Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள்.!

IMG_18-2.jpg

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு  ஆதரவு தெரிவித்து  கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

எதிர்வரும் தினங்களில் 2020 ஆண்டிற்கான  பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அம்பாறை மாவட்டம்  கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில்  கப்பல்   இலச்சினையுடன்  போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளரான கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான கட்டவுட்களை முக்கிய சந்திகளில் வைத்துள்ளனர்.
அம்பாறை- கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என்ற வாசகத்துடன் கப்பல் இலட்சனையுடன்   கல்முனை நகர பகுதியிலுள்ள மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள்  வழங்கப்பட்டுள்ளன.

இத்துண்டுப்பிரசுரங்களை  பாண்டிருப்பு சந்தை  தாளவட்டுவான் சந்தி  நீலாவணை  நற்பிட்டிமுனை  சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும்  தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தற்போது பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இப்பிரசாரம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://thamilkural.net/news/ceylon/41979/

  • Replies 104
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் கருணாவிற்கு 35 அடி நீளமான கட்டவுட்களை முக்கிய சந்திகளில் வைத்துள்ளனர்.

அம்பாறை- கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் “எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்” என்ற வாசகத்துடன் கப்பல் இலட்சனையுடன் கல்முனை நகர பகுதியிலுள்ள மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துண்டுப்பிரசுரங்களை வழங்கும் பணி பாண்டிருப்பு சந்தை தாளவட்டுவான் சந்தி நீலாவணை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/144718?ref=imp-news

 

உங்களை நம்பி வந்தவர்களையாவது ஏமாற்ற வேண்டாம் இனி, தூரோகத்தின் வலியை உணராமல் விடமாட்டீர்கள் என்னதான் ஆடினாலும்.

காலமிருக்கு, வாழ்கை ஒரு வட்டம் 

  • கருத்துக்கள உறவுகள்

Karuna Amman 007

அக்கா, பூரித்துப் போகப்போற :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படம் ஒஸ்லோவுக்கு முன்னர் எடுத்ததா அல்லது பின்னர் எடுத்ததா 🤔

இல்ல.. சின்ன ஒரு டவுட்டு அதுதான்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாறுவதற்க்கென்றே ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். இவர்களை நம்பித்தான், ஏமாற்றுவோரின் நலனே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

இந்தப்படம் ஒஸ்லோவுக்கு முன்னர் எடுத்ததா அல்லது பின்னர் எடுத்ததா 🤔

இல்ல.. சின்ன ஒரு டவுட்டு அதுதான்.....

ஒஸ்லோவுக்கு பின்னால் அம்மானின் கம்பீரம் குறைந்துவிட்டது. அதுதான் போஸ்டரில் புலியாக இருந்தபோது எடுத்த கம்பீரமான படம் வைக்கிறார்கள்.

அம்மான் இப்ப இப்படித்தான் இருக்கின்றார்.

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

ஒஸ்லோவுக்கு பின்னால் அம்மானின் கம்பீரம் குறைந்துவிட்டது. அதுதான் போஸ்டரில் புலியாக இருந்தபோது எடுத்த கம்பீரமான படம் வைக்கிறார்கள்.

அம்மான் இப்ப இப்படித்தான் இருக்கின்றார்.

இப்போ எலி ஆகிவிட்டார் என்கிறீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

இப்போ எலி ஆகிவிட்டார் என்கிறீர்கள்...

இல்லை. அவர் இப்போது மகிந்தவின் வளர்ப்புப் பூனை.😁

ஜனாதிபதி கோத்தா பூனைகளை விரும்பாமல் நாய்களைத்தான் விரும்புகின்றார் என்று நினைக்கின்றேன்😃

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, கிருபன் said:

ஒஸ்லோவுக்கு பின்னால் அம்மானின் கம்பீரம் குறைந்துவிட்டது. அதுதான் போஸ்டரில் புலியாக இருந்தபோது எடுத்த கம்பீரமான படம் வைக்கிறார்கள்.

அம்மான் இப்ப இப்படித்தான் இருக்கின்றார்.

spacer.png

 

21 minutes ago, MEERA said:

இப்போ எலி ஆகிவிட்டார் என்கிறீர்கள்...

 

13 minutes ago, கிருபன் said:

இல்லை. அவர் இப்போது மகிந்தவின் வளர்ப்புப் பூனை.😁

ஜனாதிபதி கோத்தா பூனைகளை விரும்பாமல் நாய்களைத்தான் விரும்புகின்றார் என்று நினைக்கின்றேன்😃

ஹா... ஹா.... ஹா... இண்டைக்கு ரதிக்கு, யாழ். களத்தில்  நிறைய வேலை இருக்கு. :grin:
"ஓவர் ரைம்"... செய்ய வேண்டி வரப் போகுது. 😂

21 hours ago, Nathamuni said:

Karuna Amman 007

அக்கா, பூரித்துப் போகப்போற :grin:

ஆரம்பத்தில்... அக்கா பூரித்துப் போகப் போறா... எண்டுதான், நானும் நினைத்தேன். :)
பிறகு வந்த பதிவுகள்.... அக்காவுக்கு, "பிரஷர்" ஏத்துற  பதிவுகளாக வந்து விட்டது. :grin: 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, Kapithan said:

இந்தப்படம் ஒஸ்லோவுக்கு முன்னர் எடுத்ததா அல்லது பின்னர் எடுத்ததா 🤔

இல்ல.. சின்ன ஒரு டவுட்டு அதுதான்.....

மரண அறிவித்தலுக்கும் நல்ல படங்களைத்தான் தேர்ந்தெடுத்து போடுவார்கள்.
ரஜனிகாந்த்தின் உண்மையான படத்தை போட்டு சினிமா விளம்பரம் செய்யமுடியுமா? ரசிகர்களுக்கு தலை சுத்தும் அல்லவா? அது போல்தான் இதுவும்...😎

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

அவர் இப்போது மகிந்தவின் வளர்ப்புப் பூனை

உருவத்தில் கூட மஹிந்த மாத்தையா போல் மாறி விட்டாரே. 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, satan said:

உருவத்தில் கூட மஹிந்த மாத்தையா போல் மாறி விட்டாரே. 

நீ எதை விரும்புகிறாயோ நீ அது போலவே ஆகிவிடுவாய்.😜

"எங்கும் செல்வோம், எதிலும் வெல்வோம்"
கருணா எதை சொல்றார்?
சிங்கள பெம்மானாட்டிகளோட அடிக்கிற லூட்டிகளை சொல்றாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மரண அறிவித்தலுக்கும் நல்ல படங்களைத்தான் தேர்ந்தெடுத்து போடுவார்கள்.
ரஜனிகாந்த்தின் உண்மையான படத்தை போட்டு சினிமா விளம்பரம் செய்யமுடியுமா? ரசிகர்களுக்கு தலை சுத்தும் அல்லவா? அது போல்தான் இதுவும்...😎

யார் யாருக்கு எங்கே அடித்தால் வலிக்கும் என்பதை நன்றாகவே கற்றுக் கொண்டீர்கள்.

On 6/6/2020 at 04:10, Nathamuni said:

Karuna Amman 007

அக்கா, பூரித்துப் போகப்போற :grin:

இதற்கான செலவும் தங்கச்சியா இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
On ‎06‎-‎06‎-‎2020 at 11:58, உடையார் said:

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் கருணாவிற்கு 35 அடி நீளமான கட்டவுட்களை முக்கிய சந்திகளில் வைத்துள்ளனர்.

அம்பாறை- கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் “எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்” என்ற வாசகத்துடன் கப்பல் இலட்சனையுடன் கல்முனை நகர பகுதியிலுள்ள மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துண்டுப்பிரசுரங்களை வழங்கும் பணி பாண்டிருப்பு சந்தை தாளவட்டுவான் சந்தி நீலாவணை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/144718?ref=imp-news

 

உங்களை நம்பி வந்தவர்களையாவது ஏமாற்ற வேண்டாம் இனி, தூரோகத்தின் வலியை உணராமல் விடமாட்டீர்கள் என்னதான் ஆடினாலும்.

காலமிருக்கு, வாழ்கை ஒரு வட்டம் 

ஆறடி உயரத்தில் வெறும் கட் டவுட் வைத்தால் மட்டும் போதாது .இங்கே சில பேரின் முகத்தில் கரியை பூசுவதற்காவது நீ வென்று காட்ட வேண்டும் அண்ணா ...வெல்வதோடு மட்டும் நின்று விடாது ...கிழக்கில் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக நீங்கள் மாற வேண்டும் 👍
 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

ஆறடி உயரத்தில் வெறும் கட் டவுட் வைத்தால் மட்டும் போதாது .இங்கே சில பேரின் முகத்தில் கரியை பூசுவதற்காவது நீ வென்று காட்ட வேண்டும் அண்ணா ...வெல்வதோடு மட்டும் நின்று விடாது ...கிழக்கில் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக நீங்கள் மாற வேண்டும் 👍
 

இரதி நீங்கள் இப்படி உணர்ச்சிவசப்படுதல் கூடாது. 😂

அவர் ஏற்கனவே ஒட்டு மொத்த ஈழத் தமிழினத்தின் மீதும் பூசாத  கரியையா இனிமேல் பூசப்போகிறார் 😂

மேற்கொண்டு எவ்வளவு கரி பூசினாலும் வித்தியாசம் தெரியப் போவதில்லை. ☹️

எனவே கரி பூசிறதில நேரம் மினெக்கெடாமல்  தன்னோடு கூட நின்று இரத்தம் சிந்தின சனத்திற்கு ஏதாவது நல்லது செய்ய முடிந்த அளவு முயற்சிக்கட்டும். அவ்வாறு செய்வாராக இருந்தால் அது நல்லதுதான். 👍

செய்வாரா கொண்ணர் 🤔

  • கருத்துக்கள உறவுகள்

கெத்துடன் கம்பீரமாக நிற்கும் கருணா வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, colomban said:

கெத்துடன் கம்பீரமாக நிற்கும் கருணா வெற்றிபெற வாழ்த்துக்கள்

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.😂

இனித்தால் சரிதான் 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

முடியல. அழுதுடுவன்...😂😂😂

34 நிமிடங்கள் செவ்வியை முழுமையாகப் பார்த்தால் அம்மானின் தெளிவான பதில்கள் என்ன சொல்கின்றன என்று புரியும்.

கோத்தா 13+ கூடத் தரமாட்டார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் வந்த மாகாணசபைகளைக் கூட செயல்படவிடமாட்டார்.

அடுத்த 10-15 வருடங்களுக்கு ராஜபக்ஸக்களைத் தவிர வேறு எவரும் பதவிக்கும் வரமுடியாது என்பதால், அம்மான் தனக்கு மகிந்தவுடன் (இனத்துவேஷம் இல்லாத மகிந்த) உள்ள செல்வாக்கைப் பாவித்து ஏதாவது தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதியாகக் கூறுகின்றார்.

ஆனால் அம்பாறையில் தமிழ் பா.உ. ஒருவர்தான் வரலாம். அம்மான் அங்கு தேர்தலில் நிற்பதால் வாக்குகள் பிரிந்துபோய் ஒருவர்கூட வரமுடியாமல் இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

34 நிமிடங்கள் செவ்வியை முழுமையாகப் பார்த்தால் அம்மானின் தெளிவான பதில்கள் என்ன சொல்கின்றன என்று புரியும்.

கோத்தா 13+ கூடத் தரமாட்டார். இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் வந்த மாகாணசபைகளைக் கூட செயல்படவிடமாட்டார்.

அடுத்த 10-15 வருடங்களுக்கு ராஜபக்ஸக்களைத் தவிர வேறு எவரும் பதவிக்கும் வரமுடியாது என்பதால், அம்மான் தனக்கு மகிந்தவுடன் (இனத்துவேஷம் இல்லாத மகிந்த) உள்ள செல்வாக்கைப் பாவித்து ஏதாவது தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதியாகக் கூறுகின்றார்.

ஆனால் அம்பாறையில் தமிழ் பா.உ. ஒருவர்தான் வரலாம். அம்மான் அங்கு தேர்தலில் நிற்பதால் வாக்குகள் பிரிந்துபோய் ஒருவர்கூட வரமுடியாமல் இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.

கிருபன்,

யார் குத்தினாலும் அரிசியானால் சரிதான் என்கின்ற நிலையில்தான் கிழக்கு மாகாணத் தமிழரின் நிலை இருக்கிறது. அது வினாயக மூர்த்தியாயிருந்தால் என்ன வேறு யாராகத்தானும் இருந்தால் என்ன 🤔

எமது மக்களுக்கு நன்மை நடந்தால் மகிழ்ச்சிதானே. 👍

ஆனால் அடிக்கிற லெக்ஸர்தான் தாங்க முடியவில்லை. 😂

அங்குள்ள மக்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்த்து வாக்களிக்கும் நிலையில்(சூழ்னிலையில்) இருப்பதாக உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா ? 🤔

 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

அடுத்த 10-15 வருடங்களுக்கு ராஜபக்ஸக்களைத் தவிர வேறு எவரும் பதவிக்கும் வரமுடியாது என்பதால், அம்மான் தனக்கு மகிந்தவுடன் (இனத்துவேஷம் இல்லாத மகிந்த) உள்ள செல்வாக்கைப் பாவித்து ஏதாவது தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதியாகக் கூறுகின்றார்.

மகிந்த இனி டம்மி பீஸ் ஆச்சே?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 

ஆனால் அம்பாறையில் தமிழ் பா.உ. ஒருவர்தான் வரலாம். அம்மான் அங்கு தேர்தலில் நிற்பதால் வாக்குகள் பிரிந்துபோய் ஒருவர்கூட வரமுடியாமல் இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.

அம்மான் போன்றோர் அங்கு வெற்றியடைந்தால் அந்த மக்களுக்கு சில அபிவிருத்தி திட்டங்களை செய்யலாம் ...ஏனைய தமிழ் கட்சிகள் வெற்றியடைந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது..

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, putthan said:

அம்மான் போன்றோர் அங்கு வெற்றியடைந்தால் அந்த மக்களுக்கு சில அபிவிருத்தி திட்டங்களை செய்யலாம் ...ஏனைய தமிழ் கட்சிகள் வெற்றியடைந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது..

அதாவது மகிந்தவுக்கு (சிங்களத்திற்கு) வாலாட்டுறவைக்கு(அது யாராகவிருந்தாலும்) எலும்புத்துண்டு ஏதாவது போடுவாங்கள். அவையளும் கவ்விக்கொண்டு போகலாம். வாலாட்டாவிட்டால் எலும்புத் துண்டுமில்லை. இதுதானே  நீங்கள் கூறு விரும்புவது 😏😏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.