Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமண உறவில் வன்புணர்வு: பெண்களுக்கு என்ன தீர்வு?

Featured Replies

திருமண உறவில் வன்புணர்வு: பெண்களுக்கு என்ன தீர்வு?

 
 

திருமண உறவில் வன்புணர்வு தொடர்பான சர்ச்சை ஏன்?

வன்புணர்வுபடத்தின் காப்புரிமைAFP Image captionஉருவகப் படம்

'கணவனுக்கு தேவைப்படும்போது எல்லாம் மனைவி பாலியல் உறவுக்கு தயாராக இருக்கவேண்டும் என்பது திருமணத்துக்கான அர்த்தம் அல்ல' - இதை கூறியிருப்பது டெல்லி உயர் நீதிமன்றம்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் சி. ஹரி ஷங்கர் அடங்கிய நீதிமன்ற அமர்வு இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

ரிட் ஃபவுண்டேஷன் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் திருமண உறவில் வன்புணர்வு தொடர்பான சட்டம் வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த பொதுநலன் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கம் பற்றி ரிட் ஃபவுண்டேஷனின் தலைவர் சித்ரா அவஸ்தியிடம் பிபிசி கேட்டறிந்தது.

பாலியல் வன்புணர்வு என்பதன் பொருள் திருமணமான பெண்களுக்கு மட்டும் பாரபட்சமாக சித்தரிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார் சித்ரா அவஸ்தி.

மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டால் அதுவும் வன்புணர்வு தானே? திருமண உறவும், கணவன் மனைவி என்ற பந்தமும் இருந்தாலும் வன்புணர்வு செய்யப்பட்டால் அதுவும் தண்டனைக்கு உரியது என்பதை சட்டத்தில் சேர்க்கவேண்டும் என்பதே பெண்களுக்கான நீதி என்று சித்ரா கூறுகிறார்.

திருமணம்படத்தின் காப்புரிமைTHINKSTOCK

பல பெண்களின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களை குறிப்பிட்டு அதன் அடிப்படையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருக்கிறார் சித்ரா. இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

இது ஒரு பொது நலன் மனு தாக்கல் என்பதால், டெல்லியைச் சேர்ந்த ஆண்களின் உரிமைகளுக்காக பணியாற்றும் 'மென் வெல்ஃபர் டிரஸ்ட்' என்ற அமைப்பு, நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை முன்வைத்தது.

 

 

மென் வெல்ஃபர் டிரஸ்ட்' அமைப்பின் தலைவர் அமித் லகானியின் கருத்துப்படி, 'திருமணமான பெண்களை, கணவன் எந்தவிதத்திலாவது கட்டாயப்படுத்தினால் அதற்காக பல சட்டங்கள் உள்ளன. அவர்கள் அந்த சட்டங்களின் உதவியை நாடலாம் என்ற நிலையில், திருமண உறவில் வன்புணர்வுக்காக தனிச்சட்டம் ஒன்று ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன?'

இந்த இடத்தில் ஒரு அடிப்படை கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. வன்புணர்வு மற்றும் திருமண வன்புணர்வு என்ற வார்த்தைகளுக்கு இடையில் உள்ள வேறுபாடு என்ன?

வன்புணர்வு

வன்புணர்வு என்றால் என்ன?

ஒரு பெண்ணை அவர் எந்த வயதினராக இருந்தாலும் அவரது விருப்பமின்றி -

  • அவரது உடலின் (பிறப்புறுப்பு அல்லது மலக்குடலில்) எந்த உறுப்பையும் செலுத்துவது வன்புணர்வு.
  • காம இச்சையை தணித்துக் கொள்ளும் நோக்கத்தில் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது வன்புணர்வு.
  • உடலின் அந்தரங்க உறுப்பின் எந்தவொரு பாகத்தையும் பெண்ணின் வாயில் வலுக்கட்டாயமாக திணிப்பது வன்புணர்வு
  • பெண்னுக்கு விருப்பமில்லாதபோது வாய்வழியாக உறவு கொள்ள கட்டாயப்படுத்துவதும் வன்புணர்வு.
வன்புணர்வுபடத்தின் காப்புரிமைTHINKSTOCK

இந்திய தண்டனைச் சட்டத்தின் 375ஆவது பிரிவு, கீழ்கண்டவற்றை வன்புணர்வுக் குற்றம் என்று வரையறுத்துள்ளது.

1. பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக உறவு கொள்வது

2. பெண்ணின் விருப்பம் இல்லாமல் உறவு கொள்வது

3. பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும், அந்த சம்மதம் பெறுவதற்காக அந்த பெண்ணிற்கோ அவரது நெருங்கியவர்களுக்கோ கொலை மிரட்டல் விடுவது, கெடுதல் செய்வதாக பயமுறுத்துவது ஆகியவையும் வன்புணர்வே.

4. மனநிலை சரியில்லாமல் இருக்கும் பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் அது வன்புணர்வே.

5. அதேபோல், எதாவது மருந்தின் மயக்கத்தில் அல்லது போதையின் தாக்கத்தில் இருக்கும் பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் அது வன்புணர்வே.

ஆனால் இதில் ஒரு விதிவிலக்கும் உள்ளது. 18 வயதிற்குக் குறைவான மனைவியுடன் உடலுறவு கொள்வது குற்றம் என்று கடந்த ஆண்டு அக்டோபரில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியது. அதுவும் வன்புணர்வு என்ற வரையறைக்குள் அடங்கும்.

வன்புணர்வுபடத்தின் காப்புரிமைBBC SPORT

மைனரான அதாவது 18 வயதுக்கு குறைவான மனைவி, தனது கணவன் தன்னுடன் உடலுறவு கொண்டதை ஒரு ஆண்டுக்குள் புகாராக பதிவு செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியது.

இந்த சட்டத்தின்படி, திருமணமான பெண்ணின் (18 வயதுக்கும் அதிகமானவர்) கணவர், மனைவியின் விருப்பமின்றி உறவு கொண்டால் நிலைமை என்ன என்பது பற்றி தெளிவாக இல்லை. எனவே திருமண வன்புணர்வு பற்றி சர்ச்சைகள் எழுந்துள்ளன.

திருமணத்தில் வன்புணர்வு என்றால் என்ன?

திருமணத்தில் வன்புணர்வு செய்வது இந்திய கலாசாரத்தின்படியும், சட்டக் கண்ணோட்டத்திலும் தவறானது அல்ல.

எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, திருமண வன்புணர்வுக்காக எந்த ஒரு விதியோ அல்லது பொருளோ இல்லை, அதாவது திருமண உறவில் இருக்கும் ஒரு பெண் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அதற்கு தண்டனை பெற்றுத் தர சட்டம் ஏதுமில்லை.

ஆனால் பொதுநலன் மனு தாக்கல் செய்த அமைப்பான ரிட் அறக்கட்டளையின் சித்ரா அவஸ்தியின் கருத்துப்படி, மனைவியின் விருப்பத்திற்கு எதிராக கணவன் உடலுறவு கொண்டால் அது குற்றமாக கருதப்படவேண்டும்.

மேனகா காந்திபடத்தின் காப்புரிமைTWITTERMANEKAGANDHI

2016ஆம் ஆண்டு திருமண வன்புணர்வு பற்றி பேசிய, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, "திருமண உறவில் வன்புணர்வு என்பது பற்றி மேற்கத்திய நாடுகளில் பரவலாக பேசப்பட்டாலும், இந்தியாவில் கல்வியின்மை, வறுமை, சமூகப் பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள், திருமணத்தின் புனிதம் ஆகிய காரணங்களால் திருமண உறவில் வன்புணர்வு செய்வதை குற்றமாக்கும் சட்டத்தைக் கொண்டுவருவது கடினம்" என்று கூறினார்.

2017ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த பொதுநலன் மனு விவாதிக்கப்பட்டபோது, தனது நிலைபாட்டை முன்வைத்த மத்திய அரசு, திருமண உறவில் வன்புணர்வை குற்றமாக அறிவிப்பது என்பது, குடும்பம் என்ற நிறுவன அமைப்பைச் சிதைத்துவிடும் என்று கூறியது.

எனவே திருமண உறவில் வன்புணர்வு ஒரு குற்றச்செயல் என அறிவிக்க இயலாது என்று கூறிய மத்திய அரசு, கணவனை துன்புறுத்த மனைவி இந்த சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்றும் சப்பைக்கட்டு கட்டியது.

வன்புணர்வுபடத்தின் காப்புரிமைSPL

இந்து திருமண சட்டம் என்ன சொல்கிறது?

இந்து திருமண சட்டத்தின்படி, தம்பதிகளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சில பொறுப்புகள் உண்டு, உரிமையும் உண்டு.

திருமணமானவர்கள், குறிப்பாக பெண்கள், தங்கள் இணையின் பாலியல் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிப்பதை கொடூரமானதாக கருதுகிறது. எனவே பாலியல் விருப்பத்திற்கு இசையாவிட்டால் அதை காரணமாக காட்டி, விவாகத்தை ரத்து செய்யலாம் என்றும் நம்பப்படுகிறது.

முரண்பாடுகள்

ஒருபுறம் வன்புணர்வு சட்டம் என்றால் மறுபுறம், இந்து திருமண சட்டம். இரண்டுமே ஒன்றுகொன்று முரண்பாடான விஷயங்களை கூறுகின்றன. இதனால், காரணமாக 'திருமண உறவில் வன்புணர்வு' பற்றி சரியான தெளிவு இல்லாமல் ஒருவிதமான குழப்பம் மக்களிடையே நிலவுகிறது.

ஆண்கள் நலச் சங்கத்தின் அமிதி லகானியின் கருத்துப்படி, வன்புணர்வு என்ற வார்த்தையை திருமண பந்தத்தில் உள்ள தம்பதிகளுக்கு பயன்படுத்துவது தவறானது; அது மூன்றாவது நபருக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய வார்த்தை என்று கூறுகிறார்.

திருமண உறவில் வன்புணர்வு செய்வதற்கான சட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில்தான், பெண்கள் குடும்ப வன்முறை போன்ற இதர சட்டங்களை பயன்படுத்துகின்றனர். அது, அவர்களின் தரப்பை வலுப்படுத்துவதற்கு பதிலாக பலவீனப்படுத்துகிறது.

வன்புணர்வுபடத்தின் காப்புரிமைTHINKSTOCK

நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கிற்கு பிறகு உருவாக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டியும், திருமண பந்தத்தில் வன்புணர்வு செய்யப்படுவது தொடர்பாக தனிச் சட்டம் வேண்டும் என்று கூறியது. திருமணத்திற்குப் பிறகு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தம்பதிகளின் விருப்பம் அல்லது விருப்பமின்மைக்கு மதிப்புக் கொடுத்து அதற்கான விதியை வரையறுக்க வேண்டும்.

பெண்களின் குரல்

நிபுணர்களின் கூற்றுப்படி, திருமண உறவில் வன்புணர்வு தொடர்பான தனிச் சட்டம் இல்லாத நிலையில், தங்கள் மீதான கொடுமைகளுக்கு பெண்கள் பெரும்பாலும் 498 (A) சட்டப்பிரிவை பயன்படுத்துகின்றனர்.

498 (A) பிரிவின்படி, ஒரு பெண்ணின் மனதிற்கோ நலத்தையோ அல்லது உடலுக்கோ தீங்கு செய்யும் மற்றும் தற்கொலைக்கு தூண்டும் கணவன் அல்லது அவரது உறவினர்களின் அனைத்து செயல்களும் தண்டனைக்கு உரியது.

கணவன் அல்லது அவனது உறவினர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்.

1983ஆம் ஆண்டின் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 498 (ஏ) உருவான இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, 2005 இல் "பெண்கள் பாதுகாப்புக்கான குடும்ப வன்முறை சட்டத்தை உருவாக்கியது. இதில் பெண்கள் குடும்ப வன்முறை குறித்த புகார்களை கொடுக்கலாம்.

இதில் கைது நடவடிக்கை கிடையாது என்றாலும், அபாரதம் விதிக்கப்படும்.

பெண்கள்படத்தின் காப்புரிமைYOUTUBE

இனி என்ன நடக்கும்?

திருமண உறவில் வன்புணர்வு தொடர்பாக மத்திய அரசு சட்டம் உருவாக்க வேண்டும் என கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் விவாதங்கள் தொடர்கின்றன. இந்த விஷயத்தில் அடுத்த விசாரணை ஆகஸ்ட் எட்டாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்று இரு தரப்பினரும். தங்களின் வாதங்களை புதிய கோணத்தில் முன் வைப்பார்கள்.

உலகின் பிற நாடுகளில் திருமண உறவில் வன்புணர்வு தொடர்பாக இருக்கும் சட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்படும். விவாதங்கள் தொடர்ந்தாலும், இந்த விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வருவதற்கு இன்னும் சற்று காலம் எடுத்துக் கொள்ளப்படலாம்.

https://www.bbc.com/tamil/india-44902711

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னங்கப்பா கொடுமையா இருக்கு..?

தாலி கட்டிவிட்டால் கணவன், மனைவியை என்ன வேண்டுமானாலும் செய்யலாமா..?

அவளுக்கென்று விருப்பு, வெறுப்புகள் கிடையாதா..?

விருப்பமில்லாவிட்டால், விலைமாதுவென்றாலும் தொடக்கூடாது..!  அதுதானே நியாயம்..?

பெண்களை போகப்பொருளாக நினைக்கும் இந்(து)திய சமுதாயம் என்று திருந்துமோ..??

  • கருத்துக்கள உறவுகள்

இதோடா எல்லாத்தையும் ஆண்களின் தலையில் கொட்டிவிட்டு சுலபமாய் தப்பி விடுகிறீர்கள்.விவசாயத்தில் இருந்து கடினமான விளையாட்டுகள் மலையேறுதல் என்று எல்லாவற்றிலும் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக மல்லுக்கட்டும் பெண்களுக்கு வன்முறையும் வன்புணர்சியும் தெரியவே தெரியாதாம். அவர்களுக்கு என்ன ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்து விட்டு போவார்கள். நீருக்குள் மீன் அழுவதுபோல் ஆண்களின் கஷ்டம் யாருக்கு தெரியப்போகுது. ஆண்களுக்குத்தான் இதை வெளியில் சொல்வதற்கு பயம். இல்லை பயமும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்று சொல்ல வாறன். இந்தக்களத்தில ஒரு பெண் கூடவா துணிந்து வந்து ஆண்களுக்கு வக்காலத்து வாங்கக் கூடாது.....!  ?

Image associée

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, suvy said:

இதோடா எல்லாத்தையும் ஆண்களின் தலையில் கொட்டிவிட்டு சுலபமாய் தப்பி விடுகிறீர்கள்.விவசாயத்தில் இருந்து கடினமான விளையாட்டுகள் மலையேறுதல் என்று எல்லாவற்றிலும் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக மல்லுக்கட்டும் பெண்களுக்கு வன்முறையும் வன்புணர்சியும் தெரியவே தெரியாதாம். அவர்களுக்கு என்ன ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்து விட்டு போவார்கள். நீருக்குள் மீன் அழுவதுபோல் ஆண்களின் கஷ்டம் யாருக்கு தெரியப்போகுது. ஆண்களுக்குத்தான் இதை வெளியில் சொல்வதற்கு பயம். இல்லை பயமும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்று சொல்ல வாறன். இந்தக்களத்தில ஒரு பெண் கூடவா துணிந்து வந்து ஆண்களுக்கு வக்காலத்து வாங்கக் கூடாது.....!  ?

 

கீழை நாடுகளில் இந்த நிலைமைக்கு ஒரு காரணம் பாலியல் கல்வி இல்லாமையும் அதனால் அந்த விடயமாக அறிவு இல்லாமையும் ஒரு கரணம் என்கிறார்கள்.

இந்த அறிவு இல்லாமல், தினமு, பாலியல் பலாத்காரம், வன்புணர்வு என, செய்திகளிலும், மக்கள் பேசுவதையும் கேட்டு, ஒரு வித பயம் உண்டாகின்றது. திருமணத்துக்கு பின்னர் கணவர் அணுகும் போது, பயம் காரணமாக இணங்க மறுப்பதால், விரக்தியில் கணவர் வேறு வழியில் முனைய... நிலைமை மோசமாகின்றது என்றும் சொல்கின்றனர்.

நம்ம கிழக்கு பக்கமா ஏதோ நம்ம தலைமுறை வரைக்கும் பெண்கள் அடங்க்கி வாழ்ந்தாலும், இதற்கு பொருளாதார சார்பு நிலைமை கூட காரணமாகலாம், மேலை நாடுகளில் நிலைமை மோசம்.

இங்கே, பொருளாதார ரீதியிலும், படுக்கை அறையிலும் மேலாண்மை இல்லாவிடில், பறவை பறந்து விடும் என்பதால், ஆண்கள் நிலைமை கொஞ்சம் கஷடம். ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். நின்றால்.... நிலைமை கஷ்டமாம்.
 

  • கருத்துக்கள உறவுகள்

மேலே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இப்பிரச்சினையை அணுகியிருப்பது நன்றாக உள்ளது. பாதிக்கப்படும் நபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க சட்டங்கள் தேவையே. தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் எல்லாச் சட்டங்களிலும் உண்டு. அவ்வாறான அபாயங்களை சமூகமாகவோ தனிமனிதராகவோ சில சமயங்களில் எதிர்கொள்ளத்தான்  வேண்டும். திருமண உறவை பரஸ்பர புரிதல் மட்டுமே நிலைநிறுத்தும். சட்டம் நிலைநிறுத்தாது ; பாதுகாப்பை மட்டுமே தரும்.

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

கீழை நாடுகளில் இந்த நிலைமைக்கு ஒரு காரணம் பாலியல் கல்வி இல்லாமையும் அதனால் அந்த விடயமாக அறிவு இல்லாமையும் ஒரு கரணம் என்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளிலும் இவை நிறையவே இருக்கின்றன. எங்கெல்லாம் பெண்கள் தமது கணவரில் பொருளாதார ரீதியாக தங்கி இருக்கிறார்களோ அங்கெல்லாம் இது அதிகப்படியாக சாத்தியம். மேற்கத்திய நாடுகளில் இன்று பெண்கள் பெருமளவில் பொருளாதார ரீதியாக தமது கணவரில் தங்கி இல்லாததனால் இந்த வன்முறைகள் இங்கு குறைவு.

மறுவளமாக, ஆண்களை வன்முறை பாலியலுக்கு உட்படுத்தும் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால் ஆண்களுக்கு உடற்பலம் கூடுதலாக இருப்பதால் இந்த வன்முறை குறைவு. எனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவரின் மனைவி அவரை வீதிக்கு துரத்தி தாக்கு தாக்கு என்று தாக்குவது எமது பிரதேசத்தில் பிரபலமாக அறியப்பட்ட ஒன்று. யாரும் பார்க்காத படுக்கை அறையில் அவரது கதி இதிலும் மோசமாக இருந்தது இருக்கும். முன்னாள் பெண் போராளியை திருமணம் செய்து கட்டாய பாலியலுக்கு வேறு வழியில்லாமல் தினம் தினம் ஆளாகி மனம் பாதிக்கப் பட்டு அழுதுகொண்டு திரிந்த மென்மையான ஒருவரையும் நான் அறிவேன். 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளி விவரங்களை நோக்கினால் பெண்களை ஏமாற்றி புணரும் ஆண் மிருகங்கள் தான் இந்திய சமுதாயத்தில் மிக மிக அதிகம்.. அதற்கான சிறு தீர்வாக பெண் வதை தடுப்புச் சட்டங்கள் இருந்தாலும் அவை ஏட்டளவிலேயே இருக்கின்றன..

பெண்கள், ஆண்களால் வன்முறைகுட்படுத்தப்படவில்லையெனில் ஏன் இந்த சட்டங்கள்..?

பெண் பொருளாதார ரீதியிலும், சமுதாய ரீதியிலும் ஆண்களை சார்த்திருப்பதால் இக்கொடூரம் இன்னமும் தொடர்கிறது.

 

shame-map-of-india-crime-against-women-i

 

சில நாட்களுக்கு முன் (ஜூலை 3), ராஜபாளையம் பேருந்து தரிப்பிடத்தில் காதலித்து மணந்த மனைவியை மிகக் கொடூரமாக வெட்டிக்கொன்ற காட்சிகளை பார்த்தால், எந்த உயிரும் ஆணினத்தின் மீது காரி உமிழ்வார்கள்..

இக்கொடூரக்கொலைக்கு காரணம், மனைவி தன் பெண் குழந்தையை மீட்டுத்தாருங்கள் என முறைப்பாடு செய்ததே..!

காணொளி மிகக் கொடூரமாக இருப்பதால் நாகரீகம் கருதி இங்கே இணைக்கவில்லை !

 

Tamil_Nadu_Rajapalayam.jpeg?9P4vXswSprv6

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்துவரும் காது கேளாத 11 வயது குழந்தையை 17 ஆண் மிருகங்கள் கூட்டுப் பாலியல் வன்முறையை கடந்த ஆறு மாதங்களாக அரங்கேற்றிய புண்ணிய உத்தமர்கள், இந்த ஆண்கள்..!

இதில் ஐந்து பேர், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்.. இப்படியிருக்கு, இந்திய ஆண்களின் பெண்களைப் பற்றிய பார்வை லட்சணம்..!

இதற்கு வயதான ஒருவரின் சப்பைக்கட்டு வேறை..!  இது பகிடியாக, தட்டிக்கழித்து அலட்சியமாக கடந்து செல்லும் விடயமல்ல, ஆண்டாண்டு காலமாய் 'ஆண்களே மேல்' என நம் சிந்தையில் விதைத்து சென்ற பழமைவாதி முன்னோர்களின் கொடிய சிந்தனை..

அதை இன்னமும் காவித் திரிவதை என்னவென்று சொல்வது, கொடுமைடா சாமி..!!

Sorry sir..!

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

 

Sorry sir..!

 

வன்னியர், நீங்கள் சொல்வது சரி தான்...

இங்கே சட்டம் கடுமையாகப் பட்டாலும் இன்னுமொரு பிரச்னை உள்ளதே.

தமிழகத்திலேயே பாப்போம்... சீதன வன்கொடுமை சட்டம். புருசன் வீடு சரி வரவில்லையா? போலீஸ் ஸ்டேஷன் போய் ஒரு முறைப்பாடு... சீதனம் இன்னும் அதிகமா கொண்டு வா என்று கொடுமைப படுத்துறார்கள் என்று சொன்னாலே போதும்.

முன்னரும் எழுதி இருக்கிறேன். பர்மிங்காம் பகுதியில், ஒரு ஆசிய டாக்ஸி டிரைவர். தண்ணி பாட்டி, பஜாரி அம்மணி ஏறி 'வண்டிய எடு' கணக்கில உத்தரவு.

என்ன நினைத்தாரோ, கடவுள் கிருபையால், தனது சம்சுங் போனின், பேச்சு பதிவு பொத்தானை அழுத்தி இருக்கிறார்.

போய் இறங்கி, பணம் தரமுடியாது என்று சொல்லி இருக்கிறார். இவரு சத்தம் போடா... அவர் வீட்டு உள்ள போய் விட்டார். 

ஒரு மணி நேரத்தில் போலீஸ் காது செய்கிறது இவரை. அந்த பெண்ணை காரினுள் வைத்து பாலியல் வன்புணர்வு செய்தாராம்.....

குடும்பத்துக்கும் அறிவிக்க.... களேபரம்.

குடும்பம் தடுமாறி, இவரா அப்படி....அங்க இங்கே என்று.... தடுமாற.... அவர் வீடு வருகிறார்.

காப்பாத்தியது போன் பதிவு. பொய் சொன்ன பெண்ணுக்கு 18 மாதம் சிறை.

இதன் காரணமாகவே, வீட்டுக்குள் வரும் திருடனை, தாக்குவதோ, கொலை செய்வதோ இன்னும் சட்டத்தினால் அங்கீகரிக்கப் படவில்லை. ஒவ்வொரு கேசும் தனியாக விசாரித்து போலீஸ் முடிவு செய்யுமாறு வைத்துள்ளார்கள். ஏனெனில் எனக்கு ஒருவரை கொலை செய்ய வேண்டுமாயின், அவரை வீட்டுக்கு எப்படியாவது வரவைளைத்து, திருடவந்தார் கத்தியுடன்... போட்டுவிட்டேன் என்று சொல்லாம் அல்லவா...

சட்டம் என்பது அரைவேக்காடு தனமாக இருக்க கூடாது என்பதே நமக்கு சட்டம் தந்த ஐரோப்பியர் நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

திரு.நாதமுனி,

சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பெண்களும் இருக்கிறார்கள், இல்லையென்று சொல்லவில்லை.

ஆனால் இன்றும் பெரும்பாலான ஆண்களின் மனதளவில், பெண் என்பவள் தனக்கு கீழேதான், தன் விருப்படியே அனைத்திலும் அடிபணிந்து எதிர்த்துப் பேசாமல் நடக்க வேண்டும், அவளின் சுய விருப்பு, வெறுப்பெல்லாம் இரண்டாம் பட்சம்தான், படுக்கையில் ஆண் கூப்பிட்டால், பெண் மறுபேச்சில்லாமல் வரவேண்டும், தன் 'தேவை'யை உடனே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆண்களின் மனதில் புரையோடிப்போயுள்ளது..

இந்த எண்ணமே வீட்டு வன்முறைகளுக்கு வித்திடுகிறது..

On 7/21/2018 at 1:10 PM, நவீனன் said:

L

இந்து திருமண சட்டம் என்ன சொல்கிறது?

இந்து திருமண சட்டத்தின்படி, தம்பதிகளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சில பொறுப்புகள் உண்டு, உரிமையும் உண்டு.

திருமணமானவர்கள், குறிப்பாக பெண்கள், தங்கள் இணையின் பாலியல் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிப்பதை கொடூரமானதாக கருதுகிறது. எனவே பாலியல் விருப்பத்திற்கு இசையாவிட்டால் அதை காரணமாக காட்டி, விவாகத்தை ரத்து செய்யலாம் என்றும் நம்பப்படுகிறது. 

இந்த சட்டக் கொடுமையை என்னவென்று சொல்ல..?  :(

இதையும் ஆண்களே தங்கள் இச்சைக்கு ஏற்ப பல வருடங்களுக்கு முன்பு (Hindu Marriage Act 1956) வகுத்துள்ளார்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

இதென்னங்கப்பா கொடுமையா இருக்கு..?

தாலி கட்டிவிட்டால் கணவன், மனைவியை என்ன வேண்டுமானாலும் செய்யலாமா..?

அவளுக்கென்று விருப்பு, வெறுப்புகள் கிடையாதா..?

விருப்பமில்லாவிட்டால், விலைமாதுவென்றாலும் தொடக்கூடாது..!  அதுதானே நியாயம்..?

பெண்களை போகப்பொருளாக நினைக்கும் இந்(து)திய சமுதாயம் என்று திருந்துமோ..??

விலைமாது விரும்பி வந்தால் தொட்டுடலாமா ....அவ்வளவுக்கு எல்லா ஆண்களும் அலைஞ்சு கொண்டு திரிகிறார்களா. என்னைப்போல(சுவியைப்போல்) கற்புடைய இன்னொரு ஆண் எங்குமே இல்லை என்று ஏன் ஒரு தவறான முடிவுக்கு வந்திருக்கிறீர்கள். மேலும் எந்த விலைமாது விரும்பிப்போகிறாள்.விலைபேசித்தானே போகிறாள்......!   

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

விலைமாது விரும்பி வந்தால் தொட்டுடலாமா ....அவ்வளவுக்கு எல்லா ஆண்களும் அலைஞ்சு கொண்டு திரிகிறார்களா. என்னைப்போல(சுவியைப்போல்) கற்புடைய இன்னொரு ஆண் எங்குமே இல்லை என்று ஏன் ஒரு தவறான முடிவுக்கு வந்திருக்கிறீர்கள். மேலும் எந்த விலைமாது விரும்பிப்போகிறாள்.விலைபேசித்தானே போகிறாள்......!   

 

சுவி ஐயா,

நான் துபாயில் இருக்கும்போது பல விலைமாதுகள் என்னை பணமின்றி நெருங்கினார்கள். இலவசமாக தாங்களை அர்ப்பணிக்க தயர்ர்க இருந்தார்கள். 

ஒருபோதும் எவளையும் தொடவில்லை கடைவரை கற்பை காப்பாற்றிக்கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

விலைமாது விரும்பி வந்தால் தொட்டுடலாமா ....அவ்வளவுக்கு எல்லா ஆண்களும் அலைஞ்சு கொண்டு திரிகிறார்களா...?

இல்லையா பின்னே..? :innocent:

பச்சிளம்குழந்தைகளை கூட புணரும் கூட்டம் அதிகமாக உள்ளபோது, விலைமாதுகளை விட்டு வைப்பார்களா?

10 minutes ago, suvy said:

என்னைப்போல(சுவியைப்போல்) கற்புடைய இன்னொரு ஆண் எங்குமே இல்லை என்று ஏன் ஒரு தவறான முடிவுக்கு வந்திருக்கிறீர்கள்...

தாங்கள் கற்புள்ள, புடம்போட்ட தங்கமணியாக இருக்கலாம், ஆனால் உள்மனதில் ஆணாதிக்க சிந்தனை உள்ளது, சார்..! rire-2009.gif

நிச்சயம் நல்ல ஆண்மகன்களும் இவ்வுலகில் உள்ளனர்.. ஆனால் எண்ணிக்கையில் அவர்கள் மிகக்குறைவு..!!

14 minutes ago, suvy said:

..மேலும் எந்த விலைமாது விரும்பிப்போகிறாள். விலைபேசித்தானே போகிறாள்......!   

வயிற்றுப் பிழைப்பிற்காக உடலை மூலதனமாகக் கொண்டு வியாபாரம் செய்தாலும், அதற்கான விலையை பேரம்பேசும் ஆண்களும், ஏமாற்றுபவர்களும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, suvy said:

அவ்வளவுக்கு எல்லா ஆண்களும் அலைஞ்சு கொண்டு திரிகிறார்களா...?

'சுவி ஐயா' கவனத்திற்கு..!

 

தற்போதைய செய்தி.. priso.gif

19 வயது பாலியல் குற்றவாளிக்கு தூக்கு...

ஜெய்ப்பூர்: சட்டமும், நீதியும் மட்டும் இல்லையென்றால் நாட்டில் இன்னும் என்னென்ன பாவங்கள் எவ்வளவு பெருகிவரும் என தெரியாது. தண்டனை சட்டத்தை சரியாக இயற்றி, சரியான நபருக்கு சரியான நேரத்தில் அமல்படுத்தியுள்ளது ராஜஸ்தான் அரசு.

ராஜஸ்தான் மாநிலம், லட்சுமண்கர் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த மே 9-ம் தேதி தம்பதி இருவரும் குழந்தையை உறவினர் ஒருவரது வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுவந்தனர். திரும்பி வந்து பார்க்கும்போது, அங்கே குழந்தை இல்லை. அதனால் குழந்தை எங்கே கேட்டதற்கு, பக்கத்து வீட்டு இளைஞர் தூக்கிக் கொண்டு போனதாக அந்த உறவினர்கள் பதிலளித்தனர். பக்கத்து வீட்டிலும் குழந்தையும் இல்லை, அந்த இளைஞரும் இல்லை.

rajasthan343-1532261084.jpg

அந்த வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனால் பதறியடித்து கொண்டு பெற்றோர் ஓடிசென்றனர். அங்கு குழந்தை கதறி அழுதபடி கிடந்தது. அதன் உடலில் காயங்கள் நிறைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த பக்கத்துவீட்டு நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த இளைஞருக்கு வயது 19.

இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று தற்போது தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, 7 மாத குழந்தை என்றும் பாராமல் சிதைத்த அந்த இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், கடந்த மார்ச் மாதம்தான், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சிறப்பு சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்தது. சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அந்த மரணதண்டனைக்கு ஆளாகும் முதல் நபர் இந்த இளைஞர்தான்.

கைக்குழந்தைகளை கூட விட்டுவைக்காத காம மனிதர்கள் நாடெங்கும் பெருகிவருகின்றனர்.

இதுபோன்ற செயல்களை செய்துவிட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்ட கயவர்களுக்கு, தன்னுடைய நிஜ ரூபத்தை சட்டம் அவ்வப்போது வெளிப்படுத்தி தண்டிக்கும்போது ஓரளவு மனநிறைவு அடைகிறது. ஆனாலும் பாதிக்கப்பட்ட சிசுக்களை நினைத்தால் மனம் கனத்துதான் போகிறது.

 

ஒன் இந்தியா - தமிழ்

Edited by ராசவன்னியன்

  • 2 months later...

கணவன்-மனைவிக்குள்ள இருவர் மனமும் ஒருமித்தால் தானே உறவு சிறப்பாயிருக்கும் என்பதை இருவரும் உணர்வதே பெஸ்ட்!
எனவே பெண்ணை ஆணோ அல்லது ஆணை பெண்ணோ வற்புறுத்தினால் அங்கு நல்ல உறவு அமையாது.
ஆனால் கணவன்-மனைவிக்குள்ள வன்புணர்வு என்பது பொருத்தமல்ல!

அதே நேரம், இப்படியே பெண்கள் சார்பாக சட்டங்கள் இயற்றப்பட்டு வந்தால், அதை நடுநிலையாக, மனைவி தொடர்ந்து மறுத்து வந்தால், அந்த ஆண் உடன்படும் இன்னொரு பெண்ணிடம் உறவு வைப்பதை சட்டம் அனுமதிக்க வேண்டிவரும்!

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Rajesh said:

கணவன்-மனைவிக்குள்ள இருவர் மனமும் ஒருமித்தால் தானே உறவு சிறப்பாயிருக்கும் என்பதை இருவரும் உணர்வதே பெஸ்ட்!
எனவே பெண்ணை ஆணோ அல்லது ஆணை பெண்ணோ வற்புறுத்தினால் அங்கு நல்ல உறவு அமையாது.
ஆனால் கணவன்-மனைவிக்குள்ள வன்புணர்வு என்பது பொருத்தமல்ல!

அதே நேரம், இப்படியே பெண்கள் சார்பாக சட்டங்கள் இயற்றப்பட்டு வந்தால், அதை நடுநிலையாக, மனைவி தொடர்ந்து மறுத்து வந்தால், அந்த ஆண் உடன்படும் இன்னொரு பெண்ணிடம் உறவு வைப்பதை சட்டம் அனுமதிக்க வேண்டிவரும்!

கனம்.....கோட்டார் அவர்களே.....பிளீஸ் ...நோட் திஸ் போயின்ட்...!

எனது கட்சிக் காரர் கூறுவதற்குள்....நிறைய உண்மைகள் பொதிந்திருக்கின்றன!

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சின்ன ஆசை ......
எமக்கு தத்துவங்கள் பேசி எமக்கு பெண்கள் மீது வெறுப்பு உண்டாக்கி 
தனியாக வாழ வழி  வகுத்துவிட்டு.... தனக்கு வயது வரும்போது 
ஓடி சென்று ஒரு பெண்ணை மணமுடித்து சகலதையும் அனுபவிக்கும் 
நெடுக்கு மீது மனைவி வழக்கு போட்டு 
அவர் ஜெயிலுக்கு போவதை நான் பார்க்க வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 7/22/2018 at 7:52 AM, ராசவன்னியன் said:

'சுவி ஐயா' கவனத்திற்கு..!

 

தற்போதைய செய்தி.. priso.gif

19 வயது பாலியல் குற்றவாளிக்கு தூக்கு...

ஜெய்ப்பூர்: சட்டமும், நீதியும் மட்டும் இல்லையென்றால் நாட்டில் இன்னும் என்னென்ன பாவங்கள் எவ்வளவு பெருகிவரும் என தெரியாது. தண்டனை சட்டத்தை சரியாக இயற்றி, சரியான நபருக்கு சரியான நேரத்தில் அமல்படுத்தியுள்ளது ராஜஸ்தான் அரசு.

ராஜஸ்தான் மாநிலம், லட்சுமண்கர் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த மே 9-ம் தேதி தம்பதி இருவரும் குழந்தையை உறவினர் ஒருவரது வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுவந்தனர். திரும்பி வந்து பார்க்கும்போது, அங்கே குழந்தை இல்லை. அதனால் குழந்தை எங்கே கேட்டதற்கு, பக்கத்து வீட்டு இளைஞர் தூக்கிக் கொண்டு போனதாக அந்த உறவினர்கள் பதிலளித்தனர். பக்கத்து வீட்டிலும் குழந்தையும் இல்லை, அந்த இளைஞரும் இல்லை.

rajasthan343-1532261084.jpg

அந்த வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனால் பதறியடித்து கொண்டு பெற்றோர் ஓடிசென்றனர். அங்கு குழந்தை கதறி அழுதபடி கிடந்தது. அதன் உடலில் காயங்கள் நிறைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த பக்கத்துவீட்டு நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த இளைஞருக்கு வயது 19.

இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று தற்போது தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, 7 மாத குழந்தை என்றும் பாராமல் சிதைத்த அந்த இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், கடந்த மார்ச் மாதம்தான், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சிறப்பு சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்தது. சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அந்த மரணதண்டனைக்கு ஆளாகும் முதல் நபர் இந்த இளைஞர்தான்.

கைக்குழந்தைகளை கூட விட்டுவைக்காத காம மனிதர்கள் நாடெங்கும் பெருகிவருகின்றனர்.

இதுபோன்ற செயல்களை செய்துவிட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்ட கயவர்களுக்கு, தன்னுடைய நிஜ ரூபத்தை சட்டம் அவ்வப்போது வெளிப்படுத்தி தண்டிக்கும்போது ஓரளவு மனநிறைவு அடைகிறது. ஆனாலும் பாதிக்கப்பட்ட சிசுக்களை நினைத்தால் மனம் கனத்துதான் போகிறது.

 

ஒன் இந்தியா - தமிழ்

ஐயா இது மிகவும் ஆழமாக பார்க்கவேண்டிய ஒரு விடயம் 
பெண் சிசு கொலை போன்ற பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கப்போகும் 
காலம் இந்தியாவை நெருங்குகிறது 

இப்போ புதுச்சேரி கேரளாவை தவிர மற்ற எல்லா மாநிலத்தலும் 
பெண்கள் சனத்தொகை ஆண்களின் தொகையைவிட குறைவு 
எல்ல ஆணுக்கும் பெண் இல்லை என்பது உறுதியான முடிவு 

அதே நேரம் பாலியல் இச்சையை தூண்டும் இணையம் 
வீதியில் போகும் பெண்களின் உடை அலங்காரம் ... போன்றவை 
ஆண்களின் காமத்தை தூண்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன 

அடுத்து வடிகாலாக இருக்க கூடிய விபச்சரம் 
போலீஸ் பிடிப்பதும் விடுவதும்  என்று கள்ளன் போலீஸ் விளையாட்டுபோல 
இருப்பதால் ... ஒரு சரியான சட்ட ஒழுங்கு இன்றி ஓர் நோய் பரப்பும் 
மூலமாக அது மாறிக்கொண்டு வருகிறது.

காலம் சூழலை கருத்தில் கொண்டு சமூக விழிப்புணர்வுடன் 
அமையும் அரசுகளும் இல்லை ஊழல் லஞ்சம் என்று அரசாட்ச்சி சென்றுகொண்டு இருக்கிறது.
எல்லா வினையும் இன்னொரு பாதிப்பை இன்னொரு வடிவில் உருவாக்கிறது. 

On 10/17/2018 at 1:20 AM, Maruthankerny said:

எனக்கு ஒரு சின்ன ஆசை ......
எமக்கு தத்துவங்கள் பேசி எமக்கு பெண்கள் மீது வெறுப்பு உண்டாக்கி 
தனியாக வாழ வழி  வகுத்துவிட்டு.... தனக்கு வயது வரும்போது 
ஓடி சென்று ஒரு பெண்ணை மணமுடித்து சகலதையும் அனுபவிக்கும் 
நெடுக்கு மீது மனைவி வழக்கு போட்டு 
அவர் ஜெயிலுக்கு போவதை நான் பார்க்க வேண்டும்.  

அடடா நெடுக்கு சொல்வதை கேட்டா தனியா இருக்க முடிவு செஞ்சீங்கள்? ?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/20/2018 at 4:10 AM, Rajesh said:

அடடா நெடுக்கு சொல்வதை கேட்டா தனியா இருக்க முடிவு செஞ்சீங்கள்? ?

சிந்திச்சு முடிவு எடுக்க எங்க விடடார்கள் 
அருவெறுப்பு பதிவுகளை பகிர்ந்து 
பெண்களை கண்டாலே ஒரு அச்சத்தோடு 
விலகி செல்லும் மன நிலையை உருவாக்கி விடடார்கள் 

இனி வைரமுத்துவின் கவிதைகளை வாசித்து 
கொஞ்சம் ரசனையை மேம்படுத்துவோம் 
என்று கொஞ்சம் வாசிக்க தொடங்க 
இப்ப மீ டு என்று வந்து நிக்கிறார்கள் 

இப்ப கவிதைகளை பார்க்கவே 
நடு ரோட்டில் அவமானப்பட்டு நிற்பதுதான் 
ஞாபகத்தில் வருகிறது. 

மெல்லவும் முடியாமல் 
விழுங்கவும் முடியாமல் 
கரைகிறது இளமை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/16/2018 at 8:50 PM, Maruthankerny said:

எனக்கு ஒரு சின்ன ஆசை ......
எமக்கு தத்துவங்கள் பேசி எமக்கு பெண்கள் மீது வெறுப்பு உண்டாக்கி 
தனியாக வாழ வழி  வகுத்துவிட்டு.... தனக்கு வயது வரும்போது 
ஓடி சென்று ஒரு பெண்ணை மணமுடித்து சகலதையும் அனுபவிக்கும் 
நெடுக்கு மீது மனைவி வழக்கு போட்டு 
அவர் ஜெயிலுக்கு போவதை நான் பார்க்க வேண்டும்.  

அடப்பாவிகளா.. இப்படியும் ஆசைப்படுறேளே.?

நெடுக்ஸ் சமூகத்தின் சீரழிவுக்கு காரணமாக இருக்கும் பெண்களை இப்பவும் தான் கண்டிக்கிறேன்.

வன்புணர்வு என்றவுடன் ஆண்கள் தான் அதைச் செய்வார்கள் என்ற சிந்தனையோட்டத்தில் இருக்கும் சமூகங்களை என்ன செய்வது.

அண்மையில்.. இதே ஹிந்தியாவில்.. ஒரு பெண் பாலியல் கரைச்சல் கொடுத்ததன் பெயரில்.. ஒரு திருமணமான ஆண் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்திகள் வந்தன.

அப்படியான பெண்களை தண்டிக்க என்ன சட்டம் இருக்குது..?!

மேலும் ஆண்களின் பாலுணர்வை தூண்டும் வகையில் நடந்து கொள்ளும் பெண்களின் நடத்தைகளும் தான் பெண்கள் மீதான வன்புணர்வுக்கு ஒரு காரணி. அது தொடர்பிலும் சரியான சட்ட அமுலாக்கம் பெண்கள் மீதும் வர வேண்டும். ?

On 10/24/2018 at 11:30 PM, Maruthankerny said:

மெல்லவும் முடியாமல் 
விழுங்கவும் முடியாமல் 
கரைகிறது இளமை. 

ம்ம்ம். நினைக்க பாவமா இருக்கு!

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இதைப் பார்க்கிறேன் (சொன்னால் நம்பவேண்டும் !).

ஆணாக இருந்தாலென்ன, பெண்ணாக இருந்தாலென்ன, ஒருவரது விருப்பமில்லாமல் இன்னொருவரைத் தொடுவதென்பது வெறுமையாகத்தான் இருக்கும். எந்த உணர்வுமில்லாமல், தனக்கும் நடப்பதற்கும் தனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாமல், எப்படா இது முடியும் என்று மனதிற்குள் நினைக்கும் ஒரு நிலை நிச்சயம் எவருக்கும் தேவையில்லை.

கணவனானாலும் சரி, மனைவியானாலும் சரி, இது இருவருக்கும் பொருந்தும்.

அதேபோல, எனக்கு இப்போது வேண்டாம் என்று சொல்லுவதற்கான தைரியமும், அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இருக்க வேண்டும்.

ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண் நினைத்தபோதெல்லாம் பெண் படுக்கையில் விழவேண்டுமென்பதும், மறுபேச்சில்லாமல் அனுசரித்துப் போகவேண்டுமென்பதும், பெண்ணின் உணர்வு பற்றி எவருக்குமே கவலை இருப்பதில்லையென்பதும் உண்மைதான். 

ஆனால், புலம்பெயர் நாடுகளில், ஆணுக்கு நிகராக சம்பாதித்து சமூகத்தில் வலம்வரும் பெண்களுக்கு தமது உணர்வுகளையும், விருப்பு வெறுப்புகளையும் துணிவாகச் சொல்லுவதற்கான சூழலை சமூகம் ஏற்படுத்துகிறது. இது நல்ல ஆரோக்கியமான விடயம் என்றுதான் நான் நினைக்கிறேன்.

பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஆண் நடக்கும்பொழுது வன்புணர்வுகளுக்கு இடமிருக்கப்போவதில்லை என்பதுதான் எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/21/2018 at 7:42 PM, suvy said:

இதோடா எல்லாத்தையும் ஆண்களின் தலையில் கொட்டிவிட்டு சுலபமாய் தப்பி விடுகிறீர்கள்.விவசாயத்தில் இருந்து கடினமான விளையாட்டுகள் மலையேறுதல் என்று எல்லாவற்றிலும் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக மல்லுக்கட்டும் பெண்களுக்கு வன்முறையும் வன்புணர்சியும் தெரியவே தெரியாதாம். அவர்களுக்கு என்ன ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்து விட்டு போவார்கள். நீருக்குள் மீன் அழுவதுபோல் ஆண்களின் கஷ்டம் யாருக்கு தெரியப்போகுது. ஆண்களுக்குத்தான் இதை வெளியில் சொல்வதற்கு பயம். இல்லை பயமும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்று சொல்ல வாறன். இந்தக்களத்தில ஒரு பெண் கூடவா துணிந்து வந்து ஆண்களுக்கு வக்காலத்து வாங்கக் கூடாது.....!  ?

Image associée

எல்லா இனத்திலும் பெண்களுக்கு கொடுமைகள் நடந்தாலும் ஆண்களால் வன்புணர்வு என்பதை சரியாக விளங்கிக்கொள்ளவே முடியாது அண்ணா . எம் தமிழ் சமூகத்தில் இந்தியாவைப்போன்று கொடுமைகள் இல்லை என்றாலும் பல  இடங்களில் பெண்கள் வாய் மூடி மௌனமாகவே இருக்கவேண்டி இருக்கிறது. இதில் ஆண்களுக்கு எங்கே வக்காலத்து வாங்குவது

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா ஒருத்தி இருந்தவதான் பக்கத்து வீட்டில. ஆனால், நான் சின்னப்பிளை கண்டியளோ? ஒண்டும் தெரியாது!!??##

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ragunathan said:

அக்கா ஒருத்தி இருந்தவதான் பக்கத்து வீட்டில. ஆனால், நான் சின்னப்பிளை கண்டியளோ? ஒண்டும் தெரியாது!!??##

இது குறள் மாதிரி, ஆண்களாலும் எல்லாவற்றையும் விளக்கமாய் சொல்ல முடியாது. நீங்களாய் விளக்கவுரை போட்டு புரிஞ்சுகொள்ள வேண்டியதுதான்.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.