Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உத்தியோகபூர்வ மொழியாகும் தமிழ் – இரா.சம்பந்தன்

Featured Replies

உத்தியோகபூர்வ மொழியாகும் தமிழ் – இரா.சம்பந்தன்

 

வடக்கு, கிழக்கு மகாணங்களில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படும் விதத்தில் அரசமைப்பு உருவாகவுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரச அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவர்களின் மொழியில் அமைந்திருக்க வேண்டும். அரச வேலைகளில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

http://newuthayan.com/story/44277.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உத்தியோகபூர்வ மொழியாகும் தமிழ் – இரா.சம்பந்தன்

 

DMefM06UMAAtgfB.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஏற்கனவே வடகிழக்கில் உத்தியோக மொழியாகத்தானே இருக்கிறது.  முழு இலங்கையிலும் தமிழுக்குச் சம அந்தஸ்து இருக்கிறதென்று நினைக்கிறேன்.  நான் சொல்வது சரியோ தவறோ தெரியவில்லை.  தெரிந்தவர்கள் பதில் தாருங்கள். பிளீஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

அய்யாவுக்கு எல்லாம் பின்னால போகுது போல ...இப்போதான் தனிச்சிங்கள சட்டத்திற்கு எதிராக போராடி வெற்றி பெற்றிருக்கிறார் ..இனித்தான் தீர்வுக்கு போராடப்போறார் 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பீப்பி ஊதுறமோ பீலா விடுறமோ தப்பில்லை நம்மள இந்த உலகம் உத்துப்பார்க்கணும் அதான் நமக்கு தேவை  ஒரு ஆள் மைண்ட் வாய்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்ல கூடாது ...
ஐயா மிக சாணக்கியமாகவே 
ஒவ்வரு காயையும் நகர்த்துகிறார்.

வடக்கு ....இப்போது இருக்கும் அதே இடத்திலும் 
கிழக்கு.... இப்போது இருக்கும் அதே இடத்தலும் 
இருக்கும்படியாக ...... தீர்வு அமையும்படி 
வருகிற ஆண்டில் அடுத்த காயை ஐயா நகர்த்துவார்.

சிங்களவரிடம் இப்படித்தான் சாணக்கியமாக 
தீர்வை பெறவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.....ஐயோ...!

கேட்கவே புல்லரிக்குது!

வாழ்த்துக்கள் ஐயா...வரலாறு படைத்தமைக்கு...!

ஏற்கனவே இலங்கை முழுவதும் உத்தியோகபூர்வ மொழி என்று எழுத்தளவில் இருக்கும் நடைமுறையை வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தும் சம்பந்தனின் அரைவேக்காட்டு பித்தலாட்டத்துக்கு அவரது ஜால்றா கோஷ்டிகள் என்ன சொல்லப்போகிறார்கள்?

அல்லது அவர்கள் இப்பவும் இந்தியாவில கல்லூரி சேர்க்கையிலும், விசா எடுப்பதிலும் மும்மரமோ தெரியவில்லை.

சம்பந்தன் உடனடியாக 5ம் வகுப்பு பொதுஉளச்சார்பு பரீட்சை எழுத வேண்டிய ஆள்!

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

ஐயோ.....ஐயோ...!

கேட்கவே புல்லரிக்குது!

வாழ்த்துக்கள் ஐயா...வரலாறு படைத்தமைக்கு...!

அப்படியே... ஐயாவை, அவுஸ்திரேலியாவுக்கு கூப்பிட்டு, ஒரு பாராட்டு விழா நடத்தி விடுங்க. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

உத்தியோகபூர்வ மொழியாகும் தமிழ் – இரா.சம்பந்தன்

 

DMefM06UMAAtgfB.jpg

அந்தாள்... சீரியஸாக  சொல்லுது.
அதுக்கு.. நீங்கள் ஏன்? கொடுப்புக்குள்ளை  சிரிக்கிறீங்கள். :D:

  • தொடங்கியவர்
‘பிரிக்க முடியாத நாடே உருவாகின்றது’
 

வடமலை ராஜ்குமார், எஸ்.எல்.நௌபர்  

“புதிய அரசமைப்பில், பிரிக்க முடியாத நாடே உருவாகின்றது. அதனடிப்படையில், நாட்டில் உள்ள சகல மக்களும் ஒற்றுமையுடனும் சமத்துவத்துடனும் வாழமுடியும்” என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.  

“உத்தியோகபூர்வ மொழி சிங்களமும் தமிழுமாகும். அதனடிப்படையில், ஏழு மாகாணங்களில் சிங்கள மொழியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியும் உத்தியோகபூர்வ மொழியாகப் பயன்படுத்தப்படும் விதத்தில் அரசியல் யாப்பு உருவாகவுள்ளது” என்றார். 

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், நேற்று (06) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நாம் தற்போது 2017இன் இறுதியிலும் 2018 பிறக்கவும் உள்ள காலப்பகுதியில் உள்ளோம். எதிர்வரும் நாட்களில் பல தேர்தல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒற்றுமையாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டும்” என்றார். 

 “பிரதேச சபைகளில், மக்களின் இன விகிதாசாரங்களின் அடிப்படையில் உத்தியோ பூர்வ மொழிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். அரச அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படுகின்ற கடிதங்கள், யாருக்கு அனுப்பப்படுகின்றதோ, அவர்களின் மொழியில் அமைந்திருக்க வேண்டும். அரச உத்தியோகங்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும். இவ்வாறான விடயங்கள் மக்களின் சமத்துவத்தைப் பாதிக்கும். எனவே, அரசாங்க அதிகாரிகளும் இவ்விடயத்தில் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.   

http://www.tamilmirror.lk/செய்திகள்/பிரிக்க-முடியாத-நாடே-உருவாகின்றது/175-206758

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நவீனன் said:
பிரிக்க முடியாத நாடே உருவாகின்றது’
 

ஆனால்  இலங்கைக்கு பக்கத்தில் குட்டி தீவுகள் உருவாகும்  ...அதற்கு சீனா,இந்தியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் கவர்னர்களாக இருப்பார்கள்....இலங்கை பிரஜைகள் பிரிக்க முடியாது வெளிநாட்டு அரசுகள் பிரிக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நாம் தற்போது 2017இன் இறுதியிலும் 2018 பிறக்கவும் உள்ள காலப்பகுதியில் உள்ளோம். எதிர்வரும் நாட்களில் பல தேர்தல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒற்றுமையாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டும்” என்றார்.

 ஓகோ இதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்டமா

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

அந்தாள்... சீரியஸாக  சொல்லுது.
அதுக்கு.. நீங்கள் ஏன்? கொடுப்புக்குள்ளை  சிரிக்கிறீங்கள். :D:

DMefM06UMAAtgfB.jpg&key=27941dc730cf422e

அதுதானே மிக முக்கியமான தருணங்கள் கருமங்கள் நிறைவேற்ற வேண்டிய சின்னங்கள் பெட்டிகள் புள்ளடிகள் குறித்த சிந்தனையிலிருந்தே அனைத்தையும் சம்  ஐயா சொல்லுகிறார். கவனிக்கவும்.  

புலத்திலை இருந்துகொண்டு  குமாரசாமியையா  இப்படி ஒரு பழுத்த அரசியல்வியாதியை  இப்படிச் சொல்லக்கூடாது!

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.