Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் ஜனநாயக படுகொலைகள் மூலமே தனி இயக்கமானார்கள்.!

Featured Replies

18 hours ago, சாமானியன் said:

வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளுக்கு  நாட்டு நிலவரங்களை சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்து வருகிறேன்….

மற்றைய இயக்கங்களை தடை செய்து தான் தவிபு தனியொரு இயக்கமாக இறுதியில் வளர்ந்து நின்றார்கள் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றா நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்? .

யாரவது உறுதிப்படுத்துவீர்களா ….

 

நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை, உண்மை என்று நம்புவனவற்றை பிள்ளைகளுக்கு கூறிவிடுங்கள்.

அவர்களுக்குள் தேடலை வளர்த்துவிடுங்கள். அவர்கள்  தாமாக, சுயமாக உண்மையை அறிவார்கள்.
 

On ‎3‎/‎1‎/‎2020 at 12:26 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜனநாயக வழியில் செயல்படும் நாம் புலிகளைப்போல் ஜனநாயகப் படுகொலை செய்யமுடியாது.அவர்கள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

ஐயா சொல்வதில் உண்மை உள்ளது.

அதாவது, சனநாயக ரீதியில், மக்களால் உருவாக்கப்பட்ட விடுதலை இயக்கம் தான் விடுதலை புலிகள். அவர்கள் செய்தது இன விடுதலைக்கான ஆயுத போராட்டம். 

இவ்வாறு நடந்தது இந்த மண்ணில் தான் முதலும் அல்ல கடைசியும் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

புலிகள் பல கொலைகளை செய்தது உண்மைதானே. அதிபர் ஆனந்தராஜா, ராஜினிதிராகம போன்ற பலர் 

நீங்கள் சொல்லவந்ததை தெளிவாக கூறக்கடவது 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/1/2020 at 6:26 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜனநாயக வழியில் செயல்படும் நாம் புலிகளைப்போல் ஜனநாயகப் படுகொலை செய்யமுடியாது.அவர்கள் ஜனநாயகப் படுகொலை செய்தே தனி இயக்கமாக உருவெடுத்தார்கள் என தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

கலோ சுமந்திரன்! புலிகளை இழுக்காமல் தமிழ்மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா என யோசிக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, Kapithan said:

நீங்கள் சொல்லவந்ததை தெளிவாக கூறக்கடவது 🙏

ஒருவர் பிரேரித்த விடயத்தை இன்னொருவர் ஆமோதித்தால் அதற்கு ஏது தெளிவுபட விளக்கம்? 😂

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, சாமானியன் said:

வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளுக்கு  நாட்டு நிலவரங்களை சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்து வருகிறேன்….

மற்றைய இயக்கங்களை தடை செய்து தான் தவிபு தனியொரு இயக்கமாக இறுதியில் வளர்ந்து நின்றார்கள் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றா நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்? .

யாரவது உறுதிப்படுத்துவீர்களா ….

 

  நாட்டு நிலவரங்களை இங்கே பிறந்து வளரும்  பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கையில் ,

புலிகள் எப்படி தனி இயக்கமானார்கள் என்ற சந்தேகம் வரும்போது ,மற்ற இயக்கங்களும் இந்தியாவின் வளர்ப்பு  பற்றியும்  சொல்லி கொடுத்தீர்களா?

  

  சொல்லி கொடுத்திருந்தால் யாரிடமும் கேட்டு பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கவேண்டிய அவசியம் வந்திருக்காதே. சிலவேளை நீங்கள் தெரிந்திருக்கவில்லைபோலும்,

உங்களுக்கு சரிவர தெரியாத ஒரு விஷயத்தை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க முயற்சித்து அவர்களை ஏன் குழப்புகிறீர்கள்,

பேசாமல் அவர்களை வெளிநாட்டு பிள்ளைகளாகவே வாழவிடுங்கள், அவர்களாவது தெளிவாய் வாழட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

ஒருவர் பிரேரித்த விடயத்தை இன்னொருவர் ஆமோதித்தால் அதற்கு ஏது தெளிவுபட விளக்கம்? 😂

சுமந்திரனும் சம்பந்த்னும் என்கிறீர்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தமிழருக்கு ஒரு வரலாறு என்று வரும் போது சங்ககாலம், சோழர்காலம் அதன் பின் புலிகள் காலம் தான்.

இந்த வரலாறுகளை பேணி இன்னும் இரண்டு தலைமுறை கடந்து கொண்டுபோய் சேர்க்கும் பணி தான் இன்று புலம் பெயர் தமிழர் கையிலும் உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கும் நாங்கள் எழும்ப இயலாமல் இருப்பதன் முக்கிய காரணம் , உண்மையான சுய விமரிசனம் செய்து தவற விட்டவைகளை சரி செய்ய முயற்சிப்பதை தவிர்ப்பதும்   , மணலுக்குள்ளால தலையை  வெளியே எடுத்து சுற்றி   வர  என்ன நடக்கின்றது என அறிய முயற்சியாமல் இருப்பதுவுமே ..

பிள்ளை வளர்க்கும் கலை பற்றி அறிஞர்கள் பலர் கருத்து சொல்லியிருக்கின்றனர் , நன்றிகள் , திரி வேறு இடங்களில் பற்றி பிடிக்கக் கூடும் என்பதால் அது பற்றி தொடர் பதிவிடுவதை தவிர்க்க விரும்புகிறேன் , ஆயினும் ஒன்று, அவர்கள்  வெளிநாட்டில் வதியும் , இலங்கைத் தமிழனொருவனின் பிள்ளைகளாகவே தொடர்ந்து வளர்வார்கள்;  எனது பாரம்பரியத்திலும் ,எமது போராட்ட வரலாற்றிலும்  என்னைப் போலவே அவர்களும் மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள்.  

எனது அறிவீனம் , அல்லது குழப்பம் பற்றி  குறிப்பிடும் அன்பர்கள் , நான் கேட்ட நேரடியான கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என பதில் சொல்ல தயங்கி வெறேதோவெல்லாம் எழுதுவதை  பார்க்க உண்மையில் அதிசயமாகவே இருக்கின்றது …..

  • கருத்துக்கள உறவுகள்

கம்பு வாரிதி வந்து அறிவுரை சொல்லும் அளவுக்கு கூட்டமைப்பின் நிலை இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஐயாவும் சனநாயகப் படுகொலை தானே செய்யிறார், கூட்டமைப்பை சிதறடித்து!

On 3/3/2020 at 1:08 AM, ampanai said:

தமிழருக்கு ஒரு வரலாறு என்று வரும் போது சங்ககாலம், சோழர்காலம் அதன் பின் புலிகள் காலம் தான்.

இந்த வரலாறுகளை பேணி இன்னும் இரண்டு தலைமுறை கடந்து கொண்டுபோய் சேர்க்கும் பணி தான் இன்று புலம் பெயர் தமிழர் கையிலும் உள்ளது.

 

தமிழர் வரலாற்றை  பேணுவதை விட மிக  முக்கியமானது வரலாற்றில் இருந்து பாடம் கற்று கொள்ளுவது.  சங்க காலம், சோழர்காலம், புலிகள் காலம் என்று அதை போற்றி  பாடி இலக்கியங்களை உருவாக்குவதும் அந்த இலக்கியங்களை பாடி பரவசம் ஆவது மட்டும்  தமிழருக்ககு எதிர் காலத்தில் உதவப்போவதில்லை. சோழர் காலத்து தவறுகளை ஆராயாமல் அவர்களின் வீரத்தை மட்டும்  பாரத்த‍தால் தான்  புலிகள் காலத்தில் தோல்வி கிடைத்தது என்பதை உணர வேண்டும். 

Edited by tulpen

1 hour ago, tulpen said:

தமிழர் வரலாற்றை  பேணுவதை விட மிக  முக்கியமானது வரலாற்றில் இருந்து பாடம் கற்று கொள்ளுவது.  சங்க காலம், சோழர்காலம், புலிகள் காலம் என்று அதை போற்றி  பாடி இலக்கியங்களை உருவாக்குவதும் அந்த இலக்கியங்களை பாடி பரவசம் ஆவது மட்டும்  தமிழருக்ககு எதிர் காலத்தில் உதவப்போவதில்லை. சோழர் காலத்து தவறுகளை ஆராயாமல் அவர்களின் வீரத்தை மட்டும்  பாரத்த‍தால் தான்  புலிகள் காலத்தில் தோல்வி கிடைத்தது என்பதை உணர வேண்டும். 

 தமிழர் தம் திரிபுபடாத வரலாற்றை பேணினால் தான் அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதே எனது கருத்தும். 

On 3/3/2020 at 12:11 AM, nedukkalapoovan said:

நாங்கள் நடைமுறை உலகை பற்றித்தான் கதைக்கிறோம். ஆதிகாலத்தைப் பற்றி அல்ல. நடைமுறை உலகில் இருக்கும்..  சனநாயகத்தை பிரசவித்தது அமெரிக்க சிவில் யுத்தமும்.. லிங்கனும் தான். 

உண்மையான சனநாயகம்.. என்பதை எங்கள் திருவள்ளுவரும்.. எங்கள் ஒளவை பாட்டி தான் பிறப்பித்தவர்கள். ஆனால்.. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். ஒரு சிறுவனின் கருத்துச் சுதந்திரத்தை இன்றும் மதிக்கமாட்டார்கள் பல இடத்தில்.. ஆனால்.. ஒளவையார் தான் அதையும் பாடிக்காட்டினார். 

போதுமா..??!

மேற்குலகம் என்டா அந்தமாதிரி என்டு கூனிக்குறுகி மேற்குலக தாசர்களாக வாழ்பவர்களுக்கு நீங்க சொல்றது புரிந்தாலும் புரியாதமாதிரி நடந்தா தான் கௌரவம்.

On 3/3/2020 at 5:38 AM, ampanai said:

தமிழருக்கு ஒரு வரலாறு என்று வரும் போது சங்ககாலம், சோழர்காலம் அதன் பின் புலிகள் காலம் தான்.

இந்த வரலாறுகளை பேணி இன்னும் இரண்டு தலைமுறை கடந்து கொண்டுபோய் சேர்க்கும் பணி தான் இன்று புலம் பெயர் தமிழர் கையிலும் உள்ளது.

உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வருகிறது என்று தெரிந்தவுடன் நாயாய் இருந்தவனெல்லாம் நரியாய் மாறிடுவான். தமிழ் கட்சிகளில் பிரிவை வளர்த்து இடைவெளியை உருவாக்கிய பெருமை சுமந்திரனையே சாரும். இதே போக்கில் சென்றால் சுமந்திரனுக்கு இன்னும் இரண்டு எட்டுவைத்தால் சிங்களத்தின் காலடியில் முத்தி கிடைத்துவிடும். இயலுமாயின் இந்த நேரத்திலாவது தன் இனத்தையும் போராளிகளையும் விமர்சிப்பதை நிறுத்தி சிங்கள அரசையும் அவரின் எஜமான்களையும் விமர்சித்தால் கதிரையை காப்பாற்றிக்கொள்ளலாம். நான் அரசியல் பொறுக்கிகளை கணக்கில் எடுப்பதில்லை.

On 3/3/2020 at 7:51 AM, சாமானியன் said:

எனது பாரம்பரியத்திலும் ,எமது போராட்ட வரலாற்றிலும்  என்னைப் போலவே அவர்களும் மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள்.  

சிறந்த பெற்றோர் நீங்க.
பச்சை முடிஞ்சு போச்சு!

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

தமிழர் வரலாற்றை  பேணுவதை விட மிக  முக்கியமானது வரலாற்றில் இருந்து பாடம் கற்று கொள்ளுவது.  சங்க காலம், சோழர்காலம், புலிகள் காலம் என்று அதை போற்றி  பாடி இலக்கியங்களை உருவாக்குவதும் அந்த இலக்கியங்களை பாடி பரவசம் ஆவது மட்டும்  தமிழருக்ககு எதிர் காலத்தில் உதவப்போவதில்லை. சோழர் காலத்து தவறுகளை ஆராயாமல் அவர்களின் வீரத்தை மட்டும்  பாரத்த‍தால் தான்  புலிகள் காலத்தில் தோல்வி கிடைத்தது என்பதை உணர வேண்டும். 

அது எவ்வாறு என்று சற்று விரிவாக எழுத முடியுமா?
சோழரின் எதிரிக்கும் உலக அமைப்புக்கும் 
புலிகளின் எதிரி துரோக உலக அமைப்புக்கும் ஒரு இஞ்சி கூட பொருத்தம் இல்லை.

புலிகளின் சரி/பிழை பேசுவது எதிர்காலத்தில் எந்தவிடிவையும் தராது 
கரணம் புலிகளின் காலம்போல இன்று கூட இல்லை இனி ஒரு காலமும் வரப்போவதும் இல்லை. 
இது ஒரு பம்மாத்து பேச்சு தவிர புலிகளின் எதிரி யார் என்பது புலிகளில் இருந்தவர்க்கே தெரியாது 
காரணம் அவர்கள் 15 வருட போராட்டம் கெரில்லா வடிவில்தான் இருந்தது  எந்த உண்மைகளையும் 
அவர்கள் தேவையற்று யாருடனும் பகிர்வது இல்லை. கூட ஒன்றாக இருக்கும் புலிகளுக்கே மற்றவர் சொந்த ஊர் சொந்த பெயர் எது என்று தெரியாது இராணுவத்தில் பிடிபட்டால் மட்டுப்படுத்த பட்ட தகவல் மட்டுமே போகவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். 
புலிகளையே யாருக்கும் தெரியாது ....... இதில் எந்த லட்ஷணத்தில் சரி/பிழை பேசுவது? 

சோழர்காலத்து தோல்வி எதுவும் புலிகளுக்கு உப்புக்கும் உதவி இருக்காது 
சோழர்காலம் மரவுவழி போர்முறை மன்னர் ஆட்ச்சியும்  எதிரிகள் நிலத்துக்கும் மக்களுக்கும் 
பொதுவான எதிரிகள் என்ற அடிப்படை மக்களிடமும் இருந்தது.
புலிகள் இலங்கை என்ற அரசுக்குள் கலகம் செய்து சுதந்திர பிரகடனம் செய்தவர்கள் 
சொந்த மக்களுக்கே நம்பிக்கை அற்ற ஒன்றை சாதித்து காட்டுவது என்று கிளம்பியவர்கள். 

முள்ளிவாய்க்கால் பின்பு இப்படி பலபேர் கிளம்பி பின்பு தாமாகவே 
சவுண்டை ஒவ் பண்ணியதுதான் நிஜம்.. அவர்கள் நோக்கம் என்ன என்பது அறிவுள்ளவர்க்கு தெரியும்.

இதை நீங்கள் நிச்சயமாக ஒரு புலி ஆதரவு கருத்துபோலவே பார்ப்பீர்கள் 
அதில் இருந்து ஒரு பதிலை தர  கூட நீங்கள் முயற்சி செய்யலாம்.
நான் உலப்போக்கில் எது சாத்தியம் எனபதை வைத்தே எழுதுகிறேன் 
புலிகள் தவறு செய்து இருந்தால் அதை மக்களுக்கு கொண்டுசெல்வது .. அல்லது அது பற்றி பேசுவது  
என்பது வேறு விடயம்.
ஆனால் அந்த தவறில் இருந்து பாடம் படித்து புயலகுவோம் வாருங்கள் என்பது சுத்த பம்மாத்து. 
காரணம்  புலிகளின் காலம் அது அவர்களுக்கானது அது அவர்களுக்கே சாத்தியமானது 
இனி பிரபாகரனே வந்தாலும்  அப்படி ஒன்றை உருவாக்க முடியாது  அப்படி ஒரு உலக சூழலோ தேவையோ 
இனி ஒருபோதும் வரப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:


ஆனால் அந்த தவறில் இருந்து பாடம் படித்து புயலகுவோம் வாருங்கள் என்பது சுத்த பம்மாத்து. 
காரணம்  புலிகளின் காலம் அது அவர்களுக்கானது அது அவர்களுக்கே சாத்தியமானது 
இனி பிரபாகரனே வந்தாலும்  அப்படி ஒன்றை உருவாக்க முடியாது  அப்படி ஒரு உலக சூழலோ தேவையோ 
இனி ஒருபோதும் வரப்போவதில்லை. 

சொல்கின்றீர்கள் ஐயா   " விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வெளிக்கிடுவது சுத்த பம்மாத்து என்று ""।।
கொண்ணுப்பிட்டீங்க ஐயா , நீங்க ஒருவர் போதும் எல்லாவற்றையும் சரி செய்ய , வாழ்க , வளர்க ।।।


"இயற்கையேயே,  என்ன செய்ய யோசித்திருக்கிறாய் என் இனத்தை "....

அவ்வாறாயின் புலிகள் என்ன செய்திருந்தாலும் முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் என்றா ஐயா சொல்ல வருகிறீர்கள் , அநேகம் பேர் அப்படி நினைப்பதில்லை என்றே தோன்றுகின்றது ।।।।

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎1‎/‎2020 at 9:25 PM, சாமானியன் said:

வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த எனது பிள்ளைகளுக்கு  நாட்டு நிலவரங்களை சொல்லிக் கொடுத்துத் தான் வளர்த்து வருகிறேன்….

மற்றைய இயக்கங்களை தடை செய்து தான் தவிபு தனியொரு இயக்கமாக இறுதியில் வளர்ந்து நின்றார்கள் என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்றா நான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்? .

யாரவது உறுதிப்படுத்துவீர்களா ….

 

புலிகளை அழிக்க ஏனைய இயக்கங்களும் இந்திய, சிறிலங்கா அரசோடு கூட்டாக முயற்சி செய்தன. பல புலிகளும் அழிக்கப்பட்டார்கள். புலிகள் தம்மை பாதுகாத்து தொடர்ந்து போராட  தம்மை எதிர்த்தவர்களை அழித்தார்கள்.
இறுதிப்போரில் புலிகளும் மடிந்தார்கள்.

விசாரணைகள் ஜெனிவாவில் நடைபெற்று உண்மை நிலையை அறிய  உலக ஒழுங்கு போர் முடிந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் எதுவும் ஆக்கபூர்வமாக நடைபெறவில்லை. உலக நாடுகள் மறைமுகமாக அல்லது நேரடியாக புலிகளையும் மக்களையும் அழித்தவர்கள் போர்குற்ற விசாரணை இழுபடுவதை அல்லது நீத்துபோக செய்கிறார்களோ என்ற பலத்த சந்தேகம் என்ன போன்றவர்களுக்கு உண்டு.

போராட்ட நேரத்தில் ஈரோஸ் இயக்கம் புலிகளுடன் சேர்ந்தே (பாலகுமார் தலைமை) இயங்கினார்கள். இந்திய , சிறிலங்கா அரச படைகளுடன் சேர்ந்து புலிகளை அழிக்க வந்தவர்களை என்ன செய்யலாம்??  கை முந்தியவர்கள் சண்டியர் என்ற நிலை தான் களத்தில் இருந்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தை சுமந்திரன் மீளப்பெற வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

Sivashakthi-Anandan.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  “தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய அத்தனை இயக்கங்களும் தமது உயிர்களைத் துச்சமென மதித்து போராட்டக்களம் புகுந்திருந்தனர்.

கால மாற்றங்களுக்கேற்ப ஆயுத இயக்கங்கள் ஆயுதப் போராட்ட வழியிலான தமது பயணங்களை மாற்றியமைத்துக் கொண்டன. இந்தப் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி வரையில் விடுதலைக்கான ஒரே வழியாக ஆயுதப் போராட்டத்தையே முன்னிலைப்படுத்தினர்.

இது வரலாறாக இருக்க, ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்று ஜனநாயக வழி வந்த அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருங்கிணைப்பில் 2001ஆம் ஆண்டு தமிழின விடுதலைக்கான அரசியல் ரீதியான நகர்வினை ஆரம்பித்திருந்தன.

கடந்த கால கசப்புணர்வுகள் அனைத்தையும் மறந்து தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஏனைய விடுதலை இயக்கங்கள் கரம் கோர்த்து ஒன்றாகச் செயற்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களால் ஆயுதப் போராட்டத்திற்கு வந்த இயக்கங்கள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் பழைய கசப்பான சம்பவங்களைக் கிளறி விரிசல்களை சுமந்திரன் ஏற்படுத்தப் பார்க்கின்றார்.

இவ்வாறிருக்க விடுதலைப் புலிகளுக்கு எதிரான மனோநிலையையும் கொள்கை ரீதியான முரண்பாடுகளையும் கொண்டிருக்கும் சுமந்திரன் போர்ச்சூழல், நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் நிறைவுக்கு வந்த பின்னரே அரசியலில் பிரவேசித்தார்.

ஆகவே, விடுதலைப் போராட்டத்தில் வித்தாகியவர்களின் அர்ப்பணிப்பை இவர் உணர்ந்திருப்பதற்கு எந்த விதமாக வாய்ப்புக்களும் இல்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது தனிப்பட்ட கருத்தியலை பொதுவெளியில் வெளிப்படுத்தி ஒட்டுமொத்த விடுதலை இயக்கங்களையும் அவமதித்துள்ளார்.

அது மட்டுமன்றி கடந்த கால கசப்பான விடயங்களை மீட்டு உயிர்த் தியாகங்களைச் செய்த விடுதலை இயக்க உறுப்பினர்களை கொச்சைப்படுத்தியுள்ளதுடன் சாதாரண பிரஜைகளாக சமூகத்தில் வாழும் அனைத்துப் போராளிகளுக்கும் மனக் கவலையை உருவாக்கியுள்ளார்.

ஆயுத விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்துவதற்கு அருகதையற்ற இவர் விடுதலை இயக்கங்களை விமர்சிப்பதானது பௌத்த சிங்கள மேலாதிக்க தரப்புக்களின் கரங்களை பலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்தும் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.

ஆயுதப் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் செயற்பாடுகளை அக்கட்சியின் கத்துக்குட்டியாக இருக்கும் சுமந்திரன் போன்றவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.vanakkamlondon.com/sivashakthi-anandan-04-03-2020/

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

சொல்கின்றீர்கள் ஐயா   " விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வெளிக்கிடுவது சுத்த பம்மாத்து என்று ""।।
கொண்ணுப்பிட்டீங்க ஐயா , நீங்க ஒருவர் போதும் எல்லாவற்றையும் சரி செய்ய , வாழ்க , வளர்க ।।।


"இயற்கையேயே,  என்ன செய்ய யோசித்திருக்கிறாய் என் இனத்தை "....

அவ்வாறாயின் புலிகள் என்ன செய்திருந்தாலும் முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் என்றா ஐயா சொல்ல வருகிறீர்கள் , அநேகம் பேர் அப்படி நினைப்பதில்லை என்றே தோன்றுகின்றது ।।।।

"புலிகள் என்ன செய்திருந்தாலும்"
இதுதான் உங்களுக்கு விளங்கவில்லை என்று எண்ணுகிறேன் 
என்ன எல்லாம் செய்வது புலிகள் இல்லை. இதைத்தான் செய்வோம் என்பதுதான் புலிகள் 
எது சாத்தியம் எது சாத்தியம் இல்லை என்று அவர்கள் பார்ப்பதில்லை 
எது சத்தியம் என்று பார்த்தவர்கள்தான் புலிகள்.

ஆதலால்தான் எழுதுகிறேன் புலிகளின் தவறில் இருந்து பாடம் படிக்கிறோம் என்பது 
சுத்த பம்பாத்து. புலிகளின் காலம்  அவர்களின் தனித்துவமானது. இந்த சுயநல சோம்பேறி 
தமிழனிடம் இருந்து தேசத்துக்காக உயிரையே கொடையாக்கி கரும்புலியாக பாயும் பெண்களையும் 
வேங்கைகளையும் உருவாக்குவது என்பது அவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

"ஈழத்தமிழர்களின்" 
பிற்போக்கான சிந்தனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பது வேறு 
தந்தை செல்வாவின் தவறில் இருந்து பாடம் படிக்கிறோம் என்பது வேறு. தந்தை செல்வா 
யாருடன் மல்லு கட்டினார் அவருடைய புறநிலை அரசியல் சூழல் எவ்வாறு இருந்தது?
அது இனி ஒருபோதும் இருக்கப்போவதில்லை அவருடைய தவறுகளும் வெற்றிகளும் அது அவருடைய  தனித்துவமான காலத்துக்கு ஏற்றது. அதில் இருந்து பின்னாளில் வந்த ஆயுத போராட்ட காரர்கள் கற்றுக்கொள்ள  எதுவுமே இருக்கவில்லை. 

சாத்தியம் இல்லாத இடத்தை 
எமக்கு சாதகம் ஆக்குவதுதான் அரசியல் 
அதுக்கு தற்போதைய புறநிலைதான் காரணமாக முடியுமே தவிர 
புலிகளின் வெற்றிகள் தோல்விகள் எல்லாம் இனி வரலாறு மட்டுமே.  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

சொல்கின்றீர்கள் ஐயா   " விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்க வெளிக்கிடுவது சுத்த பம்மாத்து என்று ""।।
கொண்ணுப்பிட்டீங்க ஐயா , நீங்க ஒருவர் போதும் எல்லாவற்றையும் சரி செய்ய , வாழ்க , வளர்க ।।।


"இயற்கையேயே,  என்ன செய்ய யோசித்திருக்கிறாய் என் இனத்தை "....

அவ்வாறாயின் புலிகள் என்ன செய்திருந்தாலும் முடிவு இப்படித்தான் இருந்திருக்கும் என்றா ஐயா சொல்ல வருகிறீர்கள் , அநேகம் பேர் அப்படி நினைப்பதில்லை என்றே தோன்றுகின்றது ।।।।

இது என்னுடைய தனிப்பட்ட அனுபவமும் தனிபட்ட கருத்துமாகும் 

இல்லை பிழைகளில் இருந்து பாடம் படித்து 
விடுதலை படைக்கலாம் என்று நீங்கள் சொன்னால் அதை நான் தட்டி கழிக்கவில்லை 

எவ்வாறு?
என்று சற்று சுருக்கமாக எழுதுங்கள் என்றுதான் தாழ்மையுடன் கேட்க்கிறேன்.

2009க்கு பிறகு இப்படி மழைக்கால ஈசல்போல 
இந்தியா விசா எடுத்து கேரளா பெண்களுடன் படுக்க போன பலரை 
இந்த யாழ் களம் பார்த்து இருக்கிறது .... அவர்கள் எல்லாம் வந்த வேகத்தில் 
காணாமல் போனதுதான் இங்கே வெள்ளிடை வெளிச்சம். 
மேலோட்டமாக பார்த்தால் எதோ சரியான தத்துவம் போலத்தான் இருக்கும்.

சுவாமி என்ற பெயரில் ஆச்சிரமஙக்ளில் இருந்து பேசுபவர்களின் பேச்சுபோல 
எல்லோரும் அவர்கள் கதையை கேட்டு ஆச்சிரமம் போனால் .... வயல் விதைக்கிறவன் நெல்லு புடுன்கிறவன் எல்லாம்  யார்? உலகுக்கு சாத்தியம் இல்லாதைத்தான் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள் 
வேலை வெட்டி இல்லாதவனுக்கு  தத்துவம் போல இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

இது என்னுடைய தனிப்பட்ட அனுபவமும் தனிபட்ட கருத்துமாகும் 

இல்லை பிழைகளில் இருந்து பாடம் படித்து 
விடுதலை படைக்கலாம் என்று நீங்கள் சொன்னால் அதை நான் தட்டி கழிக்கவில்லை 

எவ்வாறு?
என்று சற்று சுருக்கமாக எழுதுங்கள் என்றுதான் தாழ்மையுடன் கேட்க்கிறேன்.

2009க்கு பிறகு இப்படி மழைக்கால ஈசல்போல 
இந்தியா விசா எடுத்து கேரளா பெண்களுடன் படுக்க போன பலரை 
இந்த யாழ் களம் பார்த்து இருக்கிறது .... அவர்கள் எல்லாம் வந்த வேகத்தில் 
காணாமல் போனதுதான் இங்கே வெள்ளிடை வெளிச்சம். 
மேலோட்டமாக பார்த்தால் எதோ சரியான தத்துவம் போலத்தான் இருக்கும்.

சுவாமி என்ற பெயரில் ஆச்சிரமஙக்ளில் இருந்து பேசுபவர்களின் பேச்சுபோல 
எல்லோரும் அவர்கள் கதையை கேட்டு ஆச்சிரமம் போனால் .... வயல் விதைக்கிறவன் நெல்லு புடுன்கிறவன் எல்லாம்  யார்? உலகுக்கு சாத்தியம் இல்லாதைத்தான் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள் 
வேலை வெட்டி இல்லாதவனுக்கு  தத்துவம் போல இருக்கும் 

அறையொன்றினுள் சாதுவான  பூனையொன்றை அடைத்து  ,
சூழ்ந்து  நாலா பக்கமும் -
 கொல்ல முயன்றால் அதனை கொடுமைப்படுத்தி,
ஈற்றில் அது கூட  சாவின் முன்னராக , சன்னதம் கொண்டு ,
கொடுமைப்படுத்தியோரை   தாக்கி , தப்பிக்க வழி தேடி ,
முடியாவிடில் தான்  ,
அகப்பட்டு உயிர் துறக்கும் । 
- ஒரே ஒரு விதி விலக்கு - தமிழன் மட்டுமே
உறவினரல்லாத இருவரின் மரணத்திற்கு மட்டுமே
இதுவரை நான் கண்ணீர் சிந்தினேன்  ।
ஒன்று அப்துல் கலாம் , மற்றயது பிரபாகரன் ।
அந்த உரிமையில் நான் சொல்வேன் பிரபாகரன் கூட
அவரின் மறைவு நேரத்திற்கு சற்று முன்னர் என்றாலுமே ,
உணர்ந்திருப்பார்  ,
கேவலமானவன் தமிழன் பூனையை விடவும் என்று
அவருக்கே அப்படி என்றால் , மருதங்கேணி நீவிர் எம்மாத்திரம்
தவறுகளில் - தன்னுடையதும் மற்றயவருடையதும் -
இருந்து பாடம் பயில்வது மனித மற்றும் உயிரினத்தின் இயல்பு
பத்துவருடம் மிக சிறிய ஒரு காலம் -பாடம் பயிலாமல் இருப்பது
அங்கே இருந்து
எவ்வாறு  வெல்வது என்று வெளியாக தெரிந்திருந்தால்
சொல்லியிருப்பேன் நளன் அண்ணாவிடம் நான்கு தசாப்தங்கட்கு முன்னரே
அவர் என்னிடம் கேட்ட நேரமே
" எப்பயாடா வந்து  சேரப்  போகிறாய் " என்று ।
சுருக்கமாக சொல்வதற்கு அது ஒன்றும் புதுக் கவிதை அல்ல நண்பரே ।।।।

Edited by சாமானியன்
correction of facts ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.