Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் சுமந்திரனை தேடித்திரியும் தமிழ் இளைஞர்கள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, சுவைப்பிரியன் said:

சுமந்திரன் போன்றவர்களை அகற்ற தாயகத்தில் உள்ள மக்களாலதான் முடியும்.இங்கையிருந்து குத்தி முறிஞ்சு என்னத்தை செய்ய.

தலைப்பு :

பிரித்தானியாவில் சுமந்திரன்

விசித்திரமான தலைப்பு.

பிரித்தானியாவில் சுமந்திரனை தேடித்திரியும் இளைஞர்கள்

 இந்தச் செய்தி உண்மையானால் இதற்கு பதிலாக 

பிரித்தானியாவில் வேலையின்றி அலையும் இளைஞர்கள் 

என்று போட்டிருக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கோல் கோல்.. ரெஸ்ரோரட் வழிய தேடுங்க.. அவர் வழமை போல் பின்வாசலால்.. எங்கையோ ஒரு இடத்தில் புகுந்துவிட்டார். 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

நான் நினைச்சன்

உங்களுக்கே  நீங்க எழுதியது  புரியாத  மாதிரி தடுமாற்றமா  இருக்கோ என்று....

எதுவாகினும் வாழ்க  நலமுடன்

டொட்.

அண்ணா , நீங்கள் புலி என்ன செஞ்சாலும் சரி என்று அவர்களுக்கு பின்னாலே போன மாதிரி இவர் கூட்டமைப்புக்கு பின்னாலே போகிறார் 

 

  • தொடங்கியவர்
7 hours ago, விசுகு said:

தலைப்பு :

பிரித்தானியாவில் சுமந்திரன்

யாழ் நூலகத்தை எரித்த, பல இனக்கலவரங்களுக்கு காரணமான பயங்கரவாதக் கும்பலின் தற்போதைய தலைவனாக உள்ள ரணிலிடம் பெற்ற கைக்கூலிக் காசு போதாதென்று சுமந்திரன் தனது தமிழின அழிப்பைத் தொடர நாடு நாடாக சென்று புலம்பெயர் தமிழரிடம் பிச்சை எடுப்பதைப் பற்றி மூச்சே விடாத சிலர், புலம்பெயர் தமிழர் ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிடக்கூடாது என்ற தொனியில் கூறுவது பாரிய முரண்பாடானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, tulpen said:

விசித்திரமான தலைப்பு.

பிரித்தானியாவில் சுமந்திரனை தேடித்திரியும் இளைஞர்கள்

 இந்தச் செய்தி உண்மையானால் இதற்கு பதிலாக 

பிரித்தானியாவில் வேலையின்றி அலையும் இளைஞர்கள் 

என்று போட்டிருக்கலாம் 

புலம் பெயர்நாடுகளில் பதாதைகளுடன் வீதி வீதியாக ஆர்ப்பாட்ட ஊர்வலம் செய்தவர்களையும் வெளிநாட்டு தூதுவராலயங்கள் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஈடுபட்டவர்களை நக்கல் நையாண்டி செய்தவர்களை நினைவு படுத்துகின்றீர்கள்.

விசா இல்லாத கூட்டம் எனவும் அங்கே சண்டை நடக்க வேண்டுமென விரும்பும் கூட்டம் எனவும் சிரித்து கொண்டு திரிந்தார்கள்.  2009 நிகழ்வுகளின் பின் ஈழ தமிழினத்திற்கு விடியல் என்றும் கொக்கரித்தார்கள்.ஆனால் இன்று வரைக்கும் சிறிலங்காவில் நடப்பது /நடந்தது என்ன?


நக்கல் நையாண்டி பண்ணி கொக்கரித்தவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்.. புலத்தில் சுகபோகமாக இருந்துகொண்டு மது/ இராப்போசன விருந்துபசாரங்களும் பழைய மாணவர் சங்கம் எனும் பெயரில் தண்ணியடி குத்தியாட்டம் என ஒரே அமர்க்களம்.

சுமந்திரனும் சம்பந்தனும் பேசி காலத்தை கடத்தியதை தவிர இதுவரை என்ன செய்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அண்ணா , நீங்கள் புலி என்ன செஞ்சாலும் சரி என்று அவர்களுக்கு பின்னாலே போன மாதிரி இவர் கூட்டமைப்புக்கு பின்னாலே போகிறார் 

 

நீங்கள் யார் பின்னால் போனீர்கள் ?

எவர் பின்னால் போனது அல்லது போவது சரி ? 

தெளிவுபடுத்த முடியுமா ?😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஆனால் இன்று வரைக்கும் சிறிலங்காவில் நடப்பது /நடந்தது என்ன?

வசதியான குடும்பத்தில் பிறந்த புத்திசாதூரியம் மிக்க சிறுவர்கள் வாள்வெட்டு குழுக்களை உருவாக்கி அமர்க்களம் செய்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழரின் உதவியுடன் மாடமாளிகைகளாக வீடுகள் எழும்பி இருக்கின்றன.

வணிகர்கள் உயர்தர வாகனங்களில் வலம் வருகிறார்கள்.

கொழும்பில் இருந்து குளிரூட்டிய புகையிரதத்தில் புலம்பெயர் தமிழர் யாழ் போய் வருகிறார்கள். விரும்பியவர்கள் சென்னையில் இருந்து வடை சாப்பிட்டுக்கொண்டு விமானத்தில் போகிறார்கள்.

சிவ பூமி உருவாகி இருக்கிறது. கோவில் திருவிழாக்கள் அமோகமாக நடக்கின்றன.

 

4 hours ago, குமாரசாமி said:

புலத்தில் சுகபோகமாக இருந்துகொண்டு மது/ இராப்போசன விருந்துபசாரங்களும் பழைய மாணவர் சங்கம் எனும் பெயரில் தண்ணியடி குத்தியாட்டம் என ஒரே அமர்க்களம்.

அங்கேயும் புலம்பெயர் பணத்தில் ஒரே அமர்க்களம் தான்.

 

4 hours ago, குமாரசாமி said:

சுமந்திரனும் சம்பந்தனும் பேசி காலத்தை கடத்தியதை தவிர இதுவரை என்ன செய்தார்கள்?

நீங்களாக அறிந்துகொண்டால்தான் அவற்றை நீங்கள் நம்பக்கூடியதாக இருக்கும். மற்றவர்கள் எழுதினால் சுமேந்திரனுக்கும் சம்பந்தனுக்கும் வக்காலத்து வாங்குவதாக முடிந்துவிடும்.

On 2/16/2020 at 2:49 PM, Kavi arunasalam said:

BFC99502-685-A-4-AF0-B8-E4-2830-B30-E5-F

அருமையான கருத்துச் சித்திரம்!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

வசதியான குடும்பத்தில் பிறந்த புத்திசாதூரியம் மிக்க சிறுவர்கள் வாள்வெட்டு குழுக்களை உருவாக்கி அமர்க்களம் செய்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழரின் உதவியுடன் மாடமாளிகைகளாக வீடுகள் எழும்பி இருக்கின்றன.

வணிகர்கள் உயர்தர வாகனங்களில் வலம் வருகிறார்கள்.

கொழும்பில் இருந்து குளிரூட்டிய புகையிரதத்தில் புலம்பெயர் தமிழர் யாழ் போய் வருகிறார்கள். விரும்பியவர்கள் சென்னையில் இருந்து வடை சாப்பிட்டுக்கொண்டு விமானத்தில் போகிறார்கள்.

சிவ பூமி உருவாகி இருக்கிறது. கோவில் திருவிழாக்கள் அமோகமாக நடக்கின்றன.

 அதோடு வெளிநாட்டு தமிழர்கள் கொழும்பில் இருந்து குளிரூட்டபட்ட சொகுசு பஸ்களிலும் தமிழ் மூவிகள் பார்த்தபடி யாழ்பாணம் போய்வருகிறார்கள். தங்கள் மகனுக்கோ மகளுக்கோ இலங்கையில் காலியாணம் பேசி செய்தால் யாழ்பாணம் வந்து மண்டபம் எடுத்து கலியாணத்தை பிரமாண்டமாக செய்கிறார்கள்.
யாழ்பாணத்தில் உள்ள தமிழர்களில் சிலரும் பிறந்த தின கொண்டாட்டங்கள் பதவி உயர்வு கொண்டாட்டங்களை இப்போது கொட்டல்களில் தான் கொண்டாடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

அண்ணா , நீங்கள் புலி என்ன செஞ்சாலும் சரி என்று அவர்களுக்கு பின்னாலே போன மாதிரி இவர் கூட்டமைப்புக்கு பின்னாலே போகிறார் 

இப்பவும் சொல்கின்றேன்

எல்லாவற்றையும்  ஆதரித்தவன்  தான்

அதற்கொரு குறிக்கோள் இருந்தது

ஆழமான நேசிப்பும் அதி உட்ச  தியாகத்துடன் கூடிய செயற்பாடும்  இருந்தது.

இப்போ?????

 

15 hours ago, குமாரசாமி said:

புலம் பெயர்நாடுகளில் பதாதைகளுடன் வீதி வீதியாக ஆர்ப்பாட்ட ஊர்வலம் செய்தவர்களையும் வெளிநாட்டு தூதுவராலயங்கள் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஈடுபட்டவர்களை நக்கல் நையாண்டி செய்தவர்களை நினைவு படுத்துகின்றீர்கள்.

விசா இல்லாத கூட்டம் எனவும் அங்கே சண்டை நடக்க வேண்டுமென விரும்பும் கூட்டம் எனவும் சிரித்து கொண்டு திரிந்தார்கள்.  2009 நிகழ்வுகளின் பின் ஈழ தமிழினத்திற்கு விடியல் என்றும் கொக்கரித்தார்கள்.ஆனால் இன்று வரைக்கும் சிறிலங்காவில் நடப்பது /நடந்தது என்ன?


நக்கல் நையாண்டி பண்ணி கொக்கரித்தவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்.. புலத்தில் சுகபோகமாக இருந்துகொண்டு மது/ இராப்போசன விருந்துபசாரங்களும் பழைய மாணவர் சங்கம் எனும் பெயரில் தண்ணியடி குத்தியாட்டம் என ஒரே அமர்க்களம்.

சுமந்திரனும் சம்பந்தனும் பேசி காலத்தை கடத்தியதை தவிர இதுவரை என்ன செய்தார்கள்?

அன்று அந்த மாபெரும் போராட்டம் தோற்று விடக்கூடது என்ற உணர்வில் கவனயீர்பபு போராட்டம் நடத்தித திய மக்களுக்கும்  இதற்கும் தொடர்பே இல்லை. அன்று இனமாக அனைவரும் இணைந்து நின்றோம் மக்கள்  எப்படியாவது காப்பாற்றப்பட வேண்டும் என்ற தவிப்புடன். அது வேறு இது வேறு.   சுமந்திரனை தேடித்திரியும் இளைஞர்கள் என்பதே நகைச்சுவையான விசித்திர தலைப்பு. போரட்டத்தில் வினை திறனுடன்  ஈடுபடுபவர்கள் பலர் உள்ளார்கள். 

மற்றப்படி  இராப்போசன விருந்துகள்  ஒன்றும் தவறான செயல்கள் அல்ல. 2009 ல் கவனயீர்ப்பில்  ஈடுபட்டவர்கள் கூட இராப்போசன விருந்துகள் நடத்துகின்றாரகள் தான். தண்ணியடி குத்தாட்டம்  எந்த வித்தியாசமும் இன்றி அனைவரும் செய்கின்றார்கள். அதில்  எந்த தப்பும் இல்லை. அது மகிழ்வானது. தண்ணியடித்துவிட்டு தெருவில் போவோரை இடைஞ்சல் செய்யும்,சண்டைக்கு இழுக்கும்,  தூஷண வார்த்தைகளால் மற்றவர்களை  திட்டும் கலாச்சாரம் தான்  தவறானது

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில முன்னம் திருவிழா சமயம், சும்மா ஒரு புரளிய கிளப்பி விடுவார்கள்.

8ம் திருவிழாவுக்கு சின்னமணி வில்லுப்பாட்டாம் எண்டு.

மொக்கு சனமும் சின்னமணியை கேட்கும் ஆவலில் களைகட்டும். இதோ வாறார். வண்ணார்பண்ணையை தாண்டீட்டார் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டிவிட்டு, 10:30 போல கார் சில்லு காற்றுப் போனதால் வரவில்லை என முடிப்பார்கள்.

எதிர்பார்த்து காத்திருந்த மொக்குக் கூட்டமும், ஆச்சோ, போச்சோ எனக் கூப்பாடு போட்டு விட்டு கலைந்து போகும்.

இப்பவும் அதே அணுகுமுறை நல்லா வேலை செய்யுது.

உடம்பு வெளிநாட்டுக்கு வந்தாலும், மண்டை ஓட்டுக்குள் இருப்பது ஒட்டிசுட்டான் சரக்கெல்லே😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

இப்பவும் சொல்கின்றேன்

எல்லாவற்றையும்  ஆதரித்தவன்  தான்

அதற்கொரு குறிக்கோள் இருந்தது

ஆழமான நேசிப்பும் அதி உட்ச  தியாகத்துடன் கூடிய செயற்பாடும்  இருந்தது.

இப்போ?????

 

உங்களுக்கு இருந்த மாதிரி தியாகம்,குறிக்கோள் ,அர்ப்பணிப்பு அவர்களிடமும் இருக்கலாம் [ அல்லது உங்களை மாதிரியே அவர்களும் நினைக்கலாம்].

 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

நீங்கள் யார் பின்னால் போனீர்கள் ?

எவர் பின்னால் போனது அல்லது போவது சரி ? 

தெளிவுபடுத்த முடியுமா ?😀

புலி என்றாலும் சரி , எலி என்றாலும் சரி... பிழை  என்றால் தட்டிக் கேட்கோணும். சரி என்றால் தட்டிக் கொடுக்கோணும்....ஒருவரை/ஒரு கட்சியை பிடிக்கும் என்பதற்காக அவர்களை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க வேண்டும் என்பதல்ல என் கொள்கை 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்களுக்கு இருந்த மாதிரி தியாகம்,குறிக்கோள் ,அர்ப்பணிப்பு அவர்களிடமும் இருக்கலாம் [ அல்லது உங்களை மாதிரியே அவர்களும் நினைக்கலாம்].

 

ஏற்காமல் இருக்கமுடியவில்லை சகோதரி. எப்படி இருந்த நாங்கள் எப்படி ஆயிட்டம் 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

உடம்பு வெளிநாட்டுக்கு வந்தாலும், மண்டை ஓட்டுக்குள் இருப்பது ஒட்டிசுட்டான் சரக்கெல்லே😂

இது அவர்களுடைய பல செயற்பாடுகள் சிந்தனை முறைகளுக்கு பொருந்த கூடிய உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people sitting and indoor

லண்டனில்.... "சோபா செற்"  போட்டு கூட்டம்  நடந்த போது... 

 

Image may contain: 5 people, people smiling, people sitting, people eating, table and food

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 3 people, people sitting and indoor

லண்டனில்.... "சோபா செற்"  போட்டு கூட்டம்  நடந்த போது... 

 

Image may contain: 5 people, people smiling, people sitting, people eating, table and food

அவ்வளவு பேரும் முகநூல் பிரபலங்கள் முகநூல் போராளிகள்

இப்ப ஐயா இவர்களைத் தான் சேர்க்கிறார் நம்புகிறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.