கால இலட்சியமாக பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியானாலும், சுயமான தொழில் ஒன்றையே செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/education/01/130879?ref=editorpick

  • கருத்துக்கள உறவுகள்

மூளை வளர்ச்சிக்கு கொம்பிளான் குடித்து வளர்ந்தவர்களை விட 
கஞ்சி குடித்து வளர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்றது 
பல விடயங்களை உண்மைகளை சொல்லி நிட்கிறது.

யாழமாவட்ட குறிப்பாக யாழ் நகர மாணவர்களின் 
பின்னற்றத்தில் கைதொலைபேசி  பேஸ்புக் மற்றும் நவீன 
வாழ்கை முறை ஸ்கூட்டி கக்கூட்டி போன்றவை முக்கிய பங்கு ஏற்று இருக்கும் 
என்பதில் சந்தேகம் இல்லை. 

பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது ...........
"முந்துவோன் பிந்துவான், பிந்துவோன் முந்துவான்" என்று 
எனது கல்வி என்பதும் நாட்டுநிலமை குடும்ப நிலைமை காரணமாக 
இடை நின்று இடை நின்றே தொடர்ந்தது. அது ஒரு விதத்தில் அதிர்ஷ்ட்டமாக அமைந்தது 
இனி அமேரிக்கா அல்லது கனடாதான் ஒரே வழி என்ற நிலைமையை 
ஒரு வயதை கடந்தபோது உருவாக்கியது. அது மிகுந்த முன்னேற்றத்திட்கு வழி தந்தது. 
அதட்கு முக்கிய காரணம் தற்செயலாக ஒரு முறை பைபிளை படித்ததுதான்.
அந்த வசனம் எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்தது.

பின்தங்கியவர்கள் என்று தாழ்த்தப்பட்டு வறுமையை பழித்தவர்கள் முன்பு 
இந்த மாணவ கூட்டம் எழுந்து நிற்பது ....
எனது கண்ணில் நீரை வர செய்கிறது ! 

  • கருத்துக்கள உறவுகள்

உருப்படமாட்டாய் என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட எடிசன் தான்.. அதிக கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானியாக ஆனார். முயற்சி திருவினை ஆக்கும் என்று எம் தமிழ் சொல்லித் தந்ததை கைக்கொண்டால்.. வெற்றி நிச்சயம்.

இங்கு பலருக்கும் தெரிந்திருக்குமோ தெரியல்ல... இந்த மாணவன் படித்த பாடம்.. Biotechnology அன்று அறியப்படும்.. இன்றைய உலகில் முக்கியமாகப் பேசப்படும்.. ஒரு பாடப்பரப்பு. உண்மையில் மிகவும் உபயோகமான ஒரு பாடப்பரப்பு.. குறிப்பாக வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைக்கவல்ல.. ஒரு பாடப்பரப்பு.  உயிரினங்களைக் கொண்டு எப்படி.. உபயோகமான பொருட்களை தயாரிப்பது.. சந்தைப் படுத்துவது.. இலாபமீட்டுவது என்பதாக அமையும். அது மருத்துவத்தில் இருந்து... சாதாரண யோக்கட் வரை ஆதிக்கம் செய்யவல்லது.

அண்மையில்.. இங்கிலாந்துப் பிரதமர்.. கூட அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில்.. இத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கினார்.. காரணம்.. இதன் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்பதால். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தேர்வில் சித்தியடைந்த  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 போட்டி என்று வந்தால் எல்லோரும் வெல்ல முடியாது, ஒரு மூன்று மணித்தியால பரீட்சை ஒருவனின் தலை விதியை நிர்ணயிக்கிறது. நன்றாக படிக்கக் கூடியவர்களும், சந்தர்ப்பம் சூழ் நிலைகளால் நல்லாக  பரீட்சை எழுத முடியாமல் போகிறது.


சித்தியடையாதவர்கள் மனதை தளர விடாது, இந்த தோல்வியை சவாலாக எடுத்து பல்வேறு துறைகளில் முன்னேற முடியும். விழுந்தவன் எழுந்து நின்று தன் விடா முயற்சியால் வெற்றி பெறலாம். நியூட்டனின் மூன்றாம் விதியே இதைத்தான் சொல்கிறது.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு இலங்கை A/L கணித பிரிவில் C 3S. படிக்க கூடியவர், இதை விட கூட எடுத்து இருக்கலாம். 
அவர் பரீட்சை எழுதும் போது விதி வில்லனாக  83 கலவரம், அவரது அப்பா தனவந்தர், ஒரே நாளில் தனது வியாபாரத்தை இழந்து  உயிரை கையில் பிடித்துக் கொண்டு  ஒன்றும் இல்லாமல் ஊர் வந்து சேர்ந்தார். ஒரு வாறு double maths, physics முடிந்து விட்டது. ஆனால் Chemistry ஒத்தி வைக்கப் பட்டு ரெண்டு மாதங்களின் பின்னர் நடத்தப் பட்டது. இலங்கை பல்கலை கழகம் எடுபடவில்லை, பிரைவேட் ஆக படித்து இன்று ஒரு உயரிய பதவியில் உள்ளார் 

அவரது பட்டம் BSc (Hons), Msc (Eng), CEng, MIET

இதை எழுதுவதன் காரணம், வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் நாமே கோடு கீறுகிறோம். துவண்டு விடாதீர்கள் எழுந்து நில்லுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரீட்சையில் பங்குபற்றிய அனைத்து மாணவ மணிகளுக்கும் வாழ்த்துக்கள்.

4 hours ago, Maruthankerny said:

மூளை வளர்ச்சிக்கு கொம்பிளான் குடித்து வளர்ந்தவர்களை விட 
கஞ்சி குடித்து வளர்ந்த மாணவர்கள் முதலிடம் பெற்றது 
பல விடயங்களை உண்மைகளை சொல்லி நிட்கிறது.

யாழமாவட்ட குறிப்பாக யாழ் நகர மாணவர்களின் 
பின்னற்றத்தில் கைதொலைபேசி  பேஸ்புக் மற்றும் நவீன 
வாழ்கை முறை ஸ்கூட்டி கக்கூட்டி போன்றவை முக்கிய பங்கு ஏற்று இருக்கும் 
என்பதில் சந்தேகம் இல்லை. 

பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது ...........
"முந்துவோன் பிந்துவான், பிந்துவோன் முந்துவான்" என்று 
எனது கல்வி என்பதும் நாட்டுநிலமை குடும்ப நிலைமை காரணமாக 
இடை நின்று இடை நின்றே தொடர்ந்தது. அது ஒரு விதத்தில் அதிர்ஷ்ட்டமாக அமைந்தது 
இனி அமேரிக்கா அல்லது கனடாதான் ஒரே வழி என்ற நிலைமையை 
ஒரு வயதை கடந்தபோது உருவாக்கியது. அது மிகுந்த முன்னேற்றத்திட்கு வழி தந்தது. 
அதட்கு முக்கிய காரணம் தற்செயலாக ஒரு முறை பைபிளை படித்ததுதான்.
அந்த வசனம் எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்தது.

பின்தங்கியவர்கள் என்று தாழ்த்தப்பட்டு வறுமையை பழித்தவர்கள் முன்பு 
இந்த மாணவ கூட்டம் எழுந்து நிற்பது ....
எனது கண்ணில் நீரை வர செய்கிறது ! 

http://www.doenets.lk/exam/docs/comm/A.L 2015.pdf

தயவு செய்து இந்த அறிக்கையை படிக்கவும். வடக்கு மாகாணம் உச்சத்தில் அல்லவா நிற்கிறது !!!!

அதைவிட  Facebookம் கைத்தொலைபேசியும்  வட பகுதி மாணவர்களுக்கு மட்டுமா கிடைக்கிறது , தென் பகுதி சிங்கள முஸ்லீம் மாணவர்களுக்கு கிடைக்கவில்லையா?????

ஒரு அடிப்படை விடயத்தை நீங்கள் மறந்துவிட்டிர்கள. வடக்கு மாகாணம் என்பது  மிக பெரிய போர் நாடந்து வளமை நிலை திரும்பாத ஒரு பிரதேசம் , அதை கொண்டு போய் இலங்கையின் மற்றய பிரதேசங்களுடன் ஒப்பிடுவது தவறு 

இங்கே நாம் என்ன செய்கிறோம் என்றால்  உண்மையான காரணங்களை மறந்து , இல்லாத பிரச்சனைகளை தீர்க்க முற்படுகிறோம்.

We are barking up the wrong tree!!!!!

சிங்களவனுக்கும் அது தான் தேவை !!!!!!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பல நடுத்தர குடும்ப மாணவர்கள் தான்  பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள் வாழ்த்துக்கள்  பாராட்டுக்கள் 


 கஸ்டத்தை உணர்ந்தவர்கள் கால போக்கில் அதை மறந்து விடுகிறார்கள் 

பணக்கார பிள்ளைகள்  கைல உள்ள காசை வச்சி டாக்டர் ஆகுதுகள்  வெளிநாட்டில் படித்து இலங்கையில் இருந்து சென்று என்ன மாதிரி இது யாராவது முழு விளக்கம் தாங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Dash said:

http://www.doenets.lk/exam/docs/comm/A.L 2015.pdf

தயவு செய்து இந்த அறிக்கையை படிக்கவும். வடக்கு மாகாணம் உச்சத்தில் அல்லவா நிற்கிறது !!!!

அதைவிட  Facebookம் கைத்தொலைபேசியும்  வட பகுதி மாணவர்களுக்கு மட்டுமா கிடைக்கிறது , தென் பகுதி சிங்கள முஸ்லீம் மாணவர்களுக்கு கிடைக்கவில்லையா?????

ஒரு அடிப்படை விடயத்தை நீங்கள் மறந்துவிட்டிர்கள. வடக்கு மாகாணம் என்பது  மிக பெரிய போர் நாடந்து வளமை நிலை திரும்பாத ஒரு பிரதேசம் , அதை கொண்டு போய் இலங்கையின் மற்றய பிரதேசங்களுடன் ஒப்பிடுவது தவறு 

இங்கே நாம் என்ன செய்கிறோம் என்றால்  உண்மையான காரணங்களை மறந்து , இல்லாத பிரச்சனைகளை தீர்க்க முற்படுகிறோம்.

We are barking up the wrong tree!!!!!

சிங்களவனுக்கும் அது தான் தேவை !!!!!!

 

 

நான் வட மாகாணத்தை குறிப்பிடவில்லை 
குறிப்பிட்டு யாழ் நகர பகுதி மாணவர்களைத்தான் எழுதினேன்.
அதிக பெறுபேறுகளை பெற்ற கிளிநொச்சி மாணவர்கள் 
மாலை வகுப்புகளுக்கு போக கூட வசதி இல்லாதவர்கள் ...... கஷ்ட்டப்பட்டு 
போவது என்றாலும் தரமான மாலை வகுப்புகள் அவர்கள் பிரதேசங்களில் இருப்பதில்லை.


இதுவே எமது காலத்தில் பெறுபேறுகள் வரும்போது ....
பருத்தித்துறை காட்லி கல்லூரி முதலாமிடத்தில் இருக்கும் 
தொடர்ந்து யாழ் இந்து .... சென் ஜோன்ஸ் ... மானிப்பாய் ... வேம்படி மகளிர் ....தெல்லிப்பளை மகாஜனா 
என்று பொதுவாகவே இருக்கும்.
இவர்களுக்கு அதட்கான முன் ஏற்பாடுகள் என்பனவும் மற்ற மாணவர்களை விட 
அதிகமானதுதான்.

இந்த கல்லூரியில் இப்போ பரிட்ஸை எழுதியவர்கள் பெரும்பாலும் நேரிலே புலிகளையே 
கண்டிருக்காதவர்கள் இவர்களுக்கு போர் என்பது சூரியக்கதிர் நடவடிக்கைதான் அப்போ 
இவர்கள் 3-4 வயது சிறுவர்கள் அதன்பின்பு இவர்கள் இராணுவ கட்டுப்பாட்டில் வாழ்ந்தார்களே தவிர 
விடுதலை போராட்டம் இவர்களை பெரிதாக பாதித்துருக்கவில்லை.

தவிர எனது கருத்து வட மாகாணத்தை குறை கூறுவதோ அல்லது 
அதட்குள் ஏதும் குற்றம் காண்பதோ இல்லை. சாதாரண உளவியல் வாழ்க்கை மாற்றத்தில் 
ஏற்பட கூடிய காரணம்தான்.
சிங்கள இனவாதிகளின் திட்டமிட்ட கல்வி புறக்கணிப்பு எனபதை எதிர்கொள்வது 
என்பது எல்லா தமிழ் மாணவர்களுக்கும் உரிய ஒரு சவால்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்விதான் அடிப்படையில் முக்கியமானது 
இன்று இருக்கும் எந்த தமிழ் அரசியல்வாதியும் அதை கண்டுகொள்வதில்லை.
வேண்டுமானால் நல்ல பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுடன் சென்று ஒரு போட்டோ எடுத்து 
செய்தியில் போடுவார்கள் அதோடு சரி.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

நான் வட மாகாணத்தை குறிப்பிடவில்லை 
குறிப்பிட்டு யாழ் நகர பகுதி மாணவர்களைத்தான் எழுதினேன்.
அதிக பெறுபேறுகளை பெற்ற கிளிநொச்சி மாணவர்கள் 
மாலை வகுப்புகளுக்கு போக கூட வசதி இல்லாதவர்கள் ...... கஷ்ட்டப்பட்டு 
போவது என்றாலும் தரமான மாலை வகுப்புகள் அவர்கள் பிரதேசங்களில் இருப்பதில்லை.


இதுவே எமது காலத்தில் பெறுபேறுகள் வரும்போது ....
பருத்தித்துறை காட்லி கல்லூரி முதலாமிடத்தில் இருக்கும் 
தொடர்ந்து யாழ் இந்து .... சென் ஜோன்ஸ் ... மானிப்பாய் ... வேம்படி மகளிர் ....தெல்லிப்பளை மகாஜனா 
என்று பொதுவாகவே இருக்கும்.
இவர்களுக்கு அதட்கான முன் ஏற்பாடுகள் என்பனவும் மற்ற மாணவர்களை விட 
அதிகமானதுதான்.

இந்த கல்லூரியில் இப்போ பரிட்ஸை எழுதியவர்கள் பெரும்பாலும் நேரிலே புலிகளையே 
கண்டிருக்காதவர்கள் இவர்களுக்கு போர் என்பது சூரியக்கதிர் நடவடிக்கைதான் அப்போ 
இவர்கள் 3-4 வயது சிறுவர்கள் அதன்பின்பு இவர்கள் இராணுவ கட்டுப்பாட்டில் வாழ்ந்தார்களே தவிர 
விடுதலை போராட்டம் இவர்களை பெரிதாக பாதித்துருக்கவில்லை.

தவிர எனது கருத்து வட மாகாணத்தை குறை கூறுவதோ அல்லது 
அதட்குள் ஏதும் குற்றம் காண்பதோ இல்லை. சாதாரண உளவியல் வாழ்க்கை மாற்றத்தில் 
ஏற்பட கூடிய காரணம்தான்.
சிங்கள இனவாதிகளின் திட்டமிட்ட கல்வி புறக்கணிப்பு எனபதை எதிர்கொள்வது 
என்பது எல்லா தமிழ் மாணவர்களுக்கும் உரிய ஒரு சவால்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்விதான் அடிப்படையில் முக்கியமானது 
இன்று இருக்கும் எந்த தமிழ் அரசியல்வாதியும் அதை கண்டுகொள்வதில்லை.
வேண்டுமானால் நல்ல பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுடன் சென்று ஒரு போட்டோ எடுத்து 
செய்தியில் போடுவார்கள் அதோடு சரி.  

மருதர்,  2016 இல் பரீட்சை எழுதியவர்கள் 1997 இல் பிறந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர பரிட்சையில் வெளுத்துகட்டியிருக்கும் அனைத்து மாணவ மணிகளுக்கும் பாராட்டுகள் 
தொடர்ந்து இப்படியே பல சாதனைகளை கல்வியில் படைக்க வாழ்த்துகள் ...

தவறவிட்டவர்கள் தளர்ந்து போக தேவையில்லை ..தொடர்ந்து முன்னேற பலவழிகள் உள்ளன

6 hours ago, முனிவர் ஜீ said:

கஸ்டத்தை உணர்ந்தவர்கள் கால போக்கில் அதை மறந்து விடுகிறார்கள் 

பணக்கார பிள்ளைகள்  கைல உள்ள காசை வச்சி டாக்டர் ஆகுதுகள்  வெளிநாட்டில் படித்து இலங்கையில் இருந்து சென்று என்ன மாதிரி இது யாராவது முழு விளக்கம் தாங்கோ 

உண்மை தான் முனி ஜீ 

பணக்கார பிள்ளைகள் காசை வைத்து டாக்குத்தர் ஆகினாலும் ..தற்போதைய காலத்தில் மக்களுக்கு சேவை செய்வது இந்த பிள்ளைகளே 
இங்கே அரசு செலவில் படித்தவர்கள் 5 வருடங்கள் பல்லை கடித்துக்கொண்டு வேலை செய்கிறார்கள் (அரசு சட்டம் போட்டிருப்பதால்)
அதன் பின் வெளிநாட்டிற்கு பறந்து வெள்ளைக்காரனுக்கு சேவை செய்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்

சித்தி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். சித்தியடையாதவர்கள் கவலைப்பட வேண்டாம்...ஏதோ ஒரு வழியில் வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவும்.

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளது ரிசல்டைக் காணவில்லை :unsure:

  • தொடங்கியவர்

காரைதீவு விபுலானந்தாவில் மூவருக்கு 3ஏ! 2 மருத்துவம், 2 பொறியியல் தெரிவாகி சாதனை!

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை வெளியான க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகளின் படி இரண்டு மாணவர்கள் மருத்துவ துறைக்கும் இரண்டு மாணவர்கள் பொறியியல் துறைக்கும் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.

இக்கல்லூரியில் 03 மாணவர்கள் 3ஏ பெற்று மற்றுமொரு சாதனை நிகழ்த்தியுள்ளனர் என கல்லூரி அதிபர் வித்யாராஜன் தெரிவித்தார்.

உயிரியில் பிரிவில் திலகராஜா சிந்துவர்சி, கணிதத் துறையில் லோகநாதன் பிரசந்தியா, கலைத் துறையில் தம்பிராஜா டிருக்சிகா ஆகியோர் 3ஏ சித்திபெற்று சாதனை படைத்துள்ளனர்.

மருத்துவத் துறைக்குத் தெரிவான திலகராஜா சிந்துவர்சி 3ஏ பெற்று மாவட்டத்தில் 9 ஆவது இடத்திலுள்ளார்.

அதே துறையில் 2ஏ 1பி பெற்ற ரவீந்திரன் புவிலக்சன் மாவட்டத்தில் 18 ஆவது இடத்தில் உள்ளார்.

கடந்த 18 வருடகாலத்தின் பின்னர் இப்பாடசாலையிலிருந்து மருத்துவத்துறைக்கு ஆண் மாணவனொருவன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொறியியல் துறைக்கு லோகநாதன் பிரசந்தியா 3ஏ பெற்று மாவட்டமட்டத்தில் 06 ஆவது இடத்தில் உள்ளார். அதே துறையில் 2ஏ 1பி பெற்று நடேசானந்தம் சிந்துஜா தெரிவாகியுள்ளார்.

கலைத் துறையில் தம்பிராஜா டிருக்சிகா 3ஏ பெற்று மாவட்டத்தில் 06வது நிலையிலுள்ளார். தொழில்நுட்ப பொறியியல் துறையில் நாகேஸ்வரன் லுதர்சன் 3சி பெற்று மாவட்டத்தில் 13 ஆவது நிலையிலுள்ளார்.

இதேவேளை காரைதீவைச் சேர்ந்த மற்றுமொரு மாணவி சிவானந்தம் டிவானிகா(கல்முனை பற்றிமா தேசியகல்லூரி) உயிரியல்துறையில் 2ஏ1பி பெற்று மாவட்டத்தில் 28 ஆவது நிலையிலுள்ளார். இவர் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/education/01/130931?ref=home

கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் மாவட்ட மட்டத்தில் சாதனை

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையிலே பத்மகைலைநாதன் டிலூஜன் என்ற மாணவன் கடந்த வருடம் இடம் பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவன் விஞ்ஞானப் பிரிவில் 3 ஏ தரச் சித்திகளைப் பெற்று தனது பாடசாலையின் வரலாற்றிலே சாதனை படைத்துள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த மாணவனின் தந்தையார் பத்மகைலைநாதன் முன்னாள் ஆசிரியரும் ஊடகத்துறை, கலை, கலாச்சாரம் போன்ற விடயங்களிலும் துறைபோனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதுவரை கிடைக்கப் பெற்ற முடிவுகளின்படி 5 மருத்துவத் துறையிலும் 4 பொறியியல் துறையிலும் தமது மாணவர்கள் பெற்றுள்ளார்கள் என பற்றிமா அதிபர் வண.பிதா.பிறெய்ன்செல்லர் தெரிவித்தார்.

இது போன்று ஏனைய கலை, வர்த்தகம், கணிதம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் இம்முறை 3 ஏ தரச் சித்திகளைப் பெற்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளதுடன் அனைத்து பிரிவுகளிலும் அதி கூடிய மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/education/01/130929?ref=home

படுவான்கரைக்கு புகழ் சேர்த்துள்ள 4 மாணவர்கள்

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியான போரதீவுப்பற்று பிரதேச மாணவர்கள் பலர் இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வகையில் பேரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் 40 ஆம் கிராமத்தைச் சேர்ந்த ப.ஹாந்தரூபன் A 2,B சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 4 வது இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 161 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

மற்றும் இளைஞர் விவசாயாயத்திட்டம் எனும் கிராமத்தைச் சேர்ந்த க.மதிகரன் 3B சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 5 வது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 184 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

அதுபோல் களுமுந்தன்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த பே.யசோகாந் B 2, 1 C சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 24 வது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 998 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

அதுபோல் பா.பாரிதாஸன் 2 B,C சித்திகளைப் பெற்று மாட்ட மட்டத்தில் 11 வது இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 459 வது இடத்தையும் பெற்றுள்ளார்.

இந்த நான்கு மாணவர்களும் படுவான்கரையிலுள்ள பாடசாலைகயில் கல்விப் பொதுத்தர சாதாரணதரம் கற்று எழுவான்கரைப் பகுதியான மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்பப் பிரிவில் உயர்தரத்தில் கற்று நான்கு பேரும் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகியுள்ளார்கள்.

இந்த நான்கு மாணவர்களும் மிகவும் வறிய குடும்பத்தில் இருந்து கஸ்ட்டத்தின் மத்தியில் கற்று உயர் கல்வி கற்பதற்குத் தெரிவாகியுள்ளனர்.

இம்மாணவர்களின் உயர் படிப்புக்கு உரிய உதவிகளையும், அவர்கள் இவ்வேளையில் வேண்டி நிற்கின்றனர்.

யுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இப்போரதீவுப்பற்றுப் பிரதேசம் தற்போது மெல்ல மெல்ல கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/special/01/130966?ref=home

சித்தாண்டி விளையாட்டு வீரன் பொறியில்துறையில் மாவட்டத்தில் 3ஆம் இடத்தில் சாதனை!

கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையில் தொழிநுட்ப பொறியல் துறையில் சித்தாண்டியைச் சேர்ந்த விளையாட்டு வீரனான யோகேஸ்வரன் லோஜிதன் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் இம்முறை 3ஆம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

விளையாட்டு வீரனும் பொறியல்துறை மாணவனுமான யோகேஸ்வரன் லோஜிதன் லங்காசிறி சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

எனது குடும்பத்தில் நான் உட்பட இரண்டு தம்பி, ஒரு தங்கை, அப்பா மேசன் தொழிலாளி என்பதுடன் அவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரனும்கூட, நான் பாடசாலைக் காலத்தில் அதிகளவில் விளையாட்டில் ஈடுபடுவதுண்டு.

பல இடங்களில் விளையாட்டில் ஈடுபட்டு நினைவுப் பதக்கங்களும் பெற்றுள்ளேன்.

நான் பொறியில் தொழில் நுட்பம் வீ, தொழில் நுட்பத்திற்கான விஞ்ஞானம் வீ, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வீ சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்த்தில் 3வது இடம் பெற்றுள்ளேன்.

அத்துடன் எனது உயர்தரப் படிப்புடன் கூடியதான விளையாட்டுடன்தான் இறுதியாக முடிந்தது.

ஒரு சில பெற்றோர்கள் பிள்ளைகளை விளையாடுவதற்கு விடுவதில்லை, விளையாட்டையும் படிப்பபையும் சேர்த்து விரும்பியதால் தான் இந்த நிலையில் ஆரோக்கியமாக முன்னேற முடிந்துள்ளது என நம்புகின்றேன்.

உயர்தரத்தில் என்னை விஞ்ஞானப் பிரிவுக்கு மாறுமாறு திணித்தனர். ஆனால் அசையவில்லை எனக்கு பிடித்த துறை பொறியியல் துறை என்பதால் என்னுடைய விருப்பத்தின்பேரில் படித்து இன்றைய நிலையில் மாட்டத்தில் 3ஆவது இடத்தினைப் பெற்றுள்ளமைக்கு அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் உயர் கல்வியை முடித்த பின்னர் எனது கிராமம் சார்ந்த தங்களின் குடும்ப நிலை சூழ் நிலை காரணமாக கல்வியைத் தொடரமுடியாத மாணவர்களை இனம் கண்டு அவர்களின் கல்விக்குரிய ஒத்துழைப்பை வழங்குவதுடன் அதிகமான பொறியல்துறை மாணவர்களை உருவாக்குவதும் எனது இலக்காகவுள்ளது.

எனது குடும்பத்தின் நிலையினை உணர்ந்து, அப்பா மேசன் தொழிலாளி குடும்பத்தில் 4 பேர் பாடசாலை கல்வியை தொடர்கின்றார்கள், எனது உயர்கல்வியை தொடர்வதற்க்குரிய கல்விக்கான உதவிகளைச் நல்ல உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன், அத்துடன் லங்காசிறி செய்திச் சேவைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

இதேவேளை தொழில் நுட்பத்துறையில் 6,16,18 இடங்கள் கிடைத்துள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த வருடத்தில் மாவட்டத்தில் பல முதன்மை இடங்களைப் பெற்று தொழில் நுட்பத்துறையில் பல்வேறு பிரிவுகளில் அதிகமான மாணவர்கள் பல்கலைகழகம் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

http://www.tamilwin.com/special/01/130976?ref=home

  • தொடங்கியவர்

80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்..! 6 அதிபர்களை பணி நீக்க நடவடிக்கை..

கடந்த வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு கோட்டா முறையில் பல்கலைக்கழகத்துக்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த சிறப்புச் சலுகையைப் பெற ஏனைய பகுதி மாணவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்கு சென்று பரீட்சைகளை எழுதுவதாக தெரியவந்துள்ளது.

எனவே, கல்வி அமைச்சினால் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த விவகாரம் குறித்து ஆறு அதிபர்களை பணி நீக்கம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/statements/01/130979?ref=home

  • தொடங்கியவர்

செங்கலடி மத்திய கல்லூரியில் 21 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி

வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியில் 65 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதுடன், 21 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தெரிவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இக்கல்லூரியில் கணித பிரிவில் இரண்டு மாணவர்களும், உயிரியல் விஞ்ஞான துறைக்கு இரண்டு மாணவர்களும், சட்டத்துறைக்கு இரண்டு மாணவர்களும், கலைத்துறைக்கு பதினைந்து மாணவர்களும் தெரிவாகியுள்ளதாக கல்லூரி முதல்வர் கு.அருணாசலம் தெரிவித்தார்.

சட்டத்துறைக்கு தெரிவாகியுள்ள செல்வி வடிவேல் வசந்தலா மூன்று பாடங்களிலும் ஏ சித்திபெற்று மாவட்டத்தில் ஐந்தாம் இடத்தையும், செல்வன் அருளானந்தம் சிலுக்சன் முன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்று மட்டத்தில் எட்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இணைந்த கணிதம், வணிகக்கல்வி, கிறிஸ்தவம், நடனம், நாடகமும் அரங்கியலும், புவியியல் ஆகிய பாடங்ளில் மாணவர்கள் நூறு சதவீதம் சித்திபெற்றுள்ளனர்.

கடந்த முறை உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் வர்த்தகப் பிரிவில் மூன்று மாணவர்களும், கலைத்துறையில் 12 மாணவர்களுமாகச் சேர்த்து மொத்தமாக 15 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்ற நிலையில், இம்முறை 21 மாணவர்கள் பல்கலைக்கழக தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/community/01/131110?ref=home

அது என்ன உயிரியல் தொழில்நுட்பம் என்று ஒரு புதியபிரிவு உள்ளது? இந்தப்பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெறுபவர்கள் பல்கலைக்கழகத்தில் எத்துறையில் கற்பார்கள்? இவர்கள் மருத்துவர்களாக வரமுடியுமா?

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்
1 hour ago, கலைஞன் said:

அது என்ன உயிரியல் தொழில்நுட்பம் என்று ஒரு புதியபிரிவு உள்ளது? இந்தப்பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெறுபவர்கள் பல்கலைக்கழகத்தில் எத்துறையில் கற்பார்கள்? இவர்கள் மருத்துவர்களாக வரமுடியுமா?

மருத்துவர்களாக வரமுடியாது! உயிரியல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அல்லது உயிரியல் விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் பல்கலைக்கல்வியை தொடரலாம்.
 
அதுபோல தகவல் தொழில்நுட்ப பிரிவும் உள்ளது. இவர்கள் பாரம்பரிய பொறியியலாளர்களாக வரமுடியாது. ஆனால் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அல்லது பௌதிக விஞ்ஞானம் சார்ந்த துறைகளில் பல்கலைக்கல்வியை தொடரலாம்.

 

  • தொடங்கியவர்

மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி

கடந்த வருடம் இடம் பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் மாணவியான தயானந்தன் நேகாசினி மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இவர் கணிதப் பிரிவில் பரிட்சைக்குத் தோற்றி 1A, 2B சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாவது நிலையை பெற்று தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அந்த மாணவி தனது சாதனைக்கு இறை பத்தியும் பெற்றோரின் ஆசிர்வாதமும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பும் விடா முயற்சியும் காரணமாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/education/01/130924

 

வவுனியாவில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள்

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என பாடசாலையின் அதிபர் பி.கமலேஸ்வரி தெரிவித்தார்.

இதனடிப்படையில் கா.துசாந்தினி 3 ஏ, அ.அபிராமி 3 ஏ, வி.டிலக்சனா 3 ஏ, யோ.ரட்சனா 2 ஏ - பி மற்றும் த.டிலக்சனா 2 ஏ - பி ஆகிய மாணவிகள் மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளனர்.

உயிரியல் தொழில்நுட்ப துறைக்கு மாவட்ட மட்டத்தில் ச.திருஸ்ரிகா 4 ஆம் இடத்தினையும் சு.பிரியதர்சினி 6 ஆம் இடத்தினையும் சு.விபீசா 10 ஆம் இடத்தினையும் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.

கலைத்துறையில் செ.பிருந்தா 3 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் வர்த்தக துறையில் கீர்த்திகா பொன்ராசா 3 ஏ, ஜர்சனா ஜெயமோகன் 3 ஏ, துசாந்தி கனகலிங்கம் 3 ஏ மற்றும் திவ்வியா மோகனராஜா 3 ஏ சித்திகளையும் பெற்றுள்ள நிலையில் வர்த்தக பிரிவில் தோற்றிய அனைத்து மாணவிகளும் 100 வீத சித்தியையும் பெற்றுள்ளனர்.

இதே வேளை இப்பாடசாலையில் இருந்து விஞ்ஞானதுறையில் 55 மாணவிகளும் கலைத்துறைக்கு 52 மாணவிகளும் வர்த்தகதுறையில் 46 மாணவிகளும் உயிரியல் தொழில் நுட்பதுறையில் 48 மாணவிகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/education/01/131159?ref=home

நுவரெலியா மாவட்டத்தில் சாதனை படைத்த தமிழ் மாணவி!

வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின் தமிழ் மாணவி, கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஜெபமாலை செலஸ்டினா என்ற மாணவியே 3A என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார்.

மேலும் அகில இலங்கை ரீதியில் 114ஆம் இடத்தினை பெற்றுள்ளார். இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

ஜெபமாலை, சரோஜா தேவி தம்பதியரின் புதல்வியான இவரை, அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/special/01/130974

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயம் உயர்தர பரீட்சையில் வரலாற்றுச் சாதனை

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகாவித்தியாலயம் 2016 க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி 31 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளனர்.

குறித்த மாணவர்களில் 3மாணவிகள் மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த கல்லூரியில் 106 வருட வரலாற்றில் இவ்வருடமே 03 மாணவர்கள் மருத்துவத்துறைக்கு உள்வாங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, செல்வி.சிவரஞ்சன் சிவாஞ்சலி (மாவட்டநிலை 03), செல்வி.மயில்வாகனம் பிரியங்கரி (மாவட்டநிலை 09), இராஜபாரதிசஞ்சிதா (மாவட்டநிலை 28) அதில் சிவாஞ்சலி அதிவிசேட சிறப்பாகத் தெரிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விட பௌதிக, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 09மாணவிகளும் ,வர்த்தகப்பிரிவில் 06 மாணவிகளும் கலைப்பிரிவில் 13மாணவிகளும் பல்கலைக்கழகம் செல்ல உள்ளனர் என கூறப்படுகின்றது.

மேலும், மாணவிகளையும் கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர் திலகவதி ஹரிதாஸ் ,பிரதிஅதிபர்களும், ஆசிரியர்களும், பாடசாலைஅபிவிருத்திக் குழுவினரும் ,பழையமாணவர் மன்றத்தினரும், நலன்விரும்பிகளும், பிரதேச மக்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/131122?ref=youmaylike2

  • தொடங்கியவர்

தோட்டம் செய்து பாடசாலைக்கு நடந்து சென்று உயர்தர பரீட்சையில் சாதித்த மாணவன்

வெளியாகிய கல்விப் பொது உயர்தரப் பரீட்சையில் வடமாகாணத்தில் உயிர்முறைகள் தொழில்நுட்பபிரிவில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மணிவேல் தர்மசீலன் என்ற மாணவனே உயிர்முறைகள் தொழில் நுட்பப்பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.

வடமாகாணம் மற்றும் வவுனியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இது குறித்து அந்த மாணவன் கருத்து தெரிவிக்கையில்,

எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. மிகவும் கஷ்டப்பட்டு தான் படித்தேன். ஆனால் இப்படி வருவேன் என எதிர்பார்க்கவில்லை. எனது அம்மா, அப்பா தோட்டம் செய்து தான் என்னை படிக்க வைத்தார்கள்.

நானும் அவர்களுடன் இணைந்து விடுமுறை நாட்களிலும், மாலை வேளைகளிலும் தோட்டம் செய்து தான் படித்தேன்.

எனது கிராமம் செட்டிகுளம், நித்திக்குளம் மிகவும் பின் தங்கியது. இக்கிராமத்தில் இருந்து எனது பாடசாலை 9 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.

அதில் இரண்டு கிலோமீற்றர் தூரம் வாகனப் போக்குவரத்து இல்லை. நடந்து சென்று பிரதான வீதிக்கு போனதும் பேருந்தில் ஏறியே பாடசாலை சென்று படித்தேன்.

சில நாட்களில் முதலாம் பாடம் முடிந்த பின் கூட நான் பாடசாலை போன சம்பவம் உள்ளது.

பிரத்தியேக வகுப்புக்கு இரண்டு பாடத்திற்கு சென்றிருந்தேன். அதற்கு 15 கிலோமீற்றர் பேருந்தில் சென்றே படித்தேன்.

இப்படியான ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து ஒரு விவசாயி மகன் வடமாகணத்தில் முதலிடம் பெற உழைத்தவர்களை என்னால் மறக்க முடியாது.

எனது பாடசாலை அதிபர், எனக்கு கற்பித்த ஆசிரியர்கள், நான் நடந்து செல்லும் போது சில சந்தர்ப்பங்களில் என்னை ஏற்றி பேருந்து வரும் பாதையில் இறக்கிவிட்ட இந்த ஊர் மக்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தமது வியர்வை சிந்தி என்னை படிக்க வைத்த அம்மா, அப்பா எல்லோருக்கும் எனது நன்றிகள்.

எதிர்காலத்தில் பரீட்சை எழுதவுள்ள எனது தம்பி, தங்கையர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒரு விவசாயி மகனான என்னால் நடந்து சென்று இவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியில் சாதிக்க முடிந்திருக்கின்றது என்றால் ஏன் உங்களால் முடியாது.

நிச்சயமாக ஒவ்வொரு மணித்துளிகளையும் பயனுள்ளதாக பன்படுத்துங்கள். வெற்றி பெறுவீர்கள் எனத் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/education/01/131092

 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மாணவர்களின் சாதனை - முதல் 10 இடங்களில் யாழ்!

2016ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவு ரீதியாக அகில இலங்கையில் முதல் 10 இடங்களைப் பெற்ற பாடசாலைகள் தொடர்பிலான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

2016ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இந்த விபரங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிணங்க முதல் பத்து பாடசாலைகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து ஒரு பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அகில இலங்கை ரீதியில் விஞ்ஞான பிரிவில் முதல் 10 இடங்களில் யாழ் பாடசாலைகள் இரண்டும் இணைந்துள்ளன.

விஞ்ஞானப் பிரிவில் முதல் பத்து இடங்களை பிடித்த பாடசாலைகளின் விபரங்கள் கீழ்வருமாறு...

  1. விசாகா வித்தியாலயம் - கொழும்பு
  2. தேவி பாலிகா வித்தியாலயம் - கொழும்பு
  3. மெதடிஸ்ட் கல்லூரி கொழும்பு
  4. சென்.தோமஸ் கல்லூரி - கல்கிஸ்ஸ
  5. மியூசியஸ் கல்லூரி - கொழும்பு
  6. வேம்படி பெண்கள் வித்தியாலயம் - யாழ்ப்பாணம்
  7. ரோயல் கல்லூரி - கொழும்பு
  8. ஆனந்த வித்தியாலயம் - கொழும்பு
  9. சாஹிரா வித்தியாலயம் - திருகோணமலை
  10. ஹாட்லி வித்தியாலயம் - பருத்தித்துறை

கடந்த வருடம், மொத்தமாக உயர்தர பரீட்சைக்கு 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்களுள் 30 ஆயிரம் பேர் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

http://www.tamilwin.com/education/01/132949?ref=youmaylike2

  • தொடங்கியவர்

பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருப்பவரா நீங்கள்..? இதோ உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2016ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள், பல்கலைக்கழக அனுமதிக்காக ஒன்லைன் ஊடாக விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார இதனைத் தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றி உரிய தகுதிகளைப் பெற்றுக்கொண்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பம் செய்வதற்கான விண்ணப்பக் கையேடுகள் மற்றும் விண்ணப்பங்கள் ஆகியன நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கையேட்டை தெளிவாக வாசித்து ஒன்லைன் ஊடாக இணையத்தில் கற்கைநெறி மற்றும் பீடங்களுக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/education/01/133023?ref=home

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.