Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றமில்லாத ஒரு நாடு ஜனநாயகமற்றது – சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாராளுமன்றமில்லாத ஒரு நாடு ஜனநாயகமற்றது – சுமந்திரன்

பாராளுமன்ற கலைப்பு மீதான உச்சநீதிமன்ற விசாரணைகள் ஆரம்பம்

பாராளுமன்றத் தேர்தல் திகதி மற்றும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவிப்பது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 8 அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

கடந்த பாராளுமன்றத்துக்கும், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவுக்குமிடையில் இடையில் எழுந்துள்ள அரசியலமைப்பு சட்ட இழுபறி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இலங்கையின் அரசியலில் பாரிய விளைவுகளைத் தோற்றலாம் என அவதானிகள் கருதுகின்றனர்

இவ் வழக்கில் சட்டமா அதிபரை மேலதிக வழக்குரைஞர் நாயகம் இண்டிகா டெமுனி டிசில்வாவும், ஜனாதிபதி செயலர் பி.பி.ஜயசுந்தர சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும் வாதாடுகிறார்கள்.

அடிப்படை உரிமைகள் தொடர்பாக வழக்குப்பதிந்திருந்தவர்களில் இருவரான, ஊடகவியலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான விக்டர் ஐவன் மற்றும் சரிதா குணரட்ன சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதாடுகிறார்.

 

“பாராளுமன்றம் ஒரு தொடர் நடைமுறை. அது ஒருபொழுதும் இல்லாமல் போய்விடுவதில்லை. கலைக்கப்படும்போது தூக்க நிலைக்குப் போகும் அதை ஒரு அவசரகால நிலையில் மீண்டும் கூட்டுவதற்கு அரசியலமைப்பின் கட்டளை 70(7) இடம் தருகிறது” எனக்கூறி சுமந்திரன் தனது விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

பாராளுமன்றத்தை அதன் 5 வருடகால தவணை முடிவதற்கு முன்னரே கலைக்கும்போது அது மூன்று மாதங்களுக்குப் பிந்தாமல் மீளவும் கூட்டப்படவேண்டுமென்பது அரசியலமைப்பின் கட்டளை 70(5) மூலம் தெளிவு படுத்தப்படுகிறது. இதன் பிரகாரம் ஜூன் 2ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும்.

தேர்தல் ஆணையத்தினால் குறிக்கப்பட்ட தேர்தல் திகதியான ஜூன் 20 ஏற்கெனவே கால அவகாசத்தை மீறி விட்டது. அரசியலமைப்பின் பிரகாரம் ஒரு நாடு பாராளுமன்றம் இயங்க முடியாது. கோவிட்-19 மிக மோசமான தாக்கத்தைத் தந்துகொண்டிருப்பது தெரிந்திருந்தும், உலக சுகாதார நிறுவனம் இது ஒரு கொள்ளை நோய் என்பதைப் பிரகடனப்படுத்தி சில நாட்களே சென்றிருந்தும், ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் திகதியை அறிவித்திருக்கிறார்.

“இதற்கிடையில், தேர்தல் ஆணையம், அரசியலமைப்பின் விதிகள் பற்றி எந்தவித அக்கறையுமின்றி ஜூன் 20 தேர்தல் நடைபெறுமென்று அறிவித்திருக்கிறது. இது என்ன நிறைவேற்று ஜனாதிபதியும், தேர்தல் ஆணையமும் ஒரு சுதந்திரமான மக்கள் மீது விடும் பகிடியா?” எனச் சுமந்திரன் தனது விவாதத்தின்போது வினவினார்.

“ஏப்ரல் 25 செய்யப்பட்ட பிரகடனப்படி மே 14 தேர்தல்கள் நடைபெற்றிருக்க வேண்டும். அது திகதி கடந்து விட்டது. எனவே அந்தப் பிழையான திகதியைக் கொண்ட பிரகடனம் செல்லுபடியாகாமல் போகிறது.


“இப் பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதிக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அதில் ஒன்று உச்ச நீதிமன்றம். அதை பயன்படுத்திக்கொள்ள அவர் தவறி விட்டார். எனவே தற்போது பூட்டப்பட்டு இராணுவத்தினரின் கைகளில் இருக்கும் பாராளுமன்றத்தை இந்த உச்சநீதிமன்றம் பாதுகாக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார் சுமந்திரன்.

அடிப்படை உரிமைகள் மீதான வழக்குப் பதிவு கொடுத்த கா அவகாசம் போதாமை, வழக்கில் ஜனாதிபதியின் பெயர் குறிக்கப்படாமை போன்ற விடயங்களில் தமது எதிர்க் கருத்துக்களைக் கூறிய பிரதிவாதிகளின் வழக்கறிஞர்கள் அடுத்த விசாரணை நாளின்போது தொடர்வதாகக் கூறியுள்ளார்கள்.

டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து, சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் இளங்கோவன் ஆகியோரது வழக்குகள் மீ 19 ம் திகதி எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.

https://marumoli.com/பாராளுமன்றமில்லாத-ஒரு-நா/?fbclid=IwAR3x5i2Tx-UN-e-A4AqsxAHDIEAa8Ox9I_7w9NeSToJhWkqUVZ5lubm_cEY

உங்கள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

கூட்டமைப்பிலேயே நீண்டகாலமா தன்னிச்சையா இயங்கி ஜனநாயகம் பேணத் தெரியாத சுத்துமாத்து சுமந்திரன் ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கை தான். கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு கொள்கைகள் இருக்க முடியாதல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

கூட்டமைப்பிலேயே நீண்டகாலமா தன்னிச்சையா இயங்கி ஜனநாயகம் பேணத் தெரியாத சுத்துமாத்து சுமந்திரன் ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கை தான். கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு கொள்கைகள் இருக்க முடியாதல்லவா?

சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்த... நல்ல கருத்து, ராஜேஷ். :)

3 hours ago, Rajesh said:

கூட்டமைப்பிலேயே நீண்டகாலமா தன்னிச்சையா இயங்கி ஜனநாயகம் பேணத் தெரியாத சுத்துமாத்து சுமந்திரன் ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கை தான். கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு கொள்கைகள் இருக்க முடியாதல்லவா?

உண்மை!

சிங்கள-பௌத்த கொலைகாரக் கலாச்சாரத்தை சனநாயக  கலாச்சாரமாக சுமந்திரன் போன்ற கூலிக்கு மாரடிப்பவர்கள் கருதுவதில் வியப்பில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் ஜனநாயக தூண்களில் இவரும் ஒரு தூண்..கண்டியளோ ....

  • கருத்துக்கள உறவுகள்

தான் பிரதிநிதிப்படுத்தும் மக்களின் துயரில் பங்கெடுக்க முடியாத.. இதெல்லாம் சனநாயகம் பற்றிக் கதைக்கிது. கேவலம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, போல் said:

உண்மை!

சிங்கள-பௌத்த கொலைகாரக் கலாச்சாரத்தை சனநாயக  கலாச்சாரமாக சுமந்திரன் போன்ற கூலிக்கு மாரடிப்பவர்கள் கருதுவதில் வியப்பில்லை!

8 hours ago, Rajesh said:

கூட்டமைப்பிலேயே நீண்டகாலமா தன்னிச்சையா இயங்கி ஜனநாயகம் பேணத் தெரியாத சுத்துமாத்து சுமந்திரன் ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கை தான். கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு கொள்கைகள் இருக்க முடியாதல்லவா?

2 hours ago, putthan said:

சிறிலங்காவின் ஜனநாயக தூண்களில் இவரும் ஒரு தூண்..கண்டியளோ ....

2 hours ago, nedukkalapoovan said:

தான் பிரதிநிதிப்படுத்தும் மக்களின் துயரில் பங்கெடுக்க முடியாத.. இதெல்லாம் சனநாயகம் பற்றிக் கதைக்கிது. கேவலம். 

புலம்பெயர்ந்த தமிழர் சிலர் முகநூலில் தாங்கள் புலிக்கோட்டையில் வளர்ந்தவர்கள் என்றும் தலைவர் பாதையே தங்கள் மந்திர பாதை என இன்றும் கூவிக்கொண்டு சுமந்திரனுக்கு சொம்பு தூக்குபவர்களை என்னவென்பது?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

பாராளுமன்றமில்லாத ஒரு நாடு ஜனநாயகமற்றது – சுமந்திரன்

இதுவரை பாராளுமன்றில் கண்ட ஜனநாயகம் தான் என்ன?
ஒருக்கா பட்டியலிடுங்க சார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

சிறிலங்காவின் ஜனநாயக தூண்களில் இவரும் ஒரு தூண்..கண்டியளோ ....

ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி

உழுந்ததாம் பள்ளத்திலே துள்ளி.

 

12 hours ago, Rajesh said:

கூட்டமைப்பிலேயே நீண்டகாலமா தன்னிச்சையா இயங்கி ஜனநாயகம் பேணத் தெரியாத சுத்துமாத்து சுமந்திரன் ஜனநாயகம் பற்றி பேசுவது வேடிக்கை தான். கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு கொள்கைகள் இருக்க முடியாதல்லவா?

 

12 hours ago, nunavilan said:

“இப் பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதிக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அதில் ஒன்று உச்ச நீதிமன்றம். அதை பயன்படுத்திக்கொள்ள அவர் தவறி விட்டார். எனவே தற்போது பூட்டப்பட்டு இராணுவத்தினரின் கைகளில் இருக்கும் பாராளுமன்றத்தை இந்த உச்சநீதிமன்றம் பாதுகாக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார் சுமந்திரன்.

சிங்களம் தவற விட்டதா? சுத்தப்பொய்

13 hours ago, nunavilan said:

கடந்த பாராளுமன்றத்துக்கும், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவுக்குமிடையில் இடையில் எழுந்துள்ள அரசியலமைப்பு சட்ட இழுபறி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இலங்கையின் அரசியலில் பாரிய விளைவுகளைத் தோற்றலாம் என அவதானிகள் கருதுகின்றனர்

ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் இந்த பாராளு"மந்தத்தால்" தமிழ் பேசும் மக்களுக்கு அதிக பலன் இல்லை.  

" பாராளுமன்றமில்லாத ஒரு நாடு ஜனநாயகமற்றது – சுமந்திரன் "

தமிழ் மக்களின் மக்களாட்சி பிரதிநிதியாக இருக்கும் சுமந்திரன் அவர்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இந்த பாராளுமன்ற பிரதிநிதாக என்ன செய்துள்ளார்? 

ஆனால், தன்னை சிங்களவர்கள் மத்தியில் ஒரு மென்போக்காளர் என காட்டிட முனைகிறார்.  

இவரையும் நாளை சிங்களம் ஏமாற்றும் என்பதை வரலாறு காட்டி நிற்கின்றது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, ampanai said:

" பாராளுமன்றமில்லாத ஒரு நாடு ஜனநாயகமற்றது – சுமந்திரன் "

தமிழ் மக்களின் மக்களாட்சி பிரதிநிதியாக இருக்கும் சுமந்திரன் அவர்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இந்த பாராளுமன்ற பிரதிநிதாக என்ன செய்துள்ளார்? 

ஆனால், தன்னை சிங்களவர்கள் மத்தியில் ஒரு மென்போக்காளர் என காட்டிட முனைகிறார்.  

இவரையும் நாளை சிங்களம் ஏமாற்றும் என்பதை வரலாறு காட்டி நிற்கின்றது. 

உவர் பாராளுமன்றம் போய் என்ன செய்யப்போறாராம்?

  • கருத்துக்கள உறவுகள்

காலை 9 மணி - மாலை 3 : 30 இடையில் 1/2 மணி நேரம் தனிப்பட்ட அல்லது குழுவாக சுற்றி பார்க்கலாமாம்.. ஆராவது விசிற்றர் பொஸ் போட்டு விடுங்கப்பா..👌

6 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர்ந்த தமிழர் சிலர் முகநூலில் தாங்கள் புலிக்கோட்டையில் வளர்ந்தவர்கள் என்றும் தலைவர் பாதையே தங்கள் மந்திர பாதை என இன்றும் கூவிக்கொண்டு சுமந்திரனுக்கு சொம்பு தூக்குபவர்களை என்னவென்பது?

கருணா, செல்வராசா பத்மநாதன் வழியில் செல்லும் துஷ்டர்களாக இருக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர்ந்த தமிழர் சிலர் முகநூலில் தாங்கள் புலிக்கோட்டையில் வளர்ந்தவர்கள் என்றும் தலைவர் பாதையே தங்கள் மந்திர பாதை என இன்றும் கூவிக்கொண்டு சுமந்திரனுக்கு சொம்பு தூக்குபவர்களை என்னவென்பது?

 

 

முதல் தமிழ்தேசிய செம்பை இறக்கி வைத்துவிட்டு விரும்பிய செம்பை தூக்கலாம்

இங்குள்ள எல்லா கருத்துக்களுக்கும் வருகிற தேர்தலில் இலங்கை தமிழ் மக்கள் பதிலளிப்பார்கள். அவர்கள்தான் அதை தீர்மானிக்க வேண்டும். ஏன் அவர்களை தெரிவு செய்கிறோம் என்பதட்கும் பதில் அவர்களிடம்தான் உண்டு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.