Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன், சுமந்திரன் சென்ற வாகனம் மீது செருப்படித் தாக்குதல்! தமிழ் தாயொருவர் ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maharajah said:

பூடகமாக கூறாமல்  நீராடியாகக் கூறுங்கள்.  நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்கிறீர்கள் ?  ஏன் ?  காரண காரியத்துடன் விளக்குங்கள் (தயவு செய்து )

ஊரிலா இருக்கிறீர்கள்? உண்மையாக தான்கேட்கிறீர்களா? சரி, நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்:
சஜித்துக்கு புள்ளடியிட்டு வாக்களியுங்கள்

1. கோத்தபாயவின் ஆட்சிமுறை,  சந்தேகத்தில் எந்த தமிழரையும் சித்திரவதை செய்து கொல்லும் ஆட்சி என்பதற்கு ஆதாரங்கள் ஏராளம்.

சஜித் பற்றி அப்படியான சந்தேகம் கூட வரலாற்றில் இடம்பெறவில்லை.

2. கோத்தபாயவின் ஆட்சிமுறையில் கருணா, பிள்ளையான் போன்றோரின் இரகசிய கொலை சேவைகளுக்கு வருமானமாக எந்த தமிழனையும் கடத்தி, கப்பம் பெற்றபின் கொல்லும் உரிமை வழங்கப்பட்டு இருந்தது. 

சஜித் பற்றி அப்படியான சந்தேகம் கூட வரலாற்றில் இடம்பெறவில்லை. அதே வேளை, சஜித்தின் தகப்பனார் தமிழரான விடுதலை புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து உலகின் நாலாவது வல்லரசை அடித்து விரட்டி வரலாறு படைக்க உதவினார்.

3. கோத்தபாயவின் ஆட்சிமுறையில் தமிழர்களுக்கு எந்த தீர்வும் இல்லை. இராணுவ ஆக்கிரமிப்பில் தமிழர் நிரந்தரமாக வாழவைக்க படுவர் என்றவாறாக பிரச்சாரம் செய்கிறார்.
சஜித் தனது சிங்கள தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே ஒற்றை ஆட்சி நாடு என்பதை சொல்ல மறுத்துவிட்டார். அதிகாரங்களை பரவலாக்குவேன் என்று வெளிப்படையாக துணிந்து சொல்லி இருக்கிறார்.
 

  • Replies 53
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

ஊரிலா இருக்கிறீர்கள்? உண்மையாக தான்கேட்கிறீர்களா? சரி, நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்:
சஜித்துக்கு புள்ளடியிட்டு வாக்களியுங்கள்

1. கோத்தபாயவின் ஆட்சிமுறை,  சந்தேகத்தில் எந்த தமிழரையும் சித்திரவதை செய்து கொல்லும் ஆட்சி என்பதற்கு ஆதாரங்கள் ஏராளம்.

சஜித் பற்றி அப்படியான சந்தேகம் கூட வரலாற்றில் இடம்பெறவில்லை.

2. கோத்தபாயவின் ஆட்சிமுறையில் கருணா, பிள்ளையான் போன்றோரின் இரகசிய கொலை சேவைகளுக்கு வருமானமாக எந்த தமிழனையும் கடத்தி, கப்பம் பெற்றபின் கொல்லும் உரிமை வழங்கப்பட்டு இருந்தது. 

சஜித் பற்றி அப்படியான சந்தேகம் கூட வரலாற்றில் இடம்பெறவில்லை. அதே வேளை, சஜித்தின் தகப்பனார் தமிழரான விடுதலை புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து உலகின் நாலாவது வல்லரசை அடித்து விரட்டி வரலாறு படைக்க உதவினார்.

3. கோத்தபாயவின் ஆட்சிமுறையில் தமிழர்களுக்கு எந்த தீர்வும் இல்லை. இராணுவ ஆக்கிரமிப்பில் தமிழர் நிரந்தரமாக வாழவைக்க படுவர் என்றவாறாக பிரச்சாரம் செய்கிறார்.
சஜித் தனது சிங்கள தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே ஒற்றை ஆட்சி நாடு என்பதை சொல்ல மறுத்துவிட்டார். அதிகாரங்களை பரவலாக்குவேன் என்று வெளிப்படையாக துணிந்து சொல்லி இருக்கிறார்.
 

நாங்கள் சஜித் நல்லவரா  கோட்டாபய நல்லவரா என்று தனி நபர்கள் ஊடாக  பார்க்க வேண்டுமா அல்லது சுதந்திரக் கட்சி,  ஐக்கிய தேசியக் கட்சி என்று பார்க்க வேண்டுமா  ? 

கடந்த கால வரலாற்றில் ஐக்கிய தேசிய கட்சி என்ன செய்தது என்று பார்ப்பதா (உதாரணம்: இனக்கலவரம் முழுவதும் இவர்களுக்கு சொந்தமானது ) அல்லது சுதந்திரக் கட்சி என்ன செய்தது என்ன பார்ப்பதா??? 

யார் ஆட்சிக்கு வந்தால்  போர்க்குற்ற விசாரணை நடக்க வாய்ப்பு அதிகரிக்கும் ?   யார்  ஆட்சியில் போர்க்குற்ற விசாரணை நீர்த்துப்போக வாய்ப்பு அதிகம்   ????? 

 

யார் ஆட்சியில் இலங்கைக்கு சர்வதேச நெருக்கடி அதிகரிக்கும் ?  யார் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச அழுத்தம் குறையும் ??? 

(அது சரி,   இவ்வளவு காலமும் ஐக்கிய தேசியக் கட்சி எங்களுக்கு என்ன செய்தது சுதந்திரக் கட்சி என்ன செய்தது  ???? இவர்களுக்கிடையே வேறுபாடு ஏதேனும் இருக்கிறதா ?? )

 

ஆக மொத்தத்தில்  யார் ஆட்சிக்கு வந்தால் தமிழருக்கு லாபம்,  ஒப்பீட்டு அளவில் ??????????? 

 

யாராவது சொல்லுங்கப்பூ  ??????? 

 

 

 

 

9 hours ago, Jude said:

சஜித் தனது சிங்கள தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே ஒற்றை ஆட்சி நாடு என்பதை சொல்ல மறுத்துவிட்டார். அதிகாரங்களை பரவலாக்குவேன் என்று வெளிப்படையாக துணிந்து சொல்லி இருக்கிறார்.

நான் சஜித்துக்கு தான் ஆதரவு.

ஆனாலும் விக்னேஸ்வரன் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து இவ்வாறு கூறுகிறார். 

சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன்னர் அதே பகுதியில் பக்கம் 16ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “நாம் எம் தாய் நாட்டின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியற் சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாப்போம். அரச முடிவெடுப்பை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவோம்” என்று.

இது சிங்களப் பிரதியில் பக்கம் 16 ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “අපගෙ මවිබ්මේ ඒකීයත්වය භෞමික අඛණ්ඩතාව ස්වෛරීභාවය සහ දේශපාලන ස්වාධීනත්වය අප ආරක්ෂා කරන්නෙමු. රජයේ තීරණ ගානීම අපි ජනතාවට සමීප කරවන්නෙමු. නොබෙදුණු හා වෙන් කළ නොහැකි ශ්‍රී ලංකාවක් තුළ උපරිම බලය බෙදා හැරීමක් ක්‍රියාත්මක කෙරේ”
ஆங்கிலத்திலும் தமிழிலும் ஐக்கியம் (Unity) என்ற சொல் பாவிக்கப்பட சிங்களத்தில் “එකීයත්වය” என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. “ஏகீயத்வய” என்ற சொல் ஒற்றைத் தன்மையை வெளிக்காட்டுகின்றது. அதாவது அச்சொல் ஒற்றையாட்சிக்கு வழியமைக்கும் ஒரு சொல். உண்மையில் Unity, ஐக்கியம் என்ற சொற்களுக்குப் பாவிக்கப்பட வேண்டிய சிங்களச் சொல் ඒක්සත්වය (எக்சத்வய) என்பது.

அதனால்த்தான் ஐக்கிய தேசியக்கட்சி “எக்சத் ஜாதிக பக்ஷய” என்று அழைக்கப்படுகிறது. “ஏகிய ஜாதிக பக்ஷய” என்று அழைக்கப்படுவதில்லை. பலரை ஐக்கியப்படுத்துவதாகக் குறிப்பிட்டே ஐக்கிய தேசியக்கட்சி என்று தமிழில் குறிப்பிடப்படுகின்றது. “ஒற்றைத் தேசியக் கட்சி” என்று கூறுவதில்லை. ஆனால் ஆங்கில தமிழ் பிரதிகளில் “Unity” “ஐக்கியம்” என்ற ஒருபொருட்சொற்களைப் பாவித்துவிட்டு சிங்களத்தில் “எக்சத்வய” என்ற அதே கருத்து கொண்ட சொல்லைப் பாவிக்காமல் “ஏகீயத்வய” என்ற சொல் ஏன் பாவிக்கப்பட்டுள்ளது? ஏகீயத்வய என்ற சொல் சிங்கள மொழியில் தகுந்த காரணத்துடன் தான் பாவிக்கப்பட்டதோ என்று எண்ண வேண்டியுள்ளது.

https://www.pagetamil.com/85210/

Edited by Lara

39 minutes ago, Lara said:

ஆனாலும் விக்னேஸ்வரன் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து இவ்வாறு கூறுகிறார். 

சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன்னர் அதே பகுதியில் பக்கம் 16ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “நாம் எம் தாய் நாட்டின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியற் சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாப்போம். அரச முடிவெடுப்பை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவோம்” என்று.

இது சிங்களப் பிரதியில் பக்கம் 16 ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “අපගෙ මවිබ්මේ ඒකීයත්වය භෞමික අඛණ්ඩතාව ස්වෛරීභාවය සහ දේශපාලන ස්වාධීනත්වය අප ආරක්ෂා කරන්නෙමු. රජයේ තීරණ ගානීම අපි ජනතාවට සමීප කරවන්නෙමු. නොබෙදුණු හා වෙන් කළ නොහැකි ශ්‍රී ලංකාවක් තුළ උපරිම බලය බෙදා හැරීමක් ක්‍රියාත්මක කෙරේ”
ஆங்கிலத்திலும் தமிழிலும் ஐக்கியம் (Unity) என்ற சொல் பாவிக்கப்பட சிங்களத்தில் “එකීයත්වය” என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. “ஏகீயத்வய” என்ற சொல் ஒற்றைத் தன்மையை வெளிக்காட்டுகின்றது. அதாவது அச்சொல் ஒற்றையாட்சிக்கு வழியமைக்கும் ஒரு சொல். உண்மையில் Unity, ஐக்கியம் என்ற சொற்களுக்குப் பாவிக்கப்பட வேண்டிய சிங்களச் சொல் ඒක්සත්වය (எக்சத்வய) என்பது.

அதனால்த்தான் ஐக்கிய தேசியக்கட்சி “எக்சத் ஜாதிக பக்ஷய” என்று அழைக்கப்படுகிறது. “ஏகிய ஜாதிக பக்ஷய” என்று அழைக்கப்படுவதில்லை. பலரை ஐக்கியப்படுத்துவதாகக் குறிப்பிட்டே ஐக்கிய தேசியக்கட்சி என்று தமிழில் குறிப்பிடப்படுகின்றது. “ஒற்றைத் தேசியக் கட்சி” என்று கூறுவதில்லை. ஆனால் ஆங்கில தமிழ் பிரதிகளில் “Unity” “ஐக்கியம்” என்ற ஒருபொருட்சொற்களைப் பாவித்துவிட்டு சிங்களத்தில் “எக்சத்வய” என்ற அதே கருத்து கொண்ட சொல்லைப் பாவிக்காமல் “ஏகீயத்வய” என்ற சொல் ஏன் பாவிக்கப்பட்டுள்ளது? ஏகீயத்வய என்ற சொல் சிங்கள மொழியில் தகுந்த காரணத்துடன் தான் பாவிக்கப்பட்டதோ என்று எண்ண வேண்டியுள்ளது.

விக்கி உண்மையை எல்லாருக்கும் விளங்கிற மாதிரி அக்குவேற ஆணிவேறையா பிரிச்சு போட்டிருக்கார்!

தமிழரை ஏமாத்த சிங்கள கட்சிகள் தமிழிலை ஒன்டையும் சிங்களத்தில ஒன்டையும் சொல்றது வழமை. சுமந்திரன், சம்பந்தன், மாவை, டக்ளஸ், கருணா போன்ற ஆக்கள் தமிழில் சொன்னதை காட்டி தமிழ் மக்களை ஏமாத்துறது வழமை.

விக்கி சஜித்தின் தேர்தல் வாக்குறுதிகளில் உள்ள வேறுபாடுகளை விளக்கி சிங்களம் விளங்காத ஆட்களுக்கு பெரும் உதவி செய்திருக்கிறார். ஏமாத்த நினைக்கிற ஆட்களுக்கு திண்டாட்டம் தான்.

இந்த விஷயத்துல விக்கி திறமையான ஆள் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

விக்கி உண்மையை எல்லாருக்கும் விளங்கிற மாதிரி அக்குவேற ஆணிவேறையா பிரிச்சு போட்டிருக்கார்!

தமிழரை ஏமாத்த சிங்கள கட்சிகள் தமிழிலை ஒன்டையும் சிங்களத்தில ஒன்டையும் சொல்றது வழமை. சுமந்திரன், சம்பந்தன், மாவை, டக்ளஸ், கருணா போன்ற ஆக்கள் தமிழில் சொன்னதை காட்டி தமிழ் மக்களை ஏமாத்துறது வழமை.

விக்கி சஜித்தின் தேர்தல் வாக்குறுதிகளில் உள்ள வேறுபாடுகளை விளக்கி சிங்களம் விளங்காத ஆட்களுக்கு பெரும் உதவி செய்திருக்கிறார். ஏமாத்த நினைக்கிற ஆட்களுக்கு திண்டாட்டம் தான்.

இந்த விஷயத்துல விக்கி திறமையான ஆள் தான்!

இந்த விக்கியருக்கு வேறை வேலை இல்லை சும்மா கிடக்கமாட்டார் உண்மையான கருத்தை சொல்லி  சனத்தை கிண்டி விடுறார் சஜித் இடம் கொழும்பிலை மூன்று மாடி வீடு வேண்டுவதாய் பிளான் பண்ண இந்தால் எங்கள் பிழைப்பிலை மண் அள்ளி போடுது .

😀😀😀😀😀

 

13 hours ago, ஏராளன் said:

தமிழ் மக்கள் பெரும்பாலும் வடக்கில் சஜித்திற்கே வாக்களிப்பார்கள், நடந்து முடிந்த தபால் வாக்களிப்பில் சஜித்திற்கே தனது அலுவலக நண்பர்கள் வாக்களித்ததாக தம்பி கூறினார்.
நான் 1 சஜித்
           2 சிவாஜி
           3 சிறிதுங்க ஜெயசூரிய
வாக்கு போட எண்ணியுள்ளேன்.

யாழ்ப்பாணத்திலுள்ள எனது குடும்பத்தினரும் தபால் மூல வாக்களிப்பில் சஜித்துக்கு தான் வாக்களித்துள்ளார்கள்.

அது சரி, நீங்கள் சஜித்துக்கு வாக்களித்து விட்டு இரண்டாம் மூன்றாம் விருப்ப தெரிவை ஏன் இடுகிறீர்கள்?

கூடிய வாக்குகளை பெறும் முதல் இரு வேட்பாளர்களை தவிர ஏனையோர் இரண்டாம் சுற்றில் நீக்கப்படுவார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளிலுள்ள இரண்டாம் மூன்றாம் விருப்ப தெரிவில் இவ் இரு வேட்பாளர்கள் பெயர் உள்ளதா என பார்ப்பார்களே தவிர இவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளிலுள்ள இரண்டாம் மூன்றாம் விருப்ப தெரிவு கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மக்கள் ,குறிப்பாய் மட்டு மக்கள் அநேகமானோர் கோத்தாவுக்கு தான் வாக்களிப்பினம்.காரணம்;
கிழக்கு  முஸ்லீம் மக்களது கைகளுக்கு முற்று முழுதாய் போவதை தடுக்கும் சக்தி கோத்தாவுக்கு தான் உள்ளது என்று நம்புகிறார்கள் .
பிள்ளையானை வெளியில் விடுவார் ...அதிகாரங்கள் கொடுப்பார் .
அவர்களை பொறுத்த வரை சிங்களவர்களை விட முஸ்லீம்கள் பெருத்த எதிரியாய் உள்ளார்கள்.
கோத்தாவும் சரி,சஜித்தும் சரி அரசியல் ரீதியாய் தமிழர்களுக்கு ஒன்றுமே கொடுக்க மாட்டார்கள்...ஆனால் அபிவிருத்தி என்று பார்த்தால் ராஜபக்ச தான் ...றோடு போடுவதில் இருந்து நடந்த அபிவிருத்தி திட்டங்களை எடுத்துப் பார்த்தால்  ஜக்கிய தேசிய கட்சி ஒன்றுமே செய்தில்லை.
போர் நடந்த மூட்டம் கோத்தா வெள்ளை வான் கடத்தலில் ஈடுபட்டவர் தான்...ஆனால் இனி மேல் பதவிக்கு வந்தால் திரும்பவும் அதை செய்வார் என்று சொல்ல முடியாது.
சஜீத் பதவிக்கு வந்தால் அவர் தமிழரை பழி வாங்க மாட்டார் என்பது என்ன நிட்சயம்?...அவரது தகப்பனை கொன்றது புலிகள் தானே.
கோத்தா மு.வாய்க்கால் இனப் படுகொலையயை நடத்தினார் என்று வெட்டிக் கதை பேசுவதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று நினைக்கிறேன்.
எதிரியாய் இருந்தாலும்,முஸ்லீம்கள் போன்று ஒட்டி,உறவாடி எங்கள் காரியத்தை சாதிக்க வேண்டும்.
வீராப்பு கதைத்துக் கொண்டு இருந்தால் நாங்கள் அழிந்து தான் பூக்க வேண்டும் .
முஸ்லிம்களையும், இந்தியாவையும் அடக்க இவரை விட்டால் வேறு யாரும் இல்லை..
போரை நடத்தினதே சர்வதேசம் தான்...கோத்தாவை தேர்தலில் நிராகரித்து எங்கள் எதிப்பை  காட்ட வேண்டிய தேவை இல்லை .
போன தேர்தலில் நிராகரித்ததால் ஏதாவது நல்லது நடந்ததா? சர்வதேசம் ஏதாவது செய்ததா?
எது எப்படி இருந்தாலும் அங்குள்ள மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் 

14 minutes ago, ரதி said:

கிழக்கு மக்கள் ,குறிப்பாய் மட்டு மக்கள் அநேகமானோர் கோத்தாவுக்கு தான் வாக்களிப்பினம்.காரணம்;
கிழக்கு  முஸ்லீம் மக்களது கைகளுக்கு முற்று முழுதாய் போவதை தடுக்கும் சக்தி கோத்தாவுக்கு தான் உள்ளது என்று நம்புகிறார்கள் .

ஹிஸ்புல்லா கோத்தாவின் ஆள் தானே? கோத்தா ஜனாதிபதியாக வந்தால் ஹிஸ்புல்லா மட்டக்களப்பின்/கிழக்கின் ஆதிக்கத்தை கையில் வைத்திருக்க மாட்டாரா?

“இரண்டாவது வாக்கை கோத்தாவுக்கு போடுங்கள்” ஹிஸ்புல்லா

https://yarl.com/forum3/topic/233798-“இரண்டாவது-வாக்கைக்-கோதாவுக்குப்-போடுங்கள்”-–-ஹிஸ்புல்லா/

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனையும் சுமந்திரனையும் திட்டி எதுவுமே ஆகபோவதில்லை.

அல்லது தமிழர் தரப்பினால் எமது போராட்டத்தை வலுவாக கொண்டு செல்லமுடியவில்லை என்று ஆதங்கபடுவதிலும் புண்ணியமில்லை.

சம்பந்தனையும் சுமந்திரனையும் தூக்கிவிட்டு புதிதாய் இருவரை கொண்டு வந்தாலும் சில மாதங்களின் பின்னர் இன்று சம்,சுமந்துக்கு எதிராக எழும் விமர்சனங்கள் அப்படியே அந்த புதியவர்களுக்கு எதிராய் தொடரும்.

ஏனெனில் எமது பிரச்சனைகளுக்கான தீர்வு எட்டமுடியாமலிருப்பதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் காரணமல்ல,

எந்த தீர்வும் தரமாட்டோம் என்று உறுதியாக ஒரு தீர்ப்பை தன் கையில் எழுதி வைத்துக்கொண்டிருக்கும் எமது தாத்தாக்கள் காலத்திலிருந்து தொடரும் சிங்கள பேரினவாதத்தின் முடிவு அது.

தமிழ்கட்சிகள் செய்யும் துரோகம் ஒன்றே ஒன்றுதான் அது,

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் சிங்களவனிடமிருந்து ஏதாவது பெற்று தருவோம் என்றும் ,அது ஒருபோதும் நடக்காது என்று நூறுவீதம் தெரிந்தும் நயவஞ்சகமாக ஆசைகாட்டி   தமிழர் வாக்குகளை அறுவடை செய்து தேர்தலில் வென்றபின்னர் காலம் காலமாக சிங்களவனின் சொகுசு கார்களிலும் அவன் பாதுகாப்பிலும் ஊர் சுற்றும் ஒன்று மட்டுமே.

சஜித் என்ன, கோத்தா என்ன, அவர்களின் பேரன்கள் வந்தாலும் ஆட்சியில் உள்ளவர்களால் தமிழர்களுக்கான அதிகார பரவல்கள்  என்பதுபோன்ற தீர்வுகள் எதுவுமே வழங்கப்படமாட்டாது,அப்படி வழங்கினார்கள் என்றால் அடுத்தமாதமே அவர்கள் ஆட்சி  ஆட்சிக்கட்டிலில் இருக்காது. அந்த அளவிற்கு தென்னிலங்கையில் ஒரு பிரளயமே சிங்களவர்களால் ஆட்சியில் உள்ளவர்களுக்கெதிராய் வெடிக்கும்.

அந்தபோராட்டத்தில் சஜித் ஆதரவு சிங்களவர்களும், கோத்தா ஆதரவு சிங்களவர்களும் ஒன்றாகவே இணைந்து செயற்படுவார்கள், அழையா விருந்தாளிகளாக முஸ்லீம்களூம் வலிய சென்று அவர்களுடன் ஒட்டிக்கொள்வார்கள்.

சிங்கள தேசத்திடம் தமிழர் பகுதிபற்றிய ஒரேயொரு தீர்வு மட்டுமே உண்டு அது

தமிழர் பாரம்பரிய பூமிக்கு ஒரு அரசியல் தீர்வை தருவதைவிட, தமிழருக்கு பாரம்பரிய பூமி என்ற ஒன்று இலங்கையில் இல்லை என்பதை உருவாக்குவதே,

அதை கிழக்கில் சிங்கள குடியேற்றங்களின் மூலமும், வடக்கில் முஸ்லீம்களின் குடியேற்றமூலமும் கச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள், உயிர்த்த ஞாயிறு தக்குதலின் பின்னர் சிங்களவர்களும் முஸ்லீம்களூம் தற்காலிகமாக முறுகி கொண்டாலும் தமிழின எதிர்ப்பு என்ற ரீதியில் அவர்கள் ஆழ்மனசு எப்போதும் ஒருவரையொருவர் இறுக  அணைத்தபடியே இருக்கும்.

தமிழர் தரப்பால் சிங்களத்தின்மீது மேற்கொள்ளக்கூடிய  சாத்தியமான அழுத்தம் புலம்பெயர் தமிழர்களின் பரப்புரைகளாலும் தொடர் போராட்டங்களினால் மட்டுமே முடியும்.

ஆனால் 2009 க்கு முன்னர் இருந்த புலம்பெயர் தமிழர்களின் தாயக தமிழர்கள்மீதான அக்கறை தற்போது நூறிலிருந்து நாற்பது வீதத்துக்கு குறைந்துவிட்டது .

இன்னும் 25 வருஷங்களில் அது பூச்சியத்துக்கு போகும், ஏனென்றால் ஊரோடு வாழ்ந்துவிட்டு வந்தவர்களே படிப்படியாக தமது அன்றாட அலுவல்களை மட்டுமே கவனிக்கும் நிலையிலிருக்கும்போது, அவர்களால் புலம்பெயர் தேசங்களில் உருவான இரண்டாவது,மூன்றாவது தலைமுறை தாயக பிரச்சனைகளை தலையில் காவிக்கொண்டா திரிவார்கள்?

அப்படி யாராவது தாயக தமிழர்கள் பிரச்சனைபற்றி அவர்களுக்கு விளக்கம் சொல்லபோனால் அவர்கள் ஒருவகையில் இன்னொரு நாட்டு பிரச்சனையில்  தமிழர்வழி வந்த இளையர்களை தூண்டிவிடும் ஒரு சட்டவிரோத பிரச்சனையாக கூட இதை எடுத்துக்கொள்வார்கள்.

2 hours ago, valavan said:

எந்த தீர்வும் தரமாட்டோம் என்று உறுதியாக ஒரு தீர்ப்பை தன் கையில் எழுதி வைத்துக்கொண்டிருக்கும் எமது தாத்தாக்கள் காலத்திலிருந்து தொடரும் சிங்கள பேரினவாதத்தின் முடிவு அது.

தமிழ்கட்சிகள் செய்யும் துரோகம் ஒன்றே ஒன்றுதான் அது,

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் சிங்களவனிடமிருந்து ஏதாவது பெற்று தருவோம் என்றும் ,அது ஒருபோதும் நடக்காது என்று நூறுவீதம் தெரிந்தும் நயவஞ்சகமாக ஆசைகாட்டி   தமிழர் வாக்குகளை அறுவடை செய்து தேர்தலில் வென்றபின்னர் காலம் காலமாக சிங்களவனின் சொகுசு கார்களிலும் அவன் பாதுகாப்பிலும் ஊர் சுற்றும் ஒன்று மட்டுமே.

அதனால எந்தப் பேரினவாதிகளுக்கும் வாக்களிச்சு பிரயோசனம் இல்லை என்டு தெளிவாச்சு! பேரினவாதிகளோட ஒட்டி உறவாடுற தமிழ் கட்சிகள் சொல்றதை கேக்கிறதும் பிரயோசனம் இல்லை என்டு தெளிவாச்சு!

அதனால தான் பேசமா சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிச்சு எந்த சிங்கள கொலைகாரர்களுக்கும் வாக்களிக்கவில்லை என்ற மனநிம்மதியாவது பெறுங்கோ என்று ஊர்ல வாழுற ஆன்மீகவாதிகளும், புத்திஜீவிகளும் சொல்றாங்கள்!

 

SLPP காரர் ஏற்கனவே தமது அடாவடியை ஆரம்பித்து விட்டார்கள்.

Security officers of SLPP/UPFA MP SB Dissanayake open fire at a group who blocked MP Dissanayake's vehicle. 2 injured taken to hospital - Police Spokesman

Edited by Lara

On 11/5/2019 at 10:35 AM, ஏராளன் said:

நான் 1 சஜித்
           2 சிவாஜி
           3 சிறிதுங்க ஜெயசூரிய
வாக்கு போட எண்ணியுள்ளேன்.

1 சிவாஜி
2 சஜித்
3 சிறிதுங்க ஜெயசூரிய

என வாக்களிப்பதே சிறப்பானது என நினைக்கிறன்!

Edited by Rajesh

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

Hi Lara!

I read this article last night ...

I thought may you interested in it 

https://www.thesun.co.uk/news/7037663/china-colonising-smaller-countries-by-lending-them-massive-amounts-of-money-they-can-never-repay-in-bid-for-world-domination/

CHINA is "colonising" smaller countries by lending them massive amounts of money they can never repay, it's been claimed.

The country is accused of leveraging massive loans it holds over small states worldwide to snatch assets and increase its military footprint.

 

Countries around the world owe huge sums to President Xi Jinping's China

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Maruthankerny said:

Hi Lara!

I read this article last night ...

I thought may you interested in it 

https://www.thesun.co.uk/news/7037663/china-colonising-smaller-countries-by-lending-them-massive-amounts-of-money-they-can-never-repay-in-bid-for-world-domination/

CHINA is "colonising" smaller countries by lending them massive amounts of money they can never repay, it's been claimed.

The country is accused of leveraging massive loans it holds over small states worldwide to snatch assets and increase its military footprint.

 

Countries around the world owe huge sums to President Xi Jinping's China

மேர்ற்க்கு நாடுகள் மட்டும் இதற்கு விதி விலக்கோ ?  தாம் சுரண்டும் வரைக்கும் சரி,  இன்னொருத்தன் வந்தால்தான் பிழை. 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Maharajah said:

மேர்ற்க்கு நாடுகள் மட்டும் இதற்கு விதி விலக்கோ ?  தாம் சுரண்டும் வரைக்கும் சரி,  இன்னொருத்தன் வந்தால்தான் பிழை. 

இல்லை எல்லோரும் சுரண்டல் காரர்கள்தான் ....
சீனாவின் சுரண்டல் வேறு விதமானது ...
இது பற்றி வேறு ஒரு திரியில் லாராவுடன் விவாதித்து இருந்தோம் 
அதனால் இதை அவரது பார்வைக்கு கொண்டுவரலாம் என்று இணைத்தேன். 

நீங்களும் மற்றைய யாழ் உறவுகளும் 
நாம் சும்மா கதையளந்துவிட்டு நேரத்தை செலவழித்து செல்லாமல் 
இலங்கை எங்கு நோக்கி நகருக்கருகிறது என்று பல திரிகளில் லாரா அவர்கள் பல செய்திகளை 
இங்கே இணைத்து இருக்கிறார் ... அதன் மூல சில தகவல்களை அறிந்து.

எல்லோரும் முடிந்தவரை இலங்கையில் நிலம் வாங்குங்கள் ...
பெரியதொரு வாய்ப்பு எங்கள் கண்முன்னரே வந்து போயிருக்கும் 
நாம் நித்திரை கொண்டு கொண்டு இருந்தால

 நிலமும் எப்போதும் வாங்கலாம் 10 வருடத்தில் அதன் பெறுமதி கூடிதான் இருக்கும் 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Maruthankerny said:

இல்லை எல்லோரும் சுரண்டல் காரர்கள்தான் ....
சீனாவின் சுரண்டல் வேறு விதமானது ...
இது பற்றி வேறு ஒரு திரியில் லாராவுடன் விவாதித்து இருந்தோம் 
அதனால் இதை அவரது பார்வைக்கு கொண்டுவரலாம் என்று இணைத்தேன். 

நீங்களும் மற்றைய யாழ் உறவுகளும் 
நாம் சும்மா கதையளந்துவிட்டு நேரத்தை செலவழித்து செல்லாமல் 
இலங்கை எங்கு நோக்கி நகருக்கருகிறது என்று பல திரிகளில் லாரா அவர்கள் பல செய்திகளை 
இங்கே இணைத்து இருக்கிறார் ... அதன் மூல சில தகவல்களை அறிந்து.

எல்லோரும் முடிந்தவரை இலங்கையில் நிலம் வாங்குங்கள் ...
பெரியதொரு வாய்ப்பு எங்கள் கண்முன்னரே வந்து போயிருக்கும் 
நாம் நித்திரை கொண்டு கொண்டு இருந்தால

 நிலமும் எப்போதும் வாங்கலாம் 10 வருடத்தில் அதன் பெறுமதி கூடிதான் இருக்கும் 
 

 

இதனை செயட்படுத்த கடந்த ஒரு வருடமாக முயன்றுகொண்டிடுக்கிறேன்.  ஆனால் நிலம் வேண்டியபின் என்ன செய்வது என்கின்ற பிரச்சனையில் சரியான ஆலோசனை அல்லது  தெளிவு இல்லை. ஆலோசனை தேவை.  உதவ முடிந்தவர்கள் தயவுசெய்து ................ 

(நன்றி மருது )

22 hours ago, Maruthankerny said:

Hi Lara!

I read this article last night ...

I thought may you interested in it 

https://www.thesun.co.uk/news/7037663/china-colonising-smaller-countries-by-lending-them-massive-amounts-of-money-they-can-never-repay-in-bid-for-world-domination/

CHINA is "colonising" smaller countries by lending them massive amounts of money they can never repay, it's been claimed.

The country is accused of leveraging massive loans it holds over small states worldwide to snatch assets and increase its military footprint.

 

Countries around the world owe huge sums to President Xi Jinping's China

நன்றி.

சீனா அபிவிருத்தி என்று உள்ளே புகும் போதே அதன் நோக்கம் இது தான் என்பது தெரிந்ததே. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளை விட வேறு சில நாடுகளிலும் இது தான் நடந்தது, நடந்து வருகிறது.

அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக் கடனை அடைப்பதற்கு 1.12 பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடந்த போது துறைமுகத்துடன் சேர்த்து அதை சூழவுள்ள பகுதியிலுள்ள 15,000 ஏக்கர் நிலப்பரப்பையும் Industrial Zone/Special Economic Zone (SEZ) அமைக்க தருமாறு சீனா கேட்டிருந்தது.

2017 இறுதி ஒப்பந்தத்தில் 99 வருட குத்தகையில் அம்பாந்தோட்டை துறைமுகத்துடன் (70%), 15,000 ஏக்கர் நிலப்பரப்பையும் உள்ளடக்கியிருந்தது. அதற்காக சூழவுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும், அவர்களுக்கு புதிய நிலம் வழங்கப்படும் என அரசால் கூறப்பட்டது.

இலங்கை அரசின் அனுமதியின்றி அம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என இலங்கை கூறினாலும் சீனாவுக்கு அம்பாந்தோட்டையில் கடற்படைத்தளம் அமைக்கும் எண்ணம் உள்ளது.

காலியிலிருந்த இலங்கை கடற்படைத்தளத்தையும் அம்பாந்தோட்டைக்கு இலங்கை அரசு மாற்றியிருந்தது. பாதுகாப்பு தம்மிடம் உள்ளது என வெளிக்கு காட்டுவதற்காக. 😀

Edited by Lara

On 11/7/2019 at 5:46 AM, Rajesh said:

1 சிவாஜி
2 சஜித்
3 சிறிதுங்க ஜெயசூரிய

என வாக்களிப்பதே சிறப்பானது என நினைக்கிறன்!

நானெண்டா இப்படி தான் வாக்களிப்பன்!

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎5‎/‎2019 at 7:59 PM, Lara said:

ஹிஸ்புல்லா கோத்தாவின் ஆள் தானே? கோத்தா ஜனாதிபதியாக வந்தால் ஹிஸ்புல்லா மட்டக்களப்பின்/கிழக்கின் ஆதிக்கத்தை கையில் வைத்திருக்க மாட்டாரா?

“இரண்டாவது வாக்கை கோத்தாவுக்கு போடுங்கள்” ஹிஸ்புல்லா

https://yarl.com/forum3/topic/233798-“இரண்டாவது-வாக்கைக்-கோதாவுக்குப்-போடுங்கள்”-–-ஹிஸ்புல்லா/

ஹிஸ்புல்லா இந்த தேர்தலில் சஜீத் வென்றால் அவரது பக்கம் தாவி விடுவார்...அப்படியே அவர் கோத்தாவின் பக்கமாயிருந்தாலும் இப்ப அதற்கு என்ன?...தமிழர்களையும்,சோனகர்களையும் ஒரே நிலையில் வைத்து இருக்கவே கோத்தா விரும்புவார்...தப்பித் தவறி கிழக்கில் தமிழர்களது வாக்கு இல்லாமல் சோனகர்களது வாக்கை வைத்து கோத்தா வென்று விட்டால் அதற்கு பின் அங்குள்ள தமிழர்களது நிலைமையை யோசித்து பாருங்கள் ...இப்பவே மூணாக்களது அட்டகாசம் தாங்கவில்லை...எப்பொழுதும் யாழ்ப்பாணத்தான்,வடக்கான் என்று சுயநலமாய் யோசிக்காதீங்கோ உங்கட  நிலையில் இருந்து மட்டும் பிரச்சனையை பார்க்காதீங்கோ...கிழக்கு மக்களும் தமிழர்கள் தான்..ஆஸாத் சாலி
மௌலானா,ஹக்கீம்,ரிஷார்ட்,நஷீர்அமீர் அலி எல்லோரும் சஜீத்திற்கே ஆதரவு கொடுத்து உள்ளார்கள்...அவர்களோடு கூட்டமைப்பினரும் இவருக்கே ஆதரவு ....யாழ்ப்பாணத்தை மட்டும் தங்கள் வைத்துக் கொண்டு மிச்ச இடங்களை மூனாக்களுக்கு தாரை வார்த்து கொடுப்பது தான் இவர்களது எழுதப்படாத ஒப்பந்தமோ?

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

யாழ்ப்பாணத்தை மட்டும் தங்கள் வைத்துக் கொண்டு மிச்ச இடங்களை மூனாக்களுக்கு தாரை வார்த்து கொடுப்பது தான் இவர்களது எழுதப்படாத ஒப்பந்தமோ?

மன்னிக்கவும் மன்னார் கிளிநொச்சி , முல்லைத்தீவு வரைக்கும் வந்துட்டம் இன்னும் கொஞ்ச நாளில் மொத்த வடகிழக்கும் பரம்பலடைந்து விடுவோம்.

எங்களை வெளியே எங்கேயும் சென்று விடாதீர்கள் என்று சொல்லி கன பேர் நாட்டை விட்டு கிளம்பித்தான் செல்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உன்மை  கிழக்கில் நிலை மாறி கனகாலம்

2 hours ago, ரதி said:

ஹிஸ்புல்லா இந்த தேர்தலில் சஜீத் வென்றால் அவரது பக்கம் தாவி விடுவார்...அப்படியே அவர் கோத்தாவின் பக்கமாயிருந்தாலும் இப்ப அதற்கு என்ன?...தமிழர்களையும்,சோனகர்களையும் ஒரே நிலையில் வைத்து இருக்கவே கோத்தா விரும்புவார்...

EHDTJyfUUAALwXM?format=jpg&name=medium

 

சஜித் கூட ஹிஸ்புல்லா மகிந்த பக்கம் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

EI7ARwIUYAEdkFL?format=jpg&name=large

EI7ASVBVUAAr1gF?format=jpg&name=large

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மன்னிக்கவும் மன்னார் கிளிநொச்சி , முல்லைத்தீவு வரைக்கும் வந்துட்டம் இன்னும் கொஞ்ச நாளில் மொத்த வடகிழக்கும் பரம்பலடைந்து விடுவோம்.

எங்களை வெளியே எங்கேயும் சென்று விடாதீர்கள் என்று சொல்லி கன பேர் நாட்டை விட்டு கிளம்பித்தான் செல்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உன்மை  கிழக்கில் நிலை மாறி கனகாலம்

நீங்கள் சொல்வதும் ரதி சொல்வதும் 100 வீதம் உண்மை.புலத்தார் தங்கள் இடத்தில் இருந்து அரக்காமல் ஊரவனை வைத்து தங்கள் அரசியல் நோக்கத்தை அடைய நினைப்பது தான் காரனம்.ஆனாலும் தமிழர்கள் சயித்தை ஆதரிப்பதுக்கு காரனம் ஒரு குருட்டு நம்பிக்கை இயல்பு வாழ்க்கை சம்பந்தமாக. அம்புட்டுத் தான்.

3 hours ago, ரதி said:

தப்பித் தவறி கிழக்கில் தமிழர்களது வாக்கு இல்லாமல் சோனகர்களது வாக்கை வைத்து கோத்தா வென்று விட்டால் அதற்கு பின் அங்குள்ள தமிழர்களது நிலைமையை யோசித்து பாருங்கள்

அவர்கள் இன்னொரு பக்கத்தால் முஸ்லிம்களின் வாக்குகளை குறி வைத்துள்ளார்கள்.

 

3 hours ago, ரதி said:

எப்பொழுதும் யாழ்ப்பாணத்தான்,வடக்கான் என்று சுயநலமாய் யோசிக்காதீங்கோ உங்கட  நிலையில் இருந்து மட்டும் பிரச்சனையை பார்க்காதீங்கோ...கிழக்கு மக்களும் தமிழர்கள் தான்..ஆஸாத் சாலி
மௌலானா,ஹக்கீம்,ரிஷார்ட்,நஷீர்அமீர் அலி எல்லோரும் சஜீத்திற்கே ஆதரவு கொடுத்து உள்ளார்கள்...அவர்களோடு கூட்டமைப்பினரும் இவருக்கே ஆதரவு ....யாழ்ப்பாணத்தை மட்டும் தங்கள் வைத்துக் கொண்டு மிச்ச இடங்களை மூனாக்களுக்கு தாரை வார்த்து கொடுப்பது தான் இவர்களது எழுதப்படாத ஒப்பந்தமோ?

இத் திரியில் முதல் பக்கத்தில் உள்ள இறுதி இரு கருத்துகளையும் இரண்டாம் பக்கத்திலுள்ள முதல் கருத்தையும் வாசியுங்கள்.

https://yarl.com/forum3/topic/233790-சஜித்திற்கே-ஆதரவு-–-சம்பந்தன்-தலைமையிலான-முக்கிய-கலந்துரையாடல்-அதிரடி-முடிவு/

இத்திரியிலுள்எ எனது கருத்தையும் வாசியுங்கள்.

https://yarl.com/forum3/topic/233944-கூட்டமைப்பு-கிழக்கு-தமிழரை-நேசிக்கவில்லை/

நீங்கள் தான் பிரதேசவாதம் கதைப்பது, நானல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.