Jump to content

நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன்


Recommended Posts

நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன்

 


நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன்
 

பணிப்பகிஷ்கரிப்பினாலோ, சதித்திட்டங்களைத் தீட்டியோ, அத்தியாவசிய சேவைகளைக் குழப்பியோ அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவை குழப்பப்படுவதை நிறுத்தவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளைக் குழப்புவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்பதுடன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க வேண்டுமாக இருந்தால், அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் என தாம் முன்னெச்சரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

”சரியான தீர்மானங்களை எடுக்க முடியாவிட்டால் அது அரசாங்கத்தின் பலவீனமே. எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால் எதிர்க்கட்சியின் இடையூறுகள் அதிகரிக்கும். வினைத்திறனான முறையில் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அதனை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்,” என பாராளுமன்றத்தில் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

பெட்ரோலியத்துறை ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்டது.

 

காணொளியில் காண்க…

 

http://newsfirst.lk/tamil/2017/07/நாட்டை-சிறந்த-முறையில்-ந/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா ..உங்கடையைக் கொடுங்கோ

Link to comment
Share on other sites

46 minutes ago, alvayan said:

ஐயா ..உங்கடையைக் கொடுங்கோ

இருந்தால் தானே கொடுக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

 

அதுசரி உந்த வீடியோவிலை பேசின இரண்டு பேரும் ஆளும்கட்சியிலை இருக்கினமோ இல்லாட்டி எதிர்க்கட்சியிலை இருக்கினமோ????tw_tounge:

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

அதுசரி உந்த வீடியோவிலை பேசின இரண்டு பேரும் ஆளும்கட்சியிலை இருக்கினமோ இல்லாட்டி எதிர்க்கட்சியிலை இருக்கினமோ????tw_tounge:

அதுசரி உந்த வீடியோவைவைப் பாத்தணீன்களோ

இதுதான் ஒரு எதிர்க்கட்சிக்கு அழகு.

சும்மா வாய் கிழிய விதண்டாவாதம் பண்ணாமல் நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது அரசுடன் கைகோத்து இருப்பது / இதைத்தான் மேலைய்த்தேய நாடுகளில் செய்கிறார்கள் என்று சொன்னால் புரியவா போகுது அங்கு வாழும் பலருக்கு.

சபாஷ் சம்பந்தர் + சுமந்திரன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிட்கு ஒரு பிரச்சனை எண்டால் அரசுடன் கைகோக்கவேண்டும். தமிழர்க்கு ஒரு பிரச்சனை எண்டா அவர்களை அம்போ எண்டு கைவிட்டிட்டு நாட்டை விட்டு ஓட வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

அதுசரி உந்த வீடியோவைவைப் பாத்தணீன்களோ

இதுதான் ஒரு எதிர்க்கட்சிக்கு அழகு.

சும்மா வாய் கிழிய விதண்டாவாதம் பண்ணாமல் நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது அரசுடன் கைகோத்து இருப்பது / இதைத்தான் மேலைய்த்தேய நாடுகளில் செய்கிறார்கள் என்று சொன்னால் புரியவா போகுது அங்கு வாழும் பலருக்கு.

சபாஷ் சம்பந்தர் + சுமந்திரன்.

 

வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர்தான் ஒரு சிறந்த எதிர்கட்சி தலைவருக்கு உதாரணம்.:10_wink:

என்னதான் இருந்தாலும் மகித்தாவுக்கு  இருக்கிற செல்வாக்கு சுமத்திரனுக்கோ சம்பந்தனுக்கோ சிங்கள மக்களிடம் ஒரு பொழுதும் கிடைக்கப்போவதில்லை.... என்பதை இந்த உத்தமர்கள் உணர வேண்டும்.... 

Link to comment
Share on other sites

ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவு வழங்காது தமிழ்க் கூட்டமைப்பு – சம்­பந்­தன் தெரிவிப்பு

 
ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவு வழங்காது தமிழ்க் கூட்டமைப்பு – சம்­பந்­தன் தெரிவிப்பு
  •  

ஆட்­சி­யைக் கவிழ்க்­கத் துடிக்­கும் மகிந்த அணி­யின் முயற்­சிக்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒரு­போ­தும் ஒத்­து­ழைப்பு வழங்­காது என நேற்­றுச் சபை­யில் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தன்.

தன்­னை­யும், எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யை­யும் கடு­மை­யாக விமர்­சித்த மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­த­ன­வுக்கு சம்­பந்­தன் உட­ன­டி­யா­கவே பதி­லடி கொடுத்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற அத்­தி­யா­வ­சிய பொதுச் சே­வை­கள் சட்­டத்­தின்­கீழ், எரி­பொ­ருள் வழங்­கல் மற்­றும் விநி­யோ­கம் ஆகி­ய­வற்றை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக அறி­விக்­கும் பிர­க­ட­னம் மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சம்­பந்­தன் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அரசு உட­ன­டி­யா­கத் தேர்­தலை நடத்­த­வேண்­டு­மென எனக்கு முன்­னர் உரை­யாற்­றிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­தன வலி­யு­றுத்­தி­னார். உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­த­லையோ அல்­லது மாகாண சபைத் தேர்­த­லையோ அவர் கோர­வில்லை. நாடா­ளு­மன்­றத் தேர்­த­லையே மகிந்த அணி­யி­னர் குறி­வைத்­துள்­ள­னர். அதையே அவர் கோரி­னார்.

அரசை முடக்­க­வேண்­டும்; ஆட்­சி­யைக் குழப்­ப­வேண்­டும்; ஆட்­சி­யைக் கவிழ்க்­க­வேண்­டும் என்­பதே மகிந்த அணி­யின் தொடர்ச்­சி­யான நோக்­க­மாக – அழுத்­த­மாக இருக்­கின்­றது. இது மக்­கள் ஆணைக்­குப் புறம்­பான செய­லா­கும்.

அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த ராஜ­பக்ச மீண்­டும் போட்­டி­யிட்­டார். அதில் அவர் தோல்வி அடைந்­தார். தலைமை அமைச்­சர் பத­விக்­கா­க­வும் அவர் கள­மி­றங்­கி­னார். அதற்கு மக்­கள் ஆணை வழங்­க­வில்லை. மாற்­றுத் தரப்­புக்கே மக்­கள் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கு­ரிய ஆணையை வழங்­கி­னர்.

எனவே, தேர்­தல் ஊடாக ஆட்­சி­யைக் கவிழ்ப்­பதை விடுத்து, உரிய காலத்­துக்கு முன்­னர் அதைச் செய்ய முற்­ப­டு­வது மக்­கள் தீர்ப்­புக்கு எதி­ரான செய­லா­கும்.

குறிப்­பிட்ட காலத்­துக்கு முன்­னர் ஆட்­சி­யைக் கவிழ்க்க வேண்­டு­மா­னால் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை கொண்­டு­வந்து அதை அர­ச­மைப்­புக்கு உட்­பட்ட ரீதி­யில் செய்­ய­லாம். இப்­படி எதை­யும் செய்­யாது – மக்­கள் ஆணைக்கு எதி­ரா­கச் செயற்­ப­டும் மகிந்த அணி உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­தன என்­னி­ட­மி­ருந்து எத்­த­கைய ஆத­ரவை எதிர்­பார்க்­கின்­றார்?

ஜன­நா­ய­கக் கட்­ட­மைப்பு வலுப்­பெ­ற­வேண்­டு­மா­னால் தொழிற்­சங்க கட்­ட­மைப்பு அவ­சி­யம். அவற்­றின் கோரிக்­கை­க­ளுக்கு செவி­ம­டுக்­க­வேண்­டும்.

எனி­னும், அர­சி­யல் நோக்­கங்­க­ளோடு முறை­யற்ற விதத்­தில் அத்­தி­யா­வ­சிய சேவை­களை முடக்­கும் வகை­யில் தொழிற்­சங்­கப் போராட்­டங்­களை நடத்தி அர­சைக் கவிழ்ப்­ப­தற்­கான முயற்­சி­களை ஏற்க முடி­யாது.

இத­னைத் தடுப்­ப­தற்கு அரசு தைரி­ய­மான முடி­வு­களை எடுத்து அவற்றைத் தைரி­ய­மாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும்-­­என்­றார்.

http://uthayandaily.com/story/14311.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்று கொடுப்பதற்கும் உங்களுக்கு அந்த எழும்பு வேண்டுமுங்கோ...

Link to comment
Share on other sites

8 hours ago, ஜீவன் சிவா said:

அதுசரி உந்த வீடியோவைவைப் பாத்தணீன்களோ

இதுதான் ஒரு எதிர்க்கட்சிக்கு அழகு.

சும்மா வாய் கிழிய விதண்டாவாதம் பண்ணாமல் நாட்டிற்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது அரசுடன் கைகோத்து இருப்பது / இதைத்தான் மேலைய்த்தேய நாடுகளில் செய்கிறார்கள் என்று சொன்னால் புரியவா போகுது அங்கு வாழும் பலருக்கு.

சபாஷ் சம்பந்தர் + சுமந்திரன்.

 

நாங்கள் புலம்பெயர்ந்து வாழும் வாழும் மேலை நாடுகள்பற்றி அறிந்த, அனுபவித்த வரையில் இங்கு அரசுகள் மக்களுக்காகவே செயற்படுகின்றன. தேசியத்துக்குப் பாதகம் ஏற்பாடாது, அரசானது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, எதிர்க்கட்சிகளும் பூரண ஆதரவுநல்கிச் செயற்படுகிறார்கள். அதனை நீங்களும் அனுபவரீதியாக உணர்திருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் வாழ்ந்த மேலைநாடு உலகத்திலேயே மக்கள் சந்தோசமாக வாழும் நாடுகளில் 1ம் இடத்தைப் பெற்றுள்ளது. சீறீலங்காவின் சிங்கள அரசு அப்படியல்ல. மக்களை இனரீதியாகப் பிரித்து ஆட்சிசெய்கிறது. தமிழர்களை ஓரம்கட்டிச் சிங்களவரை அரவணைத்து சட்டங்களையும் இயற்றுகிறது. தேசியத்திற்குப் பிரச்சனை என்று வரும்போது முடிவெடுக்க முடியாமல் தங்கள் சிங்கள மதகுருமாரை நோக்கி ஓடுகிறது. இதனை அறிந்துதான் அரசுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் என்ற சம்பந்தர் ஐயா கூறிவிட்டு, அவரே அரசுக்கு ஆதரவு நல்க முயற்சிப்பதானது, சிங்கள அரசுசார்ந்து செயற்படும் அவருக்கும் முதுகெலும்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் அரை குறையாய் விளங்கிக்கொண்டால் இப்படியான வியாக்கியானங்கள் தான் வெளிவரும்..

 

Link to comment
Share on other sites

9 hours ago, Paanch said:

நாங்கள் புலம்பெயர்ந்து வாழும் வாழும் மேலை நாடுகள்பற்றி அறிந்த, அனுபவித்த வரையில் இங்கு அரசுகள் மக்களுக்காகவே செயற்படுகின்றன. தேசியத்துக்குப் பாதகம் ஏற்பாடாது, அரசானது எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, எதிர்க்கட்சிகளும் பூரண ஆதரவுநல்கிச் செயற்படுகிறார்கள். அதனை நீங்களும் அனுபவரீதியாக உணர்திருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் வாழ்ந்த மேலைநாடு உலகத்திலேயே மக்கள் சந்தோசமாக வாழும் நாடுகளில் 1ம் இடத்தைப் பெற்றுள்ளது. சீறீலங்காவின் சிங்கள அரசு அப்படியல்ல. மக்களை இனரீதியாகப் பிரித்து ஆட்சிசெய்கிறது. தமிழர்களை ஓரம்கட்டிச் சிங்களவரை அரவணைத்து சட்டங்களையும் இயற்றுகிறது. தேசியத்திற்குப் பிரச்சனை என்று வரும்போது முடிவெடுக்க முடியாமல் தங்கள் சிங்கள மதகுருமாரை நோக்கி ஓடுகிறது. இதனை அறிந்துதான் அரசுக்கு முதுகெலும்பு இருக்க வேண்டும் என்ற சம்பந்தர் ஐயா கூறிவிட்டு, அவரே அரசுக்கு ஆதரவு நல்க முயற்சிப்பதானது, சிங்கள அரசுசார்ந்து செயற்படும் அவருக்கும் முதுகெலும்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.  

ஒரு நாடும் மக்களும் அதன் அரசும் அரசியல்வாதிகளும் மாற்றம் தேவை என்று நியாயமாய் போராடும்போதும் + அரசுக்கு ஒத்துழைப்பை வழங்குவது நியாயமானது. இதனால்தான் நோர்வே இன்றும் முதலிடத்தில். அதற்குள் அப்படியான மாற்றமே தேவை இல்லை என்பவர்களுக்கு பதில்தர எனக்கு விருப்பமில்லை.

4 hours ago, Sasi_varnam said:

எல்லாவற்றையும் அரை குறையாய் விளங்கிக்கொண்டால் இப்படியான வியாக்கியானங்கள் தான் வெளிவரும்..

 

அதைத்தான் நானும் விலாவாரியா சொல்கின்றேன் + விளக்க முயற்சிக்கின்றேன்.

மறுபடியும் சட்டி சுடுகுதெண்டு நெருப்புக்குள்ளதான் குதிப்பன் எண்டா நான் ஒண்டும் பண்ண முடியாது. சட்டிய தூக்கி வெளியில வைக்கணும். அதுக்குத்தான் இந்த முயற்சி நடக்குது. 

இல்லை நெருப்புக்குள்ள குதிக்கணும் + அந்த வெக்கையில குளிர் காயனும் என்று நீங்கள் நினைத்தால் - நல்லூர் கந்தனுக்கு அரோகரா.:grin:

Link to comment
Share on other sites

சிறிலங்காவை எந்தவிதத்திலும் நோர்வேயுடன் ஒப்பிட முடியாது. சிறிலங்கா முற்று முழுதான இனவாத நாடு. சிறுபான்மையினரை நசுக்கி கொண்டிருக்கும் நாடு. சிறிலங்கா இனவாத நாடு இல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு போரும் அழிவும் வந்திருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

ஒரு நாடும் மக்களும் அதன் அரசும் அரசியல்வாதிகளும் மாற்றம் தேவை என்று நியாயமாய் போராடும்போதும் + அரசுக்கு ஒத்துழைப்பை வழங்குவது நியாயமானது. இதனால்தான் நோர்வே இன்றும் முதலிடத்தில். அதற்குள் அப்படியான மாற்றமே தேவை இல்லை என்பவர்களுக்கு பதில்தர எனக்கு விருப்பமில்லை.

அதைத்தான் நானும் விலாவாரியா சொல்கின்றேன் + விளக்க முயற்சிக்கின்றேன்.

மறுபடியும் சட்டி சுடுகுதெண்டு நெருப்புக்குள்ளதான் குதிப்பன் எண்டா நான் ஒண்டும் பண்ண முடியாது. சட்டிய தூக்கி வெளியில வைக்கணும். அதுக்குத்தான் இந்த முயற்சி நடக்குது. 

இல்லை நெருப்புக்குள்ள குதிக்கணும் + அந்த வெக்கையில குளிர் காயனும் என்று நீங்கள் நினைத்தால் - நல்லூர் கந்தனுக்கு அரோகரா.:grin:

சரி ...சரி.... நீங்கள் தான் இப்ப சூடா  இருக்கிற சட்டிய தூக்கி வைக்கிறேன், குட்டிய தூக்கி வைக்கிறேன் எண்டு ஊரில நிக்கிறியள். அல்லாட காவல்ல எல்லாம் நல்லபடி நடக்கும்.

Link to comment
Share on other sites

On 28/07/2017 at 8:23 PM, nunavilan said:

சிறிலங்காவை எந்தவிதத்திலும் நோர்வேயுடன் ஒப்பிட முடியாது. சிறிலங்கா முற்று முழுதான இனவாத நாடு. சிறுபான்மையினரை நசுக்கி கொண்டிருக்கும் நாடு. சிறிலங்கா இனவாத நாடு இல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு போரும் அழிவும் வந்திருக்காது. 

தெரியுதில்லை 

அதுக்குத்தான் மாற்றம் தேவை என்று மாற்றங்களும் + நிர்ப்பந்தங்களும் நடக்கின்றன. இதுக்குள்ளே நீங்கள் வேற புதுசா பழைய கதையுடன்.

இங்கு இப்போது வந்துபோகும் கள உறவுகளுடன் உரையாடுங்கள் / உங்கள் முகமூடிகளை கிழித்து எறிந்துவிட்டு - உண்மைகள் சிலவேளை புரியலாம். 

புரியல்லையா - நல்லூர் கந்தனுக்கு அரோகரா எண்டு சொல்லிட்டு இருக்க வேண்டியதுதான்

****

Link to comment
Share on other sites

Quote

 

இங்கு இப்போது வந்துபோகும் கள உறவுகளுடன் உரையாடுங்கள் / உங்கள் முகமூடிகளை கிழித்து எறிந்துவிட்டு - உண்மைகள் சிலவேளை புரியலாம். 

புரியல்லையா - நல்லூர் கந்தனுக்கு அரோகரா எண்டு சொல்லிட்டு இருக்க வேண்டியதுதான்.

 

உங்கு வந்து போன  பின்பும் அதே செய்தி தான்.

போர் முடிந்து இவ்வளவு காலமாகியும் உந்த பயங்கரவாத சட்டத்தை ஏன் நீக்க முடியவில்லை என கூறுங்கள் பார்க்கலாம்.

 

Link to comment
Share on other sites

16 minutes ago, nunavilan said:

உங்கு வந்து போன  பின்பும் அதே செய்தி தான்.

போர் முடிந்து இவ்வளவு காலமாகியும் உந்த பயங்கரவாத சட்டத்தை ஏன் நீக்க முடியவில்லை என கூறுங்கள் பார்க்கலாம்.

 

இது அரசியல் சம்பந்தப்பட்டது - எனக்கு தெரியாது

நான் மக்களின் வாழ்க்கை நிலையை வைத்தே அரசியலைப் பார்ப்பவன்.

மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் - அது மேம்பாடு

பயங்கரவாத சட்டமும் நிச்சயமாக நீக்கப்படும்.

அதுவும் நீக்கப்பட்டால் - முன்னாள் புலி உறுப்பினர் ஒரு தலைமை நீதிபதியை சுட முயற்சித்ததிற்கு எப்படி தண்டிக்கலாம் + வித்தியா கொலை வழக்கில் சிலரை எப்படி இப்பவும் உள்ள வைத்திருக்கலாம். ஆவா குழு + வாள் வெட்டு கோஷ்டியை எப்படி இப்பவும் உள்ள வைத்திருக்கலாம். போதைப் பொருள் கடத்தலில் அகப்பட்டவர்களை இப்பவும்  பிணை கொடுக்காமல் வைத்திருக்கிறார்களே.

இந்த சட்டம் அப்போது எமக்கு எதிரானது - இப்ப சாதகமானது // குரங்குகளை ஒழிக்க 

இதுவரை பொறுத்த நாம் இன்னமும் பொறுப்பமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துக்கு... ஒரு கருணாநிதி போல்....
ஈழத்துக்கு ... கிடைத்த அரசியல் வியாதி தான்... சம்பந்தன்.

சம்பந்தனை எந்தக்  காலத்திலும்... நம்ப முடியாத  சுயநல அரசியல்வாதி அவர். 
இதில்.... மாற்றுக கருத்துக்கு இடமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இது அரசியல் சம்பந்தப்பட்டது - எனக்கு தெரியாது

நான் மக்களின் வாழ்க்கை நிலையை வைத்தே அரசியலைப் பார்ப்பவன்.

மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் - அது மேம்பாடு

மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். நானும் சந்தோசப்படுகின்றேன்.
ஆனால் சந்தோசப்படும் மக்கள் எப்படி சந்தோசமாக  இருக்கின்றார்கள்?
எந்த விதத்தில் சந்தோசமாக இருக்கின்றார்கள்.
எல்லாம் காசு.

காசு இருந்தால் அம்மாவை தவிர எல்லாவற்றையும் வாங்கலாம்.

அது தான் ஈழத்தில் வசிக்கும் எம்மவரிடமும் நடக்கின்றது.

வெளிநாட்டு பணவரவு இருப்பவனுக்கு தடையற்ற வீதியும்...தடையற்ற உணவுவகைகளும் இருந்தாலே போதுமானது.

அடிப்படை உரிமைகள் அவனுக்கு அவசியமற்றது. சொந்தம் உறவுகள் எல்லாம் அவசியமற்றது.

காசு.

காசு வருது அனுபவி ராசா அனுபவி....

இதுதான் இன்றைய இலங்கைத்தமிழர்களின் அரசியல்.

ஏன் நீங்களே உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வந்தீர்கள்.

இது அங்கிருக்கும் எல்லோராலும் முடியுமா?

உங்கள்/உங்களைச்சார்ந்தவர்களின் நிலையை வைத்து பிறரை/பிறரின் அரசியலை எடை போடாதீர்கள்.
இன்றைய சுகபோகத்தை விரும்பி எதிர்கால சந்ததியினரை நட்டாற்றில் தள்ளிவிடாதீர்கள் என்றுதான் சொல்கிறோம்.

அதற்காக உங்கிருப்பவர்களை இரத்தக்களரி காணச்சொல்லவில்லை.

இனியாவது அரசியல் பம்மாத்துக்களை இனம் காணுங்கள் என்றுதான் சொல்கின்றோம். :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருக்கும் போது தானே இத்தனை அ ட்டூழியங்களும் அரங்கேறுகின்றதே. இந்தச் சட்டம் உண்மையான குற்றவாளிகளை தப்புவித்து அப்பாவிகளை தண்டிக்க உதவுகிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் திருமலையில்

கண்னியாவை சூள இப்ப அல்லா இருக்கிரார். 

கடர்கரைசேனைக்கும் அல்லா வந்திட்டாடடர்.(விகரையை தவிர வேறு மதத்தினர் புதிதாககட்ட முடியது) ஆனால் இவர்களுக்கு அனுமதி எப்படி கிடைத்தது ?

தோப்பூர் 12 டிவிசன் கொண்டு தனி முஸ்லிம் அலகு ஆகுகிறது.

 

Just now, ஜீவன் சிவா said:

இது அரசியல் சம்பந்தப்பட்டது - எனக்கு தெரியாது

நான் மக்களின் வாழ்க்கை நிலையை வைத்தே அரசியலைப் பார்ப்பவன்.

மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் - அது மேம்பாடு

பயங்கரவாத சட்டமும் நிச்சயமாக நீக்கப்படும்.

அதுவும் நீக்கப்பட்டால் - முன்னாள் புலி உறுப்பினர் ஒரு தலைமை நீதிபதியை சுட முயற்சித்ததிற்கு எப்படி தண்டிக்கலாம் + வித்தியா கொலை வழக்கில் சிலரை எப்படி இப்பவும் உள்ள வைத்திருக்கலாம். ஆவா குழு + வாள் வெட்டு கோஷ்டியை எப்படி இப்பவும் உள்ள வைத்திருக்கலாம். போதைப் பொருள் கடத்தலில் அகப்பட்டவர்களை இப்பவும்  பிணை கொடுக்காமல் வைத்திருக்கிறார்களே.

இந்த சட்டம் அப்போது எமக்கு எதிரானது - இப்ப சாதகமானது // குரங்குகளை ஒழிக்க 

இதுவரை பொறுத்த நாம் இன்னமும் பொறுப்பமே. 

Norway இல் பயங்கரவாத தடை சட்டத்தை வைத்தா இப்படியனவர்களை தண்டிக்கிறார்கள்?

(Please excuse me for spelling mistakes) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் காணிக்கு தமிழ் அமைச்சர் பணம் கொடுத்து விடுவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஐக்கிய இலங்கையில் தமிழனுக்கு மட்டும் தான் நடக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீ அப்பிடி யார் சொன்னது? நாட்டுக்கு இப்போ பணப்பிரச்சினை. கைகொடுப்பது அமைச்சரின் கடமை. 

Link to comment
Share on other sites

6 hours ago, putthan said:

தமிழர்களின் காணிக்கு தமிழ் அமைச்சர் பணம் கொடுத்து விடுவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஐக்கிய இலங்கையில் தமிழனுக்கு மட்டும் தான் நடக்கும்....

எங்கு இது நடந்தது ??

Link to comment
Share on other sites

3 minutes ago, Dash said:

எங்கு இது நடந்தது ??

இன்னமும் வாசிப்பு வேண்டும் தலைவா.

பல இடங்களில் நடந்தது + நடக்க இருக்குது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.