Jump to content

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கையில் எடுத்தது தவறு..!-நளினி ரட்ணராஜா


Recommended Posts

TNA யில் போட்டியிட விண்ணப்பித்துள்ளேன்..!
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கையில் எடுத்தது தவறு..!-நளினி ரட்ணராஜா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

TNA யில் போட்டியிட விண்ணப்பித்துள்ளேன்..!
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கையில் எடுத்தது தவறு..!-நளினி ரட்ணராஜா

 

 

தமிழரசு கட்சி மகளிர் அணி குழம்பியது – சுமந்திரன் மழுப்பல்.

76-620x330.jpg 

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் களமிறக்கப்பட்டுள்ளது கட்சியின் யாழ்ப்பாணத்து பெண்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் இன்று கூட்டாக கட்சித் தலைமையை சந்தித்து தமது ஆட்சேபனையை தெரிவித்தனர்.

இன்று பகல் தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து அவர்கள் தமது அதிருப்தியை தெரிவித்தனர்.

இதனால் தன்னை சுதாகரித்துக்கொண்ட சுமந்திரன் வேட்பாளர்கள் பட்டியல் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்து மகளிர் அணியினரை சமாளித்து அனுப்பியுள்ளார் .

இதில் அம்பிகாவை சுமந்திரன் தெரிவு செய்திருந்தாலும், ரவிராஜியின் மனைவியான ஆசிரியை சசிகலாவை கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசாவே தெரிவு செய்து அவரை ஆசிரியர் பணியில் இருந்தும் ஓய்வு பெற செய்தவராவார் .

இரண்டு பெண்களும் தமது பணிகளை நிராகரித்து தேர்தலில் களமிறங்க காத்திருப்பதால் , சுமந்திரன் கூறுவதுபோல் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை என்பது முழுமையான பொய் ஆகும்.

எனவே யாழ்ப்பாண மகளிர் அணியினரை சமாளிப்பதற்காகவே சுமந்திரன் இவ்வாறு பொய்கூறி அவர்களை அனுப்பியுள்ளார் என்று கட்சியின் பெண் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

இதனைவிட மட்டக்களப்பில் தெரிவாகி இருக்கும் நளினி ரட்ணராஜா தன்மேல் சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் புகார்கள் தொடர்பில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், இதுதொடர்பில் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் நிலைப்பாடுட்டை கூறி ஆறுதல் தேட விளைவதாகவும் கூறப்படுகிறது .

எதற்கும் பயப்படாமல் தைரியமாக இருக்கும்படி சுமந்திரன் நளினிக்கு ஆறுதல் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன .

https://thamilkural.net/?p=30437

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG_0195-720x450.jpg

பெண் என்பதாலேயே என்மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன: மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி

‘பெண்’ என்ற காரணத்தினாலேயே தன் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறுகள் பரப்பப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளருமான திருமதி நளினி ரட்னராஜா தெரிவித்துள்ளார்.

இதனாலேயே பல பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அச்சம் கொள்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கை முழுவதும் சென்று பெண்கள் அரசியலில் ஈடுபடவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பான பயிற்சிகளை வழங்கிவரும் நிலையில், நானும் அரசியலில் ஈடுபடுவதன் மூலமே ஏனைய பெண்களையும் ஈடுபடுத்தமுடியும் என்ற அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிட முன்வந்தேன்.

ஆனால் என்மீது முகம் தெரியாத, அடையாளம் தெரியாத வலைத்தளங்களில் இருந்து ஒரு பெண் என்ற காரணத்தினால் நடத்தை தொடர்பான அவதூருகளும் அரசியல் ரீதியான அவதூறுகளும் எந்த ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படுகின்றன.

வடகிழக்கினை எடுத்துக்கொண்டால் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும் அதிகரித்துள்ளன. அவர்கள் தொடர்பாக பேசவேண்டிய தேவை தமிழ் சமூகத்தில் உள்ள எங்களுக்கு அதிகமாகவுள்ளது.

இவ்வாறான நிலையில், எனக்கு ஊக்கமளிப்பதற்கு பதிலாக என்மீது சேறு பூசும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்சிகளும் பல ஆண்கள் போட்டியிடும்போது அவர்கள் பற்றியோ, அவர்களின் நடத்தை பற்றியோ, அவர்களின் குடும்ப நிலை பற்றியோ இங்கு பேசுவதில்லை.

பெண் என்ற காரணத்தினால் அவரின் நடத்தையையே குறை சொல்வதையே பெரிய காரணமாக கொள்கின்றனர். இவ்வாறான நிலையிலேயே பல பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அச்சம்கொள்கின்றனர்” என மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/பெண்-என்பதாலேயே-என்மீது/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் எங்கட தலையெழுத்து.

நாங்கள் முன்னரே சுயவிமர்சனம் செய்து , எங்களை நாங்களே அடையாளம் கண்டு செய்ய வேண்டியதை செய்திருந்தால் , உந்த காளான்கள் எல்லாம் எங்களுக்கு போதிக்க வேண்டி வந்திராது...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஆணென்றும் பெண்ணென்றும் எங்கே வந்தது ??😡

 

சேவை செய்ய வந்தால் சேவையைச் செய்து போட்டுப் போறது ।।😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ சம் சும் கும்பலின் கொசுக்களின் தொல்லை தாங்க முடியவில்லை. 

 

சுமந்திரன் செய்வதும் சகோதரப் படுகொலை தான்.. வித்தியாதரன். (காணொளியின் 19.20 நிமிடத்தில் இருந்து பாருங்கள்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை போன்ற ஆட்களுக்கு அரசியலில் நல்ல தொழில் வாய்ப்பு. இது தேறாது.

Link to comment
Share on other sites

விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்கியது தவறா , இல்லையா எண்டு ஆராச்சி செய்து இப்போது கிடைக்கும் பலன் ஒன்றுமே இல்லை। வீண் வார்த்தைப்பிரயோகங்களுக்கு இது ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி இருக்கிறதே ஒழிய ஒரு ஐந்து சத்துக்கும் உதவாத பேச்சு இது।

இது எல்லாவற்றையும்விட இப்போது தமிழன் ஒற்றுமையாக இருக்கிறானா எண்டு பார்த்து அதை சரி செய்யுங்கள்। முதலில் தமிழ் பேசும் சோனவனை வெளியேற்றினோம்। அல்லது அவர்களாகவே வெளியேறினார்கள்।

அடுத்தது தமிழ் பேசும் கத்தோலிக்கர்/கிறிஸ்தவர்கள் வெளியேற வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானியுங்கள்। அதை விட்டுப்போட்டு முடிந்த கதைகளை ஏன் கிளறிக்கொண்டிருக்கிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ரவிராஜியின் மனைவியான ஆசிரியை சசிகலாவை கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசாவே தெரிவு செய்து அவரை ஆசிரியர் பணியில் இருந்தும் ஓய்வு பெற செய்தவராவார் .

எல்லாம் முடிந்து இப்போது அனுதாப வாக்கையும் தேடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ் அரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் இன்று கூட்டாக கட்சித் தலைமையை சந்தித்து தமது ஆட்சேபனையை தெரிவித்தனர்.

சுமந்திரன்ட தோஸ்து பெண்கள் தான் தேர்தல்ல நிக்கலாம். இது தான் சம்பந்தன்-சுமந்திரன் ஜனநாயகம்.

அதுவும் சுத்துமாத்து வேலைகள்ல அத்துப்படியா இருக்கணும். அப்பிடி பெண்கள் யாழில இல்லையாமே. அல்லது சுமந்திரன் கண்களில அப்பிடி பெண்கள் படேல்லை போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

பெண் என்ற காரணத்தினால் அவரின் நடத்தையையே குறை சொல்வதையே பெரிய காரணமாக கொள்கின்றனர். இவ்வாறான நிலையிலேயே பல பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு அச்சம்கொள்கின்றனர்” என மேலும் தெரிவித்துள்ளார்.

பெண்களின் வாக்குக்கு குறிவைக்கிறா அடுத்த சுமந்திரன் இவ. உங்களை கொண்டுவர துடிக்கும் பின்புலமே சந்தேகத்தை எழுப்புது. தங்கள் உரிமையை பெறுவதற்கு ஆயுதம் தூக்குவதற்கு முன்பு இருந்த அரசியற் சூழ்நிலையையும், ஆயுதம் ஏன் தூக்கினார்கள் என்கிற காரணத்தையும் அம்மணிக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்கோடாப்பா. ஏதோ வேலையில்லாமல் ஆயுதம் தூக்கினமாதிரி கதையளக்கிறா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்சும் கும்பல் எல்லோருக்கும் குழிதோண்டி முடிச்சி இப்போ தங்களுக்கும் கூட்டமைப்புக்கும் குழிதோண்டுறாங்க. அவங்க முடிவுகள் கட்சியின் மகளிர் அணியின் எதிர்ப்பை பெறுகிறதென்றால் அம்மணிகள் தேர்தலில் தோற்பது நிச்சயம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.