Jump to content

கஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                              

                                                           

 

 

                                                               கஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்,,,,,,,, !

 

               போதை தரும் வாதை                                                                                                                    சிரிப்புக்குமட்டும்,சிந்திக்கக்கூடாது......!

   🥀..............(1)                                                                                                                          

 

அந்த நீதிமன்ற வளாகம் அன்று காலை ஒரே பரபரப்பில் இருக்கின்றது.வக்கீல்களும்தரகர்களும்,கட் சிக்காரர்கள் வாதிகள்,பிரதிவாதிகள்,வேடிக்கை பார்க்க வந்தவர்கள்,சின்னசின்ன வியாபாரம் செய்பவர்கள் என்று பலராலும் நிரம்பி வழிகின்றது.அது தற்காலிக கட்டிடத்தில் நடைபெறுவதால் இடப்பற்றாகுறை காரணமாக ஒரே அமளிதுமளிதான். அதன் முதலாம் மாடியில் சில வழக்குகள் நடைபெற இருக்கின்றது.எல்லோரும் வந்து தங்களின் ஆசனங்களில் அமர்ந்திருந்து நீதிபதியின் வருகைக்கு காத்திருக்கின்றனர்.நீதிபதி ஈஸ்வரதாசன் நிதானமாக நடந்துவர எல்லோரும் எழுந்து நிக்கின்றனர்.அவரும் தனது இருக்கையில் அமர்கின்றார். தனது பையில் பொடிமட்டையை எடுத்து இரு விரல்களால் கிள்ளி எடுத்து காரம் சிரசில் அடிக்க இரு மூக்குத்துவாரத்திலும் நிரப்பிவிட்டு குமாஸ்தாவைப் பார்க்கிறார்.நீதிபதியின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட குமாஸ்தாவும் தயாராக இருந்த வழக்கு கட்டுகளை எடுத்து கூப்பிடுகின்றார்.பெரும்பாலும் அபராதம் கட்டுபவர்கள், வாய்தா வாங்குபவர்கள் மற்றும் சில வழக்குகள் என்று ஆரவாரமாய் போகிறது.

.

 

வழக்கு எண் 108. வாய்க்கால் வழக்கு. என குமாஸ்தா அழைக்கவும் சிவஞானமும் செல்லையாவும் வந்து வாதி பிரதிவாதி கூண்டுகளில் ஏறி நிக்கின்றார்கள்.

நீதிபதி: யாரப்பா வக்கீல், வந்து வழக்கை சொல்லவும்.

 

வக்கீல் 1: ஐயா, எதிரி கூண்டில் நிக்கும் செல்லையா என்பவர் எனது கட்சிக்காரரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர்.இரண்டு வீட்டின் எல்லைகளுக்கு இடையில் பொதுவான ஒரு வாய்க்கால் இருக்கு. அதை இவர் ஆக்கிரமித்து தனது வீட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளார் எஜமான்.அதற்கு நியாயம் வேண்டித்தான் வழக்கு தொடரப்பட்டிருக்கு.

 

நீதிபதி: அந்த வாய்க்கால் யாருக்கு சொந்தமானது என்று ஆவணம் சொல்லுது .

 

வக்கீல் 2: (குறுக்கிட்டு)அது பொதுவானது எஜமான்.

 

நீதிபதி: பொதுவானது என்றால் .......!

 

வக்கீல் 1:அரசுக்கு உரித்தானது.

 

நீதிபதி: அரசுக்கு சொந்தமான சொத்தை ஆட்டையை போடலாமா செல்லையா. அது தப்பில்லையா. அப்படியே சிவஞானத்தை பார்த்து உம்மை நான் மெச்சுகின்றேன்.ஒரு குடிமகனானவன் அநீதியை கண்ட விடத்து அதைத் தைரியமாக வெளிக்கொண்டுவர வேண்டும்.என்று சொல்ல ....

எங்கோ பராக்கு பார்த்து கொண்டிருந்த வக்கீல் 1 அவசரமாய் குறுக்கிட்டு அதற்கில்லை எஜமான், செல்லையா முழு வாய்க்காலையும் தானே அபகரிப்பது அநியாயம்.நடுவில் எல்லையிட்டு பாதியை தனக்கு தரவேண்டுமென்று எனது கட்சிகாரர் கேட்கிறார்.

வக்கீல் 2 குறுக்கிட்டு அதெப்படி தரமுடியும்.எனது கட்சிகாரர் இருநூறு லொறி செம்மண் போட்டு நிரப்பியுள்ளார் வாழை நடுவதற்காக.

 

நீதிபதி குறுக்கிட்டு காலை வெட்டுவன், வாழை நடப்போறாராம் வாழை,இரு வக்கில்களையும் பார்த்து கேஸ் என்றவுடன் எல்லாத்தையும் எடுக்கிறதா,இந்தகேஸ் நிக்காதென்று உங்களுக்கே தெரியும் அவர்களுக்கு சொல்லி புரியவைக்க வேண்டாமா. கட்சிக்காரர்களைப் பார்த்து எச்சரிக்கை செய்து ஒரு அரச அதிகாரியின் முன்னால் அந்த வாய்க்காலை பழையபடி செப்பனிட வேண்டும்.மேலும் இந்த வழக்கிற்கான செலவுகளை இருவரும் பங்கிட்டு நீதிமன்றத்துக்கு செலுத்தவேண்டும். (அவர்கள் புறப்பட்டுப் போக, குமாஸ்தாவை பார்க்கிறார்)

 

 

வழக்கு எண் 762. கஞ்சா விற்ற வழக்கு.

 

நீதிபதி : யாரப்பா போலீஸ்... வந்து வழக்கை சொல்லவும்.

 

இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் முன்னால் வந்து ஒரு பையை மேசையின்மேல் விரித்து வைக்கிறார்.அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் இருக்கின்றன.அதை நீதிபதி ஈஸ்வரதாசன் பார்க்கிறார். பின்னால் இரண்டு காவலர்கள் ஒரு இளம் பெண்ணை அழைத்து வருகின்றனர். அவள் குற்றவாளிக் கூண்டில் ஏறி நிக்கிறாள்.

 

ரவீந்திரன் இன்னொரு கூண்டில் ஏறி நின்று வணக்கம் ஐயா,இந்தப் பெண் வீதியில் நின்று கஞ்சா விற்று கொண்டிருக்கும் போது கைது செய்தேன். அந்தப் பையும் அதிலுள்ள கஞ்சா பொட்டலங்களும் இவளுடையதுதான்.

 

நீதிபதி: உன் பெயர் என்னம்மா...

பெண் : காஞ்சனா ஐயா.

நீதிபதி: நீ என்னம்மா சொல்கிறாய்.உனக்காக வாதாட வக்கீல் வந்திருக்கிறாரா....!

காஞ்சனா: இல்லை ஐயா. நான் விக்கவில்லை.

நீதிபதி: அப்படியென்றால் இந்த பையும் கஞ்சாவும் உன்னுடையதில்லை என்கிறாயா....!

காஞ்சனா: ஆமாம். நான் அப்போதுதான் அதை கீழே கிடந்து எடுத்தேன். அப்போது அங்குவந்த காவலர் ஐயா என்னை பிடித்து கொண்டுவந்து விட்டார்.

நீதிபதி: நீங்கள் இவரை பிடிக்கும்போது பக்கத்தில் சாட்சிகள் யாராவது....!

ரவீந்திரன்:இல்லை ஐயா.

நீதிபதி: உங்களைக் கண்டதும் ஓடவோ அல்லது பொருளை மறைக்கவோ முயற்சித்தாரா...!

ரவீந்திரன்: யோசித்து.... இல்லை ஐயா.

நீதிபதி: அதிகமாய் பணம் ஏதாவது வைத்திருந்தாரா....!

ரவீந்திரன்: இல்லை ஐயா.

நீதிபதி: நீங்கள் இந்த வேலைக்கு புதிதாய் சேர்ந்திருக்கிறீர்களா....!

ரவீந்திரன்: ஆமாம் ஐயா.

நீதிபதி: போலிஸைப் பார்த்து நீங்களாவது சொல்லி இருக்கக் கூடாதா, ஒரு வழக்கை எப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று. பின் குமாஸ்தாவை பார்த்து கேட்கிறார் இந்தப் பெண்மீது பழைய வழக்குகள் ஏதாவது இருக்கா....!

குமாஸ்தா: இல்லை ஐயா....!

நீதிபதி:காஞ்சனாவிடம் இந்தா பாரம்மா, கீழே ஏதாவது பொருள் இருந்தால் போலீசுக்கு அறிவிக்க வேண்டும். அதை அவர்கள் வந்து எடுத்து பிரித்து கொள்வார்கள். நீயே எடுத்துக் கொண்டு போகக் கூடாது.ஏதாவது குண்டு கிண்டு கிடந்து தொலைக்கப் போகுது. சரியான ஆதாரங்கள் இல்லாததால் நீ போகலாம். இன்ஸ்பெக்ட்டரும் காவலரும் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே போகிறார்கள். நீதிபதியும் உள்ளே போக எழுந்தவர் மேசையில் கிடந்த பையைப் பார்த்துவிட்டு இந்த கருமாந்திரத்தையும் எடுத்து கொண்டு போங்கோ என்று சொல்லிவிட்டு உள்ளே போகிறார். காஞ்சனாவும் ஓடிப்போய் அந்த பையை எடுத்துக்கொண்டு வேறு வாசல் வழியாக வெளியேறுகிறாள்.

🌱........வளரும்......!

 

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

சுவி அண்ணா, அசத்தலான ஆரம்பம். நாங்கள் சிரிக்க ரெடி! தொடருங்கள். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, suvy said:

வழக்கு எண் 108. வாய்க்கால் வழக்கு. என குமாஸ்தா அழைக்கவும் சிவஞானமும் செல்லையாவும் வந்து வாதி பிரதிவாதி கூண்டுகளில் ஏறி நிக்கின்றார்கள்.

புலிகளுக்கு முன்னர் நீதிமன்றங்களில் கூடுதலான வழக்குகள் பங்குக்காணி பங்குக்கிணறு அதுவும் கூடுதலாக சகோதரங்கள் மிகவும் நெருங்கிய சொந்தம் என்று தான் இருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா.....காஞ்சனா.....கண்ணி.......!

கதை ஒரு மார்கமாய்த்தான் போகும் போலை கிடக்கு....👍

Link to comment
Share on other sites

 சுவி அண்ணா !

சிரிப்புக்குமட்டும்,சிந்திக்கக்கூடாது......! என்று எழுதியிருக்கிறீர்கள் ஆரம்பமே  சிரிப்போட  சிந்திக்கக் கூடியதாய் இருக்கு, தொடருங்கள்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🥀.............(2)

                                               வெளியே வந்த ரவீந்திரனுக்கு கோபம் கோபமாய் வருகின்றது.காவலர்களுக்கு அது எதோ அன்றாட நிகழ்ச்சி மாதிரி ஏதேதோ பேசி சிரித்துக் கொண்டு வருகின்றார்கள். ஏன் கனகு நான் கவலையுடன் வருகிறன், நீங்கள் ஏதோ சம்பந்தமே இல்லாததுபோல் சிரிச்சுக் கொண்டு வாரியள். விடுங்க சேர் நாலுல  ஒண்டு இப்படி புட்டுக்கிட்டு போறது வழக்கம் தானே. இல்லை மார்க்கண்டு இதை சும்மா விடக்கூடாது. எனக்கு மனசு சரியில்லை. நீங்கள் அந்த கஞ்சா பையை ஸ்டேசனுக்கு  கொண்டுபோய் சீல் பண்ணி லாக்கரில் வையுங்கோ. 
எங்கே அந்த பை நீங்கள் எடுக்கவில்லையா நானும் எடுக்கேல்ல.மூவரும் ஓடிப்போய் பார்க்க அங்கே அது இல்லை.

கஞ்சா பையுடன் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே ஓடிவந்த காஞ்சனா சைலன்ட் மோடில் இருந்த தனது நோக்கியாயை எடுத்து நோக்க சற்றுமுன்பாக மரியா அவளுக்கு போன் பண்ணியிருந்தது தெரிந்தது.உடனே போனை மரியாவுக்கு போட்டு என்னடி, நான் உள்ளுக்க இருக்கிறன் நீ போன் பண்ணியிருக்கிறாய்.

மரியா: என்ன நீ உள்ளுக்க இருக்கிறியா, இப்பதான் யாவாரம் தொடங்கி இருக்கு.ஜாமினில எடுக்கவும் கையில காசு பத்தாதேடி.

காஞ்சனா: மண்ணாங்கட்டி, கேஸ் புட்டுக்கிட்டுது. அந்த இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் கோபத்தோட வெளியே போறார். நீ கவனம் மாட்டுப் பட்டிடாத. சரி சரி விடயத்தை சொல்லு. இப்ப நீ எங்க நிக்கிறாய்.

மரியா: நான் இங்க தவறணைக்கு பக்கத்தில நிக்கிறன். இங்க யாவாரம் நல்லா போகுது.சரக்கு காலி.அதுதான் உன்னிடம் இருக்கா,அல்லது அதையும் போலீசில புடுங்கிட்டிடங்களா.

காஞ்சனா: என்னிடமாவது புடுங்கிறதாவது.ஜட்ச் ஐயாவே கொண்டுபோகச்சொல்லி தந்திட்டார். அப்படியே அலேக்கா தூக்கி கொண்டாந்திட்டன்.

மரியா: என்ர செல்லம்.கெதியா ஓடியா,சீக்கிரமாய் வித்திட்டு, பண்ணை சந்தையில மீனும் வாங்கிக் கொண்டு போவம். 

                                பண்ணை சந்தையில் மீன் வியாபாரம் மும்மரமாய் நடந்து கொண்டிருக்கு. சாரி சாரியாக வகை வகையான  மீன்கள், சுறாக்கள்,றால்,நண்டு,திருக்கை என்று வந்து இறங்கிக்கொண்டிருக்கு.எல்லாம் தரம்பிரித்து தனித்தனியாக ஏலம் கூறப்படுகின்றது.பெரும் வியாபாரிகளுடன் சிறு வியாபாரிகளும் போட்டி போட்டு ஏலம் எடுக்கின்றார்கள். இன்னொரு பக்கத்தில் மீன் வெட்டுபவர்கள் சில்லறையாய் வாங்குபவர்களை அழைத்து வெட்டிக் குடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.அப்பொழுது அங்கு வருகின்றார்கள் காஞ்சனாவும் மரியாவும்.ஒருமுறை சந்தையை சுற்றி பார்த்துக் கொண்டு வந்து விட்டு பின் ஒரு பெரிய கலவாய் மீனும்,பொரிக்கவும் சொதிக்கும் றாலும்,  மட்டுவில்  முரலும் வாங்கிக்கொள்கின்றனர்.அங்கு ஒரு கையளவு சுறாவை பார்த்த காஞ்சனா அதை விலைபேசி எடுக்க முற்பட உடனே மரியா ஏன்டி இப்ப இவ்வளவு கறி வாங்கியாச்சுது உதை வேற என்னத்துக்கு எடுக்கிறாய்.இல்லடி அப்பாக்கு சுறா எண்டால் ரொம்பப் பிடிக்கும் அதுதான். கொன்னுடுவன்,வையடி அதை.அப்பாவாம் அப்பா.நான் போய் மீனை வெட்ட கொடுக்கிறன் நீ வா என்று சொல்லிவிட்டு மரியா அப்பால் செல்ல காஞ்சனாவும் அப்பாக்கு சுறாவை வாங்கிக்கொண்டு பின்னால் போகிறாள்.

                                       போலீஸ் ஸ்டேசன்..... ! மார்க்கண்டையும், கனகராசாவையும் தனது அறைக்கு வரச்சொல்லி அழைத்து விட்டு ஜன்னலோரம் நின்று வெளியே பார்த்துக்கொண்டு நிக்கிறார் இன்ஸ்பெக்டர்  ரவீந்திரன். யாரோ சாப்பிட்டு விட்டு வெளியே தூக்கிப்போட்ட எச்சிலையிலிருந்த மிச்சத்தை ஒரு நாயும், ஒரு பூனையும் சத்தம் காட்டாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு போலீஸ் ஸ்டேசனுக்குள் இதுவும் சாத்தியம்தான், பூட்ஸ் காலால் மிதி வாங்கியிருக்கும் பட்சத்தில். 

கதவை இலேசாகத் தட்டிவிட்டு திறந்துகொண்டு மார்கண்டுவும் கனகுவும் உள்ளே வந்து இன்ஸ்பெக்ட்டரை பார்க்க, ரவீந்திரனும் பார்த்தியா கனகு ஒரு சின்ன பெட்டை எங்களை முட்டாளாக்கிப் போட்டு கஞ்சாப் பைக்கட்டுகளையும் அடிச்சுக்கொண்டு போயிட்டாள். சே....நினைக்க நினைக்க பெருத்த அவமானமாய் இருக்கு.

கனகு:ஓம் சேர் நாங்களும் சாப்பிடும்போது அதைப்பற்றித்தான் கதைத்துக் கொண்டிருந்தோம்.

ரவி: உங்களுக்கு அவளைப்பற்றி முன்பின் ஏதாவது தெரியுமா.
கனகுவும் அவளை  முன் பின்னாக கனவு கானும் சமயத்தில் ரவிந்திரன் குரலில் கடுமையுடன் உன்னைத்தான் கனகு என்று வினவ கனகுவும் திடுக்கிட்டு....... 

கனகு : இப்பதான்  அண்ணன்  மார்க்கண்டுதான் சொல்லிச்சு அந்தப் பெண்ணும் இன்னொரு பெடிச்சியும் கூட்டாளியாய் திரிவதை  தான் பாரத்திருக்கிறதெண்டு. 

மார்க்கண்டு கனகுவை முறைத்து விட்டு, அது ஒன்றுமில்லை சேர்,அப்பப்ப அங்க இங்க என்று பார்த்ததுதான்.
ஆனால் அவர்கள் கஞ்சா எல்லாம் விற்பார்கள் என்று நான் நினைத்ததில்லை.

சரி போகட்டும்.இனிமேல் அவர்களை நாங்கள் தீவிரமாய் கண்காணிக்க வேண்டும். இவர்கள் யார்,எங்கு யாருடன் தங்கி இருக்கிறார்கள்.எங்கிருந்து கஞ்சா வாங்குகின்றார்கள்.யார்யாரோடு தொடர்பில் இருக்கிறார்கள். இவர்களுக்கு பின்னால் இருந்து யாராவது இவர்களை இயக்குகிறார்களா என்பதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டும்.

கனகு: யெஸ் சேர், நாங்களும் ஒரு குரூப்பாக சேர்ந்து இதைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைக் கைது செய்கிறோம்.

மார்க்கண்டு:இதற்காக ஒரு தனி பைல் திறந்து கிடைக்கும் ஆவணங்களை அதில் சேகரிக்கலாம்.

ரவி:நல்ல யோசனை மார்க்கண்டு.அதுதான் சரி. இதை சும்மா விடக்கூடாது. எவ்வளவு கொழுப்பு இருந்தால் என்னை ஏமாற்றியதும் இல்லாமல் நீதிமன்றத்தில் இருந்தே கஞ்சா பொட்டலங்களையும்  எடுத்துக் கொண்டு ஓடியிருப்பாள். இந்நேரத்தில் ரவீந்திரனின் மூளையில் மின்னலாக ஒரு எண்ணம் பளிச்சிடுகின்றது. எங்கள் மூவரையும் அந்த பெட்டைகளுக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் பின்தொடர்ந்தால் எங்களை சுழிச்சுப் போடுவாளவை. அதனால் புதிதாகவும் ஓர் ஆளை இந்த ஒப்பிறேசனில்  சேர்க்க வேண்டும்.ஆனால் அது மார்கண்டுக்கும்  கனகுக்கும் தெரியாமல் இருந்தால்கூட நல்லதுதான் என்று  யோசித்து இந்த வேலைக்கு ஆரவ்தான் சரியான ஆள் என்று தீர்மானித்து  இவர்களை அனுப்பிவிட்டு நேராக குவாட்டர்சுக்கு போய் அவனைப் பார்க்கலாம் என நினைத்துக்கொண்டான்.

கனகு:நாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு  "கஞ்சா விற்கும் காஞ்சனா" என்று தலைப்பு போடலாமா சேர்,

                                           ரவி: யெஸ் நல்ல தலைப்பு அப்படியே வைக்கலாம்,....."ஒப்பிறேசன் கே . வி . கே.....!" என்ன சரியா இருவரும் ஆமோதிக்கின்ரனர்,

பெண்கள் இருவரும் அங்கு வந்த மினிவானில் ஏறி யாழ் - மத்திய பேரூந்து நிலையத்துக்கு வந்து அங்கிருந்து பலாலிக்கு புறப்படும் பஸ்ஸில் ஏறி அமருகின்றார்கள். மரியாவும் அங்கு புட்போர்ட்டுக்கு அருகில் இருந்த இருக்கையில் இருந்து  கணக்கு சரிபண்ணிக் கொண்டிருந்த நடத்துனரிடம், அண்ணை இந்த பஸ் எப்ப வெளிக்கிடும். இப்ப கிளம்பிற நேரம்தான்.......ட்ரைவர் அண்ணையை காணேல்ல,சும்மா குழப்பாத பிள்ளை.நான் கணக்கு பண்ணிக் கொண்டிருக்கிறான்..... யாரை அண்ணை......!தலையை நிமிர்த்தி அவளை மேலும் கீழும் பார்த்தவர், ம்.....பகிடி...அந்தா அந்த சிவப்பு சுடிதாரோட கடலை போட்டபடி  புகைவிட்டுக்கொண்டு நிக்கிறார் பார் அவர்தான் சாரதி. அவர் புகைவிட்டு முடிய வண்டியும் புகைவிட்டுக் கொண்டு கிளம்பிடும். மரியாவும் சென்று ஜன்னலோரமாக காஞ்சனா இருந்த  இருக்கைக்கு பின் இருக்கையில் வசதியாக காலை நீட்டி அமர்ந்து கொண்டாள். வண்டிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வந்து ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.

தூரத்தில் ஒரு பஸ்ஸின் மறைவில் இருந்து ஆரவ்வுக்கு இரண்டு பெண்களையும் ரவீந்திரன் அடையாளம் காட்ட  ஆரவ்வும் சனங்களுடன் சேர்ந்து அந்த பஸ்ஸில் ஏறிக் கொள்கிறான்,


    🌱............ வளரும்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🥀..............(3)

                               

காவலர்கள் கனகுவும் மார்கண்டுவும் வெளியே வரவும் அங்கே இரண்டு ஜிப் வண்டிகளுக்கு நடுவில் சைரன் பொருத்தபட்ட கார் ஒன்று வந்து நிக்கவும் சரியாக இருந்தது,  உடனே கனகு ஒடிசென்று பின் கதவை திறந்துவிட எனைய காவலர்கள் சல்யூட் அடிக்க அதில் இருந்து உயர் அதிகாரி மகேசன் இறங்கி அவர்களின் மரியாதையை ஏற்றுக் கொன்டு உள்ளே வருகிறார். மகேசன் அறையில் சென்று அமரவும்   மார்கண்டு ஒரு குளிர்பாணத்தை எடுத்து வந்து அவர் முன் மேசையில் வைக்கிறார்,மற்றைய காவலர்கலளும் அவர் சொல்வதை கேட்க ஆவலாக அங்கே குழுமி இருக்கின்றனர்,அவரும் யார் யாருக்கு என்னென்னெ சம்பள உயர்வுகள் பதவி உயர்வுகள் என்பதை சொல்லிவிட்டு இன்ச்பெக்டர் ரவிந்திரனுக்கு சம்பள உயர்வுடன் அவரின் சேவையை ஊக்குவிக்குமுகமாக சட்டையில் ஒரு நட்சத்திரமும் கிடைக்கும்  என்கிறார், எல்லோரும் கலைந்து செல்ல மார்கண்டுவும் கனகுவும் அங்கே நிக்கிறார்கள், மகேசன் அவர்களைப் பார்த்து என்ன ஏதும் சொல்ல வேண்டுமா என்று கேட்கிறார்,
மார்கண்டு : வேறொன்றுமில்லை ஐயா கனகாலமாக எனக்கு பதவி உயர்வு எதுவும் வரவில்லை முன்பும் உங்களிடம்,,,,,, அதுதான் என இழுக்கிறார் ( மார்கண்டு மகேசனைவிட சீனியர்),

மகேசன் : பாருங்கள் மார்கண்டு இவற்றை நான் தீர்மானிப்பதில்லை,மேலிடம்தான் செய்கிறது, அவர்களும் கடந்த காலங்களில் ஒவ்வொருவருடைய சேவையின் புள்ளி விபரங்களை வைத்துதான் முடிவுகளை எடுக்கிறார்கள், அன்று அந்த முடிவுகள் எடுத்த நாட்களில் நானும் அங்கிருந்தேன்,கடந்த வருடங்களில் நீங்கள் எந்த ஒரு வழக்குகளும் சரியாக கையாளவில்லை,மேலும் இருமுறை சஸ்பன்ட் செய்யபட்டு இருக்கிறீர்கள், வேலைக்கும் ஒழுங்காக வருவதில்லை, இவையெல்லாம்தான் உங்களின் பதவி உயர்வுக்கு தடையாக உள்ளது, நான் பொய்  சொல்லவில்லை, நான் அன்று உங்களுக்காக கதைத்துத்தான் இந்த சம்பள உயர்வையே பெற்று வந்திருக்கிறேன்,(இது பொய்), என்றவர் கனகுவை பார்த்து  உனக்கு  நல்ல எதிர்காலம் உண்டு,  தேவையில்லாத வேலைகள் பார்த்து வீனாய் கெடுத்து கொள்ளாதே, நீங்கள் என்ன செய்தாலும் அது மேலிடத்துக்கு மணக்கும் புரிந்தால் சரி,  

கனகு : நன்றி ஐயா,,,அப்படியே நடக்கிறேன்,,,( இனி அப்பப்ப லஞ்சம் வாங்குவதையும் நிறுத்திடனும் என மனதுக்குள் நினைக்கிறான், 
மார்கண்டு : ஐயா ரவீந்திரன் பணியில் அமர்ந்து ஏழெட்டு  மாதங்கள்தானே இருக்கும் அவருக்கு மட்டும் எப்படி இந்த உயர்வுகள் கிடைக்கின்றன,  

எவ்வளவு காலம் பதவியில் இருக்கிறார் என்பதல்ல, என்னென்ன செய்துள்ளார் என்பதைத்தான் பார்க்க வேண்டும், தனது மடிக் கணனியை திருப்பிக் காட்டியபடி சொல்கிறார்,  இந்த ஸ்டெசனில் மட்டும் சுமார் ஐயாயிரம் முடிக்கப் படாத வழக்குகள் நிலுவையில் உள்ளன, அவற்றில் நூறு புகார்கள் வரை அவர் தனது முயற்சியால் பூரணமாக முடித்து மேலிடத்துக்கும் அனுப்பி அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார், இது போதாதா, 

மார்கண்டு மவுனமாக இருக்க மகேசன் எழுந்து செல்கிறார்,,,, , !

                   ஆரியகுளம் தாண்டி கந்தர்மடம் சந்திக்கு அருகாக காஞ்சனாவும் மரியாவும் இறங்கி கொள்கிறார்கள், அங்கிருந்து அரசடி வீதியில்உள்ள காஞ்சனாவின்  வீட்டிக்குள் செல்கின்றனர், அந்த வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி மரியாவின் வீடு இருக்கு, பின் வளவால் போய் வரலாம், 
மரியா நீ இந்த கறிகளை கழுவி சமை, நான் இதை  அம்மாவிடம் குடுத்து விட்டு வருகிறேன்,
இஞ்ச கொண்டா அதையும் கழுவித் தாறன், பையை குடுத்திட்டு காஞ்சனா தேனிர் போட உள்ளே போகிறாள், 
முற்றத்தில் படர்ந்து நீளமான கிளைகளுடன் நிக்கும் தேமா மரத்தின் கீழ் அரிவாளையும் சட்டியுடன் தண்ணீரையும் கொண்டுவந்த மரியா ,அவற்றை கீழே வைத்துவிட்டு பாவாடையை முழங்கால் வரை வழித்து விட்டுக்கொண்டு குந்தியிருந்து மீனை கழுவுகிறாள். சொல்லி வைத்த மாதிரி அவர்களின் பூனையும், நாயும் அங்கு வர மரக்கிளையில் காகமும் வந்தமர்கின்றது.

பஸ்ஸில் இருந்து அவர்களின் பின்னால் இறங்கிய ஆரவ் சிறிது இடைவெளி விட்டு அவர்களை பின் தொடர்கின்றான். ஒவ்வொரு வீடாக மதிலால் எட்டி எட்டி பார்த்து வந்து கொண்டிருந்த ஆரவ் , இந்த சந்தியால்தானே திரும்பினவர்கள்.அதுக்கிடையில் எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்து ஒரு தகர வேலியின் கீழால் பார்க்கையில் முற்றத்தில் ஒரு பெண் கறி சட்டியோடும் ரெட்  ஜட்டியோடும் கலவாய் மீன் கழுவிக்கொண்டிருக்கிறாள். ஆளரவம் கேட்டு ஜிம்மியும் ஆக்ரோஷத்துடன் குரைத்துக்கொண்டு  வேலியடிக்கு பாய்ந்து வருகின்றது.

வீரா நில் என்று கத்திக் கொண்டே மீன் சட்டியை மூடி விட்டு யாரது என்று குரல் கொடுத்து மரியா  வெளியில் வர ஆரவ்வும் அது நான், (என்ன சொல்வது என்று யோசித்து ) வந்து ஏதோ நரகலை  உழக்கி போட்டன் கால் கழுவ வேண்டும் என்கிறான். அவளும் பின்னால் கிணத்தடியை காட்டி விட்டு மீன் சட்டியுடன் உள்ளே போகிறாள். நாயும் பூனையும் மீனின் கழிவுகளைத் தின்ன சண்டை போட  காகமும் எட்டி எட்டி கொத்தி கொத்திக் கொண்டு பறக்கிறது.

                                       கிணற்றடிக்கு போன ஆரவ் வீட்டை நன்றாக நோட்டமிடுகிறான்.அங்கு ஒரு பெரிய கறிவேப்பிலை மரமும் அதன் வேரில் முளைத்த கண்டுகளும் ஆங்காங்கே நிக்கின்றன. அவற்றையொத்த வேறு சில செடிகளும் செழித்து வளர்ந்து நிக்கின்றன.ஆச்சி  கொஞ்சம் பார்த்துகொள்ளன நான் வீட்டை போய் தூள் எடுத்து கொண்டு வாறன் என்றபடி வேகமாய் நடந்து பின்னால் போகிறாள். கிழவியும் ஊசியில் நூல் கோர்த்துக் கொண்டே ஓம் என்று சொல்ல,ஆரவ்வும் விரைந்து அங்குள்ள செடிகள் எல்லாவற்றிலுமிருந்து சில நெட்டு இலைகளை பிடுங்கி பாக்கட்டில் செருகி கொண்டு மரியா வந்ததும் நன்றி சொல்லி விட்டு செல்கிறான்.

🌱................. வளரும்....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி நகைச்சுவையாக எழுத உங்களால்த்தான் முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2019 at 1:42 AM, suvy said:

காஞ்சனா: மண்ணாங்கட்டி, கேஸ் புட்டுக்கிட்டுது. அந்த இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் கோபத்தோட வெளியே போறார். நீ கவனம் மாட்டுப் பட்டிடாத. சரி சரி விடயத்தை சொல்லு. இப்ப நீ எங்க நிக்கிறாய்.

நீண்ட நாட்களின் பின் புட்டுக்கிட்டுது என்ற சொல்லை பார்த்திருக்கேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2019 at 1:42 AM, suvy said:

பெண்கள் இருவரும் அங்கு வந்த மினிவானில் ஏறி யாழ் - மத்திய பேரூந்து நிலையத்துக்கு வந்து அங்கிருந்து பலாலிக்கு புறப்படும் பஸ்ஸில் ஏறி அமருகின்றார்கள். மரியாவும் அங்கு புட்போர்ட்டுக்கு அருகில் இருந்த

கீரிமலையில் வியாளி என்று ஒரு பெண் இருந்தா யாருக்காவது ஞாபகம் இருக்கா?சாராயம் விற்பதிலிருந்து அடிதடி சண்டை என்று பெயர் பெற்றவர்.

மனிசி பஸ்சில் ஏறுவதென்றால் ஓடஓடத் தான் ஏறும் இறங்கும்.அந்த மனுசி ஏறிய பஸ்சில் பெட்டைகள் இருந்தா உடனே இறங்குவது நல்லது.முழுக்க முழுக்க தூசணம் தான்.

அனேகமான நேரங்களில் புட்போர்டில் தான் பயணம் செய்வார்.ரிக்கட் எடுத்திருப்பாவோ தெரியல்லை.

5 hours ago, suvy said:

ஏதோரகலை  உழக்கி போட்டன்

 எப்போதோ பாவித்த சொற்கள் நீண்ட காலத்தின் பின்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி ,

ரவீந்திரன் ,கனகு, மார்க்கண்டு ,மகேசன் எல்லாம் தமிழ் பொலிசாவே இருக்கு.

கதையானாலும் ஒரு சிங்கள பொலிஸ் தானும் இல்லையே என்று மனதுக்குள் சந்தோசமாக இருக்கு.
ஆனால் இனி பதவி உயர்வுக்காக மார்க்கண்டு என்ன செய்யப் போகிறார் என்னு சந்தேகமாக இருக்கு.ஐயா தமிழ் பொலிசை நாறடிச்சிடாதீங்க.ரொம்ப ஏமாற்றமாக போயிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

கீரிமலையில் வியாளி என்று ஒரு பெண் இருந்தா யாருக்காவது ஞாபகம் இருக்கா?சாராயம் விற்பதிலிருந்து அடிதடி சண்டை என்று பெயர் பெற்றவர்.

மனிசி பஸ்சில் ஏறுவதென்றால் ஓடஓடத் தான் ஏறும் இறங்கும்.அந்த மனுசி ஏறிய பஸ்சில் பெட்டைகள் இருந்தா உடனே இறங்குவது நல்லது.முழுக்க முழுக்க தூசணம் தான்.

அனேகமான நேரங்களில் புட்போர்டில் தான் பயணம் செய்வார்.ரிக்கட் எடுத்திருப்பாவோ தெரியல்லை.

 எப்போதோ பாவித்த சொற்கள் நீண்ட காலத்தின் பின்.

ம்.....அப்போது பிரபலமானவர்கள் .....கீரிமலையில்  அவவும், காரைநகரில் இந்துமதியும் , யாழில் ரோசக்காவும் என்று பலர் பவிதமாய் சேவை சாதித்து வந்திருக்கின்றனர்........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🥀............(4)

                                        

சற்றுநேரத்தில் வீட்டுக்குள் வந்த காஞ்சனா கை கழுவ கிணற்றடிக்கு போகிறாள். ஆங்காங்கே செடிகளில் இருந்து பிடுங்கிய இலைகள் சிதறிக் கிடக்கு.மரியாவை கூப்பிட்டு கேட்க அவளும் ஒருத்தன் வந்ததையும் கால் கழுவ கிணற்றடிக்கு போனதையும் சொல்கிறாள்.சரியென்று அவளை அனுப்பிவிட்டு யோசிக்க எதுவோ சரியில்லாமல் தோணுது.உடனே ரிஸ்க் எடுக்க விரும்பாமல் அங்கிருந்த கஞ்சா செடிகள் அத்தனையையும் பிடுங்கி சமைத்து கொண்டிருந்த மரியாவிடம் இதை ஒழிச்சு வை என்று சொல்லி குடுத்து விட்டு செடி பிடுங்கிய நிலத்தை சரி செய்ய அப்பால் போகிறாள்.அவளும் அவற்றை கீழே கிடந்த விறகுக் குவியலுக்குள் விறகோடு விறகாய் வைத்து விடுகிறாள்.

 சமைத்து விட்டு வெளியே வந்த மரியா காஞ்சனாவிடம்,உன்ர கொப்பரும் கொம்மாவும் எப்படி இருக்கினம் என்று ஏளனமாக வினாவுகிறாள். அவளும், அவர்களுக்கென்ன ஜாலியாய் இருக்கினம் என்று வேண்டுமென்றே பொடி  வைத்து சொல்கிறாள்.இருப்பினம் இருப்பினம்  என்று மரியா கறுவிக் கொள்ள காஞ்சனா சொண்டுக்குள் சிரிக்கிறாள்.இங்கேதான் இந்த வீட்டில்  காஞ்சனாவும் அப்பாவும் பேத்தியாரும் இருந்தவர்கள்.அப்படியே அங்கால இருக்கும் வீட்டில் மரியாவும் தாயாரும் வாழ்ந்து வந்தார்கள்.மரியாவின்  தாயார் மாலினி  தலைமைத் தாதியாக ஒரு கிளினிக்கில் வேலை செய்கிறார். இவள் காஞ்சனாவின் தகப்பன் ஒரு வேலை என்று இல்லாமல் எல்லா தப்பு தண்டாவான வேலைகளும் செய்வார்.அவர்தான் கஞ்சா விற்பது, வீட்டில் பயிரிடுவது என்று எல்லாம்.அவருடைய மனைவி முன்பே தவறிவிட்ட பின்தான் அவர் வாழ்வு திசை மாறியது.  மரியாவின் தந்தை ஒரு ஆங்கிலோ இந்தியன்.அழகாய் இருப்பான்.அதே நிறமும் குணமும் மரியாவிடமும் உண்டு. மரியா பேசும் தமிழ் கூட கொழும்புத் தமிழ்தான்.  அப்போது கொழும்பில் வாழ்ந்தார்கள்.ஒருநாள் அவன் கூட வேலை செய்த யாரையோ கூட்டிக்கொண்டு நாட்டை விட்டு போய் விட்டான்.திரும்பி வரவில்லை.மாலினியும் கனநாள் இருந்து பார்த்து விட்டு இங்கு வந்து ஒரு கிளினிக்கில் தாதியாக வேலை செய்கிறாள்.  அப்பப்ப கறிக்கு போட கறிவேப்பிலை எடுக்க காஞ்சனா வீட்டுக்கு வருவாள். வேலைக்கு செல்லும்போது மரியாவை இவர்களிடம் விட்டு விட்டு  செல்வாள்.அப்படியே செல்வராசுவுடன் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. வேலையால்  அலுத்து களைத்து வருபவளுக்கு செல்வராசுவும் வலிநிவாரணி என்று கஞ்சாவை அறிமுகப்படுத்தி விட்டான். அது அவள் வாயோடு மட்டுமல்ல  அக்கம் பக்கம் எல்லாம் இருக்கிற வாய்களிலும்  புகையதொடங்கி அவர்களை தனிவீடு எடுத்து தங்க வைத்து விட்டது.கனகாலம் பிள்ளைகளுக்கும் அவர்களுக்கும் ஒட்டுறவு இல்லாமல் இருந்து இப்பதான் கொஞ்சம் புழங்குகின்றார்கள்.

போன் சிணுங்குகிறது.ரவீந்திரனும் அட ஆரவ் என்று சொல்லிக்கொண்டு எடுக்கிறான்.எதிர் முனையில் மச்சான் எங்கிருக்கிறாய்.... நான் ஒரு கேஸ் விடயமாய் ஆரியகுளத்தடியில் நிக்கிறன். அங்கேயே நில் இதோ வருகிறேன் என்ற ஆரவ் சற்று நேரத்தில் பேருந்தில் வந்து இறங்குகின்றான்.
என்ன ஆரவ் சிரிப்போட வாராய்.போன அலுவல் என்னாச்சு. எல்லாம் பழம் மச்சான் என்று போனதில் இருந்து நடந்தவற்றை சொல்லி விட்டு பாக்கட்டில் இருந்து சேகரித்த இலைகளை எடுத்து கொடுக்கிறான்.அவற்றை வாங்கி மோட்டார் சைக்கிள் சீற்றில் வைத்து கறிவேப்பிலையையும் கஞ்சா இலைகளையும் தரம் பிரித்து வைக்கிறான்.எடேய் இவளவை எமகாதகிகளடா. கஞ்சா வாங்கியும் விக்கினம்,வீட்டிலையும் வளர்க்கினம்.இவையை சும்மா விடக்கூடாது என்று ரவீந்திரன் சொல்கிறான்.
 
உனக்கு இன்னொரு நல்ல செய்தி. எதிர்பாராமல் ஒருத்தனை பிடித்து சோதனை செய்ததில அவனிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா பைக்கட் கிடைத்தது.ஸ்டேசனுக்கு கொண்டு போய் கவனிச்சதில நிறைய உண்மைகளை சொல்லிப்போட்டான்..... என்னவாம் ஆரவ் கேட்க ....இன்னும் ஒரு வாரத்தில் ஒரு படகு நிறைய சாமான்கள் வருகுதாம்.இங்கும் ஒரு பிரமுகரின் உறவினர்தான் எல்லோருக்கும் சப்ளை செய்கிறாராம். அவருக்கு நம்ம இலாகாவுக்குள்ளேயே ஆட்கள் இருக்கிறார்களாம். மேலும் ஒன்றிரண்டு பெண்கள் அடிக்கடி வந்து வாங்கிக் கொண்டு போறவையாம். அவன் சொன்ன அமைப்புகளை வைத்து கணனியில் ஸ்கெட்ச் போட்டு பார்த்ததில், நீயே பார் என்று போனை செட் பண்ணி காட்டுகிறான், அது காஞ்சனாவுடன் நன்றாக ஒத்து போகின்றது. அப்போது ஆரவ்வின் காலில் ஏதோ சுனைக்க செருப்பை கழட்டி பார்க்கிறான். அதைப்பார்த்த ரவீந்திரன் டேய்  அது காஞ்சூண்டி இலையடா பட்ட இடமெல்லாம் தடித்து போய் எரியும், இங்கால வந்து நில் என்கிறான்.

                       ரவீந்திரனும் ஆரவ்வும் காவல் நிலையத்துக்கு வந்து மோட்டார் சைக்கிளை பின்னால் விட்டுவிட்டு பின் கதவால் உள்ளே வருகின்றார்கள்.வழியில் கிடந்த ஒரு ஆட்டுக்கல்லு காலில் தடக்குப்பட இது வேற எப்போதும் காலில அடிக்குது, முதலில் இதுக்கு ஒரு வழி பண்ணனும் என்று சலித்து கொண்டே ரவீந்திரன் உள்ளே வருகிறான். அங்கு கைதிகளின் அறையில் அந்த கஞ்சா குற்றவாளி மூக்கில் இருந்து குருதி ஒழுக  குந்தி இருக்கிறான்.
இவனா அவன் என்று ஆரவ் கேட்க , ஓம் என்று சொல்லிக்கொண்டே தனது அறைக்கு வந்து அலுமாரியைத் திறந்து பொலித்தின் பையால் நேர்த்தியாக மூடப்பட்ட இரு பெட்டிகளை எடுத்து மேசையில் போடுகிறான். அதில் ஒன்று உடைத்திருக்க அதனுள் இருந்த கஞ்சா இலைகளை கையில் எடுத்து பார்த்த ஆரவ் மச்சான் இது அப்போது என் காலில் சுனைத்து கடித்த காஞ்சூண்டி இலைபோல் இருக்குடா. ரவீந்திரனும் பார்த்துவிட்டு ஓமடா அதுபோல்தான் இருக்கு.

                                மச்சான் இவளவையை மாட்ட ஒரு ஐடியா..... என்னடா,  இனி திங்கள், திங்கள் போயா செவ்வாய்  கிழமைதான் இவனை கோட்டுக்கு கொண்டு போக முடியும் இல்லையா.....!
 ஓம் அதுக்கென்ன .......!
 இந்த சனி ஞாயிறு இரண்டு நாட்களுக்குள் அந்தச் சனியன்கள் ரெண்டும் அவனிடம் கஞ்சா வாங்க வருவினம். சரியா.....!
 ஓம் சில சமயம் வரலாம்.......!
 இப்ப நாங்கள் இந்த பெட்டிக்குள் இருக்கும் கஞ்சாவை எடுத்துப்போட்டு இதற்குள் காஞ்சூண்டி இலையை வைத்து எப்படியாவது பெட்டியை மாற்றி எடுத்து கொண்டு வர வேண்டும். என்ன சொல்லுறாய்.......!
 ரவீந்திரனுக்கும் அது நல்ல யோசனையாய் படுகுது. அண்டைக்கு என்னை ஏமாத்துனனியா இருடி மவளே வாறன்.உனக்கு இருக்குடி, மனதுக்குள் கறுவிக்கொண்டு  உடனே அதை செயல்படுத்த ஆரியகுளத்தடிக்கு ஓடுகிறார்கள்.அவர்களை காய்ஞ்ச காஞ்சூண்டி இலைகள் காற்றில் அசைந்து வரவேற்கின்றன.......!
                  

     🌱.............. வளரும் .....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்டகாசம் சுவியண்ணா...தொடருங்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுவியர்....!

பின்னர் கருத்து எழுதுகின்றேன்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நகைச் சுவை கதை சுவி. இதற்கு எடுத்த கரு... மிக அருமை. 
எந்தக்  கோணத்தில், கதையை... நகர்த்தினாலும், சிரிப்புக்கு பஞ்சம் இராது என்பது திண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🥀................... (5).

                                              


அன்று அதி காலையிலேயே எழுந்த காஞ்சனா தன்னை அலங்கரித்து கொண்டு கண்ணாடியில் இருந்து ஒப்பனை செய்கிறாள். பச்சை பஞ்சாபியும் சிகப்பில் சால்லும் போட்டுக்கொண்டு உதட்டுக்கு லைட்டாக லிப்ஸ்டிக் பூசி இரண்டு  காதிலும்  இரண்டு குருவி ஊஞ்சலாடும் அளவு பெரிய வளையம் போட்டு,ஹார்ட் டாலரோடு மெல்லிய செயின் கழுத்தில், மிகக் கவனமாக அந்த சால் செழுமையான மார்பை மறைத்தும்  மறைக்காமல் இருக்குமாறு ஒதுக்கி விட்டு கொண்டாள். அதனால் செயினில் தொங்கிய டாலர் சுதந்திரமாக மார்புகளின் இடைகளுக்குள் அங்கும் இங்குமாய் ஊசலாடிக் கொண்டிருக்குது. சிறிது நேரம் தன்னை மறந்து தன்னை ரசித்தவள் மரியாவின் குரல் கேட்டு வெளியே வருகிறாள்.

                   இன்று நீ ரெம்ப அழகாய் இருக்கிறாயடி காஞ்சனா என்று சிலாகித்த மரியா சாமான் கொஞ்சம் தான் இருக்கு நீ போய் வாங்கிக் கொண்டு கெதியா வாரியா, நான் இதை கொண்டு போய் விக்கிறன் என்கிறாள்....சரி என்டதும் மரியா படலையால் வெளியேறுகிறாள். காஞ்சனாவும் போவதற்கு தயாராய் ஹைஹீல்ஸ் எடுத்தவள், வேண்டாம் சிலநேரம் ஓடவேண்டி வந்தால் ஹீல்ஸ் இடைஞ்சல் என நினைத்து வேறு ஒரு குதிகாலையும் சேர்த்து கொலுவும் வார் உள்ள ஒரு  சாண்டில்சை அணிந்து தோளில் கொலுவும் பையையும் எடுத்துக் கொண்டு புறப்படும் போது எனை ஆச்சி இந்த படலையை வந்து கொலுவனை மத்தியானம் கடையில் சாப்பாடு எடுத்து கொண்டு வாறன் என்று சொல்லிவிட்டு போகிறாள். காய்ந்த ஆடைகளை கைகளால் அழுத்தி நீவி நீவி மடித்து வைத்து கொண்டிருந்த கிழவியும், முன்னதாக தடி எழுந்து நிக்க அதை பிடித்துக் கொண்டு  எழுந்து வருகிறாள்.....!

                              வைமன் வீதியடியில் பொதுமக்களின் உதவியுடன் மார்க்கண்டு ஒரு திருடனைப் பிடித்து வைத்துக்கொண்டு கனகுவுக்கு போன் செய்கிறார். கனகு நீ  எங்க நிக்கிறாய்.....!
அண்ணை நான் படத்துக்கு போய்க் கொண்டுக்கிறன்.....!
அது கிடக்கட்டும் கெதியா இஞ்ச  வைமன் ரோட்டுக்கு வா, நான் ஒரு நகைக் கள்ளனைப் பிடித்திருக்கிறன்....!
ஏன் அண்ணை ஸ்டேசனுக்கு  அறிவித்தால் ஜீப் அனுப்புவினம் அல்லது ரவீந்திரனுக்கு சொல்லுங்கோவன்....!
ஓம் ...உது ஒண்டும் எனக்கு தெரியாது பார்..... சும்மா விசர்க்கதை கதைக்காமல் கெதியா வா .......!
சற்று நேரத்தில் கனகு மோட்டர் சைக்கிளில் வந்திறங்குகிறான்.....!

               அவனை கொஞ்ச தூரம் தள்ளிக்கொண்டு போன மார்க்கண்டு அவனிடம், வடிவாய் கேள் கனகு. இந்தக் கேஸைப் பொறுத்தவரையில் நீதான் பிடித்திருக்கிறாய்.....!
ஏன் அண்ணை நீங்கள்தானே பிடித்தனீங்கள்......!
ஓமடா ... ஆனால் எனக்கு ஏற்கனவே நிறைய ரெட் மார்க் இருக்கு.இனி நான் எதை பிடித்தும் எதுவும் ஆகப்போறதில்லை.ஒய்வு காலமும் நெருங்கிட்டுது.நல்ல காலம் சம்பள உயர்வு கிடைச்சிட்டுது. உனக்கு அப்படியில்லை.நல்ல எதிர்காலம் இருக்கு என்று அண்டைக்கு மகேசன் சொன்னதை கேட்டனிதானே, இதை நீயே டீல் பண்ணு. கொஞ்ச நாளாய் பார்க்கிறன் ரவீந்திரனும் எங்களை ஓரங் கட்டுற மாதிரித் தெரியுது. 
சரி அண்ணை.மிகவும் நண்றியன்னை......!


                 கனகுவும் தாமதிக்காமல் ஸ்டேசனுக்கு போன் செய்ய எழுத்தர் பத்மா எடுக்கிறாள்.அவளிடம் விடயத்தை சொல்ல...... அவளும் அங்கிருந்து ஜீப்பை அனுப்புகிறாள்.இருவருமாக திருடனை ஜீப்பில் போட்டுக்கொண்டு காவல் நிலையத்துக்கு வருகின்றார்கள். ஜீப்பை செட்டில் விட்டு விட்டு பின் கதவால் வர திருடனின் காலில் ஆட்டுக்கல்லு இடித்து போட்டுது. குனிந்து ஆட்டுக்கல்லை பார்த்தவன் "அட இது இன்னுமா இங்கே கிடக்குது" என்கிறான்.உடனே கனகு அவனிடம்  இதைப்பற்றி உனக்கு ஏதும் தெரியுமா என்று கேட்க என்ன ஐயா இப்படி கேட்கிறீங்கள், இதை அந்த சீட்டுக்காரியிடம் இருந்து களவெடுத்ததே நான்தானே. பிறகு மார்கண்டுவை பார்த்தவாறே அய்யாதான் இதை கேசுல போட மறந்திட்டார்..... மார்க்கண்டுவும் இருடா நாயே, நகைத்திருட்டுடன் சேர்த்து இதையும் போட்டு விடுறன். பின்பு பத்மாவும் அவனிடம் குற்றங்களை பதிவு செய்து மறக்காமல் ஆட்டுக்கல்லையும் சேர்த்து விட்டு  நகைகளை பொறுப்பெடுத்து கொண்டு அவனை கஞ்சா விக்கிறவன் இருக்கும் அறையில் விட்டு பூட்டிவிட்டு,  செவ்வாய்  கிழமை இவர்களை கோர்ட்டில் சமூகமளிப்பதற்கான அறிக்கைகளைத் தயார் செய்ய போகிறாள்.....!
 

   🌱..............வளரும்......!

Link to comment
Share on other sites

இந்தியா சுதந்திரமடைவற்குச் சற்று முன்னான காலப்பகுதியில் வெளியான 'துப்பறியும் சாம்பு' எனும் நாவலைத் தழுவிய வை.ஜி.மகேந்திரனின் நகைச்சுவை நாடகத் தொடரொன்றைப் பார்த்திருக்கிறேன். அது போல் நாடகங்கள் தற்போது ஏன் வெளிவருதில்லை என்றும் யோசித்திருக்கிறேன்.

உங்கள் தொடரை வாசிக்கையில் அந்த நாடகம் பார்த்த உணர்வு மீண்டும் கிடைக்கிறது. தொடருங்கள், நாமும் இணைந்திருக்கிறோம். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் தொடர் சூப்பர் தொட‌ருங்கள் .....வாசிக்க வாசிக்க சிரிப்புதான் வருகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

        🥀......................(6).                    


                                                
                     மிக ரகசியமாக இரண்டு பெட்டி கஞ்சாவை வாங்கிக்கொண்டு வீதியோரமாக எல்லாப் பக்கமும் கவனித்தபடி காஞ்சனா வந்து கொண்டிருக்கிறாள்.யாரோ தன்னைத் தொடர்வதுபோல் உள்ளுணர்வு சொல்ல எதிர்பாராமல் சரேலென திரும்பிப் பார்க்கிறாள். தூரத்தே ஒருத்தன் அபிநந்தன் மீசையுடன் வேறெங்கோ பராக்கு பார்த்ததுபோல் நிக்கிறான். என்றாலும் அவனது மிடுக்கான தோரணையும் தலைமுடி வெட்டும் அவன் ஒரு போலீஸ் என்பதை புரிந்து கொள்ள அதிக நேரமாகவில்லை.சிறிது நேரம் எங்காவது ஒளிக்க வேண்டும் என நினைத்து வரும்பொழுது அருகே திறந்திருந்த கேட்டுக்குள் சரேலென புகுந்து வீட்டின் தாழ்வாரத்தில் ஒதுங்கி நிக்கிறாள்,

 வீட்டிற்குள் இருந்து அம்மா ,கடவுளே என்று யாரோ முனகும் சத்தமும் எட மூர்த்தி எங்கடா போய்த்தொலைஞ்சா என்று யாரையோ அழைக்கும் குரலும் கேட்க, சிறிது தைரியத்தை வரவழைத்து கொண்டு ஹால் கதவைத் திறந்து உள்ளே பார்க்கிறாள்.அங்கே ஒரு பெரியவர் செற்றியில் படுத்தபடி கையால் தொடையை அழுத்திப் பிடித்தபடி அனுங்கிக் கொண்டு இருக்கிறார்.இவளும் பார்க்க அவரும் இவளைப் பார்த்து விட்டார்.
யாரம்மா நீ , இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்,இது யாருடைய வீடு தெரியுமா என்று கேட்கிறார்.
காஞ்சனாவும் தெரியாது ஐயா, வீதியால் நடந்து போய்க்கொண்டிருந்தேன்.இந்த வீட்டில் இருந்து யாரோ குளறுற சத்தம் கேட்டுது, அதுதான் என்னவென்று பார்க்க வந்தேன்......!
நான் குளறின சத்தம் அங்க வரையும் கேட்டுதா.....!
ஓம் ஐயா ......!
வெளியே காவல்காரன் யாரும் இல்லையா....!
இல்லை ஐயா....உங்களுக்கு ஏதாவது உதவி தேவையென்றால் சொல்லுங்கள், இல்லையென்றால் நான் போகிறேன்.
அதொன்றுமில்லையம்மா தொடையில் ஒரு கட்டு வலி உயிர் போகுது....!
நான் கொஞ்சம் பார்க்கலாமா என்றவள் அவர் பதிலுக்கு காத்திராமல் சாறத்தை சற்று விலக்கி பார்க்கிறாள்.கட்டு முகம் வைத்திருக்கு, இன்றோ நாளையோ உடைந்து விடும் நிலை.குசினி எங்கே என்று அவள் கேட்க அவர் கையால் காட்டுகிறார். உள்ளேபோனவள் சிறிது கஞ்சாவை எடுத்து தண்ணி விட்டு நல்லா மசித்துவிட்டு கொண்டுவந்து தொடையில் இருந்த கட்டின் மேல் அப்பிவிட்டு கட்டுக்கு கட்டு போடுவதற்காக தனது சாலை கிழிக்க முற்பட அவர் தடுத்து அங்கே பழைய துணி இருக்கும் அதனாலே கட்டிவிடு என்கிறார்.உடனே காஞ்சனாவும் இல்லை ஐயா அதை வாசகர்கள் ஏற்க மாட்டார்கள்.காலம் காலமாய் இந்த சிற்றுவேசன் இப்படித்தான் இருக்கு.நானும் அந்த மரபை மீறக்கூடாது என்று சொல்லி சாலை சரேலெனக் கிழித்து சர்ர்ர்ர் என்று கட்டி விட சுர்ர்ர் என்று வலி சிரசில அடிக்குது.....!.

                   கை கழுவி விட்டு வந்து இப்போ எப்படி ஐயா இருக்கு என்று கேட்க சும்மா சுர் என்று இருக்கு,வலியும் குறையிறமாதிரி தெரியுது. என்ன வச்சு கட்டினனி ஏதோ பச்சிலை போல இருந்தது......!
இது ஒரு மூலிகை ஐயா கேரளாவில் இருந்து வருகுது.இன்று இரவுக்குள் கட்டு உடைச்சு தண்ணி வெளியேறிடும் ........!
ஓமோம் நானும் கேள்விப்பட்டனான். எங்கட பழைய ப்ரைம் மினிஸ்ட்டர்ஸ் எல்லாம் அங்கை போய் வைத்தியம் செய்திருக்கினம். இந்த மூலிகைக்கு என்ன பெயர்.....!
 தேவையில்லாமல் உளறி கொட்டக் கூடாது என நினைத்து, இது சிவமூலிகை ஐயா.காசியில் ரெம்ப பிரசித்தம்....பேச்சை மாற்ற விரும்பி  இன்னும் வலிக்குது போல இருக்கு என்கிறாள்.....!
ம்....கொஞ்சம்.....!
உடனே பையில் இருந்து ரெண்டு கஞ்சா வைத்த சிகரட்டை  எடுத்து குடுக்கிறாள். இதைப் பிடியுங்கள் ஐயா வலி தெரியாது......!
நோ ....நோ நான் புகைப்பதில்லை.ஆனால் மது குடிப்பன். அதை டீப்போவில் வை, என் வைஃப்  கிளாரிடா புகைப்பாள்.....!
எங்கே அவர்.....!
வெளியே போயிட்டாள் இப்ப வந்திடுவாள். நானும் அவளும் படிக்கும்போது காதலித்து மணந்து கொண்டோம். சரி...சரி உனக்கு நான் கட்டாயம்  பணம் தர வேண்டும் எவ்வளவு என்று சொல்லு.....!
என்ன ஒரு இரண்டாயிரத்து ஐநூறு தாருங்கள் ஐயா.....!
பர்ஸில் பணத்தை எடுத்துக் கொண்டே இந்த மூலிகை அவ்வளவு காசா என்று கேட்கிறார்......!
மூலிகை ஐநூறுதான் ஐயா, பஞ்சாபிதான் இரண்டாயிரம் என்று சொல்லிக்கொண்டே வெளியே போகிறாள்....! 
                      

                            கனநேரமாய் காத்து நின்ற அந்த உளவாளி ரவீந்திரனுக்கு போன்போட்டு காஞ்சனா கஞ்சா வாங்கிக் கொண்டு வந்ததையும் பின் அவள் பெரிய அதிகாரி மகேசன் வீட்டுக்குள் நுழைந்ததையும் சொல்கிறான். ரவீந்திரனும் அவனிடம் இனி நீ அங்கு நிக்க வேண்டாம் வந்து விடு என்று சொல்லி விட்டு, மகேசனுக்கும் கஞ்சா வியாபாரத்துக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கிறான்.....! 

🌱..............வளரும்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இது சிவமூலிகை ஐயா.காசியில் ரெம்ப பிரசித்தம்....பேச்சை மாற்ற விரும்பி  இன்னும் வலிக்குது போல இருக்கு என்கிறாள்.....!

கஞ்சா காசிவரை போட்டுதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சு வியரின்  கஞ்சா  காஞ்சனா  ...நீர்  வீழ்ச்சி  மாதிரி   ...வேகமாய் இருக்கிறது . தொடருங்கோ 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2019 at 8:29 AM, suvy said:

🥀..............(3)

                   ஆரியகுளம் தாண்டி கந்தர்மடம் சந்திக்கு அருகாக காஞ்சனாவும் மரியாவும் இறங்கி கொள்கிறார்கள், அங்கிருந்து அரசடி வீதியில்உள்ள காஞ்சனாவின்  வீட்டிக்குள் செல்கின்றனர், அந்த வீட்டில் இருந்து இரண்டு வீடு தள்ளி மரியாவின் வீடு இருக்கு, பின் வளவால் போய் வரலாம், 
மரியா நீ இந்த கறிகளை கழுவி சமை, நான் இதை  அம்மாவிடம் குடுத்து விட்டு வருகிறேன்,
இஞ்ச கொண்டா அதையும் கழுவித் தாறன், பையை குடுத்திட்டு காஞ்சனா தேனிர் போட உள்ளே போகிறாள், 
-----------

பஸ்ஸில் இருந்து அவர்களின் பின்னால் இறங்கிய ஆரவ் சிறிது இடைவெளி விட்டு அவர்களை பின் தொடர்கின்றான். ஒவ்வொரு வீடாக மதிலால் எட்டி எட்டி பார்த்து வந்து கொண்டிருந்த ஆரவ் , இந்த சந்தியால்தானே திரும்பினவர்கள்.அதுக்கிடையில் எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்து ஒரு தகர வேலியின் கீழால் பார்க்கையில் முற்றத்தில் ஒரு பெண் கறி சட்டியோடும் ரெட்  ஜட்டியோடும் கலவாய் மீன் கழுவிக்கொண்டிருக்கிறாள். ஆளரவம் கேட்டு ஜிம்மியும் ஆக்ரோஷத்துடன் குரைத்துக்கொண்டு  வேலியடிக்கு பாய்ந்து வருகின்றது.

சுவியரின் கதையில், நம்ம ஏரியாவும் வந்தது மிக மகிழ்ச்சி. :102_point_up_2:
ஆரவ்... தகர வேலிக்கு  கீழால் பார்க்கும் போது... 
தெரிந்தவற்றை வர்ணித்த விதம் அழகோ... அழகு. :grin:
மரியா... ஜட்டி போட்டிருந்த படியால், ஆரவ்....  மயக்கம் வராமல் தப்பினார். 😝

கஞ்சா வேட்டைக்கு போய்... காஞ்சோண்டி  இலைகளை புடுங்கிக் கொண்டு வந்தால், 
பதவி உயர்வு எப்படி கிடைக்கும்?   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

            🥀................(7).                


               பேருந்தில் சென்று மரியாவிடம் ஒரு பெட்டி கஞ்சாவைக் குடுத்து விட்டு கடையில் சாப்பாடு கட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து மற்றப்பெட்டி கஞ்சாவை அறைக்குள் இருக்கும் வேலை செய்யாத ப்ரிட்ஜ் க்குள் (அது தெருவில் கிடந்து எடுத்தது) வைத்து விட்டு  ஆச்சியுடன் சேர்ந்து சாப்பிடுகிறாள். பின்பு ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு தகப்பன் வீட்டுக்கு போகும் பொழுது மழை தூறிக்கொண்டிருக்கு.அங்கிருந்து வர இரவாகி விட்டது. வழியில் பேய் மழை பிடித்து கொண்டது.ஓடி வரும்பொழுது ஒருத்தன் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு வருவதை காண்கிறாள்.கிட்டவா வந்து பார்த்தால் அது ரவீந்திரன்.

என்ன சார் சைக்கிள் பழுதடைந்து விட்டதா.....!
ஓம் ....ஓடிக்கொண்டு வந்தாற்போல எஞ்ஜினில் தண்ணி விழுந்து நின்று விட்டது.....!
தண்ணி என்றால் எப்பவுமே தகராறுதான் சேர்..... இந்த நேரத்தில் எப்படி போவிங்கள்.....!
அதைத்தான் நானும் யோசித்து கொண்டு வாறன்......!
உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், பக்கத்தில்தான் என்ர வீடு இருக்கு அங்கு சைக்கிளை விட்டுட்டு நாளைக்கு வந்து எடுக்கலாம் சேர்.....! அவன் தயக்கத்தைப் பார்த்து விட்டு நாங்கள் ஒண்டும் உங்கட சைக்கிளை களவெடுக்க மாட்டம் சேர்.......!
ஓமோம் களவெடுக்க மாட்டீங்கள் கஞ்சா மட்டும்தான் விற்பீங்களாக்கும்......!
அதை விடுங்க சேர்..... விரும்பினா வாங்கோ, அப்புறம் உங்க இஷ்டம் என்று விட்டு படலையை திறந்து பிடிக்க அவன் சைக்கிளுடன் உள்ளே வந்து தாழ்வாரத்தில் ஸ்ராண்ட் போட்டு நிறுத்துகிறான். உள்ளிருந்து ஒரு மடக்கு கதிரையை எடுத்து வந்து திண்ணையில் போட்டு அவனை இருக்க சொல்லிவிட்டு அவள் துவாய்,சட்டையுடன் கிணற்றடிக்கு போகிறாள். அப்போதுதான் பெட்டிக்குள் கஞ்சா இருப்பது நினைவுக்கு வர நெஞ்சு படக் படக் என்று அடிக்குது. சற்று தள்ளி திண்ணையில் பாயில் கிழவியும்  நாயும் பூனையும் படுத்திருக்கிறார்கள்.

              இந்த சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தவன் போல் கிழவியை பார்க்க அது குறட்டை விட்டு நித்திரையாய் கிடக்கு.மெதுவாய் எழுந்து உள்ளே போனவன் சுற்று முற்றும் பார்த்து, சிரமமில்லாமல் ப்ரிட்ஜை திறந்து பார்க்க அந்த கஞ்சா பெட்டி ஒன்று புதுசாய் அங்கே இருக்கு.உடனே அதை எடுத்து வந்து தனது சைக்கிளின் பெட்டிக்குள் வைத்து விட்டு அதில் இருந்த காஞ்சூண்டி பெட்டியை கொண்டுவந்து ப்ரிட்ஜில் வைத்து விட்டு மீண்டும் வந்து கதிரையில் இருக்கிறான்.காஞ்சனாவும் பாத்ரூமால் வர மழையும் வலுவாக பிடித்துக் கொண்டது. இந்த மழைக்குள்ள இனி எங்க போகப்போறியள் அப்பாவின் சாரம் சேட் இருக்கு மாத்திக்கொண்டு வெள்ளனவாய் எழுந்து போங்கோ என்கிறாள்.அவன் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. ஒரு துவாயும் ஆடைகளையும் எடுத்துவந்து  அவனிடம் குடுக்க அவனும் கிணத்தடி பாத்ரூமுக்கு  போகிறான். 

              உடனே வேகமாய் பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் மரியாவிடம் குடுத்து இந்தாடி எல்லாத்தையும் வடிவா  பொட்டலம் கட்டி வை நாளைக்கு சந்திப்பம் என்று சொல்லிவிட்டு ஓடிவந்து விறகெடுத்து  அடுப்பு மூட்டி  தேத்தண்ணி வைக்கிறாள். விறகுடன் காலையில் பிடுங்கிய கஞ்சா செடியும் சேர்ந்து எரிகிறது.  பின்பு அவன் படுப்பதற்கு கட்டிலில் பெட்சீட் தலைகாணி எல்லாம் மாற்றி விட்டு வர அவனும் வருகிறான். அவனுக்கு சாப்பிட பிஸ்கட்டும் தேநீரும் கொடுக்கிறாள்.வெளியே மழை பெய்வதால் புகை வீட்டுக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கு. ரவீந்திரனுக்கும் துக்கம் கண்களைச் செருக போய் கட்டிலில் படுத்து கொள்கிறான். அவளும் நீலநிற நைட் லாம்பை பொருத்தி விட்டு அடுப்படிக்கு அருகில் படுத்து கொள்கிறாள்...........!


                                  
                 எலியை பிடிக்க விட்டத்தில் பாய்ந்த பூனை தவறி அவன்மேல் விழுந்து எழுந்து தரையில் படுத்திருக்கும் காஞ்சனா மேலாலும் பய்ந்து ஓடுகிறது. திடுக்குற்று விழித்தவன் எழுந்து வெளியே சென்றுவிட்டு வந்து படுக்கிறான். துக்கம் கெட்டு போச்சு.நித்திரை வரவில்லை. தலையில் ஒருவித கிறுகிறுப்பும் உடம்பில் உசாருமாய் கிடக்கு. திரும்பி பார்க்க நீலவர்ண வெளிச்சத்தில் வானில் இருந்து வந்திறங்கிய தேவதைபோல் காஞ்சனா படுத்திருக்கிறாள். ஒருகால் மடித்து மறுகால் நீட்டி இடையாடை நெகிழ இளம் நெஞ்சம் விம்மி விம்மி தனிய ஒருகையை தலைக்கு வைத்து மறு கையை மார்போடணைத்து உறங்குகிறாள். உறக்கத்திலும் இதழ்களில் குறுநகை தவழ்கின்றது.பார்த்ததும் எதுவுமில்லை, பார்க்க பார்க்க மோகம் எனும் மொட்டு காமமாய் மலர்கின்றது. தான் தனது பதவி கௌரவம் எல்லாம் கவிழ்ந்து போக கால்கள் அவள் அருகில் சென்று மண்டியிடுகின்றது. அவள் சற்றே  அசைய மண்டியிட்ட கால்களில் சரிந்து இழைந்து தஞ்சமடைகிறது பின்னழகு.

                       காஞ்சனா எனக்குத் தெரியும் நீ விழித்திருக்கிறாய் என்று. ஏதோ எனக்கு இப்பொழுது நீ வேணும் போல் இருக்கிறது.நான் இப்படி எங்கும் எப்போதும் எவரிடமும் நடந்து கொண்டதில்லை. இன்று ஏனோ தெரியவில்லை. உனக்கும் இஷ்டமென்றால் சொல்லு நான் இங்கிருக்கிறேன்.இல்லையெனில் நான் இப்பொழுதே வெளியே போய் விடுகிறேன் என்கிறான்.கொஞ்ச நேரம் அவளிடம் இருந்து எவ்வித சலனமுமில்லை. அவன் ஒரு நீண்ட பெருமூச்சு எறிந்து கொண்டு சரி .....நீ  இதை மனசில் வைச்சிருக்காதே நான் வருகிறேன் என்று எழுகிறான். அப்பொழுது அவளின் கை  அவனது காலைப் பற்றுகிறது. அவள் உடலிலும் அதே கிறக்கம். அப்படியே சரிந்து அவளுடன் சரிக்கு சரியாக படுத்து அந்தப் பொன்மேனியை தன் பக்கமாக திருப்பிக் கொள்கிறான். முத்தங்கள் சத்தமுடன் தெறிக்கின்றன. கைகள் இறுக கால்கள் பின்னிக் கொள்கின்றன.

             டொக் டொக் என்ற சத்தத்துடன் கதவு தட்டிக்கொண்டு கிழவி தடுமாறிக் கொண்டு வருகுது. எடி புள்ள வெளிய ஒரே குளிராய் கிடக்கென நான் உள்ள வந்து படுக்கப் போறன்,என்ர பாயையும் தலைகாணியையும் ஒருக்கா எடுத்துத் தானை என்று சொல்லிக் கொண்டு உள்ளே வந்த கிழவி காலில இவையள் தடக்குப்பட நாயென்று நினைத்து இதென்ன இந்த சனியன் பிடிச்ச நாய்  உள்ள வந்து படுத்துக் கிடக்கு என்று கையில் இருந்த தடியால் விசுக் விசுக் என்று சாம்பல் அடி. திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் இருவரும் மூச்சு காட்டவில்லை. கண் மண் தெரியவில்லை. அவன் மெதுவாக கிழவியின் கால்களுக்கிடையால் ஊர்ந்து போய் கட்டிலில் ஏறிக் கொண்டான். அவளிலும் ரெண்டு அடி  விழுந்துட்டுது. பிறகும் கிழவி தடியை ஓங்க அவள் மறித்து எனை அது நானெனை, சும்மா போட்டு அடிக்கிறாய் என்கிறாள். எடி இவ்வளவு அடி அடிக்கவும் ஒரு சத்தஞ் சளார் இல்லை, வாயில என்ன கொழுக்கட்டையே வைத்திருந்தனி..... ஓமனை சும்மா அலட்டாத தள்ளனை  என்று எழுந்து போய் திண்ணையில் இருந்த பாயை எடுக்க அதில் படுத்திருந்த நாய் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு அப்பால் போகிறது.

                 நேரம் மூன்று மூன்றரை இருக்கும். அவனைப் பார்க்கிறாள் அவனும் பார்க்கிறான் இருவருக்குமே சிரிப்பு வந்து விட்டது. ஒரு தேனீர் போடவா என்று அவனைக் கேட்கிறாள். ம்....என்கிறான்.அவள் வந்து அடுப்பை மூட்டும்போது விறகுடன் கஞ்சா செடிகளும் கலந்திருப்பதை காண்கிறாள்.அந்த எருமைதான் இதில போட்டிருக்கு என்று மரியாவை திட்டிக்கொண்டு அவற்றை விலக்கி பத்த வைக்கிறாள். அவனிலும் பிழையில்லை, இந்த புகைதான் அந்தளவு கிறக்கத்தை இருவருக்கும் ஏற்படுத்தி இருக்கு. எனக்கும் கூட ஒரு மாதிரித்தான் இருந்தது. பாவம் எனக்கு விழுந்த இரண்டடியே இவ்வளவு வலித்தால், கும்பத்தில் இருந்து குதிகால்வரை வாங்கியவருக்கு எப்படி வலிக்கும். தேனீரை அவனிடத்தில் தந்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு தரையில் அமர்ந்து ப்ரிட்ஜில் சாய்ந்து கொள்கிறாள்.

                    
    என்ன ப்ரிட்ஜ் எல்லாம் வைத்திருக்கிறாய் நல்ல வருமானம் போலிருக்கு என்கிறான்.....!
அது பழுதானது,தெருவில் கிடந்தது. எடுத்து துடைத்து வைத்திருக்கிறேன்.சாமான் சட்டுகள், காய்கறிகள் வைப்பதற்கு.......!
ம்.... கஞ்சாவும் வைக்கலாம் என்று சொல்லு....அவன்.....!
சே ....சே .....அப்படி ஒன்றும் இல்லை....அவள்.....!
நான் நம்பமாட்டன், எனக்கு தெரியும்  நீ பொய் சொல்கிறாய்...அவன்.....!
நான் ஏன் பொய் சொல்லணும், வேணுமெண்டால் திறந்து காட்டுறேன்,இருந்தால் தேடி எடுத்துக்கொள் என்று சொல்லி அரக்கி இருக்கிறாள்.......!
சரி.....சரி.....கோவிக்காத, நான் அப்பவே தேடிப் பார்த்திட்டன்.....!
எடுத்தியா ஏதாவது.......!
ம்கூம் ......இருந்தது எடுக்க முடியல்ல .....அவன்.....!
எடுத்திருப்பாய் அதற்குள் அடி விழுந்திட்டுதாக்கும். என்று சொல்லி சிரித்துக்கொண்டே பேணிகளை எடுத்துக்கொண்டு போகிறாள்.......!
                             

   🌱  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, வளரும்.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.