Jump to content

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Hatton-Church-Religious-preacher-Isolation-Action-Corona-Virus-Alert.jpg

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!

ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹற்றனுக்கு அழைத்துவந்துள்ளார்.

12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர்.

அதன்பின்னர், திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு 16, 17ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளைப் பகுதி போதகர், தேவாலயத்துக்கு வந்துள்ளார். அதன்பின்னரும் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பைப் பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

Hatton-Church-Religious-preacher-Isolation-Action-Corona-Virus-Alert-2.jpg

http://athavannews.com/வெளிநாட்டிலிருந்து-வந்-2/

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனோ  வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

கொரோனோ  வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .

நாங்கள் மதம் மாற்றாமல் கொள்ளையடிக்கிறோம் அவர்கள் மதம் மாற்றிக் கொள்ளையடிக்கிறார்கள். 

வேறுபாடு பெரிதாக இல்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நாங்கள் மதம் மாற்றாமல் கொள்ளையடிக்கிறோம்

எனக்கு விளங்கவில்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

எனக்கு விளங்கவில்லை ?

தம்பி அந்த 10% கமிசனை சொல்லுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரிஞ்சுட்டுது. எனக்கும் உதவாமல், ஊருக்கும் உதவாமல் நடுவிலயிருந்து அல்லாடிக்கொண்டு இருக்கும் என்னால எதுவுமே பண்ணமுடியலை எண்டு பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

எனக்கு புரிஞ்சுட்டுது. எனக்கும் உதவாமல், ஊருக்கும் உதவாமல் நடுவிலயிருந்து அல்லாடிக்கொண்டு இருக்கும் என்னால எதுவுமே பண்ணமுடியலை எண்டு பொருள்.

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

தம்பி அந்த 10% கமிசனை சொல்லுது...

சைவர்களும் இந்துக்களும் தட்டில் போடுகின்றனர். சைவ சமயத்திலிருந்தும் இந்து மதத்திலிருந்தி மதம் மாறியோர் கொமிசனாகக் கொடுக்கினம் என்று நினைக்கிறன். ஆனால் ஐயரும் போதகரும் தங்கள் பொக்கற்றில் போடுகின்றனர். இதில் ஒன்றும் வேறுபாடு இல்லையே ? 

10% தான் கண்ணுக்குக் குத்துதென்றால் நீங்களும்  போதகராக வேண்டியதுதானே. மதம் மாறுதல் உங்களுக்கென்ன புதுசா ? இல்லையே ? 😂😂😂😂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

 

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதணல் தின்றுவிடும்..

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்..

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா..

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா..

 

கொரோனோ வைரசை விட அதிக உயிர்களை இந்த பூமியில் பறித்த கொடிய வைரஸ் மதவைரஸ்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதணல் தின்றுவிடும்..

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்..

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா..

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா..

 

கொரோனோ வைரசை விட அதிக உயிர்களை இந்த பூமியில் பறித்தது மதவைரஸ்.. 

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ?🤔

பாவம் புத்தனும் யேசுவும் காந்தியும். 

சக மனிதனை மதிப்பதற்கு மதம் எதற்கு ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ?🤔

பாவம் புத்தனும் யேசுவும் காந்தியும். 

சக மனிதனை மதிப்பதற்கு மதம் எதற்கு ? 🤔

நான் ஒரு நீச்சல் தடாகத்தின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கின்றேன்

என் கால்கள் அந்த ஆழமான தொட்டி நீரை அடித்து விளையாடிக் கொண்டிருகின்றன

அங்கே வந்து யாரோ ஒருவர் - என்னைத் தண்ணீரில் தள்ளி விடுகிறார் !

எனக்கு நீச்சல் தெரியாது என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான் !

நான் நீரில் அமிழ்ந்துகொண்டிருக்கின்றேன் . . . .

அப்படி அவருக்குத் தெரிந்திருந்தால்

சிலவேளை என்னைத் தள்ளியிருக்க மாட்டாரோ

மூழ்கும் நேரத்திலும் என் சிந்தனை பலமாய் வேலை செய்கிறது

என் கால்கள் அடி நிலத்தைத் தொட்ட பின் மேலெழுந்து மீண்டு வருகின்றேன்

எனக்குத் தெரியும் ,

என் தலை வெளிப்பட்டு மீண்டும்

நீரில் அமிழும் முன்

உதவி கோரிக்காப்பற்றுங்கள்

என்று கத்தவேண்டும்

ஆனாலும் அந்தக் கணத்தில் நான் மறந்தே போய்விட்டேன்

எந்தக்கடவுளிடம் மன்றாடவேண்டும் என்பதையும்

எந்தநாட்டில் இருக்கின்றேன் என்பதையும்

நான் எந்த மொழியில் உதவி குரல் கொடுக்க வேண்டும் என்பதையும்

Tal Nitzán(இஸ்ரேல்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Maruthankerny said:

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

அது அல்ல விடயம் மருதர்.  கோபப்படுபவர் தனக்குத் தெரிந்த மகா பாரதத்தையும் இராமாயணத்தையும் சொல்கிறார். அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

போதகர் மதம் பரப்புவது அவருடைய உரிமை. ஆனால் அவர் தெரிந்தெடுத்த இடம் மிகவும் பிழையானது.. இதே விடயத்தை பள்ளிவாயலருகிலோ அல்லது விகாரைக்கருகிலோ செய்ய முனைவாரா ? நிச்சயமாக இல்லை. 

ஆனால் நல்ல விடயம் என்னவென்றால் இருபகுதியினரும் அமைதியாக இருக்கின்றனர். யாழ் களத்தில் வரும் பல கருத்துக்களைவிட இங்கே கோபம் கொள்பவர் எவ்வளவோ மேல்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

அது அல்ல விடயம் மருதர்.  கோபப்படுபவர் தனக்குத் தெரிந்த மகா பாரதத்தையும் இராமாயணத்தையும் சொல்கிறார். அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

போதகர் மதம் பரப்புவது அவருடைய உரிமை. ஆனால் அவர் தெரிந்தெடுத்த இடம் மிகவும் பிழையானது.. இதே விடயத்தை பள்ளிவாயலருகிலோ அல்லது விகாரைக்கருகிலோ செய்ய முனைவாரா ? நிச்சயமாக இல்லை. 

ஆனால் நல்ல விடயம் என்னவென்றால் இருபகுதியினரும் அமைதியாக இருக்கின்றனர். யாழ் களத்தில் வரும் பல கருத்துக்களைவிட இங்கே கோபம் கொள்பவர் எவ்வளவோ மேல்.😀

இந்தியாவில் வெள்ளையாகலாம் என்று எண்ணி 
கோடி கணக்கான பெண்கள் பெயர் அண்ட் லவ்ல்லி (Fair & Lovely ) பூசுகிறார்கள் 

ஆனால் வெள்ளைக்காரிகள் இந்தியாவுக்கு வர கூடாது என்று 
யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லையே? 

எனக்கு இதுதான் புரியவில்லை.
உங்கள் மதம்தான் உலகிலேயே சிறந்த மதம் என்றால் அது பெருமைக்கு உரிய விடயம்தானே 
ஏன் மதம் மாற்றுபவனை பார்த்து பதறுகிறீர்கள்? 
எனக்கு இந்த பதற்றத்துக்கான காரணம் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Maruthankerny said:

இந்தியாவில் வெள்ளையாகலாம் என்று எண்ணி 
கோடி கணக்கான பெண்கள் பெயர் அண்ட் லவ்ல்லி (Fair & Lovely ) பூசுகிறார்கள் 

ஆனால் வெள்ளைக்காரிகள் இந்தியாவுக்கு வர கூடாது என்று 
யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லையே? 

எனக்கு இதுதான் புரியவில்லை.
உங்கள் மதம்தான் உலகிலேயே சிறந்த மதம் என்றால் அது பெருமைக்கு உரிய விடயம்தானே 
ஏன் மதம் மாற்றுபவனை பார்த்து பதறுகிறீர்கள்? 
எனக்கு இந்த பதற்றத்துக்கான காரணம் புரியவில்லை.

இது கேள்வி. 

எல்லாம் உளவியல்தான். நாங்கள் ஏற்கனவே ஒரு பாவப்பட்ட இனம். அழிந்துபோய் நிற்கிறோம். இருக்கிறதும் இல்லாமல் போய்விடுமோ என்கின்ற பதட்டத்தில் வாறவன் போறவன் கூட இருப்பவன் எல்லோருக்கும் ஏச்ச்சுதான். 

என்னைப் பொறுத்தவரை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.....

சைவ சமயத்திற்கு ச்ரியான வளிநடாத்தக்கூடிய தலமைத்துவம் இல்லை. சமயத்தில் காலவோட்டத்தில் ஒட்டிக் கொண்ட குறைபாடுகள் (சாதி, மூட பழக்க வழக்கம் போன்ற...) சமயத்தின் உண்மையான பக்கத்தை மறைத்து போலியான தோற்றத்தை கொடுக்கிறது. இவற்றை எல்லோரும் உணர்ந்து கொண்ட போதும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கின்ற பயத்தில் உள்ளனர். அதாவதுக் வெடித்த  மெல்லிய கண்ணாடிக் குவளையின் நிலையில் எம் மக்கள் உள்ளனர். யார் சிறிய தட்டுத் தட்டினாலும் சமய நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும். இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

சுருக்கமாகச் சொல்லப்போனால் சரியாக வழி நடாத்தக்கூடிய தலைமை இல்லை. அதன் விளைவுதான் இவர்களின் கோபம். 😕

(தேவையேற்படின் காத்திரமான விளக்கத்தை பின்னர் தருகிறேன்.)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை என்று சொல்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்டவற்றை கூறி தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் எனில், அங்கு எந்த மாற்றமும் நிகழாது... நிகழ்த்தவும் முடியாது. தட்டிவிட்டு வெளியேறி விடவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை என்று சொல்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்டவற்றை கூறி தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் எனில், அங்கு எந்த மாற்றமும் நிகழாது... நிகழ்த்தவும் முடியாது. தட்டிவிட்டு வெளியேறி விடவேண்டியதுதான்.

சாத்தான்

குறைகூறுவதல்ல என் நோக்கம். பிரசிசனையை அடையாளம் காண்பதும் அதனைத் தீர்த்து வைத்தலும்தான் சரியான தலைமைத்துவம் செய்யும். அதனை தெடர்ச்சியாகச் செய்யுமிடத்து மக்கள் பதற்றப்டவேண்டிய தேவை ஏற்படாது. ஆறுமுக நாவலரின் பின்னர் (சர்ச்சைகளைத் தவிர்த்து), சரியான தலமைத்துவம் சைவர்களுக்கில்லை என்பது பெருங்குறைபாடு. எமது போராட்டத்தில் சைவ சமய ரீதியிதியிலான பங்களிப்பு இன்மையை பெருங் குறைபாடாகப் பார்க்கிறேன். 

சரியான தலைமை எப்போதும் மக்களை ஒன்று சேர்க்குமே தவிர பிரிக்காது. 

அந்தப் பெருங் குறைபாடுதான் எம்மவர்கள் சமய ரீதியாக சாதி அடிப்படையில் பிரதேச வாதமாக பிரிந்துனின்று அடிபடக்  காரணமாகிறது என்று நம்புகிறேன்.

 

வணங்காமுடியிடமும் மற்றைய கிறீத்துவ எதிர்ப்பாளர்களிடமும் ஏன் இந்த  கிறீத்துவ வெறுப்பு என்று கேட்டிருந்தேன் ?

இதய சுத்தியான பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.

ஐஆம் வெய்ரிங். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இது கேள்வி. 

எல்லாம் உளவியல்தான். நாங்கள் ஏற்கனவே ஒரு பாவப்பட்ட இனம். அழிந்துபோய் நிற்கிறோம். இருக்கிறதும் இல்லாமல் போய்விடுமோ என்கின்ற பதட்டத்தில் வாறவன் போறவன் கூட இருப்பவன் எல்லோருக்கும் ஏச்ச்சுதான். 

என்னைப் பொறுத்தவரை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.....

சைவ சமயத்திற்கு ச்ரியான வளிநடாத்தக்கூடிய தலமைத்துவம் இல்லை. சமயத்தில் காலவோட்டத்தில் ஒட்டிக் கொண்ட குறைபாடுகள் (சாதி, மூட பழக்க வழக்கம் போன்ற...) சமயத்தின் உண்மையான பக்கத்தை மறைத்து போலியான தோற்றத்தை கொடுக்கிறது. இவற்றை எல்லோரும் உணர்ந்து கொண்ட போதும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கின்ற பயத்தில் உள்ளனர். அதாவதுக் வெடித்த  மெல்லிய கண்ணாடிக் குவளையின் நிலையில் எம் மக்கள் உள்ளனர். யார் சிறிய தட்டுத் தட்டினாலும் சமய நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும். இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

சுருக்கமாகச் சொல்லப்போனால் சரியாக வழி நடாத்தக்கூடிய தலைமை இல்லை. அதன் விளைவுதான் இவர்களின் கோபம். 😕

(தேவையேற்படின் காத்திரமான விளக்கத்தை பின்னர் தருகிறேன்.)

 

 

1 hour ago, satan said:

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை என்று சொல்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்டவற்றை கூறி தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் எனில், அங்கு எந்த மாற்றமும் நிகழாது... நிகழ்த்தவும் முடியாது. தட்டிவிட்டு வெளியேறி விடவேண்டியதுதான்.

பச்சை இல்லை குத்துவத்துக்கு ..........
என்னை பொறுத்தவரை சாக்கடை நாற தொடங்கி விட்டது 
இது நான் பல முறை இங்கே எழுதியது .... அடுத்த சந்ததி எம்மைவிட 
அறிவு மிகுந்தே இருக்கும் அவர்களிடம் கேள்விகள் இருக்கும் எம்மிடம் பதில் 
இல்லாதுபோனால் எமது மதம் மெல்ல மெல்ல அழிந்துபோகும் யாராலும் தடுக்க முடியாது என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

 

பச்சை இல்லை குத்துவத்துக்கு ..........
என்னை பொறுத்தவரை சாக்கடை நாற தொடங்கி விட்டது 
இது நான் பல முறை இங்கே எழுதியது .... அடுத்த சந்ததி எம்மைவிட 
அறிவு மிகுந்தே இருக்கும் அவர்களிடம் கேள்விகள் இருக்கும் எம்மிடம் பதில் 
இல்லாதுபோனால் எமது மதம் மெல்ல மெல்ல அழிந்துபோகும் யாராலும் தடுக்க முடியாது என்று 

மேற்கில் கிறித்துவத்திற்கும் இதே நிலைதான். ஆனால் அவர்கள் புத்திசாலிகள். சமயத்தை ஒரு நிறுவனத்திற்குரிய ஒழுங்குகளுடன் நடாத்துவதால் ஆய்வுகளினூடாக கண்டறியப்படுபவற்றை நடைமுறைப்படுத்த ஆயத்தமாக உள்ளனர். 

மாற்றங்களுக்கு சமய நிறுவனங்கள் றெடி. அவர்களுக்குத் தெரியும் இல்லாவிட்டால் என்ன நடக்குமென்று.

நாம்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும்  முடியாமல் அல்லல்படுகிறோம்☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

நீங்கள் ,மொட்டந்தலைக்கும்,முழந்தாளுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்...இங்கு கிறிஸ்தவர்களாகிய கத்தோலிக்கர்களை ஒருத்தரும் வெறுக்கவில்லை ...அவர்கள் தான் போராட்டத்தில் உதவியவர்கள் ...அதில் தனியாக பாராட்டுவதற்கு என்ன இருக்கு?...அவர்களும் தமிழர்கள் தானே ...ஐயர்மார் பிராமண இனம் சார்ந்து போராட்டத்திற்கு உதவாமல் விட்டு இருக்கலாம்( ...மேலும் இவர்கள்  சொன்னால் யார் கேட்க்கிறாற்கள் )...ஆனால் எத்தனையோ பிராமண இளைஞ்ர்கள் போராட்டத்தில் பங்கு பற்றி இருக்கிறார்கள் ...உயிரையும் கொடுத்து இருக்கிறார்கள் 
 

13 hours ago, Maruthankerny said:

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

மருதர் ,நான் உங்கள் அளவுக்கு இவைகளை கரைத்து குடிக்கவில்லை ...ஆனால் பாரதம்,ராமாயணம்  போன்றவற்றை எப்படி ஒரு மனிதன் /சமூகம் பின்பற்ற கூடாது அல்லது கடைப்பிடித்தால் ஏற்படும் தீமைகளை இந்த இரு இரிகாசங்கள் படிப்பதன்  மூலம் பாடம் படித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் 

12 hours ago, Maruthankerny said:

இந்தியாவில் வெள்ளையாகலாம் என்று எண்ணி 
கோடி கணக்கான பெண்கள் பெயர் அண்ட் லவ்ல்லி (Fair & Lovely ) பூசுகிறார்கள் 

ஆனால் வெள்ளைக்காரிகள் இந்தியாவுக்கு வர கூடாது என்று 
யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லையே? 

எனக்கு இதுதான் புரியவில்லை.
உங்கள் மதம்தான் உலகிலேயே சிறந்த மதம் என்றால் அது பெருமைக்கு உரிய விடயம்தானே 
ஏன் மதம் மாற்றுபவனை பார்த்து பதறுகிறீர்கள்? 
எனக்கு இந்த பதற்றத்துக்கான காரணம் புரியவில்லை.

ஏன் அவர்களை பார்த்து பதறுகிறார்கள் என்றால் அந்த மக்களது இயலாமையை ,வறுமையை ,சூழ்நிலையை பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்பதால் தான் ...இது தான் என் மதம் ,இதில் இன்னன்ன நல்ல விடயங்கள் சொல்லி இருக்கு ...என்னுடைய மதத்திற்கு வாறீ யா என்றால் யார் போகப் போறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

மேற்கில் கிறித்துவத்திற்கும் இதே நிலைதான். ஆனால் அவர்கள் புத்திசாலிகள். சமயத்தை ஒரு நிறுவனத்திற்குரிய ஒழுங்குகளுடன் நடாத்துவதால் ஆய்வுகளினூடாக கண்டறியப்படுபவற்றை நடைமுறைப்படுத்த ஆயத்தமாக உள்ளனர். 

மாற்றங்களுக்கு சமய நிறுவனங்கள் றெடி. அவர்களுக்குத் தெரியும் இல்லாவிட்டால் என்ன நடக்குமென்று.

நாம்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும்  முடியாமல் அல்லல்படுகிறோம்☹️

இது தான் அந்த ஆய்வுகளின் ஊடாக

 

16 hours ago, Kapithan said:

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

இலங்கையில் நீண்டகாலமாகவே முஸ்லிம்-தமிழர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத தமிழர்கள் மதரீதியாக பிளவுபடுத்தப்பட்டுள்ள சூழலில் அண்மைக் காலமாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது பலருக்கும் தெரிந்த விடயமே. 

அவை இயல்பாக நிகழ்ந்தனவா அல்லது திட்டமிடப்பட்டு தூண்டி விடப்பட்டனவா என்பது இலங்கைத் தமிழர்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டிய கேள்வியாக உள்ளது. 

இதன் பின்புலமாக வெளிச் சக்திகள் இருந்திருக்கலாம் அல்லது எமது மூடத்தனமான, உணர்ச்சிவசப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கலாம். காரணிகள் எதுவாக இருந்தாலும் இறுதியில் எமது அறியாமையே தமிழ் மக்களுக்கு கொரானா வைரஸை விட அதிக அழிவை எதிர் காலத்தில் ஏற்படுத்தலாம். 

அதேநேரத்தில் எந்த மதப்பிரிவினராக இருந்தாலும் ஒரு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறும்போதும் உணர்ச்சிவசப்படாமல் மிக பண்பாடாகவும் ஒருவரை ஒருவர் தூற்றாமலும் தவறுகளை இனங்கண்டு திருத்த முற்படுவதே தமிழ் மக்களுக்கு  நன்மை தரும் செயலாக அமையும். 

தமிழ்ச் சமூகம் என்றும் நின்று நிதானித்து செய்திகளை ஆராய்ந்து தங்களுக்கிடையில் ஆரோக்கியமான சமூக ஊடாட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். 

இதுபோன்ற ஒரு சூழ்நிலைதான் நம் தொப்புள் கொடி உறவாக நாம் கொண்டாடும் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. அங்கு மதப் பிரிவினை போதாதென்று சாதியென்ற மிகப் பெரும் அழிவு ஆயுதமும் பயன்படுத்தப்படுகிறது. வடமாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதவெறியர்களால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைத் தாக்குதல்களும், தொடர்ச்சியாக இந்தியாவின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மதவெறித் தாக்குதல்களையும் இங்கு குறிப்பிடலாம். 

அரசியல்வாதிகளும் அரசும் ஓரளவுக்குத்தான் இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான பிரச்சனையில் தலையிடுவார்கள். காரணம் இவ்வாறான பிரச்சனைகளில் தலையிடுவது தங்கள் தலைக்கே கத்தியாக வரும் என்பதை அவர்கள் அறிவார்கள் அதனால் அதில் தங்களுக்கு எதாவது அரசியல் இலாபம் வருமென்றால், அடுத்த தேர்தலில் அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிந்தால் அதற்கு ஏற்றவகையில் தலையிடுவார்கள். அவர்களுக்காகத்தான் நீங்களேயன்றி உங்களுக்காக அவர்கள் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். தனி மனிதர்களின் (அரசியல்வாதிகள், சுயநல மதத் தலைவர்கள்) இலாபங்களுக்காக  தமிழர்களிடையே மோதல் ஏற்பட நீங்களும் காரணமாக இருந்து விடாதீர்கள். 

தமிழ்ச் சமூகம் அழிவடைந்ததற்கு 1008 உதாரணங்கள் அனுபவங்களுடன் இருக்கும்போது அவற்றை சீர்தூக்கிப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ளாது,  எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையிலான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் மிகையாக இருக்கும் சூழல் மாற்றப்பட வேண்டும். 

இது கடந்த காலங்களில் எமது சமூகத்துக்கு ஒரு நோயாக இருந்ததனால்தான்  நாம் பெரும் அழிவுகளைச் சந்தித்தோம், சந்தித்தும் வருகிறோம் என்பதை இந்த சூழலில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இனியாவது கொஞ்சம் சிந்திப்போம். சரி செய்வோம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

இலங்கையில் நீண்டகாலமாகவே முஸ்லிம்-தமிழர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத தமிழர்கள் மதரீதியாக பிளவுபடுத்தப்பட்டுள்ள சூழலில் அண்மைக் காலமாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது பலருக்கும் தெரிந்த விடயமே. 

அவை இயல்பாக நிகழ்ந்தனவா அல்லது திட்டமிடப்பட்டு தூண்டி விடப்பட்டனவா என்பது இலங்கைத் தமிழர்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டிய கேள்வியாக உள்ளது. 

இதன் பின்புலமாக வெளிச் சக்திகள் இருந்திருக்கலாம் அல்லது எமது மூடத்தனமான, உணர்ச்சிவசப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கலாம். காரணிகள் எதுவாக இருந்தாலும் இறுதியில் எமது அறியாமையே தமிழ் மக்களுக்கு கொரானா வைரஸை விட அதிக அழிவை எதிர் காலத்தில் ஏற்படுத்தலாம். 

அதேநேரத்தில் எந்த மதப்பிரிவினராக இருந்தாலும் ஒரு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறும்போதும் உணர்ச்சிவசப்படாமல் மிக பண்பாடாகவும் ஒருவரை ஒருவர் தூற்றாமலும் தவறுகளை இனங்கண்டு திருத்த முற்படுவதே தமிழ் மக்களுக்கு  நன்மை தரும் செயலாக அமையும். 

தமிழ்ச் சமூகம் என்றும் நின்று நிதானித்து செய்திகளை ஆராய்ந்து தங்களுக்கிடையில் ஆரோக்கியமான சமூக ஊடாட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். 

இதுபோன்ற ஒரு சூழ்நிலைதான் நம் தொப்புள் கொடி உறவாக நாம் கொண்டாடும் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. அங்கு மதப் பிரிவினை போதாதென்று சாதியென்ற மிகப் பெரும் அழிவு ஆயுதமும் பயன்படுத்தப்படுகிறது. வடமாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதவெறியர்களால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைத் தாக்குதல்களும், தொடர்ச்சியாக இந்தியாவின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மதவெறித் தாக்குதல்களையும் இங்கு குறிப்பிடலாம். 

அரசியல்வாதிகளும் அரசும் ஓரளவுக்குத்தான் இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான பிரச்சனையில் தலையிடுவார்கள். காரணம் இவ்வாறான பிரச்சனைகளில் தலையிடுவது தங்கள் தலைக்கே கத்தியாக வரும் என்பதை அவர்கள் அறிவார்கள் அதனால் அதில் தங்களுக்கு எதாவது அரசியல் இலாபம் வருமென்றால், அடுத்த தேர்தலில் அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிந்தால் அதற்கு ஏற்றவகையில் தலையிடுவார்கள். அவர்களுக்காகத்தான் நீங்களேயன்றி உங்களுக்காக அவர்கள் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். தனி மனிதர்களின் (அரசியல்வாதிகள், சுயநல மதத் தலைவர்கள்) இலாபங்களுக்காக  தமிழர்களிடையே மோதல் ஏற்பட நீங்களும் காரணமாக இருந்து விடாதீர்கள். 

தமிழ்ச் சமூகம் அழிவடைந்ததற்கு 1008 உதாரணங்கள் அனுபவங்களுடன் இருக்கும்போது அவற்றை சீர்தூக்கிப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ளாது,  எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையிலான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் மிகையாக இருக்கும் சூழல் மாற்றப்பட வேண்டும். 

இது கடந்த காலங்களில் எமது சமூகத்துக்கு ஒரு நோயாக இருந்ததனால்தான்  நாம் பெரும் அழிவுகளைச் சந்தித்தோம், சந்தித்தும் வருகிறோம் என்பதை இந்த சூழலில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இனியாவது கொஞ்சம் சிந்திப்போம். சரி செய்வோம்.

 

நான் மேற்கோள் காட்டிய விடயம், குறித்த நபரால் பதிவு செய்யப்பட்டு 16 மணித்தியாலங்களையும் கடந்தபின்பும் மெளனமாக இருந்துவிட்டு இப்போது நான் எழுதியதை மட்டும் மேற்கோள் காட்டுவது சரியா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, MEERA said:

இது தான் அந்த ஆய்வுகளின் ஊடாக

 

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

முடியாது.. போராட்டத்தில் அதிகமாக உயிரிழந்தது எங்க ஊர்க்காறனுங்கதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "விடியல் உன் கையில்"     "இரவின் மடியில் விடியலுக்கு காத்திராதே விழிகள் திறந்தால் விடியல் உன் கையில்!"   நான் என் வீட்டின் மாடத்தில் தூணை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். என்னைச் சுற்றி என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை. உள்ளத்தில் கொதிக்கும் வெப்பம் தாங்கமுடியாமல் இருக்கிறது. நான் இதுவரை சென்ற பாதை இப்ப குழப்பத்தை தருகிறது. நான் கீழே பார்க்கிறேன். வீதியின் ஓரத்தில் ஒரு சிவத்த மோட்டார் வாகனம் விடாமல் சத்தம் போட்டுக் கொண்டு இருக்கிறது. என் உள்ளமும் அதற்கு ஈடாக சிவந்து அலறிக் கொண்டு இருந்தது. இப்ப மாலை ஆறு மணி, இருட்ட ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருந்தது. என் கண்கள் வீதியால் போகும் வாகனங்களை அங்கும் இங்குமாக நோட்டமிட்டபடி தொங்கிய தோள்களுமாக வாடிய முகமுமாக இருந்தது. என் இதயத்தில் ஒரு வெற்றிடம் விடிவு இன்றி தவிக்கிறது. அது என்ன ? என் தோல்வி தான் என்ன ? எது உண்மையில் என் வாழ்வில் பிழைத்தது? என் மனம் பல பல சிந்தனை வெள்ளத்தால் மூழ்கி, அவை ஒவ்வொன்றும் என்னைப் பார்த்து கத்திக்கொண்டு இருந்தன. அந்த வெறுமை என்னையே விழுங்கும் அளவிற்கு இருக்கிறது. அது தான் நான் உங்களுடன் என் கதையை இப்ப பகிர்கிறேன்.   நான் இலங்கையை விட்டு ஒரு அந்நியனாக லண்டன் வந்த நாளை இன்னும் மறக்கவில்லை. என் வாழ்வு ஒரு நோக்கம் கொண்டதாக, ஒரு பெரிய அந்தஸ்து நிலையில் என்னை அமைக்க ஆசைப் பட்டேன். அதை இந்த லண்டன் மாநகரம் எனக்கு தந்தது. நான் வந்து மூன்றாம் நாளே ஒரு பெரிய நிறுவனத்தில் உதவி முகாமையாளராக பதவி பெற்றேன். உண்மையில் என் நோக்கம் இதை விடப் பெரிது, என்றாலும் முதல் படியில் கால் வைத்தல் தானே ஏணியின் கடைசிப் படிக்குப் போகலாம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அது மட்டும் அல்ல, நான் என் முழுக்கவனத்தையும் அந்த நிறுவனத்திலும் என் வேலையிலும் கட்டாயம் செலவழிக்க வேண்டும் என்பதும் தெரியும். ஆனால் என் முதல் தவறை, இப்ப என் உள்ளத்தை தாக்கும் வேதனை, சொல்லிக்கொண்டு இருக்கிறது!   நான் என் வாழ்வின் மற்ற விடயங்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல், வேலை, வேலை , என்றே இருந்துவிட்டேன். பதவி, பதவி இதுவே இதுவே என் முழு நோக்கமாக இருந்தது. இப்ப நினைத்தால் நான் முழு முட்டாள் என்று தோன்றுகிறது. வீடு வாங்கினேன், மோட்டார் வண்டி வாங்கினேன் , பதவி உயர்வு அடைந்தேன். என் செல்வாக்கு நல்ல அழகான பெண்ணை மனைவியாக்கியது. ஆனால் என்னை எதுவுமே திருப்தி செய்யவில்லை. நான் அந்த நிறுவனத்தின் தலைமை பதவியை அடையவேண்டும், என் செல்வாக்கு , அதிகாரம் அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கிலும் ஒலிக்க வேண்டும். அது வரை நான் ஓயப்போவதில்லை! அது தான் என் உள்ளத்தில் எதிர் ஒலித்துக்கொண்டு இருந்தது!   ஆனால் நான் மிகத் தவறு செய்தது இப்ப தான் புரிகிறது. நான் எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள், அவளுக்கும் ஆசைகள் இருக்கும் என்பதை மறந்தே விட்டேன்.   அந்தஸ்துக்கு ஒரு அழகிய மனைவி, கொலு பொம்மைமாதிரி இருப்பது வாழ்வு அல்ல என்பதை நான் கனவிலும் நினைக்கவில்லை. நான் குடும்பத்தில் இருந்து மனத்தளவில் மிகத் தூரவே இருந்துவிட்டேன். ஆமாம், முதல் இரவு நாம் சந்திக்கும் பொழுது அவள் எத்தனை எதிர்பார்ப்புடன் இருந்தாள் என்பதை, இப்ப தான் அவளின் நாட்குறிப்பில் இருந்து அறிகிறேன்.   'என் கணவர் வந்ததும் ஆரத்தழுவி அன்பு செலுத்துவார் என்று எத்தனையோ கனவு கண்டேன். நாம் முதல் முதல் தனிய ஒரு அறையில் சந்திக்கிறோம். பகல் முழுவதும் திருமண கொண்டாட்டம், நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்கள் என கழிந்தது. இரவு ஆனதும் ஆனந்தமாய் மகிழ்திருக்கலாம் என்று ஏங்கி நின்றேன். ஆனால் அவரோ, தன் நிறுவனம் பற்றியும், அதில் தான் சம்பள உயர்வுடன் அடுத்த மாதம் புது பதவிக்கு போவதாகவும், நான் வந்த ராசி வேலை செய்வதாகவும் புகழ்ந்தாரே தவிர, இது எம் இருவரின் முதல் இரவு என்பதை எனோ மறந்து விட்டார். என்ன செய்வது கணவன் கதை கதைத்தான். கண் வெட்டாமல் அவனை நான் ரசித்து கொண்டு இருந்தேன். அவரின் பேச்சின் வலி கூட எனக்கு வலிக்வில்லை. அவரை கட்டிப் பிடிக்கும் தைரியம் எனக்கில்லை. மெல்ல வாய்திறந்து, நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னேன். அவரோ எல்லாம் தன் பதவி தந்த அழகு என்றார்'. என்று குறிப்பிட்டு இருந்தார்!   எனக்கு அவளை மாதிரியே அழகிய பெண்குழந்தை மூன்று ஆண்டுகள் கழித்து பிறந்தது. அவளுக்கு அது ஒரு ஆறுதல், ஆனால் நானோ இன்னும் என் வேலையில் கடுமையாகவும், பதவி, அதிகார மோகம் அபின் மாதிரியும் என்னை அதில் அடிமையாக்கி விட்டதை நான் உணரவே இல்லை. அவள் பலதடவை தனக்கு மகன் வேண்டும் என்று கூறியதையே பொருட்படுத்தாமல், எல்லாம் என் முழு நோக்கம் அடையட்டும் என்று தள்ளி கடத்திவிட்டேன் . அது அவளை எவ்வளவு பாதிக்கும் என்று யோசிக்கவே இல்லை. நாளடைவில் நான் எனக்கே அந்நியனாகி விட்டேன்!   எட்டு ஆண்டுகளுக்கு பின் அவள் மனநிலை பாதித்து தன்னையே இழக்க தொடங்கிவிட்டாள். அவள் உடல்நிலை உருக்குலைய தொடங்கியது. என் மனைவி என்று நான் பெருமை பட்ட அழகு இப்ப அவளிடம் இல்லை. ஆனால் நான் இப்ப அந்த நிறுவனத்தின் தலைமை பதவியில் மிகப்பெரிய வசதிகளுடன், அதிகாரத்துடன் இருக்கிறேன். வைத்தியர் என்னிடம் வந்து அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அவளுக்கு நல்ல கணவனாக, அவளின் விருப்பு வெறுப்பு அறிந்து நெருக்கமாக அன்பு காட்டினால், அவள் விரைவில் குணமடைவார் என்றார்.   இப்ப என் பதவி, பொறுப்பு அதிகாரம் எல்லாம் மிக உச்சியில். எனக்கு நேரம் கிடைப்பதே குறைந்து விட்டது, ஏன், என்னையே இப்ப கவனிக்க முடியாத நிலையாகி விட்டது. அது தான் நான் இப்ப மாடியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் மாடியில் இருந்த கதிரையில் சாய்ந்து அயர்ந்துவிட்டேன். என் கன்னத்தை யாரோ தடவுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டு கண்விழித்தேன். என் ஐந்து வயது மகள் தான். நான் விழித்ததும் ஒரு முத்தம் தந்தார், மகளின் கண்ணில் கண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது. அந்த கண்ணீர் பல கேள்விகளை என் மேல் கேட்டுக் கொண்டு இருந்தது. நான் என்றுமே நல்ல தந்தையாக மகளுக்கு இருந்தது இல்லை . ஆக இந்த ஐந்து ஆண்டும் தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த உடைகள், தேவைக்கு அதிகமான விலை உயர்ந்த விளையாட்டு சாமான்கள் இப்படி அளவற்று கொடுத்தேனே தவிர, ஒரு சொட்டு அன்பாக பேசியோ, விளையாடவோ, அணைக்கவோ இல்லை. எல்லாம் என் மனக்கண்ணில் ஓடிக்கொண்டு இருந்தது.   நான் என் மகளை தூக்கினேன். அவரின் கண்ணீரை துடைத்தேன். மகள் என்னை யாரோ ஒருவன் போல பார்த்தார். பின் ' அப்பா , அம்மா வருவாரா ?' என்று கேட்டார். நான் அவரை கட்டிப்பிடித்து ' கட்டாயம் வருவார், விடியல் பிறக்கும்' என்றேன். விடியல் என் கையில் தான் என்பதை, காலம் கடந்தாலும், மகளின் பார்வை, கண்ணீர் உணர்த்தியது. மகள் அதற்குப் பின் என் கையில் உறங்கிவிட்டார்.   இப்ப இருளாகிவிட்டது. அந்த இருண்ட வானில் அழகிய நிலவை பார்த்தேன். அது என் மனைவியின் முகம் மாதிரி எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக புறக்கணித்த என் வெறுமையை நிரப்பும் காலம் வந்துவிட்டது என்று நினைத்தேன். ஒரு தாள் எடுத்து, நான் இதுவரை முயன்று பெற்ற அந்த தலைமை பதவிக்கு விடை கொடுக்க, அதில் இருந்து விலகும் ராஜினாமா கடிதம் எழுதினேன், அதில் பிற்குறிப்பாக நான் அங்கேயே ஒரு சாதாரண ஊழியராக வேலை செய்ய விருப்பம் என்றும் குறிப்பிட்டேன், எனக்கு இப்ப மன நிம்மதி, மகளை கட்டிலில் கிடத்திவிட்டு, படுத்து இருந்த மனைவியின் பக்கத்தில் போனேன். குனிந்து அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்து, அவளின் தலையை என் மடியில் கிடத்தினேன், அவளின் கண்ணில் இருந்து அந்தக் கண்ணீர் என் மடியை நனைத்தது. அவளின் கையை வருடியபடி நான் என்றும் உனக்கு மட்டுமே கணவன், என் பதவியை, அந்த அதிகார மோகத்தை விவாகரத்து செய்துவிட்டேன் என்று கத்தியே விட்டேன்!     "விடியல் பிறக்கிறது, காற்றில் அதன் குரல் கேட்கிறது என் உலகம் விழிக்கிறது, மண்டியிட்டு உன்னைச் சந்திக்கிறேன் உன் மடியில் என் ஆத்மா இனி உறங்கட்டும் எம் வாழ்வு உன் கையில் இனிமையாகட்டும்!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • நான் சொன்னது சத வீதத்தை அல்ல. நோட்டாவுக்கு கூட தனியாக சதவீதம் போட்ட தற்ஸ்தமிழ் அண்ணன் கட்சியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதை. வியஜ பிரபாகரன், செளமியா முன்னே வருவது போல் ஆசை காட்டி என்னை மோசம் செய்துவிட்டார்கள்🤣. போன சட்ட மன்றத்தேர்தலில் தமிழ் நாட்டில் 3 வது பெரிய கட்சி…. இப்போ 8 தொகுதியில் 3வது பெரிய கட்சி🤣.
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.